< ମାତିଉ 24 >

1 ଜିସୁ ମନ୍ଦିର୍‍ତାଂ ହସି ହାନି ୱେଡ଼ାଲିଂ ହେୱାନ୍ତି ଚେଲାର୍‌ ହେୱାନିଂ ମନ୍ଦିର୍‌ନି ଇଲ୍‌କୁ ଚଚ୍‌ଚେଙ୍ଗ୍‌ କାଜିଂ ହେୱାନ୍‌ ଲାଗେ ୱାତାର୍,
இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய சீடர்கள் ஆலயக் கட்டிடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடம் வந்தார்கள்.
2 ମାତର୍‌ ହେୱାନ୍‌ ହେୱାରିଂ ଉତର୍‌ ହିତାନ୍‌, “ଏପେଙ୍ଗ୍‌ ଇନାକା ଇ ୱିଜ଼ୁ ହୁଡ଼ୁଦେରା? ଆନ୍‌ ମିଙ୍ଗ୍‌ ହାତ୍‌ପା ଇଞ୍ଜ୍‌ନାଙ୍ଗା, ଇ ବାହାତ ର କାଲ୍‌ ବିନ୍‌ କାଲ୍‌ ଜପି ମାନୁତ୍, ୱିଜ଼ୁ ଦୁଡ଼ି ମାସ୍‍ନାତ୍ ।”
ஆனால் இயேசு அவர்களிடம், “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இங்குள்ள ஒரு கல்லின்மேல் இன்னொரு கல் இராதபடி, ஒவ்வொரு கல்லும் இடிக்கப்படும்” என்றார்.
3 ପାଚେ ହେୱାନ୍‌ ଜିତ୍‌ମାଡ଼ି ଜପି କୁଚ୍‌ଚାନ୍‌, ଚେଲାର୍‌ ହେୱାନ୍‌ ଲାଗେ ଡ଼ୁଗ୍‌ଜି ୱାଜ଼ି ୱେନ୍‍ବାତାର୍, “ଇ ସବୁ ଇନାୱାଡ଼ାଂ ଗିଟା ଆନାତ୍‌, ଆରେ ନି ୱାନାକା ଆରି ଜୁଗ୍‌ସେସ୍‌ନି ଇଟ୍‌କାଡ଼୍‌ ଇନାକା, ହେଦାଂ ମାଂ ୱେଚ୍‌ଚା ।” (aiōn g165)
இயேசு ஒலிவமலையின்மேல் இருக்கையில், சீடர்கள் தனிமையாக அவரிடத்தில் வந்து, “எப்பொழுது இவை நிகழும்? உமது வருகைக்கும், இந்த உலகத்தின் முடிவுக்குமான அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டார்கள். (aiōn g165)
4 ହେବେ ଜିସୁ ହେୱାରିଂ ଉତର୍‌ ହିତାନ୍‌, “ଜାଗ୍ରତ୍‌, ଇନେର୍‌କି ଇନେସ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଚାକ୍ରାୟ୍‌ କିଦ୍‍ମେର୍ ।”
இயேசு அவர்களிடம், “உங்களை யாரும் ஏமாற்றாதபடி விழிப்பாயிருங்கள்.
5 ଇନାକିଦେଂକି ବେସିହେନି ନା ତର୍‌ଦ ୱାଜ଼ି “ଆନ୍‌ କ୍ରିସ୍ଟ ଇଚିସ୍‌ ମସିୟା ଇଞ୍ଜି ଇଞ୍ଜି ଆଦେକ୍‌ତିଂ ଚାକ୍ରାୟ୍‌ କିଦ୍‌ନାର୍‌ ।
ஏனெனில் ‘நானே கிறிஸ்து,’ என்று சொல்லிக்கொண்டு, அநேகர் எனது பெயரில் வருவார்கள். அவர்கள் பலரை ஏமாற்றுவார்கள்.
6 ଆରେ, ଏପେଙ୍ଗ୍‌ ଜୁଜ୍‌ ବିସ୍ରେ ଆରି ଜୁଜ୍‍ନି ମାନାୟ୍‌ ଆଲି ୱେନାଦେର୍; ଜାଗ୍ରତ୍‌, ବାଇକାବିତାଡ଼୍‍ ଆମାଟ୍‌ । ଇନାକିଦେଂକି ଇ ୱିଜ଼ୁ ଗିଟାନାତ୍, ମାତର୍‌ ହେ ସମୁ ୱିଜ଼୍‌ନାକା ଆକାୟ୍‌ ।
நீங்கள் யுத்தங்களையும், யுத்தங்களைப்பற்றிய செய்திகளையும் கேள்விப்படுவீர்கள். ஆனால் பயப்படாதபடி கவனமாயிருங்கள். இப்படிப்பட்ட காரியங்கள் நடக்கவே வேண்டும். ஆனால் முடிவு வருவதற்கோ, இன்னும் காலம் உண்டு.
