< ଲୁକ 5 >
1 ୧ ମୁସିଙ୍ଗ୍ ୟୀଶୁ ଗିନେସରେତ୍ ଦରେୟା ନାଡ଼େଃରେ ତିଙ୍ଗୁଆକାନ୍ ତାଇକେନାଏ, ଆଡଃ ଗାଦେଲ୍ ହଡ଼କ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ କାଜି ଆୟୁମ୍ ନାଗେନ୍ତେ ଇନିଃକେ ଜୁରୁବିୟୁରାକାଇକ ତାଇକେନା,
ஒரு நாள் இயேசு கெனேசரேத் ஏரியருகே நின்றுகொண்டிருந்தபோது, இறைவனின் வார்த்தையைக் கேட்பதற்கு மக்கள் அவரைச் சுற்றிலும் கூடிவந்தார்கள்.
2 ୨ ଇନିଃ ବାରିଆ ଲାଉକା ଦରେୟା ଗେନାରେ ଦହଆକାନାଏ ନେଲ୍କେଦାଃ, ହାକୁସାବ୍ ହଡ଼କ ଏନ୍ ଲାଉକାଏତେ ଆଡ଼୍ଗୁକେଦ୍ତେ ଜାଲୋମ୍କ ଚାପିତାଇକେନା ।
அவர் கரையோரம் இரண்டு படகுகளைக் கண்டார், மீனவர் அவற்றை அங்கு விட்டுவிட்டுத் தங்களது வலைகளை அலசிக் கொண்டிருந்தார்கள்.
3 ୩ ୟୀଶୁ ଏନାଏତେ ମିଆଁଦ୍ ଲାଉକାରେ ରାକାବ୍ୟାନାଏ, ଏନାଦ ଶିମୋନ୍ଆଃ ତାଇକେନା ଆଡଃ ୟୀଶୁ ଇନିଃକେ ଦରେୟା ଗେନାଏତେ ହୁଡିଙ୍ଗ୍ ସାଙ୍ଗିନ୍ତେ ଇଦିମେ ମେନ୍ତେ ବିନ୍ତିକିୟାଏ । ଏନ୍ତେ ଇନିଃ ଲାଉକାରେ ଦୁବ୍ୟାନ୍ଚି ଗାଦେଲ୍ ହଡ଼କକେ ଇତୁକେଦ୍କଆଏ ।
அவர் சீமோனுக்குச் சொந்தமான படகில் ஏறினார். அவர் அந்தப் படகை கரையிலிருந்து கொஞ்சம் தள்ளிவிடும்படி சீமோனிடம் கேட்டுக்கொண்டு, படகில் உட்கார்ந்து மக்களுக்கு போதனை செய்தார்.
4 ୪ ଇନିଃ କାଜିଚାବାକେଦ୍ଚି ଶିମୋନ୍କେ କାଜିକିୟାଏ, “ଲାଉକା ତାମାଃକେ ଇକିର୍ତେ ଇଦିମେ ଆଡଃ ହାକୁସାବ୍ ନାଗେନ୍ତେ ଜାଲୋମ୍ ତାମାଃ ହୁଦ୍ମାଏମେ ।”
அவர் பேசி முடித்தபின்பு, சீமோனை நோக்கி, “படகை ஆழமான தண்ணீர் பகுதிக்குக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார்.
5 ୫ ମେନ୍ଦ ଶିମୋନ୍ କାଜିକିୟାଏ, “ହେ ଗୁରୁ, ଆଲେ ମିଦ୍ନିଦାଲେ କାମିକେଦା ଆଡଃ ମିଆଁଦ୍ହ ହାକୁ କାଲେ ସାବ୍କେଦ୍କଆ । ମେନ୍ଦ ଆମାଃ କାଜିତେ ଜାଲୋମ୍ ହୁଦ୍ମାୟାଇଙ୍ଗ୍ ।”
அதற்குச் சீமோன், “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றுமே கிடைக்கவில்லை. ஆனால் உம்முடைய வார்த்தையின்படியே நான் வலைகளைப் போடுகிறேன்” என்றான்.
