< خروج 34 >
و خداوند به موسی گفت: «دو لوح سنگی مثل اولین برای خود بتراش، وسخنانی را که بر لوح های اول بود و شکستی براین لوحها خواهم نوشت. | ۱ 1 |
மேலும் யெகோவா மோசேயிடம், “நீ முந்தினவைகளைப்போன்ற இரண்டு கற்பலகைகளைச் செதுக்கி எடுத்துக்கொள். நீ உடைத்துப்போட்ட முந்தின கற்பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் இந்தக் கற்பலகைகளில் எழுதுவேன்.
و بامدادان حاضر شوو صبحگاهان به کوه سینا بالا بیا، و در آنجا نزد من بر قله کوه بایست. | ۲ 2 |
நாளை காலையில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலைக்குமேல் ஏறி வா. மலை உச்சியில் எனது முன்னிலையில் வந்து நில்.
و هیچکس با تو بالا نیاید، وهیچکس نیز در تمامی کوه دیده نشود، و گله ورمه نیز به طرف این کوه چرا نکند.» | ۳ 3 |
உன்னுடன் வேறெவரும் வரக்கூடாது. மலையின் எந்தப்பகுதியிலும் எங்காவது காணப்படவும் கூடாது. ஆடுமாடுகளும் அந்த மலைக்கு முன்னால் மேயக்கூடாது” என்றார்.
پس موسی دو لوح سنگی مثل اولین تراشید و بامدادان برخاسته، به کوه سینا بالا آمد، چنانکه خداوند اورا امر فرموده بود، و دو لوح سنگی را بهدست خود برداشت. | ۴ 4 |
மோசே யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, முந்தின கற்பலகைகளைப்போன்ற இரண்டு கற்பலகைகளையும் செதுக்கி, அதிகாலையில் எழுந்து, அந்த இரண்டு கற்பலகைகளையும் தன் கைகளில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலைக்கு ஏறிப்போனான்.
و خداوند در ابر نازل شده، درآنجا با وی بایستاد، و به نام خداوند ندا درداد. | ۵ 5 |
அப்பொழுது யெகோவா மேகத்தில் இறங்கி அங்கே மோசேயுடன் நின்று, யெகோவா என்ற தமது பெயரைப் பிரசித்தப்படுத்தினார்.
وخداوند پیش روی وی عبور کرده، ندا درداد که «یهوه، یهوه، خدای رحیم و رئوف و دیرخشم وکثیر احسان و وفا، | ۶ 6 |
அவர் மோசேயின் முன்னால் கடந்து போகையில், “யெகோவா! யெகோவா! மன இரக்கமும், கிருபையும் உள்ள இறைவன். கோபப்படுவதற்குத் தாமதிக்கிறவர். அன்பிலும், உண்மையிலும் நிறைந்தவர்.
نگاه دارنده رحمت برای هزاران، و آمرزنده خطا و عصیان و گناه، لکن گناه را هرگز بیسزا نخواهد گذاشت، بلکه خطایای پدران را بر پسران و پسران پسران ایشان تا پشت سوم و چهارم خواهد گرفت.» | ۷ 7 |
ஆயிரம் தலைமுறைகளுக்கு அசையாத அன்பைக் காட்டுகிறவர். கொடுமையையும், கலகத்தையும், பாவத்தையும் மன்னிக்கிறவர். அப்படியிருந்தும் அவர் குற்றவாளிகளைத் தண்டியாமல் தப்பவிடுகிறவர் அல்ல. பெற்றோரின் பாவத்திற்காக பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் அவர்களின் மூன்றாம், நான்காம் தலைமுறைவரைக்கும் தண்டிக்கிறவர்” என்று பிரசித்தப்படுத்தினார்.
و موسی به زودی رو به زمین نهاده، سجده کرد. | ۸ 8 |
உடனே மோசே, தரையில் விழுந்து வழிபட்டான்.
و گفت: «ای خداوند اگر فی الحقیقه منظور نظر تو شدهام، مستدعی آنکه خداوند در میان ما بیاید، زیرا که این قوم گردنکش میباشند، پس خطا و گناه ما رابیامرز و ما را میراث خود بساز.» | ۹ 9 |
அவன், “யெகோவாவே, நான் உம்முடைய கண்களில் தயவு பெற்றிருந்தேன் என்றால், யெகோவாவாகிய நீர் எங்களுடன் வாரும். மக்கள் பிடிவாத குணமுள்ளவர்களாய் இருந்தாலும் எங்கள் கொடுமைகளையும், பாவத்தையும் மன்னித்து, எங்களை உமது உரிமைச்சொத்தாக ஏற்றுக்கொள்ளும்” என்றான்.
