< ကမ္ဘာ​ဦး 36 >

1 ဧဒုံ အမည်ရှိ သောဧသော အမျိုးအနွယ်၏ အတ္ထုပ္ပတ္တိ များဟူမူကား၊
ஏதோம் என்று அழைக்கப்படும் ஏசாவின் வம்சவரலாறு:
2 ဧသော သည် ဟိတ္တိ အမျိုးဧလုန် ၏သမီး အာဒ တယောက်၊ ဟိဝိ အမျိုးဇိဘောင် သား အာန ၏ သမီး အဟောလိဗာမ တယောက်၊ ခါနာန် အမျိုးသမီး နှစ်ယောက်နှင့်၎င်း၊
ஏசா கானான் நாட்டுப் பெண்களிலிருந்து மனைவிகளை எடுத்தான்: ஏத்தியனான ஏலோனின் மகள் ஆதாளையும், ஏவியனான சிபியோனின் பேத்தியும் ஆனாகின் மகளுமான அகோலிபாமாளையும் திருமணம் செய்தான்.
3 ဣရှမေလ သမီး တည်းဟူသောနဗာယုတ် နှမ ဗာရှမတ် တယောက်နှင့် ၎င်း အိမ် ထောင်လေ၏။
அத்துடன் இஸ்மயேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமான பஸ்மாத்தையும் மனைவியாக்கிக் கொண்டான்.
4 ဧသော မယား အာဒ ဘွား သော သားကား၊ ဧလိဖတ် ၊ ဗာရှမတ် ဘွား သောသားရွေလ တည်း။
ஆதாள் ஏசாவுக்கு எலிப்பாஸைப் பெற்றாள், பஸ்மாத் ரெகுயேலைப் பெற்றாள்.
5 အဟောလိဗာမ ဘွား သော သားကား၊ ယုရှ ၊ ယာလံ ၊ ကောရ တည်း။ ဤ သူတို့ကား၊ ခါနာန် ပြည် ၌ ဧသော မြင် သောသားတည်း။
அகோலிபாமாள் எயூஷ், யாலாம், கோராகு ஆகியோரைப் பெற்றாள். கானானில் ஏசாவுக்கு பிறந்த மகன்கள் இவர்களே.
6 ဧသော သည် မယား သား သမီး နှင့်တကွ ၊ အိမ်သူ အိမ်သားအပေါင်း တို့ကို၎င်း၊ သိုး နွား စသည်တို့နှင့် တိရစ္ဆာန် ရှိသမျှ တို့ကို၎င်း၊ ခါနာန် ပြည် ၌ ရ တတ်သော ဥစ္စာ ရှိသမျှ တို့ကို၎င်းယူ ၍ ၊ ညီ ယာကုပ် ထံ မှ ပြောင်းသွား လေ၏။
ஏசா தன் மனைவிகள், மகன்கள், மகள்களோடு, தன் வீட்டிலுள்ள எல்லோரையும் அழைத்துக்கொண்டு போனான். அவர்களுடன் தன் வளர்ப்பு மிருகங்களையும், மற்ற மிருகங்கள் எல்லாவற்றையும், கானானில் தான் சம்பாதித்த பொருட்கள் யாவற்றையும் எடுத்துக்கொண்டு, தன் சகோதரன் யாக்கோபை விட்டுச் சற்றுத் தூரமான நாட்டுக்குப் போனான்.
7 အကြောင်း မူကား၊ ထို သူနှစ်ပါးတို့သည် ဥစ္စာ များ လွန်းသောကြောင့်တရပ် တည်းမ နေ နိုင်ကြ။ သူ တို့ နေရာမြေ သည်၊ သူ တို့တိရစ္ဆာန် များကြောင့် မဆံ့ နိုင်ရာ။
அவர்களுடைய உடைமைகள் அதிகமாய் இருந்தபடியால், அவர்களால் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ முடியவில்லை; அவர்களுடைய வளர்ப்பு மிருகங்கள் அதிகமாய் இருந்தபடியால், அவர்கள் இருந்த நிலப்பகுதி அவர்களுக்கு போதுமானதாக இல்லை.
