< 1 Самуел 1 >

1 Ера ун ом дин Раматаим-Цофим, дин мунтеле луй Ефраим, нумит Елкана, фиул луй Иерохам, фиул луй Елиху, фиул луй Тоху, фиул луй Цуф, ефратит.
எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனிதன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பெயர்; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் மகனான எலிகூவின் மகனான எரோகாமின் மகன்.
2 Ел авя доуэ невесте: уна се нумя Ана, яр чялалтэ, Пенина. Пенина авя копий, дар Ана н-авя.
அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்தி பெயர் அன்னாள், மற்றவள் பெயர் பெனின்னாள்; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை.
3 Омул ачеста се суя ын фиекаре ан дин четатя са ла Сило, ка сэ се ынкине ынаинтя Домнулуй оштирилор ши сэ-Й адукэ жертфе. Аколо се афлау чей дой фий ай луй Ели, Хофни ши Финеас, преоць ай Домнулуй.
அந்த மனிதன் சீலோவிலே சேனைகளின் யெகோவாவை தொழுதுகொள்ளவும் அவருக்குப் பலியிடவும் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே யெகோவாவின் ஆசாரியரான ஏலியின் இரண்டு மகன்களான ஒப்னியும், பினெகாசும் இருந்தார்கள்.
4 Ын зиуа кынд ышь адучя Елкана жертфа, дэдя пэрць невестей сале Пенина, тутурор фиилор ши тутурор фийчелор пе каре ле авя де ла еа.
அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே அவன் தன்னுடைய மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லா மகன்களுக்கும் மகள்களுக்கும் பங்குபோட்டுக் கொடுப்பான்.
5 Дар Аней ый дэдя о парте ындоитэ, кэч юбя пе Ана. Дар Домнул о фэкусе стярпэ.
அன்னாளை நேசித்ததினால், அவளுக்கு இரண்டு பங்கு கொடுப்பான்; யெகோவாவோ அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார்.
6 Потривника ей о ынцепа десеорь, ка с-о факэ сэ се мыние, пентру кэ Домнул о фэкусе стярпэ.
யெகோவா அன்னாளுடைய கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளுக்கு மிகவும் எரிச்சலுண்டாக்குவாள்.
7 Ши ын тоць аний ера аша. Орь де кыте орь се суя Ана ла Каса Домнулуй, Пенина о ынцепа ла фел. Атунч, еа плынӂя ши ну мынка.
அவள் யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போகும்போது, அவன் ஒவ்வொரு வருடமும் அப்படியே செய்வான்; இவள் அன்னாளை மனவேதனைப்படுத்துவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்.
8 Елкана, бэрбатул ей, ый зичя: „Ана, пентру че плынӂь ши ну мэнынчь? Пентру че ць-есте ынтристатэ инима? Оаре ну прецуеск еу пентру тине май мулт декыт зече фий?”
அவளுடைய கணவனான எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்து மகன்களைவிட நான் உனக்கு மேலானவன் அல்லவா? என்றான்.
9 Ана с-а скулат, дупэ че ау мынкат ши ау бэут ей ла Сило. Преотул Ели шедя пе ун скаун, лынгэ унул дин ушорий Темплулуй Домнулуй.
சீலோவிலே அவர்கள் சாப்பிட்டுக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்தாள்; ஆசாரியனான ஏலி யெகோவாவுடைய ஆலயத்தின் வாசற்கதவருகில் ஒரு இருக்கையின்மேல் உட்கார்ந்திருந்தான்.
10 Ши Ана се руга Домнулуй ку суфлетул амэрыт ши плынӂя.
௧0அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து:
11 Еа а фэкут о журуинцэ ши а зис: „Доамне, Думнезеул оштирилор! Дакэ вей биневои сэ кауць спре ынтристаря роабей Тале, дакэ-Ць вей адуче аминте де мине ши ну вей уйта пе роаба Та ши дакэ вей да роабей Тале ун копил де парте бэрбэтяскэ, ыл вой ынкина Домнулуй пентру тоате зилеле веций луй ши бричь ну ва трече песте капул луй.”
