< ဟေရှာယ 59 >

1 ကြည့်ရှုလော့။ ထာဝရဘုရား သည် မကယ် မတင် နိုင်အောင် လက် တော်တို သည်မ ဟုတ်။ မကြား နိုင်အောင် နား တော်ထိုင်း သည်မ ဟုတ်။
நிச்சயமாகவே, காப்பாற்ற முடியாதபடி யெகோவாவின் கரம் குறுகிப்போகவில்லை; கேட்க முடியாதபடி அவருடைய காது மந்தமாகவுமில்லை.
2 သင် တို့ဒုစရိုက် သည် သင် တို့ကို ဘုရား သခင်နှင့် ကွာ စေပြီ။ ကြား တော်မမူစေခြင်းငှါ၊ သင် တို့အပြစ် သည် မျက်နှာ တော်ကို လွှဲ စေပြီ။
ஆனால், உங்களுடைய பாவங்களே, உங்கள் இறைவனிடமிருந்து உங்களைப் பிரித்திருக்கின்றன. உங்கள் பாவங்களே அவர் செவிசாய்க்காதபடி, அவருடைய முகத்தை உங்களிடமிருந்து மறைத்திருக்கின்றன.
3 သင် တို့လက် သည် အသွေး နှင့် ၎င်း၊ လက်ချောင်း တို့သည် ဒုစရိုက် နှင့် ၎င်း ညစ်ညူး ကြ၏။ သင် တို့သည် နှုတ်ခမ်းနှင့် လျှာ အားဖြင့်မုသာ စကား၊ အဓမ္မ စကားကို ပြော တတ်ကြ၏။
ஏனெனில் உங்கள் கைகள் இரத்தத்தினாலும், உங்கள் விரல்கள் குற்றத்தினாலும் கறைபட்டிருக்கின்றன; உங்கள் உதடுகள் பொய்களைப் பேசி, உங்கள் நாவுகள் கொடுமையானவற்றை முணுமுணுத்திருக்கின்றன.
4 တရား ကို အဘယ်သူ မျှမရှာ ၊ သစ္စာ ကို အဘယ်သူ မျှမစောင့် ၊ အနတ္တ ကို ကိုးစား ၍ မုသာ စကားကို ပြော တတ်ကြ၏။ မ ကောင်းသောအကြံကို ပဋိသန္ဓေ ယူ၍ ၊ အဓမ္မ အမှုကို ဘွား ကြ၏။
ஒருவனும் நீதிக்காக வாதாடுவதில்லை; ஒருவனும் உத்தமமாய் தன் வழக்கைப் பேசுவதில்லை. அவர்கள் அர்த்தமற்ற விவாதத்தில் நம்பிக்கை வைத்து, பொய் பேசி, தீங்கைக் கருத்தரித்து பாவத்தைப் பெற்றெடுக்கிறார்கள்.
5 သူတို့သည် မြွေဆိုး ၏ အဥ တို့ကို ဝပ်၍ ပေါက် စေကြ၏။ ပင့်ကူ အမြှေး ကိုလည်း ရက် ကြ၏။ သူ တို့ ဥ များ ကို စား သောသူသည် သေ တတ်၏။ အဥကို ခွဲ လျှင် မြွေဆိုး ပေါက် တတ်၏။
அவர்கள் விரியன் பாம்பின் முட்டைகளை அடைகாத்து, சிலந்தி வலையைப் பின்னுகிறார்கள். அவைகளின் முட்டையை உண்பவன் எவனும் சாவான்; அவைகளில் ஒன்று உடைந்தால் விரியன் பாம்பு வெளிவரும்.
6 သူ တို့ရက်သော အမြှေး ဖြင့် အဝတ် ကို မ လုပ် ရ။ ကိုယ် အကျင့် နှင့် ကိုယ်ကိုမ ခြုံ ရကြ။ သူ တို့ပြု သောအမှုသည် အဓမ္မ အမှု ဖြစ်၏။ သူ တို့လက် ၌ ကြမ်းတမ်း သော အမှုရှိ၏။
அவர்களின் சிலந்தி வலைப் பின்னல்கள், உடைக்கு உபயோகமற்றவை; அவர்கள் செய்தவற்றால் தங்களை மூடிக்கொள்ளவும் இயலாது. அவர்களுடைய செயல்களெல்லாம் தீமையானவையே; அவர்களின் கைகளில் வன்செயல்களே இருக்கின்றன.
