< ယေရမိ 17 >

1 ယုဒ အမျိုး၏ အပြစ် သည် သံ ကညစ် ၊ စိန် ချွန် နှင့် သူတို့နှလုံး ပြား ၌၎င်း ၊ ယဇ်ပလ္လင် ဦးချို ၌ ၎င်း အက္ခရာ တင် ၍ မှတ်သားလျက်ရှိ၏။
“யூதாவின் பாவம், இரும்பு எழுத்தாணியால் செதுக்கப்பட்டு, வைரத்தின் நுனியினால் பொறிக்கப்பட்டுள்ளது. அது அவர்களுடைய இருதயமாகிய கற்பலகையிலும், அவர்களின் பலிபீடத்தின் கொம்புகளிலும் செதுக்கப்பட்டும் பொறிக்கப்பட்டும் உள்ளது.
2 သူငယ် တို့ပင် မြင့် သောတောင် ပေါ် ၊ စိမ်း သော သစ်ပင် နား မှာရှိသော ယဇ်ပလ္လင် များ၊ အာရှရပင် များကို အောက်မေ့ တတ်ကြ၏။
அவர்களுடைய பிள்ளைகளுங்கூட பச்சையான மரங்களுக்கருகிலும் உயர்ந்த குன்றுகளின்மேலுள்ள மேடைகளையும், அசேரா விக்கிரக தூண்களையும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
3 အချင်းငါ ၏တောင် ၊ လယ် ၌ ရှိသောသင် ၏ဥစ္စာ နှင့်သိုထားသမျှ သောဥစ္စာ ကို၎င်း ၊ ပြည် တရှောက် လုံး ၌ သင် ပြစ်မှား ရာ၊ မြင့် သောအရပ်တို့ကို၎င်း၊ လုယူ သောသူတို့ လက်သို့ ငါအပ် မည်။
நாட்டிலுள்ள என் மலையையும், உன் செல்வத்தையும், உன் பொக்கிஷங்கள் எல்லாவற்றையும், அதோடுகூட உயர்ந்த உன் மேடைகளையும் கொள்ளைப்பொருளாக நான் கொடுப்பேன். உன் நாடெங்குமுள்ள பாவத்தின் நிமித்தம் இப்படிச் செய்வேன்.
4 သင့်ကိုယ်တိုင်လည်း ငါပေး သော အမွေ မှ ရွေ့ သွားရလိမ့်မည်။ သင်မ သိ သော ပြည် တွင် ၊ ရန်သူ လက်၌ သင့် ကို ငါကျွန်ခံ စေမည်။ အကြောင်းမူကား၊ အစဉ် လောင် သောငါ ၏ အမျက် မီး ကို သင်တို့သည် မွေး ကြပြီ။
நான் உனக்குத் தந்த உரிமைச்சொத்தை உன் குற்றத்தினாலேயே நீ இழந்து விடுவாய். நீ அறியாத நாட்டில் நான் உன்னை உன் பகைவருக்கு அடிமையாக்குவேன். ஏனெனில் நீ என் கோபத்தை மூட்டியிருக்கிறாய். அது என்றைக்கும் எரிந்துகொண்டேயிருக்கும்.”
5 ထာဝရဘုရား မိန့် တော်မူသည်ကား ၊ လူ ကို ကိုးစား ၍ လူသတ္တဝါ ကို အမှီပြု သဖြင့် ၊ စိတ် နှလုံးထဲ၌ထာဝရဘုရား ထံ တော်မှ ထွက် သွားသော သူ သည် ကျိန် အပ်သောသူဖြစ်၏။
யெகோவா சொல்வது இதுவே: “மனிதரில் தன் நம்பிக்கையை வைத்து, தன் பெலனுக்காக மாம்சத்தைச் சார்ந்து, யெகோவாவைவிட்டு தனது இருதயத்தை விலக்கிக்கொள்கிறவன் சபிக்கப்பட்டவன்.
6 ထိုသူသည် လွင်ပြင် ၌ ရှိသောသစ်ပင် ခြောက် ကဲ့သို့ ဖြစ် ၍ ၊ ကောင်းကျိုး ရောက် ကြောင်းကို မ သိ ရ။ အဘယ်သူမျှမ နေ သောဆား မြေ ၊ သွေ့ ခြောက်သော လွင်ပြင် ၌ နေ ရလိမ့်မည်။
அவன் பாழ்நிலத்திலுள்ள புதரைப்போல இருப்பான். அவன் செழிப்பு வரும்போது, அதைக் காணமாட்டான். அவன் யாரும் வசிக்க முடியாத உவர் நிலத்திலும், பாலைவனத்திலுள்ள வறண்ட இடங்களிலும் தங்கியிருப்பான்.
