< Luca 17 >

1 Atunci le-a spus discipolilor: Este imposibil să nu vină poticnirile; dar vai aceluia prin care vin!
இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “மக்களுக்குப் பாவச்சோதனை வருவதை தவிர்க்க முடியாது.” ஆனால், அவை யாரால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ.
2 Ar fi mai bine pentru el dacă i s-ar lega în jurul gâtului o piatră de moară și să fie aruncat în mare, decât să poticnească pe unul dintre acești micuți.
இந்தச் சிறியவர்களில் ஒருவனை யாராவது பாவத்தில் விழப்பண்ணினால், அவ்வாறு செய்பவர்களின் கழுத்திலே திரிகைக்கல் கட்டி கடலிலே தள்ளப்படுவது, அவனுக்கு நலமாய் இருக்கும்.
3 Luați seama la voi înșivă și dacă fratele tău încalcă legea împotriva ta, mustră-l; și dacă se pocăiește, iartă-l.
எனவே, நீங்கள் கவனமாய் இருங்கள். “உன் சகோதரனோ அல்லது சகோதரியோ பாவம்செய்தால் அவர்களைக் கடிந்துகொள். அவர்கள் மனந்திரும்பினால், அவர்களை மன்னித்து விடு.
4 Și dacă încalcă legea împotriva ta de șapte ori într-o zi și de șapte ori într-o zi se întoarce la tine, spunând: Mă pocăiesc; iartă-l.
அவர்கள் ஒரே நாளில், ஏழுமுறை உனக்கு எதிராகப் பாவம் செய்தாலும், அந்த ஏழுமுறையும் அவர்கள் உன்னிடம் வந்து, ‘நான் மனந்திரும்பி விட்டேன்’ என்றால், நீ அவர்களை மன்னிக்க வேண்டும்” என்றார்.
5 Și apostolii au spus Domnului: Mărește-ne credința.
அப்போஸ்தலர் கர்த்தரிடம், “எங்கள் விசுவாசத்தை அதிகரிக்கப்பண்ணும்!” என்றார்கள்.
6 Iar Domnul a spus: Dacă ați avea credință cât un grăunte de muștar, ați spune acestui sicomor: Dezrădăcinează-te și sădește-te în mare; și ar asculta de voi.
அதற்கு இயேசு, “கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இந்த காட்டத்தி மரத்தைப்பார்த்து, ‘நீ வேரோடே பிடுங்குண்டு, கடலிலே நடப்படுவாயாக’ என்று சொன்னால், அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
7 Dar care dintre voi, având un rob arând sau păstorind vitele, îi va spune îndată după ce vine din câmp: Mergi și șezi la masă?
“உங்களுக்கு ஒரு வேலைக்காரன் இருந்தால், அவன் வயலை உழுது அல்லது ஆடுகளை மேய்த்து திரும்பி வரும்போது, எஜமான் வேலைக்காரனிடம், ‘இங்கு, வந்து உட்கார்ந்து சாப்பிடு’ என்று சொல்லுவானா?
8 Și nu îi va spune mai degrabă: Pregătește-mi ceva să mănânc și încinge-te și servește-mi, până voi mânca și voi bea; și după acestea, vei mânca și vei bea tu?
மாறாக அவனிடம், ‘எனது சாப்பாட்டைத் தயாராக்கி, நீயும் ஆயத்தமாகி நான் சாப்பிட்டு குடித்து முடிக்கும்வரை, எனக்குப் பணிசெய்; அதற்குப் பின்பு, நீ சாப்பிடலாம்’ என்று சொல்லுவான் அல்லவா?
9 Îi mulțumește acelui rob, pentru că a făcut ce îi fusese poruncit? Consider că nu.
கட்டளையிட்டதைச் செய்ததற்காக, அந்த வேலைக்காரனுக்கு அவன் நன்றி செலுத்துவானா?
10 Tot așa și voi, când veți fi făcut toate cele poruncite vouă, să spuneți: Suntem robi nefolositori, am făcut ce era datoria noastră să facem.
எனவே நீங்களும், உங்களுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் செய்துமுடித்த பின்பு, ‘நாங்கள் தகுதியற்ற வேலைக்காரர்; நாங்கள் எங்களுடைய கடமையை மட்டுமே செய்தோம்’ என்று சொல்லுங்கள்” என்றார்.
11 Și s-a întâmplat, pe când mergea el la Ierusalim, că a trecut prin mijlocul Samariei și Galileii.
