< لاویان 23 >
«این دستورها را به بنیاسرائیل بده. برای برگزاری این اعیاد، تمام قوم باید برای عبادت خداوند جمع شوند. | 2 |
“இஸ்ரயேலருடன் நீ பேசி, அவர்களுக்கு சொல்லவேண்டியதாவது: இவை நியமிக்கப்பட்ட எனது பண்டிகைகள். யெகோவாவுக்குரிய நியமிக்கப்பட்ட பண்டிகைகள் இவையே. இவைகளை நீங்கள் பரிசுத்த சபை கூட்டங்களாகப் பிரசித்தப்படுத்த வேண்டும்.
(در روز شَبّات نیز که هفتمین روز هفته میباشد، قوم باید برای عبادت خداوند جمع شوند. در هر جا که ساکن باشند باید در این روز دست از کار کشیده، استراحت کنند.) | 3 |
“‘நீங்கள் ஆறுநாட்கள் வேலை செய்யலாம். ஆனால் ஏழாம்நாளோ இளைப்பாறுதலுக்குரிய ஒரு ஓய்வுநாள். அது பரிசுத்த சபைக்கூடும் நாள். அந்த நாளில் நீங்கள் எந்த ஒரு வேலையையும் செய்யக்கூடாது. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் அது யெகோவாவுக்குரிய ஓய்வுநாளாகும்.
«اعیاد خداوند، یعنی محفلهای مقدّس که باید هر سال جشن گرفته شوند از این قرارند: | 4 |
“‘யெகோவாவினால் நியமிக்கப்பட்ட பண்டிகைகள் இவையே: அவைகளுக்காக நியமிக்கப்பட்ட காலங்களில், நீங்கள் அவைகளைப் பரிசுத்த சபை கூடுதல்களாகப் பிரசித்தப்படுத்த வேண்டும்.
«در غروب روز چهاردهم اولین ماه هر سال مراسم عید پِسَح را به احترام خداوند بجا آورید. | 5 |
முதலாம் மாதம் பதினான்காம் நாள் பொழுதுபடும் வேளையில் யெகோவாவின் பஸ்கா பண்டிகை ஆரம்பமாகும்.
از روز پانزدهم همان ماه، عید فطیر برای خداوند آغاز میشود و تا هفت روز باید فقط نان بدون خمیرمایه خورده شود. | 6 |
அதே மாதம் பதினைந்தாம் நாளில் யெகோவாவின் புளிப்பில்லாத அப்பப்பண்டிகை ஆரம்பமாகும். ஏழுநாட்களுக்கு நீங்கள் புளிப்பில்லாமல் செய்யப்பட்ட அப்பங்களைச் சாப்பிடவேண்டும்.
در روز اول این عید برای عبادت جمع شوید و از همهٔ کارهای معمول خود دست بکشید. | 7 |
முதலாம் நாள் நீங்கள் பரிசுத்த சபையைக் கூட்டவேண்டும். அந்த நாளில் வழக்கமான வேலைகள் எதையும் செய்யவேண்டாம்.
هفت روز هدایای سوختنی به خداوند تقدیم نمایید و در روز هفتم نیز از کارهای معمول خود دست کشیده برای عبادت جمع شوید.» | 8 |
யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையை ஏழுநாட்களுக்குக் கொண்டுவர வேண்டும். ஏழாம்நாளில் பரிசுத்த சபையைக் கூட்டவேண்டும். அந்த நாளில் வழக்கமான வேலைகள் எதையும் செய்யக்கூடாது’” என்றார்.
«این دستورها را به بنیاسرائیل بده: وقتی به سرزمینی که من به شما میدهم داخل شدید و اولین محصول خود را درو کردید، بافهای از نوبر محصول خود را نزد کاهن بیاورید. | 10 |
“நீ இஸ்ரயேல் மக்களிடம் பேசி, அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘நான் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் நீங்கள் போய், அதன் விளைச்சலை அறுவடை செய்யும்போது, உங்கள் அறுவடையின் முதலாவது தானியக் கதிர்க்கட்டை ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும்.
