< နေဟမိ 1 >

1 ဟာခလိ သား နေဟမိ စကား ဟူမူကား၊ အာတဇေရဇ်မင်းကြီးနန်းစံနှစ် ဆယ်၊ ခိသလု လ တွင် ၊ ငါ သည် ရှုရှန် နန်းတော် ၌ ရှိ နေ စဉ်၊
அகலியாவின் மகன் நெகேமியாவின் வார்த்தைகள்: அர்தசஷ்டா அரசாண்ட இருபதாம் வருடம், கிஸ்லேயு மாதத்தில் நான் சூசான் அரண்மனையில் இருந்தேன்.
2 ငါ့ ညီ ဟာနန် နှင့် ယုဒ လူ အချို့တို့သည် ရောက် လာ၍ ၊ ငါသည် သိမ်း သွားခြင်းကို ခံရသောယုဒ လူစုထဲက လွတ် သောသူတို့ ၏ အကြောင်း အရာနှင့် ၊ ယေရုရှလင် မြို့၏ အကြောင်း အရာကို မေးမြန်း လျှင်၊
அப்பொழுது எனது சகோதரருள் ஒருவனான ஆனானி யூதாவிலிருந்து வேறுசில மனிதருடன் வந்தான்; நான் அவர்களிடம், நாடுகடத்தப்பட்டவர்களில் தப்பியிருக்கும் யூதரைப் பற்றியும், எருசலேமைப் பற்றியும் விசாரித்தேன்.
3 သူတို့က၊ သိမ်း သွားခြင်းကို ခံရသောလူစုထဲက လွတ် ၍ ၊ ထို ပြည် ၌ နေ သောသူတို့သည် ကြီးစွာ သော ဆင်းရဲ ခြင်း၊ ကဲ့ရဲ့ ခြင်းကိုခံရကြ၏။ ယေရုရှလင် မြို့ရိုး သည် ပြိုပျက် လျက်၊ မြို့တံခါး လည်း မီး လောင် ၍ ကုန်ပြီဟု ပြန်ပြော ကြ၏။
அவர்கள் என்னிடம், “நாடுகடத்தப்பட்டு மாகாணங்களுக்குத் திரும்பிவந்திருப்பவர்கள் மிகுந்த கஷ்டத்துடனும், அவமானத்துடனும் வாழ்கிறார்கள். எருசலேமின் மதிலும் உடைக்கப்பட்டிருக்கிறது; அதன் வாசல் கதவுகளும் எரிக்கப்பட்டுள்ளன” என்றார்கள்.
4 ထို စကား ကိုကြား လျှင် ၊ ငါသည် ထိုင် ၍ အင်တန်ကာလ ပတ်လုံး ငိုကြွေး မြည်တမ်း လျက် ၊ အစာရှောင် လျက် နေ၍ ၊ ကောင်းကင် ဘုံ၏အရှင် ဘုရား သခင့်ရှေ့ တော်၌ ဆုတောင်း သော ပဌာနာဟူမူကား ၊
இவற்றைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுதேன். சிலநாட்கள் நான் பரலோகத்தின் இறைவனுக்கு முன்பாகத் துக்கப்பட்டு உபவாசித்து மன்றாடினேன்.
5 အို ကောင်းကင် ဘုံ၏အရှင် ဘုရား သခင်ထာဝရဘုရား ၊ ကြီးမြတ် ၍ ကြောက်မက် ဘွယ်သော ဘုရား ၊ ပညတ် တော်တို့ကို နှစ်သက် ၍ ကျင့် စောင့်သောသူတို့ နှင့် ဖွဲ့သော ကရုဏာ ပဋိညာဉ် ကို မဖျက်၊ တည် စေ တော်မူသောဘုရား၊
பின்பு நான், “யெகோவாவே, பரலோகத்தின் இறைவனே, மகத்துவமுள்ளவரும் பயபக்திக்குரிய இறைவனே, உம்மில் அன்பாய் இருந்து, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களுடன் உமது அன்பின் உடன்படிக்கையைக் காத்துக்கொள்கிறவரே,
6 ကိုယ်တော် ကျွန် ဣသရေလ အမျိုးသား တို့အဘို့ ၊ ရှေ့ တော်၌ နေ့ ညဉ့် မပြတ် အကျွန်ုပ် ဆုတောင်း ၍၊ ဣသရေလ အမျိုးသား ဖြစ်သော အကျွန်ုပ်တို့သည် ကိုယ်တော် ကို ပြစ်မှား မိသော အပြစ် များကို ဘော်ပြ ၍ တောင်းပန်သော ကိုယ်တော် ကျွန် ၏ ပဌနာ စကားကို ကြား ခြင်းငှါ ၊ ယခု နားထောင်၍ စေ့စေ့ကြည့်ရှုတော်မူပါ။
உமது அடியவர்களாகிய இஸ்ரயேல் மக்களுக்காக நான் உமக்கு முன்பாக இரவும் பகலும் மன்றாடுகிறேன். நானும் என் முற்பிதாக்களின் குடும்பமுமான இஸ்ரயேலராகிய நாங்கள் உமக்கு விரோதமாய் செய்த பாவங்களை நான் அறிக்கையிடுகிற உமது அடியவனான என் மன்றாட்டைக் கேட்க, உமது செவி கேட்டும், உமது கண்கள் திறந்தும் இருப்பதாக.
