< UDutheronomi 6 >
1 “Le yiyo imilayo, izimiso lemithetho uThixo uNkulunkulu wenu angithuma ukuthi ngilifundise ukuyigcina elizweni elizachapha uJodani lilithathe libe ngelenu,
யோர்தானைக் கடந்து நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும் நாட்டில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளும், விதிமுறைகளும், சட்டங்களும் இவையே. இவற்றை உங்களுக்குப் போதிக்கும்படி உங்கள் இறைவனாகிய யெகோவா என்னை நியமித்திருக்கிறார்.
2 ukuze lina, labantwabenu kanye labantwababo abezayo bamesabe uThixo uNkulunkulu wenu ekuphileni kwenu ngokugcina izimiso lemilayo engizalinika yona, ukuze libe lempilo ende.
நான் உங்களுக்குக், கொடுக்கிற அவருடைய இந்த விதிமுறைகளையும் கட்டளைகளையும் நீங்கள் கைக்கொண்டால், நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அவர்களுக்குப்பின் அவர்களின் பிள்ளைகளும் வாழும் காலமெல்லாம் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து நடப்பீர்கள். நீங்கள் நீடித்த வாழ்வையும் அனுபவிப்பீர்கள்.
3 Zwana, wena Israyeli, njalo unanzelele ukuthi uyalalela ukuze kukulungele njalo wande kakhulu elizweni eligeleza uchago loluju, njengokuthembisa kukaThixo, uNkulunkulu wabokhokho benu.
இஸ்ரயேலே, கேளுங்கள், கீழ்ப்படியக் கவனமாயிருங்கள். கீழ்ப்படிந்தால் நீங்கள் நலமாயிருப்பீர்கள்; பாலும் தேனும் வழிந்தோடுகிற நாட்டில், உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு வாக்குக்கொடுத்தபடியே மிகுதியாய்ப் பெருகுவீர்கள்.
4 Zwana, wena Israyeli: UThixo uNkulunkulu wethu, nguThixo munye.
இஸ்ரயேலே கேள்: யெகோவாவே நம்முடைய இறைவன், அவர் ஒருவர் மட்டுமே யெகோவா.
5 Thanda uThixo uNkulunkulu wakho ngenhliziyo yakho yonke langomphefumulo wakho wonke kanye langamandla akho wonke.
உன் இறைவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பெலத்தோடும் அன்பு செலுத்து.
6 Imilayo le engikupha yona lamuhla kumele ibe sezinhliziyweni zenu.
இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் கட்டளைகள் உங்கள் இருதயத்தில் இருக்கவேண்டும்.
7 Igcizeleleni ebantwaneni benu. Likhulume ngayo nxa lihlezi emakhaya enu lalapho lihamba endleleni, lapho lilala lanxa livuka.
அவற்றை உங்கள் பிள்ளைகளின் மனதில் பதியச்செய்யவேண்டும். நீங்கள் வீட்டில் இருக்கும்போதும், வெளியே தெருவில் போகும்போதும், படுத்திருக்கும்போதும், எழுந்திருக்கும்போதும் அவற்றைக்குறித்துப் பேசிக்கொண்டிருங்கள்.
8 Ibopheleni ezandleni zenu ibe luphawu, liyibophele lasemabunzini enu.
அவற்றை உங்கள் கைகளிலும், நெற்றிகளிலும் அடையாளச் சின்னங்களாகக் கட்டிக்கொள்ளுங்கள்.
9 Ibhaleni emigubazini yezindlu zenu kanye lasemasangweni enu.
அவைகளை உங்கள் வீட்டுக் கதவு நிலைகளிலும், உங்கள் வாசல்களிலும் எழுதிவையுங்கள்.
10 Kuzakuthi uThixo uNkulunkulu wenu eselingenisa elizweni afunga ngalo kuboyihlo, u-Abhrahama, u-Isaka loJakhobe, ukulinika lona, ilizwe elilamadolobho amakhulu, aphumelelayo kodwa elingazakhelanga wona,
உங்கள் இறைவனாகிய யெகோவா ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்ட அந்த நாட்டை உங்களுக்குக் கொடுப்பதற்கு, உங்களை அங்கு கொண்டுவருவார். அந்த நாட்டில் நீங்கள் கட்டாத விசாலமான, செழிப்பான பட்டணங்கள் இருக்கின்றன.
11 izindlu ezigcwele konke okuhle elingazange likuhluphekele, imithombo yamanzi elingazange liyigebhe, kanye lezivini lezihlahla zama-oliva elingazihlanyelanga, ukuze kuthi lingadla lisuthe,
நீங்கள் சேகரிக்காத பல வகையான நல்ல பொருட்களால் நிறைந்த வீடுகளும், நீங்கள் வெட்டாத கிணறுகளும், நீங்கள் நடாத திராட்சைத் தோட்டங்களும் ஒலிவத்தோப்புகளும் இருக்கின்றன. நீங்கள் அங்கு சாப்பிட்டுத் திருப்தியடைவீர்கள்.
12 linanzelele ukuthi alimkhohlwa uThixo, yena owalikhupha eGibhithe, elizweni lobugqili.
அப்பொழுது நீங்கள் உங்களை அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவாவை மறக்காதபடி எச்சரிக்கையாய் இருங்கள்.