7 ထာဝရဘုရား ကို ကိုးစား သော သူ ၊ ထာဝရဘုရား ကို မိမိ ကိုးစား ရာ အကြောင်းဖြစ် စေ သောသူသည် ကောင်းကြီး မင်္ဂလာကို ခံအပ်သောသူဖြစ် ၏။
“ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கை வைத்து, அவரை உறுதியாய் நம்புகிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
8 ထိုသူသည်ကား၊ ရေ ရှိသော အရပ်၌စိုက် ၍ မြစ် နားမှာ အမြစ် ဖြာ သဖြင့် ၊ ပူ သောအရှိန် ရောက် ကြောင်း ကို မ သိ ၊ အရွက် မညှိုးနွမ်း ၊ မိုဃ်းခေါင် သောကာလ ၌ စိုးရိမ် စရာမ ရှိဘဲ၊ အစဉ် အမြဲအသီး ကို သီး တတ် သော အပင် နှင့်တူ ၏။
அவன் தண்ணீரின் ஓரத்தில் நடப்பட்டு நீரூற்றருகில் தனது வேர்களை விடும் மரத்தைப்போல இருப்பான். வெப்பம் வரும்போது அது பயப்படுவதில்லை. எப்போதும் அதன் இலைகள் பச்சையாயிருக்கும். வறட்சியான வருடத்தில் அதற்குக் கவலை இல்லை. அது பழங்கொடுக்கத் தவறுவதில்லை.”
9 စိတ် နှလုံးသည် ခပ်သိမ်း သော အရာထက် စဉ်းလဲ တတ်၏။ အလွန်ယိုယွင်း သော သဘောရှိ၏။ စိတ် နှလုံးသဘောကို အဘယ် သူသိ နိုင်သနည်း။
எல்லாவற்றிலும் பார்க்க இருதயமே வஞ்சனையுள்ளது. அதைக் குணமாக்கவே முடியாது. அதை உணர்ந்து கொள்ளக்கூடியவன் யார்?
10 ၁၀ ငါ ထာဝရဘုရား သည် လူ အသီးအသီးတို့အား မိမိ တို့အကျင့် အတိုင်း ၊ မိမိတို့ခံထိုက်သော အကျိုး အပြစ် ကိုပေး ခြင်းငှါ ၊ နှလုံး ကျောက်ကပ် တို့ကို စေ့စေ့စစ်ကြော တတ်၏။
“யெகோவாவாகிய நானே இருதயத்தை ஆராய்ந்து, மனதைச் சோதித்துப் பார்க்கிறவர். மனிதனுக்கு அவனுடைய நடத்தைக்குத்தக்க வெகுமதி கொடுப்பதும், அவனுடைய செயல்களுக்குத்தக்க பலனளிப்பதும் நானே.”
11 ၁၁ ကောရ ငှက်သည် မိမိမ ဥ သော ဥကို ဝပ် သကဲ့သို့ ၊ မ တရား သဖြင့် ဥစ္စာ ဆည်းဖူး သော သူသည် အသက် ပျို စဉ် ကပင်၊ ဆင်းရဲ ခြင်းသို့ ရောက်၍ အဆုံး ၌ ကား၊ လူမိုက် ဖြစ် လိမ့်မည်။
அநீதியான முறைகளால் தன் செல்வத்தைச் சேர்க்கிறவன், தான் இடாத முட்டைகளை அடைகாக்கும் கவுதாரிக்கு ஒப்பாயிருக்கிறான்; அவனுடைய வாழ்வின் பாதி நாட்கள் போனபின், அவனுடைய செல்வங்கள் அவனைவிட்டு நீங்கிப்போய்விடும்; முடிவிலோ அவன் தன்னை மூடன் என நிரூபிப்பான்.
12 ၁၂ ရှေ့ဦး စွာမှစ၍ မြင့် သော အရပ်၌ ဘုန်းကြီး တော်မူသောရာဇ ပလ္လင်သည် ငါ တို့သန့်ရှင်း ရာ ဌာန တော် အရပ်ဖြစ်၏။
எங்களுடைய பரிசுத்த இடம் ஆதியிலிருந்தே உயர்த்தப்பட்ட மகிமையுள்ள அரியணையாயிருக்கிறது.
