< ଯୋହାନ୍ 1 >
1 ୧ ଏନେଟେଦ୍ରେ କାଜି ତାଇକେନା, ଆଡଃ କାଜି ପାର୍ମେଶ୍ୱାର୍ଲଃ ତାଇକେନା, ଆଡଃ କାଜି ପାର୍ମେଶ୍ୱାର୍ ତାଇକେନାଏ ।
ஆரம்பத்தில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை இறைவனுடன் இருந்தது, அந்த வார்த்தை இறைவனாயிருந்தது.
2 ୨ ଇନିଃ ଏନେଟେଦ୍ରେ ପାର୍ମେଶ୍ୱାର୍ଲଃ ତାଇକେନାଏ ।
அந்த வார்த்தையானவர் ஆரம்பத்திலேயே இறைவனோடு இருந்தார்.
3 ୩ ପାର୍ମେଶ୍ୱାର୍ ସବେନାଃ ଇନିଃତେ ବାଇୟାକାଦା, ଆଡଃ ବାଇୟାକାନ୍ ତେୟାଃଏତେ ଜେତ୍ନାଃ ଇନିଃକେ ବାଗିକେଦ୍ତେ କା ବାଇୟାକାନା,
அந்த வார்த்தையானவர் மூலமாகவே எல்லாம் படைக்கப்பட்டன; படைக்கப்பட்டிருப்பவைகளில் எதுவுமே அவரில்லாமல் படைக்கப்படவில்லை.
4 ୪ ଇନିଃରେ ଜୀଦାନ୍ ତାଇକେନା ଆଡଃ ଏନ୍ ଜୀଦାନ୍ ହଡ଼କଆଃ ମାର୍ସାଲ୍ ତାଇକେନା ।
அவரில் ஜீவன் இருந்தது; அந்த ஜீவனே எல்லா மனிதருக்கும் வெளிச்சமாயிருந்தது.
5 ୫ ମାର୍ସାଲ୍ ନୁବାଃରେ ଜୁଲଃତାନା, ମେନ୍ଦ ନୁବାଃ ଏନାକେ କାଏ ଆଟ୍କାର୍ଉରୁମ୍କେଦାଃ ।
அந்த வெளிச்சம் இருளிலே பிரகாசிக்கிறது, ஆனால் இருள் அதை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை.
6 ୬ ପାର୍ମେଶ୍ୱାର୍ତେ କୁଲାକାନ୍ ମିଆଁଦ୍ କାଜିଏମ୍ନିଃ ତାଇକେନାଏ, ଇନିୟାଃ ନୁତୁମ୍ ଯୋହାନ୍ ତାଇକେନା ।
இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான்; அவனுடைய பெயர் யோவான்.
7 ୭ ଇନିଃ ଏନ୍ ମାସ୍କାଲ୍ରେୟାଃ ଗାୱା ଉଦୁବ୍ ନାଗେନ୍ତେ ହିଜୁଃୟାନାଏ, ଜେ'ଲେକାଚି ଇନିୟାଃ ହରାତେ ସବେନ୍ ହଡ଼କ ବିଶ୍ୱାସେଆ ।
தன் மூலமாய் எல்லா மக்களும் விசுவாசிக்கும்படியாகவே அந்த வெளிச்சத்தைக் குறித்து சாட்சி கொடுக்கும் ஒரு சாட்சியாகவே அந்த யோவான் வந்தான்.
8 ୮ ଇନିଃ ଆଇଃକ୍ଗି ଏନ୍ ମାସ୍କାଲ୍ କାଏ ତାଇକେନା; ମେନ୍ଦ ଏନ୍ ମାସ୍କାଲ୍ରେୟାଃ ଗାୱା ଏମ୍ ନାଗେନ୍ତେ ହିଜୁଃୟାନାଏ ।
அவன் வெளிச்சமாய் இருக்கவில்லை; அவனோ அந்த வெளிச்சத்திற்கான ஒரு சாட்சியாக மாத்திரமே வந்தான்.
9 ୯ ଏନା ସାର୍ତି ମାର୍ସାଲ୍ ତାଇକେନା, ହେଗି ସବେନ୍ ହଡ଼କକେ ମାସ୍କାଲ୍କତାନ୍ ମାର୍ସାଲ୍ ଅତେଦିଶୁମ୍ରେ ହିଜୁଃତାଇକେନା ।
உலகத்திற்குள் வந்து ஒவ்வொரு மனிதனுக்கும் வெளிச்சத்தைக் கொடுத்த வெளிச்சமே அந்த உண்மையான வெளிச்சம்.
