< Фаптеле 16 >

1 Ын урмэ, Павел с-а дус ла Дербе ши ла Листра. Ши ятэ кэ аколо ера ун ученик нумит Тимотей, фиул уней иудейче крединчоасе ши ал унуй татэ грек.
அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்திராவிற்கும் போனான். அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீடன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதப்பெண், அவன் தகப்பன் கிரேக்கன்.
2 Фраций дин Листра ши Икония ыл ворбяу де бине.
அவன் லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரர்களாலே நற்சாட்சிப் பெற்றவனாக இருந்தான்.
3 Павел а врут сэ-л я ку ел ши, дупэ че л-а луат, л-а тэят ымпрежур, дин причина иудеилор каре ерау ын ачеле локурь, кэч тоць штияу кэ татэл луй ера грек.
அவனைப் பவுல் தன்னோடுகூட கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று விரும்பி, அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்று அங்கிருந்த யூதர்களெல்லோருக்கும் தெரிந்திருந்தபடியால், அவர்களின் பொருட்டு அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.
4 Пе кынд тречя прин четэць, ынвэца пе фраць сэ пэзяскэ хотэрыриле апостолилор ши презбитерилор дин Иерусалим.
அவர்கள் பட்டணங்களுக்குப் போகும்போது, எருசலேமிலிருக்கும் அப்போஸ்தலர்களாலும் மூப்பர்களாலும் விதிக்கப்பட்ட சட்டங்களைக் கைக்கொண்டு நடக்கும்படி அவர்களுக்குச் சொன்னார்கள்.
5 Бисеричиле се ынтэряу ын крединцэ ши споряу ла нумэр дин зи ын зи.
அதினாலே சபைகள் விசுவாசத்தில் உறுதிப்பட்டு, நாளுக்குநாள் பெருகின.
6 Фииндкэ ау фост оприць де Духул Сфынт сэ вестяскэ Кувынтул ын Асия, ау трекут прин цинутул Фриӂией ши Галатией.
அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துச்சென்றபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லவேண்டாமென்று பரிசுத்த ஆவியானவராலே தடைசெய்யப்பட்டு,
7 Ажуншь лынгэ Мисия, се прегэтяу сэ интре ын Битиния; дар Духул луй Исус ну ле-а дат вое.
மீசியா தேசம்வரை வந்து, பித்தினியா நாட்டிற்குப் போக விரும்பினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவிடவில்லை.
8 Ау трекут атунч прин Мисия ши с-ау коборыт ла Троа.
அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாகப்போய், துரோவாவிற்கு வந்தார்கள்.
9 Ноаптя, Павел а авут о ведение: ун ом дин Мачедония стэтя ын пичоаре ши й-а фэкут урмэтоаря ругэминте: „Тречь ын Мачедония ши ажутэ-не!”
அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டானது; அது என்னவென்றால், மக்கெதோனியா தேசத்தைச் சேர்ந்த ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவிற்கு வந்து எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்று பவுலை வேண்டிக்கொண்டதாக இருந்தது.
10 Дупэ ведения ачаста а луй Павел, ам кэутат ындатэ сэ не дучем ын Мачедония, кэч ынцелеӂям кэ Домнул не кямэ сэ ле вестим Евангелия.
௧0அந்த தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்கு நற்செய்தியைத் தெரிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தார் என்று நாங்கள் உறுதிப்படுத்திக்கொண்டு, உடனே மக்கெதோனியாவிற்குப் புறப்பட்டோம்.
11 Дупэ че ам порнит дин Троа, ам мерс ку корабия дрепт ла Самотрачия ши а доуа зи не-ам оприт ла Неаполис.
௧௧நாங்கள் துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவிற்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்திற்கும் சென்று,
12 Де аколо не-ам дус ла Филипь, каре есте чя динтый четате динтр-ун цинут ал Мачедонией ши о колоние романэ. Ын четатя ачаста ам стат кытева зиле.
