< پیدایش 45 >
معرفی میکند و یوسف پیش جمعی که به حضورش ایستاده بودند، نتوانست خودداری کند، پس ندا کرد که «همه را از نزد من بیرون کنید!» و کسی نزد او نماند، وقتی که یوسف خویشتن را به برادران خود شناسانید. | ۱ 1 |
௧அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லா வேலைக்காரர்களுக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கமுடியாமல்: அனைவரையும் என்னைவிட்டு வெளியே போகச்செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தும்போது, ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை.
و به آوازبلند گریست، و مصریان و اهل خانه فرعون شنیدند. | ۲ 2 |
௨அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர்கள் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள்.
و یوسف، برادران خود را گفت: «من یوسف هستم! آیا پدرم هنوز زنده است؟» وبرادرانش جواب وی را نتوانستند داد، زیرا که به حضور وی مضطرب شدند. | ۳ 3 |
௩யோசேப்பு தன் சகோதரர்களைப்பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடு இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர்கள் அவனுக்கு முன்பாகக் கலக்கமடைந்திருந்ததினாலே, அவனுக்கு பதில் சொல்லமுடியாமல் இருந்தார்கள்.
و یوسف به برادران خود گفت: «نزدیک من بیایید.» پس نزدیک آمدند، و گفت: «منم یوسف، برادر شما، که به مصر فروختید! | ۴ 4 |
௪அப்பொழுது யோசேப்பு தன் சகோதரர்களை நோக்கி: என்னருகில் வாருங்கள் என்றான். அவர்கள் அருகில்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்திற்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்.
و حال رنجیده مشوید، و متغیر نگردید که مرا بدینجا فروختید، زیرا خدا مرا پیش روی شما فرستاد تا (نفوس را)زنده نگاه دارد. | ۵ 5 |
௫என்னை இந்த இடத்திற்கு வருவதற்காக விற்றுப்போட்டதினால், நீங்கள் வருத்தப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; உயிர்களைப் பாதுகாக்க தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.
زیرا حال دو سال شده است که قحط در زمین هست، و پنج سال دیگر نیز نه شیارخواهد بود نه درو. | ۶ 6 |
௬தேசத்தில் இப்பொழுது இரண்டு வருடங்களாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருடங்கள் விதைப்பும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும்.
و خدا مرا پیش روی شما فرستاد تا برای شما بقیتی در زمین نگاه دارد، وشما را به نجاتی عظیم احیا کند. | ۷ 7 |
௭பூமியிலே உங்கள் வம்சம் அழியாமலிருக்க உங்களை ஆதரிப்பதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடு காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.
و الان شما مرااینجا نفرستادید، بلکه خدا، و او مرا پدر بر فرعون و آقا بر تمامی اهل خانه او و حاکم بر همه زمین مصر ساخت. | ۸ 8 |
௮ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இந்த இடத்திற்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவருடைய குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், முழு எகிப்துதேசத்திற்கும் அதிபதியாகவும் வைத்தார்.
بشتابید و نزد پدرم رفته، بدوگویید: پسر تو، یوسف چنین میگوید: که خدا مراحاکم تمامی مصر ساخته است، نزد من بیا وتاخیر منما. | ۹ 9 |
௯நீங்கள் சீக்கிரமாக என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்துதேசம் முழுவதிற்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம்.
و در زمین جوشن ساکن شو، تانزدیک من باشی، تو و پسرانت و پسران پسرانت، و گله ات و رمه ات با هرچه داری. | ۱۰ 10 |
௧0நீரும், உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற எல்லாவற்றோடும் கோசேன் நாட்டில் குடியிருந்து என் அருகில் இருக்கலாம்.
تا تو را درآنجا بپرورانم، زیرا که پنج سال قحط باقی است، مبادا تو و اهل خانه ات و متعلقانت بینوا گردید. | ۱۱ 11 |
௧௧உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற எல்லாவற்றிற்கும் வறுமை வராதபடி, அங்கே உம்மைப் பராமரிப்பேன்; இன்னும் ஐந்து வருடங்கள் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய மகனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள்.
و اینک چشمان شما و چشمان برادرم بنیامین، میبیند، زبان من است که با شما سخن میگوید. | ۱۲ 12 |
௧௨இதோ, உங்களோடு பேசுகிற வாய் என் வாய்தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே.
پس پدر مرا از همه حشمت من در مصر و ازآنچه دیدهاید، خبر دهید، و تعجیل نموده، پدرمرا بدینجا آورید.» | ۱۳ 13 |
௧௩எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற அனைத்து மகிமையையும், நீங்கள் கண்ட எல்லாவற்றையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாக இந்த இடத்திற்கு வரும்படிச் செய்யுங்கள் என்று சொல்லி;
پس به گردن برادر خود، بنیامین، آویخته، بگریست و بنیامین بر گردن وی گریست. | ۱۴ 14 |
௧௪தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும் அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்.