7 သူ တို့ခြေ သည် အဓမ္မ အမှုကို ပြုခြင်းငှါ ပြေး တတ်၏။ အပြစ် မရှိသောသူ ၏အသက် ကို သတ် ခြင်းငှါ လျင်မြန် ၏။ သူ တို့အကြံ သည် အဓမ္မ အကြံ ဖြစ်၍၊ သူ တို့ သွားရာလမ်း ၌ ပျက်စီး ခြင်းနှင့် ဒုက္ခ ဆင်းရဲခြင်း ရှိ၏။
அவர்களுடைய கால்கள் தீமைசெய்ய விரைகின்றன; குற்றமற்றவர்களின் இரத்தத்தைச் சிந்துவதற்கு அவர்கள் விரைகிறார்கள். அவர்கள் சிந்தனைகளும் தீமையான சிந்தனையே; பாழாக்குதலும் அழிவும் அவர்களின் வழித்தடங்களில் இருக்கின்றன.
8 ချမ်းသာ လမ်း ကို သူတို့မ သိ ကြ။ သူ တို့ခရီး သွားရာတွင် တရား မ ပါ။ မိမိ တို့သွားစရာဘို့ ကောက် သော လမ်း တို့ကို ပြင်ဆင်ကြပြီ။ လိုက် သွားသော သူမည်သည် ကား၊ ချမ်းသာ ကို မ သိ ရ။
சாமாதானத்தின் வழியை அவர்கள் அறியமாட்டார்கள்; அவர்களின் பாதைகளில் நீதி இல்லை. அவர்கள் தங்கள் பாதைகளைக் கோணலாக்கிக் கொண்டார்கள்; அதில் நடப்பவர் எவருக்கும் சமாதானம் இல்லை.
9 ထို့ကြောင့် ၊ ဖြောင့်မတ် စွာ စီရင်ခြင်းသည် ငါ တို့ နှင့် ဝေး ၏။ တရား သည်လည်း ငါ တို့ကိုမ မှီ။ အလင်း ကို မြော်လင့် သောအခါ ရှင်းလင်း ခြင်းမရှိ။ ရောင်ခြည် ကို မြော်လင့် သော်လည်း ၊ မှောင်မိုက် ၌ သွား လာရကြ၏။
ஆகையால் நியாயம் எங்களுக்குத் தூரத்திலே இருக்கிறது, நீதி எங்களை நெருங்குவதில்லை; வெளிச்சத்தை எதிர்பார்த்திருந்தோம், ஆனால் எல்லாமே இருளாயிருக்கின்றன. பிரகாசத்தை எதிர்பார்த்திருந்தோம், ஆனாலும் காரிருளிலேயே நடக்கிறோம்.
10 ၁၀ မ မြင်နိုင်သော သူကဲ့သို့ နံရံ ကို စမ်းသပ် ရကြ၏။ မျက်စိ မ ရှိသော သူကဲ့သို့ စမ်းသပ်ရကြ၏။ ည အချိန်၌ ဖြစ်သကဲ့သို့ မွန်းတည့် အချိန်၌ ထိမိ ၍ လဲ ကြ၏။ စည်းစိမ် ကို ခံစားလျက်၊ သေ သောသူကဲ့သို့ ဖြစ်ကြ၏။
நாங்கள் குருடர்களைப்போல் சுவரைப் பிடித்து, தடவித் திரிகிறோம்; கண்கள் இல்லாதவர்களைப்போல் எங்கள் வழியில் தடுமாறுகிறோம். மங்கிய மாலைப் பொழுதில் இடறுகிறதுபோல நடுப்பகலில் இடறுகிறோம்; பெலனுள்ளவர்கள் மத்தியில் மரித்தவரைப்போல் இருக்கிறோம்.
11 ၁၁ ငါ တို့ရှိသမျှ သည် ဝံ ကဲ့သို့ မြည်တမ်း ၍ ၊ ချိုး ကဲ့သို့ ညည်းညူ ကြ၏။ တရား စီရင်ခြင်းကို မြော်လင့် ၍ မ ရကြ။ ကယ်တင် ခြင်းကျေးဇူးကို မြော်လင့်သော်လည်း၊ ငါ တို့နှင့် ဝေး လှ၏။
நாங்கள் யாவரும் கரடிகளைப்போல் உறுமுகிறோம்; புறாக்களைப்போல் கவலையுடன் விம்முகிறோம். நியாயத்திற்குக் காத்திருந்தோம், ஆனால் அதைக் காணவில்லை; விடுதலையை எதிர்பார்த்திருந்தோம், அதுவும் தூரத்திலேயே இருக்கிறது.