இயேசு எருசலேமுக்குப் போகும்போது, சமாரியா மற்றும் கலிலேயா பகுதிகள் இடையே இருக்கும், எல்லை கிராமங்கள் வழியாகப் பயணம் செய்தார்.
12 Și când a intrat într-un anumit sat, l-au întâlnit zece bărbați leproși, care stăteau departe în picioare;
அவர் ஒரு கிராமத்திற்கு வந்தபோது, குஷ்ட வியாதியுடைய பத்துப்பேர் அவருக்கு எதிர்ப்பட்டார்கள். அவர்கள் தூரத்தில் நின்று கொண்டே,
13 Și ei și-au ridicat vocea, spunând: Isuse, Stăpâne, ai milă de noi.
“ஐயா, இயேசுவே, எங்களுக்கு இரக்கம் காட்டும்!” என்று சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.
14 Și când i-a văzut, le-a spus: Duceți-vă, arătați-vă preoților. Și s-a întâmplat că, pe când mergeau ei, au fost curățiți.
இயேசு அவர்களைக் கண்டபோது, “நீங்கள் போய் ஆசாரியர்களிடம் உங்களைக் காண்பியுங்கள்” என்றார். அப்படியே அவர்கள் போகும்போதே, சுகமடைந்தார்கள்.
15 Și unul dintre ei, când a văzut că a fost vindecat, s-a întors și cu voce tare glorifica pe Dumnezeu.
அவர்களில் ஒருவன் தான் சுகமடைந்ததைக் கண்டபோது, உரத்த சத்தமாய் இறைவனைத் துதித்துக்கொண்டு திரும்பிவந்தான்.
16 Și a căzut cu fața la pământ la picioarele lui, dându-i mulțumiri; și el era samaritean.
அவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினான். அவனோ ஒரு சமாரியனாயிருந்தான்.
17 Iar Isus, răspunzând, a zis: Nu au fost zece curățiți? Dar unde sunt cei nouă?
அப்பொழுது இயேசு, “பத்துப்பேரும் சுகமடைந்தார்கள் அல்லவா? மற்ற ஒன்பது பேர் எங்கே?
18 Nu s-a găsit cine să se întoarcă și să dea glorie lui Dumnezeu decât acest străin?
இந்த வெளிநாட்டானைத் தவிர, இறைவனுக்குத் துதி செலுத்துவதற்கு வேறு யாரும் திரும்பிவரக் காணோமே?” என்று கேட்டார்.
19 Și i-a spus: Scoală-te, du-te; credința ta te-a făcut sănătos.
பின்பு இயேசு அவனிடம், “நீ எழுந்து போ; உன் விசுவாசம் உன்னைச் சுகப்படுத்தியது” என்று சொன்னார்.
20 Și fiind întrebat de farisei, când are să vină împărăția lui Dumnezeu, le-a răspuns și a zis: Împărăția lui Dumnezeu nu vine la vedere;
ஒரு நாள், இறைவனின் அரசு எப்போது வருமென்று, பரிசேயர் இயேசுவைக் கேட்டார்கள். அதற்கு இயேசு, “இறைவனின் அரசு, நீங்கள் கவனமாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது வருவதில்லை.
21 Nici nu vor spune: Iat-o aici! Sau: Iat-o acolo! Căci, iată, împărăția lui Dumnezeu este înăuntrul vostru.
‘இதோ இங்கே வந்துவிட்டது!’ என்றும், ‘அதோ அங்கே வந்துவிட்டது’ என்றும், மக்களால் சொல்லவும் முடியாது. ஏனெனில், இறைவனின் அரசு உங்கள் மத்தியிலே இருக்கிறது” என்றார்.
22 Și le-a spus discipolilor: Vor veni zilele când veți dori să vedeți una dintre zilele Fiului omului și nu veți vedea.
பின்பு அவர் சீடர்களிடம், “மானிடமகனாகிய என்னுடைய நாட்களில் ஒன்றையாவது காண்பதற்கு நீங்கள் ஆவல்கொள்ளும் காலம் வரும். ஆனாலும், நீங்கள் அதைக் காணமாட்டீர்கள்.
23 Și vă vor spune: Iată, aici; sau: Iată, acolo. Nu vă duceți, nici nu îi urmați.
‘அங்கே அவர் இருக்கிறார்’ என்றும் ‘இங்கே அவர் இருக்கிறார்’ என்றும் சிலர் சொல்வார்கள். நீங்களோ அவர்கள் பின்னால் ஓட வேண்டாம்.
24 Pentru că așa ca fulgerul, care fulgerând dintr-o parte de sub cer, strălucește până în cealaltă parte de sub cer; așa va fi și Fiul omului în ziua lui.