6 ୬ ଇନ୍କୁ ଜାଲୋମ୍ ହୁଦ୍ମାକେଦ୍ଚି ପୁରାଃ ହାକୁକ ଜାଲୋମ୍କେଦ୍କଆ, ଆଡଃ ଇନ୍କୁଆଃ ଜାଲୋମ୍କ ଚାଗାଡ଼ଃତାନ୍ ତାଇକେନା ।
அவர்கள் அப்படிச் செய்தபோது, திரளான மீன்களைப் பிடித்தார்கள். அவர்களுடைய வலைகள் பாரத்தால் கிழியத்தொடங்கின.
7 ୭ ଇମ୍ତାଙ୍ଗ୍ ଇନ୍କୁ ଦେଙ୍ଗାନାଙ୍ଗ୍ ମେନ୍ତେ ଆକଆଃ ଗାତିକକେ ହାକାଅ କେଦ୍କଆକ । ଆଡଃ ଗାତିକ ହିଜୁଃକେଦ୍ତେ ବାରିଆ ଲାଉକାରେ ନିମିନ୍ ହାକୁ ପେରେଃକେଦ୍କଆକ ଯେ ଲାଉକା ତାକଆଃ ଡୁବିଜଃତାନ୍ଲେକା ହବାଅଃ ତାଇକେନା ।
அப்பொழுது மற்றப் படகில் இருந்த தங்கள் பங்காளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படி, அவர்களுக்குச் சைகை காட்டினார்கள். அவர்கள் வந்து இரண்டு படகுகளையும் மீன்களினால் நிரப்பினார்கள்; அவை மூழ்கத் தொடங்கின.
8 ୮ ଏନା ନେଲ୍କେଦ୍ତେ ଶିମୋନ୍ ପାତ୍ରାସ୍ ୟୀଶୁଆଃ କାଟା ସୁବାରେ ଉୟୁଃୟାନାଏ ଆଡଃ କାଜିକେଦାଏ, “ହେ ପ୍ରାଭୁ ଆଇଁୟାଃତାଃଏତେ ସାଙ୍ଗିନଃମେଁ, ଆଇଙ୍ଗ୍ଦ ପାପି ହଡ଼ ତାନିଙ୍ଗ୍ ।”
சீமோன் பேதுரு இதைக் கண்டபோது, இயேசுவின் பாதத்தில் விழுந்து, “ஆண்டவரே, என்னைவிட்டுப் போய்விடும்; நான் பாவியான மனிதன்!” என்றான்.
9 ୯ ଶିମୋନ୍ ପାତ୍ରାସ୍ ଆଡଃ ଆୟାଃ ଗାତିକ ମିସାତରା ନିମିନ୍ ହାକୁ ନେଲ୍କେଦ୍ତେ ଆକ୍ଦାନ୍ଦାଅୟାନାକ ।
அவனும் அவனுடன் இருந்தவர்கள் எல்லோரும் தாங்கள் பிடித்த மீன்களைக் கண்டு வியப்படைந்தார்கள்.
10 ୧୦ ଆଡଃ ଜେବଦୀୟାଃ ହନ୍ ଯାକୁବ୍ ଆଡଃ ଯୋହାନ୍ ଶିମୋନ୍ଲଃ ମିସାତେ କାମି ତାଇକେନାକିନ୍ ଆଡଃ ଏନ୍ ବାରାନ୍କିନ୍ହ ଆକ୍ଦାନ୍ଦାଅ ୟାନାକିନ୍ । ଆଡଃ ୟୀଶୁ ଶିମୋନ୍କେ କାଜିକିୟାଏ, “ଆଲମ୍ ବରଏୟା, ନାହାଁଃଏତେ ଆମ୍ ହଡ଼କକେ ପାର୍ମେଶ୍ୱାର୍ତାଃତେ ଆଉକଆମ୍ ।”
சீமோனின் பங்காளிகளான செபெதேயுவின் மகன்களான யாக்கோபும் யோவானும்கூட வியப்படைந்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனிடம், “பயப்படாதே; இதுமுதல் நீ இறைவனுக்காக மனிதரைப் பிடிப்பவனாவாய்” என்றார்.