12 ၁၂ ငါ တို့အပြစ် တို့သည် ရှေ့ တော်၌ များ ပြားကြ၏။ ဒုစရိုက် တို့သည် ငါ တို့တစ်ဘက် ၌ သက်သေ ခံကြ၏။ ကိုယ် အပြစ် တို့သည် ကိုယ် ၌ စွဲကပ်လျက် ၊ ကိုယ် ပြုမိသော ဒုစရိုက် များကို ကိုယ်သိ ကြ၏။
எங்கள் மீறுதல்கள் உமது பார்வையில் அநேகமாய் இருக்கின்றன, எங்கள் பாவங்கள் எங்களுக்கு எதிராகச் சாட்சி பகிருகின்றன. எங்கள் மீறுதல்கள் எப்போதும் எங்களுடனேயே இருக்கின்றன; எங்கள் அநியாயங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
13 ၁၃ ထာဝရဘုရား ကို ပြစ်မှား ခြင်း၊ ငြင်းပယ် ခြင်းကို ပြု၍ ၊ ငါ တို့၏ဘုရား သခင်ကို စွန့် ကြပြီ။ ညှဉ်းဆဲ သော စကား၊ ပုန်ကန် သော စကားကို ပြော ခြင်း၊ မ ဟုတ်မမှန် သောစကား ကို အောက်မေ့ ၍ ၊ စိတ်နှလုံး ထဲက မြွက်ဆို ခြင်းကို ပြုကြပြီ။
யெகோவாவுக்கு விரோதமாகக் கலகமும் நம்பிக்கைத் துரோகமும் செய்தோம்; எங்கள் இறைவனுக்கு முதுகைக் காட்டினோம். ஒடுக்குதலையும் கிளர்ச்சியையும் குறித்துப்பேசி, எங்கள் இருதயங்களில் கருத்தரித்த பெரும் பொய்களை வெளிப்படுத்தினோம்.
14 ၁၄ ဖြောင့်မတ် စွာ စီရင်ခြင်းသည် ဆုတ် သွားပြီ။ တရား သည် အဝေး က ရပ် ၍ နေ၏။ သစ္စာ သည် လမ်း ၌ လဲ ပြီ။ ဖြောင့် သောသဘော မ ဝင် နိုင် ရာ။
அதனால், நியாயம் பின்னே தள்ளப்பட்டிருக்கிறது; நீதி தூரத்திலே நிற்கிறது; உண்மை தெருக்களில் இடறி, உத்தமம் உள்ளே வரமுடியாமல் இருக்கிறது.
15 ၁၅ သစ္စာ သည် ပျက် ခဲ့ပြီ။ ဒုစရိုက် ကို ရှောင် သောသူသည် လုယူ ခြင်းကို ခံရ၏။ ထိုအမှုကို ထာဝရဘုရား သည် မြင် လျှင် ၊ တရား မ ရှိသောကြောင့် မုန်း တော်မူ၏။
ஒரு இடத்திலும் உண்மை காணப்படவில்லை; தீமையைவிட்டு விலகுகிறவர்கள் இரையாவார்கள். யெகோவா அதைக்கண்டு, அங்கு நியாயமில்லாதபடியால், கோபங்கொண்டார்.
16 ၁၆ လူတ ယောက်မျှမ ရှိသည်ကို မြင် တော်မူ၏။ တောင်းပန် သောသူတယောက်မျှမ ရှိသည်ကို အံ့ဩ တော်မူ ၏။ ထိုကြောင့် ၊ မိမိ လက် တော်သည် မိမိ အဘို့ ကယ်တင် ခြင်းအမှုကိုပြု၍ ၊ မိမိ ဖြောင့်မတ် ခြင်းတရားသည် မိမိ ကို ထောက်ပင့် ၏။
அங்கே ஒருவனும் இல்லாததை அவர் கண்டார், பரிந்து பேசுவதற்கு அங்கு ஒருவரும் இல்லையென அவர் கண்டு திகைப்படைந்தார். எனவே அவரின் சொந்தக் கரமே அவருக்கு இரட்சிப்பைக் கொண்டுவந்தது; அவருடைய சொந்த நீதியே அவரைத் தாங்கியது.
