< حزقیال 27 >
و کلام خداوند بر من نازل شده، گفت: | ۱ 1 |
௧யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:
«اما توای پسر انسان برای صور مرثیه بخوان! | ۲ 2 |
௨மனுபுத்திரனாகிய நீ இப்போது தீருவின் பெயரிலே புலம்பி,
و به صور بگو: ای که نزد مدخل دریاساکنی و برای جزیره های بسیار تاجر طوایف میباشی! خداوند یهوه چنین میگوید: ای صورتو گفتهای که من کمال زیبایی هستم. | ۳ 3 |
௩கடற்கரை ஓரத்திலே குடியிருந்து, அநேகம் தீவுகளின் மக்களுடன் வியாபாரம்செய்கிற தீருவை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், தீருவே, நீ உன்னைப் பூரண அழகுள்ளவள் என்கிறாய்.
حدود تودر وسط دریا است و بنایانت زیبایی تو را کامل ساختهاند. | ۴ 4 |
௪கடல்களின் மையத்திலே உன்னுடைய எல்லைகள் இருக்கிறது; உன்னைக் கட்டினவர்கள் உன்னைப் பூரணவடிவாகக் கட்டினார்கள்.
همه تخته هایت را از صنوبر سنیرساختند و سرو آزاد لبنان را گرفتند تا دکلها برای تو بسازند. | ۵ 5 |
௫சேனீரிலிருந்து வந்த தேவதாருமரத்தால் உன்னுடைய கப்பற் பலகைகளைச் செய்தார்கள்; பாய்மரங்களைச் செய்யும்படி லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.
پاروهایت را از بلوطهای باشان ساختند و نشیمنهایت را از شمشاد جزایر کتیم که به عاج منبط شده بود ترتیب دادند. | ۶ 6 |
௬பாசானின் கர்வாலிமரங்களினாலே உன்னுடைய துடுப்புகளைச் செய்தார்கள்; கித்தீம் தீவுகளிலிருந்து வந்த ஆஷூர் மரத்தால் உன்னுடைய தளங்களை செய்து, அதிலே யானைத்தந்தம் பதித்திருந்தார்கள்.
کتان مطرز مصری بادبان تو بود تا برای تو علمی بشود. و شراع تو از آسمانجونی و ارغوان از جزایرالیشه بود. | ۷ 7 |
௭எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையலுள்ள சணல்நூல் புடவை நீ விரித்த பாயாக இருந்தது; எலீசா தீவுகளின் இளநீலமும் இளஞ்சிவப்பு உன்னுடைய திரைச்சீலையாக இருந்தது.
اهل سیدون و ارواد پاروزن تو بودندو حکمای توای صور که در تو بودند ناخدایان توبودند. | ۸ 8 |
௮சீதோன் அர்வாத் என்னும் பட்டணங்களின் குடிகள் உனக்குத் துடுப்பு போடுகிறவர்களாக இருந்தார்கள். தீருவே, உன்னிடத்திலிருந்த உன்னுடைய அறிஞர்கள் உன்னுடைய மாலுமிகளாக இருந்தார்கள்.
مشایخ جبیل و حکمایش در تو بوده، قلافان تو بودند. تمامی کشتیهای دریا و ملاحان آنها در تو بودند تا برای تو تجارت نمایند. | ۹ 9 |
௯கேபாரின் முதியோரும் அதனுடைய அறிஞர்களும் உன்னில் பழுதுபார்க்கும் வேலை செய்கிறவர்களாக இருந்தார்கள்; கடலின் எல்லா கப்பல்களும் அவைகளிலுள்ள கப்பற்காரர்களும் உன்னுடன் தொழில்துறை வியாபாரம் செய்கிறதற்காக உன்னிடத்தில் இருந்தார்கள்.
فارس و لود و فوط در افواجت مردان جنگی تو بودند. سپرها و خودها بر تو آویزان کرده، ایشان تو را زینت دادند. | ۱۰ 10 |
௧0பெர்சியர்களும், லூதியர்களும், பூத்தியர்களும் உன்னுடைய படையில் போர்வீரர்களாக இருந்து உனக்குள் கேடகமும் தலைகவசமும் தூக்கிவைத்து, உன்னை அலங்கரித்தார்கள்.
