< ဗျာဒိတ်ကျမ်း 8 >

1 သတ္တမ တံဆိပ် ကိုဖွင့် သောအခါ ၊ ကောင်းကင် ဘုံ၌ နာရီဝက် မျှ တိတ်ဆိတ် စွာ နေ ကြ၏။
ஆட்டுக்குட்டியானவர் ஏழாவது முத்திரையைத் திறந்தபோது, பரலோகத்தில் அரைமணி நேரம் அமைதி நிலவியது.
2 ဘုရားသခင့် ရှေ့ တော်၌ ရပ် နေသောကောင်းကင်တမန် ခုနစ် ပါးကို ငါမြင် ၏။ သူ တို့၌ တံပိုး ခုနစ် လုံးကို ပေး ၏။
இறைவனுக்கு முன்பாக நிற்கும், ஏழு இறைத்தூதர்களை நான் கண்டேன். அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன.
3 ကောင်းကင်တမန် တစ်ပါး သည်လာ ၍ ရွှေ လင်ပန်း ကို ကိုင် လျက် ယဇ်ပလ္လင် နား မှာရပ် နေ၏။ ပလ္လင် တော်ရှေ့ ၌ရှိသော ရွှေ ယဇ်ပလ္လင် ပေါ်မှာ သန့်ရှင်း သူ အပေါင်း တို့၏ ပဌနာ နှင့်အတူ ဆက်ကပ် ခြင်းငှာ ၊ မီးရှို့ သောနံ့သာပေါင်းအများ ကို ထိုသူ ၌ပေး ၏။
இன்னொரு இறைத்தூதன் வந்து, பலிபீடத்தின் அருகே நின்றான். அவன் ஒரு தங்க தூபக்கிண்ணத்தை வைத்திருந்தான். அரியணைக்கு முன்பாக இருக்கின்ற தங்கப் பலிபீடத்தின்மேல் எல்லாப் பரிசுத்தவான்களுடைய மன்றாட்டுகளுடனும் சேர்த்து தூபங்காட்டும்படி அவனுக்குப் பெருமளவு நறுமணத்தூள் கொடுக்கப்பட்டது.
4 မီးရှို့ သော နံ့သာပေါင်း၏ အခိုးအငွေ့ သည် သန့်ရှင်း သူ တို့၏ ပဌနာ များနှင့်အတူ ကောင်းကင် တမန်၏ လက် ထဲက ဘုရားသခင့် ရှေ့ တော်သို့ တက် လေ၏။
அந்தத் தூதனுடைய கையிலிருந்து தூபத்தின் புகை எழுந்து, பரிசுத்தவான்களுடைய மன்றாட்டுகளுடன் கலந்து, இறைவனுக்கு முன்பாக மேல்நோக்கிச் சென்றது.
5 ကောင်းကင်တမန် သည် လင်ပန်း ကိုယူ ၍ ယဇ်ပလ္လင် ၏ မီး နှင့် ပြည့် စေပြီးမှ ၊ မြေကြီး အပေါ်သို့ ချ လိုက် သည်ဖြစ်၍ ၊ အသံမြည် ခြင်း၊ မိုဃ်းချုန်း ခြင်း၊ လျှပ်စစ် ပြက်ခြင်း၊ မြေကြီး လှုပ်ခြင်းဖြစ် ကြ၏။
பின்பு அந்தத் தூதன் தூபக்கிண்ணத்தை எடுத்து, பலிபீடத்திலிருந்த நெருப்பினால் அதை நிரப்பினான். அவன் அந்த நெருப்பைப் பூமியின்மேல் வீசி எறிந்தான். அப்பொழுது இடிமுழக்கத்தின் சத்தங்களும், பேரிரைச்சல்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் ஏற்பட்டன.
6 တံပိုး ခုနစ် လုံးရှိ သော ကောင်းကင်တမန် ခုနစ် ပါးတို့သည် မှုတ် အံ့သောငှာ မိမိ တို့ကို ပြင်ဆင် ကြ၏။
பின்பு ஏழு எக்காளங்களை வைத்திருந்த ஏழு இறைத்தூதர்களும், அவற்றை ஊதுவதற்கு ஆயத்தமானார்கள்.
7 ပဌမ သူ သည် တံပိုး မှုတ်သောအခါ မိုဃ်းသီး ဖြစ် ၏။ အသွေး နှင့် ရောနှော သော မီး လည်း ဖြစ်၏။ မြေကြီး အပေါ်သို့ ချ လိုက်၍ ၊ မြေ သုံးစု တစ်စု၊ သစ်ပင် သုံးစု တစ်စု၊ စိမ်း သော မြက်ပင် ရှိသမျှ တို့ကို လောင်ကျွမ်း လေ၏။
முதலாவது தூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்பொழுது கல்மழையும், இரத்தம் கலந்திருந்த நெருப்பும் வந்தன. அது பூமியின்மேல் வீசியெறியப்பட்டது. பூமியின் மூன்றில் ஒரு பங்கு எரிந்துபோயிற்று, மரங்களில் மூன்றில் ஒரு பங்கும் எரிந்துபோயின, பச்சையான புல் எல்லாமே எரிந்துபோயிற்று.
