< UJohane 10 >
1 Ngiqinisile, ngiqinisile, ngithi kini: Ongangeni ngesango esibayeni sezimvu, kodwa akhwele kwenye indawo, lowo ulisela lomphangi;
இயேசு மேலும் சொன்னதாவது: “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஆட்டுத் தொழுவத்தினுள்ளே ஒருவன் வாசல் வழியாய் உள்ளே போகாமல் வேறு வழியாய் ஏறி உள்ளே வருகிறவன், அவன் கள்வனும் கொள்ளைக்காரனுமாய் இருப்பான்.
2 kodwa ongena ngesango ungumelusi wezimvu.
வாசல் வழியாய் உள்ளே போகிறவனே ஆடுகளின் மேய்ப்பனாய் இருக்கிறான்.
3 Umlindi wesango uyamvulela, lezimvu ziyalizwa ilizwi lakhe, njalo uyazibiza ezakhe izimvu ngamabizo, azikhokhelele phandle.
காவலாளி அவனுக்கு வாசல் கதவைத் திறந்து விடுகிறான். ஆடுகளும் அவனுடைய குரலுக்குச் செவிகொடுக்கின்றன. அவன் தன்னுடைய ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வழிநடத்திச் செல்கிறான்.
4 Nxa esezikhuphile ezakhe izimvu, uhamba phambi kwazo; lezimvu zimlandele, ngoba ziyalazi ilizwi lakhe.
அவன் தனக்குச் சொந்தமான எல்லா ஆடுகளையும் தொழுவத்திற்கு வெளியே கொண்டுவந்து விட்டபின்பு, அவைகளுக்கு முன்னாக நடந்து செல்கிறான். அவனுடைய ஆடுகளும் அவனுடைய குரலை அறிந்திருப்பதால், அவை அவனுக்குப்பின் செல்கின்றன.
5 Kodwa owemzini kazisoze zimlandele, kodwa zizambalekela; ngoba kazilazi ilizwi labemzini.
ஆடுகள் ஒருபோதும் அறியாத ஒருவனைப் பின்பற்றிச் செல்லமாட்டாது; ஒரு அவனுடைய குரலை அவை இன்னாருடைய குரல் என்று அறியாதபடியால், அவை அவனைவிட்டு ஓடிப்போகும்” என்றார்.
6 UJesu wakhuluma lumfanekiso kubo; kodwa bona kabaqedisisanga ukuthi ziyini izinto azitshoyo kubo.
இயேசு இதை உவமையாக பேசி அவர்களுக்குச் சொன்னபோது, இயேசு தங்களுக்கு என்ன சொல்கிறார் என்று அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
7 Ngakho uJesu waphinda wathi kubo: Ngiqinisile, ngiqinisile, ngithi kini: Mina ngilisango lezimvu;
எனவே இயேசு மீண்டும் அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், ஆடுகளுக்கு வாசல் நானே.
8 bonke abake bafika phambi kwami bangamasela labaphangi; kodwa izimvu kazibezwanga.
எனக்கு முன்னே வந்த எல்லோரும் கள்வரும் கொள்ளைக்காரருமாய் இருக்கிறார்கள். ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.
9 Mina ngilisango; uba umuntu engena ngami, uzasindiswa, angene aphume, athole idlelo.
நானே வாசல்; என் வழியாய் உள்ளே போகிறவர்கள் யாரோ அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அவர்கள் சுதந்திரமாய் உள்ளே வந்து வெளியே போய், தமக்குரிய மேய்ச்சலைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
10 Isela kalizi ngaphandle kokuzakweba lokubulala lokubhubhisa; mina ngizile ukuze babe lempilo, babe layo iphuphume.
திருடனோ திருடவும் கொல்லவும் அழிக்கவுமே வருகிறான்; நானோ அவர்கள் ஜீவனை அடையும்படியாக வந்திருக்கிறேன். அவர்கள் அந்த ஜீவனை நிறைவாய் பெற்றுக்கொள்ளும்படியாகவே வந்தேன்.