گفت: «اینک عهدی میبندم و در نظرتمامی قوم تو کارهای عجیب میکنم، که درتمامی جهان و در جمیع امتها کرده نشده باشد، وتمامی این قومی که تو در میان ایشان هستی، کارخداوند را خواهند دید، زیراکه این کاری که با توخواهم کرد، کاری هولناک است. | ۱۰ 10 |
அதற்கு யெகோவா, “நான் உன்னுடன் ஒரு உடன்படிக்கை செய்கிறேன். முழு உலகத்திலும், எந்த நாட்டினரின் மத்தியிலும் முன் ஒருபோதும் செய்யப்படாத அதிசயங்களை உன் மக்களுக்கு முன்பாகச் செய்வேன். யெகோவாவாகிய நான் உனக்காகச் செய்யப்போகும் செயல் எவ்வளவு பிரமிப்புக்குரியதாய் இருக்கும் என்பதை உன்னோடுகூட வாழும் மக்கள் காண்பார்கள்.
آنچه را من امروز به تو امر میفرمایم، نگاه دار. اینک من ازپیش روی تو اموریان و کنعانیان و حتیان و فرزیان و حویان و یبوسیان را خواهم راند. | ۱۱ 11 |
இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறதற்கு நீ கீழ்ப்படி. நான் எமோரியர், கானானியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரை உனக்கு முன்பாக வெளியே துரத்திவிடுவேன்.
با حذرباش که با ساکنان آن زمین که تو بدانجا میروی، عهد نبندی، مبادا در میان شما دامی باشد. | ۱۲ 12 |
நீ போய்ச்சேரும் நாட்டிலுள்ள மக்களோடு எந்த விதமான உடன்படிக்கையையும் செய்யாதிருக்கக் கவனமாயிரு. மீறினால் அவர்கள் உங்கள் மத்தியில் கண்ணியாயிருப்பார்கள்.
بلکه مذبحهای ایشان را منهدم سازید، و بتهای ایشان را بشکنید و اشیریم ایشان را قطع نمایید. | ۱۳ 13 |
நீயோ அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, விக்கிரகங்களை உடைத்து, அவர்களுடைய அசேரா விக்கிரகக் கம்பங்களை வெட்டி அழித்துவிடவேண்டும்.
زنهارخدای غیر را عبادت منما، زیرا یهوه که نام اوغیور است، خدای غیور است. | ۱۴ 14 |
நீ வேறெந்த தெய்வத்தையும் வணங்காதே. வைராக்கியமுடையவர் என்ற பெயருடைய யெகோவா, தமக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுடைய இறைவன்.
زنهار با ساکنان آن زمین عهد مبند، والا از عقب خدایان ایشان زنا می کنند، و نزد خدایان ایشان قربانی میگذرانند، و تو را دعوت مینمایند و از قربانی های ایشان میخوری. | ۱۵ 15 |
“நீ அந்நாட்டிலுள்ள மக்களோடு உடன்படிக்கை செய்யாமலிருக்க கவனமாயிரு. ஏனெனில், அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குப் பலிசெலுத்திப் பாவம் செய்யும்போது, பலிகளைச் சாப்பிடும்படி உங்களை அழைத்தால், ஒருவேளை நீங்கள் அவர்களுடன் சேர்ந்து அதைச் சாப்பிடுவீர்கள்.
و از دختران ایشان برای پسران خود میگیری، و چون دختران ایشان از عقب خدایان خود زنا کنند، آنگاه پسران شما را درپیروی خدایان خود مرتکب زنا خواهند نمود. | ۱۶ 16 |
நீங்கள் உங்கள் மகன்களுக்கு அவர்களுடைய மகள்களை மனைவிகளாகத் தெரிந்துகொள்ளும்போது, அவர்களுடைய மகள்கள் தங்கள் தெய்வங்களுக்குப் பலிகளைச் செலுத்தி பாவம் செய்து, அதைச் செய்யும்படி உங்கள் மகன்களையும் தூண்டுவார்கள்.
خدایان ریخته شده برای خویشتن مساز. | ۱۷ 17 |
“வார்க்கப்பட்ட விக்கிரகங்களைச் செய்யவேண்டாம்.