௧௨அங்கிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ரோமர்கள் குடியேறின பிலிப்பி பட்டணத்திற்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாட்கள் தங்கியிருந்தோம்.
13 Ын зиуа Сабатулуй, ам ешит пе поарта четэций, лынгэ ун рыу, унде кредям кэ се афлэ ун лок де ругэчуне. Ам шезут жос ши ам ворбит фемеилор, каре ерау адунате лаолалтэ.
௧௩ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்திற்கு வெளியேபோய் ஆற்றின் அருகே வழக்கமாக ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த பெண்களுக்குப் போதித்தோம்.
14 Уна дин еле, нумитэ Лидия, вынзэтоаре де пурпурэ, дин четатя Тиатира, ера о фемее темэтоаре де Думнезеу ши аскулта. Домнул й-а дескис инима, ка сэ я аминте ла челе че спуня Павел.
௧௪அப்பொழுது தியத்தீரா ஊரைச்சேர்ந்த விலையுயர்ந்த சிவப்பு கம்பளம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொன்னவைகளைக் கவனிப்பதற்காக கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தார்.
15 Дупэ че а фост ботезатэ, еа ши каса ей, не-а ругат ши не-а зис: „Дакэ мэ сокотиць крединчоасэ Домнулуй, интраць ши рэмынець ын каса мя.” Ши не-а силит сэ интрэм.
௧௫அவளும் அவள் குடும்பத்தில் உள்ளவர்களும் ஞானஸ்நானம் பெற்றப்பின்பு, அவள் எங்களைப் பார்த்து: நான் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று நீங்கள் நினைத்தால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை மிகவும் வேண்டிக் கேட்டுக்கொண்டாள்.
16 Пе кынд не дучям ла локул де ругэчуне, не-а ешит ынаинте о роабэ, каре авя ун дух де гичире. Прин гичире, еа адучя мулт кыштиг стэпынилор ей.
௧௬நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்திற்குப் போகும்போது குறிசொல்லுகிற ஆவியினால், குறிசொல்லி தன் எஜமான்களுக்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் ஒரு பெண் எங்களுக்கு எதிரே வந்தாள்.
17 Роаба ачаста с-а луат дупэ Павел ши дупэ ной ши стрига: „Оамений ачештя сунт робий Думнезеулуй челуй Пряыналт ши ей вэ вестеск каля мынтуирий.”
௧௭அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனிதர்கள் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர்கள், இரட்சிப்பின் வழியை நமக்குத் தெரிவிக்கிறவர்கள் என்று சத்தமாக சொன்னாள்.
18 Аша а фэкут еа тимп де май мулте зиле. Павел, некэжит, с-а ынторс ши а зис духулуй: „Ын Нумеле луй Исус Христос ыць порунческ сэ ешь дин еа.” Ши а ешит кяр ын часул ачела.
௧௮அவள் பல நாட்கள் இப்படியே செய்துவந்தாள். பவுல் கோபமடைந்து, திரும்பிப்பார்த்து: நீ இவளைவிட்டு வெளியே போ என்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளைக் கொடுக்கிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அப்பொழுதே அந்த ஆவி அவளைவிட்டு வெளியேபோனது.
19 Кынд ау вэзут стэпыний роабей кэ с-а дус нэдеждя кыштигулуй лор, ау пус мына пе Павел ши пе Сила ши й-ау тырыт ын пяцэ ынаинтя фрунташилор.
௧௯அவளுடைய எஜமான்கள் தங்களுடைய வருமானத்திற்கான நம்பிக்கை போய்விட்டதால், பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள்.
20 Й-ау дат пе мына дрегэторилор ши ау зис: „Оамений ачештя не тулбурэ четатя; сунт ниште иудей
௨0அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்படைத்து: யூதர்களாகிய இந்த மனிதர்கள் நம்முடைய பட்டணத்தில் குழப்பம் உண்டாக்கி,
21 каре вестеск ниште обичеюрь пе каре ной, романий, ну требуе нич сэ ле примим, нич сэ ле урмэм.”