13 Mesabeni uThixo uNkulunkulu wenu, mkhonzeni yena yedwa njalo lifunge ngebizo lakhe.
உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து நடந்து, அவர் ஒருவரையே பணிந்துகொள். அவருடைய பெயரைக்கொண்டு மட்டுமே சத்தியம் செய்யுங்கள்.
14 Lingabalandeli abanye onkulunkulu babantu elakhelene labo;
உங்களைச் சுற்றியிருக்கிற மக்களின் தெய்வங்களாகிய வேறு தெய்வங்களைப் பின்பற்றவேண்டாம்.
15 ngoba uThixo uNkulunkulu wenu, ophakathi kwenu, nguThixo olobukhwele njalo ongalithukuthelela, alitshabalalise ebusweni bomhlaba.
ஏனெனில் உங்கள் மத்தியிலே இருக்கிற உங்கள் இறைவனாகிய யெகோவா, தமக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுள்ள இறைவனாயிருக்கிறார். அவருடைய கோபம் உங்களுக்கு விரோதமாக எரியும்போது, பூமியிலே இராமல் அவர் உங்களை அழித்துப்போடுவார்.
16 Lingamlingi uThixo uNkulunkulu wenu njengalokhu elakwenza eMasa.
நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் இறைவனாகிய யெகோவாவைச் சோதிக்க வேண்டாம்.
17 Nanzelelani ukuthi liyayigcina imilayo kaThixo uNkulunkulu wenu lezimiso kanye lemilayo aliphe yona.
உங்கள் இறைவனாகிய யெகோவாவினுடைய கட்டளைகளையும், அவர் உங்களுக்குக் கொடுத்த ஒழுங்குவிதிகளையும், விதுமுறைகளையும் கைக்கொள்ளக் கவனமாய் இருங்கள்.
18 Yenzani okuqondileyo lokuhle emehlweni kaThixo, ukuze konke kulihambele kuhle njalo lingene liyethatha ilizwe uThixo alithembisa okhokho benu ngesifungo,
யெகோவாவினுடைய பார்வையில் சரியானதையும் நலமானதையும் செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் நலமாய் இருப்பீர்கள். நீங்கள் யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்டு, வாக்குப்பண்ணிய அந்த நல்ல நாட்டிற்குள்போய், அதை உரிமையாக்கிக்கொள்வீர்கள்.
19 lidudule zonke izitha eziphambi kwenu, njengokutsho kukaThixo.
அப்பொழுது யெகோவா சொன்னதுபோலவே உங்களுக்கு முன்பாக உங்கள் பகைவர்களைத் துரத்திவிடுவார்.
20 Kuzakuthi ngokuqhubeka kwesikhathi nxa indodana yakho ikubuza isithi, ‘Zitshoni izimiso, imilayo lemithetho leyo uThixo uNkulunkulu wethu alipha yona?’
வருங்காலத்திலே உன்னுடைய மகன் உன்னிடம், “நம்முடைய இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிற இந்த ஒழுங்குவிதிகள், விதிமுறைகள், சட்டங்கள், இவைகளின் கருத்து என்ன?” என்று கேட்டால்,
21 Wena uzakuthi: ‘Sasiyizigqili zikaFaro eGibhithe, kodwa uThixo wasikhupha eGibhithe ngesandla sakhe esilamandla.
நீ அவனிடம் சொல்லவேண்டியதாவது: “நாங்கள் எகிப்திலே பார்வோனுடைய அடிமைகளாயிருந்தோம். ஆனால் யெகோவா எங்களைத் தமது வலிய கரத்தினால் எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்.
22 Thina sazibonela ngawethu amehlo uThixo ethumela izibonakaliso lezimangaliso ezinkulu lezesabekayo phezu kweleGibhithe laphezu kukaFaro labo bonke abendlu yakhe.
மேலும், பெரிதும் பயங்கரமுமான, அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் எகிப்தின்மேலும், பார்வோனின்மேலும், அவன் குடும்பத்திலுள்ள யாவர்மேலும் யெகோவா எங்கள் கண்களுக்கு முன்பாகவே அனுப்பினார்.
23 Kodwa wasikhupha khonale wasiletha lapha ukuze asinike ilizwe alithembisa okhokho bethu ngesifungo.
ஆனால், இறைவன் நம்முடைய முற்பிதாக்களுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்த நாட்டை நமக்குக் கொடுப்பதற்காக, எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார்.
24 UThixo wasilaya ukuba silalele zonke lezi zimiso lokwesaba uThixo uNkulunkulu wethu, ukuze sithole ukuphumelela lokuphila, njengoba kunje lamhlanje.
இந்த விதிமுறைகளுக்கெல்லாம் கீழ்ப்படிந்து நமது இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து நடக்கும்படி யெகோவா நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அப்பொழுது நாம் இன்று இருப்பதுபோலவே என்றும் செழிப்புற்று, உயிருடன் காக்கப்படுவோம்.
25 Kanti-ke nxa sinanzelela silalela wonke umthetho lo phambi kukaThixo uNkulunkulu wethu, njengokusilaya kwakhe, lokhu kuzakuba yikulunga kwethu.’”
எங்கள் இறைவனாகிய யெகோவா, நமக்குக் கட்டளையிட்டபடியே அவருக்கு முன்பாக இந்த சட்டம் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிய கவனமாயிருந்தால் அதுவே நமக்கு நீதியாய் இருக்கும்.”