13 ၁၃ အိုဣသရေလ အမျိုး၏ မြော်လင့် စရာ အကြောင်းဖြစ်သော ထာဝရဘုရား ၊ ကိုယ်တော် ကို စွန့်ပစ် သော သူအပေါင်း တို့သည် အရှက်ကွဲ ရကြပါလိမ့်မည်။ ငါ့ ထံမှ ထွက်သွား သောသူတို့ သည် မြေ စာရင်း သို့ ဝင်ရကြပါလိမ့်မည်။ အကြောင်း မူကား၊ အသက် စမ်း ရေ တွင်း တည်းဟူသောထာဝရဘုရား ကို စွန့်ပစ် ကြ သတည်း။
யெகோவாவே, இஸ்ரயேலின் எதிர்ப்பார்ப்பே, உம்மைக் கைவிடும் யாவரும் வெட்கத்திற்குள்ளாவார்கள். உம்மைவிட்டு விலகுகிற அவர்கள் யாவரும் வாழும் நீரூற்றாகிய யெகோவாவைக் கைவிட்டபடியால், புழுதியில் அழிவார்கள்.
14 ၁၄ အို ထာဝရဘုရား ၊ အကျွန်ုပ် ၏ အနာ ကို ငြိမ်း စေတော်မူပါ။ သို့ပြုလျှင် ၊ အကျွန်ုပ်သည် အနာ ငြိမ်းပါလိမ့်မည်။ အကျွန်ုပ် ကို ကယ်တင် တော်မူပါ။ သို့ပြုလျှင် ၊ အကျွန်ုပ်သည် ကယ်တင် ခြင်းသို့ ရောက်ပါလိမ့်မည်။ ကိုယ်တော် သည် အကျွန်ုပ် ချီးမွမ်း ရာ ဖြစ်တော်မူ၏။
யெகோவாவே, என்னைக் குணமாக்கும், நான் குணமாவேன். என்னைக் காப்பாற்றும், நான் காப்பாற்றப்படுவேன். ஏனெனில் நான் துதிக்கிறவர் நீரே.
15 ၁၅ ထာဝရဘုရား ၏ နှုတ်ကပတ် တော်သည် အဘယ် မှာရှိသနည်း။ ယခု လာ ပါစေတော့ဟု ဤသူ တို့ သည် အကျွန်ုပ် အား ဆို တတ်ကြပါ၏။
இந்த மக்களோ என்னிடம், “யெகோவாவின் வார்த்தை எங்கே? இப்போது அது நிறைவேறட்டும்” என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
16 ၁၆ အကျွန်ုပ် သည် နောက် တော်သို့ လိုက်သော ဆရာ ၏အရာကို မ ရှောင် ပါ။ အမင်္ဂလာ နေ့ ကို မ တောင့်တ ပါ။ အကျွန်ုပ် ဟော ပြောချက်ကို ကိုယ်တော် သိ တော်မူ ၏။ ကိုယ်တော် မျက်မှောက် ၌ ရှိ ပါ၏။
நானோ உம்மைப் பின்பற்றும் மேய்ப்பனாயிருப்பதை விட்டு ஓடிவிடவில்லை. ஏமாற்றத்தின் நாளை நான் விரும்பவில்லை என்பதை நீர் அறிவீர். என் வாயின் வார்த்தைகள் உமக்குமுன் இருக்கின்றன.
17 ၁၇ အကျွန်ုပ် ကို ထိတ်လန့် စေ တော်မ မူပါနှင့်။ ဘေး ရောက်သောကာလ ၌ ကိုယ်တော် သည် အကျွန်ုပ် ခိုလှုံ ရာ ဖြစ်တော်မူ၏။
நீர் எனக்கு ஒரு பயங்கரமாக இராதேயும். பேராபத்து வரும்நாளில் நீரே என் அடைக்கலம்.
18 ၁၈ အကျွန်ုပ် ကို ညှဉ်းဆဲ သောသူတို့သည် အရှက်ကွဲ ကြပါစေသော။ အကျွန်ုပ် မူကား ၊ အရှက် မ ကွဲပါစေနှင့်။ သူ တို့သည် စိတ်ပျက် ကြပါစေသော။ အကျွန်ုပ် မူကား ၊ စိတ် မ ပျက်ပါစေနှင့်။ သူ တို့အပေါ် မှာ ဘေး အန္တရာယ် ကာလ ကို ရောက် စေတော်မူပါ။ အထပ်ထပ် ဖျက်ဆီး တော်မူ ပါ။
என்னைத் துன்புறுத்துகிறவர்கள் வெட்கத்துக்கு உள்ளாகட்டும், என்னையோ வெட்கப்பட விடாதிரும். அவர்கள் பயப்படட்டும், என்னையோ பயமின்றிக் காத்துக்கொள்ளும். பேராபத்தின் நாளை அவர்கள்மேல் வரப்பண்ணும். இரு மடங்கான அழிவினால் அவர்களை அழித்துவிடும்.
