< တရားဟောရာ 1 >

1 တောကြီး လွင်ပြင် ၊ ယော်ဒန် မြစ်နား ၊ သုဖမြို့ တဘက် ၊ ပါရန် မြို့၊ တောဖလ မြို့၊ လာဗန် မြို့၊ ဟာဇရုတ် မြို့၊ ဒိဇဟတ် မြို့တို့အလယ်၌ မောရှေ သည် ဣသရေလ အမျိုးသားတို့အား ဟောပြော သောစကား များကို ပြန်ရ လေသည်မှာ၊
மோசே யோர்தான் நதிக்குக் கிழக்கேயுள்ள அரபா பாலைவனத்தில் இஸ்ரயேலர் எல்லோரிடமும் பேசினான். அப்பாலைவனம் சூப் என்னும் இடத்திற்கு எதிராகவும், பாரான், தோப்பேல், லாபான், ஆஸ்ரோத், திசாகாபு ஆகிய இடங்களுக்கு இடையிலும் இருக்கிறது.
2 ကာဒေရှဗာနာ အရပ်သည်၊ စိရ တောင် လမ်း ဖြင့် ဟောရပ် အရပ်နှင့် ဆယ် တ ရက် ခရီး ကွာသတည်း။
சேயீர் மலை வழியாக, ஓரேபிலிருந்து காதேஸ் பர்னேயாவுக்குப் போக பதினொரு நாட்கள் செல்லும்.
3
இஸ்ரயேலரைப் பற்றி யெகோவா தனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நாற்பதாம் வருடம், பதினோராம் மாதம், முதலாம் தேதியிலே மோசே அவர்களுக்கு அறிவித்தான்.
4
இது எஸ்போனில் ஆட்சி செய்த எமோரியரின் அரசனாகிய சீகோனைத் தோற்கடித்த பின்பும், அஸ்தரோத்தில் ஆட்சி செய்த பாசானின் அரசனாகிய ஓகை எத்ரேயில் தோற்கடித்த பின்பும் நடைபெற்றது.
5 မောရှေ သည် ဟေရှဘုန် မြို့၌ နေ သော အာမောရိ ရှင်ဘုရင် ရှိဟုန် ကို ၎င်း ၊ ဧဒြိ ပြည်၊ အာရှတရုတ် မြို့၌ နေ သော ဗာရှန် ဘုရင် ဩဃ ကို ၎င်း လုပ်ကြံ ပြီးမှ ၊ သက္ကရာဇ် လေးဆယ် ပြည့်၊ ဧကာဒသမ လ ၊ ပဌမ နေ့ရက်၌ မောဘ ပြည် ၊ ယော်ဒန် မြစ်နားမှာ ထာဝရဘုရား မှာထား တော်မူနှင့်သမျှ အတိုင်း ၊ ဣသရေလ အမျိုးသား တို့အား ဆင့်ဆို ၍ဟောပြော သောတရား စကားဟူမူကား၊
யோர்தான் நதிக்குக் கிழக்கே உள்ள மோவாப் பிரதேசத்திலே மோசே இந்தச் சட்டங்களை விவரிக்கத் தொடங்கி, சொன்னதாவது:
6 ငါ တို့ဘုရား သခင်ထာဝရဘုရား သည်၊ ဟောရပ် အရပ်၌ ငါ တို့အား မိန့် တော်မူသည်ကား၊ သင် တို့သည် ကာလအချိန်စေ့အောင် ဤ တောင် ၌ နေ ကြပြီ။
நமது இறைவனாகிய யெகோவா ஓரேபிலே நமக்குச் சொன்னது என்னவென்றால், “நீங்கள் இந்த மலையில் தங்கியிருந்தது போதும்.