7 ଇନାକିଦେଂକି ଜାତି ବିରୁଦ୍‌ତ ଜାତି ଆରି ରାଜି ବିରୁଦ୍‌ତ ରାଜି ନିଂଗ୍‍ନାତ୍‍, ଆରେ ସବୁ ବାହାତ କାତାର୍‌ ଆରି ମେଦ୍‌ନିଦାଲ୍‌କାତାତ୍‌ ।
நாட்டிற்கு விரோதமாய் நாடு எழும்பும், அரசிற்கு விரோதமாய் அரசு எழும்பும். பல இடங்களில் பஞ்சங்களும், பூமியதிர்ச்சிகளும் ஏற்படும்.
8 ମାତର୍‌ ଇ ୱିଜ଼ୁ କଗ୍‌ଲେ ହିମ୍‌ଣାଗାଟାନି କସ୍ଟ ଏକାୱାନାତ୍‌ ଦୁକ୍‌ ଆରମ୍‌ ମତର୍‌ ।”
இவை எல்லாம் பிரசவ வேதனையின் ஆரம்பமே.
9 “ହେ ୱେଡ଼ାଲିଂ ଲକୁ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଦୁକ୍‍ବଗି କିଦେଙ୍ଗ୍‌ କାଜିଂ ହେଲାୟ୍‌ କିଦ୍‌ନାର୍‌ ଆରି ମିଙ୍ଗ୍‌ ଅସ୍ତାନାର୍‌, ଆରେ ନା ତର୍‌ ପାର୍ତି କିନି କାଜିଂ ଏପେଙ୍ଗ୍‌ ୱିଜ଼ୁ ଜାତିତାଂ ଗିଣ୍‌ କିୟାନାଦେର୍ ।
“அப்பொழுது நீங்கள் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்படுவதற்கென ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள். என் நிமித்தம் நீங்கள் எல்லா ஜனங்களாலும் வெறுக்கப்படுவீர்கள்.
10 ହେୱାଡ଼ାଂ ବେସି ହେୱାର୍‌ତି ପାର୍ତି ଆରାୟ୍‌ କିତାର୍‌, ଆରେ ରକାନ୍‌ ଆରେ ରକାନିଂ ଆହିକିନାନ୍‌ ଆରି ରକାନ୍‌ ଆରେ ରକାନିଂ ଗିଣ୍‌ କିନାନ୍‌,
அக்காலத்தில் அநேகர் விசுவாசத்திலிருந்து விலகிப் போவார்கள். ஒருவரையொருவர் அவர்கள் காட்டிக்கொடுக்கிறவர்களாகவும், வெறுக்கிறவர்களாகவும் இருப்பார்கள்.
11 ଆରେ ବେସି ଚାକ୍ରାୟ୍‌ ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌କିନାକାର୍‌ ୱାଜ଼ି ବେସିହେନିତିଂ ଚାକ୍ରାୟ୍‌ କିନାର୍‌,
அநேக பொய் தீர்க்கதரிசிகளும் தோன்றி, அநேக மக்களை ஏமாற்றுவார்கள்.
12 ଆରେ ବାନ୍ୟା ବାଡାନି କାଜିଂ ଆଦେକ୍‌ ମାନାୟାର୍‌ତି ଜିଉନନାକା କାଜିଂ ହିତ୍‍ଡ଼ି ଆନାତ୍‌ ।
அநியாயம் பெருகுவதால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.
13 ମତର୍‌ ଇନେର୍‌ ସେସ୍‌ ପାତେକ୍‌ ସାସ୍‌ ଆଜ଼ି ମାନାର୍‌, ହେୱାନ୍‌ ମୁକ୍ତି ଆନାନ୍‌ ।
ஆனால் முடிவுவரை உறுதியாய் இருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
14 ଆରେ, ସବୁ ଜାତି ଲାଗାଂ ସାକି ହିଦେଂ କାଜିଂ ରାଜିନି ଇ ନେକ୍ରିକାବୁର୍‌ ସବୁ ପୁର୍ତିତ ସୁଣାୟ୍‌ କିୟାଆନାତ୍‌, ତା ପାଚେ ଜୁଗ୍‌ ୱିଜ଼୍‌ନାତ୍ ।”
இறை அரசின் இந்த நற்செய்தி முழு உலகமும் அறியும்படி எல்லா ஜனங்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும். அதற்குப் பின்பே முடிவுவரும்.
