< ପକ୍ୟାତାକା 3 >
1 ଦିନେକ୍ ପାର୍ତାନାନି ସମାନ୍ ସମୁତ, ଇଚିସ୍ ମିକାହାରେସ୍ ତିନ୍ ଗଣ୍ଟା ୱେଡ଼ାଲିଂ, ପିତର୍ ଆରି ଜହନ୍ ମନ୍ଦିର୍ତ ହାଲ୍ଜି ମାଚାର୍ ।
ஒரு நாள் பேதுருவும், யோவானும் ஜெபநேரமாகிய பிற்பகல் மூன்றுமணியளவில் ஆலயத்திற்குப் போய்க்கொண்டிருந்தார்கள்.
2 ଏଲେଙ୍ଗ୍ ୱେଡ଼ାଲିଂ ଜଲମ୍ତାଂ ଚଟା ରୱାନ୍ ମାନାୟ୍ ପିଣ୍ତିୟା ଆଜ଼ି ହାଲ୍ଜି ମାଚାନ୍, ମନ୍ଦିର୍ତ ହଣାକାର୍ ମାନାୟାର୍ତାଂ ବିକ୍ୟା ଏନ୍ନି କାଜିଂ ଲକୁ ହେୱାନିଂ ନିତ୍ରେ ହେବେ ହଲ୍ନି ତର୍ ନି ଦୁୱେର୍ତ ଇଡ୍ବିସ୍ ମାଚାର୍ ।
அங்கே சிலர், பிறப்பிலேயே முடமான ஒருவனை, அலங்காரவாசல் என அழைக்கப்படும் ஆலய வாசலுக்குச் சுமந்துகொண்டு வந்தனர். ஆலய முற்றத்திற்குள் போகிறவர்களிடம் பிச்சை கேட்கும்படி ஒவ்வொரு நாளும் அவனை அங்கே வைப்பது வழக்கம்.
3 ହେୱାନ୍ ପିତର୍ ଆରି ଜହନ୍ତିଂ ମନ୍ଦିର୍ତ ହଣ୍ଡେଙ୍ଗ୍ ହାନିହିଂ ହୁଡ଼୍ଜି ଗୱାରି କିଜ଼ି ବିକ୍ ଏନ୍ତେଙ୍ଗ୍ ଲାଗାତାନ୍ ।
பேதுருவும் யோவானும் ஆலயத்திற்குள் போவதை அவன் கண்டபோது, அவன் அவர்களிடம் பிச்சை கேட்டான்.
4 ପିତର୍ ଆରି ଜହନ୍ତାଙ୍ଗ୍ ର ଲୟାତ ହୁଡ଼୍ତାର୍, ଆରେ ପିତର୍ ଇଚାନ୍, “ମା ନିପ ହୁଡ଼୍ଦା ।”
பேதுரு அவனை உற்றுப்பார்த்தான். யோவானும் அப்படியே அவனைப் பார்த்தான். பின்பு பேதுரு அவனிடம், “எங்களைப் பார்!” என்றான்.
5 ହେବେ ହେୱାନ୍ ହେୱାର୍ ତାଙ୍ଗ୍ ଅଲପ୍ ଗାଟାନି ଆହାତ ହେୱାର୍ ନିପ ହୁଡ଼୍ଜି ମାଚାନ୍ ।
அப்பொழுது அவன், அவர்களிடம் ஏதாவது பெற்றுக்கொள்ளலாம் என நினைத்து, தனது கவனத்தை அவர்கள் பக்கமாகத் திருப்பினான்.
6 ମତର୍ ପିତର୍ ଇଚାନ୍, “ରୁପା କି ହନା ନାଦାଂ ହିଲୁତ୍, ମତର୍ ନାଦାଂ ଇନାକା ମାନାତ୍, ହେଦାଂ ଆନ୍ ନିଂ ହିଦ୍ନାଙ୍ଗା, ନାଜରିତିୟ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ତର୍ଦ ତାଙ୍ଗା ।”
அப்பொழுது பேதுரு அவனிடம், “வெள்ளியும் தங்கமும் என்னிடம் இல்லை, ஆனால் என்னிடம் இருப்பதை நான் உனக்குத் தருகிறேன். நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட” என்றான்.