11 Mina ngingumelusi olungileyo. Umelusi olungileyo uzibekela phansi izimvu impilo yakhe.
“நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுக்கிறான்.
12 Kodwa oqhatshiweyo, engesuye umelusi, izimvu zingesizo ezakhe, ubona impisi isiza, atshiye izimvu, abaleke; kuthi impisi izibambe, izichithachithe izimvu.
கூலிக்காரனோ ஆடுகளின் உரிமையுள்ள மேய்ப்பன் அல்ல. எனவே அவன் ஓநாய் வருகிறதைக் காண்கிறபோது, ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போகிறான். அப்பொழுது ஓநாய் மந்தையைத் தாக்கி, அதைச் சிதறடிக்கிறது.
13 Oqhatshiweyo uyabaleka-ke, ngoba engoqhatshiweyo, njalo engazikhathaleli izimvu.
கூலிக்காரனோ தான் கூலிக்காரனாக இருப்பதால், ஆடுகளைக் குறித்து அக்கறை இல்லாமல் அவன் ஓடிப்போகிறான்.
14 Mina ngingumelusi olungileyo, ngiyazazi ezami, ngiyaziwa ngezami,
“நானே நல்ல மேய்ப்பன்; நான் என் ஆடுகளையும் என்னுடைய ஆடுகள் என்னையும் அறிந்திருக்கின்றன.
15 njengalokhu uBaba engazi, lami ngiyamazi uBaba; ngizibekela phansi izimvu impilo yami.
பிதா என்னை அறிந்திருக்கிறதுபோல நானும் பிதாவை அறிந்திருக்கிறேன், ஆகையால் நான் ஆடுகளுக்காக என் உயிரையும் கொடுக்கிறேன்.
16 Njalo ngilezinye izimvu, ezingesizo zalesisibaya; lazo kumele ngizilethe, njalo zizakuzwa ilizwi lami; njalo kube mhlambi munye, melusi munye.
இந்தத் தொழுவத்திற்குள் இராத வேறு ஆடுகளும் எனக்கு உண்டு. அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும். அவைகளும் என்னுடைய குரலுக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாய் இருக்கும்.
17 Ngenxa yalokhu uBaba uyangithanda, ngoba mina ngibeka phansi impilo yami, ukuze ngibuye ngiyithathe.
நான் என் உயிரைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். நான் அதைத் திரும்பவும் பெற்றுக் கொள்வேன்.
18 Kakho ongemuka yona, kodwa mina ngiyibeka phansi ngokwami. Ngilamandla okuyibeka phansi, njalo ngilamandla okubuya ngiyithathe. Lumlayo ngiwemukele kuBaba.
என் உயிரை ஒருவரும் என்னிடத்திலிருந்து பறித்துக் கொள்வதில்லை. என் சுயவிருப்பத்தின்படியே நான் என் உயிரைக் கொடுக்கிறேன். அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்த கட்டளையை நான் என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன்” என்றார்.
19 Ngakho kwaba khona futhi ukwehlukana phakathi kwamaJuda ngenxa yalamazwi.
இந்த வார்த்தைகளை யூதர்கள் கேட்டபோது, அவர்களிடையே மீண்டும் பிரிவினை ஏற்பட்டது.
20 Labanengi bawo bathi: Uledimoni futhi uyahlanya; limlalelelani?
அவர்களில் பலர், “இவனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது, பைத்தியமும் பிடித்துவிட்டது, இவன் பேச்சை ஏன் கேட்கிறீர்கள்?” என்றார்கள்.
21 Amanye athi: Lamazwi kawasiwo wongenwe lidimoni; kambe idimoni lingavula amehlo eziphofu yini?
மற்றவர்களோ, “இவை பிசாசு பிடித்தவனுடைய வார்த்தைகள் அல்லவே. பார்வையற்றவனுடைய கண்களைப் பிசாசினால் திறக்க முடியுமோ?” என்றார்கள்.
