< پیدایش 45 >

معرفی می‌کند و یوسف پیش جمعی که به حضورش ایستاده بودند، نتوانست خودداری کند، پس ندا کرد که «همه را از نزد من بیرون کنید!» و کسی نزد او نماند، وقتی که یوسف خویشتن را به برادران خود شناسانید. ۱ 1
அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லா வேலைக்காரர்களுக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கமுடியாமல்: அனைவரையும் என்னைவிட்டு வெளியே போகச்செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தும்போது, ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை.
و به آوازبلند گریست، و مصریان و اهل خانه فرعون شنیدند. ۲ 2
அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர்கள் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள்.
و یوسف، برادران خود را گفت: «من یوسف هستم! آیا پدرم هنوز زنده است؟» وبرادرانش جواب وی را نتوانستند داد، زیرا که به حضور وی مضطرب شدند. ۳ 3
யோசேப்பு தன் சகோதரர்களைப்பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடு இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர்கள் அவனுக்கு முன்பாகக் கலக்கமடைந்திருந்ததினாலே, அவனுக்கு பதில் சொல்லமுடியாமல் இருந்தார்கள்.
و یوسف به برادران خود گفت: «نزدیک من بیایید.» پس نزدیک آمدند، و گفت: «منم یوسف، برادر شما، که به مصر فروختید! ۴ 4
அப்பொழுது யோசேப்பு தன் சகோதரர்களை நோக்கி: என்னருகில் வாருங்கள் என்றான். அவர்கள் அருகில்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்திற்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்.
و حال رنجیده مشوید، و متغیر نگردید که مرا بدینجا فروختید، زیرا خدا مرا پیش روی شما فرستاد تا (نفوس را)زنده نگاه دارد. ۵ 5
என்னை இந்த இடத்திற்கு வருவதற்காக விற்றுப்போட்டதினால், நீங்கள் வருத்தப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; உயிர்களைப் பாதுகாக்க தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.
زیرا حال دو سال شده است که قحط در زمین هست، و پنج سال دیگر نیز نه شیارخواهد بود نه درو. ۶ 6
தேசத்தில் இப்பொழுது இரண்டு வருடங்களாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருடங்கள் விதைப்பும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும்.
و خدا مرا پیش روی شما فرستاد تا برای شما بقیتی در زمین نگاه دارد، وشما را به نجاتی عظیم احیا کند. ۷ 7
பூமியிலே உங்கள் வம்சம் அழியாமலிருக்க உங்களை ஆதரிப்பதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடு காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.
و الان شما مرااینجا نفرستادید، بلکه خدا، و او مرا پدر بر فرعون و آقا بر تمامی اهل خانه او و حاکم بر همه زمین مصر ساخت. ۸ 8
ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இந்த இடத்திற்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவருடைய குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், முழு எகிப்துதேசத்திற்கும் அதிபதியாகவும் வைத்தார்.
بشتابید و نزد پدرم رفته، بدوگویید: پسر تو، یوسف چنین می‌گوید: که خدا مراحاکم تمامی مصر ساخته است، نزد من بیا وتاخیر منما. ۹ 9
நீங்கள் சீக்கிரமாக என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்துதேசம் முழுவதிற்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம்.
و در زمین جوشن ساکن شو، تانزدیک من باشی، تو و پسرانت و پسران پسرانت، و گله ات و رمه ات با هر‌چه داری. ۱۰ 10
௧0நீரும், உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற எல்லாவற்றோடும் கோசேன் நாட்டில் குடியிருந்து என் அருகில் இருக்கலாம்.
تا تو را درآنجا بپرورانم، زیرا که پنج سال قحط باقی است، مبادا تو و اهل خانه ات و متعلقانت بینوا گردید. ۱۱ 11
௧௧உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற எல்லாவற்றிற்கும் வறுமை வராதபடி, அங்கே உம்மைப் பராமரிப்பேன்; இன்னும் ஐந்து வருடங்கள் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய மகனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள்.
و اینک چشمان شما و چشمان برادرم بنیامین، می‌بیند، زبان من است که با شما سخن می‌گوید. ۱۲ 12
௧௨இதோ, உங்களோடு பேசுகிற வாய் என் வாய்தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே.
پس پدر مرا از همه حشمت من در مصر و ازآنچه دیده‌اید، خبر دهید، و تعجیل نموده، پدرمرا بدینجا آورید.» ۱۳ 13
௧௩எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற அனைத்து மகிமையையும், நீங்கள் கண்ட எல்லாவற்றையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாக இந்த இடத்திற்கு வரும்படிச் செய்யுங்கள் என்று சொல்லி;
پس به گردن برادر خود، بنیامین، آویخته، بگریست و بنیامین بر گردن وی گریست. ۱۴ 14
௧௪தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும் அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்.
وهمه برادران خود را بوسیده، برایشان بگریست، وبعد از آن، برادرانش با وی گفتگو کردند. ۱۵ 15
௧௫பின்பு தன் சகோதரர்கள் அனைவரையும் முத்தம்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவனுடைய சகோதரர்கள் அவனோடு உரையாடினார்கள்.