19 ၁၉ ထာဝရဘုရား သည် ငါ့ အားမိန့် တော်မူသည် ကား ၊ ယုဒ ရှင်ဘုရင် ထွက်ဝင် သော အမျိုးသား ချင်း မြို့တံခါး မှစ၍၊ ခပ်သိမ်း သော ယေရုရှလင် မြို့တံခါးဝ ၌ သွား ၍ ရပ် လျက်၊
யெகோவா என்னிடம் சொன்னது இதுவே: “யூதாவின் அரசர்கள் போய்வருகிறதான மக்கள் வாசலருகே போய் நில். எருசலேமின் மற்ற எல்லா வாசல்களிலும் போய் நில்.
20 ၂၀ လူ များတို့အား ပြော ဆိုရမည်မှာ၊ ဤ တံခါး တို့ဖြင့် ထွက် ဝင်သော ယုဒ ရှင် ဘုရင်များနှင့် ယုဒ ပြည်သူယေရုရှလင် မြို့သား များအပေါင်း တို့၊ ထာဝရဘုရား ၏ နှုတ်ကပတ် တော်ကို နားထောင် ကြလော့။
அங்கே நீ அவர்களிடம், ‘இந்த வாசல்களில் உட்செல்லும் யூதாவின் அரசர்களே! யூதாவின் மக்களே! எருசலேமில் குடியிருக்கிறவர்களே! நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள் என்று சொல்.
21 ၂၁ ထာဝရဘုရား မိန့် တော်မူသည်ကား ၊ ဥပုသ် နေ့ ၌ ဝန် ကိုမ ထမ်းမရွက် ၊ ယေရုရှလင် မြို့တံခါး ဖြင့် မဆောင် မသွင်းမည်အကြောင်း ၊ သတိ ပြုကြလော့။
யெகோவா சொல்வது இதுவே; எருசலேமின் வாசல்களின் வழியே ஓய்வுநாளில் ஒரு சுமையாவது சுமந்து செல்லாதிருக்கவும் அல்லது உள்ளே கொண்டுவராமல் இருக்கவும் கவனமாயிருங்கள்.
22 ၂၂ ဥပုသ် နေ့ ၌ သင် တို့အိမ် ထဲက ဝန် ကို မထုတ် မ ဆောင်ကြနှင့်။ အဘယ် အလုပ်ကိုမျှမ လုပ် ကြနှင့်။ သင် တို့ဘိုးဘေး များကို ငါမှာ ထားသည်အတိုင်း ၊ ဥပုသ် နေ့ ကို သန့်ရှင်း စေကြလော့။
நீங்கள் ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து எந்தச் சுமையையும் கொண்டுவராமலும், எந்த ஒரு வேலையையும் செய்யாமலும் இருங்கள். அந்த நாளை நான் உங்கள் முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி, பரிசுத்த நாளாக கைக்கொள்ளுங்கள் என்றேன்.
23 ၂၃ ဘိုးဘေးတို့သည် နား မ ထောင်၊ နား ကိုမ လှည့် ဘဲ နေကြ၏။ နားမ ကြား ၊ ဆုံးမ ခြင်းကို မ ခံ မည်အကြောင်း၊ မိမိ တို့လည်ပင်း ကို ခိုင်မာ စေကြ၏။
இருப்பினும் அவர்கள் அதைக் கேட்கவுமில்லை; கவனிக்கவுமில்லை. அவர்கள் பிடிவாதமுள்ளவர்களாய் என் புத்திமதியைக் கேட்காமலும், என் திருத்துதலை ஏற்றுக்கொள்ளாமலும் இருந்தார்கள்.