10 ୧୦ ଇନିଃ ଅତେଦିଶୁମ୍ରେ ତାଇକେନାଏ, ଆଡଃ ଅତେଦିଶୁମ୍ ଇନିଃତେ ବାଇୟାନା, ଏନ୍ରେୟ ଅତେଦିଶୁମ୍ରେନ୍କ ଇନିଃକେ କାକ ସାରିକିୟା ।
அந்த வார்த்தையானவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் படைக்கப்பட்டிருந்தும், உலகமோ அவரை இன்னார் என்று அறிந்துகொள்ளவில்லை.
11 ୧୧ ଇନିଃ ଆୟାଃ ଦିଶୁମ୍ତେ ହିଜୁଃୟାନାଏ ମେନ୍ଦ ଆୟାଃ ହଡ଼କ ଇନିଃକେ କାକ ଦାରମ୍କିୟାଃ ।
அவர் தமக்குரிய இடத்திற்கே வந்தார். ஆனால் அவருடைய சொந்த மக்களோ, அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
12 ୧୨ ମେନ୍ଦ ଆଇଃକ୍କେ ଦାରମିତାନ୍କକେ, ଆଡଃ ଆୟାଃ ନୁତୁମ୍ରେ ବିଶ୍ୱାସେତାନ୍ ସବେନ୍ ହଡ଼କକେ ଇନିଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ହନ୍ ହବାଅଃରେୟାଃ ଆକ୍ତେୟାର୍ ଏମାଦ୍କଆଏ ।
ஆனால் அவர் தம்மை ஏற்றுக்கொண்டு தம்முடைய பெயரில் விசுவாசம் வைத்த அனைவருக்கும், இறைவனுடைய பிள்ளைகளாவதற்கு உரிமையைக் கொடுத்தார்.
13 ୧୩ ଇନ୍କୁ ମାୟୋମ୍ତେଦ କାହା, ହଡ଼୍ମରେୟାଃ ମନେତେଦ କାହା ଆଡଃ ହଡ଼ଆଃ ମନେତେଦ କାହା ମେନ୍ଦ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆଇଃକ୍ଗି ଆକଆଃ ଆପୁ ।
இப்பிள்ளைகள் இரத்த உறவினாலோ, மனித தீர்மானத்தினாலோ, புருஷனுடைய விருப்பத்தினாலோ உண்டானவர்கள் அல்ல. மாறாக இவர்கள் இறைவனால் பிறப்பிக்கப்பட்டவர்கள்.
14 ୧୪ ଆଡଃ ଏନ୍ କାଜି ହଡ଼୍ମ ସାବ୍କେଦା, ପୁରାଃ ଦାୟା ଆଡଃ ସାର୍ତିତେ ପେରେଜାକାନ୍, ଆବୁଆଃ ଥାଲାରେ ଡେରାକେଦାଏ ଆଡଃ ଆବୁ ଇନିୟାଃ ମାନାରାଙ୍ଗ୍ବୁ ନେଲ୍କେଦା ଏନା ଆପୁଆଃ ମିଆଁଦ୍ଗି ହନ୍ଆଃ ମାନାରାଙ୍ଗ୍ ତାଇକେନା ।
வார்த்தையானவரே மனித உடல் எடுத்து நம்மிடையே வாழ்ந்தார். நாங்கள் அவருடைய மகிமையைக் கண்டோம். பிதாவின் ஒரே மகனுக்குரிய அந்த மகிமையைக் கண்டோம். அந்த வார்த்தையானவர் கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் பிதாவிடமிருந்து வந்தவர்.
15 ୧୫ ଆଡଃ ଯୋହାନ୍ ଇନିୟାଃ ଗାୱା ଏମ୍ତାନ୍ଲଃ, କାଉରିକେଦ୍ତେ କାଜିକେଦାଏ, “ଆଇଙ୍ଗ୍ ଅକଏୟାଃ କାଜି କାଜିତାଇକେନାଇଙ୍ଗ୍ ଇନିଃ ନିଃଗିତାନିଃ, ‘ଆଇଁୟାଃ ତାୟମ୍ତେ ହିଜୁଃଗିଆଏ, ମେନ୍ଦ ଇନିଃ ମାରାଙ୍ଗ୍ଆଁଏ, ଚିୟାଃଚି ଇନିଃଦ ଆଇଁୟାଃ ଜାନାମ୍ ସିଦାରେ ତାଇକେନାଏ ।’”
யோவான் அவரைக்குறித்து சாட்சி கொடுத்து: “எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் மேன்மையானவராய் இருக்கிறார். ஏனெனில், ‘அவர் எனக்கு முன்னிருந்தவர் என்று இவரைக் குறித்தே நான் சொன்னேன்’ என அவன் சத்தமிட்டுச் சொன்னான்.”