7 ଆରେ, ହେୱାନ୍ ତା ତିନା କେଇ ଆସ୍ତି ହେୱାନିଂ ନିକ୍ତାନ୍, ହେବେଣ୍ଡାଂ ଦାପ୍ରେ ହେୱାନ୍ତି ପାନା ଆରି କାଲ୍ନି ଗାଟିଂ ସବୁ ବାଡ଼୍କାସ୍ ଆତାନ୍,
பின்பு பேதுரு அவனது வலதுகையைப் பிடித்துத் தூக்கிவிட்டான். உடனே அவனது கால்களும், கணுக்கால்களும் பெலமடைந்தன.
8 ହେୱାନ୍ ତଗ୍ଜି ନିଲ୍ତାନ୍, ଆରେ, ତାଙ୍ଗ୍ଦେଂ ଲାଗାତାନ୍, ଆରେ ହେୱାନ୍ ତାଙ୍ଗୁ ତାଙ୍ଗୁ ଆରି ତଗ୍ଜି ତଗ୍ଜି, ଆରେ ଇସ୍ୱର୍ତିଂ ପାର୍ତାନା କିଉ କିଉ ହେୱାର୍ ହୁକେ ମନ୍ଦିର୍ତ ହଟାନ୍ ।
அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான். அதற்குப் பின்பு அவன் நடந்தும், துள்ளியும் இறைவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடன் ஆலய முற்றத்திற்குப் போனான்.
9 ହେବେ ମାନି ମାନାୟାର୍ ୱିଜ଼ାକାର୍ ହେୱାନିଂ ତାଂନାକା ଆରି ଇସ୍ୱର୍ତିଂ ଜୁୱାର୍ କିନାକା ହୁଡ଼୍ତାର୍;
அவன் நடப்பதையும், இறைவனைத் துதிப்பதையும் எல்லா மக்களும் கண்டபோது,
10 ଆରେ ଇମ୍ଣି ରୱାନ୍ ମନ୍ଦିର୍ନି ହଲ୍ନି ଦୁୱେର୍ ଲାଗେ କୁଚ୍ଚି ବିକ୍ ଏନ୍ଚି ମାଚାନ୍, ଇୱାନ୍ ହେ ଲକୁ ଇଞ୍ଜି ହେୱାର୍ ଚିନ୍କିତାର୍, ଆରେ ତାଙ୍ଗ୍ ଇନାକା ଗିଟାତାତ୍ନ୍ନା, ହେଦାଂ ହୁଡ଼୍ଜି ହେୱାର୍ ବେସି ବକ୍ୱା ଆରି କାବା ଆଜ଼ି ହାଚାର୍ ।
இவனே ஆலயத்தின் அலங்காரவாசல் என அழைக்கப்படும் வாசலருகே இருந்து பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவன் என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவனுக்கு நடந்ததைக்குறித்து அவர்கள் திகைத்து வியப்புற்றார்கள்.
11 ହେୱାନ୍ ପିତର୍ ଆରି ଜହନ୍ତିଂ ଆସ୍ତି ମାନି ୱେଡ଼ାଲିଂ ଲକୁ ୱିଜ଼ାକାର୍ ବେସି କାବା ଆଜ଼ି ସଲମନ୍ତି ମଣ୍ଡମ୍ତ ହୁଡ଼୍ଜି ହେୱାର୍ତି ଲାଗେ ରଚେ ହନ୍ଚି ୱାତାର୍ ।
அந்தப் பிச்சைக்காரன் பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், மக்கள் அனைவரும் வியப்படைந்தவர்களாய் சாலொமோனின் மண்டபம் என்று அழைக்கப்பட்ட இடத்திற்கு அவர்களிடம் ஓடிவந்தார்கள்.
12 ପିତର୍ ହେଦାଂ ହୁଡ଼୍ଜି ମାନାୟାରିଂ ଉତର୍ ହିତାନ୍, “ଏ ଇସ୍ରାଏଲିୟର୍ ଲକୁ, ଏପେଙ୍ଗ୍ ଇନେକିଦେଂ ଇ ମାନାୟ୍ ବିସ୍ରେ କାବା ଆନାଦେରା? କି ଆସେଙ୍ଗ୍ ଇନେସ୍ ଜାର୍ ସାକ୍ତି କି ଲବାୟ୍ ବାଡ଼୍କାସ୍ତାଂ ଇୱାନିଂ ତାଂଦେଂ ସାକ୍ତି ହିତାପ୍ନା, ହେଦାଂ ବାବି କିଜ଼ି ମା କାଜିଂ ଇନେକିଦେଂ ମାପ ହୁଡ଼୍ଦାନାଦେରା?