24 ၂၄ ထာဝရဘုရား မိန့် တော်မူသည်ကား၊ သင်တို့သည် ဥပုသ် နေ့ ၌ ဤ မြို့ တံခါး ဖြင့် ဝန် ကို မသွင်း မဆောင်၊ အဘယ် အလုပ် ကိုမျှမ လုပ် ၊ ဥပုသ် နေ့ ကို သန့်ရှင်း စေသည် တိုင်အောင် ၊ ငါ့စကားကို စေ့စေ့နားထောင် လျှင် ၊
ஆனால் யெகோவா அறிவிக்கிறதாவது, நீங்கள் எனக்குக் கீழ்ப்படியக் கவனமாயிருந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் கைக்கொள்ளுங்கள். அந்நாளில் இந்தப் பட்டணத்து வாசல்களுக்குள்ளே, ஒரு சுமையையும் கொண்டுவராமலும், ஒரு வேலையையும் செய்யாமலும் இருங்கள்.
25 ၂၅ ဒါဝိဒ် မင်းကြီး၏ ရာဇ ပလ္လင်ပေါ် မှာ ထိုင် သော ရထား စီး ၊ မြင်း စီးရှင်ဘုရင် ၊ မင်း သားမှစ၍သူတို့မှူးမတ် ၊ ယုဒ ပြည်သူ ၊ ယေရုရှလင် မြို့သား တို့သည် ဤ မြို့ တံခါး များ သို့ ဝင် လျက်ရှိကြလိမ့်မည်။ ဤ မြို့ သည်လည်း အစဉ် အမြဲတည် လိမ့်မည်။
அப்பொழுது தாவீதின் அரியணையில் அமரும் அரசர்கள், அவர்களுடைய அதிகாரிகளுடன் இந்தப் பட்டணத்து வாசல்களுக்குள் வருவார்கள். அவர்களும், அவர்கள் அதிகாரிகளும் தேர்களிலும், குதிரைகளிலும் ஏறி வருவார்கள். அவர்களுடன் யூதா மனிதர்களும் எருசலேமில் வாழ்பவர்களும் வருவார்கள். இப்பட்டணமும் என்றைக்கும் குடிமக்களை உடையதாயிருக்கும்.
26 ၂၆ မီးရှို့ ရာယဇ်မှစ၍ အခြားသော ယဇ် များ၊ ပူဇော် သက္ကာများ၊ မီးရှို့ရာနံ့သာ ပေါင်း၊ ချီးမွမ်း ရာ ယဇ်တို့ကို ထာဝရဘုရား ၏ အိမ် တော်သို့ ဆောင် ခဲ့သောသူတို့ သည် ယုဒ မြို့ များ၊ ယေရုရှလင် မြို့ပတ်ဝန်းကျင် အရပ်များ၊ ဗင်္ယာမိန် ပြည် ၊ မြေညီ ခရိုင်၊ တောင် ရိုးခရိုင်၊ တောင် မျက်နှာခရိုင်မှ လာ ကြလိမ့်မည်။
யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமைச் சுற்றியுள்ள கிராமங்களிலுமிருந்து மக்கள் வருவார்கள். பென்யமீன் பிரதேசத்திலிருந்தும், மேற்கு மலையடிவாரங்களிலிருந்தும், மலைநாட்டிலும், யூதாவின் தெற்குப் பகுதிகளிலிருந்தும் வருவார்கள். அவர்கள் தகன காணிக்கைகளையும், பலிகளையும், தானிய காணிக்கைகளையும், தூபங்களையும், நன்றியறிதல் காணிக்கைகளையும் யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவருவார்கள்.
27 ၂၇ သို့မဟုတ်၊ ဥပုသ် နေ့ ၌ ဝန် ကို ထမ်းရွက် ၍၊ ယေရုရှလင် မြို့တံခါး များသို့ မ ဝင် ၊ ဥပုသ် နေ့ ကို သန့်ရှင်း စေ သည်တိုင်အောင် ၊ သင်တို့သည် ငါ့ စကားကို နား မ ထောင်လျှင် ၊ ငါသည် ထိုမြို့ တံခါး တို့ကို မီးရှို့ ၍ ၊ ထိုမီးသည် မ ငြိမ်း မသေဘဲ ယေရုရှလင် မြို့ဘုံ ဗိမာန်တို့ကို လောင် ရ လိမ့်မည်။
ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படியாமல், ஓய்வுநாளை பரிசுத்தமாகக் கைக்கொள்ளத் தவறி, அந்த நாளில் பாரத்தைச் சுமந்துகொண்டு எருசலேமின் வாசல்களின் வழியே வருவீர்களானால், நான் எருசலேமின் வாசல்களில் அணைக்க முடியாத நெருப்பை மூட்டுவேன். அது எருசலேமின் அரண்களைச் சுட்டெரிக்கும்’ என்று யெகோவா அறிவிக்கிறார்.”

< ယေရမိ 17 >