16 ୧୬ ଇନିୟାଃ ପେରେଜାକାନ୍ ଦାୟାଏତେ ଆବୁ ସବେନ୍କକେ ଆଶିଷାକାଦ୍ବୁଆଏ, ହେଗି, ଆଶିଷ୍ ଚେତାନ୍ ଆଶିଷ୍ ଏମାକାଦ୍ବୁଆଏ ।
அவருடைய நிறைவிலிருந்து, நாம் எல்லோரும் கிருபையின்மேல் கிருபையை பெற்றிருக்கிறோம்.
17 ୧୭ ପାର୍ମେଶ୍ୱାର୍ ମୁଶାରାଃ ହରାତେ ଆନ୍ଚୁ ଏମ୍କେଦାଏ, ମେନ୍ଦ ଦାୟା ଆଡଃ ସାନାର୍ତି ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ଆଃ ହରାତେ ହବାୟାନା ।
ஏனெனில் சட்டம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது; கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வந்தது.
18 ୧୮ ପାର୍ମେଶ୍ୱାର୍କେ ଜେତାଏ ଚିଉଲାହ କାକ ନେଲ୍, ମେନ୍ଦ ଇନିୟାଃ ମିଆଁଦ୍ଗି ହନ୍, ଆପୁଆଃ କୟଙ୍ଗ୍ରେ ଦୁବାକାନ୍ନିଃ ଇନିଃକେ ଉଦୁବ୍କିୟା ।
இறைவனை எவருமே ஒருபோதும் கண்டதில்லை. பிதாவாகிய இறைவனின் இருதயத்தின் அருகில் இருக்கின்ற அவருடைய ஒரே மகனும் தாமே இறைவனுமாயிருக்கிறவர் பிதாவை வெளிப்படுத்தினார்.
19 ୧୯ ଯୀରୁଶାଲେମ୍ରେନ୍ ଯିହୁଦୀ ହାକିମ୍କ ଚିମିନ୍ ଯାଜାକ୍କକେ ଆଡଃ ଲେବୀକକେ ଯୋହାନ୍ତାଃତେ “ଆମ୍ ଅକଏ ତାନ୍ମେ” ମେନ୍ତେ କୁଲି ନାଗେନ୍ତେକ କୁଲ୍କେଦ୍କଆ । ଇମ୍ତା ଇନିଃ ନେ ଗାୱା ଏମ୍କେଦାଏ ।
எருசலேமைச் சேர்ந்த யூத தலைவர்கள் யோவான் யார் என்று விசாரித்து அறியும்படி, ஆசாரியர்களையும் லேவியரையும் அவனிடத்தில் அனுப்பினார்கள்; அப்பொழுது அவன் கொடுத்த சாட்சி இதுவே:
20 ୨୦ ଯୋହାନ୍ କାଏ ଦଦାଦ୍ତାନ୍ଲଃ ଉଦୁବ୍କେଦାଏ, “ଆଇଙ୍ଗ୍ ମାସି ନାହାଁଲିଙ୍ଗ୍ ।”
“நான் கிறிஸ்து அல்ல” என்று ஒளிவுமறைவின்றி மறுக்காமல், அறிக்கை செய்தான்.
21 ୨୧ ଏନ୍ତେ ଇନ୍କୁ ଯୋହାନ୍କେକ କୁଲିକିୟା, “ତାବ୍ଦ ଆମ୍ ଅକଏ ତାନ୍ମେ?” “ଚିୟାଃ ଆମ୍ ଏଲିୟ ତାନ୍ମେ?” ଇନିଃ ମେନ୍କେଦାଏ, “କାହାଗି, ଆଇଙ୍ଗ୍ ନାହାଁଲିଙ୍ଗ୍ ।” “ଚିୟାଃ ଆମ୍ ଏନ୍ ନାବୀ ତାନ୍ମେ?” ଇନିଃ ମେନ୍ରୁହାଡ଼ାଦ୍କଆଏ, “କାହାଗି ।”
அப்பொழுது அவர்கள் யோவானிடம், “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்றார்கள். அதற்கு அவன், “நான் எலியாவும் அல்ல” என்றான். தொடர்ந்து அவர்கள், “நீர் வரவேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டார்கள். அதற்கும் அவன், “இல்லை” என்றான்.