11 ୧୧ ଏନ୍ତେ ଇନ୍କୁ ଲାଉକାକକେ ଦରେୟା ଗେନାତେ ତେବାଃକେଦ୍ଚି ସବେନାଃ ବାଗିକେଦ୍ତେ ୟୀଶୁକେକ ଅତଙ୍ଗ୍କିୟା ।
எனவே அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் சேர்த்தபின், எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்.
12 ୧୨ ୟୀଶୁ ମିଆଁଦ୍ ସାହାର୍ରେ ତାଇକେନ୍ ଇମ୍ତା ଏନ୍ତାଃରେ ନାଗେଘାଅତେ ପେରେଜାକାନ୍ ମିଆଁଦ୍ ହଡ଼ ତାଇକେନାଏ । ଇନିଃ ୟୀଶୁକେ ନେଲ୍ଲଃଗି ଇକ୍ଡ଼ୁମ୍କେଦ୍ତେ ବିନ୍ତିତାନ୍ଲଃ କାଜିକିୟାଏ, “ହେ ପ୍ରାଭୁ, ଆମ୍ ସାନାଙ୍ଗ୍ରେଦ ଆଇଙ୍ଗ୍କେ ବୁଗିନିୟାର୍ ଦାଡ଼ିୟାମ୍ ।”
இயேசு ஒரு பட்டணத்தில் இருக்கையில், ஒரு குஷ்டவியாதி உள்ளவன் வந்தான். அவன் இயேசுவைக் கண்டபோது, தரையில் முகங்குப்புற விழுந்து, “ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்றான்.
13 ୧୩ ଏନ୍ତେ ୟୀଶୁ ଆୟାଃ ତିଃଇ ଜିଲିଙ୍ଗ୍କେଦ୍ତେ ଜୁଟିଦ୍କିୟାଏ ଆଡଃ କାଜିକିୟାଏ, “ଆଇଙ୍ଗ୍ ସାନାଙ୍ଗ୍ତାନିଙ୍ଗ୍ ଆମ୍ ବୁଗିନିୟାରଃମେ ।” ଆଡଃ କାଜିତାନ୍ ତର୍ସାଗି ଇନିୟାଃ ନାଗେଘାଅ ଫାର୍ଚିୟାନା ।
இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்றார். உடனே குஷ்டவியாதி அவனைவிட்டு நீங்கிற்று.
14 ୧୪ ଏନ୍ତେ ୟୀଶୁ ହୁକୁମ୍କିୟାଏ, “ଜେତାଏକେ ନେ କାଜି ଆଲମ୍ ଉଦୁବ୍କଆଃ, ମେନ୍ଦ, ଜୁ, ଯାଜାକ୍ତାଃରେ ଉଦୁବେନ୍ମେ ଆଡଃ ଇନ୍କୁଆଃ ଗାୱାନାଙ୍ଗ୍ ମୁଶାନାବୀ ଆଚୁକାଦ୍ ଲେକାତେ ଆମାଃ ଫାର୍ଚିରେୟାଃ ଦାଣେଁ ରାକାବେମେଁ ।”
அப்பொழுது இயேசு அவனிடம், “இதைக்குறித்து ஒருவருக்கும் சொல்லவேண்டாம்; ஆனால், நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, உன்னுடைய சுத்திகரிப்புக்காக மோசே கட்டளையிட்ட பலிகளைச் செலுத்து; அது அவர்களுக்கு சாட்சியாய் இருக்கும்” என்று கட்டளையிட்டார்.