بنی ارواد با سپاهیانت بر حصارهایت از هر طرف و جمادیان بربرجهایت بودند. و سپرهای خود را برحصارهایت از هر طرف آویزان کرده، ایشان زیبایی تو را کامل ساختند. | ۱۱ 11 |
௧௧அர்வாத்திரர்கள் உன்னுடைய படைவீரர்களும் உன்னுடைய மதில்கள்மேல் சுற்றிலும், கம்மாத்தியர்கள் உன்னுடைய மதில்களிலும் இருந்தார்கள்; இவர்கள் உன்னுடைய மதில்கள்மேல் சுற்றிலும் தங்களுடைய கேடயங்களைத் தூக்கிவைத்து, உன்னுடைய வடிவத்தைப் பூரணப்படுத்தினார்கள்.
ترشیش به فراوانی هر قسم اموال سوداگران تو بودند. نقره و آهن وروی و سرب به عوض بضاعت تو میدادند. | ۱۲ 12 |
௧௨எல்லாவித அதிகமான பொருள்களினாலும் தர்ஷீஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்; வெள்ளியையும் இரும்பையும் தகரத்தையும் ஈயத்தையும் உன்னுடைய சந்தைகளில் விற்க வந்தார்கள்.
یاوان و توبال و ماشک سوداگران تو بودند. | ۱۳ 13 |
௧௩யாவான், தூபால், மேசேக் என்னும் இனத்தார்கள் உன்னுடைய வியாபாரிகளாக இருந்து, மனிதர்களையும் வெண்கலப் பாத்திரங்களையும் உன்னுடைய தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள்.
اهل خاندان توجرمه اسبان و سواران و قاطران به عوض بضاعت تو میدادند. | ۱۴ 14 |
௧௪தொகர்மா நகரத்தார்கள் குதிரைகளையும் குதிரைவீரர்களையும் கோவேறுகழுதைகளையும் உன்னுடைய சந்தைகளுக்குக் கொண்டுவந்தார்கள்.
بنی ددان سوداگران تو و جزایر بسیار بازارگانان دست تو بودند. شاخهای عاج و آبنوس را با تومعاوضت میکردند. | ۱۵ 15 |
௧௫தேதானியர்கள் உன்னுடைய வியாபாரிகளாக இருந்தார்கள்; அநேகம் தீவுகளின் மொத்தவியாபாரம் உன்னுடைய கையில் சேர்ந்தது; யானைத்தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் அவைகளுக்குப்பதிலாகக் கொண்டுவந்தார்கள்.
ارام به فراوانی صنایع توسوداگران تو بودند. بهرمان و ارغوان و پارچه های قلابدوزی و کتان نازک و مرجان و لعل به عوض بضاعت تو میدادند. | ۱۶ 16 |
௧௬சீரியர்கள் உன்னுடைய வேலைப்பாடான பற்பல பொருள்களுக்காக உன்னுடன் வியாபாரம்செய்து, மரகதங்களையும், சிவப்புகளையும், சித்திரத்தையலாடைகளையும், விலைஉயர்ந்த ஆடைகளையும், பவளங்களையும், பளிங்கையும் உன்னுடைய சந்தைகளில் விற்கவந்தார்கள்.
یهودا و زمین اسرائیل سوداگران تو بودند، گندم منیت و حلوا و عسل وروغن و بلسان به عوض متاع تو میدادند. | ۱۷ 17 |
௧௭யூதர்களும் இஸ்ரவேல் தேசத்தார்களும் உன்னுடன் வியாபாரம்செய்து, மின்னித், பன்னாக் என்கிற ஊர்களின் கோதுமையையும், தேனையும், எண்ணெயையும், பிசின்தைலத்தையும் உன்னுடைய தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள்.
دمشق به فراوانی صنایع تو و کثرت هر قسم اموال با شراب حلبون و پشم سفید با تو سودامی کردند. | ۱۸ 18 |
௧௮தமஸ்கு உன்னுடைய வேலைகளான பற்பல பொருள்களுக்காக, எல்லாவித அதிகமான பொருட்களினால் உன்னுடன் வியாபாரம்செய்து, கெல்போனின் திராட்சைரசத்தையும் வெண்மையான ஆட்டு ரோமத்தையும் உனக்கு விற்றார்கள்.
