< 2 Кроничь 19 >

1 Иосафат, ымпэратул луй Иуда, с-а ынторс ын паче акасэ, ла Иерусалим.
யூதாவின் ராஜாவாகிய யோசபாத், எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடு திரும்பிவந்தான்.
2 Иеху, фиул пророкулуй Ханани, й-а ешит ынаинте ши а зис ымпэратулуй Иосафат: „Кум де ай ажутат ту пе чел рэу ши ай юбит пе чей че урэск пе Домнул? Дин причина ачаста есте мыният Домнул пе тине.
அப்பொழுது அனானியின் மகனாகிய யெகூ என்னும் தரிசனம் காண்கிறவன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, யெகோவாவைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதனால் யெகோவாவுடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது.
3 Дар тот се май гэсеште ши чева бун ын тине, кэч ай ынлэтурат дин царэ идолий ши ць-ай пус инима сэ кауте пе Думнезеу.”
ஆகிலும் நீர் விக்கிரகத்தோப்புகளைத் தேசத்தைவிட்டு அகற்றி, தேவனைத் தேட உம்முடைய இருதயத்தை நேராக்கின காரியத்தில் நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது உண்டு என்றான்.
4 Иосафат а рэмас ла Иерусалим. Апой а май фэкут о кэлэторие прин мижлокул попорулуй, де ла Беер-Шеба пынэ ла мунтеле луй Ефраим, ши й-а адус ынапой ла Домнул Думнезеул пэринцилор лор.
யோசபாத் எருசலேமிலே குடியிருந்து, திரும்ப பெயர்செபா தொடங்கி, எப்பிராயீம் மலைத்தேசம்வரை உள்ள மக்களுக்குள்ளே பிரயாணமாகப் போய், அவர்களைத் தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தரிடம் திரும்பச்செய்தான்.
5 А пус жудекэторь ын тоате четэциле ынтэрите дин цара луй Иуда, ын фиекаре четате.
அவன் யூதாவின் பாதுகாப்பான பட்டணங்களாகிய ஒவ்வொரு பட்டணத்திலும் நியாயாதிபதிகளை வைத்து,
6 Ши а зис жудекэторилор: „Луаць сяма ла че вець фаче, кэч ну пентру оамень вець рости жудекэць, чи пентру Домнул, каре ва фи лынгэ вой кынд ле вець рости.
அந்த நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் செய்கிற காரியத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனிதனுடைய கட்டளையினால் அல்ல, யெகோவாவுடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்; நியாயம் விசாரிக்கிற காரியத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார்.
7 Акум, фрика де Домнул сэ фие песте вой; вегяць асупра фаптелор воастре, кэч ла Домнул Думнезеул ностру ну есте ничо нелеӂюире, нич ну се аре ын ведере фаца оаменилор, нич ну се примеск дарурь.”
ஆதலால் யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருப்பதாக, எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் பாரபட்சமும் இல்லை, லஞ்சம் வாங்குதலும் அவரிடத்திலே செல்லாது என்றான்.
8 Кынд с-а ынторс ла Иерусалим, Иосафат а пус ши аич, пентру жудекэциле Домнулуй ши пентру неынцелеӂерь, левиць, преоць ши кэпетений песте каселе пэринтешть але луй Исраел.
அவர்கள் எருசலேமில் வந்திருக்கும்போது, யோசபாத் லேவியர்களிலும், ஆசாரியர்களிலும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவரிலும், சிலரைக் யெகோவாவுடைய நியாயங்களைக்குறித்தும் விவாதக் காரியங்களைக்குறித்தும் விசாரிக்கும்படி எருசலேமிலே நியமித்து,
9 Ши ятэ порунчиле пе каре ли ле-а дат: „Вой сэ лукраць ын фрикэ де Домнул, ку крединцэ ши курэцие де инимэ.
அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து, உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் நடந்து, செய்யவேண்டியது என்னவென்றால்,
10 Ын орьче неынцелеӂере, каре вэ ва фи супусэ де фраций воштри, каре локуеск ын четэциле лор, ши ануме ку привире ла ун омор, ла о леӂе, ла о порункэ, ла ынвэцэтурь ши рындуель, сэ-й луминаць, ка сэ ну се факэ виноваць фацэ де Домнул ши сэ ну избукняскэ мыния Луй песте вой ши песте фраций воштри. Аша сэ лукраць, ши ну вець фи виноваць.
௧0பலவித இரத்தப்பழியைக்குறித்த காரியங்களும், பிரமாணத்திற்கும், கற்பனைக்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் அடுத்த பலவித வழக்குச்செய்திகளும், தங்கள் பட்டணங்களிலே குடியிருக்கிற உங்கள் சகோதரரிடத்திலிருந்து உங்களிடத்தில் வரும்போது, அவர்கள் யெகோவாவுக்கு முன்பாகக் குற்றவாளிகள் ஆகாமலிருக்கவும், உங்கள்மேலும் உங்கள் சகோதரர்கள் மேலும் கடுங்கோபம் வராமலிருக்கவும், நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்; நீங்கள் இப்படிச் செய்தால் குற்றவாளிகள் ஆகமாட்டீர்கள்.
11 Ши ятэ кэ авець ын фрунте пе мареле преот Амария пентру тоате требуриле Домнулуй ши пе Зебадия, фиул луй Исмаел, кэпетения касей луй Иуда, пентру тоате требуриле ымпэратулуй ши авець ынаинте ка дрегэторь пе левиць. Ынтэрици-вэ ши лукраць, ши Домнул сэ фие ку чел че ва фаче бинеле!”
௧௧இதோ, ஆசாரியனாகிய அமரியா, யெகோவாவுக்குரிய எல்லா நியாயத்திலும், இஸ்மவேலின் மகனாகிய செபதியா என்னும் யூதா வம்சத்தின் தலைவன் ராஜாவுக்குரிய எல்லா நியாயத்திலும் உங்களுக்கு மேலான நியாயாதிபதிகள்; லேவியர்களும் உங்களுக்கு முன்பாக அதிகாரிகளாக இருந்து உங்களுக்கு உதவி செய்வார்கள்; நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் யெகோவா துணை என்றான்.

< 2 Кроничь 19 >