15 ଲାଗିଂ ଏପେଙ୍ଗ୍‌ ଏଚେକାଡ଼୍‌ଦ “ଦାନିଏଲ୍‌ ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌କିନାକାନ୍‌ କାଜିଂ ଲେକାତି ନାସ୍‌ କିନି ଗିଣ୍‌ ଜିନିସ୍‌ତିଂ ମନ୍ଦିର୍‌ ପୁଇପୁୟା ବାହାତ ମାନାକା ହୁଡ଼୍‌ନାଦେର୍‌, ପଡ଼ିକିନାକାଦେର୍‌ ବୁଜାଆଡୁ,”
“எனவே இறைவாக்கினன் தானியேல் மூலம் சொல்லப்பட்ட, ‘பாழாக்குகிற அருவருப்பு’ ஆலயப் பரிசுத்த இடத்தில் நிற்கிறதை நீங்கள் காணும்பொழுது, வாசிக்கிற நீங்கள் அதை விளங்கிக்கொள்ளுங்கள்.
16 “ହେ ଏଚେକାଡ଼୍‌ଦ ଇମ୍‌ଣାକାର୍‌ ଜିହୁଦା ରାଜି ମାନ୍‌ଗାନାର୍‌, ହେୱାର୍‌ ମାଡ଼ିତ ହନ୍‌ଚି ହାଲେର୍;
அப்பொழுது யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்.
17 ଇନେର୍‌ ଜେଗନ୍‌ ଜପି ମାନାନ୍‌, ହେୱାନ୍‌ ଇଲ୍‌ ବିତ୍ରେ ଆଡ଼୍‌ମାଡ଼୍‌ ଅଦେଂ କାଜିଂ ଜୁଜ଼ି ୱାମେନ୍‌ ।
வீட்டின் கூரைமேல் இருக்கிற எவனும், வீட்டிலிருந்து எதையாவது எடுக்கும்படி உள்ளே போகாதிருக்கட்டும்.
18 ଆରେ, ଇନେର୍‌ ବୁମିତ ମାନ୍‌ଗାନାର୍‌, ହେୱାନ୍‌ ଜାର୍‌ ହେନ୍ଦ୍ରା ତାକେଦେଂ ଉଲ୍‌ଟି ହାଲ୍‍ମେନ୍ ।
வயலில் இருக்கும் யாரும், தனது மேலுடையை எடுத்துக்கொள்ளும்படி திரும்பிப் போகாதிருக்கட்டும்.
19 ହେୱେଡ଼ାଲିଂ ଇମ୍‌ଣାକାର୍‌ ଏସ୍‌ ପିସ୍ତାକାଦେଲ୍‍ କଗ୍‌ଲେ ଆରି ମାୟ୍‍ଉଟ୍‍ନି ଆୟା, ଆ, ହେୱେକ୍‌ ଦୁକ୍‌ନିକିକ୍‌,
அந்நாட்களில் கர்ப்பவதிகளின் நிலைமையும், பால் கொடுக்கும் தாய்மாரின் நிலைமையும் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்!
20 ମାତର୍‌ ମିଦାଙ୍ଗ୍‌ ହନ୍‍ନାକା ଇନେସ୍‌ ପିନି ମାସ୍‍ତ କି ଜମ୍‌ନିବାର୍‌ ନାଜିଂ ଆମେତ୍‌, ଇଦାଂ କାଜିଂ ପାର୍ତାନା କିୟାଟ୍‌ ।
நீங்கள் ஓடிப்போவது குளிர்க்காலத்தில் அல்லது ஓய்வுநாளில் நேரிடாதபடி ஜெபம் பண்ணுங்கள்.