ودان و یاوان ریسمان به عوض بضاعت تو میدادند. آهن مصنوع و سلیخه وقصب الذریره از متاعهای تو بود. | ۱۹ 19 |
௧௯தாண் நாட்டாரும், போக்கும்வரத்துமான யாவானரும் தீட்டப்பட்ட இரும்பையும் இலவங்கத்தையும், வசம்பையும் உன்னுடைய சந்தைகளில் கொண்டுவந்து உன்னுடைய தொழில்துறையில் விற்றார்கள்.
ددان با زین پوشهای نفیس به جهت سواری سوداگران توبودند. | ۲۰ 20 |
௨0இரதங்களுக்குப் போடுகிற மேன்மையான இரத்தினக் கம்பளங்களை தேதானின் மனிதர்கள் கொண்டுவந்து, உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்.
عرب و همه سروران قیدار بازارگانان دست تو بودند. با برهها و قوچها و بزها با تو داد وستد میکردند. | ۲۱ 21 |
௨௧அரபியர்களும், கேதாரின் எல்லா பிரபுக்களும் உனக்கு வாடிக்கையானவியாபாரிகளாகி, ஆட்டுக்குட்டிகளையும் ஆட்டுக்கடாக்களையும் வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்.
تجار شبا و رعمه سوداگران توبودند. بهترین همه ادویه جات و هرگونه سنگ گرانبها و طلا به عوض بضاعت تو میدادند. | ۲۲ 22 |
௨௨சேபா, ராமா பட்டணங்களின் வியாபாரிகள் உன்னுடன் வியாபாரம் செய்து, மேல்த்தரமான எல்லாவித நறுமணப்பொருட்களையும், எல்லாவித இரத்தினக்கற்களையும், பொன்னையும் உன்னுடைய சந்தைகளில் கொண்டுவந்தார்கள்.
حران و کنه و عدن و تجار شبا و آشور و کلمدسوداگران تو بودند. | ۲۳ 23 |
௨௩ஆரான், கன்னே, ஏதேன் என்னும் பட்டணத்தாரும், சேபாவின் வியாபாரிகளும், அசீரியர்களும், கில்மாத் பட்டணத்தாரும் உன்னுடன் வியாபாரம்செய்தார்கள்.
اینان با نفایس و رداهای آسمانجونی و قلابدوزی و صندوقهای پر ازرختهای فاخر ساخته شده از چوب سرو آزاد وبسته شده با ریسمانها در بازارهای تو سوداگران تو بودند. | ۲۴ 24 |
௨௪இவர்கள் எல்லாவித உயர்ந்த சரக்குகளையும், இளநீலப் பட்டுகளும் விசித்திரத்தையலாடைகளும் அடங்கிய புடவைக்கட்டுகளையும், விலை உயர்ந்த ஆடைகள் வைக்கப்பட்டு, கயிறுகளால் கட்டியிருக்கும் கேதுருமரப்பெட்டிகளையும் கொண்டுவந்து, உன்னுடன் வியாபாரம்செய்தார்கள்.
کشتیهای ترشیش قافله های متاع توبودند. پس در وسط دریا توانگر و بسیار معززگردیدی. | ۲۵ 25 |
௨௫உன்னுடைய தொழில் துறையில் தர்ஷீசின் கப்பலாட்கள் உன்னைப் போற்றிப்பாடினார்கள்; நீ கடலின் நடுவிலே உன்னைப் பூரணப்படுத்தி, உன்னை மிகவும் மகிமைப்படுத்தினாய்.
پاروزنانت تو را به آبهای عظیم بردند و باد شرقی تو را در میان دریا شکست. | ۲۶ 26 |
௨௬துடுப்பு போடுகிறவர்கள் ஆழமான தண்ணீர்களில் உன்னை வலித்துக் கொண்டுபோனார்கள்; நடுக்கடலிலே கிழக்குக்காற்று உன்னை உடைத்துப்போட்டது.
