< ଉନୁଦୁବ୍ କାଜି 15 >
1 ୧ ଏନ୍ତେ ସିର୍ମାରେ ଆଇଙ୍ଗ୍ ଆଡଃମିଆଁଦ୍ ହାଏକାଟ୍ ଆଡଃ ଆକ୍ଦାନ୍ଦାଅ ଚିହ୍ନାଁଁ ନେଲ୍କେଦାଇଙ୍ଗ୍ । ଏନ୍ତାଃରେ ଏୟା ଝାନ୍ ଦୁଁତ୍କ ମିପିଆଦ୍ ଟୁଣ୍ଡୁ ଦୁକୁହାସୁ ସାବ୍କେଦ୍ତେ ଆଡ଼୍ଗୁୟାନାକ । ନେଆଁ ହବାଅଃ ତାୟମ୍ତେ, ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ଖିସ୍ରାଃ ଟୁଣ୍ଡୁ ହବାଅଃଆ ।
நான் பரலோகத்திலே பெரும் வியப்புக்குரிய இன்னுமொரு அடையாளத்தைப் பார்த்தேன்: ஏழு தூதர்கள் ஏழு வாதைகளுடன் நின்றார்கள்; இவை கடைசி வாதைகள்; ஏனெனில், இவற்றுடன் இறைவனுடைய கோபம் நிறைவுபெறும்.
2 ୨ ଏନ୍ତେ ଆଇଙ୍ଗ୍ ସେଙ୍ଗେଲ୍ଲଃ ମେସାକାନ୍ କାଁଚ୍ ଲେକା ମିଆଁଦ୍ ଦରେୟା ନେଲ୍କେଦାଇଙ୍ଗ୍ । ଅକ ହଡ଼କ ଏନ୍ ଜାଁତୁ, ଆୟାଃ ମୁରୁତ୍ ଆଡଃ ଆୟାଃ ନୁତୁମ୍ରାଃ ନାମ୍ବାର୍ ଚେତାନ୍ରେ ଜିତାଅକାନ୍ ତାଇକେନାକ, ଇନ୍କୁକେ ଏନ୍ ଦରେୟା ଗେନାରେ ତିଙ୍ଗୁଆକାନ୍ ନେଲ୍କେଦ୍କଆଇଙ୍ଗ୍ । ଇନ୍କୁଆଃ ତିଃଇରେ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଏମାକାଦ୍ ବାନାମ୍ ତାଇକେନା ।
நான் கண்ணாடிக்கடல் போன்ற ஒன்றைக் கண்டேன். அதில் நெருப்பு கலந்திருந்தது. அதற்கருகில் அந்த மிருகத்தையும், அதனுடைய உருவச்சிலையையும், அதன் பெயருக்குரிய எண்ணையும் மேற்கொண்டு வெற்றிகொண்டவர்கள், நின்றுகொண்டிருந்ததைக் கண்டேன். அவர்கள் இறைவனால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வீணைகளைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.
3 ୩ ଇନ୍କୁ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ଦାସି ମୁଶାରାଃ ଆଡଃ ମିଣ୍ଡିହନ୍ଆଃ ଦୁରାଙ୍ଗ୍କ ଦୁରାଙ୍ଗ୍ତାଇକେନା । “ହେ ସବେନ୍ ପେଡ଼େୟାନ୍ନିଃ ପ୍ରାଭୁ ପାର୍ମେଶ୍ୱାର୍, ଆମାଃ କାମିକ ପୁରାଃ ମାରାଙ୍ଗ୍ ଆଡଃ ଆକ୍ଦାନ୍ଦାଅଗିୟା! ସବେନ୍ ହଡ଼କଆଃ ରାଜା, ଆମାଃ ହରାକ ଠାଉକାଗିୟା ଆଡଃ ସାର୍ତି ତାନାଃ!
அவர்கள் இறைவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாடலையும், ஆட்டுக்குட்டியானவருடைய பாடலையும் பாடினார்கள்: “எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தாவே, உமது செயல்கள் பெரிதானவை. அவை வியக்கத்தகுந்தவை. எல்லா யுகங்களுக்கும் அரசனாயிருக்கிறவரே, உமது வழிகள் நீதியும் சத்தியமுமானவை.