7 အကျွန်ုပ် နှင့် အကျွန်ုပ် အဆွေ အမျိုးတို့သည် ပြစ်မှား ပါပြီ။ ကိုယ်တော် ကို ပြစ်မှား၍၊ အလွန်ဆိုးညစ် သော အမှုတို့ကို ပြုမိပါပြီ။ ကိုယ်တော် ကျွန် မောရှေ ၌ ထား တော်မူသော ပညတ် တရား၊ စီရင် ထုံးဖွဲ့တော်မူချက် တို့ကို မ စောင့် ဘဲနေပါပြီ။
உமக்கு முன்பாக நாங்கள் மிகவும் கொடியவர்களாய் நடந்தோம். நீர் உமது அடியவன் மோசேக்குக் கொடுத்த கட்டளைகளுக்கும், விதிமுறைகளுக்கும், சட்டங்களுக்கும் நாங்கள் கீழ்ப்படியவில்லை.
8
“நீர் உமது அடியவனான மோசேக்குக் கொடுத்த வார்த்தைகளை நினைவில்கொள்ளும். நீர் மோசேயிடம், ‘நீங்கள் உண்மையற்றவர்களாயிருந்தால் பிற நாட்டு மக்களுக்குள்ளே நான் உங்களைச் சிதறடிப்பேன்.
9 ကိုယ်တော်က၊ သင် တို့သည် လွန်ကျူး လျှင်၊ သင် တို့ကို တပါး အမျိုးသားတို့တွင် ငါ ကွဲပြား စေမည်။ တဖန် ငါ့ ထံသို့ ပြန်လာ ၍၊ ငါ့ ပညတ် တို့ကိုကျင့်စောင့် ပြန်လျှင်၊ မိုဃ်းကောင်းကင် အောက် အဝေးဆုံးသောအရပ်သို့ နှင်ထုတ် ခြင်းကိုခံရသော်လည်း၊ ထို အရပ်က ငါသိမ်းယူ ၍၊ ငါ့ နာမ တည် ရာဘို့ ငါရွေးချယ် သော အရပ် သို့ ဆောင် ခဲ့မည်ဟု ကိုယ်တော် ကျွန် မောရှေ ၌ထား တော်မူသော ဂတိ တော်ကိုအောက်မေ့ တော်မူပါ။
ஆனால் நீங்கள் என்னிடம் திரும்பிவந்து என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், உங்கள் மக்களில் நாடு கடத்தப்பட்டவர்கள் அடிவானத்தின் தொலைதூரத்தில் இருந்தாலும்கூட, நான் அங்கிருந்தும் கொண்டுவருவேன்; நான் அவர்களைக் கூட்டிச்சேர்த்து என்னுடைய பெயருக்கென இருப்பிடமாக நான் தெரிந்துகொண்ட இவ்விடத்திற்குக் கொண்டுவருவேன்’ என்றீரே.
10 ၁၀ ယခုမှာ၊ ဤသူ တို့သည် မဟာ တန်ခိုး တော်နှင့် အားကြီး သော လက် တော်ဖြင့် ရွေးနှုတ် တော်မူသော ကိုယ်တော် ကျွန် ၊ ကိုယ်တော် လူမျိုး ဖြစ်ကြပါ၏။
“அவர்கள் உம்முடைய அடியவர்களும் உமது மக்களும், உமது மிகுந்த வல்லமையினாலும் பலத்த கரத்தினாலும் நீர் மீட்டுக்கொண்டவர்களும் ஆவர்.
11 ၁၁ အို ဘုရား ရှင်၊ ကိုယ်တော် ကျွန် ပြုသောပဌနာ စကားနှင့် နာမ တော်ကို ရိုသေ ချင်သော ကျွန်တော်များ ပြုသောပဌနာ စကားကို နားထောင် တော်မူပါ။ ကိုယ်တော် ကျွန် ကို ယနေ့ ကောင်းကြီးပေး တော်မူပါ။ ဤ လူ ရှေ့ မှာ မျက်နှာ ရပါမည်အကြောင်းကယ်မသနား တော်မူပါဟု ဆုတောင်းလေ၏။ ထိုအခါ ငါ သည် ရှင်ဘုရင် ၏ ဖလားတော်ကိုင် ဖြစ် သတည်း။
யெகோவாவே, உமது அடியவனின் ஜெபத்தையும், உமது பெயரில் பயபக்தியாய் இருப்பதில் மகிழ்ச்சியடையும் உமது அடியார்களின் மன்றாட்டையும் செவிகொடுத்துக் கேளும்; இந்த மனிதனின் முன் எனக்கு தயவு கிடைக்கப்பண்ணி இன்று எனக்கு வெற்றியைத் தாரும்” என்று மன்றாடினேன். அந்நாட்களில் நான் அரசனுக்கு திராட்சை இரசம் பரிமாறுகிறவனாயிருந்தேன்.

< နေဟမိ 1 >