7 လှည့်လည် ၍ ခရီး သွားကြလော့။ အာမောရိ တောင် သို့၎င်း ၊ ထိုတောင် နှင့် နီး သောအရပ်၊ လွင်ပြင် ၊ တောင် ရိုး၊ ချိုင့် ၊ တောင် မျက်နှာ၊ ပင်လယ် နား သို့၎င်း ၊ ခါနာန် ပြည် ၊ လေဗနုန် တောင်၊ ဥဖရတ် မြစ် ကြီး တိုင်အောင် ၎င်း သွား ကြလော့။
நீங்கள் முகாமிலிருந்து புறப்பட்டு, எமோரியரின் மலைநாட்டுக்குள் முன்னேறிச்செல்லுங்கள். அரபா, மலை நாடுகள், மேற்கு மலையடிவாரங்கள், தெற்கு, கரையோர நாடுகள் ஆகிய அயல்நாடுகளில் உள்ள மக்களிடம்போய், கானான் நாட்டிற்கும், லெபனோனுக்கும் பெரிய நதியான ஐபிராத்து நதிவரைக்கும் போங்கள்.
8 ထိုပြည် ကို သင် တို့ရှေ့ မှာ ငါထား ပြီ။ ထာဝရဘုရား သည် သင် တို့အဘ အာဗြဟံ ၊ ဣဇာက် ၊ ယာကုပ် မှစ၍ ၊ သူ တို့အမျိုးအနွယ် အား ပေး မည်ဟု ကျိန်ဆို တော်မူသောပြည် ကို ဝင် ၍ သိမ်းယူ ကြလော့ဟု မိန့် တော်မူ၏။
பாருங்கள், இப்பிரதேசத்தை நான் உங்களுக்கென்று கொடுத்திருக்கிறேன். உங்கள் முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கும் அவர்களுக்குப் பின்வரும் சந்ததிகளுக்கும் யெகோவா கொடுப்பேன் என்று ஆணையிட்ட அந்த நாட்டிற்கு போய், அதை உங்களுக்கு உரிமையாக்கிக்கொள்ளுங்கள்” என்றார்.
9 ထိုအခါ သင် တို့အား ငါပြော သည်ကား၊ သင် တို့အမှုကို ငါ တယောက်တည်း မ ထမ်း နိုင်။
அந்நாட்களில் நான் உங்களுக்குச் சொல்லியிருந்ததாவது, “நான் உங்களைத் தனியே சுமக்க முடியாதபடி நீங்கள் அதிக பாரமாயிருக்கிறீர்கள்.
10 ၁၀ သင် တို့၏ ဘုရား သခင်ထာဝရဘုရား သည် သင် တို့ကို များပြား စေတော်မူ၍ ၊ သင် တို့သည် အရေ အတွက်အားဖြင့် ကောင်းကင် ကြယ် ကဲ့သို့ ယနေ့ ဖြစ်ကြ၏။
உங்கள் இறைவனாகிய யெகோவா, இன்று நீங்கள் வானத்து நட்சத்திரங்களைப்போல் அநேகராயிருக்கும்படி, எண்ணிக்கையில் உங்களை அதிகரிக்கச் செய்தார்.
11 ၁၁ သင် တို့အဘ များ၏ ဘုရား သခင်ထာဝရဘုရား သည် သင် တို့ကို အဆ အထောင် အားဖြင့် များပြား စေတော်မူပါစေသော။ ဂတိ တော်ရှိသည်အတိုင်း ကောင်းကြီး ပေးတော်မူပါစေသော။
உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, உங்களை இன்னும் ஆயிரம் மடங்காகப் பெருகப்பண்ணி, தாம் வாக்களித்தபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக!
12 ၁၂ သင်တို့ပင်ပန်းခြင်း၊ အမှု ဆောင်ရွက်ခြင်း၊ ရန်တွေ့ ခြင်းဝန် ကို ငါ တယောက်တည်း အဘယ်သို့ ထမ်း နိုင် မည်နည်း။
ஆனால் உங்களுடைய பிரச்சனைகளையும், தாங்கமுடியாத தொல்லைகளையும், உங்கள் வாக்குவாதங்களையும் நான் தனியே சுமப்பது எப்படி?
