< Salmenes 120 >
1 En sang ved festreisene. Til Herren ropte jeg i min nød, og han svarte mig.
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். நான் என் துன்பத்தில் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறேன்; அவர் எனக்குப் பதிலளிக்கிறார்.
2 Herre, fri min sjel fra en løgnaktig lebe, fra en falsk tunge!
யெகோவாவே, பொய்ப் பேசுகிற உதடுகளிலிருந்தும், வஞ்சக நாவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றும்.
3 Hvad vil han gi dig, og hvad mere vil han gi dig, du falske tunge?
வஞ்சக நாவே, இறைவன் உனக்குச் செய்யப்போவது என்ன? அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்?
4 Voldsmannens skarpe piler og glør av gyvelbusken.
போர்வீரனின் கூர்மையான அம்புகளினாலும், சூரைச்செடிகளை எரிக்கும் நெருப்புத் தழல்களினாலும் அவர் உன்னைத் தண்டிப்பார்.
5 Ve mig, at jeg lever som fremmed iblandt Mesek, at jeg bor ved Kedars telt!
ஐயோ, எனக்குக் கேடு! நான் மேசேக்கிலே வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் குடியிருக்கிறேனே; கேதாரின் கூடாரங்களில் வாழ்கிறேனே!
6 Lenge nok har min sjel bodd hos dem som hater fred.
சமாதானத்தை வெறுக்கிறவர்கள் மத்தியில் நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று.
7 Jeg er bare fred, men når jeg taler, er de ferdige til krig.
நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்தையே தேடுகிறார்கள்.