15 ୧୫ ଆଡଃ ୟୀଶୁଆଃ ବିଷାଏରେୟାଃ କାଜି ପୁରାଃଗି ନିତିର୍ୟାନା, ଏନ୍ତେ ଇନିୟାଃ ଇତୁଆନ୍ କାଜିକ ଆୟୁମ୍ ନାଗେନ୍ତେ ଆଡଃ ଆକଆଃ ଦୁକୁଏତେ ବୁଗିୟଃ ନାଗେନ୍ତେ ପୁରାଃ ଗାଦେଲ୍ ହଡ଼କ ଇନିଃତାଃରେକ ହୁଣ୍ଡିୟାନା ।
ஆனால் அவரைப்பற்றிய செய்தி இன்னும் அதிகமாய் பரவிற்று, இதனால் அவர் சொல்வதைக் கேட்பதற்கும் தங்கள் நோய்களிலிருந்து சுகமடைவதற்கும், மக்கள் கூட்டம் கூட்டமாய் அவரிடம் வந்தார்கள்.
16 ୧୬ ମେନ୍ଦ ୟୀଶୁ ସିଃସଏଃ ଠାୟାଦ୍ତେ ସେନଃୟାନ୍ତେ ବିନ୍ତିକେଦାଏ ।
ஆனால் இயேசுவோ அவர்களைவிட்டுத் தனிமையான இடத்திற்கு விலகிப்போய், அங்கே மன்றாடினார்.
17 ୧୭ ମୁସିଙ୍ଗ୍ହୁଲାଙ୍ଗ୍ ୟୀଶୁ ଇତୁତାନାଏ ତାଇକେନା, ଏନ୍ତାଃରେ ଫାରୁଶୀ ଆଡଃ ଆଇନ୍ ଇତୁକ ଦୁବାକାନ୍କ ତାଇକେନା, ଇନ୍କୁ ଗାଲିଲ୍ରେୟାଃ ସବେନ୍ ହାତୁ ଆଡଃ ଯିହୁଦା ଦିଶୁମ୍ରେୟାଃ ସବେନ୍ ହାତୁ ଆଡଃ ଯୀରୁଶାଲେମ୍ଏତେ ହିଜୁଃକାନ୍କ ତାଇକେନା । ଆଡଃ ଦୁକୁତାନ୍କକେ ବୁଗିନ୍ ନାଗେନ୍ତେ ପ୍ରାଭୁଆଃ ପେଡ଼େଃ ୟୀଶୁଲଃ ତାଇକେନା ।
ஒரு நாள் இயேசு போதித்துக் கொண்டிருந்தார், கலிலேயாவிலுள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் யூதேயாவிலும் எருசலேமிலுமிருந்து வந்த பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். நோயாளிகளை குணமாக்கும்படியான கர்த்தருடைய வல்லமை இயேசுவோடு இருந்தது.
18 ୧୮ ହଡ଼କ ମିଆଁଦ୍ ବାତ୍କାନ୍ନିଃକେ ପାର୍କମ୍ରେ ବାଟିୟାକାନ୍ଗି ଗଅଃ ଆଉକିୟାକ ଆଡଃ ଇନିଃକେ ଭିତାର୍ତେ ଇଦିକେଦ୍ତେ ୟୀଶୁଆଃ ସାମ୍ନାଙ୍ଗ୍ରେ ଦହନାଙ୍ଗ୍ ସାନାଙ୍ଗ୍ତାନ୍କ ତାଇକେନା ।
அப்பொழுது படுக்கையில் இருந்த முடக்குவாதக்காரன் ஒருவனை சிலர் தூக்கிக்கொண்டு வந்தார்கள்; அவனை வீட்டிற்குள் கொண்டுபோய் இயேசுவுக்கு முன்பாகக் கிடத்துவதற்கு அவர்கள் முயற்சிசெய்தார்கள்.