௨௧ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் கடைபிடிக்கவும் முடியாத தவறான பழக்கவழக்கங்களைப் போதிக்கிறார்கள் என்றனர்.
22 Нородул с-а ридикат ши ел ымпотрива лор, ши дрегэторий ау пус сэ ле смулгэ хайнеле де пе ей ши ау порунчит сэ-й батэ ку нуеле.
௨௨அப்பொழுது மக்கள் கூட்டம்கூடி, அவர்களுக்கு விரோதமாக வந்தார்கள். அதிகாரிகள் அவர்களுடைய ஆடைகளைக் கிழிக்கவும், அவர்களை அடிக்கவும் சொல்லி;
23 Дупэ че ле-ау дат мулте ловитурь, й-ау арункат ын темницэ ши ау дат ын грижэ темничерулуй сэ-й пэзяскэ бине.
௨௩அவர்களை அதிகமாக அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாகக் காவல்காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளைக் கொடுத்தார்கள்.
24 Темничерул, ка унул каре примисе о астфел де порункэ, й-а арункат ын темница динэунтру ши ле-а бэгат пичоареле ын бутучь.
௨௪அவன் இப்படிப்பட்டக் கட்டளையைப் பெற்றுக்கொண்டு, அவர்களை உள்காவல் அறையிலே அடைத்து, அவர்கள் கால்களை அசைக்க முடியாதபடிக்கு தொழுமரத்தின் ஓட்டைகளில் மாட்டிவைத்தான்.
25 Пе ла мезул нопций, Павел ши Сила се ругау ши кынтау кынтэрь де лаудэ луй Думнезеу, яр чей ынкишь ый аскултау.
௨௫நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
26 Деодатэ, с-а фэкут ун маре кутремур де пэмынт, аша кэ с-ау клэтинат темелииле темницей. Ындатэ, с-ау дескис тоате ушиле ши с-ау дезлегат легэтуриле фиекэруя.
௨௬திடீரென்று சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையத்தக்கதாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே சிறைச்சாலை கதவுகளெல்லாம் திறந்தன; எல்லோருடைய கட்டுகளும் கழன்றுபோனது.
27 Темничерул с-а дештептат ши, кынд а вэзут ушиле темницей дескисе, а скос сабия ши ера сэ се омоаре, кэч кредя кэ чей ынкишь ау фуӂит.
௨௭சிறைச்சாலைக்காரன் தூக்கம் தெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருப்பதைப் பார்த்து, கட்டப்பட்டு இருந்தவர்கள் ஓடிப்போனார்கள் என்று நினைத்து, வாளை எடுத்து தற்கொலை செய்துகொள்ளப்போனான்.
28 Дар Павел а стригат ку глас таре: „Сэ ну-ць фачь ничун рэу, кэч тоць сунтем аич.”
௨௮அப்பொழுது, பவுல் சத்தமிட்டு: நீ உனக்கு எந்தத் தீங்கையும் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லோரும் இங்குதான் இருக்கிறோம் என்றான்.
29 Атунч, темничерул а черут о луминэ, а сэрит ынэунтру ши, тремурынд де фрикэ, с-а арункат ла пичоареле луй Павел ши але луй Сила,
௨௯அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடிப்போய், நடுங்கி, பவுலுக்கும் சீலாவிற்கும் முன்பாக விழுந்து,
30 й-а скос афарэ ши ле-а зис: „Домнилор, че требуе сэ фак ка сэ фиу мынтуит?”
௩0அவர்களை வெளியே கூட்டிக்கொண்டுவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்னசெய்யவேண்டும் என்றான்.
31 Павел ши Сила й-ау рэспунс: „Креде ын Домнул Исус ши вей фи мынтуит, ту ши каса та.”