22 Kwakukhona umkhosi wokuvuselela eJerusalema, kwakusebusika;
எருசலேமிலே ஆலயத்தின் அர்ப்பணிப்புப் பண்டிகை நடந்தது. அது குளிர்க்காலமாயிருந்தது.
23 uJesu wasehambahamba ethempelini ekhulusini likaSolomoni.
இயேசு ஆலயப் பகுதியில் சாலொமோன் மண்டபத்தில் உலாவிக்கொண்டிருந்தார்.
24 AmaJuda asemhanqa, athi kuye: Koze kube nini usilibazisa? Uba wena unguKristu, sitshele ngokucacileyo.
அப்பொழுது யூதர்கள் இயேசுவைச் சூழ்ந்துகொண்டு, “நீர் எவ்வளவு காலத்துக்கு எங்களைச் சந்தேகப்படவைப்பீர்? நீர் கிறிஸ்துவானால் அதை எங்களுக்குத் தெளிவாகச் சொல்லும்” என்றார்கள்.
25 UJesu wawaphendula wathi: Ngalitshela, kodwa kalikholwanga; imisebenzi mina engiyenza ebizweni likaBaba, yiyo engifakazelayo;
அதற்கு இயேசு, “நான் உங்களுக்குச் சொன்னேன். ஆனால் நீங்கள் விசுவாசிக்கவில்லை. என் பிதாவின் பெயரினால் நான் செய்கிற கிரியைகளே என்னைக் குறித்துப் பேசுகின்றன.
26 kodwa lina kalikholwa; ngoba kalisibo abezimvu zami, njengokutsho kwami kini.
ஆனால், நீங்கள் என்னுடைய ஆடுகளாய் இராதபடியால், விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்.
27 Izimvu zami ziyalizwa ilizwi lami, lami ngiyazazi, futhi ziyangilandela;
என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிகொடுக்கின்றன. நான் அவைகளை அறிந்திருக்கிறேன். அவைகள் என்னைப் பின்பற்றுகின்றன.
28 njalo mina ngizinika impilo elaphakade; futhi kazisoze zabhubha laphakade, njalo kungekho ozazihluthuna esandleni sami. (aiōn , aiōnios )
நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவை ஒருபோதும் அழிந்து போவதில்லை. ஒருவராலும் அவைகளை என்னுடைய கைகளிலிருந்து பறித்துக்கொள்ள முடியாது. (aiōn , aiōnios )
29 UBaba ozinike mina, mkhulu kulabo bonke; kungekho njalo ongazihluthuna esandleni sikaBaba.
அவைகளை எனக்குக் கொடுத்த என்னுடைய பிதா, எல்லோரைப் பார்க்கிலும் மிகவும் பெரியவர்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து ஒருவராலும் பறித்துக்கொள்ள முடியாது.
நானும் பிதாவும் ஒன்றே” என்றார்.
31 Ngakho amaJuda aphinda athatha amatshe ukuze amkhande ngawo.
அப்பொழுது யூதத்தலைவர்கள் இயேசுவின்மேல் எறியும்படி மீண்டும் கற்களை எடுத்துக்கொண்டார்கள்.
32 UJesu wawaphendula wathi: Ngilitshengise imisebenzi eminengi emihle evela kuBaba; yiwuphi umsebenzi kuyo elingikhandela wona ngamatshe?
ஆனால் இயேசுவோ அவர்களிடம், “என் பிதாவினிடத்தில் இருந்து பல நற்கிரியைகளை நான் உங்களுக்குக் காண்பித்தேன். இவைகளில் எதினிமித்தம் நீங்கள் என்மேல் கல்லெறிகிறீர்கள்?” என்று கேட்டார்.
33 AmaJuda amphendula athi: Kasikukhandi ngamatshe ngenxa yomsebenzi omuhle, kodwa ngenxa yenhlamba, langokuthi wena ungumuntu uzenza uNkulunkulu.