8 သို့ဖြစ်၍ ဧဒုံ အမည်ရှိသောဧသော သည် စိရ တောင် ပေါ်မှာ နေ လေ၏။
ஆதலால் ஏதோம் என்னும் ஏசா, சேயீர் மலைநாட்டில் குடியேறினான்.
9 စိရ တောင် ပေါ်မှာ ဧဒုံ အမျိုးသားတို့၏ အဘ ဧသော ၏ သားစဉ် မြေးဆက်တို့ကို ဆိုပေအံ့။
சேயீர் மலைநாட்டில் குடியிருந்த ஏதோமியரின் தகப்பனான ஏசாவின் வம்சவரலாறு.
10 ၁၀ ဧသော ၏ သား တို့အမည် ကား၊ မယား အာဒ ဘွားသောသား ဧလိဖတ် ၊ မယား ဗာရှမတ် ဘွားသော သား ရွေလ တည်း။
ஏசாவின் மகன்களின் பெயர்கள் இவையே: ஏசாவின் மனைவியான ஆதாளின் மகன் எலிப்பாஸ், ஏசாவின் மனைவியான பஸ்மாத்தின் மகன் ரெகுயேல்.
11 ၁၁ ဧလိဖတ် သား ကား၊ တေမန် ၊ ဩမရ ၊ ဇေဖေါ ၊ ဂါတံ ၊ ကေနတ် တည်း။
எலிப்பாஸின் மகன்கள்: தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள்.
12 ၁၂ ဧသော သား ဧလိဖတ် ၏ မယားငယ် ၊ တိမန ဘွား သောသားကား၊ အာမလက် တည်း။ ဤ သူတို့သည် ဧသော မယား အာဒ ၏အနွှယ် ဖြစ် သတည်း။
ஏசாவின் மகன் எலிப்பாஸுக்கு திம்னாள் என்னும் வைப்பாட்டி இருந்தாள்; அவள் அவனுக்கு அமலேக்கைப் பெற்றாள். இவர்கள் ஏசாவின் மனைவி ஆதாளின் பேரன்கள்.
13 ၁၃ ရွေလ သား ကား၊ နာဟတ် ၊ ဇေရ ၊ ရှမ္မ ၊ မိဇ္ဇ တည်း။ ဤ သူတို့သည် ဧသော မယား ဗာရှမတ် ၏အနွှယ် ဖြစ် သတည်း။
ரெகுயேலின் மகன்கள்; நாகாத், செராகு, சம்மா, மீசா. இவர்கள் ஏசாவின் மனைவி பஸ்மாத்தின் பேரன்கள்.
14 ၁၄ ဇိဘောင် သား အာန ၏သမီး ၊ ဧသော မယား အဟောလိဗာမ ဘွား သောသား ကား၊ ယုရှ ၊ ယာလံ ၊ ကောရ တည်း။
சிபியோனின் பேத்தியும் ஆனாகின் மகளுமான அகோலிபாமாள் ஏசாவுக்குப் பெற்ற மகன்கள்: எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.
15 ၁၅ ဧသော သား တို့တွင် ဗိုလ် လုပ်သောသူဟူမူကား ၊ သားဦး ဧလိဖတ် ၏သား ဗိုလ် တေမန် ၊ ဗိုလ် ဩမရ ၊ ဗိုလ် ဇေဖေါ ၊ ဗိုလ် ကေနတ်၊
ஏசாவின் சந்ததிகளில் வந்த வம்சத்தலைவர்கள்: ஏசாவின் மூத்த மகனான எலிப்பாஸின் மகன்கள்: தேமான், ஓமார், செப்போ, கேனாஸ்,
16 ၁၆ ဗိုလ် ဂါတံ ၊ ဗိုလ် အာမလက် တည်း။ ဤ ဗိုလ် တို့ သည် အာဒ ၏အနွှယ် ၊ ဧဒုံ ပြည် ၌ ဧလိဖတ် ရသောသားဖြစ်သတည်း။
கோராகு, கத்தாம், அமலேக்கு என்பவர்கள். ஏதோம் நாட்டிலுள்ள எலிப்பாஸின் வழிவந்த வம்சத்தலைவர்கள் இவர்களே. இவர்கள் ஆதாளின் பேரன்கள்.