فردای روز شبّات، کاهن بافه را در حضور خداوند تکان دهد تا خداوند شما را بپذیرد. | 11 |
அது உங்கள் சார்பாக ஏற்றுக்கொள்ளப்படும்படி ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டவேண்டும். ஓய்வுநாளுக்கு அடுத்தநாள் ஆசாரியன் அதை அசைவாட்டவேண்டும்.
همان روز یک برهٔ یک سالهٔ سالم و بیعیب به عنوان قربانی سوختنی به خداوند تقدیم کنید. | 12 |
அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் அந்நாளிலே ஒரு வயதுடைய குறைபாடற்ற செம்மறியாட்டுக் குட்டியை யெகோவாவுக்குத் தகன காணிக்கையாகப் பலியிடவேண்டும்.
برای هدیهٔ آردی آن، دو کیلو آرد مرغوب مخلوط با روغن زیتون آورده، بر آتش به خداوند تقدیم کنید. این هدیه، هدیهای مخصوص و خوشبو برای خداوند خواهد بود. یک لیتر شراب هم به عنوان هدیهٔ نوشیدنی تقدیم نمایید. | 13 |
அதனுடன் அதற்குரிய தானியக் காணிக்கையாக, ஒரு எப்பாவின் பத்தில் இரண்டு பங்கு அளவு எண்ணெய்விட்டுப் பிசைந்த சிறந்த மாவாக அதைச் செலுத்தவேண்டும். அது மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாகும். அத்துடன் நான்கில் ஒரு பங்கு ஹின் அளவான திராட்சை இரசத்தை, அதற்குரிய பானகாணிக்கையாகவும் செலுத்தவேண்டும்.
تا این هدایا را به خدایتان تقدیم نکردهاید، نباید نان یا حبوبات تازه یا برشته بخورید. این قانونی است همیشگی برای تمام نسلهای شما در هر جایی که زندگی کنید. | 14 |
நீங்கள் உங்கள் இறைவனுக்கு முதற்பலனில் இக்காணிக்கையைக் கொண்டுவரும் அந்த நாள்வரை, அதிலிருந்து எந்தவொரு அப்பத்தையோ, வறுத்த தானியத்தையோ, பச்சைத் தானியத்தையோ சாப்பிடக்கூடாது. நீங்கள் எங்கே வாழ்ந்தாலும், தலைமுறைதோறும் இது உங்களுக்கு நிரந்தர நியமமாய் இருக்கவேண்டும்.
«هفت هفته بعد از روزی که اولین بافهٔ خود را به من تقدیم کردید، | 15 |
“‘நீங்கள் அசைவாட்டும் காணிக்கையாகக் கதிர்க்கட்டைக் கொண்டுவந்த நாளான ஓய்வுநாளுக்கு அடுத்த நாளிலிருந்து, முழுமையாக ஏழு வாரங்களை எண்ணுங்கள்.
یعنی در روز پنجاهم که روز بعد از هفتمین شَبّات است هدیهٔ دیگری از محصول تازهٔ خود به حضور خداوند بیاورید. | 16 |
ஏழாவது ஓய்வுநாளுக்கு அடுத்தநாளான ஐம்பதாவது நாள்வரை எண்ணுங்கள். அதன்பின் யெகோவாவுக்குப் புதிய தானியக் காணிக்கையைக் கொண்டுவாருங்கள்.
هر خانوادهای دو قرص نان که از دو کیلو آرد مرغوب همراه با خمیرمایه پخته شده باشد، بیاورد تا در حضور خداوند تکان داده شود و به عنوان هدیهای از آخرین برداشت محصول به من تقدیم شود. | 17 |
நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் பத்தில் இரண்டு எப்பா அளவான சிறந்த மாவினால் புளிப்பூட்டப்பட்டுத் தயாரிக்கப்பட்ட இரண்டு அப்பங்களை, யெகோவாவுக்கான முதற்பலன்களின் அசைவாட்டும் காணிக்கையாகக் கொண்டுவாருங்கள்.