13 ၁၃ ဉာဏ် ပညာနှင့် ပြည့်စုံ ၍ အသရေ ရှိသောသူတို့ ကို သင် တို့အမျိုး များထဲက ရွေး ပေးကြလော့။ သူ တို့ကို မင်း အရာ၌ ငါခန့် ထားမည်ဟု ပြော ဆိုလျှင်၊
ஆகவே நீங்கள் உங்கள் கோத்திரங்கள் ஒவ்வொன்றிலுமிருந்து ஞானமும், விளங்கிக்கொள்ளும் ஆற்றலும், மதிப்பும் பெற்றவர்களான சில மனிதரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களை உங்கள் தலைவர்களாக நான் நியமிப்பேன்” என்றேன்.
14 ၁၄ သင်တို့က ကိုယ်တော်ပြော သည်အတိုင်း ပြု ကောင်း ပါသည်ဟု ပြန် ဆိုကြ၏။
அப்பொழுது நீங்கள், “நீர் முன்வைத்த யோசனை நல்லது” என்று பதிலளித்தீர்கள்.
15 ၁၅ ထိုကြောင့် သင် တို့အမျိုး များ၌ အသရေ ရှိသော လူကြီး ၊ ပညာ ရှိတို့ကို ငါရွေးချယ် ပြီးလျှင် ၊ သင် တို့တွင် မင်း လုပ် ရသောသူတည်း ဟူသောလူတထောင် အုပ် ၊ တရာ အုပ် ၊ ငါးဆယ် အုပ် ၊ တဆယ် အုပ် ၊ အကြပ် အဆော်အရာ ၌ ခန့်ထား၏။
எனவே நான் உங்கள் கோத்திரங்களில் ஞானமும் நற்பெயரும் கொண்ட மனிதரை உங்கள்மேல் தலைவர்களாய் இருக்கும்படி நியமித்தேன். அவர்களை உங்கள் ஆயிரம்பேருக்கும், நூறுபேருக்கும், ஐம்பதுபேருக்கும், பத்துபேருக்கும் தளபதிகளாகவும், கோத்திரங்களுக்கு அதிகாரிகளாகவும் நியமித்தேன்.
16 ၁၆ တရား သူကြီးတို့အားလည်း ၊ သင် တို့ညီအစ်ကို ၏ အမှုတို့ကို နားထောင် ၍ အမျိုးသားချင်း တရားတွေ့ သည်ဖြစ်စေ၊ တပါး အမျိုးသားနှင့် တွေ့သည်ဖြစ်စေ ၊ တရား သဖြင့် စီရင် ကြလော့။
அப்பொழுது நான் உங்கள் நீதிபதிகளுக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது: “உங்கள் சகோதரர்களின் வாக்குவாதங்களைக் கேட்டு நியாயமாக நீதி வழங்குங்கள். அந்த வழக்கு இஸ்ரயேல் சகோதரருக்கு இடையில் இருந்தாலும், ஒரு இஸ்ரயேலனுக்கும், ஒரு அந்நியனுக்கும் இடையில் இருந்தாலும் நியாயமாய் நீதி வழங்குங்கள்.
17 ၁၇ တရား အမှုကို စီရင်သောအခါအဘယ်သူ၏ မျက်နှာ ကို မ ထောက် ရ။ လူငယ် စကားကို လူကြီး စကားကဲ့သို့ မှတ် ရမည်။ အဘယ် လူကိုမျှ မ ကြောက် ရ။ အကြောင်း မူကား၊ တရား အမှုကို ဘုရား သခင်ပိုင်တော်မူသောကြောင့် တည်း။ ကိုယ်တိုင်မစီရင်တတ်သော အမှု ကို ငါ့ ထံမှာ အယူခံ ရမည်။ ငါလည်း နားထောင် မည်ဟု မှာခဲ့၏။
நீதி வழங்குவதில் பட்சபாதம் காட்டாதீர்கள்; பெரியவர்களையும் சிறியவர்களையும் ஒரேவிதமாய் விசாரணைசெய்யுங்கள். எந்த மனிதனுக்கும் பயப்படவேண்டாம். ஏனெனில் நியாயத்தீர்ப்பு இறைவனுக்கே உரியது. உங்களுக்குக் கடினமாய் உள்ள வழக்குகளையோ என்னிடம் கொண்டுவாருங்கள். அவற்றை நான் விசாரிப்பேன்” என்றேன்.