௧௧சேனைகளின் யெகோவாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறக்காமல் நினைத்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் எல்லா நாட்களும் நான் அவனைக் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவனுடைய தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை செய்தாள்.
12 Фииндкэ еа стэтя мултэ време ын ругэчуне ынаинтя Домнулуй, Ели се уйта ку бэгаре де сямэ ла гура ей.
௧௨அவள் யெகோவாவுக்கு முன்பாக அதிகநேரம் விண்ணப்பம்செய்கிறபோது, ஏலி அவளுடைய வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான்.
13 Ана ворбя ын инима ей ши нумай бузеле ши ле мишка, дар ну и се аузя гласул. Ели кредя кэ есте бятэ
௧௩அன்னாள் தன்னுடைய இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள்மட்டும் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கவில்லை; ஆகவே, அவள் குடிவெறியில் இருக்கிறாள் என்று ஏலி நினைத்து,
14 ши й-а зис: „Пынэ кынд вей фи бятэ? Ду-те де те трезеште.”
௧௪அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் குடிவெறியில் இருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்.
15 Ана а рэспунс: „Ну, домнул меу, еу сунт о фемее каре суферэ ын инима ей ши н-ам бэут нич вин, нич бэутурэ амецитоаре, чи ымь вэрсам суфлетул ынаинтя Домнулуй.
௧௫அதற்கு அன்னாள் பதிலாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனவேதனையுள்ள பெண்; நான் திராட்சை ரசமோ, மதுவோ குடிக்கவில்லை; நான் யெகோவாவுக்கு முன்பாக என்னுடைய இருதயத்தை ஊற்றிவிட்டேன்.
16 Сэ ну ей пе роаба та дрепт о фемее стрикатэ, кэч нумай пря мулта мя дурере ши супэраря м-ау фэкут сэ ворбеск пынэ акум.”
௧௬உம்முடைய அடிமையை துன்மார்க்கத்தின் பெண்ணாக நினைக்கவேண்டாம்; மிகுதியான துன்பத்தினாலும், துயரத்தினாலும் இந்த நேரம்வரை விண்ணப்பம்செய்தேன் என்றாள்.
17 Ели а луат дин ноу кувынтул ши а зис: „Ду-те ын паче, ши Думнезеул луй Исраел сэ аскулте ругэчуня пе каре Й-ай фэкут-о!”
௧௭அதற்கு ஏலி சமாதானத்துடன் போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.
18 Еа а зис: „Сэ капете роаба та тречере ынаинтя та!” Ши фемея а плекат. А мынкат ши фаца ей н-а май фост ачеяшь.
௧௮அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயவு கிடைக்கட்டும் என்றாள்; பின்பு அந்த பெண் புறப்பட்டுப்போய் சாப்பிட்டாள்; அதன்பின்பு அவள் துக்கமுகமாக இருக்கவில்லை.
19 С-ау скулат дис-де-диминяцэ ши, дупэ че с-ау ынкинат пынэ ла пэмынт ынаинтя Домнулуй, с-ау ынторс ши ау венит акасэ, ла Рама. Елкана с-а кулкат ку невастэ-са Ана, ши Домнул Шь-а адус аминте де еа.
௧௯அவர்கள் அதிகாலையில் எழுந்து, யெகோவாவைத் தொழுதுகொண்டு, ராமாவிலிருக்கிற தங்களுடைய வீட்டுக்குத் திரும்பிப் போனார்கள்; எல்க்கானா தன் மனைவியாகிய அன்னாளுடன் இணைந்தான்; யெகோவா அவளை நினைத்தார்.
20 Кынд и с-ау ымплинит зилеле, Ана а рэмас ынсэрчинатэ ши а нэскут ун фиу, кэруя й-а пус нумеле Самуел, „кэч”, а зис еа, „де ла Домнул л-ам черут”.
௨0சிலநாட்கள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெற்று, யெகோவாவிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டாள்.