22 ୨୨ ଏନ୍ତେ ଇନ୍କୁ କାଜିକିୟାକ, “ତାବ୍ଦ ଆମ୍ ଅକଏ ତାନ୍ମେ ଆଲେକେ ଉଦୁବାଲେମ୍, ଚିୟାଃଚି ଆଲେକେ ଅକନ୍କ କୁଲାକାଦ୍ଲେୟାକ, ଇନ୍କୁକେ କାଜିରୁହାଡ଼୍ ଲାଗାତିଙ୍ଗ୍ୟାଁଃ, ଆମ୍ ଆପାନ୍କେ ଅକଏ ତାନ୍ମେ ମେନ୍ତେମ୍ କାଜିନ୍ତାନା?”
இறுதியாக அவர்கள், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் போய்ச் சொல்லும்படி நீர் ஒரு பதிலைச் சொல்லும். நீர் உம்மைக் குறித்து என்ன சொல்லுகிறீர்?” என்று கேட்டார்கள்.
23 ୨୩ ଯୋହାନ୍ କାଜିରୁହାଡ଼ାଦ୍କଆଏ, ଯିଶାୟ ନାବୀ କାଜିଲେଦ୍ କାଜିଲେକା: “ଆଇଙ୍ଗ୍ ବିର୍ରେ କାଉରିତାନ୍ନିୟାଁଃ ସାଡ଼ି ତାନିଙ୍ଗ୍: ପ୍ରାଭୁଆଃ ହରା ସିଧାଏପେ ।”
யோவான் அதற்கு, இறைவாக்கினன் ஏசாயா கூறியிருந்த வார்த்தைகள் மூலம் பதிலளித்து, “கர்த்தருக்கு வழியை நேராக்குங்கள் என்று பாலைவனத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம் நானே” என்றான்.
24 ୨୪ ଆଡଃ ଏନ୍ କୁଲ୍ଲେନ୍କ ଫାରୁଶୀକଏତେକ ତାଇକେନା ।
பரிசேயர்களால் அனுப்பப்பட்ட சிலர்
25 ୨୫ ଇନ୍କୁ ଯୋହାନ୍କେକ କୁଲିକିୟା, “ଆମ୍ଦ ମାସି ନାହାଁଲାଃମେ, ଏଲିୟ ହଁ ନାହାଁଲାଃମେ ଆଡଃ ଏନ୍ ନାବୀହ ନାହାଁଲାଃମେ, ମେନ୍ଦ ଚିନାଃ ମେନ୍ତେମ୍ ବାପ୍ତିସ୍ମାକତାନା?”
யோவானிடம், “நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, வரவேண்டிய இறைவாக்கினருமல்ல என்றால், ஏன் நீர் திருமுழுக்கு கொடுக்கிறீர்?” என்று கேட்டார்கள்.
26 ୨୬ ଯୋହାନ୍ କାଜିୟାଦ୍କଆଏ, “ଆଇଙ୍ଗ୍ଦ ଦାଆଃତେ ବାପ୍ତିସ୍ମାପେ ତାନାଇଙ୍ଗ୍, ମେନ୍ଦ ଆପେୟାଃ ଥାଲାରେ ମିଆଁଦ୍ ହଡ଼ ତିଙ୍ଗୁଆକାନାଏ ଇନିଃକେ ଆପେ କାପେ ସାରିୟା ।
யோவான் அதற்குப் பதிலாக, “நான் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன். ஆனால் உங்கள் நடுவில் ஒருவர் நிற்கிறார். நீங்களோ அவரை அறியாதிருக்கிறீர்கள்.
27 ୨୭ ଆଇଁୟାଃ ତାୟମ୍ତେ ହିଜୁଃନିଃ ଇନିଃଗି ତାନିଃ, ଇନିୟାଃ ଖାର୍ପାରେୟାଃ ତନଲ୍ ରାଡ଼ାଏ ଲେକାନ୍ନିଃ ନାହାଁଲିଙ୍ଗ୍” ମେନ୍ତେ କାଜିରୁହାଡ଼ାଦ୍କଆଏ ।
அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிற ஒரு அடிமையாக இருக்கவும் நான் தகுதியற்றவன்” என்றான்.
28 ୨୮ ନେ କାଜିକ ଯାର୍ଦାନ୍ ଗାଡ଼ା ହାନ୍ ପାରମ୍ରେୟାଃ ବେଥ୍ନିଆରେ ହବାୟାନା ଏନ୍ତାଃରେ ଯୋହାନ୍ ବାପ୍ତିସ୍ମା ଏମାକତାନ୍ ତାଇକେନାଏ ।
இவை எல்லாம் யோர்தானின் அக்கரையிலிருந்த பெத்தானியா என்ற கிராமத்தில் நடைபெற்றது. அங்குதான் யோவான் திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான்.
