< ဧ​ဇ​ရ 10 >

1 ထိုသို့ ဧဇရ သည် ဘုရား သခင်၏ အိမ် တော်ရှေ့ မှာ ပြပ်ဝပ် လျက်၊ မျက်ရည် ကျလျက် တောင်းပန် ၍ ပဌနာ ပြုသောအခါ ၊ အလွန် များစွာ သော ပရိသတ် ၊ ဣသရေလ အမျိုး ယောက်ျား ၊ မိန်းမ ၊ သူငယ် တို့သည် ဧဇရ ထံ မှာ စည်းဝေး ၍ အလွန် ငိုကြွေး ကြ၏။
எஸ்றா விண்ணப்பம் செய்துகொண்டும், பாவங்களை அறிக்கை செய்துகொண்டும், அழுதுகொண்டும் இறைவனின் ஆலயத்தில் விழுந்து கிடக்கையில் இஸ்ரயேல் ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் பெரிய கூட்டமாக வந்து அவனைச்சுற்றி நின்றார்கள். அவர்களும் மனங்கசந்து அழுதார்கள்.
2 ဧလံ အမျိုး ၊ ယေဟေလ သား ရှေကနိ ကလည်း၊ ငါ တို့သည် ကိုယ် ဘုရား သခင်ကို ပြစ်မှား ၍ ၊ ဤပြည် ၌ နေသောတပါး အမျိုးသားမိန်းမ တို့နှင့် စုံဘက် ကြပြီ။ သို့ရာတွင် ဤ အမှုမှာ ဣသရေလ အမျိုး မြော်လင့် စရာ ရှိ သေး၏။
அப்பொழுது ஏலாமின் வழித்தோன்றலில் ஒருவனான யெகியேலின் மகன் செக்கனியா எஸ்றாவிடம், “நாங்கள் எங்களைச் சுற்றியுள்ள மக்கள் மத்தியில் இருந்து அந்நிய பெண்களைத் திருமணம் செய்ததினால் எங்கள் இறைவனுக்கு உண்மையற்றவர்களானோம். ஆனாலும் இது நடந்தும்கூட இஸ்ரயேலருக்கு ஒரு எதிர்பார்ப்பு உண்டு.
3 သို့ဖြစ်၍ အရှင်ဘုရားအစရှိသော ငါ တို့ ဘုရား သခင်၏ ပညတ် တရားကို ကြောက်ရွံ့ သောသူတို့ သတိ ပေးသည်အတိုင်း ၊ ဤမိန်းမ များနှင့် သူ တို့ သား သမီး များရှိသမျှ ကို စွန့်ပယ် မည်ဟု ငါ တို့၏ဘုရား သခင့် ရှေ့တော်၌ အဓိဋ္ဌာန် ပြု ကြကုန်အံ့။ ဤအမှုကို တရား ရှိသည် အတိုင်း စီရင် ကြကုန်အံ့။
இப்பொழுதும் நாங்கள் எங்கள் தலைவனாகிய உமது ஆலோசனைப்படியும், இறைவனின் கட்டளைகளுக்குப் பயப்படுகிறவர்களின் ஆலோசனையின்படியும் அந்நிய மனைவிகளையும், அவர்களிடத்தில் பிறந்த பிள்ளைகளையும் அனுப்பிவிடுவோம் என, எங்கள் இறைவனுக்கு முன்பாக ஒரு உடன்படிக்கை செய்வோம். இதை நாங்கள் சட்டத்தின்படியே செய்வோம்.
4 ထ တော်မူပါ။ ဤအမှု ကို ကိုယ်တော် ဆိုင်ပါ၏။ အကျွန်ုပ် တို့သည်လည်း ဝိုင်း၍မစကြပါမည်။ ရဲရင့် သောစိတ် ရှိ၍ ပြု တော်မူပါဟု ဧဇရအားပြန်ပြောကြလျှင်၊
எழுந்திரும்; இது உமது கையில் இருக்கிறது. நாங்கள் உமக்கு ஒத்துழைப்புத் தருவோம். தைரியத்துடன் இதைச் செய்யும்” என்றான்.