19 ୧୯ ଗାଦେଲ୍ ହଡ଼କ ତାଇକେନ୍ ହରାତେ ଇନ୍କୁ ଇନିଃକେ ଭିତାର୍ତେ ଆଉ ନାଙ୍ଗ୍ ହରା କାକ ନାମ୍କେଦା । ଏନାତେ ଇନ୍କୁ ସାଡ଼୍ମି ଚେତାନ୍ତେ ପାର୍କମ୍ଲଃଗି ଇନିଃକେ ତେଙ୍ଗଃ ରାକାବ୍କିୟାଃକ ଆଡଃ ସାଡ଼୍ମି ଖାପ୍ରା ଆତମ୍କେଦ୍ତେ ୟୀଶୁଆଃ ସାମ୍ନାଙ୍ଗ୍ରେ ଡୁଙ୍ଗା ଆଡ଼୍ଗୁକିୟାଃକ ।
மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்தபடியால் அப்படிச் செய்வதற்கான வழி அவர்களுக்குக் கிடைக்கவில்லை; எனவே அவர்கள் வீட்டின்மேல் ஏறி கூரையின் ஓடுகளைப் பிரித்து, அதன் வழியாக படுக்கையில் கிடந்த அவனைக் கூடியிருந்த மக்கள் நடுவே இயேசுவுக்குமுன் இறக்கினார்கள்.
20 ୨୦ ୟୀଶୁ ଏନ୍ ହଡ଼କଆଃ ବିଶ୍ୱାସ୍ ନେଲ୍କେଦ୍ତେ କାଜିକିୟାଏ, “ଏ ଗାତି, ଆମାଃ ପାପ୍କ ଛାମାୟାନା ।”
இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, “மகனே, உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
21 ୨୧ ଆଇନ୍ ଇତୁକ ଆଡଃ ଫାରୁଶୀକ ଆକ ଆକରେ ଉଡ଼ୁଃକେଦାଃକ, “ପାର୍ମେଶ୍ୱାର୍କେ ନିନ୍ଦାଇତାନ୍ ନେ ହଡ଼ ଅକଏ ତାନିଃ? ପାର୍ମେଶ୍ୱାର୍କେ ବାଗିକେଦ୍ତେ ଆଡଃ ଅକଏ ପାପ୍ଛାମା ଦାଡ଼ିୟାଏ?”
பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும், “இறைவனை நிந்தித்துப் பேசுகிற இவன் யார்? இறைவனாலன்றி யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று தங்களுக்குள்ளே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
22 ୨୨ ମେନ୍ଦ ୟୀଶୁ ଇନ୍କୁଆଃ ଉଡ଼ୁଃ ଆଟ୍କାର୍କେଦ୍ତେ ମେତାଦ୍କଆଏ, “ଆପେ ଆପେୟାଃ ମନ୍ରେ ଚିନାଃପେ ଉଡ଼ୁଃତାନା?
அவர்கள் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்து, “உங்கள் மனதில் ஏன் இவ்விதமாகச் சிந்திக்கிறீர்கள்?
23 ୨୩ ଅକ୍ନାଃ ରାୱାଲାଃ? ‘ପାପ୍ ତାମାଃକ ଛାମାୟାନା’ ମେନ୍ତେ କାଜିତେୟାଃ ରାୱାଲାଃ ଚି ‘ବିରିଦ୍ମେ ଆଡଃ ସେନେମେ’ ମେନ୍ତେ କାଜିତେୟାଃ?
‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது ‘எழுந்து நட’ என்று சொல்வதா, எது எளிது?