29 ୨୯ ଏଟାଃ ହୁଲାଙ୍ଗ୍ ଯୋହାନ୍ ୟୀଶୁକେ ଆୟାଃତାଃତେ ହିଜୁଃତାନ୍ ନେଲ୍କିୟାଏ, ଆଡଃ ମେନ୍କେଦାଏ, “ନେଲିପେ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ମିଣ୍ଡିହନ୍, ଇନିଃ ଅତେଦିଶୁମ୍ରେୟାଃ ପାପ୍କେ ଗଅଃ ଇଦିୟାଏ!
மறுநாளிலே இயேசு தன்னிடம் வருவதை யோவான் கண்டு, “இதோ பாருங்கள், இறைவனின் ஆட்டுக்குட்டி! இவரே உலகத்தின் பாவத்தை நீக்குகிறவர்.
30 ୩୦ ଆଇଁୟାଃ ତାୟମ୍ତେ ମିହୁଡ଼୍ ହିଜୁଃଆଏ ଇନିଃ ଆଇଁୟାଃତାଃଏତେ ପୁରାଃ ମାରାଙ୍ଗ୍ ମେନ୍ତେଇଙ୍ଗ୍ କାଜିଲେଦ୍ ହଡ଼ ନିଃଗି ତାନିଃ, ଇନିଃଦ ଆଇଁୟାଃ ଜାନାମ୍ଏତେ ସିଦାରେ ତାଇକେନା ।
‘எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் மேன்மையானவராய் இருக்கிறார். அவர் எனக்கு முன்னமே இருந்தார்’ என்று நான் இவரைக் குறித்தே சொன்னேன்.
31 ୩୧ ଆଡଃ ଆଇଙ୍ଗ୍ ଇନିଃକେ କାଇଙ୍ଗ୍ ସାରିଉରୁମିତାନ୍ ତାଇକେନା, ମେନ୍ଦ ଇନିଃ ଇସ୍ରାଏଲ୍ ହଡ଼କତାଃରେ ଉଦୁବଃକାଏ ମେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍ ଦାଆଃତେ ବାପ୍ତିସ୍ମାକ ନାଙ୍ଗ୍ ହିଜୁଃକାନାଇଙ୍ଗ୍ ।”
நானும் அவரை அறியாதிருந்தேன். அவரை இஸ்ரயேலருக்கு வெளிப்படுத்தவே, நான் வந்து தண்ணீரில் திருமுழுக்கு கொடுத்தேன்” என்றான்.
32 ୩୨ ଆଡଃ ଯୋହାନ୍ ଗାୱା ଏମ୍ତାନ୍ଲଃ କାଜିକେଦାଏ, “ଆଇଙ୍ଗ୍ ଆତ୍ମାକେ ଦୁଦୁମୁଲ୍ ଲେକା ସିର୍ମାଏତେ ଆଡ଼୍ଗୁତାନ୍ ଆଡଃ ଇନିଃରେ ତାଇନଃତାନ୍ ନେଲ୍କିୟାଇଙ୍ଗ୍ ।
பின்பு யோவான் இந்த சாட்சியை சொன்னான்: “பரலோகத்திலிருந்து ஆவியானவர் ஒரு புறாவைப்போல் தம்மேல் இறங்கி, இயேசுவின்மேல் அமர்வதைக் கண்டேன்.
33 ୩୩ ଆଇଙ୍ଗ୍ହଁ ଇନିଃକେ କାଇଙ୍ଗ୍ ନେଲ୍ଉରୁମି ତାଇକେନା ମେନ୍ଦ ଆଇଙ୍ଗ୍କେ ଦାଆଃତେ ବାପ୍ତିସ୍ମା ଏମ୍ ନାଙ୍ଗ୍ କୁଲ୍କାଦିଙ୍ଗ୍ନିଃ, ଆଇଙ୍ଗ୍କେ କାଜିକିୟାଁ, ‘ଆମ୍ ଆତ୍ମାକେ ମିଆଁଦ୍ ହଡ଼ରେ ଆଡ଼୍ଗୁତାନ୍ ଆଡଃ ଇନିଃରେ ତାଇନ୍ତାନ୍ ନେଲିୟାମ୍, ଇନିଃଗି ପାବିତାର୍ ଆତ୍ମାତେ ବାପ୍ତିସ୍ମା ଏମାକତାନ୍ନିଃ ତାନିଃ ।’
தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கும்படி என்னை அனுப்பினவர் எனக்குச் சொல்லியிருக்காவிட்டால், நானும் அவரை அறிந்திருக்கமாட்டேன். என்னை அனுப்பினவரோ, ‘பரிசுத்த ஆவியானவர் இறங்கி யார்மீது தங்குவதை நீ காண்கிறாயோ, அவரே பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு கொடுக்கிறவர்’ என்று சொல்லியிருந்தார்.
