< لاویان 1 >
و خداوند موسی را خواند، و او را از خیمه اجتماع خطاب کرده، گفت: | ۱ 1 |
௧யெகோவா ஆசரிப்புக்கூடாரத்திலிருந்து மோசேயை அழைத்து அவனை நோக்கி:
«بنیاسرائیل را خطاب کرده، به ایشان بگو: هرگاه کسی از شماقربانی نزد خداوند بگذراند، پس قربانی خود را ازبهایم یعنی از گاو یا از گوسفند بگذرانید. | ۲ 2 |
௨“நீ இஸ்ரவேல் மக்களிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் யெகோவாவுக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து பலிசெலுத்தவேண்டும்.
اگرقربانی او قربانی سوختنی از گاو باشد، آن را نربی عیب بگذارند، و آن را نزد در خیمه اجتماع بیاورد تا به حضور خداوند مقبول شود. | ۳ 3 |
௩அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; யெகோவாவுடைய சந்நிதியில், தான் அங்கீகரிக்கப்படுவதற்கு, அவன் அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் கொண்டுவந்து,
و دست خود را بر سر قربانی سوختنی بگذارد، و برایش مقبول خواهد شد تا بجهت او کفاره کند. | ۴ 4 |
௪தன் பாவநிவிர்த்திக்கென்று அது அங்கீகரிக்கப்படுவதற்கு தன் கையை அதின் தலையின்மேல் வைத்து,
پس گاو را به حضور خداوند ذبح نماید، و پسران هارون کهنه خون را نزدیک بیاورند، و خون را براطراف مذبح که نزد در خیمه اجتماع است بپاشند. | ۵ 5 |
௫யெகோவாவுடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
و پوست قربانی سوختنی را بکند و آن را قطعه قطعه کند. | ۶ 6 |
௬பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகனபலியைத் தோலுரித்து, அதைத் துண்டுதுண்டாக வெட்டவேண்டும்.
و پسران هارون کاهن آتش برمذبح بگذارند، و هیزم بر آتش بچینند. | ۷ 7 |
௭அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின்மேல் நெருப்பை மூட்டி, நெருப்பின்மேல் கட்டைகளை அடுக்கி,
و پسران هارون کهنه قطعهها و سر و پیه را بر هیزمی که برآتش روی مذبح است بچینند. | ۸ 8 |
௮அவனுடைய மகன்களாகிய ஆசாரியர்கள், துண்டுகளையும், தலையையும், கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைப்பார்களாக.
و احشایش وپاچه هایش را به آب بشویند، و کاهن همه را برمذبح بسوزاند، برای قربانی سوختنی و هدیه آتشین و عطر خوشبو بجهت خداوند. | ۹ 9 |
௯அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாக எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.
و اگرقربانی او از گله باشد خواه از گوسفند خواه از بزبجهت قربانی سوختنی، آن را نر بیعیب بگذراند. | ۱۰ 10 |
௧0“அவன் செலுத்துவது செம்மறியாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது வெள்ளாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், பழுதற்ற ஒரு கடாவைக் கொண்டுவந்து,
و آن را به طرف شمالی مذبح به حضور خداوند ذبح نماید، و پسران هارون کهنه خونش را به اطراف مذبح بپاشند. | ۱۱ 11 |
௧௧யெகோவாவுடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடக்குப் பகுதியில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
و آن را باسرش و پیهاش قطعه قطعه کند، و کاهن آنها را برهیزمی که بر آتش روی مذبح است بچیند. | ۱۲ 12 |
௧௨பின்பு அவன் அதைத் துண்டுகளாக வெட்டி, அதின் தலையையும் கொழுப்பையும் அதனுடன் வைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைப்பானாக.
واحشایش و پاچه هایش را به آب بشوید، و کاهن همه را نزدیک بیاورد و بر مذبح بسوزاند، که آن قربانی سوختنی و هدیه آتشین و عطر خوشبوبجهت خداوند است. | ۱۳ 13 |
௧௩குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.
«و اگر قربانی او بجهت خداوند قربانی سوختنی از مرغان باشد، پس قربانی خود را ازفاختهها یا از جوجه های کبوتر بگذراند. | ۱۴ 14 |
௧௪“அவன் யெகோவாவுக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்து செலுத்தக்கடவன்.
وکاهن آن را نزد مذبح بیاورد و سرش را بپیچد و برمذبح بسوزاند، و خونش را بر پهلوی مذبح افشرده شود. | ۱۵ 15 |
௧௫அதை ஆசாரியன் பலிபீடத்தின் அருகில் கொண்டுவந்து, அதின் தலையைக் கிள்ளி, பலிபீடத்தில் எரித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் அருகில் சிந்தவிட்டு,
و چینه دانش را با فضلات آن بیرون کرده، آن را بر جانب شرقی مذبح در جای خاکستر بیندازد. | ۱۶ 16 |
௧௬அதின் இரைப்பையையும் அதின் உள்ளவைகளையும் எடுத்து, அதைப் பலிபீடத்தின் அருகில் கிழக்குப் பகுதியில் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு,
و آن را از میان بالهایش چاک کند و از هم جدا نکند، و کاهن آن را بر مذبح برهیزمی که بر آتش است بسوزاند، که آن قربانی سوختنی و هدیه آتشین و عطر خوشبو بجهت خداوند است. | ۱۷ 17 |
௧௭பின்பு அதின் இறக்கைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் எரிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.