5 ဧဇရ သည်ထ ၍ ယဇ်ပုရောဟိတ် အကြီး ၊ လေဝိ သား၊ ဣသရေလ အမျိုးသားအပေါင်း တို့သည် ထို စကား အတိုင်း ပြု ရမည်အကြောင်း သူတို့အား အကျိန် ပေး၍ သူတို့သည် ကျိန်ဆို ကြ၏။
எனவே எஸ்றா எழுந்து பிரதான ஆசாரியர்களையும், லேவியர்களையும், எல்லா இஸ்ரயேலர்களையும் அவர்கள் சொன்னதைச் செய்யும்படி ஆணையிடச் செய்தான். அவர்கள் அப்படியே ஆணையிட்டார்கள்.
6 ထိုအခါ ဧဇရ သည် ဘုရား သခင်၏ အိမ် တော် ရှေ့ က ထ၍၊ ဧလျာရှိပ် သား ယောဟနန် အခန်း သို့ သွား ၏။ ရောက် သောအခါ မုန့် ကိုမ စား ၊ ရေ ကိုမ သောက် ဘဲ နေ၏။ အကြောင်း မူကား၊ သိမ်း သွားခြင်းကိုခံ ဘူးသောသူတို့ ပြစ်မှားသော အပြစ် ကြောင့် ညည်းတွား မြည်တမ်းလေ၏။
பின்பு எஸ்றா இறைவனின் ஆலயத்தின் முன்னிருந்து எழுந்து சென்று எலியாசீப்பின் மகன் யோகனானின் அறைக்குப் போனான். ஆனால் அவன் அங்கிருக்கையில் உணவு சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ இல்லை. ஏனெனில், அவன் தொடர்ந்து சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் துரோகச் செயலுக்காகத் துக்கப்பட்டுக் கொண்டிருந்தான்.
7 သိမ်း သွားခြင်းကို ခံရသောအမျိုးသား အပေါင်း တို့သည်၊ ယေရုရှလင် မြို့သို့ စည်းဝေး စေမည်အကြောင်း၊
பின்பு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்கள் எல்லோரையும் எருசலேமில் வந்து கூடும்படி எருசலேம், யூதா எங்கும் பிரசித்தப்படுத்தப்பட்டது.
8 မင်း များနှင့် အသက် ကြီးသူများ စီရင် သည် အတိုင်း ၊ သုံး ရက် အတွင်းတွင် မ ရောက် သော သူမည်သည် ကား၊ သိမ်း သွားခြင်း အမျိုးသားပရိတ်သတ် ထဲက နှင်ထုတ် ခြင်းကိုခံ၍ ၊ သူ ၏ဥစ္စာ ရှိသမျှ သည် ကျိန်ဆိုအပ်သောဥစ္စာဖြစ်စေမည်အကြောင်း၊ ယေရုရှလင် မြို့မှစ၍ ယုဒ ပြည်တရှောက်လုံး၌ ကြော်ငြာ ကြ၏။
அதிகாரிகள் மற்றும் முதியவர்களின் தீர்மானத்தின்படி, மூன்று நாட்களுக்குள் வந்துசேரத் தவறுகிறவனுடைய எல்லாச் சொத்தும் பறிக்கப்பட்டு, சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் சபையில் இருந்து அவன் வெளியேற்றப்படுவான்.
9 ယုဒ အမျိုးနှင့် ဗင်္ယာမိန် အမျိုးသားယောက်ျား အပေါင်း တို့သည် သုံး ရက် အတွင်းတွင် ၊ ယေရုရှလင် မြို့မှာ စည်းဝေး ၍ နဝမ လ အရက်နှစ် ဆယ်တွင် ၊ လူ အပေါင်း တို့ သည် ထိုအမှုကြောင့်၎င်း၊ သည်းထန် စွာ မိုဃ်းရွာ သောကြောင့် ၎င်း၊ တုန်လှုပ်လျက် ဘုရားသခင်၏ အိမ်တော်ဦးရှေ့မှာ ထိုင်နေကြ၏။
எனவே யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கும் எல்லா மக்களும் இந்த மூன்று நாட்களுக்குள் எருசலேமிலே கூடினார்கள். ஒன்பதாம் மாதம் இருபதாம் தேதி எல்லா மக்களும் இறைவனின் ஆலயத்தின் முன்னால் உள்ள சதுக்கத்தில் உட்கார்ந்திருந்தார்கள். இந்த சம்பவத்தினாலும் மழை பெய்தபடியாலும் மக்கள் மிகவும் சோர்வாக இருந்தனர்.