21 ଇନାକିଦେଂକି ହେୱେଡ଼ାଂ ଏପେଙ୍ଗ୍‌ ବେଜେକ୍‌ ଦୁକ୍‌ ଗିଟାନାତ୍ ଜେ, ପୁର୍ତିନି ଆରମ୍‌ତାଂ ନେଞ୍ଜେଙ୍ଗ୍‌ ପାତେକ୍‌ ଗିଟାୱାତାତ୍‍ନ୍ନା, ଆରେ ଇନାୱାଡ଼ାଂ ପା ଗିଟାଆଦୁତ୍ ।
ஏனெனில், உலகத் தொடக்கத்திலிருந்து இன்றுவரை ஏற்பட்டிருக்காத பெரும் துன்பம் அக்காலத்தில் ஏற்படும். அதற்குப் பின்பு ஒருபோதும் ஏற்படவும் மாட்டாது.
22 ଆରେ, ହେ ସମୁ ବାଟିଙ୍ଗ୍‌ ଉଣା କିୱାଦାଂ ମାଚିସ୍‌, ତେବେ ଇମ୍‌ଣାକା ପା ପାତାଡ଼୍‌ ମୁକ୍ତି ଆୱାତାତ୍ମା, ମତର୍‌ ବାଚିକିତି ଲକୁ କାଜିଂ ହେ ସମୁ ଉଣା କିୟା ଆନାତ୍‌ ।”
“அந்த நாட்கள் குறைக்கப்படாவிட்டால், ஒருவரும் தப்பமாட்டார்கள். ஆனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் நிமித்தம், அந்த நாட்கள் குறைக்கப்படும்.
23 “ହେ ଏଚେକାଡ଼୍‌ଦ ହୁଡ଼ାଟ୍‌, କ୍ରିସ୍ଟ ଇବେ କି ହେବେ ଇନେର୍‌ ଏଚେକାଡ଼୍‌ଦ ମିଙ୍ଗ୍‌ ଏଲେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜ୍‌ନାର୍‌, ତେବେ ହେଦାଂ ପାର୍ତି କିମାଟ୍‌ ।
அக்காலத்தில் யாராவது உங்களிடம் வந்து, ‘இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார்!’ அல்லது, ‘அதோ, அங்கே இருக்கிறார்!’ என்று சொன்னால், அதை நம்பவேண்டாம்.
24 ଇନାକିଦେଂକି ଚାକ୍ରାୟ୍‌ କ୍ରିସ୍ଟର୍‌ ଆରି ଚାକ୍ରାୟ୍‌ ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌ କିନାକାର୍‌ ନିଙ୍ଗ୍‌ଜି ଏପେଙ୍ଗ୍‌ ଗାଜା ଗାଜା ଚିନ୍‌ ଆରି କାବାନି କାମାୟ୍‌ ଚଚ୍‍ଚାନାର୍ ଜେ, ଜଦି ଆଡ୍‌ନାର୍‌, ତେବେ ବାଚିକିତି ଲଗାଂ ପା ବାମ୍‌ଣ୍ଡାୟ୍‌ କିତାର୍‌ ।
ஏனெனில் பொய் கிறிஸ்துக்களும் பொய் தீர்க்கதரிசிகளும் தோன்றுவார்கள். முடியுமானால், இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் ஏமாற்றும்படி அவர்கள் பெரிதான அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
25 ହୁଡ଼ାଟ୍‌, ଆନ୍‌ ଆଗେତାଂ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ୱେଚ୍‍ଚାନାଙ୍ଗା ।”
பாருங்கள், அக்காலம் வருமுன்பே, நான் உங்களுக்குச் சொல்லி எச்சரிக்கிறேன்.
26 ଲାଗିଂ, “ହୁଡ଼ାଟ୍‌, ହେୱାନ୍‌ ବାଟାତ ମାନାନ୍‌” ଲକୁ ଜଦି ମିଙ୍ଗ୍‌ ଇ କାତା ଇଞ୍ଜ୍‌ନାର୍‌, ତେବେ ହସି ହାଲ୍‌ମାଟ୍‌, “ହୁଡ଼ାଟ୍‌, ହେୱାନ୍‌ ବିତ୍ରେ ବାକ୍ରାତ ଡ଼ୁକ୍‌ତାନ୍‌ନା ମାନାୟ୍‌ ଜଦି ଇଦାଂ ଇଞ୍ଜ୍‌ନାର୍‌, ତେବେ ହେଦାଂ ପାର୍ତି କିମାଟ୍‌ ।
“ஆகவே யாராவது உங்களிடம், ‘அதோ அங்கே அவர், வெளியே பாலைவனத்தில் இருக்கிறார்’ என்று சொன்னால், அங்கே போகாதிருங்கள்; ‘இதோ இங்கே அவர், உள்ளறையில் இருக்கிறார்’ என்று சொன்னால், அதையும் நம்பாதிருங்கள்.