௩௧அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,
32 Ши й-ау вестит Кувынтул Домнулуй, атыт луй, кыт ши тутурор челор дин каса луй.
௩௨அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த எல்லோருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்.
33 Темничерул й-а луат ку ел кяр ын часул ачела дин ноапте, ле-а спэлат рэниле ши а фост ботезат ындатэ, ел ши тоць ай луй.
௩௩மேலும் அந்த இராத்திரி நேரத்திலே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனோடுகூட இருந்தவர்களும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
34 Дупэ че й-а дус ын касэ, ле-а пус маса ши с-а букурат ку тоатэ каса луй кэ а крезут ын Думнезеу.
௩௪பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு உணவுகொடுத்து, தன் குடும்பத்தார் அனைவரோடும் தேவனிடத்தில் விசுவாசம் வைத்து மனமகிழ்ச்சியாக இருந்தான்.
35 Кынд с-а фэкут зиуэ, дрегэторий ау тримис пе чей че пуртау нуелеле сэ спунэ темничерулуй: „Дэ друмул оаменилор ачелора.”
௩௫பொழுதுவிடிந்தபின்பு: அந்த மனிதர்களை விட்டுவிடுங்கள் என்று சொல்ல அதிகாரிகள் காவலர்களை அனுப்பினார்கள்.
36 Ши темничерул а спус луй Павел ачесте кувинте: „Дрегэторий ау тримис сэ ви се дя друмул; акум дар, ешиць афарэ ши дучеци-вэ ын паче.”
௩௬சிறைச்சாலைக்காரன் பவுலுக்கு இந்த வார்த்தைகளை அறிவித்து: உங்களை விடுதலைசெய்யும்படி அதிகாரிகள் கட்டளைக் கொடுத்து அனுப்பியுள்ளார்கள்; எனவே நீங்கள் இப்பொழுது புறப்பட்டு சமாதானத்தோடு போங்கள் என்றான்.
37 Дар Павел ле-а зис: „Дупэ че не-ау бэтут ку нуеле ын фаца тутурор фэрэ сэ фим жудекаць, пе ной, каре сунтем романь, не-ау арункат ын темницэ, ши акум не скот афарэ пе аскунс! Ну мерӂе аша! Сэ винэ ей сингурь сэ не скоатэ афарэ!”
௩௭அதற்குப் பவுல்: ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம் விசாரிக்காமல், வெளிப்படையாக அடித்து, சிறைச்சாலையிலே போட்டார்கள்; இப்பொழுது இரகசியமாக எங்களை விடுதலை செய்கிறார்களோ? அப்படியல்ல, அவர்களே வந்து, எங்களை விடுதலைசெய்து வெளியே அனுப்பிவிடட்டும் என்றான்.
38 Чей че пуртау нуелеле ау спус ачесте кувинте дрегэторилор. Ачештя с-ау темут кынд ау аузит кэ сунт романь.
௩௮காவலர்கள் இந்த வார்த்தைகளைச் சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்கள். அவர்கள் ரோமர்கள் என்று அதிகாரிகள் கேட்டபொழுது பயந்துவந்து,
39 Дрегэторий ау венит сэ-й потоляскэ, й-ау скос афарэ дин темницэ ши й-ау ругат сэ пэрэсяскэ четатя.
௩௯அவர்களோடு தயவாகப்பேசி, அவர்களை வெளியே அழைத்துக்கொண்டுபோய், பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி கேட்டுக்கொண்டார்கள்.
40 Ей ау ешит дин темницэ ши ау интрат ын каса Лидией; ши, дупэ че ау вэзут ши мынгыят пе фраць, ау плекат.
௪0அப்படியே அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளின் வீட்டிற்குப்போய், சகோதரர்களைப் பார்த்து, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு புறப்பட்டுப்போனார்கள்.

< Фаптеле 16 >