10 ၁၀ ထိုအခါ ယဇ်ပုရောဟိတ် ဧဇရ သည် ထ ၍ ၊ သင် တို့သည် ပြစ်မှား ကြပြီ။ ဣသရေလ အမျိုး၌ အပြစ် လေးစေခြင်းငှါ တပါး အမျိုးသားမိန်းမ တို့နှင့် စုံဘက် ကြ ပြီတကား။
அப்பொழுது ஆசாரியன் எஸ்றா எழுந்து நின்று அவர்களிடம், “நீங்கள் உண்மையற்றவர்களானீர்கள்; நீங்கள் அந்நிய பெண்களைத் திருமணம் செய்ததினால் இஸ்ரயேலின் குற்றத்தை இன்னும் அதிகரிக்கச் செய்தீர்கள்.
11 ၁၁ သို့ဖြစ်၍ ဘိုးဘေး တို့၏ ဘုရား သခင်ထာဝရဘုရား အား တောင်းပန် ကြလော့။ အလို တော်အတိုင်း ပြု လျက် ၊ ဤပြည်သား တို့နှင့်၎င်း၊ တပါး အမျိုးသားမိန်းမ တို့နှင့်၎င်း ကွာ ကြလော့ဟု သူ တို့အား ဆို ၏။
இப்பொழுது உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவிடத்தில் பாவ அறிக்கைசெய்து, அவரது திட்டத்தைச் செய்யுங்கள். அத்துடன் உங்களைச் சுற்றியுள்ள மக்கள் கூட்டங்களிடமிருந்தும், உங்கள் அந்நிய மனைவிகளிடமிருந்தும் உங்களை விலக்குங்கள்” என்றான்.
12 ၁၂ ပရိသတ် အပေါင်း တို့ကလည်း ၊ ကိုယ်တော် မိန့်တော်မူသည်အတိုင်း အကျွန်ုပ် တို့သည် ပြု ပါမည်။
அவ்வாறே முழுச் சபையும் உரத்த சத்தமாய் இதை ஏற்றுக்கொண்டு: “நீர் சொல்வது சரி! நீர் சொல்கிறபடி நாங்கள் செய்யவேண்டும்.
13 ၁၃ သို့ရာတွင် လူ အများ ရှိပါ၏။ သည်းထန်စွာ မိုဃ်း ရွာ သော ကာလ ဖြစ်ပါ၏။ အကျွန်ုပ်တို့သည် အိမ်ပြင် မှာ မ ရပ် မနေနိုင် ပါ။ ဤအမှု သည် တ ရက် နှစ် ရက်တွင် ပြီးနိုင် သော အမှုမ ဟုတ်ပါ။ ပြစ်မှား သောသူ အများ ရှိပါ၏။
எனினும் இங்கு அநேக மக்கள் இருக்கிறார்கள்; இது மழை காலமாகவும் இருக்கிறது. ஆகவே எங்களால் வெளியே நிற்கமுடியாது; இது ஓரிரு நாட்களில் செய்து முடிக்கக்கூடிய காரியமும் அல்ல. ஏனெனில் இந்தக் காரியத்தில் எங்களில் அநேகர் பெரிதாய் பாவம்செய்தோம்.