27 ଇନାକିଦେଂକି ବିଜ୍‌ଲି ଇନେସ୍‌ ୱେଡ଼ାହନିତାଂ ଇଡ଼୍‌ଜି ୱେଡ଼ାହାନି ପାତେକ୍‌ ବାଦାଡ଼୍‌ ଅଜଡ଼୍‌ ଆନାତ୍‌, ହେ ଲାକେ ମାନାୟ୍‌ ମାଜ଼ିତି ୱାନାକା ହେ ଲାକେ ଆନାତ୍‌ ।”
ஏனெனில் கிழக்கிலிருந்து வரும் மின்னல் மேற்கிலும் தெரிவது போலவே, மானிடமகனாகிய என்னுடைய வருகையும் இருக்கும்.
28 ଇମେତାକେ ମଡ଼୍‍ ମାଚିସ୍‌, ହେବେ ରାମାଣିଙ୍ଗ୍‌ ରୁଣ୍ଡା ଆନିକ୍‌ ।
எங்கேயாவது பிணம் கிடந்தால், அங்கே கழுகுகள் ஒன்றுகூடும்.
29 ମତର୍‌ ହେ ସମୁନି ଦୁକ୍‌ ପାଚେ ହାଚାଟ୍ରେ ମାଜ୍‌ଗା ଆନାତ୍‌ ଆରି ଲେଞ୍ଜ୍ ଅଜଡ଼୍‌ ହିଉତ୍, ଆରେ ହୁକାଂ ଆକାସ୍‌ତାଂ ଆର୍‍ନିଂ ଆରି ଆକାସ୍‌ନି ସାକ୍ତି ସବୁ ଦାଲ୍‍କାନାତ୍ ।
“அந்த நாட்களின் பெருந்துன்பம் முடிந்த உடனேயே, “‘சூரியன் இருள் அடையும், சந்திரன் தனது வெளிச்சத்தைக் கொடாதிருக்கும்; வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானத்தின் அதிகாரங்கள் அசைக்கப்படும்.’
30 ହେ ଏଚେକାଡ଼୍‌ଦ ଆକାସ୍‌ତ ମାନାୟ୍‍ ମାଜ଼ିତି ଇଟ୍‌କାଡ଼୍‌ ଚନ୍‌ଞ୍ଜାନାତ୍‌, ଆରେ ହେୱେଡ଼ାଲିଂ ପୁର୍ତିତ ୱିଜ଼ୁ ଜାତିନି ମାନାୟାର୍‌ ଆଡ଼୍‌ବାନାର୍‌ ଆରି ମାନାୟ୍‍ ମାଜ଼ିଂ ଗାଜା ସାକ୍ତିତାଂ ଆରି ଗାଜା ପାଣ୍‌ ହୁକେ ବାଦାଡ଼୍‍ତ ୱାନାକା ହୁଡ଼୍‌ନାଦେର୍‌ ।
“அவ்வேளையில், மானிடமகனாகிய நான் திரும்பி வருவதன் அறிகுறி ஆகாயத்தில் தோன்றும். பூமியிலுள்ள ஜனங்களெல்லாம் புலம்புவார்கள். மானிடமகனாகிய நான் அதிகாரத்துடனும், மிக்க மகிமையுடனும், ஆகாயத்து மேகங்கள்மேல் வருவதை, அவர்கள் காண்பார்கள்.
31 ଆରେ, ହେୱାନ୍‌ ଗାଜା ମରି ବାଜା ହୁକେ ଜାର୍‌ ଦୁତ୍‌ରିଂ ପକ୍‌ତାନ୍‌ ଆରି ହେୱାର୍‌ ଆକାସ୍‌ନି ର ହାନ୍ଦିତାଂ ବିନ୍‌ ହାନ୍ଦି ପାତେକ୍‌ ଚାରି ଦିଗ୍‌ତାଂ ଇସ୍ୱର୍ତି ବାଚିକିତି ଲଗାଂ ରୁଣ୍ଡାୟ୍‌ କିନାନ୍‌ ।
நான் என் தூதர்களை சத்தமான எக்காள அழைப்புடன் அனுப்பி, என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை, வானத்தின் ஒரு முனையிலிருந்து, மறுமுனை வரைக்குமுள்ள நான்கு திசைகளிலுமிருந்து சேர்த்துக்கொள்வேன்.