18 ၁၈ သင် တို့ပြု ရသမျှ သော အမှု တို့ကိုလည်း ထိုအခါ ငါမှာ ထားခဲ့၏။
அக்காலத்தில் நீங்கள் செய்யவேண்டிய எல்லாவற்றையும் நான் உங்களுக்குச் சொல்லியிருந்தேன்.
19 ၁၉ ငါတို့သည် ဟောရပ် အရပ်မှ ထွက် သောနောက် ၊ အာမောရိ တောင် သို့ သွားသော လမ်း နားမှာ ကြောက်မက် ဘွယ်ဖြစ်၍ သင်တို့တွေ့မြင် သော တော ကြီး အလယ် ၌၊ ငါ တို့ဘုရား သခင်ထာဝရဘုရား မှာ ထားတော်မူသည် အတိုင်း ရှောက်သွား ၍ ၊ ကာဒေရှဗာနာ အရပ်သို့ ရောက် ကြ၏။
பின்பு, நமது இறைவனாகிய யெகோவாவின் கட்டளைப்படியே நாம் ஓரேபிலிருந்து புறப்பட்டு, எமோரியரின் மலைநாட்டை நோக்கிப் போனோம். பின்பு நீங்கள் கண்ட அந்த விசாலமும், பயங்கரமுமான பாலைவனத்தின் வழியே அங்குபோய் காதேஸ்பர்னேயாவை அடைந்தோம்.
20 ၂၀ ထိုအခါ ငါကလည်း၊ ငါ တို့ဘုရား သခင်ထာဝရဘုရား ပေး တော်မူသောအာမောရိ တောင် သို့ သင် တို့သည် ရောက် ကြပြီ။
அப்பொழுது நான் உங்களுக்கு, “நம் இறைவனாகிய யெகோவா நமக்குக் கொடுக்கும் எமோரியரின் மலைநாட்டிற்கு நீங்கள் வந்து சேர்ந்துவிட்டீர்கள்.
21 ၂၁ သင် တို့ဘုရား သခင်ထာဝရဘုရား သည် ပြည် တော်ကို သင် တို့ရှေ့ မှာထား တော်မူပြီ။ သင် တို့အဘ များ၏ ဘုရား သခင်ထာဝရဘုရား မိန့် တော်မူသည် အတိုင်း ၊ တက် သွား၍ သိမ်းယူ ကြလော့။ မ ကြောက် ကြနှင့်။ စိတ် လည်း မ ပျက်ကြနှင့်ဟု ပြော ဆို၏။
பாருங்கள், உங்கள் இறைவனாகிய யெகோவா இந்த நாட்டை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். உங்கள் முற்பிதாக்களுடைய இறைவனாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் போய் அந்த நாட்டை உங்களுக்கு உரிமையாக்கிக்கொள்ளுங்கள். பயப்படவேண்டாம்; கலங்கவேண்டாம்” என்றேன்.
22 ၂၂ ထိုအခါ သင် တို့ရှိသမျှ သည် ငါ့ ထံသို့ ချဉ်းကပ် ၍ ၊ အကျွန်ုပ် တို့ရှေ့ ၌ လူ တို့ကို စေလွှတ် ပါမည်။ သူတို့သည် ထိုပြည် ကို စူးစမ်း ပြီးမှ ၊ အကျွန်ုပ်တို့သည် အဘယ်လမ်း သို့သွား လျှင် အဘယ်မြို့ သို့ ရောက် ရမည်ကို ကြားပြော ကြပါ လိမ့်မည်ဟု၊
அப்பொழுது நீங்கள் எல்லோரும் என்னிடம் வந்து, “நாம் அங்கு போவதற்குமுன் அந்நாட்டை உளவுபார்க்க சில மனிதர்களை அனுப்புவோம். நாம் செல்லும் வழியையும், நாம் போய்ச் சேரவேண்டிய பட்டணங்களையும் பற்றிய விவரங்களையும் அவர்கள் கொண்டுவரட்டும்” என்றீர்கள்.