14 ၁၄ ငါ တို့ ပရိသတ် အပေါင်း ကို အုပ်ချုပ်သော အကြီးအကဲ တို့သည် စီရင်သဖြင့်၊ တို့နေရာမြို့ ရွာ၌ တပါး အမျိုးသားမိန်းမ နှင့် စုံဘက် သော သူအပေါင်း တို့သည် ချိန်းချက် သောအချိန် တို့၌ မြို့ အသီးအသီးအသက် ကြီးသူများ၊ တရား သူကြီးများနှင့်အတူ လာ ၍ ဤ အမှု ကြောင့် ပြင်းစွာ ထွက်သောငါ တို့ ဘုရား သခင်၏ အမျက် တော်ကို ဖြေကြပါစေဟု ကြီးစွာ သောအသံ နှင့် ပြန်ပြော ကြ၏။
எனவே இந்தக் காரியத்தில் எங்கள் அதிகாரிகள் முழுச் சபைக்காகவும் செயல்படட்டும். இதினிமித்தம் நம்முடைய இறைவனின் கடுங்கோபம் எங்களைவிட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் அந்நிய பெண்ணைத் திருமணம் செய்த ஒவ்வொருவனும் அந்தந்தப் பட்டணத்தைச் சேர்ந்த முதியவர்களுடனும், நீதிபதிகளுடனும் குறிப்பிட்ட நேரத்தில் வரட்டும்” என்றார்கள்.
15 ၁၅ အာသဟေလ သား ယောနသန် နှင့် တိကဝ သား ယဟာဇိ သာ လျှင် ထို အမှုကိုပြုစု ကြ၏။ လေဝိ သား မေရှုလံ နှင့် ရှဗ္ဗသဲ တို့သည် ဝိုင်း ညီကြ၏။
ஆசகேலின் மகன் யோனத்தானும், திக்வாவின் மகன் யக்சியாவும் மாத்திரமே இதை எதிர்த்தார்கள். அவர்களுக்கு உதவியாக மெசுல்லாமும், லேவியனான சபெதாயிவும் இருந்தார்கள்.
16 ၁၆ သိမ်း သွားခြင်းကို ခံရသောအမျိုးသား တို့သည် ဝန်ခံကြသည်နှင့်အညီ၊ ယဇ်ပုရောဟိတ် ဧဇရ သည် ရွေးချယ် ၍ အဆွေ အမျိုးအလိုက် အမည် များကို မှတ်သားသော အဆွေအမျိုးသူကြီး တို့သည် ဒသမ လ တ ရက် နေ့ တွင် ထိုအမှု ကို စစ်ကြော ခြင်းငှါ ထိုင် နေကြ၏။
எனவே நாடுகடத்தப்பட்டுத் திரும்பி வந்தவர்கள் தாங்கள் முன் தீர்மானித்த திட்டத்தின்படி செய்தார்கள். ஆசாரியன் எஸ்றா ஒவ்வொரு குடும்பப் பிரிவிலுமிருந்து குடும்பத் தலைவர்களைத் தெரிவு செய்தான். அவர்கள் எல்லோரின் பெயரும் குறிக்கப்பட்டது. பத்தாம் மாதம் முதலாம் தேதியிலே வழக்குகளை விசாரணை செய்ய அமர்ந்தார்கள்.
17 ၁၇ တပါး အမျိုးသားမိန်းမ နှင့်စုံဘက် သောသူ အပေါင်း တို့ကို ပဌမ လ တ ရက် နေ့တိုင်အောင် အကုန်အစင် စစ်ကြောစီရင် ကြ၏။
இவ்வாறு இவர்கள் அந்நிய பெண்களைத் திருமணம் செய்திருந்த மனிதர்களைப் பற்றிய விசாரணையை முதலாம் மாதம், முதலாம் தேதியளவில் முடித்தார்கள்.
18 ၁၈ တပါး အမျိုးသားမိန်းမ နှင့် စုံဘက် သော ယဇ် ပုရောဟိတ် အမျိုးသား ဟူမူကား၊ ယောရှု အမျိုး ယောဇဒက် သား နှင့် သူ ၏ညီ မာသေယ ၊ ဧလျေဇာ ၊ ယာရိပ် ၊ ဂေဒလိ တည်း။
ஆசாரியர்களின் வழித்தோன்றலிலிருந்து அந்நிய பெண்களைத் திருமணம் செய்தவர்கள்: யோசதாக்கின் மகன் யெசுவாவினுடைய மகன்களிலும் அவனுடைய சகோதரர்களிலும், மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள்.