24 ୨୪ ମେନ୍ଦ ମାନୱାହନ୍ଆଃ ନେ ଅତେଦିଶୁମ୍ରେ ପାପ୍ ଛାମାରେୟାଃ ଆକ୍ତେୟାର୍ ମେନାଃ” ଏନା ଆପେ ସାରିକାମେନ୍ତେ, ଇନିଃ ଏନ୍ ବାତ୍କାନ୍ନିଃକେ କାଜିକିୟାଏ, “ମାର୍ ବିରିଦ୍ମେ ଆଡଃ ପାର୍କମ୍ତାମାଃ ଗଅଃକେଦ୍ତେ ଆମାଃ ଅଡ଼ାଃତେ ସେନଃମେ ।”
ஆனால் பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மானிடமகனாகிய எனக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்” என்று விரும்புகிறேன். பின்பு இயேசு அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ” என்றார்.
25 ୨୫ ଇମ୍ତାଙ୍ଗ୍ଗି ଇନିଃ ଇନ୍କୁଆଃ ସାମ୍ନାଙ୍ଗ୍ରେ ବିରିଦ୍ୟାନାଏ, ଆଡଃ ଆୟାଃ ଗିତିଜାକାନ୍ ପାର୍କମ୍କେ ତେଙ୍ଗଃକେଦ୍ତେ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ମାନାରାଙ୍ଗ୍ ଦୁରାଙ୍ଗ୍ତାନ୍ଲଃ ଅଡ଼ାଃତେ ସେନଃୟାନାଏ ।
உடனே அவர்களுக்கு முன்பாக அவன் எழுந்து நின்று, தான் படுத்திருந்த படுக்கையை எடுத்துக்கொண்டு இறைவனைத் துதித்தபடி தன் வீட்டிற்குப் போனான்.
26 ୨୬ ଏନ୍ତାଃରେ ତାଇକାନ୍ ସବେନ୍କ ଆକ୍ଦାନ୍ଦାଅୟାନକ ଆଡଃ ପାର୍ମେଶ୍ୱାର୍କେ ମାରାଙ୍ଗ୍କିୟାକ, “ଆବୁ ତିସିଙ୍ଗ୍ ହାଏକାଟ୍ କାମିବୁ ନେଲ୍କେଦା” ମେନ୍ତେ ବରତାନ୍ଲଃକ କାଜିକେଦା ।
எல்லோரும் வியப்படைந்து இறைவனைத் துதித்தார்கள். அவர்கள் திகிலடைந்து, “நாங்கள் இன்று ஆச்சரியமானவற்றைக் கண்டோம்” என்றார்கள்.
27 ୨୭ ଏନ୍ ତାୟମ୍ତେ ୟୀଶୁ ଅଡଙ୍ଗ୍ୟାନା, ଆଡଃ ଲେବୀ ନୁତୁମ୍ ମିଆଁଦ୍ ମାଲ୍ହାରମ୍ନିଃକେ ମାଲ୍ହାରମ୍ ଠାୟାଦ୍ରେ ଦୁବାକାନାଏ ନେଲ୍କିୟା । ୟୀଶୁ ଇନିଃକେ ମେତାଇଜାଏ, “ଦେଲା ଅତଙ୍ଗ୍ଇଙ୍ଗ୍ମେ ।”
இதற்குப் பின்பு, இயேசு வெளியே சென்று வரி வசூலிக்கும் அலுவலகத்தில் வரி வசூலிக்கிறவனான லேவி என்பவன் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவர் அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார்.
28 ୨୮ ଆଡଃ ଲେବୀ ସବେନାଃ ବାଗିକେଦ୍ତେ ବିରିଦ୍ୟାନାଏ ଆଡଃ ଇନିଃକେ ଅତଙ୍ଗ୍କିୟା ।
லேவி எழுந்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவரைப் பின்பற்றிச் சென்றான்.