و این خبر را در خانه فرعون شنیدند، و گفتند برادران یوسف آمده‌اند، و بنظر فرعون و بنظر بندگانش خوش آمد. ۱۶ 16
௧௬யோசேப்பின் சகோதரர்கள் வந்தார்கள் என்ற செய்தி பார்வோன் அரண்மனையில் பரவியபோது, பார்வோனும் அவனுடைய ஊழியக்காரரும் சந்தோஷம் அடைந்தார்கள்.
و فرعون به یوسف گفت: «برادران خود را بگو: چنین بکنید: چهارپایان خود را بارکنید، و روانه شده، به زمین کنعان بروید. ۱۷ 17
௧௭பார்வோன் யோசேப்பை நோக்கி: நீ உன் சகோதரர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் கழுதைகளின்மேல் பாரமேற்றிக்கொண்டு புறப்பட்டு, கானான்தேசத்திற்குப் போய்,
و پدرو اهل خانه های خود را برداشته، نزد من آیید، ونیکوتر زمین مصر را به شما می‌دهم تا از فربهی زمین بخورید. ۱۸ 18
௧௮உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்துதேசத்தின் நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள்.
و تو مامور هستی این را بکنید: ارابه‌ها از زمین مصر برای اطفال و زنان خود بگیرید، و پدر خود برداشته، بیایید. ۱۹ 19
௧௯நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காகவும் உங்கள் மனைவிகளுக்காகவும் வண்டிகளை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுபோய், அவர்களையும் உங்கள் தகப்பனுடனே ஏற்றிக்கொண்டு வாருங்கள்.
و چشمان شما در‌پی اسباب خود نباشد، زیرا که نیکویی تمامی زمین مصر از آن شماست.» ۲۰ 20
௨0உங்கள் வீட்டு உபயோகப்பொருட்களைக் குறித்துக் கவலைப்படவேண்டாம்; எகிப்துதேசமெங்குமுள்ள நன்மை உங்களுடையதாயிருக்கும் என்று சொல்லச் சொல்லி, உனக்கு நான் கொடுத்த கட்டளையின்படியே செய் என்றான்.
پس بنی‌اسرائیل چنان کردند، و یوسف به حسب فرمایش فرعون، ارابه‌ها بدیشان داد، و زاد سفربدیشان عطا فرمود. ۲۱ 21
௨௧இஸ்ரவேலின் மகன்கள் அப்படியே செய்தார்கள், யோசேப்பு பார்வோனுடைய கட்டளையின்படியே அவர்களுக்கு வண்டிகளைக் கொடுத்ததுமன்றி, பயணத்திற்கு ஆகாரத்தையும்,
و بهر هر یک از ایشان، یک دست رخت بخشید، اما به بنیامین سیصد مثقال نقره، و پنج دست جامه داد. ۲۲ 22
௨௨அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று உடைகளையும் கொடுத்தான்; பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும் ஐந்து மாற்று உடைகளையும் கொடுத்தான்.
و برای پدر خودبدین تفصیل فرستاد: ده الاغ بار شده به نفایس مصر، و ده ماده الاغ بار شده به غله و نان و خورش برای سفر پدر خود. ۲۳ 23
௨௩அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் சிறப்பான பதார்த்தங்களும், பத்து கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காக பயணத்திற்குத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான்.
پس برادران خود رامرخص فرموده، روانه شدند و بدیشان گفت: «زنهار در راه منازعه مکنید!» ۲۴ 24
௨௪மேலும், நீங்கள் போகும் வழியிலே சண்டையிட்டுக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரர்களுக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப்போனார்கள்.
و از مصر برآمده، نزد پدر خود، یعقوب، به زمین کنعان آمدند. ۲۵ 25
௨௫அவர்கள் எகிப்திலிருந்து போய், கானான்தேசத்திலே தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்திற்கு வந்து:
و او را خبر داده، گفتند: «یوسف الان زنده است، و او حاکم تمامی زمین مصر است.» آنگاه دل وی ضعف کرد، زیرا که ایشان را باور نکرد. ۲۶ 26
௨௬யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்திற்கெல்லாம் அதிபதியாக இருக்கிறான் என்று அவனுக்குத் தெரிவித்தார்கள். அவனுடைய இருதயம் அதிர்ச்சி அடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை.
و همه سخنانی که یوسف بدیشان گفته بود، به وی گفتند، و چون ارابه هایی را که یوسف برای آوردن او فرستاده بود، دید، روح پدر ایشان، یعقوب، زنده گردید. ۲۷ 27
௨௭அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் எல்லாவற்றையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது.
واسرائیل گفت: «کافی است! پسر من، یوسف، هنوز زنده است؛ می‌روم و قبل از مردنم او راخواهم دید.» ۲۸ 28
௨௮அப்பொழுது இஸ்ரவேல்: என் மகனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்.

< پیدایش 45 >