همراه با این نانها، هفت برهٔ یک سالهٔ بیعیب، یک گوساله و دو قوچ به عنوان قربانی سوختنی با هدایای آردی و نوشیدنی آنها به خداوند تقدیم کنید. این هدایا، هدایای مخصوص و خوشبو برای خداوند خواهند بود. | 18 |
இந்த அப்பத்துடன், ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளைக் கொண்டுவர வேண்டும். ஒவ்வொன்றும் ஒரு வயதுடையதும், குறைபாடற்றதுமாய் இருக்கவேண்டும். அவற்றுடன் ஒரு காளையையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் கொண்டுவாருங்கள். இவை அவர்களுடைய தானியக் காணிக்கைகளோடும், பானகாணிக்கைகளோடும் யெகோவாவுக்குரிய தகன காணிக்கையாக இருக்கும். இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் ஒரு நறுமணமாக நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாகும்.
همچنین یک بز نر به عنوان قربانی گناه و دو برهٔ نر یک ساله به عنوان قربانی سلامتی ذبح کنید. | 19 |
அதன்பின் பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும், சமாதான காணிக்கையாக, ஒவ்வொன்றும் ஒரு வயதுடையதாயிருக்கிற இரண்டு செம்மறியாட்டுக் குட்டிகளையும் பலியிடுங்கள்.
«کاهن، این دو برهٔ ذبح شده را با نانهای پخته شده از آخرین برداشت محصول شما به عنوان هدیهٔ مخصوص در حضور خداوند تکان دهد. این هدایا برای خداوند مقدّسند و باید برای خوراک به کاهنان داده شوند. | 20 |
ஆசாரியன் இந்த இரண்டு செம்மறியாட்டுக் குட்டிகளையும் முதற்பலன்களின் அப்பத்துடன் யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும். யெகோவாவுக்குப் பரிசுத்தமான இந்தக் காணிக்கை பொருட்கள் ஆசாரியனுக்குச் சொந்தமாகும்.
در آن روز اعلان شود که مردم از کارهای معمول خود دست کشیده، برای عبادت جمع شوند. این قانونی است همیشگی برای نسلهای شما در هر جا که باشید. | 21 |
அதே நாளில் பரிசுத்த சபைக்கூடுதலை நீங்கள் அறிவிக்கவேண்டும். அந்நாளில் வழக்கமாக நீங்கள் செய்யும் எந்த வேலையையும் செய்யவேண்டாம். நீங்கள் எங்கே வாழ்ந்தாலும் தலைமுறைதோறும் இது உங்களுக்கு நிரந்தர நியமமாயிருக்கவேண்டும்.
«وقتی که محصولات خود را درو میکنید، گوشههای مزرعهٔ خود را تماماً درو نکنید و خوشههای بر زمین افتاده را جمع نکنید. آنها را برای فقرا و غریبانی که در میان شما ساکنند، بگذارید. من یهوه، خدای شما هستم.» | 22 |
“‘நீங்கள் உங்கள் நிலத்தில் அறுவடை செய்யும்போது, வயலின் ஓரங்களில் உள்ளவைகளை அறுவடை செய்யாமலும், அறுவடையில் சிந்தியதைப் பொறுக்காமலும் விட்டுவிடுங்கள். இவைகளை ஏழைகளுக்கும், பிறநாட்டினருக்கும் விட்டுவிடுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா நானே’” என்றார்.
«این دستورها را به بنیاسرائیل بده: روز اول ماه هفتم هر سال، روز استراحت است و همهٔ قوم اسرائیل باید با شنیدن صدای شیپورها، برای عبادت جمع شوند. | 24 |
“நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஏழாம் மாதத்தின் முதலாம் நாள் உங்களுக்கு ஒரு ஓய்வுநாளாயிருக்க வேண்டும். அந்த நாள் எக்காளம் முழங்கி, நினைவு விழாவாகக் கொண்டாடப்படும் ஒரு பரிசுத்த சபைக்கூடுதலாக இருக்கவேண்டும்.
در آن روز هدیهای بر آتش به خداوند تقدیم کنید و هیچ کار دیگری انجام ندهید.» | 25 |
அந்த நாளில் வழக்கமாகச் செய்யும் வேலைகளைச் செய்யாமல் யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையை கொண்டுவர வேண்டும்’” என்றார்.