34 ୩୪ ଆଡଃ ଆଇଙ୍ଗ୍ ନେଲ୍କେଦାଃଇଙ୍ଗ୍, ଆଡଃ ନିଃଗି ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ହନ୍ ମେନ୍ତେ ଗାୱାଇଙ୍ଗ୍ ଏମେତାନା ।”
இதை நான் கண்டேன். இவரே இறைவனின் மகன் என்று சாட்சி கூறுகிறேன்” என்றான்.
35 ୩୫ ଏଟାଃ ହୁଲାଙ୍ଗ୍ ଯୋହାନ୍ ଆୟାଃ ଚେଲାକଏତେ ବାର୍ହଡ଼୍କିନ୍ଲଃ ଏନ୍ତାଃରେ ଆଡଃଗି ତିଙ୍ଗୁଆକାନ୍ ତାଇକେନାଏ ।
மறுநாளிலே மீண்டும் யோவான் தன்னுடைய சீடர்களில் இரண்டு பேருடன் அங்கு நின்றுகொண்டிருந்தான்.
36 ୩୬ ଇନିଃ ୟୀଶୁକେ ସେନ୍ପାରମଃତାନ୍ ନେଲ୍କେଦ୍ତେ କାଜିକେଦାଏ, “ନେଲିପେ, ନିଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ମିଣ୍ଡିହନ୍ ।”
இயேசு அவ்வழியாய் கடந்துபோகிறதை அவன் கண்டு, “இதோ பாருங்கள், இறைவனுடைய ஆட்டுக்குட்டி!” என்றான்.
37 ୩୭ ଆଡଃ ଏନ୍ ବାରାନ୍ ଚେଲାକିନ୍ ଇନିଃ ନେଆଁଁ କାଜିତାନ୍ ଆୟୁମ୍କେଦ୍ଚି ୟୀଶୁକେ ଅତଙ୍ଗ୍କିୟାକିନ୍
அந்த இரண்டு சீடர்களும் அவன் இப்படிச் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்கள்.
38 ୩୮ ୟୀଶୁ ହେତାରୁହାଡ଼୍କେଦ୍ଚି, ଇନ୍କିନ୍ ଅତଙ୍ଗ୍ଇଁତାନ୍ ନେଲ୍କେଦ୍କିନାଏ ଆଡଃ ମେତାଦ୍କିନାଏ, “ଚିକ୍ନାଃବେନ୍ ନାମ୍ତାନା?” ଆଡଃ ଇନ୍କିନ୍ ମେନ୍ରୁହାଡ଼ାଇୟାକିନ୍, “ଏ ରାବି” କତାଃରେମ୍ ତାଇନ୍ତାନା?
இயேசு திரும்பிப்பார்த்து, அவர்கள் தம்மைப் பின்பற்றி வருகிறதைக் கண்டு, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், “போதகரே, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள்.
39 ୩୯ ମାର୍ “ହିଜୁଃକେଦ୍ତେ ନେଲେବେନ୍” ମେତାଦ୍କିନାଏ । ଏନାମେନ୍ତେ ଇନ୍କିନ୍ ସେନଃୟାନ୍ତେ ଇନିଃ ତାଇନ୍ତାନ୍ ଠାୟାଦ୍କିନ୍ ନେଲ୍କେଦାଃ, ଇମ୍ତାଙ୍ଗ୍ଦ ଚେତାନ୍ ସିଙ୍ଗିରାଃ ଉପୁନ୍ ଘାଡ଼ି ହବାକାନ୍ ତାଇକେନା, ଆଡଃ ଏନ୍ ହୁଲାଙ୍ଗ୍ ଇନିଃଲଃକିନ୍ ତାଇନ୍ୟାନା,
இயேசு அவர்களுக்குப் பதிலாக, “வந்து, நீங்களே பாருங்கள்” என்றார். எனவே அவர்கள் அவருடன் போய், இயேசு தங்கும் இடத்தைக் கண்டு, அந்த நாளை அவருடன் கழித்தார்கள். அப்பொழுது நேரம் பிற்பகல் நான்கு மணியாயிருந்தது.
40 ୪୦ ଯୋହାନ୍ଆଃ କାଜି ଆୟୁମ୍କେଦ୍ତେ ୟୀଶୁକେ ଅତଙ୍ଗ୍କାଇ ଏନ୍ ବାରିଆ ଚେଲାକିନ୍ଏତେ ମିଆଁଦ୍ନିଃ ଶିମୋନ୍ ପାତ୍ରାସ୍ଆଃ ହାଗାତେ ଆନ୍ଦ୍ରିୟାସ୍ ତାଇକେନାଏ ।
யோவான் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்ற அந்த இருவரில் ஒருவனின் பெயர் அந்திரேயா; இவன் சீமோன் பேதுருவின் சகோதரன்.
