< ဟေရှာယ 34 >

1 အိုလူမျိုး တို့၊ သင်တို့သည် ကြား ရ အံ့သောငှါ ချဉ်းကပ် ကြလော့။ အို လူစု တို့၊ နားထောင် ကြလော့။ မြေကြီး နှင့် မြေကြီး ၌ ပါသမျှ သော အရာ၊ လောက ဓါတ် နှင့် လောက ဓါတ် တန်ဆာ ခပ်သိမ်း တို့သည် ကြား ကြ ပါစေ။
நாடுகளே, நீங்கள் அருகில் வந்து கேளுங்கள்; மக்கள் கூட்டங்களே, நீங்கள் கவனியுங்கள். பூமியும் அதிலுள்ள யாவும் கேட்கட்டும், உலகமும் அதிலிருந்து வரும் அனைத்தும் கேட்கட்டும்.
2 ထာဝရဘုရား ၏ အမျက် တော်သည် လူမျိုး အပေါင်း တို့၌ ထွက်၍ ၊ ပြင်းစွာသောအမျက် တော်သည် သူ တို့ အလုံး အရင်းအပေါ် မှာ သင့်ရောက်လေ၏။ သူ တို့ကို ရှင်းရှင်းဖျက်ဆီး ၍၊ အသေ သတ်ခြင်း၌ အပ် လိုက်တော်မူ ၏။
யெகோவா எல்லா நாடுகளோடும் கோபமாயிருக்கிறார்; அவருடைய கோபம் அவர்களுடைய எல்லா இராணுவத்தின்மேலும் இருக்கிறது. அவர் அவர்களை முற்றிலும் அழிப்பார்; அவர் அவர்களைக் கொலைக்கு ஒப்புக்கொடுப்பார்.
3 သူ တို့တွင် အသေခံရသောသူတို့ ကို ပြင်သို့ ပစ် လိုက်သဖြင့် ၊ အသေ ကောင်တို့သည် နံစော် ၍ ၊ သူ တို့၏ အသွေး ဖြင့် တောင် တို့သည် အရည် ဖြစ်ကြလိမ့်မည်။
அவர்களில் கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியப்படுவார்கள், இறந்தவர்களின் உடல்கள் துர்நாற்றம் வீசும்; மலைகள் அவர்களுடைய இரத்தத்தினால் ஊறியிருக்கும்.
4 ခပ်သိမ်း သော ကောင်းကင် တန်ဆာ တို့သည် ပြုတ် ၍ ၊ မိုဃ်းကောင်းကင် သည်စာလိပ် ကဲ့သို့ လိပ် လျက် ရှိလိမ့်မည်။ စပျစ် နွယ်ပင်မှ အရွက် ကျ သကဲ့သို့ ၎င်း၊ သင်္ဘော သဖန်းပင်မှ အသီးကျ သကဲ့သို့ ၎င်း၊ ခပ်သိမ်း သော ကောင်းကင်တန်ဆာ တို့သည် ကျ ကြလိမ့်မည်။
வானத்து நட்சத்திரங்கள் அனைத்தும் இல்லாமற்போகும்; ஆகாயம் ஒரு சுருளைப்போல் சுருட்டப்படும். வானசேனை அனைத்தும் திராட்சைக் கொடியிலிருந்து வாடிய இலைகள் உதிர்வதுபோலவும், சூம்பிப்போன காய்கள் அத்திமரத்திலிருந்து விழுவதுபோலவும் விழும்.
5 အကြောင်း မူကား၊ ငါ့ ထား သည် မိုဃ်းကောင်းကင် ၌ ရောင့်ရဲ ပြီးမှ၊ တဖန် ဧဒုံ ပြည် အပေါ်မှာ၎င်း၊ ငါ ကျိန် သောလူ များတို့အပေါ် မှာ၎င်း၊ ဒဏ် ပေးခြင်းငှါရောက်လိမ့်မည်။
எனது வாள் தன் நிறைவை வானங்களில் குடித்திருக்கிறது; இதோ, நான் முழுவதும் அழித்துப்போட்ட ஏதோம் மக்களை நியாயந்தீர்ப்பதற்காக அது கீழே வருகிறது.