17 ၁၇ ဧသော သား ရွေလ ၏ သား ကား၊ ဗိုလ် နာဟတ် ၊ ဗိုလ် ဇေရ ၊ ဗိုလ် ရှမ္မ ၊ ဗိုလ် မိဇ္ဇ တည်း။ ဤ ဗိုလ် တို့သည် ဧသော မယား ဗာရှမတ် ၏အနွှယ် ၊ ဧဒုံ ပြည် ၌ ရွေလ ရသောသားဖြစ်သတည်း။
ஏசாவின் மகன் ரெகுயேலின் மகன்கள்: நகாத், செராகு, சம்மா, மீசா ஆகியோரும் வம்சத்தலைவர்களே. இவர்கள் ஏதோம் நாட்டிலுள்ள ரெகுயேலின் வழிவந்த வம்சத்தலைவர்கள்; இவர்கள் ஏசாவின் மனைவி பஸ்மாத்தின் பேரன்கள்.
18 ၁၈ ဧသော မယား အဟောလိဗာမ ၏ သား ကား၊ ဗိုလ် ယုရှ ၊ ဗိုလ် ယာလံ ၊ ဗိုလ် ကောရ တည်း။ ဤ ဗိုလ် တို့သည် အာန ၏သမီး ၊ ဧသော မယား အဟောလိဗာမ သား ဖြစ်သတည်း။
ஏசாவின் மனைவி அகோலிபாமாளின் மகன்கள்: எயூஷ், யாலாம், கோராகு ஆகியோரும் வம்சத்தலைவர்களே. இவர்கள் ஆனாகின் மகளும் ஏசாவின் மனைவியுமான அகோலிபாமாளின் வழிவந்தவர்கள்.
19 ၁၉ ဧဒုံ အမည်ရှိသောဧသော ၏ သား မြေးများ၊ သူ တို့တွင် ဗိုလ် လုပ်သောသူများ၊ ဤ သို့တည်း။
ஏதோம் என்னும் ஏசாவின் மகன்கள் இவர்களே. இவர்கள் அவர்களின் வம்சத்தலைவர்கள்.
20 ၂၀ ထိုပြည် ၌နေ သောဟောရိ အမျိုး၊ စိရ ၏သား ကား၊ လောတန် ၊ ရှောဗလ ၊ ဇိဘောင် ၊ အာန၊
அந்த நிலப்பரப்பில் வாழ்ந்துகொண்டிருந்த ஓரியரான சேயீரின் மகன்கள்: லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு,
21 ၂၁ ဒိရှုန် ၊ ဧဇာ ၊ ဒိရှန် တည်း။ ဤ သူတို့သည် ဧဒုံ ပြည် ၌ ဟောရိ အမျိုး၊ စိရ ၏သား တို့တွင် ဗိုလ် လုပ်သောသူဖြစ် သတည်း။
திஷோன், ஏசேர், திஷான். ஏதோமிலிருந்த சேயீரின் இந்த மகன்கள் ஓரியரின் வம்சத்தலைவர்கள் ஆவர்.
22 ၂၂ လောတန် သား ကား၊ ဟောရိ နှင့် ဟေမံ တည်း။
லோத்தானின் மகன்கள்: ஓரி, ஓமாம். திம்னாள் லோத்தானின் சகோதரி.
23 ၂၃ ရှောဗလ သား ကား၊ အာလဝန် ၊ မနာဟတ် ၊ ဧဗလ ၊ ရှေဖေါ ၊ ဩနံ တည်း။
சோபாலின் மகன்கள்: அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம்.
24 ၂၄ ဇိဘောင် သား ကား၊ အာယ နှင့် အာန တည်း။ ထို အာန ကား ၊ အဘ ဇိဘောင် ၏ မြည်း တို့ကို ထိန်း သောအခါ ၊ တော ၌ နွေး သော စမ်းရေတွင်းတို့ကို တွေ့ သောသူ ပေတည်း။
சிபியோனின் மகன்கள்: அயா, ஆனாகு என்பவர்கள். இந்த ஆனாகுவே, தன் தகப்பன் சிபியோனின் கழுதைகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது, பாலைவனத்திலே வெந்நீரூற்றுக்களைக் கண்டுபிடித்தவன்.