21 Бэрбатул сэу, Елкана, с-а суит апой ку тоатэ каса луй сэ адукэ Домнулуй жертфа де песте ан ши сэ-шь ымплиняскэ журуинца.
௨௧எல்க்கானா என்பவன் யெகோவாவுக்கு வருடந்தோறும் செலுத்தும் பலியையும் தன்னுடைய பொருத்தனையையும் செலுத்தும்படியாக, தன்னுடைய வீட்டார் அனைவரோடும் போனான்.
22 Дар Ана ну с-а суит ши а зис бэрбатулуй ей: „Кынд вой ынцэрка копилул, ыл вой дуче ка сэ фие пус ынаинтя Домнулуй ши сэ рэмынэ аколо пентру тотдяуна.”
௨௨அன்னாள் அவர்களுடன் போகவில்லை; அவள்: பிள்ளை பால்குடிப்பதை மறந்தபின்பு, அவன் யெகோவாவுக்கு முன்பாக காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய்விடுவேன் என்று தன்னுடைய கணவனிடம் சொன்னாள்.
23 Елкана, бэрбатул ей, й-а зис: „Фэ че вей креде, аштяптэ пынэ-л вей ынцэрка. Нумай ымплиняскэ-Шь Домнул кувынтул Луй!” Ши фемея а рэмас акасэ ши а дат цыцэ фиулуй ей пынэ л-а ынцэркат.
௨௩அப்பொழுது அவளுடைய கணவனாகிய எல்க்கானா அவளை நோக்கி: நீ உன்னுடைய விருப்பத்தின்படி செய்து, அவனை பால் மறக்கச்செய்யும்வரை இரு; யெகோவா தம்முடைய வார்த்தையைமட்டும் நிறைவேற்றுவாராக என்றான்; அப்படியே அந்தப் பெண் தன்னுடைய பிள்ளையைப் பால் மறக்கச்செய்யும்வரைக்கும் பாலூட்டி வளர்த்தாள்.
24 Кынд л-а ынцэркат, л-а суит ку еа ши а луат трей таурь, о ефэ де фэинэ ши ун бурдуф ку вин. Л-а дус ын Каса Домнулуй, ла Сило; копилул ера ынкэ мик де тот.
௨௪அவள் அவனைப் பால்மறக்கச் செய்தபின்பு, மூன்று காளைகளையும், ஒரு மரக்கால் மாவையும், ஒரு தோல்பை திராட்சை ரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக்கொண்டு, சீலோவிலிருக்கிற யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாக இருந்தான்.
25 Ау ынжунгият таурий ши ау дус копилул ла Ели.
௨௫அவர்கள் ஒரு காளையைப் பலியிட்டு, பிள்ளையை ஏலியினிடத்தில் கொண்டுவந்து விட்டார்கள்.
26 Ана а зис: „Домнул меу, яртэ-мэ! Кыт есте де адевэрат кэ суфлетул тэу трэеште, домнул меу, атыт есте де адевэрат кэ еу сунт фемея ачея каре стэтям аич лынгэ тине ши мэ ругам Домнулуй!
௨௬அப்பொழுது அவள்: என்னுடைய ஆண்டவனே, இங்கே உம்முடைய அருகிலே நின்று யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்த பெண் நான்தான் என்று என்னுடைய ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.
27 Пентру копилул ачеста мэ ругам, ши Домнул а аскултат ругэчуня пе каре Й-о фэчям.
௨௭இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்செய்தேன்; நான் யெகோவாவிடத்தில் கேட்ட என்னுடைய விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்.
28 Де ачея вряу сэ-л дау Домнулуй: тоатэ вяца луй сэ фие дат Домнулуй.” Ши с-ау ынкинат аколо ынаинтя Домнулуй.
௨௮எனவே, அவன் யெகோவாவெக்கென்று கேட்கப்பட்டதால், அவன் உயிரோடிருக்கும் எல்லா நாட்களும் அவனைக் யெகோவாவுக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே யெகோவாவைத் தொழுதுகொண்டான்.

< 1 Самуел 1 >