23 ၂၃ လျှောက်ဆိုသောစကား ကို ငါ နှစ်သက် ၍ ၊ သင် တို့တွင် တမျိုး တယောက် စီ၊ လူ ပေါင်း တကျိပ် နှစ် ယောက်တို့ကို ရွေး ထား၏။
நீங்கள் சொன்ன யோசனை எனக்கும் நல்லதாகக் காணப்பட்டது; எனவே நான் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒவ்வொருவராக உங்களிலிருந்து பன்னிரண்டு மனிதரைத் தேர்ந்தெடுத்து அனுப்பினேன்.
24 ၂၄ ထိုသူတို့သည် တောင် ပေါ်သို့ လှည့် သွား ၍ ၊ ဧရှကောလ ချိုင့် သို့ ရောက် သဖြင့် စူးစမ်း ကြ၏။
அவர்கள் புறப்பட்டு மலைநாட்டிற்கு ஏறிப்போய், அங்கிருந்து எஸ்கோல் பள்ளத்தாக்கிற்கு வந்து நாட்டை ஆராய்ந்தார்கள்.
25 ၂၅ ထိုပြည် ၌ ရသောသစ်သီး ကို ထမ်း ၍ ဆောင် ခဲ့ လျက် ၊ ငါ တို့ဘုရား သခင်ထာဝရဘုရား ပေး တော်မူသောပြည် သည် ကောင်း သော ပြည်ဖြစ်၏ဟု ကြားပြော ကြသော်လည်း၊
அவர்கள் அந்நாட்டின் பழங்களில் சிலவற்றை எடுத்துக்கொண்டுவந்து, “நமது இறைவனாகிய யெகோவா நமக்குக் கொடுக்கும் நாடு நல்லது” என்று விவரம் சொன்னார்கள்.
26 ၂၆ သင်တို့သည် မ သွား ဘဲ၊ သင် တို့ဘုရား သခင်ထာဝရဘုရား ၏ အမိန့် တော်ကို ဆန် လျက်၊
அப்படியிருந்தும் நீங்கள் அங்கு ஏறிப்போக மனதற்றவர்களாய், உங்களுடைய இறைவனாகிய யெகோவாவின் கட்டளைக்கு விரோதமாகக் கலகம் செய்தீர்கள்.
27 ၂၇ ထာဝရဘုရား သည် ငါ တို့ကိုမုန်း ၍ ဖျက်ဆီး ချင် သောကြောင့် ၊ အာမောရိ လူတို့ လက် ၌ အပ် လိုသောငှါ ၊ အဲဂုတ္တု ပြည် မှ နှုတ်ဆောင် တော်မူသည်တကား။
நீங்கள் உங்கள் கூடாரங்களிலிருந்து முறுமுறுத்து, “யெகோவா எங்களை வெறுக்கிறார்; அதனால்தான் எங்களை அழிப்பதற்காக எமோரியரின் கையில் ஒப்படைக்கும்படி எகிப்திலிருந்து எங்களை வெளியே கொண்டுவந்தார்.
28 ၂၈ ငါ တို့သည် အဘယ်သို့ သွား ရမည်နည်း။ ညီအစ်ကို တို့က၊ ထို ပြည်သားတို့သည် ငါ တို့ထက်သာ၍ကြီး ၏။ အရပ်လည်း သာ ၍မြင့် ၏။ မြို့ လည်း မိုဃ်း ကောင်းကင်သို့ ထိသော မြို့ရိုး လည်း ရှိ၏။ ထို ပြည်၌ လည်း ၊ အာနက အမျိုးသား တို့ကို မြင် ရ၏ဟု ငါတို့စိတ် ကို ဖျက် ကြပြီဟု သင် တို့သည် တဲ များ၌ ဆန့်ကျင် ဘက်ပြုကြ ၏။
நாங்கள் எங்கே போவது? எங்கள் சகோதரர் எங்களை மனந்தளரப் பண்ணிவிட்டார்களே. ‘அந்த மக்கள் எங்களைவிட பலமும் உயரமுமாய் இருக்கிறார்கள்; அவர்களுடைய பட்டணங்கள் பெரியவையும், அவற்றின் மதில்கள் வானத்தைத் தொடுமளவுக்கு இருக்கின்றன. மேலும் நாங்கள் ஏனாக்கியரான அரக்கரையும் அங்கே கண்டோம்,’ என்கிறார்கள்” என்று சொன்னீர்கள்.