25 ၂၅ အာန သား ကား၊ ဒိရှုန် နှင့် သမီး အဟောလိဗာမ တည်း။
ஆனாகின் பிள்ளைகள்: திஷோன், ஆனாகின் மகளான அகோலிபாமாள் என்பவர்கள்.
26 ၂၆ ဒိရှုန် သား ကား၊ ဟင်္ဒန် ၊ ဧရှဗန် ၊ ဣသရန် ၊ ခေရန် တည်း။
திஷோனுடைய மகன்கள்: எம்தான், எஸ்பான், இத்ரான், கெரான் என்பவர்கள்.
27 ၂၇ ဧဇာ သား ကား၊ ဗိလဟန် ၊ ဇာဝန် ၊ အာကန် တည်း။
ஏசேருடைய மகன்கள்: பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள்.
28 ၂၈ ဒိရှန် သား ကား၊ ဥဇ နှင့် အာရန် တည်း။
திஷானுடைய மகன்கள். ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
29 ၂၉ ဟောရိ အမျိုးဗိုလ် များကား ၊ ဗိုလ် လောတန် ၊ ဗိုလ် ရှောဗလ ၊ ဗိုလ် ဇိဘောင် ၊ ဗိုလ် အာန၊
ஓரியரின் வம்சத்தலைவர்கள்: லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு,
30 ၃၀ ဗိုလ် ဒိရှုန် ၊ ဗိုလ် ဧဇာ ၊ ဗိုလ် ဒိရှန် တည်း။ ဤ သူတို့ သည် စိရ ပြည် ၌ ဗိုလ် လုပ်သောသူ တို့ တွင်၊ ဟောရိ အမျိုး ဗိုလ် ဖြစ်သတည်း။
திஷோன், ஏசேர், திஷான் என்பவர்கள். இவர்கள் சேயீர் நாட்டில் தங்கள் ஓரியர் வம்சப் பிரிவுகளின்படி வம்சத்தலைவர்களாய் இருந்தார்கள்.
31 ၃၁ ဣသရေလ အမျိုး ၌ အစိုး ရသောမင်း ကြီး မ ရှိမှီ၊ ဧဒုံ ပြည် ၌ အစိုး ရသောမင်းကြီး ဟူမူကား၊
இஸ்ரயேல் மக்களை ஒரு அரசர் ஆட்சி செய்யுமுன், ஏதோம் நாட்டில் அரசாண்ட அரசர்கள்:
32 ၃၂ ဗောရ သား ဗေလာ သည် ဧဒုံ ပြည်၌ မင်း ပြု၏။ မြို့ တော်ကား၊ ဒိန္နာဗာ မြို့တည်း။
பேயோரின் மகன் பேலா ஏதோமில் அரசனானான். அவனுடைய பட்டணம் தின்காபா எனப் பெயரிடப்பட்டது.
33 ၃၃ ဗေလာ မင်းသေ ၍ သူ ၏အရာ ၌ ဗောဇရ အရပ် သား၊ ဇေရ ၏သား ယောဗပ် သည် မင်း ပြုလေ၏။
பேலா இறந்தபின்பு, போஸ்றாவைச் சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவனுக்குப்பின் அரசனானான்.
34 ၃၄ ယောဗပ် မင်းသေ ၍ ၊ သူ ၏အရာ ၌ တေမနိ အရပ် သား ဟုရှံ သည် မင်း ပြုလေ၏။
யோபாப் இறந்தபின்பு, அவனுடைய இடத்தில் தேமான் நாட்டைச் சேர்ந்த உஷாம் அரசனானான்.
35 ၃၅ ဟုရှံ မင်းသေ ၍ ၊ မောဘ လွင်ပြင် ၌ မိဒျန် လူတို့ ကို လုပ်ကြံ သောသူ၊ ဗေဒဒ် သား ဟာဒဒ် သည်၊ ဟုရှံ အရာ ၌ မင်း ပြုလေ၏။ မြို့ တော်ကား၊ အာဝိတ် မြို့တည်း။
உஷாம் இறந்தபின்பு, மோவாப் நாட்டிலே மீதியானியரை முறியடித்த பேதாதின் மகன் ஆதாத் அவனுடைய இடத்தில் அரசனானான். இவனுடைய பட்டணம் ஆவீத் எனப் பெயரிடப்பட்டது.