19 ၁၉ သူ တို့သည် မယား နှင့်ကွာ မည်ဟု ဂတိထားကြ ၏။ ပြုမိသော အပြစ် ကြောင့် သိုး ကိုယဇ် ပူဇော်ကြ၏။
இவர்கள் எல்லோரும் தங்கள் மனைவியரை விலக்கிவிடுவதாக கையடித்து வாக்குக் கொடுத்தார்கள். அவர்கள் தங்கள் குற்றத்திற்கென குற்றநிவாரண காணிக்கையாக மந்தையிலிருந்து ஒரு செம்மறியாட்டுக் கடாவைச் செலுத்தினார்கள்.
20 ၂၀ ထိုမှတပါး၊ ဣမေရ အမျိုး ဟာနန် နှင့် ဇေဗဒိ၊
இம்மேரின் வழித்தோன்றலிலிருந்து அனானி, செபதியா.
21 ၂၁ ဟာရိမ် အမျိုး မာသေယ ၊ ဧလိယ ၊ ရှေမာယ ၊ ယေဟေလ ၊ ဩဇိ၊
ஆரீமின் வழித்தோன்றலிலிருந்து மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா.
22 ၂၂ ပါရှုရ အမျိုး ဧလိဩနဲ ၊ မာသေယ ၊ ဣရှမေလ ၊ နာသနေလ ၊ ယောဇဗဒ် ၊ ဧလာသ။
பஸ்கூரின் வழித்தோன்றலிலிருந்து எலியோனாய், மாசெயா, இஸ்மயேல், நெதனெயேல், யோசபாத், எலாசா.
23 ၂၃ လေဝိ သားယောဇဗဒ် ၊ ရှိမိ ၊ ကေလာယ တည်းဟူသော ကေလိတ ၊ ပေသာဟိ ၊ ယုဒ ၊ ဧလျေဇာ၊
லேவியர்களிலிருந்து: யோசபாத், சிமெயி, கெலாயா எனப்பட்ட கெலித்தா, பெத்தகியா, யூதா, எலியேசர்.
24 ၂၄ သီချင်း သည် ဧလျာရှိပ် ၊ တံခါး စောင့် ရှလ္လုံ ၊ တေလင် ၊ ဥရိ၊
பாடகர்களிலிருந்து: எலியாசீப்; ஆலய காவலர்களிலிருந்து: சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களுமாகும்.
25 ၂၅ ဣသရေလအမျိုးထဲက ပါရုတ် အမျိုး ရာမိ ၊ ယေဇိ ၊ မာလခိ ၊ မျာမိန် ၊ ဧလာဇာ ၊ မာလခိယ ၊ ဗေနာယ၊
மற்ற இஸ்ரயேலருக்குள் இருந்து அந்நிய பெண்களைத் திருமணம் செய்தவர்கள்: பாரோஷின் வழித்தோன்றலிலிருந்து ரமீயா, இசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கியா, பெனாயா.
26 ၂၆ ဧလံ အမျိုး မတ္တနိ ၊ ဇာခရိ ၊ ယေဟေလ ၊ အာဗဒိ ၊ ယေရမုတ် ၊ ဧလျာ၊
ஏலாமின் வழித்தோன்றலிலிருந்து மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா.
27 ၂၇ ဇတ္တု အမျိုး ဧလိဩနဲ ၊ ဧလျာရှိပ် ၊ မတ္တနိ ၊ ယေရမုတ် ၊ ဇာဗဒ် ၊ အာဇိဇ၊
சத்தூவின் வழித்தோன்றலிலிருந்து எலியோனாய், எலியாசீப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா.
28 ၂၈ ဗေဗဲ အမျိုး ယောဟနန် ၊ ဟာနနိ ၊ ဇဗ္ဗဲ ၊ အာသလဲ၊
பெபாயின் வழித்தோன்றலிலிருந்து யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி.
