< Psalmi 33 >
1 Dziedājiet priecīgi Tam Kungam, jūs taisnie; tiem sirds skaidriem pieklājās teikšana.
நீதிமான்களே, நீங்கள் மகிழ்ச்சியுடன் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள்; அவரைத் துதிப்பது நேர்மையுள்ளவர்களுக்குத் தகுதியானது.
2 Pateiciet Tam Kungam ar koklēm un dziedājiet Viņam ar desmit stīgu spēlēm.
யாழ் இசைத்து யெகோவாவைத் துதியுங்கள்; பத்து நரம்பு வீணையினால் அவருக்கு இசை பாடுங்கள்.
3 Dziedājiet Viņam jaunu dziesmu, skandinājiet jauki ar bazūņu skaņu.
அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; திறமையாக இசைத்து மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரியுங்கள்.
4 Jo Tā Kunga vārds ir taisns, un viss Viņa darbs ir pastāvīgs.
யெகோவாவினுடைய வார்த்தை சத்தியமும், அவருடைய செயல்களெல்லாம் உண்மையானதுமாய் இருக்கிறது.
5 Viņš mīļo taisnību un tiesu; zeme ir pilna Tā Kunga žēlastības.
யெகோவா நீதியையும் நியாயத்தையும் விரும்புகிறார்; பூமி முழுவதுமே அவருடைய உடன்படிக்கையின் அன்பினால் நிறைந்திருக்கிறது.
6 Caur Tā Kunga vārdu debesis darītas, un viss viņu spēks caur Viņa mutes garu.
யெகோவாவினுடைய வார்த்தையினாலே வானங்கள் படைக்கப்பட்டன, அவருடைய வாயின் சுவாசத்தினால் வான்கோள்கள் யாவும் படைக்கப்பட்டன.
7 Viņš sakrāj jūras ūdeni kā kopu, un liek dziļumus slepenībā.
அவர் கடல்நீரைச் ஜாடிகளில் சேர்த்துவைக்கிறார்; ஆழத்தை களஞ்சியங்களில் வைக்கிறார்.
8 Bīstaties no Tā Kunga, visa pasaule, baiļojaties priekš Viņa, visi zemes iedzīvotāji.
பூமி அனைத்தும் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; உலகின் மக்கள் அனைவரும் அவரிடம் பயபக்தியாய் இருப்பார்களாக.
9 Kad Viņš runā, tad notiek, kad Viņš pavēl, tad stāv.
ஏனெனில் அவர் சொல்ல, உலகம் உண்டாயிற்று; அவர் கட்டளையிட்டார், அது உறுதியாய் நின்றது.
10 Tas Kungs iznīcina tautu padomu, Viņš salauž ļaužu domas.
யெகோவா நாடுகளின் திட்டங்களை முறியடிக்கிறார்; அவர் மக்களின் நோக்கங்களைத் தடுக்கிறார்.
11 Tā Kunga padoms pastāv mūžīgi, Viņa sirds domas uz radu radiem.
ஆனால் யெகோவாவின் ஆலோசனை என்றென்றும் உறுதியாகவும், அவருடைய இருதயத்தின் நோக்கங்கள் தலைமுறை தலைமுறையாகவும் நிலைநிற்கும்.
12 Svētīga tā tauta, kam Tas Kungs ir par Dievu, tie ļaudis, ko Viņš Sev izredzējis par īpašumu.
எந்த மக்கள் யெகோவாவைத் தங்கள் இறைவனாகக் கொண்டிருக்கிறார்களோ, எந்த மக்களை அவர் தமது உரிமைச்சொத்தாகத் தெரிந்துகொண்டாரோ அவர்கள் பாக்கியவான்கள்.
13 Tas Kungs skatās no debesīm un uzlūko visus cilvēku bērnus.
யெகோவா பரலோகத்திலிருந்து கீழே நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார்;
14 Viņš raugās no Sava stiprā krēsla uz visiem, kas dzīvo virs zemes.
தமது சிங்காசனத்திலிருந்து பூமியில் வாழும் அனைவரையும் கவனிக்கிறார்.
15 Viņš sataisa visas viņu sirdis, Viņš liek vērā visus viņu darbus.
அனைவருடைய இருதயங்களையும் உருவாக்கும் யெகோவா, அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் கவனிக்கிறார்.
16 Ķēniņam nepalīdz viņa lielais spēks, vareno neizglābs viņa lielais stiprums.
எந்த ஒரு அரசனும் தனது படைபலத்தால் காப்பாற்றப்படுவதில்லை; எந்த ஒரு போர்வீரனும் தனது மிகுந்த வலிமையினால் தப்புவதுமில்லை.
17 Arī zirgi nevar palīdzēt, un viņu lielais spēks nevar izglābt.
விடுதலை பெறுவதற்கு குதிரையை நம்புவது வீண்; அதற்கு மிகுந்த வலிமை இருந்தபோதிலும், அதினால் காப்பாற்ற முடியாது.
18 Redzi, Tā Kunga acs uzlūko tos, kas Viņu bīstas, kas cerē uz Viņa žēlastību.
யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறவர்கள்மேல் அவருடைய கண்கள் நோக்கமாயிருந்து,
19 Ka Tas viņu dvēseli izpestī no nāves, un bada laikā tos uztur dzīvus.
மரணத்திலிருந்து அவர்களை விடுவிக்கிறார், பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கிறார்.
20 Mūsu dvēsele gaida uz To Kungu; Viņš mums ir par palīgu un par priekšturamām bruņām.
நாங்கள் யெகோவாவுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்; அவரே எங்களுக்கு உதவியும் எங்கள் கேடயமுமாய் இருக்கிறார்.
21 Jo mūsu sirds priecājās iekš Viņa, un mēs paļaujamies uz Viņa svēto vārdu.
நாங்கள் அவருடைய பரிசுத்த பெயரில் நம்பிக்கையாய் இருப்பதால் எங்கள் இருதயங்கள் அவரில் மகிழ்கின்றன.
22 Lai, ak Kungs, Tava žēlastība pār mums paliek, itin kā mēs uz Tevi cerējam.
யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே, உமது உடன்படிக்கையின் அன்பு எங்கள்மேல் இருப்பதாக.