8 ဒုတိယ ကောင်းကင်တမန် သည် တံပိုး မှုတ်သောအခါ ၊ မီး လောင် သော တောင် ကြီး ကို ပင်လယ် ထဲသို့ ချ လိုက်သကဲ့သို့ ဖြစ်၍ ၊ ပင်လယ် သုံးစု တစ်စုသည်အသွေး ဖြစ် ၏။
இரண்டாவது இறைத்தூதன், தனது எக்காளத்தை ஊதினான். அப்பொழுது பிரமாண்டமான மலைபோல ஒன்று, தீப்பற்றி எரிகிறதாய் கடலில் எறியப்பட்டது. கடலில் மூன்றிலொரு பங்கு இரத்தமாக மாறியது.
9 ပင်လယ် ၌ အသက်ရှင်သော သတ္တဝါ သုံးစု တစ်စုလည်း သေ ၏။ သင်္ဘော သုံးစု တစ်စုလည်း ပျက် ၏။
கடலிலுள்ள உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு இறந்துபோயின; கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கும் அழிந்துபோயின.
10 ၁၀ တတိယ ကောင်းကင်တမန် သည် တံပိုး မှုတ်သောအခါ ၊ မီးခွက် ကဲ့သို့ ထွန်းတောက် သော ကြယ် ကြီး သည် ကောင်းကင် က ကျ ၍ ၊ မြစ် သုံးစု တစ်စုသို့ ၎င်း၊ စမ်း ရေ တွင်းသို့ ၎င်း ရောက် ၏။
மூன்றாவது இறைத்தூதன் தனது எக்காளத்தை ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம், ஒரு தீப்பந்தத்தைப்போல் எரிந்து வானத்திலிருந்து விழுந்தது. அது ஆறுகளின் மூன்றில் ஒரு பங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது.
11 ၁၁ ထိုကြယ် သည် ဒေါနရွက် ဟူသောအမည် ရှိ ၏။ ရေ သုံးစု တစ်စုသည်ဒေါနရွက် ဖြစ် ၍ ရေ ခါး သောကြောင့် ၊ လူ အများ တို့သည် သေ ကြ၏။
அந்த நட்சத்திரத்தின் பெயர் கசப்பு என்பதாகும்; தண்ணீரின் மூன்றிலொரு பங்கு கசப்பாக மாறியது. கசப்பாக மாறிய அந்தத் தண்ணீரினால், மனிதர்களில் பலர் இறந்தார்கள்.
12 ၁၂ စတုတ္ထ ကောင်းကင်တမန် သည် တံပိုး မှုတ်သောအခါ ၊ နေ သုံးစု တစ်စု၊ လ သုံးစု တစ်စု၊ ကြယ် သုံးစု တစ်စုကြတ် ၍ သုံးစု တစ်စုမိုက် လေ၏။ နေ့ သုံးစု တစ်စု၊ ညဉ့် သုံးစုတစ်စုသည် အလင်း မ ရှိ၊
நான்காவது இறைத்தூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்பொழுது சூரியனில் மூன்றில் ஒரு பங்கு பாதிப்படைந்தது. சந்திரனில் மூன்றில் ஒரு பங்கும், நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கும் பாதிப்படைந்தன. இதனால், அவைகளில் மூன்றில் ஒரு பங்கும் இருளடைந்தன. பகலின் மூன்றிலொரு பங்கும், இரவின் மூன்றிலொரு பங்கும் வெளிச்சம் இல்லாமல் போயின.
13 ၁၃ ထိုအခါ ငါကြည့် လျှင် ၊ ရွှေလင်းတ တ ကောင်က၊ ကြွင်း သေးသော ကောင်းကင်တမန် သုံး ပါးမှုတ် လု လတံ့သော တံပိုး သံ ကြောင့် မြေကြီး သားတို့သည် အမင်္ဂလာ ၊ အမင်္ဂလာ ၊ အမင်္ဂလာ ရှိကြ၏ဟု ကောင်းကင် အလယ်၌ ပျံဝဲ ၍ကြီး သောအသံ နှင့် ဆို သည်ကိုငါကြား ၏။
பின்பு நான் பார்த்தபொழுது, நடுவானத்திலே பறந்து கொண்டிருந்த ஒரு கழுகு, உரத்த சத்தமிடக்கேட்டேன்: “ஐயோ! ஐயோ! பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ கேடு, மற்ற மூன்று இறைத்தூதர்களினாலும் ஊதப்படப்போகிற எக்காள சத்தங்களினால், ஐயோ, கேடு வரப்போகிறதே!” என்றது.

< ဗျာဒိတ်ကျမ်း 8 >