< UZekhariya 11 >

1 Vula iminyango yakho, wena Lebhanoni, ukuze umlilo uqhunqise imisedari yakho!
லெபனோனே, நெருப்பு உன் கேதுரு மரங்களை எரிக்கும்படி உன் கதவுகளைத் திற.
2 Lila, wena sihlahla sephayini, ngoba imisedari isiwile; ngoba izihlahla zobukhosi ziqhunqile! Lilani, mi-okhi yaseBhashani; igusu elivitshileyo selicakazelwe phansi!
தேவதாரு மரங்களே, புலம்பி அழுங்கள். கேதுரு மரங்கள் வீழ்ந்தன; சிறந்த மரங்கள் அழிக்கப்பட்டன. பாசானின் கர்வாலி மரங்களே, புலம்பியழுங்கள். ஏனெனில் அடர்ந்த காடு வெட்டி வீழ்த்தப்பட்டது.
3 Lalela ukulila kwabelusi; amadlelo abo amahle asetshabalalisiwe! Lalela ukubhonga kwezilwane; ihlathi elihle leJodani liqhunqile!
மேய்ப்பரின் புலம்பலைக் கேளுங்கள். அவர்களின் செழிப்பான பசும்புல் தரை அழிக்கப்பட்டது; சிங்கங்களின் கர்ச்சனையைக் கேளுங்கள். யோர்தானின் அடர்ந்த புதர் அழிந்திருக்கிறது.
4 Nanku okutshiwo nguThixo uNkulunkulu wami, uthi: “Sana emadlelweni umhlambi wezimvu zokuhlatshwa.
என் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: “வெட்டுவதற்குக் குறிக்கப்பட்டிருக்கும் மந்தையை மேய்ப்பாயாக.
5 Abathengi bazo bayazihlaba bangajeziswa. Labo abazithengisayo bathi, ‘Makadunyiswe uThixo, senginothile!’ Abelusi bazo ngokwabo labo kabaziyekeli.
அவைகளை வாங்குகிறவர்களோ அவைகளைக் கொலைசெய்கிறார்கள். ஆனால் அவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பித்துக்கொள்கிறார்கள். அவைகளை விற்கிறவர்களோ, ‘யெகோவாவுக்குத் துதி; நான் செல்வந்தன்’ என்று சொல்கிறார்கள். அவைகளின் சொந்த மேய்ப்பர்களோ, அவைகளைக் காத்துக்கொள்ளவில்லையே.
6 Ngoba kangisayikuba lozwelo ebantwini belizwe,” kutsho uThixo. “Ngulowo lalowo ngizamnikela kumakhelwane wakhe lenkosini yakhe. Bazalincindezela ilizwe, kodwa kangiyikubalamulela ezandleni zabo.”
அதுபோல இந்நாட்டு மக்கள்மேல் இனி ஒருபோதும் நான் இரக்கங்காட்டமாட்டேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்கள் ஒவ்வொருவனையும், அவன் அயலானின் கைகளிலும் அரசனின் கைகளிலும், நான் ஒப்படைப்பேன். அவர்கள் நாட்டை ஒடுக்குவார்கள். நான் அவர்களின் கைகளிலிருந்து இவர்களைத் தப்புவிக்க மாட்டேன்.”
7 Ngakho ngizafaka emadlelweni izimvu ezasezikhethelwe ukuya esilaheni, ikakhulu lezo ezaziphathwa kabuhlungu. Ngasengithatha ingwegwe ezimbili ngabiza enye ngokuthi nguThandeka kwathi enye ngathi nguNhlanganiso, ngasengizelusa izimvu.
எனவே வெட்டப்படுவதற்கென குறிக்கப்பட்ட மந்தையை நான் மேய்த்தேன். முக்கியமாக மந்தையில் ஒடுக்கப்பட்டதை நான் பராமரித்தேன். அப்பொழுது மேய்ப்பனின் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிக்கு தயவு என்றும், மற்றொன்றிற்கு ஐக்கியம் என்றும் பெயரிட்டேன். நான் மந்தைகளை அவற்றால் மேய்த்தேன்.
8 Ngenyanga eyodwa ngaxotsha abelusi abathathu. Izimvu zanengeka ngami, lami zangidina
ஒரே மாதத்தில் மூன்று பயனற்ற மேய்ப்பர்களை அகற்றினேன். ஆனால் அந்த மந்தையும் என்னை அருவருத்தது. நானும் அவற்றைக்குறித்து சலிப்படைந்தேன்.
9 ngathi, “Kangisayikuba ngumelusi wenu. Yekela efayo ife, lebhubhayo ibhubhe. Yekela lezo eziseleyo zidlane inyama yazo.”