29 ၂၉ ထိုအခါ ငါက၊ မ ထိတ်လန့် ကြနှင့်၊ သူ တို့ကို မ ကြောက် ကြနှင့်။
அப்பொழுது நான் உங்களிடம், “திகிலடையவேண்டாம்; அவர்களுக்குப் பயப்படவும் வேண்டாம்.
30 ၃၀ သင် တို့ရှေ့ မှာကြွ တော်မူသော သင် တို့၏ ဘုရား သခင် ထာဝရဘုရား သည် သင် တို့မျက်မှောက် ၊ အဲဂုတ္တု ပြည်၌ ၎င်း၊
உங்களுக்கு முன்பாகச் செல்லும் உங்கள் இறைவனாகிய யெகோவா, உங்கள் கண்களுக்கு முன்பாக எகிப்தில் செய்ததுபோல, உங்களுக்காக யுத்தம் செய்வார். நீங்கள் இந்த இடத்தை வந்து சேரும்வரை,
31 ၃၁ သင်တို့လိုက်လာသောလမ်း တလျှောက်လုံး ၊ ဤ အရပ် တိုင်အောင် အဘသည် သား ကို ချီပိုက် သကဲ့သို့ ၊ သင် တို့၏ ဘုရား သခင်ထာဝရဘုရား သည် သင် တို့ကို ချီပိုက် တော်မူသောကျေးဇူးတော်ကိုခံ ရာတော ၌ ၎င်း ၊ သင် တို့အဘို့ ပြု တော်မူသကဲ့သို့ ၊ သင် တို့ဘက် ၌ စစ် ကူ တော်မူမည်ဟု ဆိုသော်လည်း၊
நீங்கள் சென்ற வழிகளிலெல்லாம் ஒரு தகப்பன் தன் மகனைச் சுமந்துசெல்லுவது போல, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை எப்படிச் சுமந்தார் என்பதை அங்கே கண்டீர்களே” என்றேன்.
32 ၃၂ သင် တို့တဲ စားခန်းချရာ အရပ် ကို ရှာ ၍ သင်တို့သွား လတံ့သော လမ်း ကို ပြ ခြင်းငှါ ၊ ညဉ့် ခါ မီး ၌ ၎င်း၊ နေ့ အခါ မိုဃ်းတိမ် ၌ ၎င်း၊
அப்படிச் செய்தும் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கை வைக்கவில்லை.
33 ၃၃ သင် တို့ရှေ့ မှာ ကြွ တော်မူသော သင် တို့ဘုရား သခင်ထာဝရ ဘုရား၏ စကားတော်ကို ထို အမှု ၌ သင် တို့မ ယုံ ကြပါတကား။
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு முகாம் அமைக்கவேண்டிய இடங்களைத் தேடும்படியும், நீங்கள் போகவேண்டிய வழியை உங்களுக்குக் காட்டும்படியும் இரவில் நெருப்பிலும், பகலில் மேகத்திலும் உங்கள் பயணத்தில் உங்களுக்கு முன்சென்றார்.
34 ၃၄ သင် တို့စကား သံ ကို ထာဝရဘုရား ကြား ၍ မျက် တော်ထွက်လျက်၊
நீங்கள் சொன்னவற்றை யெகோவா கேட்டபோது, அவர் கோபங்கொண்டு கடுமையாக ஆணையிட்டுச் சொன்னதாவது:
35 ၃၅ သူတို့ဘိုးဘေး တို့အား ငါပေး မည်ဟု ငါကျိန်ဆို သော ပြည် ကောင်း ကို ၊ ယေဖုန္နာ ၏သား ကာလက် မှတပါး ၊ ဤ ဆိုး သောလူမျိုး တစုံ တယောက်မျှ ဆက်ဆက်မ မြင် ရ။
“நான் உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட அந்த நல்ல நாட்டை இந்தக் கெட்ட சந்ததியாரில் ஒருவனாகிலும் காணமாட்டான்.