இதைப் பேதுரு கண்டபோது, அவன் அவர்களிடம்: “இஸ்ரயேலரே, நீங்கள் ஏன் இதைக்கண்டு அதிசயப்படுகிறீர்கள்? நாங்கள் சொந்த வல்லமையினாலோ, இறை பக்தியினாலோ இந்த மனிதனை நடக்கச் செய்தோமா? இல்லையே; அப்படியிருக்க, ஏன் எங்களை இப்படிப் பார்க்கிறீர்கள்?
13 ଅବ୍ରାହାମ୍, ଇସ୍ହାକ୍ ଆରି ଜାକୁବ୍ତି ଇସ୍ୱର୍, ମା” ବୁଡାର୍ତି ଇସ୍ୱର୍, ଜାର୍ ଆଡ଼ିଏନ୍ ଜିସୁଙ୍ଗ୍ ୱିଜ଼୍ୱି ଜାଜ୍ମାଲ୍ କିତାନ୍ନ୍ନା; ମାତର୍ ଏପେଙ୍ଗ୍ ହେୱାନିଂ ମୁଡ଼୍ ତାକେ ହେଲାୟ୍ କିନାଦେର୍ । ଏଲେଙ୍ଗ୍ କି ବିଚାର୍ କାର୍ୟା ହେୱାନିଂ ମୁକ୍ତି କିଦେଙ୍ଗ୍ ତିର୍ କିଜ଼ି ମାଚାନ୍ ପା ହେୱାନିଂ ପିଲାତ ମୁମ୍ଦ ପାର୍ତି କିୱାତାଦେର୍ ।
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் இறைவனான நமது தந்தையரின் இறைவன், தமது ஊழியரான இயேசுவை மகிமைப்படுத்தினார். நீங்களோ அவரைக் கொலை செய்யும்படி ஒப்புக்கொடுத்தீர்கள். பிலாத்து அவரை விடுதலைசெய்யத் தீர்மானித்தபோதுங்கூட, நீங்கள் அவனுக்கு முன்பாக அவரைப் புறக்கணித்தீர்கள்.
14 ଏପେଙ୍ଗ୍ ହେ ପୁଇପୁୟା ଆରି ଦାର୍ମି ଲଗାଂ ପାର୍ତି କିନାଦେର୍, ଆରେ ରୱାନ୍ ନାର୍ମାରୁଙ୍ଗ୍ ଇନେସ୍ ମି କାଜିଂ କେମା କିୟାନାତ୍, ଇଦାଂ ପାର୍ତାନା କିତାଦେର୍,
பரிசுத்தரும் நீதிமானுமாகிய அவரை நீங்கள் புறக்கணித்தீர்கள். ஆனால் ஒரு கொலைகாரனை உங்களுக்கு விடுதலை செய்யும்படி நீங்கள் கேட்டுக்கொண்டீர்கள்.
15 ମାତର୍ ଜିବୁନ୍ନି ହାଜ଼ି ଚଚ୍ନାକାନିଂ ଅସ୍ତାର୍, ହେୱାନିଂ ଇସ୍ୱର୍ ହାତାକାର୍ ବିତ୍ରେ ନିକ୍ତାନ୍ନା, ଆପେଂ ହେବେନି ସାକି ।
ஜீவனின் அதிபதியை நீங்கள் கொலைசெய்தீர்கள். ஆனால் இறைவனோ, இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். நாங்கள் இதற்குச் சாட்சிகளாய் இருக்கிறோம்.
16 ଆରେ, ହେୱାନ୍ତି ତର୍ଦ ପାର୍ତି କିତିଲେ ଇ ଇମ୍ଣି ମାନାୟ୍ତିଂ ଏପେଙ୍ଗ୍ ହୁଡ଼୍ନାଦେରା ଆରି ପୁଚାଦେର୍ଣ୍ଣା, ଇୱାନିଂ ଜିସୁ ତର୍ଦ ବାଡ଼୍କାସ୍ କିତାଂନ୍ନା; ଆଁ, ହେୱାନ୍ତି ହୁଦାଂ ହିତ୍ତି ପାର୍ତି ମି ୱିଜ଼ାକାର୍ ମୁମ୍ଦ ଇୱାନିଂ ପୁରା ଉଜ୍ କିତାଂନ୍ନା ।
இயேசுவின் பெயரிலுள்ள விசுவாசத்தினாலேயே நீங்கள் பார்த்து அறிந்த இவன் பெலனடைந்திருக்கிறான். இயேசுவின் பெயரும் அவர் மூலமாய் உண்டாகும் விசுவாசமுமே நீங்கள் அனைவரும் காண்கிறபடி இவனுக்கு இந்த முழுமையான சுகத்தைக் கொடுத்திருக்கிறது.