நான் அவர்களிடம், “நான் உங்கள் மேய்ப்பனாயிருக்க மாட்டேன். சாகிறது சாகட்டும், அழிகிறது அழியட்டும். மீதியாயிருப்பவை ஒன்றின் மாமிசத்தை மற்றொன்று தின்னட்டும் என்றேன்.”
10 Ngasengithatha ingwegwe yami ethiwa nguThandeka ngayephula, ngidiliza isivumelwano engangisenzile lezizwe zonke.
அப்பொழுது நான் தயவு என்கிற என் கோலை எடுத்து முறித்துப் போட்டேன், அதனால் இறைவன் எல்லா நாடுகளுடனும் செய்துகொண்ட உடன்படிக்கையை இல்லாமல் செய்துவிட்டார் என்பது தெரிந்தது.
11 Sadilizwa ngalelolanga, yikho abadubekayo emhlambini ababengikhangele bakwazi ukuthi lokho kwakulilizwi likaThixo.
அந்த நாளிலே அது தள்ளுபடியாயிற்று, எனவே என்னைக் கவனித்துக் கொண்டிருந்த மந்தையில் பாதிக்கப்பட்டவர்கள், இது யெகோவாவின் வார்த்தை என்பதை அறிந்துகொண்டார்கள்.
12 Ngabatshela ngathi, “Nxa libona kufanele, ngiphani iholo lami; nxa njalo kungenjalo, yekelani.” Yikho basebengiholisa inhlamvu zesiliva ezingamatshumi amathathu.
அப்பொழுது நான் அவர்களிடம், “அது நல்லது என நீங்கள் கருதினால் எனது கூலியைக் கொடுங்கள்; இல்லையெனில், வைத்திருங்கள் என்றேன்.” அப்பொழுது அவர்கள் எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசைக் கொடுத்தார்கள்.
13 UThixo wasesithi kimi, “Iphosele kumbumbi,” imali engaka ababengilinganisele yona! Ngasengizithatha lezonhlamvu zesiliva ezingamatshumi amathathu ngaziphosela kumbumbi wembiza endlini kaThixo.
அதன்பின் யெகோவா என்னிடம், “அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு” இதுவே எனக்கென அவர்கள் மதிப்பிட்ட மேன்மையான விலை! என்று சொன்னார். அவ்வாறே நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து யெகோவாவின் ஆலயத்திலிருந்த குயவனிடத்தில் எறிந்துவிட்டேன்.
14 Ngasengiqamula ingwegwe yami yesibili ethiwa nguNhlanganiso, ngiqamula ubuzalwane phakathi kukaJuda lo-Israyeli.
பின்பு நான் ஐக்கியம் என்னும் எனது இரண்டாவது கோலையும் முறித்துப் போட்டேன். அப்படியே யூதாவுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையிலுள்ள ஐக்கியத்தையும் குலைத்துவிட்டேன்.
15 UThixo wasesithi kimi, “Thatha futhi izikhali zomelusi oyisithutha.
அதன்பின் யெகோவா எனக்குக் கூறியது இதுவே, “மறுபடியும் நீ மதியற்ற ஒரு மேய்ப்பனுக்குரிய கருவிகளை எடுத்துக்கொள்.
16 Ngoba ngizamisa umelusi welizwe leli ongezukunanza ngezilahlekileyo, angawadingi amazinyane, angawelaphi alimeleyo, angawaphi ukudla aphilayo, kodwa adle inyama yezinonileyo, adlithize lamangqina azo.
ஏனெனில் இதோ பார்! நான் இந்த நாட்டின்மேல் ஒரு மேய்ப்பனை எழும்பப் பண்ணுவேன். அவன் காணாமல் போவதைக் கவனிக்கவோ, குட்டிகளைத் தேடவோ, காயமுற்றதைக் குணமாக்கவோ, நலமானவற்றிற்கு உணவளித்துப் பராமரிக்கவோமாட்டான். ஆனால் கொழுத்த ஆடுகளின் குளம்புகளைக் கிழித்து அதன் இறைச்சியைத் தின்பான்.
17 Maye kumelusi oyisithutha, ohlamukela izifuyo! Sengathi angadliwa yinkemba igalele engalweni lelihlweni lakhe lakwesokunene! Sengathi ingalo yakhe ingahle yome qha, ilihlo lakhe langakwesokunene lihle life kokuphela!”
“மந்தையைக் கைவிடுகிற பயனற்ற மேய்ப்பனுக்கு ஐயோ கேடு, அவனுடைய புயத்தையும், வலது கண்ணையும் வாள் தாக்கட்டும். அவனுடைய புயம் முழுவதும் சூம்பிப் போகட்டும். அவனுடைய வலது கண் முற்றிலும் குருடாகட்டும்!”

< UZekhariya 11 >