< Amahubo 33 >

1 Hlabelelani kuThixo ngentokozo, lina balungileyo; kubafanele abaqotho ukumdumisa.
நீதிமான்களே, நீங்கள் மகிழ்ச்சியுடன் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள்; அவரைத் துதிப்பது நேர்மையுள்ளவர்களுக்குத் தகுதியானது.
2 Dumisani uThixo ngechacho; mhlabeleleni ngesiginci sezintambo ezilitshumi.
யாழ் இசைத்து யெகோவாவைத் துதியுங்கள்; பத்து நரம்பு வீணையினால் அவருக்கு இசை பாடுங்கள்.
3 Mhlabeleleni ingoma entsha; tshayani kamnandi lihlokome ngentokozo.
அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; திறமையாக இசைத்து மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரியுங்கள்.
4 Ngoba ilizwi likaThixo lilungile, liqinisile; uthembekile kukho konke akwenzayo.
யெகோவாவினுடைய வார்த்தை சத்தியமும், அவருடைய செயல்களெல்லாம் உண்மையானதுமாய் இருக்கிறது.
5 UThixo uthanda ukulunga lokwahlulela okuqondileyo; umhlaba ugcwele uthando lwakhe olungaphuthiyo.
யெகோவா நீதியையும் நியாயத்தையும் விரும்புகிறார்; பூமி முழுவதுமே அவருடைய உடன்படிக்கையின் அன்பினால் நிறைந்திருக்கிறது.
6 Ngelizwi likaThixo amazulu enziwa, ubunkanyankanya bezinkanyezi ngomoya womlomo wakhe.
யெகோவாவினுடைய வார்த்தையினாலே வானங்கள் படைக்கப்பட்டன, அவருடைய வாயின் சுவாசத்தினால் வான்கோள்கள் யாவும் படைக்கப்பட்டன.
7 Uyawaqoqa amanzi olwandle awathele enkonxeni; athululele inziki zolwandle eziphaleni.
அவர் கடல்நீரைச் ஜாடிகளில் சேர்த்துவைக்கிறார்; ஆழத்தை களஞ்சியங்களில் வைக்கிறார்.
8 Umhlaba wonke kawesabe uThixo; akuthi bonke abantu bomhlaba bazithobe phambi Kwakhe.
பூமி அனைத்தும் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; உலகின் மக்கள் அனைவரும் அவரிடம் பயபக்தியாய் இருப்பார்களாக.
9 Ngoba wakhuluma, kwahle kwaba khona; wayala, kwema kwaqina nko.
ஏனெனில் அவர் சொல்ல, உலகம் உண்டாயிற்று; அவர் கட்டளையிட்டார், அது உறுதியாய் நின்றது.
10 UThixo uyawachitha amacebo ezizwe; uyazinyampisa izinhloso zabantu.
யெகோவா நாடுகளின் திட்டங்களை முறியடிக்கிறார்; அவர் மக்களின் நோக்கங்களைத் தடுக்கிறார்.
11 Kodwa amacebo kaThixo ami aqinile nini lanini, izinhloso zenhliziyo yakhe kuzozonke izizukulwane.
ஆனால் யெகோவாவின் ஆலோசனை என்றென்றும் உறுதியாகவும், அவருடைய இருதயத்தின் நோக்கங்கள் தலைமுறை தலைமுறையாகவும் நிலைநிற்கும்.
12 Sibusisekile isizwe uNkulunkulu waso onguThixo, abantu abakhethayo baba yilifa lakhe.
எந்த மக்கள் யெகோவாவைத் தங்கள் இறைவனாகக் கொண்டிருக்கிறார்களோ, எந்த மக்களை அவர் தமது உரிமைச்சொத்தாகத் தெரிந்துகொண்டாரோ அவர்கள் பாக்கியவான்கள்.
13 UThixo ukhangele phansi esezulwini ababone bonke abantu;
யெகோவா பரலோகத்திலிருந்து கீழே நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார்;
14 esemzini wakhe uyababona bonke abahlala emhlabeni
தமது சிங்காசனத்திலிருந்து பூமியில் வாழும் அனைவரையும் கவனிக்கிறார்.
15 yena owenza inhliziyo zabo bonke, enanzelela konke abakwenzayo.
அனைவருடைய இருதயங்களையும் உருவாக்கும் யெகோவா, அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் கவனிக்கிறார்.
16 Akulankosi esizwa yibukhulu bebutho layo; akulaqhawe eliphunyuka ngamandla alo amakhulu.
எந்த ஒரு அரசனும் தனது படைபலத்தால் காப்பாற்றப்படுவதில்லை; எந்த ஒரு போர்வீரனும் தனது மிகுந்த வலிமையினால் தப்புவதுமில்லை.
17 Yikuthemba ize ukuthi ibhiza lingakusindisa; loba lona lilamandla amakhulu ngeke lisindise.
விடுதலை பெறுவதற்கு குதிரையை நம்புவது வீண்; அதற்கு மிகுந்த வலிமை இருந்தபோதிலும், அதினால் காப்பாற்ற முடியாது.
18 Kodwa amehlo kaThixo akulabo abamesabayo, kulabo othemba labo lisethandweni lwakhe olungapheliyo,
யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறவர்கள்மேல் அவருடைய கண்கள் நோக்கமாயிருந்து,
19 ukubakhulula ekufeni baphiliswe lanxa kulendlala.
மரணத்திலிருந்து அவர்களை விடுவிக்கிறார், பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கிறார்.
20 Simlindele uThixo ngokwethemba; ulusizo lwethu lesihlangu sethu.
நாங்கள் யெகோவாவுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்; அவரே எங்களுக்கு உதவியும் எங்கள் கேடயமுமாய் இருக்கிறார்.
21 Inhliziyo zethu zithokoza Ngaye, ngoba sithembe ebizweni lakhe elingcwele.
நாங்கள் அவருடைய பரிசுத்த பெயரில் நம்பிக்கையாய் இருப்பதால் எங்கள் இருதயங்கள் அவரில் மகிழ்கின்றன.
22 Sengathi uthando Lwakho olungaphuthiyo, Thixo, lungaba phezu kwethu njengalokhu sibeka ithemba lethu kuwe.
யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே, உமது உடன்படிக்கையின் அன்பு எங்கள்மேல் இருப்பதாக.

< Amahubo 33 >