41 ୪୧ ଆନ୍ଦ୍ରିୟାସ୍ ଆୟାଃ ହାଗାତେ ଶିମୋନ୍କେ ନାମ୍କେଦ୍ତେ କାଜିକିୟା, “ଆଲିଙ୍ଗ୍ ମାସିକେ ନାମାକାଇଜାଲିଙ୍ଗ୍ ।”
அந்திரேயா போய், முதலில் தன் சகோதரன் சீமோனைக் கண்டு அவனிடம், “நாங்கள் மேசியாவைக் கண்டோம்” என்று சொன்னான். மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம்.
42 ୪୨ ଆଡଃ ଇନିଃ ଶିମୋନ୍କେ ୟୀଶୁତାଃତେ ଆଉକିୟା, ୟୀଶୁ ଇନିଃକେ ନେଲ୍କେଦ୍ତେ କାଜିକିୟା, “ଆମ୍ ଯୋହାନ୍ଆଃ ହନ୍ ଶିମୋନ୍ ତାନ୍ମେ, ଆମ୍ କେଫା, ଏନାରେୟାଃ ମୁଣ୍ଡି ‘ପାତ୍ରାସ୍’ ମେନ୍ତେମ୍ ନୁତୁମଃଆ ।”
அவன் சீமோனை இயேசுவினிடத்திற்குக் கூட்டிக்கொண்டு வந்தான். இயேசு சீமோனைப் பார்த்து, “யோவானின் மகனாகிய சீமோனே, நீ கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். கேபா என்றால் கற்பாறை என்று பொருள்படும். அது கிரேக்க மொழியிலே பேதுரு எனப்படும்.
43 ୪୩ ଏଟାଃ ହୁଲାଙ୍ଗ୍ ୟୀଶୁକେ ଗାଲିଲ୍ତେ ସେନଃ ସାନାଙ୍ଗ୍କିୟା । ଇନିଃ ଫିଲିପ୍କେ ନାମ୍କିଃତେ ମେତାଇୟାଏ, “ଅତଙ୍ଗ୍ଇଙ୍ଗ୍ମେ ।”
மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப் போகத் தீர்மானித்தார். அவர் பிலிப்புவைக் கண்டு அவனிடம், “என்னைப் பின்பற்று” என்றார்.
44 ୪୪ ଆନ୍ଦ୍ରିୟାସ୍ ଆଡଃ ପାତ୍ରାସ୍ଲେକା ଫିଲିପ୍ ହଗି ବେଥ୍ସାଇଦା ସାହାର୍ରେନ୍ ତାଇକେନାଏ ।
அந்திரேயாவையும் பேதுருவையும் போன்றே பிலிப்புவும் பெத்சாயிதா பட்டணத்தைச் சேர்ந்தவன்.
45 ୪୫ ଫିଲିପ୍ ନିଥ୍ନିୟେଲ୍କେ ନାମ୍କିଃତେ ମେତାଇୟାଏ, “ମୁଶା ଅଲାକାଦ୍ ଆନ୍ଚୁ ପୁଥିରେ ଆଡଃ ନାବୀକହ ଅଲାକାଦ୍ ହଡ଼କେ ଆଲେ ନାମାକାଇୟାଃ ଇନିଃ ଯୋଷେଫ୍ ହନ୍ ନାଜ୍ରେତ୍ରେନ୍ ୟୀଶୁ ତାନିଃ ।”
பின்பு பிலிப்பு நாத்தான்யேலைக் கண்டு அவனிடம், “மோசே தமது சட்டத்தில் குறிப்பிட்டிருந்தவரை நாங்கள் கண்டோம். அவரைக் குறித்தே இறைவாக்கினர்களும் எழுதியிருக்கிறார்கள். நாசரேத் ஊரைச் சேர்ந்தவரும், யோசேப்பின் மகனுமான இயேசுவே அவர்” என்றான்.
46 ୪୬ ନିଥ୍ନିୟେଲ୍ କୁଲିକିୟାଏ, “ଚିୟାଃ ନାଜ୍ରେତ୍ଏତେ ଜେତ୍ନାଃ ବୁଗିନ୍ ଅଡଙ୍ଗ୍ଦାଡ଼ିଅଃଆ?” ଫିଲିପ୍ ମେନ୍ରୁହାଡ଼ାଇୟା, “ମାର୍ ହିଜୁଃକେଦ୍ତେ ନେଲେମେ ।”
நாத்தான்யேலோ அவனிடம், “நாசரேத்தா! அங்கிருந்து நன்மை ஏதும் வரக்கூடுமோ?” என்று கேட்டான். அதற்கு பிலிப்பு, “வா, வந்து பார்” என்றான்.