6 ထာဝရဘုရား ၏ ထား တော်သည် အသွေး နှင့် ဝ ပြီ။ ဆီဥ နှင့် ဆူ ပြီ။ သိုးသငယ် နှင့် ဆိတ် တို့၏ အသွေး ၊ သိုး ထီးတို့၏ ကျောက်ကပ် ဆီဥ နှင့် ဆူဝပြီ။ ထာဝရဘုရား သည် ဗောဇရ မြို့၌ ယဇ် ပွဲကို၎င်း၊ ဧဒုံ ပြည် ၌ ကြီး စွာသော သတ် ခြင်းပွဲကို၎င်း ခံတော်မူ၏။
யெகோவாவின் வாள் இரத்தத்தில் தோய்ந்திருக்கிறது, அது கொழுப்பினால் மூடப்பட்டிருக்கிறது. அது செம்மறியாட்டுக் குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தாலும், செம்மறியாட்டுக் கடாக்களின் சிறுநீரகக் கொழுப்பினாலும் மூடப்பட்டிருக்கிறது. ஏனெனில் யெகோவா போஸ்றா பட்டணத்தில் ஒரு பலியையும், ஏதோமில் ஒரு வதையையும் நியமித்திருக்கிறார்.
7 ကြံ့ များနှင့် နွားလား ဥသဘများတို့သည် လဲ ကြ သဖြင့်၊ သူ တို့နေရာမြေ သည် သူတို့အသွေး နှင့် ယစ်မူး ၍၊ မြေမှုန့် သည်လည်း ဆီဥ နှင့် ဆူဝ လိမ့်မည်။
காளைக் கன்றுகளும், பெரும் எருதுகளுமாக காட்டெருதுகள் அவைகளுடன் விழும். அவர்களுடைய நாடு இரத்தத்தில் தோய்ந்திருக்கும், புழுதியும் கொழுப்பில் ஊறியிருக்கும்.
8 ထာဝရဘုရား ဒဏ် ပေးတော်မူရာနေ့ ၊ ဇိအုန် မြို့ ၏ အမှု ကိုစောင့်၍ အပြစ် ပေးတော်မူရာ နှစ် ရောက်လေပြီ။
ஏனெனில் யெகோவா பழிவாங்கும் நாளொன்றை வைத்திருக்கிறார்; சீயோனின் வழக்கில் நீதி வழங்குவதற்காக ஒரு வருடத்தை வைத்திருக்கிறார்.
9 ထိုပြည် ၏မြစ် ရေသည် ထင်းရူး စေး၊ မြေမှုန့် လည်း ကန့် ၊ တပြည် လုံးလည်း မီး လောင်သော အစေး ဖြစ် လိမ့်မည်။
ஏதோமின் நீரோடைகள் நிலக்கீலாக மாறும், நிலத்தின் புழுதி எரியும் கந்தகமாகவும், அதன் நிலம் எரியும் கீலாகவும் மாறும்.
10 ၁၀ နေ့ ညဉ့် မပြတ် မီးမ ငြိမ်း ရ။ မီးခိုး လည်း အစဉ် တက် လိမ့်မည်။ ထိုပြည်သည် လူမျိုး အစဉ်အဆက် ဆိတ်ညံ ၍၊ ကာလအစဉ် အမြဲ အဘယ်သူမျှမ ရှောက် မသွားရ။
அது இரவிலும் பகலிலும் தணிக்க முடியாதபடி இருக்கும்; அதன் புகை என்றென்றும் புகைந்துகொண்டே இருக்கும். தலைமுறை தலைமுறையாக அது பாழடைந்து கிடக்கும், மீண்டும் அதன் ஊடாக யாரும் போகமாட்டார்கள்.
11 ၁၁ ဝံပို ငှက် နှင့် ဖြူ ကောင်တို့သည် ထိုပြည် ကို အမွေ ခံ၍ ၊ ဣဗိတ် ငှက် နှင့် ကျီးအ တို့သည်လည်း နေ ကြလိမ့်မည်။ ထိုမြေ အပေါ် မှာ လွတ်လပ် ခြင်း မျဉ်း ကြိုးကို တန်း ၍ ၊ လဟာ မှန် ထုပ်ကို စီရင်တော်မူလိမ့်မည်။
பாலைவன ஆந்தையும் அலறும் ஆந்தையும் அதைத் தங்கள் உடைமை ஆக்கிக்கொள்ளும்; பெரிய ஆந்தையும், காகமும் தமது கூடுகளை அங்கு அமைக்கும். இறைவன் ஏதோமுக்கு மேலாக குழப்பத்தின் அளவுகோலையும், அழிவின் தூக்கு நூலையும் நீட்டிப் பிடிப்பார்.
