< Екзодул 19 >

1 Ын луна а трея дупэ еширя лор дин цара Еӂиптулуй, копиий луй Исраел ау ажунс ын зиуа ачея ын пустиул Синай.
இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்திரத்திற்கு வந்துசேர்ந்தார்கள்.
2 Дупэ че ау плекат де ла Рефидим, ау ажунс ын пустиул Синай ши ау тэбэрыт ын пустиу. Исраел а тэбэрыт аколо, ын фаца мунтелуй.
அவர்கள் ரெவிதீமிலிருந்து பயணம் புறப்பட்டு, சீனாய் வனாந்திரத்திற்கு வந்து, அந்த வனாந்திரத்தில் முகாமிட்டார்கள்; இஸ்ரவேலர்கள் அங்கே மலைக்கு எதிராக முகாமிட்டார்கள்.
3 Мойсе с-а суит ла Думнезеу. Ши Домнул л-а кемат де пе мунте, зикынд: „Аша сэ ворбешть касей луй Иаков ши сэ спуй копиилор луй Исраел:
மோசே தேவனிடம் ஏறிப்போனான்; யெகோவா மலையிலிருந்து அவனைக்கூப்பிட்டு: “நீ யாக்கோபு வம்சத்தார்களுக்குச் சொல்லவும், இஸ்ரவேல் மக்களுக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால்,
4 ‘Аць вэзут че ам фэкут Еӂиптулуй ши кум в-ам пуртат пе арипь де вултур ши в-ам адус аич ла Мине.
நான் எகிப்தியர்களுக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய இறக்கைகளின்மேல் சுமந்து, உங்களை என் அருகிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.
5 Акум, дакэ вець аскулта гласул Меу ши дакэ вець пэзи легэмынтул Меу, вець фи ай Мей динтре тоате попоареле, кэч тот пэмынтул есте ал Меу;
இப்பொழுது நீங்கள் என்னுடைய வாக்கை உள்ளபடி கேட்டு, என்னுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், எல்லா மக்களையும்விட நீங்களே எனக்கு சிறந்த மக்களாக இருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.
6 Ымь вець фи о ымпэрэцие де преоць ши ун ням сфынт. Ачестя сунт кувинтеле пе каре ле вей спуне копиилор луй Исраел.’”
நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்ஜியமும் பரிசுத்த தேசமுமாக இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டிய வார்த்தைகள்” என்றார்.
7 Мойсе а венит де а кемат пе бэтрыний попорулуй ши ле-а пус ынаинте тоате кувинтеле ачестя, кум ый порунчисе Домнул.
மோசே வந்து மக்களின் மூப்பர்களை அழைத்து, யெகோவா தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான்.
8 Тот попорул а рэспунс: „Вом фаче тот че а зис Домнул!” Мойсе а спус Домнулуй кувинтеле попорулуй.
அதற்கு மக்கள் எல்லோரும் ஒன்றாக, “யெகோவா சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று மறுமொழி சொன்னார்கள். மக்கள் சொன்ன வார்த்தைகளை மோசே யெகோவாவிடம் தெரிவித்தான்.
9 Ши Домнул а зис луй Мойсе: „Ятэ, вой вени ла тине ынтр-ун нор грос, пентру ка сэ аудэ попорул кынд ыць вой ворби ши сэ айбэ тотдяуна ынкредере ын тине.” Мойсе а спус Домнулуй кувинтеле попорулуй.
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நான் உன்னோடு பேசும்போது மக்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடம் வருவேன்” என்றார். மக்கள் சொன்ன வார்த்தைகளை மோசே யெகோவாவுக்குச் சொன்னான்.
10 Ши Домнул а зис луй Мойсе: „Ду-те ла попор, сфинцеште-й азь ши мыне ши пуне-й сэ-шь спеле хайнеле.
௧0பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ மக்களிடம் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் ஆடைகளைத் துவைத்து,
11 Сэ фие гата пентру а трея зи, кэч а трея зи Домнул Се ва коборы ын фаца ынтрегулуй попор, пе мунтеле Синай.
௧௧மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருக்கவேண்டும்; மூன்றாம் நாளில் யெகோவா எல்லா மக்களுக்கும் வெளிப்படையாக சீனாய் மலையின்மேல் இறங்குவார்.
12 Сэ хотэрэшть попорулуй анумите марӂинь де жур ымпрежур ши сэ спуй: ‘Сэ ну кумва сэ вэ суиць пе мунте сау сэ вэ атинӂець де поалеле луй. Орьчине се ва атинӂе де мунте ва фи педепсит ку моартя.
௧௨மலையைச்சுற்றிலும் நீ ஒரு எல்லையைக் குறித்து, மக்கள் மலையில் ஏறாதபடியும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடியும் எச்சரிக்கையாக இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.