32 ତଗା ମାର୍‌ନି ଉତର୍‌ମୁଡ଼୍‌ ହିକ୍ୟା କିୟାଟ୍‌, ଏଚେକାଡ଼୍‌ଦ ହେ କେନ୍ଦାଂ ହାରା ଆଜ଼ି ଆକିଂ ଗିଲ୍‌ନିଂ, ହେ ଏଚେକାଡ଼୍‌ଦ ଜେଟ୍‌ ମାସ୍‍ ଏକା ୱାତାତେ ଇଞ୍ଜି ଏପେଙ୍ଗ୍‌ ପୁଞ୍ଜି ମାନାଟ୍‌;
“இப்பொழுது அத்திமரத்திலிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: அதில் சிறு கிளைகள் தோன்றி இலைகள் வரும்போது, கோடைகாலம் நெருங்குகிறது என்று அறிகிறீர்கள்.
33 ହେ ଲାକେ ଏପେଙ୍ଗ୍‌ ପା ଇ ୱିଜ଼ୁ ହୁଡ଼୍‌ତିସ୍‌ ମାନାୟ୍‌ ମାଜ଼ି ଦୁୱେର୍‌ତ ଏକାୱାତାନେ ଇଞ୍ଜି ଇଦାଂ ପୁନାଟ୍‌ ।
அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது, முடிவுகாலம் நெருங்கி வாசலருகே வந்துவிட்டது என்று அறிந்துகொள்ளுங்கள்.
34 ଆନ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହାତ୍‌ପା ଇଞ୍ଜ୍‌ନାଙ୍ଗା, ଇ ୱିଜ଼ୁ ଗିଟାୱି ପାତେକ୍‌ ନେଞ୍ଜେୱିଗାନି ନାର୍‌ ଇନେସ୍‌ ବାର୍ତି ବୁଡା ଆଉର୍‌ ।
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்தக் காரியங்களெல்லாம் நடந்துமுடியும் வரைக்கும், நிச்சயமாகவே இந்தத் தலைமுறை ஒழிந்துபோகாது.
35 ଆକାସ୍‌ ଆରି ପୁର୍ତି ବୁଡାନାତ୍, ମତର୍‌ ନା ବଚନ୍‌ ସବୁ ମଡ଼୍‍କେ ବୁଡା ଆଉତ୍‌ ।
வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்துபோகாது.
36 ମାତର୍‌ ଇନାୱାଡ଼ାଂ ୱାନାନ୍‌ “ହେ ଦିନ୍‌ ଆରି ସମୁ ବିସ୍ରେ ଇନେର୍‌ ପୁନୁର୍‌, ସାର୍ଗେନି ଦୁତ୍‌ତର୍‌ କି ମାଜ଼ି ପା ପୁନୁନ୍, କେବଲ୍‌ ମତର୍‌ ବାୱା ପୁନାନ୍‌ ।
“அந்த நாளையோ, அந்த நேரத்தையோ ஒருவனும் அறியமாட்டான். ஏன், பரலோகத்திலிருக்கிற தூதர்களுக்கும் மானிடமகனாகிய எனக்கும் தெரியாது; ஆனால் பிதா மட்டுமே அதை அறிவார்.
37 ଆରେ, ନହତି ସମୁତ ଇନେସ୍‌ ଗିଟା ଆଜ଼ି ମାଚାତ୍‌, ମାନାୟ୍‌ ମାଜ଼ି ୱାନି ସମୁତ ହେ ଲାକେ ଗିଟାଆନାତ୍ ।
நோவாவின் நாட்களில் இருந்ததுபோலவே, மானிடமகனாகிய எனது வருகையின் நாட்களிலும் இருக்கும்.
38 ଇନାକିଦେଂକି କ୍ଡୁପ୍‌କିନି ଆଗେନି ସମୁତ ଜାଜ୍‌ତ ନହ ହଣି ଦିନ୍‌ ପାତେକ୍‌ ଲକୁ ଇନେସ୍‌ ତିନାଉଣା ଆରି ବିବା କିନାକା ଆରି ବିବା ହିଦେଂ ବିପ୍ତି ମାଚାର୍‌,
ஏனெனில் பெருவெள்ளத்திற்கு முன்பு இருந்த நாட்களில், நோவா பேழைக்குள் போகும்வரைக்கும் மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும், திருமணம் செய்துகொண்டும், திருமணம் செய்துகொடுத்துக்கொண்டும் இருந்தார்கள்.
