< Psalmi 99 >

1 Tas Kungs ir ķēniņš, - tautas dreb; Viņš sēž pār ķerubiem, - zeme trīc.
யெகோவா ஆட்சி செய்கிறார், நாடுகள் நடுங்கட்டும்; அவர் கேருபீன்களின் நடுவில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்; பூமி அதிரட்டும்.
2 Tas Kungs ir liels iekš Ciānas, un Viņš ir augsts pār visiem ļaudīm.
சீயோனிலே யெகோவா பெரியவர்; அவர் எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.
3 Tavu lielo un bijājamo Vārdu lai teic, jo Tas ir svēts;
பெரியதும் பிரமிக்கத்தக்கதுமான உமது பெயரை அவர்கள் துதிக்கட்டும்; அவர் பரிசுத்தமானவர்.
4 Ar taisnību Tu esi nodibinājis ķēniņa stiprumu, kas tiesu mīļo; Tu esi iecēlis tiesu un taisnību iekš Jēkaba.
அரசர் வல்லமையுள்ளவர், அவர் நீதியை விரும்புகிறார்; நீர் நியாயத்தை நிலைநாட்டியிருக்கிறீர்; நீர் யாக்கோபில் நீதியையும் நேர்மையானதையும் செய்திருக்கிறீர்.
5 Paaugstinājiet To Kungu, mūsu Dievu, un pielūdziet Viņa kāju pamesla priekšā; Viņš ir svēts.
நம் இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்துயர்த்தி, அவருடைய பாதபடியிலே வழிபடுங்கள்; அவர் பரிசுத்தமானவர்.
6 Mozus un Ārons starp Viņa priesteriem, un Samuēls starp tiem, kas piesauc Viņa Vārdu; tie piesauca To Kungu, un Viņš tos paklausīja.
அவருடைய ஆசாரியருள் மோசேயும் ஆரோனும் இருந்தார்கள்; அவருடைய பெயரைச் சொல்லி வழிபடுகிறவர்களில் சாமுயேலும் இருந்தான்; அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்குப் பதிலளித்தார்.
7 Viņš runāja uz tiem padebeša-stabā; tie turēja Viņa liecības un tos likumus, ko Viņš tiem bija devis.
அவர் மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; அவர் அவர்களுக்குக் கொடுத்த அவருடைய நியமங்களையும் விதிமுறைகளையும் கைக்கொண்டார்கள்.
8 Kungs, mūsu Dievs, Tu tos paklausīji, Tu stiprais Dievs tiem piedevi un biji atriebējs par viņu darbiem.
எங்கள் இறைவனாகிய யெகோவாவே, நீர் அவர்களுடைய வேண்டுதலுக்குப் பதிலளித்தீர்; இஸ்ரயேலருடைய தீயசெயல்களுக்காக நீர் அவர்களைத் தண்டித்த போதிலும், நீர் அவர்களுக்கு மன்னிக்கிற இறைவனாகவே இருந்தீர்.
9 Paaugstinājiet To Kungu, mūsu Dievu, un pielūdziet Viņa svētā kalnā, jo Tas Kungs, mūsu Dievs, ir svēts.
நமது இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்து உயர்த்தி அவருடைய பரிசுத்த மலையில் வழிபடுங்கள்; ஏனெனில் நம் இறைவனாகிய யெகோவா பரிசுத்தமானவர்.

< Psalmi 99 >