عید فطیر را نگاه دار، و هفت روز نان فطیرچنانکه تو را امر فرمودم، در وقت معین در ماه ابیب بخور، زیراکه در ماه ابیب از مصر بیرون آمدی. | ۱۸ 18 |
“புளிப்பில்லாத அப்பப்பண்டிகையைக் கொண்டாடுங்கள். நான் உனக்குக் கட்டளையிட்டபடியே ஏழுநாட்களுக்குப் புளிப்பில்லாத அப்பங்களைச் சாப்பிடவேண்டும். குறித்த காலமான ஆபீப் மாதத்திலே இதைச் செய்யுங்கள். ஏனெனில், அந்த மாதத்திலேயே நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்தீர்கள்.
هرکه رحم را گشاید، از آن من است وهرکه نخست زاده ذکور از مواشی تو، چه از گاوچه از گوسفند، | ۱۹ 19 |
“கர்ப்பத்திலிருந்து வரும் முதற்பேறானவைகள் எல்லாம் எனக்கே சொந்தம். உனக்குரிய கால்நடையில் உள்ள ஆட்டு மந்தையிலிருந்தோ மாட்டு மந்தையிலிருந்தோ பிறக்கும் தலையீற்றான எல்லா கடாக்களும் காளைகளும் எனக்கே உரியவை.
و برای نخست زاده الاغ، برهای فدیه بده، و اگر فدیه ندهی، گردنش را بشکن و هرنخست زادهای از پسرانت را فدیه بده. و هیچکس به حضور من تهیدست حاضر نشود. | ۲۰ 20 |
ஒரு செம்மறியாட்டுக் குட்டியைக் கொடுத்து கழுதையின் தலையீற்றை மீட்டுக்கொள்ள வேண்டும். அப்படி அதை மீட்காவிட்டால் அதன் கழுத்தை முறித்து விடவேண்டும். உன் மகன்களில் முதற்பேறான எல்லோரையும் மீட்டுக்கொள்ள வேண்டும். “ஒருவரும் வெறுங்கையோடு என்முன் வரக்கூடாது.
شش روز مشغول باش، و روز هفتمین، سبت را نگاه دار. در وقت شیار و در حصاد، سبت را نگاه دار. | ۲۱ 21 |
“ஆறுநாட்கள் வேலைசெய், ஆனால் ஏழாம் நாளிலோ ஓய்ந்திருக்க வேண்டும். உழவு காலத்திலும், அறுப்புக் காலத்திலும் அப்படியே ஓய்ந்திருக்க வேண்டும்.
و عید هفتهها را نگاه دار، یعنی عید نوبر حصادگندم و عید جمع در تحویل سال. | ۲۲ 22 |
“கோதுமை அறுவடையின் முதற்பலன்களை கொண்டு, வாரங்களின் பண்டிகையையும், வருட முடிவில் தானிய சேர்ப்பின் பண்டிகையையும் கொண்டாடுங்கள்.
سالی سه مرتبه همه ذکورانت به حضور خداوند یهوه، خدای اسرائیل، حاضر شوند. | ۲۳ 23 |
ஒரு வருடத்தில் மூன்றுமுறை உங்கள் எல்லா ஆண்களும் இஸ்ரயேலின் இறைவனான ஆண்டவராகிய யெகோவாவுக்குமுன் வரவேண்டும்.
زیرا که امتها رااز پیش روی تو خواهم راند، و حدود تو را وسیع خواهم گردانید، و هنگامی که در هر سال سه مرتبه میآیی تا به حضور یهوه، خدای خودحاضر شوی، هیچکس زمین تو را طمع نخواهدکرد. | ۲۴ 24 |
நான் நாடுகளை உங்களுக்கு முன்பாக வெளியே துரத்தி, உங்கள் நிலப்பரப்பை விரிவுபடுத்துவேன். ஒவ்வொரு வருடமும் மூன்றுமுறை நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நிற்கப் போகும்போது, ஒருவனும் உங்கள் நாட்டை அபகரிக்க ஆசைகொள்ளமாட்டான்.
خون قربانی مرا با خمیرمایه مگذران، و قربانی عید فصح تا صبح نماند. | ۲۵ 25 |
“புளிப்புள்ள எதனுடனும் ஒரு பலியின் இரத்தத்தை எனக்குச் செலுத்தவேண்டாம். பஸ்கா பண்டிகையின் பலியிலுள்ள எதையும் மறுநாள் காலைவரை வைக்கவேண்டாம்.
نخستین نوبرزمین خود را به خانه یهوه، خدای خود، بیاور. وبزغاله را در شیر مادرش مپز.» | ۲۶ 26 |
“உங்கள் நிலத்திலுள்ள முதற்பலன்களில் சிறந்தவற்றையே உங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவர வேண்டும். “வெள்ளாட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்” என்றார்.