36 ၃၆ ထိုသူ သည် ထာဝရဘုရား နောက် တော်သို့ လုံးလုံး လိုက်သောကြောင့် မြင် ရ၏။ သူနင်း သောပြည် ကို သူ မှစ၍ သူ ၏သား မြေးတို့အား ငါပေး မည်ဟု ကျိန်ဆိုတော်မူ၏။
எப்புன்னேயின் மகனாகிய காலேப் மாத்திரமே அந்நாட்டைக் காண்பான். அவனுக்கும் அவனுடைய சந்ததிக்கும் மட்டுமே அவன் காலடி வைத்த நாட்டைக் கொடுப்பேன்; ஏனென்றால் அவன் யெகோவாவை முழு இருதயத்தோடு பின்பற்றியிருக்கிறான்” என்றார்.
37 ၃၇ သင် တို့အတွက် ထာဝရဘုရား သည် ငါ့ ကိုလည်း အမျက် တော်ထွက်၍ ၊ သင် သည် ထို ပြည်သို့ မ ဝင် စားရ။
உங்களாலே யெகோவா என்னோடும் கோபங்கொண்டு சொன்னதாவது: “நீயும் அதற்குள் போகமாட்டாய்.
38 ၃၈ သင့် လက်ထောက် နုန် ၏သား ယောရှု သည် ဝင်စား ရမည်။ သူ သည် ဣသရေလ အမျိုးသားအမွေခံ စေမည့်သူ ဖြစ်သောကြောင့် ၊ သူ့ ကို အား ပေးလော့။
ஆனால் உன்னுடைய உதவியாளன் நூனின் மகனாகி யோசுவா அதற்குள் போவான். அவனைத் தைரியப்படுத்து, இஸ்ரயேலர் அந்த நாட்டை உரிமையாக்கிக்கொள்ளும்படி அவனே அவர்களை வழிநடத்துவான்.
39 ၃၉ ရန်သူလုယူ ရာဖြစ် မည်ဟု သင် တို့ဆို သော သူငယ် များ၊ ထိုအခါ ကောင်း မ ကောင်းကို ပိုင်းခြားမ သိနိုင် သေးသော သားသမီး များတို့သည် ထို ပြည်ကို ဝင်စား ၍ ၊ ငါပေး သည်အတိုင်း သိမ်းယူ ကြလိမ့်မည်။
கைதிகளாய் செல்வார்கள் என்று நீங்கள் குறிப்பிட்ட உங்கள் சிறுபிள்ளைகளும், நன்மை தீமை அறியாதிருக்கிற உங்கள் பிள்ளைகளாகிய அவர்களே அந்நாட்டிற்குள் போவார்கள். நான் அந்நாட்டை அவர்களுக்கே கொடுப்பேன். அவர்கள் அதை உரிமையாக்கிக்கொள்வார்கள்.
40 ၄၀ သင် တို့မူကား ၊ လှည့် ၍ဧဒုံ ပင်လယ် လမ်း ဖြင့် တော သို့ခရီး သွားကြဦးလော့ဟု မိန့်တော်မူ၏။
நீங்களோ, திரும்பி செங்கடலுக்குப் போகும் வழியான பாலைவனத்தை நோக்கிப் போங்கள்.”