17 ၁၇ ဖြောင့်မတ် ခြင်းတရားတည်းဟူသောရင်ကျပ် ကို ဝတ်ဆင် ၍ ၊ ကယ်တင် ခြင်းတည်းဟူသောသံခမောက် လုံးကို ဆောင်း တော်မူ၏။ အပြစ် ပေးခြင်းအဝတ် ကို၎င်း ၊ စိတ် အားကြီးခြင်းဝတ်လုံ ကို၎င်းယူတင်ဝတ်ဆောင် တော်မူ ၏။
அவர் நீதியைத் தனது மார்புக்கவசமாய் அணிந்து, இரட்சிப்பின் தலைச்சீராவைத் தலையில் வைத்துக்கொண்டார்; அநீதிக்குப் பழிவாங்குதலின் உடையை அவர் உடுத்தி, வைராக்கியத்தைத் தன் மேலங்கியாகப் போர்த்துக்கொண்டார்.
18 ၁၈ သူတို့အကျင့် အတိုင်း အကျိုးအပြစ်ကို ဆပ် ပေးတော်မူမည်။ ရန်ဘက် ပြုသောသူတို့ အား အမျက် တော် ကို၎င်း၊ ရန်သူ တို့ ခံထိုက်သည်အတိုင်း အပြစ် ကို၎င်း၊ တကျွန်း တနိုင်ငံသားတို့အား အကျိုးအပြစ်ကို၎င်းဆပ်ပေး တော်မူမည်။
அவர்கள் செய்தவற்றுக்கேற்ப அவர் பதிலளிப்பார். கடுங்கோபத்தைத் தனது எதிரிகளுக்கும், தண்டனையைப் பகைவர்களுக்கும் கொடுப்பார்; தீவுகளுக்கும் அவைகளின் செய்கைக்கேற்ப பதிலளிப்பார்.
19 ၁၉ သို့ ဖြစ်၍၊ အနောက် မျက်နှာသားတို့နှင့်၊ နေ ထွက် ရာအရပ်သားတို့သည် ထာဝရဘုရား ၏ နာမ တော်နှင့် ဘုန်း တော်ကို ရိုသေ ကြလိမ့်မည်။ ရန်သူ သည် ရေ လွှမ်းမိုးသကဲ့သို့ ဝင် သောအခါ ၊ ထာဝရဘုရား ၏ ဝိညာဉ် တော် သည် ဆီးတား တော်မူမည်။
மேற்கிலுள்ள மனிதர் யெகோவாவின் பெயருக்குப் பயப்படுவார்கள்; சூரியன் உதிக்கும் திசையிலுள்ளவர்கள் அவருடைய மகிமை நடுங்குவார்கள். ஏனெனில், யெகோவாவின் சுவாசத்தினால் அடித்துச் செல்லப்படும் காட்டாற்று வெள்ளம்போல் அவர் வருவார்.
20 ၂၀ ထာဝရဘုရား မိန့် တော်မူသည်ကား၊ ရွေးနှုတ် သောသခင်သည် ဇိအုန် တောင်ပေါ် သို့ ကြွ၍ ၊ မတရား သော အမှုမှလွှဲ သော ယာကုပ် အမျိုးသားတို့ ရှိရာသို့ ရောက် လတံ့။
“தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பிய யாக்கோபின் வழித்தோன்றல்களிடம், சீயோனுக்கு மீட்பர் வருவார்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
21 ၂၁ သူ တို့၌ ငါ ကိုယ်တိုင်ပေးသော ပဋိညာဉ် တရား ဟူမူကား၊ သင် ၏အပေါ် မှာ ကျိန်းဝပ်သော ငါ ၏ဝိညာဉ် နှင့် သင် ၏နှုတ် ၌ ငါထား သော စကား သည်၊ ယခု မှ စ၍ ကာလအစဉ် အဆက် သင် ၏နှုတ် ၊ သင့် အမျိုး အနွယ်၏ နှုတ် နှင့် ၊ သင့် အမျိုး အနွယ်၏ အမျိုး အနွယ်၏နှုတ် ထဲက မ ထွက် မပျောက်ရဟု ထာဝရဘုရား မိန့် တော်မူ၏။
“என்னைப் பொறுத்தவரை அவர்களுடன் எனது உடன்படிக்கை இதுவே” என்று யெகோவா சொல்கிறார். “உன் மேலிருக்கும் எனது ஆவியானவரும், உன் வாயில் நான் வைத்த என் வார்த்தைகளும் உன் வாயைவிட்டு நீங்கமாட்டாது, அவை உன் பிள்ளைகளின் வாய்களிலிருந்தும், அவர்களின் சந்ததிகளின் வாய்களிலிருந்தும் இப்பொழுதிலிருந்து என்றென்றைக்கும் நீங்கமாட்டாது” என்று யெகோவா சொல்கிறார்.

< ဟေရှာယ 59 >