وهمه برادران خود را بوسیده، برایشان بگریست، وبعد از آن، برادرانش با وی گفتگو کردند. | ۱۵ 15 |
௧௫பின்பு தன் சகோதரர்கள் அனைவரையும் முத்தம்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவனுடைய சகோதரர்கள் அவனோடு உரையாடினார்கள்.
و این خبر را در خانه فرعون شنیدند، و گفتند برادران یوسف آمدهاند، و بنظر فرعون و بنظر بندگانش خوش آمد. | ۱۶ 16 |
௧௬யோசேப்பின் சகோதரர்கள் வந்தார்கள் என்ற செய்தி பார்வோன் அரண்மனையில் பரவியபோது, பார்வோனும் அவனுடைய ஊழியக்காரரும் சந்தோஷம் அடைந்தார்கள்.
و فرعون به یوسف گفت: «برادران خود را بگو: چنین بکنید: چهارپایان خود را بارکنید، و روانه شده، به زمین کنعان بروید. | ۱۷ 17 |
௧௭பார்வோன் யோசேப்பை நோக்கி: நீ உன் சகோதரர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் கழுதைகளின்மேல் பாரமேற்றிக்கொண்டு புறப்பட்டு, கானான்தேசத்திற்குப் போய்,
و پدرو اهل خانه های خود را برداشته، نزد من آیید، ونیکوتر زمین مصر را به شما میدهم تا از فربهی زمین بخورید. | ۱۸ 18 |
௧௮உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்துதேசத்தின் நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள்.
و تو مامور هستی این را بکنید: ارابهها از زمین مصر برای اطفال و زنان خود بگیرید، و پدر خود برداشته، بیایید. | ۱۹ 19 |
௧௯நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காகவும் உங்கள் மனைவிகளுக்காகவும் வண்டிகளை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுபோய், அவர்களையும் உங்கள் தகப்பனுடனே ஏற்றிக்கொண்டு வாருங்கள்.
و چشمان شما درپی اسباب خود نباشد، زیرا که نیکویی تمامی زمین مصر از آن شماست.» | ۲۰ 20 |
௨0உங்கள் வீட்டு உபயோகப்பொருட்களைக் குறித்துக் கவலைப்படவேண்டாம்; எகிப்துதேசமெங்குமுள்ள நன்மை உங்களுடையதாயிருக்கும் என்று சொல்லச் சொல்லி, உனக்கு நான் கொடுத்த கட்டளையின்படியே செய் என்றான்.
پس بنیاسرائیل چنان کردند، و یوسف به حسب فرمایش فرعون، ارابهها بدیشان داد، و زاد سفربدیشان عطا فرمود. | ۲۱ 21 |
௨௧இஸ்ரவேலின் மகன்கள் அப்படியே செய்தார்கள், யோசேப்பு பார்வோனுடைய கட்டளையின்படியே அவர்களுக்கு வண்டிகளைக் கொடுத்ததுமன்றி, பயணத்திற்கு ஆகாரத்தையும்,
و بهر هر یک از ایشان، یک دست رخت بخشید، اما به بنیامین سیصد مثقال نقره، و پنج دست جامه داد. | ۲۲ 22 |
௨௨அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று உடைகளையும் கொடுத்தான்; பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும் ஐந்து மாற்று உடைகளையும் கொடுத்தான்.
و برای پدر خودبدین تفصیل فرستاد: ده الاغ بار شده به نفایس مصر، و ده ماده الاغ بار شده به غله و نان و خورش برای سفر پدر خود. | ۲۳ 23 |
௨௩அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் சிறப்பான பதார்த்தங்களும், பத்து கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காக பயணத்திற்குத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான்.
پس برادران خود رامرخص فرموده، روانه شدند و بدیشان گفت: «زنهار در راه منازعه مکنید!» | ۲۴ 24 |
௨௪மேலும், நீங்கள் போகும் வழியிலே சண்டையிட்டுக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரர்களுக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப்போனார்கள்.
و از مصر برآمده، نزد پدر خود، یعقوب، به زمین کنعان آمدند. | ۲۵ 25 |
௨௫அவர்கள் எகிப்திலிருந்து போய், கானான்தேசத்திலே தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்திற்கு வந்து:
و او را خبر داده، گفتند: «یوسف الان زنده است، و او حاکم تمامی زمین مصر است.» آنگاه دل وی ضعف کرد، زیرا که ایشان را باور نکرد. | ۲۶ 26 |
௨௬யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்திற்கெல்லாம் அதிபதியாக இருக்கிறான் என்று அவனுக்குத் தெரிவித்தார்கள். அவனுடைய இருதயம் அதிர்ச்சி அடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை.
و همه سخنانی که یوسف بدیشان گفته بود، به وی گفتند، و چون ارابه هایی را که یوسف برای آوردن او فرستاده بود، دید، روح پدر ایشان، یعقوب، زنده گردید. | ۲۷ 27 |
௨௭அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் எல்லாவற்றையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது.
واسرائیل گفت: «کافی است! پسر من، یوسف، هنوز زنده است؛ میروم و قبل از مردنم او راخواهم دید.» | ۲۸ 28 |
௨௮அப்பொழுது இஸ்ரவேல்: என் மகனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்.