41 ၄၁ သင်တို့ကလည်း ၊ အကျွန်ုပ် တို့သည် ထာဝရဘုရား ကို ပြစ်မှား မိပါပြီ။ အကျွန်ုပ် တို့ ဘုရား သခင်ထာဝရဘုရား မှာ ထားတော်မူသမျှ အတိုင်း ၊ ယခုသွား ၍ စစ်တိုက် ပါမည်ဟု ငါ့ အား လျှောက်ဆို လျက် ၊ လူ အပေါင်းတို့သည် လက်နက် စွဲကိုင် လျက် ၊ တောင် ပေါ်သို့ တက် ခြင်းငှါ အသင့် နေကြ၏။
அப்பொழுது நீங்கள் அதற்கு மறுமொழியாக, “நாங்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தோம். எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்குக் கட்டளையிட்டபடியே போய் யுத்தம் செய்வோம்” என்றீர்கள். மலைநாட்டிற்கு ஏறிப்போவது சுலபம் என எண்ணி நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் ஆயுதங்களையும் தரித்துக்கொண்டீர்கள்.
42 ၄၂ ထာဝရဘုရား ကလည်း ၊ တက် ၍ မ တိုက် ကြနှင့်။ သင် တို့ဘက် ၌ ငါ မ ရှိ။ တိုက်လျှင် ရန်သူ ရှေ့ မှာ ရှုံး ရကြ လိမ့်မည်ဟု သင်တို့အား ဆင့်ဆို ရမည်အကြောင်း ၊ ငါ့ အား မိန့် တော်မူသည်အတိုင်း၊
ஆனால் யெகோவா என்னிடம், “நீங்கள் மேலே யுத்தம்செய்யப் போகவேண்டாம். நான் உங்களுடன் இருக்கமாட்டேன். நீங்கள் உங்கள் பகைவரால் தோற்கடிக்கப்படுவீர்கள் என்று அவர்களுக்குச் சொல்” என்று சொன்னார்.
43 ၄၃ ငါဆင့်ဆို သော်လည်း သင် တို့သည် နား မ ထောင်၊ ထာဝရ ဘုရား၏ အမိန့် တော်ကို ငြင်းဆန် ၍ ခိုင်ခံ့ သောစိတ်နှင့် တောင် ပေါ်သို့ တက် ကြ၏။
நான் அதை உங்களுக்குச் சொல்லியும், நீங்கள் எனக்குச் செவிகொடுக்கவில்லை. யெகோவாவின் கட்டளைக்கு விரோதமாகக் கலகம்செய்து, உங்கள் அகந்தையில் அணிவகுத்து மலைநாட்டிற்கு ஏறினீர்கள்.
44 ၄၄ ထိုအခါ တောင် ပေါ် မှာရှိ နှင့်သော အာမောရိ အမျိုးသားတို့သည် သင် တို့တဘက် ၌ ထွက် လာလျက်၊ ပျား များအုံ၍ လိုက် သကဲ့သို့ သင် တို့ကိုလိုက် ၍ ၊ စိရ အရပ်၊ ဟောမာ မြို့တိုင်အောင် ဖျက်ဆီး ကြ၏။
அப்பொழுது மலைநாட்டில் வாழ்ந்த எமோரியர் உங்களுக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் தேனீக்கள் கூட்டம்போல் உங்களைத் துரத்தி, சேயீரிலிருந்து ஓர்மாவரை உள்ள வழியெல்லாம் உங்களை அடித்து வீழ்த்தினார்கள்.
45 ၄၅ သင်တို့သည်လည်း ပြန်လာ ၍ ထာဝရဘုရား ရှေ့ တော်၌ ငိုကြွေး ကြ၏။ သို့သော်လည်း သင် တို့စကား ကို ထာဝရဘုရား နားထောင် နာယူ တော်မ မူ။
நீங்கள் திரும்பிவந்தபோது, யெகோவாவிடம் போய்ப் புலம்பி அழுதீர்கள்; ஆனால் அவர் உங்கள் புலம்பலைச் செவிசாய்த்து கவனிக்கவில்லை.
46 ၄၆ ထိုကြောင့် ကာဒေရှ အရပ်၌ အရင်နေ သကဲ့သို့ ကြာမြင့် စွာ နေ ပြန်ရကြ၏။
ஆனபடியால் நீங்கள் காதேசில் தங்கி, அநேக காலத்தை அங்கே கழித்தீர்கள்.

< တရားဟောရာ 1 >