29 ၂၉ ဗာနိ အမျိုး မေရှုလ ၊ မလ္လုတ် ၊ အဒါယ ၊ ယာရှုပ် ၊ ရှာလ ၊ ရာမုတ်၊
பானியின் வழித்தோன்றலிலிருந்து மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், யெரேமோத்.
30 ၃၀ ပါဟတ်မောဘ အမျိုး အဒန ၊ ခေလာလ ၊ ဗေနာယ ၊ မာသေယ ၊ မတ္တနိ ၊ ဗေဇလေလ ၊ ဗိနွိ ၊ မနာရှေ၊
பாகாத் மோவாபின் வழித்தோன்றலிலிருந்து அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே.
31 ၃၁ ဟာရိမ် အမျိုး ဧလျေဇာ ၊ ဣရှိယ ၊ မာလခိ ၊ ရှေမာယ ၊ ရှိမောင်၊
ஆரீமின் வழித்தோன்றலிலிருந்து எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிம்யோன்,
32 ၃၂ ဗင်္ယာမိန် ၊ မလ္လုတ် ၊ ရှေမရိ၊
பென்யமீன், மல்லூக், ஷெமரியா.
33 ၃၃ ဟာရှုံ အမျိုး မတ္တနဲ ၊ မတ္တသ ၊ ဇာဗဒ် ၊ ဧလိဖလက် ၊ ယေရမဲ ၊ မာနရှေ ၊ ရှိမိ၊
ஆசூமின் வழித்தோன்றலிலிருந்து மதனாய், மத்தத்தா, சாபாத், எலிபேலேத், எரெமாயி, மனாசே, சிமெயி
34 ၃၄ ဗာနိ အမျိုး မာဒဲ ၊ အာမရံ ၊ ဝေလ၊
பானியின் வழித்தோன்றலிலிருந்து மாதாயி, அம்ராம், ஊயேல்,
35 ၃၅ ဗေနာယ ၊ ပေဒိ ၊ ခေလု၊
பெனாயா, பெதியா, கெல்லூ,
36 ၃၆ ဝါနိ ၊ မေရမုတ် ၊ ဧလျာရှိပ်၊
வனியா, மெரெமோத், எலியாசீப்,
37 ၃၇ မတ္တနိ ၊ မတ္တနဲ ၊ ယာသော၊
மத்தனியா, மதனாய், யாசாய்,
38 ၃၈ ထိုမှတပါး၊ ဗာနိ ၊ ဗိနွိ ၊ ရှိမိ၊
பின்னூயியின் வழித்தோன்றலிலிருந்து: சிமெயி,
39 ၃၉ ရှေလမိ ၊ နာသန် ၊ အဒါယ၊
செலேமியா, நாத்தான், அதாயா,
40 ၄၀ မာခနဒေဗဲ ၊ ရှာရှဲ ၊ ရှာရံ၊
மக்நாத்பாயி, சாசாயி, சாராயி,
41 ၄၁ အာဇရေလ ၊ ရှေလမိ ၊ ရှေမရိ၊
அசரெயேல், செலேமியா, ஷெமரியா,
42 ၄၂ ရှလ္လုံ ၊ အာမရိ ၊ ယောသပ်၊
சல்லூம், அமரியா, யோசேப்.
43 ၄၃ နေဗော အမျိုး ယေယေလ ၊ မတ္တိသိ ၊ ဇာဗဒ် ၊ ဇေဗိန ၊ ယာဒေါ ၊ ယောလ ၊ ဗေနာယ တည်း။
நேபோத்தின் வழித்தோன்றலிலிருந்து ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோயேல், பெனாயா என்பவர்கள்.
44 ၄၄ ဤ သူ အပေါင်း တို့သည် တပါး အမျိုးသားမိန်းမ နှင့် စုံဘက် ၍ သား သမီးကို မြင် ရကြပြီ။
இவர்கள் எல்லோரும் அந்நிய பெண்களைத் திருமணம் செய்தவர்கள். இவர்களில் சிலருக்கு இந்த மனைவிகளின்மூலம் பிள்ளைகளும் இருந்தார்கள்.

< ဧ​ဇ​ရ 10 >