36 ၃၆ ဟာဒဒ် မင်းသေ ၍ ၊ သူ ၏အရာ ၌ မာသရက် အရပ်သားစာမလ သည် မင်း ပြုလေ၏။
ஆதாத் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் மஸ்ரேக்கா என்னும் இடத்தைச் சேர்ந்த சம்லா அரசனானான்.
37 ၃၇ စာမလ မင်းသေ ၍ ၊ သူ ၏အရာ ၌ မြစ် နားမှာ နေသောရဟောဘုတ် အရပ်သားရှောလ သည် မင်း ပြု လေ၏။
சம்லா இறந்தபின்பு, ஆற்றின் அருகில் உள்ள ரெகொபோத் என்னுமிடத்தைச் சேர்ந்த சாவூல் அவனுடைய இடத்தில் அரசனானான்.
38 ၃၈ ရှောလ မင်းသေ ၍ သူ ၏အရာ ၌၊ အာခဗော် သား ဗာလဟာနန် သည် မင်း ပြုလေ၏။
சாவூல் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் அக்போரின் மகன் பாகால்கானான் அரசனானான்.
39 ၃၉ အာခဗော် သား ဗာလဟာနန် မင်းသေ ၍ သူ ၏ အရာ ၌ဟာဒါ သည် မင်း ပြုလေ၏။ မြို့ တော်ကား၊ ပေါ မြို့ တည်း။ မျောက်သားတော်ကား၊ မေဇဟပ် သမီး မာတရက် ၏သမီး မဟေတဗေလ တည်း။
அக்போருடைய மகனாகிய பாகால்கானான் இறந்தபின்பு, அவனுடைய இடத்தில் ஆதாத் அரசனானான். இவனது பட்டணம் பாகு எனப் பெயரிடப்பட்டது. இவனது மனைவியின் பெயர் மெகேதபேல்; இவள் மத்ரேத்தின் மகளும் மேசகாபின் பேத்தியுமாவாள்.
40 ၄၀ ဧသော မှ ဆင်းသက်၍ မိမိ အမျိုး အနွယ်၊ နေရာ အရပ်၊ ခံရသောဘွဲ့ နာမအလိုက် ၊ ဗိုလ် လုပ်သောသူ ဟူမူကား ၊ ဗိုလ် တိမနာ ၊ ဗိုလ် အာလဝ ၊ ဗိုလ် ယေသက်၊
பெயரின்படியும், வம்சத்தின்படியும், நிலப்பரப்பின்படியும் ஏசாவின் வழிவந்த வம்சத்தலைவர்கள்: திம்னா, அல்வா, ஏதேத்,
41 ၄၁ ဗိုလ် အဟောလိဗာမ ၊ ဗိုလ် ဧလာ ၊ ဗိုလ် ပိနုန်၊
அகோலிபாமா, ஏலா, பினோன்,
42 ၄၂ ဗိုလ် ကေနတ် ၊ ဗိုလ် တေမန် ၊ ဗိုလ် မိဗဇာ၊
கேனாஸ், தேமான், மிப்சார்,
43 ၄၃ ဗိုလ် မာဂဒျေလ ၊ ဗိုလ် ဣရံ တည်း။ ဤ သူတို့သည် မိမိ နေရာ အရပ်၊ မိမိ ပိုင် သော ပြည် ၌ ၊ ဧဒုံ ဗိုလ် များ ဖြစ်သတည်း။ ဧသော သည် ဧဒုံ အမျိုးသားတို့၏ အဘ ဖြစ်သတည်း။
மக்தியேல், ஈராம் என்பவர்களாகும். அவர்கள் குடியேறிய நாட்டில் அவர்களின் குடியிருப்புகளின்படி ஏதோமின் வம்சத்தலைவர்கள் இவர்களே. இவையே ஏசாவின் வம்சவரலாறு, இவன் ஏதோமியருக்குத் தகப்பன்.

< ကမ္ဘာ​ဦး 36 >