39 ଆରେ ପୁର୍‍ ୱାଜ଼ି ୱିଜ଼ାରିଂ ବଡ଼ାୟ୍‍ କିଜ଼ି ଅୱି ପାତେକ୍‌ ଇନେସ୍‌ ପୁନ୍‌ୱାଦାଂ ମାଚାର୍‌, ମାନାୟ୍‌ ମାଜ଼ିତି ୱାନାକା ପା ହେ ଲାକେ ଆନାତ୍‌ ।”
பெருவெள்ளம் வந்து அவர்கள் எல்லோரையும் அடித்துக்கொண்டு போகும்வரைக்கும், என்ன நடக்கும் என்பதைப்பற்றி அவர்கள் ஒன்றுமே அறியாதிருந்தார்கள். இதைப்போலவே, மானிடமகனாகிய எனது வருகையின் போதும் இருக்கும்.
40 ହେ ଏଚେକାଡ଼୍‌ଦ ରିୟାର୍‌ ବୁମିତ ମାନ୍‌ଗାନାର୍‌, ରୱାନିଂ ଇଟ୍ୟା ଆନାତ୍‌ ଆରି ବିନ୍‌ ଲଗାଂ ପିହ୍‌ୟା ଆନାତ୍‌;
இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விட்டுவிடப்படுவான்.
41 ରିଣ୍ଡେକ୍‌ ଜାତା ନୁଜ଼୍‌ଜି ମାନିକ୍‌, ରଞ୍ଜିଲିଂ ଇଟ୍ୟାନାତ୍‌ ଆରି ଆରେ ରଞ୍ଜିଲିଂ ପିହ୍ୟାନାତ୍ ।
இரண்டு பெண்கள் திரிகைக் கல்லில் அரைத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருத்தி எடுத்துக்கொள்ளப்படுவாள், மற்றவள் விட்டுவிடப்படுவாள்.
42 “ଲାଗିଂ, ଜାଗ୍ରତ୍‌ ମାନାଟ୍‌, ଇନାକିଦେଂକି ମି ମାପ୍ରୁ ଇମ୍‌ଣି ଦିନ୍‌ ୱାନାନ୍, ହେଦାଂ ଏପେଙ୍ଗ୍‌ ପୁନୁଦେର୍‌ ।
“ஆகையால் விழிப்பாயிருங்கள், ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என்று உங்களுக்குத் தெரியாதே.
43 ମତର୍‌ ଇଦାଂ ପୁଞ୍ଜି ମାନାଟ୍‌, ଇମ୍‌ଣି ଗାଡ଼ିତ ଚର୍‌ ୱାନାନ୍, ଇଦାଂ ଇଲ୍‌ ମୁଣିକା ଏଚେକାଡ଼୍‌ଦ ପୁଚାନ୍‍ଚି, ତା ଆତିସ୍‌ ହେୱାନ୍‌ ଜାଗ୍ରତ୍‌ ମାନ୍‌ଞ୍ଜି ଜାର୍‌ ଇଞ୍ଜ ଚର୍‌ କିଦେଙ୍ଗ୍‌ ହିୱାତାନ୍ ।
நீங்கள் இதை விளங்கிக்கொள்ளுங்கள்: திருடன் இரவில் எந்த நேரம் வருவான் என்று வீட்டின் சொந்தக்காரன் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து தன் வீட்டைத் திருடன் உடைத்து நுழையாதபடி பார்த்துக்கொள்வானே.
44 ଲାଗିଂ ଏପେଙ୍ଗ୍‌ ପା ଜାଲ୍‌ଦି ଆଜ଼ି ମାନାଟ୍‌, ଇନାକିଦେଂକି ଇମ୍‌ଣି ସମୁତ ଏପେଙ୍ଗ୍‌ ଏତ୍‌ କିୱାଦାଂ ମାନ୍‍ଗାନାଦେର୍, ହେ ସମୁଦ ମାନାୟ୍‌ ମାଜ଼ି ୱାନାନ୍ ।”
எனவே நீங்களும் ஆயத்தமாயிருக்க வேண்டும். ஏனெனில், மானிடமகனாகிய நான் நீங்கள் எதிர்பாராத நேரத்திலே வருவேன்.