17 “ଆରେ ନଙ୍ଗ୍, ଏ ଇସ୍ରାଏଲ୍ ଟଣ୍ଡାର୍ ଆରି ତଣ୍ଦେକ୍, ମି ମୁଣିକାର୍ ଇନେସ୍, ଏପେଙ୍ଗ୍ ପା ହେ ଲାକେ ଗିୟାନ୍ହିଲ୍ୱି କାଜିଂ ଇଦାଂ କିତାଦେର୍ଣ୍ଣା ଇଞ୍ଜି ଆନ୍ ପୁନାଙ୍ଗ୍ ।
“சகோதரரே, நீங்களும் உங்கள் தலைவர்களும் உங்கள் அறியாமையினாலேயே இதைச் செய்தீர்களென்று எனக்குத் தெரியும்.
18 ମାତର୍ ଇସ୍ୱର୍ ଜାର୍ କ୍ରିସ୍ଟ ଦୁକ୍ବଗ୍ ବିସ୍ରେ ୱିଜ଼ାକାର୍ ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକାର୍ ୱେଇଦାଂ ଇନା ଇନାକା ପୁର୍ବେତାଂ ସୁଣାୟ୍ କିଜ଼ି ମାଚାର୍, ହେ ସବୁ ହେୱାନ୍ ଇ ବାନି ପୁରା କିତାନ୍ନ୍ନା ।
ஆனாலும், இறைவன் எல்லா இறைவாக்கினர் மூலமாகவும், முன்னறிவித்ததை இவ்விதமாகவே நிறைவேற்றினார். தமது கிறிஸ்து துன்பங்களை அனுபவிப்பார் என்று அவர் சொல்லியிருந்தாரே.
19 ଲାଗିଂ, ଇନେସ୍ ମିଦାଂ ପାପ୍ କେମା ଆନାତ୍, ଇଦାଂ କାଜିଂ ମାନ୍ବାଦ୍ଲାୟ୍ କିଜ଼ି ଇସ୍ୱର୍ ନିପ ମାଜ଼୍ଦି ୱାଡୁ,
ஆகவே, மனமாற்றமடைந்து இறைவனிடம் திரும்புங்கள். அப்பொழுது உங்கள் பாவங்கள் கழுவப்படும். கர்த்தரிடத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் உங்களுக்கு வரும்.
20 ତା ଆତିସ୍ ମାପ୍ରୁତି ଲାଗାଂ ସୁସ୍ତାନି ସମୁ ଇକାୱାନାତ୍; ଆରେ, ମି କାଜିଂ ଆରେନିଂତି କ୍ରିସ୍ଟଙ୍ଗ୍, ଇଚିସ୍ ଜିସୁଙ୍ଗ୍ ହେୱାନ୍ ପକ୍ତାନାନ୍ ।
இறைவன் உங்களுக்காக ஏற்படுத்திய கிறிஸ்துவாகிய இயேசுவையும் அனுப்புவார்.
21 ୱିଜ଼ୁ ବିସ୍ରେ ଆରେ କିଦେଙ୍ଗ୍ ଇମ୍ଣି ସମୁନି କାତା ବେସି ପ୍ଡାଡ଼୍ନିକାଡ଼୍ଦାଂ ଇସ୍ୱର୍ ଜାର୍ ପୁଇପୁୟା ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକାର୍ ୱେଇ ହୁଦାଂ ୱେଚ୍ଚାନ୍ନା, ହେ ସମୁ ଏକାୱାୱି ପାତେକ୍ ହେୱାନିଂ ହାତେ ବାଦାଡ଼୍ତ ଇଟ୍ୟା ଆଦେଂ ଆନାତ୍ । (aiōn )
இறைவன் தமது பரிசுத்த இறைவாக்கினர்மூலம், வெகுகாலத்திற்கு முன்பே வாக்குப்பண்ணியபடி, அவர் எல்லாவற்றையும் புதுப்பிப்பார். அந்தக் காலம் வரும்வரை, கிறிஸ்து பரலோகத்தில் இருக்கவேண்டும். (aiōn )
22 ଇ ବିସ୍ରେ ମସା ଇଞ୍ଜି ମାଚାନ୍, ମି ମାପ୍ରୁ ଇସ୍ୱର୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଟଣ୍ଡାର୍ ବିତ୍ରେ ନା ଲାକେ ରୱାନ୍ ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକାର୍ ପକ୍ତାନାନ୍ । ହେୱାନ୍ ଜାର୍ ମାନାୟାରିଂ ବିତ୍ରେତାଂ ରୱାନ୍ ଆନାନ୍ ହେୱାନ୍ ମିଙ୍ଗ୍ ଇନାକା ୱେଚ୍ଚାନାନ୍, ହେ ସବୁ ବିସ୍ରେ ଏପେଙ୍ଗ୍ ପାଲି କିନି ଲଡ଼ା ।
ஏனெனில் மோசே, ‘உங்கள் இறைவனாகிய கர்த்தர் என்னைப்போன்ற ஒரு இறைவாக்கினரை, உங்கள் சொந்த மக்கள் மத்தியிலிருந்து எழுப்புவார்; அந்த இறைவாக்கினர் சொல்வது எல்லாவற்றையும் நீங்கள் கேட்கவேண்டும்.