13 Ничо мынэ сэ ну се атингэ де ел, чи пе орьчине се ва атинӂе, сэ-л омоаре ку петре сау сэ-л стрэпунгэ ку сэӂець: добиток сау ом ну ва трэи.’ Кынд ва суна трымбица, ей вор ынаинта спре мунте.”
௧௩ஒரு கையும் அதைத் தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியப்பட்டு, அல்லது வில் எய்யப்பட்டுச் சாகவேண்டும்; மிருகமானாலும் சரி, மனிதனானாலும் சரி, உயிரோடு வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாகத் தொனிக்கும்போது, அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரவேண்டும்” என்றார்.
14 Мойсе с-а коборыт де пе мунте ла попор, а сфинцит попорул ши ей шь-ау спэлат хайнеле.
௧௪மோசே மலையிலிருந்து இறங்கி, மக்களிடம் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்களுடைய ஆடைகளைத் துவைத்தார்கள்.
15 Ши а зис попорулуй: „Фиць гата ын трей зиле; сэ ну вэ апропияць де врео фемее.”
௧௫அவன் மக்களை நோக்கி: “மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியிடம் சேராமல் இருங்கள்” என்றான்.
16 А трея зи диминяца, ау фост тунете, фулӂере ши ун нор грос пе мунте; трымбица рэсуна ку путере ши тот попорул дин табэрэ а фост апукат де спаймэ.
௧௬மூன்றாம் நாள் அதிகாலையில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காள சத்தமும் உண்டானது; முகாமிலிருந்த மக்கள் எல்லோரும் நடுங்கினார்கள்.
17 Мойсе а скос попорул дин табэрэ, спре ынтымпинаря луй Думнезеу, ши с-ау ашезат ла поалеле мунтелуй.
௧௭அப்பொழுது மக்கள் தேவனுக்கு எதிராகபோக, மோசே அவர்களை முகாமிலிருந்து புறப்படச்செய்தான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள்.
18 Мунтеле Синай ера тот нумай фум, пентру кэ Домнул Се коборысе пе ел ын мижлокул фокулуй. Фумул ачеста се ынэлца ка фумул унуй куптор, ши тот мунтеле се кутремура ку путере.
௧௮யெகோவா சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கியதால், அது முழுவதும் புகைக்காடாக இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பியது; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.
19 Трымбица рэсуна тот май путерник. Мойсе ворбя, ши Думнезеу ый рэспундя ку глас таре.
௧௯எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாகத் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்.
20 Домнул С-а коборыт пе мунтеле Синай, ши ануме пе вырфул мунтелуй. Домнул а кемат пе Мойсе пе вырфул мунтелуй. Ши Мойсе с-а суит сус.
௨0யெகோவா சீனாய்மலையிலுள்ள உச்சியில் இறங்கினபோது, யெகோவா மோசேயை மலையின் உச்சியில் வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.
21 Домнул а зис луй Мойсе: „Кобоарэ-те ши порунчеште попорулуй ку тот динадинсул сэ ну дя бузна спре Домнул, ка сэ се уйте, пентру ка ну кумва сэ пярэ ун маре нумэр динтре ей.
௨௧அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “மக்கள் பார்ப்பதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடம் வராதபடியும், அவர்களில் அநேகர் அழிந்துபோகாதபடியும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி.
22 Преоций каре се апропие де Домнул сэ се сфинцяскэ ши ей, ка ну кумва сэ-й ловяскэ Домнул ку моартя.”
௨௨யெகோவாவின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், யெகோவா தங்களை அழிக்காதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும்” என்றார்.
23 Мойсе а зис Домнулуй: „Попорул ну ва путя сэ се суе пе мунтеле Синай, кэч не-ай оприт ку тот динадинсул, зикынд: ‘Хотэрэште анумите марӂинь ын журул мунтелуй ши сфинцеште-л.’”
௨௩அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி: “மலையைச் சுற்றிலும் எல்லையைக் குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், மக்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள்” என்றான்.
24 Домнул й-а зис: „Ду-те, кобоарэ-те ши суе-те апой ярэшь ку Аарон, дар преоций ши попорул сэ ну дя бузна сэ се суе ла Домнул, ка ну кумва сэ-й ловяскэ ку моартя.”
௨௪யெகோவா மோசேயை நோக்கி: “நீ இறங்கிப்போ; பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள்; ஆசாரியர்களும், மக்களும், யெகோவா தங்களை அழிக்காதபடி, எல்லையைக் கடந்து யெகோவாவிடம் வராமல் இருக்கவேண்டும்” என்றார்.
25 Мойсе с-а коборыт ла попор ши й-а спус ачесте лукрурь.
௨௫அப்படியே மோசே இறங்கி மக்களிடம் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.

< Екзодул 19 >