اموال و بضاعت و متاع و ملاحان و ناخدایان وقلافان و سوداگران و جمیع مردان جنگی که درتو بودند، با تمامی جمعیتی که در میان تو بودنددر روز انهدام تو در وسط دریا افتادند. | ۲۷ 27 |
௨௭நீ நாசமடையும் நாளிலே உன்னுடைய செல்வத்தோடும், விற்பனைப் பொருட்களோடும், தொழில் துறையுடனும் உன்னுடைய கப்பலாட்களும், உன்னுடைய மாலுமிகளும், உன்னில் பழுதுபார்க்கிறவர்களும், உன்னுடைய வியாபாரிகளும், உன்னிலுள்ள எல்லா போர்வீரர்களும், உன் நடுவில் இருக்கிற எல்லாக்கூட்டத்தாரும் நடுக்கடலிலே விழுவார்கள்.
«از آواز فریاد ناخدایانت ساحلها متزلزل گردید. | ۲۸ 28 |
௨௮உன்னுடைய மாலுமிகள் ஓலமிடும் சத்தத்தினால் சுற்றுப்புறங்கள் அதிரும்.
و جمیع پاروزنان و ملاحان و همه ناخدایان دریا از کشتیهای خود فرود آمده، درزمین میایستند. | ۲۹ 29 |
௨௯தண்டுவலிக்கிற யாவரும், கப்பலாட்களும், கடல் மாலுமிகள் அனைவரும், தங்களுடைய கப்பல்களை விட்டு இறங்கி, கரையிலே நின்று,
و برای تو آواز خود را بلندکرده، به تلخی ناله میکنند و خاک بر سر خودریخته، در خاکستر میغلطند. | ۳۰ 30 |
௩0உனக்காக சத்தமிட்டுப் புலம்பி, மனம்கசந்து அழுது, தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, சாம்பலில் புரண்டு,
و برای تو موی خود را کنده، پلاس میپوشند و با مرارت جان ونوحه تلخ برای تو گریه میکنند. | ۳۱ 31 |
௩௧உனக்காக மொட்டையடித்து சணலாடையை உடுத்திக்கொண்டு, உனக்காக மனம்கசந்து அழுது, துக்கங்கொண்டாடுவார்கள்.
و در نوحه خود برای تو مرثیه میخوانند. و بر تو نوحه گری نموده، میگویند: کیست مثل صور و کیست مثل آن شهری که در میان دریا خاموش شده است؟ | ۳۲ 32 |
௩௨அவர்கள் உனக்காகத் தங்களுடைய துக்கத்திலே ஓலமிட்டு, உனக்காக புலம்பி, உன்னைக்குறித்து: கடலின் நடுவிலே அழிந்துபோன தீருவுக்குச் இணையான நகரம் உண்டோ?
هنگامی که بضاعت تو از دریا بیرون میآمد، قومهای بسیاری را سیر میگردانیدی و پادشاهان جهان را به فراوانی اموال و متاع خود توانگرمی ساختی. | ۳۳ 33 |
௩௩உன்னுடைய வியாபாரபொருட்கள் கடலின் வழியாகக் கொண்டுவரப்படும்போது, அநேக மக்களைத் திருப்திபடுத்தினாய்; உன்னுடைய செல்வம் அதிகமானதினாலும், உன்னுடைய வியாபாரத்தினாலும் பூமியின் ராஜாக்களை ஐசுவரியவான்களாக மாற்றினாய்.
اما چون از دریا، در عمق های آبهاشکسته شدی، متاع و تمامی جمعیت تو درمیانت تلف شد. | ۳۴ 34 |
௩௪நீ கடலின் திரைகளினாலே ஆழங்களில் உடைக்கப்பட்டபோது, உன்னுடைய தொழில் துறையும், உன்னுடைய நடுவிலுள்ள கூட்டம் அனைத்தும் அழிந்துபோனது என்பார்கள்.
جمیع ساکنان جزایر بهسبب تو متحیر گشته و پادشاهان ایشان به شدت دهشت زده و پریشان حال گردیدهاند. | ۳۵ 35 |
௩௫தீவுகளின் குடிகள் எல்லாம் உனக்காக திகைப்பார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் மிகவும் பிரமித்து, கலங்கின முகமாக இருப்பார்கள்.
تجارقومها بر تو صفیر میزنند و تو محل دهشت گردیده، دیگر تا به ابد نخواهی بود.» | ۳۶ 36 |
௩௬எல்லா மக்களிலுமுள்ள வியாபாரிகள் உன்பேரில் பழி கூறுகிறார்கள்; நீ பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்கிறார் என்று சொல் என்றார்.