«روز دهم ماه هفتم هر سال، روز کفاره است. در آن روز تمام قوم باید برای عبادت جمع شوند و روزه بگیرند و هدیهای بر آتش به خداوند تقدیم کنند. | 27 |
“ஏழாம் மாதத்தின் பத்தாம்நாள் பாவநிவிர்த்தி செய்யும் நாளாகும். அந்த நாளில் பரிசுத்த சபையைக் கூட்டி உபவாசித்து, உங்களை ஒடுக்கி, யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையைக் கொண்டுவாருங்கள்.
در روز کفاره کار نکنید، زیرا روزی است که باید برای گناهان خود از یهوه خدایتان طلب آمرزش نمایید. | 28 |
அந்த நாளிலே எந்தவொரு வேலையையும் செய்யவேண்டாம். ஏனெனில், அதுவே உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவிர்த்தி நாள்.
هر شخصی که آن روز را در روزه به سر نبرد، از میان قوم خود منقطع خواهد شد. | 29 |
அந்த நாளில் உபவாசித்து தன்னை ஒடுக்காத எவனும் தன் மக்களில் இருந்து அகற்றப்படவேண்டும்.
من هر کسی را که در آن روز دست به هرگونه کاری بزند، از میان شما هلاک خواهم ساخت. | 30 |
அந்த நாளில் வேலைசெய்யும் எவனையும், அவனுடைய மக்கள் மத்தியிலிருந்து நான் அழித்துப்போடுவேன்.
நீங்கள் எந்தவொரு வேலையுமே செய்யக்கூடாது. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் தலைமுறைதோறும் இது உங்களுக்கு ஒரு நிரந்தர நியமமாய் இருக்கவேண்டும்.
از غروب روز نهم ماه هفتم تا غروب روز بعد، روز مخصوص کفاره است و باید در آن روز روزه بگیرید و استراحت کنید.» | 32 |
இந்நாள் உங்களுக்கான ஓய்வுநாள். அதில் உபவாசித்து உங்களையே நீங்கள் ஒடுக்கவேண்டும். மாதத்தின் ஒன்பதாம்நாள் மாலையிலிருந்து மறுநாள் மாலைவரை நீங்கள் உங்கள் ஓய்வுநாளை அனுசரிக்கவேண்டும்” என்றார்.
«این دستورها را به بنیاسرائیل بده. روز پانزدهم ماه هفتم، عید سایبانها آغاز میشود و باید تا مدت هفت روز در حضور خداوند جشن گرفته شود. | 34 |
“நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியதாவது, ‘ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளிலே யெகோவாவின் கூடாரப்பண்டிகை ஆரம்பமாகி, தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும்.
در روز اول تمامی قوم اسرائیل را برای عبادت جمع کنید و از کارهای معمول خود دست بکشید. | 35 |
முதலாம் நாள் பரிசுத்த சபைக்கூடும் நாள். அந்நாளில் வழக்கமான வேலையொன்றையும் செய்யவேண்டாம்.
در هر هفت روز عید، هدیهای بر آتش به خداوند تقدیم نمایید. در روز هشتم دوباره تمامی قوم را برای عبادت جمع کنید و هدیهای بر آتش به خداوند تقدیم نمایید. این روز، آخرین روز عید است و نباید هیچ کاری انجام دهید. | 36 |
யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையை ஏழுநாட்களுக்குக் கொண்டுவாருங்கள். எட்டாவது நாள் பரிசுத்த சபையைக் கூட்டி நெருப்பினால் யெகோவாவுக்குக் காணிக்கையைச் செலுத்துங்கள். அதுவே சபைக்கூடுதல் முடிவடையும் நாள். அந்நாளில் வழக்கமாகச் செய்யும் வேலையொன்றையும் செய்யக்கூடாது.
«(این است اعیاد مقدّسی که در آنها باید تمامی قوم برای عبادت جمع شده، قربانیهای سوختنی، هدایای آردی، هدایای نوشیدنی و سایر قربانیها را بر آتش به خداوند تقدیم کنند. | 37 |
“‘யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கைகளைக் கொண்டுவருவதற்காக, பரிசுத்த சபைக்கூடுதல்களாக நீங்கள் பிரசித்தப்படுத்தும்படி யெகோவாவினால் நியமிக்கப்பட்ட பண்டிகைகள் இவையே. இப்பண்டிகைகளில் ஒவ்வொரு நாளுக்கும் தேவையான தகன காணிக்கைகளும், தானியக் காணிக்கைகளும், பலிகளும், பான காணிக்கைகளும் கொண்டுவரப்பட வேண்டும்.