அதற்கு யூதர்கள், “நற்செயலினால் நாங்கள் உன்மேல் கல்லெறியவில்லை. ஆனால் ஒரு சாதாரண மனிதனாகிய நீ, உன்னைக் கடவுள் என்று சொல்லிக்கொள்கிறாயே. அவ்விதம் நீ இறைவனை நிந்தித்துப் பேசியதற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம்” என்றார்கள்.
34 UJesu wawaphendula wathi: Kakulotshiwe yini emlayweni wenu ukuthi: Mina ngathi: Lingonkulunkulu?
“உங்கள் சட்டத்தில், ‘நீங்கள் “தெய்வங்களாய்” இருக்கிறீர்கள்’ என்று எழுதியிருக்கவில்லையா? என இயேசு அவர்களிடம் கேட்டார்.
35 Uba wababiza bona ngokuthi ngonkulunkulu, eleza kubo ilizwi likaNkulunkulu, njalo umbhalo ungephulwe,
இறைவனுடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டவர்களை அவர், ‘கடவுள்கள்’ என்று சொல்லியிருக்கிறாரே. வேதவசனமும் தவறாக இருக்கமுடியாதே.
36 lowo uBaba amehlukanisileyo wamthuma emhlabeni, kanti lina lithi: Uyahlambaza, ngoba ngithe: NgiyiNdodana kaNkulunkulu?
அப்படியானால் பிதாவினால் தனக்கென வேறுபிரித்து இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டவரைக் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் என்னை, ‘இறைவனுடைய மகன்’ என்று சொன்னதால், நான் இறைவனை நிந்திக்கிறேன் என்று நீங்கள் எப்படி என்னில் குற்றம் காணலாம்?
37 Uba ngingenzi imisebenzi kaBaba, kalingakholwa kimi.
நான் என் பிதாவுக்குரியவற்றைச் செய்யாவிட்டால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டாம்.
38 Kodwa uba ngiyenza, lanxa lingakholwa kimi, kholwani imisebenzi; ukuze lazi likholwe ukuthi uBaba ukimi, lami ngikuye.
ஆனால் அவைகளை நான் செய்தால், நீங்கள் என்னை விசுவாசிக்காவிட்டாலும் கூட கிரியைகளையாவது விசுவாசியுங்கள். அப்பொழுது பிதா என்னில் இருக்கிறார் என்பதையும், நான் பிதாவில் இருக்கிறேன் என்பதையும் நீங்கள் அறிந்து விளங்கிக்கொள்வீர்கள்” என்றார்.
39 Ngakho adinga futhi ukumbamba; kodwa waphunyuka esandleni sabo.
எனவே அவர்கள் மீண்டும் இயேசுவைக் கைதுசெய்ய முயன்றார்கள். ஆனால் அவரோ அவர்களுடைய பிடியில் அகப்படாமல் தப்பிப்போய்விட்டார்.
40 Wasebuya wasuka waya ngaphetsheya kweJordani kundawo lapho uJohane ayebhabhathiza khona kuqala; wasehlala khona.
பின்பு இயேசு மீண்டும் யோர்தானைக் கடந்து ஆரம்ப நாட்களிலே யோவான் திருமுழுக்கு கொடுத்துக்கொண்டிருந்த இடத்திற்கு போய், அங்கே தங்கினார்.
41 Labanengi beza kuye, bathi: UJohane kenzanga sibonakaliso; kodwa konke uJohane akutsho ngalo, kwakuliqiniso.
அநேகர் அவரிடத்தில் வந்து. அவர்கள் அவரிடம், “யோவான் ஒருபோதும் ஒரு அடையாளத்தையும் செய்யவில்லை. ஆனாலும் இவரைக்குறித்து யோவான் சொன்னவை எல்லாம் உண்மையாய் இருக்கிறது” என்றார்கள்.
42 Abanengi basebekholwa kuye lapho.
அவ்விடத்திலே அநேகர் இயேசுவில் விசுவாசம் வைத்தார்கள்.