45 “ତେବେ ମାପ୍ରୁ ଜାର୍‌ ଲକ୍‌ବାକ୍‍ତିଂ ସମାନ୍‌ ୱେଡ଼ାଲିଂ ବାତ୍ୟା ହିଦେଂ କାଜିଂ ଇନେରିଂ ହେୱାର୍‌ ଜପି ବାଚି କିତାନ୍‌ନ୍ନା, ଏଲେଙ୍ଗ୍‌ବାର୍ତି ପାର୍ତିନି ଆରି ବୁଦିକାର୍‌ୟା ଆଡ଼ିଏନ୍‌ ଇନେର୍‌ ।
“அப்படியானால் உண்மையும் ஞானமும் உள்ள வேலைக்காரன் யார்? அவனே தனது வீட்டில் உள்ள வேலைக்காரருக்கு ஏற்றவேளையில் உணவைக் கொடுக்கும்படி, எஜமான் பொறுப்பாக வைத்த வேலைக்காரன்.
46 ମାପ୍ରୁ ୱାଜ଼ି ଜାର୍‌ତି ଇମ୍‌ଣି ଆଡ଼ିଏନିଂ ହେ ଲାକେ କିଜ଼ି ମାନାକା ହୁଡ଼୍‍ନାନ୍, ହେୱାନ୍‌ ଦନ୍ୟ ।
தனது எஜமான் திரும்பி வரும்போது, அவ்வாறே செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
47 ଆନ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହାତ୍‌ପା ଇଞ୍ଜ୍‌ନାଙ୍ଗ୍‌, ହେୱାନ୍‌ ହେୱାନିଂ ଜାର୍‌ତି ୱିଜ଼ୁ ଦାନ୍‌ତିଙ୍ଗ୍ ଜପି ବାଚି କିଦ୍‌ନାନ୍‌ ।
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவன் தனது உடைமைகள் எல்லாவற்றிற்கும், அவனையே பொறுப்பாக வைப்பான்.
48 ମାତର୍‌ ଜଦି ହେ ବାନ୍ୟା ଆଡ଼ିଏନ୍‌ ନା ମାପ୍ରୁ ୱାନାକା ମାଲାଆନାତ୍‍ ଇଞ୍ଜି ମାନ୍‌ତ ମାନ୍‌ତ ଇଞ୍ଜି,
ஆனால் அந்த வேலைக்காரன் கொடியவனாய் இருந்து, ‘எனது எஜமான் நீண்ட காலமாய் தொலைவில் இருக்கிறார்’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு,
49 ଜାର୍‌ ହାଂ ହାଙ୍ଗ୍‌ଦାକାର୍‌ ଟ୍ରାକ୍‍ତେଂ ଲାଗାନାନ୍‌, ଆରେ ମଦୁୱାର୍‍ ହୁକେ ତିନାଉଣା କିତିସ୍‌,
தனது உடன்வேலைக்காரர்களை அடிக்கவும், குடிகாரருடன் சேர்ந்து சாப்பிட்டு, குடித்து, வெறிகொள்ளவும் தொடங்கினால்,
50 ତା ଆତିସ୍‌ ଇମ୍‌ଣି ଦିନ୍‌ ହଲ୍ୟା କାଜିଂ କାସି ମାନ୍‌ଗୁନ୍‌ ଆରି ଇମ୍‌ଣି ସମୁତ ହେୱାନ୍‌ ପୁନ୍‌ୱାଦାଂ ମାନାନ୍‌, ହେ ଦିନ୍‌ ଆରି ହେ ସମୁତ ହେୱାନ୍ତି ମାପ୍ରୁ ୱାନାନ୍,
அந்த வேலைக்காரனின் எஜமான் அவன் எதிர்பாராத ஒரு நாளிலும், அவன் அறிந்திராத வேளையிலும் வருவான்.
51 ଆରେ ହେୱାନ୍‌ ହେୱାନିଂ ଗାଣ୍ଡ୍ରା ଗାଣ୍ଡ୍ରା କିଜ଼ି ହଟ୍‌କାନାର୍‌ କାପ୍‌ଟିୟାର୍‌ ହୁକେ ତାଦାଙ୍ଗ୍‌ ବାଗ୍‌ ରଚ୍‌ନାନ୍‌; ହେବେ ଆଡ଼୍‌ବେଦେଂ ଆରି ଟାଡାଙ୍ଗ୍‌ ରେତିକିନାନ୍‍ ।”
எஜமான் வந்து அவனைப் பயங்கரமான தண்டனைக்குள்ளாக்கி, வேஷக்காரருக்குரிய இடத்தில் தள்ளிவிடுவான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும்.”

< ମାତିଉ 24 >