این اعیاد مقدّس غیر از روزهای مخصوص شَبّات است. هدایایی که در این اعیاد تقدیم میکنید غیر از هدایای روزانه، نذری و داوطلبانهای است که به خداوند تقدیم میکنید.) | 38 |
இக்காணிக்கைகள் யாவும், யெகோவாவின் ஓய்வுநாள் காணிக்கைகளோடு கூடுதலாகக் கொடுக்க வேண்டியவையாகும். இவை உங்கள் கொடைகளோடும். நீங்கள் நேர்ந்துகொண்ட எதனோடும், நீங்கள் யெகோவாவுக்குக் கொடுக்கும் உங்கள் சுயவிருப்பக் காணிக்கைகள் அனைத்தோடும் கூடுதலாகக் கொடுக்கப்பட வேண்டியவைகளாகும்.
«از روز پانزدهم ماه هفتم که پایان برداشت محصول است، این عید هفت روزه را در حضور خداوند جشن بگیرید. به یاد داشته باشید که روزهای اول و آخر این عید، روزهای استراحت میباشند. | 39 |
“‘ஆகவே நீங்கள் நாட்டின் விளைச்சலைத் சேர்த்தபின், ஏழாம் மாதம் பதினைந்தாம்நாள் தொடங்கி, ஏழுநாட்களுக்கு யெகோவாவுக்கான இப்பண்டிகையைக் கொண்டாடுங்கள். முதலாம் நாள் ஓய்வுநாளாகும். எட்டாம் நாளும் ஓய்வுநாளாகும்.
در روز اول، از درختان خود میوههای خوب بچینید و شاخههای نخل و شاخههای درختان پربرگ و شاخههای بید را گرفته با آنها سایبان درست کنید و هفت روز در حضور یهوه خدایتان شادی کنید. | 40 |
முதலாம் நாளிலே உங்கள் மரங்களிலிருந்து சிறந்த பழங்களையும், ஓலைகளையும், இலைகளுள்ள கொப்புகளையும், ஆற்றலறியையும் எடுத்துக்கொண்டு, ஏழு நாட்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா முன்னிலையில் களிகூருங்கள்.
برگزاری این عید هفت روزه در ماه هفتم برای خداوند، فریضهای ابدی است که باید نسل اندر نسل انجام گیرد. | 41 |
ஒவ்வொரு வருடமும் ஏழுநாட்களுக்கு யெகோவாவுக்குரிய பண்டிகையாக இதைக் கொண்டாடுங்கள். இது தலைமுறைதோறும் நிரந்தர நியமமாக இருக்கும். ஏழாம் மாதத்தில் இதைக் கொண்டாடுங்கள்.
در طول آن هفت روز همهٔ شما اسرائیلیها باید در سایبانها به سر برید. | 42 |
நீங்கள் ஏழுநாட்களுக்குக் கூடாரங்களில் வசியுங்கள். ஊரில் பிறந்த இஸ்ரயேலர் யாவரும் கூடாரங்களில் வசிக்கவேண்டும்.
هدف از این عید آن است که نسلهای شما بدانند هنگامی که من بنیاسرائیل را از مصر بیرون آوردم، آنها را در زیر سایبانها سکونت دادم. من خداوند، خدای شما هستم.» | 43 |
இவ்விதமாய் நான் இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தபோது, அவர்களைக் கூடாரங்களில் வசிக்கச்செய்தேன் என்று உங்கள் சந்ததிகள் அறிந்துகொள்வார்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா நானே’” என்றார்.
بدین ترتیب موسی قوانین اعیاد خداوند را به اطلاع قوم اسرائیل رسانید. | 44 |
இவ்வாறு மோசே, யெகோவாவினால் நியமிக்கப்பட்ட பண்டிகைகளை இஸ்ரயேலருக்கு அறிவித்தான்.