12 ၁၂ မင်းအရာ၌ ချီးမြှောက်ရသောမှူး တော်မတ် တော် မ ရှိရ။ မင်း ရိုးပြတ် ရလိမ့်မည်။
உயர்குடி மக்களுக்கு அரசு எனச் சொல்லிக்கொள்ள அங்கு ஒன்றுமே இராது; இளவரசர்கள் அனைவரும் இல்லாமல் போவார்கள்.
13 ၁၃ ဘုံ ဗိမာန်တို့၌၎င်း၊ ရဲတိုက် တို့၌ ၎င်း၊ ဆူး ပင်အမျိုးမျိုးပေါက်ကြလိမ့်မည်။ မြေခွေး ခို ရာ၊ ကုလားအုတ် ငှက် နေရာ ဖြစ် ရလိမ့်မည်။
அதனுடைய அரண்செய்யப்பட்ட பட்டணங்களின்மேல் முட்செடிகள் படரும்; காஞ்சொறிகளும் கள்ளிச்செடிகளும் அதன் கோட்டைகளில் படரும். அது நரிகளுக்குத் தங்குமிடமும் ஆந்தைகளுக்கு குடியிருப்புமாகும்.
14 ၁၄ ထိုအရပ်၌ တောသားရဲ တို့သည် တောခွေး တို့ နှင့် တွေ့ကြုံ ကြလိမ့်မည်။ မျောက် တို့သည် အချင်းချင်း တကောင်ကို တကောင် မြည် ကြလိမ့်မည်။ ထို အရပ်၌ လိလိတ် ငှက်သည်လည်း နား ၍ခိုလှုံရာကို တွေ့ လိမ့်မည်။
பாலைவன பிராணிகளும், கழுதைப்புலிகளுடன் ஒன்றுசேரும்; காட்டாடுகளும் ஒன்றையொன்று பார்த்துக் கத்தும். இரவுப் பிராணிகளும் அங்கு இளைப்பாறி தங்களுக்குத் தங்கும் இடங்களைத் தேடும்.
15 ၁၅ ခုန်တတ်သော မြွေသည်လည်း၊ ထို အရပ်၌ အသိုက် လုပ်၍ ဥ လိမ့်မည်။ အဥပေါက် ပြီးမှ မြွေသငယ်တို့ကို စုသိမ်း၍ ကွယ်ကာ လိမ့်မည်။ လင်းတ တို့သည်လည်း ထို အရပ် ၌ စုဝေး ၍၊ အထီး အမများ ပေါင်းကြလိမ့်မည်။
ஆந்தைகள் அங்கே கூடுகட்டி, முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, அவைகளைத் தமது சிறகுகளின் நிழலில் பாதுகாக்கும்; வல்லூறுகளும் தத்தம் துணையுடன் அங்கே வந்துசேரும்.
16 ၁၆ ထာဝရဘုရား ၏ ကျမ်းစာ ကို ကြည့်ရှု ၍ ဘတ် ကြလော့။ ထို တိရစ္ဆာန်တကောင်မျှ မ ပေါ် ဘဲမနေရ။ အမ တကောင်မျှ မိမိအဘော် ကို မ လို ရ။ ထာဝရဘုရား ၏ နှုတ် တော်ထွက် အမိန့် တော်ရှိ၏။ ဝိညာဉ် တော်သည်လည်း သူ တို့ ကို စုဝေး စေတော်မူ၏။
யெகோவாவின் புத்தகச்சுருளை தேடி வாசியுங்கள்: இவற்றில் ஒன்றாவது தவறிப்போகாது, ஒன்றாவது தனக்குத் துணையில்லாமல் இராது; யெகோவாவின் வாயே இந்தக் கட்டளையைக் கொடுத்தது, அவரின் ஆவியானவர் இவற்றை ஒன்றுசேர்ப்பார்.
17 ၁၇ သူ တို့ကို စာရေးတံ ပြုလျက် ၊ လက် တော်နှင့် မျဉ်းကြိုး ကို တန်းလျက် ၊ သူ တို့နေရာကို ခွဲဝေ တော်မူ၏။ သူတို့ သည် ထိုပြည် ကို အမြဲ အမွေခံ ၍၊ အမျိုးအနွယ် အစဉ် အဆက်နေ ရကြလိမ့်မည်။
அவற்றிற்குரிய பாகங்களை அவரே பங்கிடுகிறார்; அவருடைய கரமே அவற்றை அளவுகளின்படி பகிர்ந்து கொடுக்கின்றன. அவை என்றென்றைக்கும் அதைத் தங்கள் சொந்தமாக்கி, தலைமுறை தலைமுறையாக அங்கே குடியிருக்கும்.

< ဟေရှာယ 34 >