29 ୨୯ ଏନ୍ତେ ଲେବୀ ଆୟାଃ ଅଡ଼ାଃରେ ୟୀଶୁ ନାଗେନ୍ତେ ମିଆଁଦ୍ ମାରାଙ୍ଗ୍ ଜମେୟାଃଁ ବାଇକେଦାଏ, ଆଡଃ ପୁରାଃ ମାଲ୍ହାରମ୍କ ଆଡଃ ଏଟାଃ ହଡ଼କ ଇନ୍କୁଲଃକ ଜମ୍ତାଇକେନା ।
பின்பு லேவி தன்னுடைய வீட்டிலே இயேசுவுக்கு ஒரு பெரிய விருந்து கொடுத்தான்; வரி வசூலிக்கிறவர்களும் வேறு பலரும் பெருங்கூட்டமாக வந்து, அவர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
30 ୩୦ ମେନ୍ଦ ଫାରୁଶୀ ଆଡଃ ଆଇନ୍ ଇତୁକ କୁର୍ବୁରାଅଃତାନ୍ଲଃ ଆୟାଃ ଚେଲାକକେ ମେତାଦ୍କଆକ, “ଆପେ ମାଲ୍ହାରମ୍କଲଃ ଆଡଃ ପାପିକଲଃ ଚିକା ନାଗେନ୍ତେ ଜମ୍, ନୁଁ ତାନାପେ?”
ஆனால் பரிசேயரும் அவர்களுடைய குழுவைச் சேர்ந்த மோசேயின் சட்ட ஆசிரியர்களும் இயேசுவின் சீடர்களிடம், “நீங்கள் வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுகிறது ஏன்?” என்று கேட்டார்கள்.
31 ୩୧ ୟୀଶୁ ଇନ୍କୁକେ କାଜିକେଦ୍କଆଏ, “କା ହାସୁତାନ୍କଆଃ ନାଗେନ୍ତେ ବାଇଦ୍ କା ଲାଗାତିଙ୍ଗ୍ୟାଁଃ ମେନ୍ଦ ହାସୁତାନ୍କଆଃ ନାଗେନ୍ତେ ବାଇଦ୍ ଲାଗାତିଙ୍ଗ୍ୟାଁଃ ।
அதற்கு இயேசு அவர்களிடம், “சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை.
32 ୩୨ ଆଇଙ୍ଗ୍ ଧାର୍ମାନ୍ ହଡ଼କକେ କେଡ଼ା ନାଗେନ୍ତେ କାଇଙ୍ଗ୍ ହିଜୁଆକାନା, ମେନ୍ଦ ପାପି ହଡ଼କଆଃ ମନ୍ରୁହାଡ଼ଃ ନାଗେନ୍ତେ ହିଜୁଆକାନାଇଙ୍ଗ୍ ।”
நான் நீதிமான்களை அழைப்பதற்காக வரவில்லை, பாவிகளையே மனந்திரும்பும்படி அழைக்கவந்தேன்” என்றார்.
33 ୩୩ ଚିମିନ୍ ହଡ଼କ ୟୀଶୁକେ କାଜିକିୟାଃକ, “ଯୋହାନ୍ଆଃ ଚେଲାକ ମଣେଁସା କାଟାବ୍ ଆଡଃ ବିନ୍ତିୟାଃକ, ଏନ୍ଲେକା ଫାରୁଶୀକଆଃ ଚେଲାକହ ରିକାଃକ, ମେନ୍ଦ ଆମାଃ ଚେଲାକ ସବେନ୍ ଇମ୍ତାଙ୍ଗ୍ ଜମ୍ ନୁଁ ତାନାକ ।”
சிலர் இயேசுவிடம், “யோவானின் சீடர்கள் அடிக்கடி உபவாசித்து மன்றாடுகிறார்கள், பரிசேயருடைய சீடர்களும் அப்படியே செய்கிறார்கள்; ஆனால் உம்முடைய சீடரோ சாப்பிடுவதும் குடிப்பதுமாக இருக்கிறார்களே” என்றார்கள்.
34 ୩୪ ୟୀଶୁ ମେତାଦ୍କଆଏ, “ଚିୟାଃ ଆଣ୍ଦିଅଡ଼ାଃରେ ଦୁହ୍ଲାକଡ଼ା ବାଲାକଲଃ ତାଇନଃ ଜାକେଦ୍ ଆପେ ଚିୟାଃ ଇନ୍କୁକେ କାଟାବ୍ରିକା ଦାଡ଼ିୟାକଆପେ? କାହାଗି!
அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது அவனுடைய நண்பர்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா?
35 ୩୫ ମେନ୍ଦ ନେଡା ହିଜୁଃଆ ଚିମ୍ତାଙ୍ଗ୍ ଇନ୍କୁତାଃଏତେ ଦୁହ୍ଲାକଡ଼ା ବିନ୍ଗାଅଃଆଏ, ଇମ୍ତାଙ୍ଗ୍ ଇନ୍କୁ କାଟାବ୍ ରିକାଏୟାକ ।”
ஆனால் மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அந்நாட்களில் அவர்கள் உபவாசிப்பார்கள்” என்றார்.
36 ୩୬ ଇନିଃ ଇନ୍କୁକେ ନେ ଜନ୍କା କାଜି କାଜିୟାଦ୍କଆଏ, “ଜେତାଏ ନାୱା ଲିଜାଃରେୟାଃ କେଚାଃ ମାରି ଲିଜାଃରେ ଜଡ଼ାଇକେଦ୍ତେ କାକ ତୁନାୟା । ଆଡଃ ଏନ୍କାଲେରେଦ ନାୱା ଲିଜାଃଏ ଚାଗାଡ଼େୟା ଆଡଃ ନାୱା ଲିଜାଃରେୟାଃ କେଚାଃ ମାରିଲିଜାଃରେ କା ମେସାଅଃଆ ।
பின்பு இயேசு அவர்களுக்கு ஒரு உதாரணத்தைக் கூறினார்: “ஒருவனும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அப்படி ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும். புதிய துண்டும் பழைய ஆடைக்குப் பொருந்தாது.
37 ୩୭ ଆଡଃ ଜେତାଏ ନାୱା ଦାଖ୍ରାସିକେ ମାରି ଉହୁର୍ତୁମ୍ବାରେ ଜେତାଏ କାକ ଦୁଲ୍ପେରେଜେୟା । ଚିୟାଃଚି ନାୱା ଦାଖ୍ରାସି ମାରି ଉହୁର୍ତୁମ୍ବାରେୟାଃ ଥାଇଲାକେ ଚାଗାଡ଼୍ତାଃଏ ଆଡଃ ଦାଖ୍ରାସି ଲିଙ୍ଗି ଏଣ୍ଡାଗଃଆ ଆଡଃ ଉହୁର୍ରେୟାଃ ଥାଇଲା ଜିୟନଃଆ ।
யாரும் புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. அப்படிச் செய்தால், புதிய திராட்சை இரசம் அந்த தோல் பைகளை வெடிக்கச்செய்யும்; திராட்சை இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் பாழாய்ப்போகும்.
38 ୩୮ ମେନ୍ଦ ନାୱା ଦାଖ୍ରାସିକେ ନାୱା ଉହୁର୍ତୁମ୍ବାରେୟାଃ ଥାଇଲାରେ ପେରେଃ ଲାଗାତିଙ୍ଗ୍ୟାଁଃ ।
புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோல் பைகளில்தான் ஊற்றி வைக்கவேண்டும்.
39 ୩୯ ଆଡଃ ଜେତାଏ ହଡ଼ ମାରି ଦାଖ୍ରାସି ନୁଁକେଦ୍ ତାୟମ୍ତେ ନାୱା କାଏ ସାନାଙ୍ଗ୍ଆଃ, ଚିୟାଃଚି ଇନିଃଦ ‘ମାରିତେୟାଃକେ ବୁଗିନ୍ତେୟାଃ ତାନାଃ’ ମେନେୟାଏ ।”
யாரும் பழைய திராட்சை இரசத்தைக் குடித்த பின்பு புதியதை விரும்பமாட்டார்கள். ஏனெனில், ‘பழையதே நல்லது’ என்பார்கள்.”