4 ୪ ହେ ପ୍ରାଭୁ, ଅକଏ ଆମ୍କେ କାଏ ବରମେୟାଁ? ଆମାଃ ନୁତୁମ୍ରାଃ ମାନାରାଙ୍ଗ୍କେ ଅକଏ କାଏ ଉଦୁବେୟା? ଆମ୍ ଏସ୍କାର୍ ପାବିତାର୍ ତାନ୍ମେ, ସବେନ୍ ହଡ଼କ ହିଜୁଃକେଦ୍ତେ ଆମାଃ ସୁନୁସାର୍କ ରିକାଏୟା । ଚିଆଃଚି ଆମାଃ ଧାର୍ମାନ୍ କାମିକ ସବେନ୍ ହଡ଼କ ନେଲାକାଦାକ ।”
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமல் இருப்பார்கள்? யார் உமது பெயருக்கு மகிமையைக் கொடுக்காமலும் இருப்பார்கள்? ஏனெனில், நீர் ஒருவரே பரிசுத்தர். எல்லா நாட்டினரும் வந்து உமக்கு முன்பாக ஆராதனை செய்வார்கள், ஏனெனில், உமது நீதியான செயல்கள் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.”
5 ୫ ଏନ୍ ତାୟମ୍ତେ ଆଇଙ୍ଗ୍ ସିର୍ମା ଦିଶୁମ୍ରେ ମାନ୍ଦିର୍ ଅଡ଼ାଃରାଃ ଦୁଆର୍ ନିଜାକାନ୍ ନେଲ୍କେଦାଇଙ୍ଗ୍ । ଏନାରେ ସାବୁଦ୍ ଲେକା ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ତାଇନଃ ପାବିତାର୍ ଠାୟାଦ୍ କୁମ୍ବା ତାଇକେନା ।
இதற்குப் பின்பு, நான் நோக்கிப் பார்த்தபொழுது, பரலோகத்திலுள்ள ஆலயம் திறந்திருந்தது. இதுவே சாட்சியின் இறைசமுகக் கூடாரம்.
6 ୬ ଏୟା ଦୁକୁହାସୁ ସାବାକାଦ୍ ଏୟା ଦୁଁତ୍, ସିର୍ମାରେୟାଃ ମାନ୍ଦିର୍ ଭିତାର୍ଏତେକ ଅଡଙ୍ଗ୍ୟାନା, ଇନ୍କୁ କା ଦାଗିୟାକାନ୍ ନିରାଲ୍ଲିଜାଃ ତୁସିଙ୍ଗ୍ୟାଁକାନ୍ ତାଇକେନାକ ଆଡଃ କୁଡ଼ାମ୍ରେ ସୋନାରେୟାଃ କାସ୍ନା ତଲ୍ବିହୁର୍କାନ୍ ତାଇକେନାକ ।
ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளுடன் ஏழு இறைத்தூதர்கள் வெளியே வந்தார்கள். அவர்கள் சுத்தமான, பிரகாசமுள்ள மென்பட்டு உடையை உடுத்தியிருந்தார்கள்; தங்கள் மார்புகளைச் சுற்றி, தங்கச் சால்வைகளைக் கட்டியிருந்தார்கள்.
7 ୭ ଏନ୍ତେ ଉପୁନିୟା ଜାଁତୁକଏତେ ମିଆଁଦ୍ନିଃ ଜାନାଅ ଜାନାଅ ଜୀନିଦ୍ଗି ତାଇନଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ଖିସ୍ତେ ପେରେଜାକାନ୍, ଏୟା ସୋନାରେୟାଃ ଡୁଭା, ଏନ୍ ଏୟା ଦୁଁତ୍କକେ ଏମାଦ୍କଆ । (aiōn )
அப்பொழுது அந்த நான்கு உயிரினங்களில் ஒன்று, ஏழு தூதருக்கு ஏழு தங்கக் கிண்ணங்களைக் கொடுத்தது. அந்தக் கிண்ணங்கள், என்றென்றும் வாழ்கிற இறைவனின் கோபத்தால் நிறைந்திருந்தன. (aiōn )
8 ୮ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ମାନାରାଙ୍ଗ୍ ଆଡଃ ପେଡ଼େଃରେୟାଃ ସୁକୁଲ୍ତେ ମାନ୍ଦିର୍ ଅଡ଼ାଃ ପେରେଃୟାନା, ଏୟା ଦୁଁତ୍ ଆଉୱାକାଦ୍ ଏୟା ଦୁକୁହାସୁରେୟାଃ ଟୁଣ୍ଡୁ ଆଉରି ହବାଅଃ ଜାକେଦ୍, ନେ ମାନ୍ଦିର୍ ଅଡ଼ାଃରେ ଆଡଃଜେତାଏ କାକ ବଲଦାଡ଼ିୟାନା ।
அந்த ஆலயம் இறைவனுடைய மகிமையிலிருந்தும், அவருடைய வல்லமையிலிருந்தும் எழும்பிய புகையினால் நிறைந்திருந்தது. அந்த ஏழு இறைத்தூதர்களுடைய ஏழு வாதைகளும் நிறைவேறி முடியும்வரைக்கும், ஒருவராலும் அந்த ஆலயத்திற்குள் செல்ல முடியவில்லை.