و خداوند به موسی گفت: «این سخنان را تو بنویس، زیرا که به حسب این سخنان، عهد با تو و با اسرائیل بستهام.» | ۲۷ 27 |
அதன்பின் யெகோவா மோசேயிடம், “இந்த வார்த்தைகளை எழுது. ஏனெனில் இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரயேலரோடும் நான் உடன்படிக்கை செய்திருக்கிறேன்” என்றார்.
و چهل روز و چهل شب آنجا نزدخداوند بوده، نان نخورد و آب ننوشید و اوسخنان عهد، یعنی ده کلام را بر لوحها نوشت. | ۲۸ 28 |
அங்கே மோசே இரவும் பகலும் அப்பம் சாப்பிடாமலும், தண்ணீர் குடியாமலும் நாற்பது நாட்கள் யெகோவாவோடு இருந்தான். அவர் பத்துக் கட்டளைகளான உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கற்பலகைகளில் எழுதினார்.
و چون موسی از کوه سینا بزیر میآمد، ودو لوح سنگی در دست موسی بود، هنگامی که ازکوه بزیر میآمد، واقع شد که موسی ندانست که بهسبب گفتگوی با او پوست چهره وی میدرخشید. | ۲۹ 29 |
மோசே, சாட்சியின் பலகைகளைத் தனது கையில் வைத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தான். அவன் யெகோவாவோடு பேசியதனால் அவனுடைய முகம் பிரகாசமாயிருந்தது. ஆனால் அவனோ அதை அறியாதிருந்தான்.
اما هارون و جمیع بنیاسرائیل موسی را دیدند که اینک پوست چهره اومی درخشد. پس ترسیدند که نزدیک او بیایند. | ۳۰ 30 |
ஆரோனும், இஸ்ரயேலர் எல்லோரும் மோசேயைப் பார்த்தபோது, அவனுடைய முகம் பிரகாசமாயிருந்தது. அதனால் அவர்கள் அவனுக்கு அருகில் வருவதற்குப் பயந்தார்கள்.
و موسی ایشان را خواند، و هارون و همه سرداران جماعت نزد او برگشتند، و موسی بدیشان سخن گفت. | ۳۱ 31 |
ஆனால் மோசேயோ அவர்களை அழைத்தான். அப்பொழுது ஆரோனும், சமுதாயத்தின் எல்லா தலைவர்களும் அவனிடம் திரும்பி வந்தார்கள். அவன் அவர்களுடன் பேசினான்.
و بعد از آن همه بنیاسرائیل نزدیک آمدند، و آنچه خداوند درکوه سینا بدو گفته بود، بدیشان امر فرمود. | ۳۲ 32 |
அதன்பின் இஸ்ரயேலர் எல்லோரும் அவனை நெருங்கி வந்தார்கள். யெகோவா சீனாய் மலையில் கொடுத்த கட்டளைகள் எல்லாவற்றையும் அவன் அவர்களுக்குக் கொடுத்தான்.
وچون موسی از سخنگفتن با ایشان فارغ شد، نقابی بر روی خود کشید. | ۳۳ 33 |
மோசே அவர்களுடன் பேசி முடிந்ததும், அவன் தன் முகத்தை முகத்திரையால் மூடிக்கொண்டான்.
و چون موسی به حضورخداوند داخل میشد که با وی گفتگو کند، نقاب را برمی داشت تا بیرون آمدن او. پس بیرون آمده، آنچه به وی امر شده بود، به بنیاسرائیل میگفت. | ۳۴ 34 |
ஆனாலும் மோசே, யெகோவாவுடன் பேசும்படி அவர் முன்னிலையில் போகும்போதெல்லாம், அவன் அங்கிருந்து திரும்பி வரும்வரை முகத்திரையை நீக்கிவிடுவான். அவன் தனக்குக் கட்டளையிடப்பட்டதை வெளியே வந்து இஸ்ரயேலருக்குச் சொல்லும்போது,
و بنیاسرائیل روی موسی را میدیدند که پوست چهره او میدرخشد. پس موسی نقاب را به روی خود باز میکشید، تا وقتی که برای گفتگوی او میرفت. | ۳۵ 35 |
இஸ்ரயேலர் அவன் முகம் பிரகாசிப்பதைக் கண்டார்கள். எனவே மோசே, தான் யெகோவாவுடன் பேசுவதற்கு உள்ளே போகும்வரை, அந்த முகத்திரையைத் திரும்பவும் தன் முகத்தின்மேல் போட்டுக்கொள்வான்.