வானத்தின் ஒரு முனையிலிருந்து, மறுமுனைவரை பிரகாசித்து மின்னும் மின்னலைப்போல் மானிடமகனாகிய நான் என்னுடைய நாளில் காணப்படுவேன்.
25 Dar mai întâi el trebuie să sufere multe și să fie respins de această generație.
ஆனால் முதலாவது, நான் பல வேதனைகளை அனுபவித்து, இந்தத் தலைமுறையினரால் புறக்கணிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது.
26 Și cum a fost în zilele lui Noe, tot așa va fi și în zilele Fiului omului.
“நோவாவின் நாட்களில் இருந்ததுபோலவே, மானிடமகனாகிய எனது நாட்களிலும் இருக்கும்.
27 Mâncau, beau, se însurau, se măritau, până în ziua când Noe a intrat în arcă și potopul a venit și i-a nimicit pe toți.
நோவா பேழைக்குள் போகும்வரைக்கும், மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும், திருமணம் செய்துகொண்டும், திருமணம் செய்துகொடுத்துக்கொண்டும் இருந்தார்கள். அப்போது, வெள்ளம் வந்து மக்கள் எல்லோரையும் அழித்துப்போட்டது.
28 Și la fel cum a fost în zilele lui Lot, mâncau, beau, cumpărau, vindeau, plantau, zideau;
“லோத்தின் நாட்களிலும் அப்படித்தான் நடந்தது. அந்த மக்களும் சாப்பிட்டு, குடித்து, வாங்கி, விற்று, பயிரிட்டுக்கொண்டும், கட்டிக்கொண்டும் இருந்தார்கள்.
29 Dar în acea zi când Lot a ieșit din Sodoma, a plouat foc și pucioasă din cer și i-a nimicit pe toți.
ஆனால், லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே, நெருப்பும் கந்தகமும் வானத்திலிருந்து மழையாகப் பெய்து, அவர்கள் எல்லோரையும் அழித்துப்போட்டது.
30 Întocmai, astfel va fi în ziua când Fiul omului se revelează.
“மானிடமகனாகிய நான் வெளிப்படும் நாளிலும், இதைப்போலவே இருக்கும்.
31 În acea zi, cel ce va fi pe acoperișul casei și bunurile lui în casă, să nu se coboare să le ia; și cel ce este pe câmp, la fel, să nu se întoarcă.
அந்த நாளிலே, தமது வீட்டின்மேல் இருப்பவர்கள், தமது வீட்டிலுள்ள பொருட்களை எடுக்கும்படி, கீழே இறங்கிப் போகக்கூடாது. அப்படியே வயலில் இருக்கிறவர்கள், எதற்காகவும் திரும்பிப் போகக்கூடாது.
32 Amintiți-vă de soția lui Lot.
லோத்தின் மனைவியை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
33 Oricine va căuta să își salveze viața, o va pierde; și oricine își va pierde viața, o va păstra.
தம் வாழ்வைக் காத்துக்கொள்ள முயற்சிக்கிறவர்கள் எவர்களோ, அவர்கள் அதை இழந்துபோவார்கள். தம் வாழ்வை இழக்கிறவர்கள் எவர்களோ, அவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள்.
34 Vă spun: În acea noapte, vor fi doi într-un pat; unul va fi luat și celălalt va fi lăsat.
நான் உங்களுக்குச் சொல்கிறேன், அந்த இரவிலே இரண்டுபேர் ஒரு படுக்கையில் படுத்திருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விட்டுவிடப்படுவான்.
35 Două vor măcina împreună; una va fi luată și cealaltă va fi lăsată.
இரண்டு பெண்கள் ஒன்றாகத் தானியம் அரைத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருத்தி எடுத்துக்கொள்ளப்படுவாள், மற்றவள் விட்டுவிடப்படுவாள்.
36 Doi vor fi la câmp; unul va fi luat și celălalt va fi lăsat.
இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விட்டுவிடப்படுவான்.” என்றார்.
37 Iar ei au răspuns și i-au zis: Unde Doamne? Iar el le-a spus: Oriunde este trupul, acolo se vor aduna vulturii.
அதற்கு சீடர்கள், “எங்கே ஆண்டவரே?” என்றார்கள். இயேசு அதற்குப் பதிலாக, “பிணம் எங்கே கிடக்கிறதோ, அங்கே கழுகுகள் ஒன்றுகூடும்” என்றார்.

< Luca 17 >