47 ୪୭ ୟୀଶୁ, ନିଥ୍ନିୟେଲ୍କେ ଆୟାଃତାଃ ହିଜୁଃତାନ୍ ନେଲ୍କେଦ୍ତେ କାଜିକେଦାଏ, “ନେଲିପେ, ନିଃ ସାର୍ତିଗି ଇସ୍ରାଏଲ୍ରେନ୍ ତାନିଃ, ଇନିଃରେ ଜେତାଏ ବେଦା ବାନଆଃ ।”
அப்படியே நாத்தான்யேலும், தன்னை நோக்கி வருவதை இயேசு கண்டு, அவனைக்குறித்து, “இவன் ஒரு உண்மையான இஸ்ரயேலன், கபடம் ஏதுமில்லாதவன்” என்றார்.
48 ୪୮ ନିଥ୍ନିୟେଲ୍ ଇନିଃକେ କୁଲିକିୟା, “ଆମ୍ ଆଇଙ୍ଗ୍କେ ଚିଲ୍କାତେମ୍ ସାରିକେଦିୟାଁ?” ୟୀଶୁ କାଜିରୁହାଡ଼୍କିୟାଏ, “ଫିଲିପ୍ ଆମ୍କେ କେଡ଼ାକେଦ୍ମେ ସିଦାରେ ଆମ୍ ଲଆଦାରୁ ବୁଟାରେମ୍ ତାଇକେନା, ଇମ୍ତା ଆଇଙ୍ଗ୍ ନେଲ୍କେଦ୍ମେୟା ।”
அப்பொழுது நாத்தான்யேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான். இயேசு அவனுக்கு மறுமொழியாக, “பிலிப்பு உன்னைக் கூப்பிடுமுன், நீ அத்திமரத்தின்கீழ் இருக்கும்போதே நான் உன்னைக் கண்டுகொண்டேன்” என்றார்.
49 ୪୯ ଏନ୍ତେ ନିଥ୍ନିୟେଲ୍ କାଜିକେଦାଃଏ, “ଏ ରାବି, ଆମ୍ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ହନ୍ ତାନ୍ମେ; ଆମ୍ ଇସ୍ରାଏଲ୍ରେନ୍ ରାଜା ତାନ୍ମେ ।”
அப்பொழுது நாத்தான்யேல், “போதகரே, நீரே இறைவனின் மகன்; நீரே இஸ்ரயேலின் அரசன்” என்று அறிவித்தான்.
50 ୫୦ ୟୀଶୁ କାଜିକିୟାଏ, “ଚିୟାଃ ଆଇଙ୍ଗ୍ ଆମ୍କେ ଲଆଦାରୁ ବୁଟାରେଇଙ୍ଗ୍ ନେଲ୍ଲେଦ୍ମେୟା ମେନ୍ତେ କାଜିୟାଦ୍ମାଇଙ୍ଗ୍, ଏନାମେନ୍ତେମ୍ ବିଶ୍ୱାସେତାନା? ଆମ୍ ଏନାଏତେହ ମାପ୍ରାଙ୍ଗ୍ ବିଷାଏତେୟାଃକ ନେଲେୟାମ୍ ।”
அதற்கு இயேசு அவனிடம், “நான் அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று உனக்குச் சொன்னதினாலேயா நீ என்னை விசுவாசிக்கிறாய்? நீ இதைப் பார்க்கிலும் பெரிதான காரியங்களைக் காண்பாய்” என்றார்.
51 ୫୧ ଇନିଃ ଆଡଃଗି ଇନ୍କୁକେ କାଜିୟାଦ୍କଆ, “ଆଇଙ୍ଗ୍ ସାର୍ତିଗି କାଜିୟାପେ ତାନାଇଙ୍ଗ୍ ଆପେ ସିର୍ମା ନିଜାକାନ୍ ଆଡଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ଦୁଁତ୍କ ମାନୱାହନ୍ ଚେତାନ୍ରେ ରାକାବ୍ତାନ୍ ଆଡଃ ଆଡ଼୍ଗୁନ୍ତାନ୍ପେ ନେଲ୍କଆ ।”
அவர் தொடர்ந்து சொன்னதாவது, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், பரலோகம் திறந்திருக்கிறதையும், இறைவனுடைய தூதர்கள் மானிடமகனாகிய என்னிடத்திலிருந்து மேலே போவதையும், இறங்கி வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார்.