23 ମାତର୍ ଏଲେଙ୍ଗ୍ ଗିଟାନାତ୍ ଜେ, ଇମ୍ଣି ୱାସ୍କି ହେ ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକାର୍ ବଚନ୍ ୱେନୁନ୍, ଇସ୍ୱର୍ତି ମାନାୟାର୍ ବିତ୍ରେ ନସ୍ଟ ଆନାନ୍ ।
அவர் சொல்வதைக் கேட்காத எவனும், தன் மக்கள் மத்தியில் இருந்து முற்றுமாய் நீக்கப்படுவான்’ என்று சொல்லியிருக்கிறானே.
24 ଆଁ, ସାମୁୟେଲ୍ ଆରି ହେୱାନ୍ତି ପାଚେନି ସମୁତାଂ ଏଚେକ୍ ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକାର୍ କାତା ଇଚାର୍ଣ୍ଣା, ହେୱାର୍, ୱିଜ଼ାକାର୍ ପା ଇ କାଡ଼୍ ବିସ୍ରେ ବେଣ୍ କିତାର୍ଣ୍ଣା ।
“சாமுயேல் தொடங்கி, அவனுக்குப்பின் வந்த எல்லா இறைவாக்கினரும், இந்த நாட்களையே முன்னறிவித்தார்கள்.
25 ଏପେଙ୍ଗ୍ ହେ ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକାର୍ ହିମ୍ଣାଂ, ଆରେ ମି ଲାତ୍ରା ହୁକେ ପୁର୍ତିନି ୱିଜ଼ୁ କୁଟୁମ୍ ଆସିର୍ବାଦ୍ ପାୟାନାର୍, ଇ ବଚନ୍ ଇସ୍ୱର୍ ଅବ୍ରାହାମ୍ତି ଇଞ୍ଜି ମି ବୁଡ଼ାଲୁର୍ ହୁକେ ଇମ୍ଣି ନିୟମ୍ ରଚ୍ଚି ମାଚାନ୍, ଏପେଙ୍ଗ୍ ହେ ନିୟମ୍ନି ହିମ୍ଣାକାଦେର୍ ।
நீங்களே இறைவாக்கினருக்கும், உங்கள் தந்தையருடன் இறைவன் ஏற்படுத்திய உடன்படிக்கைக்கும் உரிமையாளர்கள். ஏனெனில் இறைவன் ஆபிரகாமிடம், ‘உனது சந்ததியின் மூலமாக, பூமியிலுள்ள மக்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்படுவார்கள்’ என்று சொன்னாரே.
26 ଇସ୍ୱର୍ ପର୍ତୁମ୍ ମି କାଜିଂ ଜାର୍ ହେ ଆଡ଼ିଏନ୍ନିଂ ବାଚି କିତାନ୍, ୱିଜ଼ାରିଂ ବାନ୍ୟା ହାଜ଼ିତାଂ ମାସ୍ନି ଆସିର୍ବାଦ୍ ହିନାନ୍ ଇଞ୍ଜି ପକ୍ତାନ୍ ।”
எனவே, இறைவன் தமது ஊழியக்காரனான இயேசுவை உயிருடன் எழுப்பியபோது, உங்கள் ஒவ்வொருவரையும் உங்கள் பொல்லாத வழிகளிலிருந்து திருப்பி ஆசீர்வதிக்கும்படி, முதன்முதலாக அவரை உங்களிடம் அனுப்பினார் என்றான்.”