< Pirmā Mozus 43 >

1 Un bads bija grūts tanī zemē.
நாட்டிலே பஞ்சம் இன்னும் மிகக் கொடுமையாயிருந்தது.
2 Un kad tā labība, ko tie no Ēģiptes bija atveduši, jau bija izlietojuši, tad viņu tēvs uz tiem sacīja: noejat atkal un pērciet mums maizes kādu mazumu.
அதனால் எகிப்திலிருந்து கொண்டுவந்த தானியமெல்லாம் முடிந்தபின், அவர்கள் தகப்பன் யாக்கோபு தன் மகன்களிடம், “நீங்கள் மறுபடியும்போய் இன்னும் கொஞ்சம் தானியம் வாங்கிக் கொண்டுவாருங்கள்” என்றான்.
3 Un Jūda uz to runāja un sacīja: tas vīrs mums stipri piekodinājis un sacījis: jūs manu vaigu neredzēsiet, ja jūsu brālis nav jums līdz.
அப்பொழுது யூதா தன் தகப்பனிடம், “‘உங்களுடன் உங்கள் சகோதரனும் வராவிட்டால் என் முகத்தில் நீங்கள் விழிக்க முடியாது என்று எகிப்தின் அதிபதி கண்டிப்பாக எச்சரிக்கை செய்தான்.’
4 Ja tad tu mūsu brāli mums sūtīsi līdz, tad mēs gribam noiet un pirkt maizes priekš tevis.
எங்கள் சகோதரனை எங்களுடன் அனுப்பினால்தான் நாங்கள் போய் உங்களுக்குத் தானியம் வாங்கிவருவோம்.
5 Bet ja tu to nesūtīsi, tad mēs nenoiesim, jo tas vīrs mums ir sacījis: jums nebūs manu vaigu redzēt, ja jūsu jaunākais brālis jums nav līdz.
நீர் அவனை எங்களுடன் அனுப்பாவிட்டால் நாங்கள் அங்கே போகமாட்டோம்; ஏனெனில், ‘உங்கள் சகோதரனும் உங்களுடன் வந்தாலன்றி, நீங்கள் என் முகத்தில் விழிக்க முடியாது’ என்று அந்த அதிகாரி சொல்லியிருக்கிறான்” என்றான்.
6 Tad Israēls sacīja: kāpēc jūs man tik ļauni esat darījuši, tam vīram sacīdami, ka jums vēl viens brālis esot?
அப்பொழுது இஸ்ரயேல், “உங்களுக்கு இன்னுமொரு சகோதரன் இருக்கிறான் என்று சொல்லி, ஏன் இந்தத் துன்பத்தை எனக்கு வருவித்தீர்கள்?” என்று கேட்டான்.
7 Un tie sacīja: tas vīrs jautāja jautādams pēc mums un pēc mūsu radiem un sacīja: vai jūsu tēvs vēl dzīvs? Vai jums vēl viens brālis? Tad mēs viņam atbildējām, kā viņš mums jautāja; kā tad mēs to varējām zināt, ka tas sacīs: vediet savu brāli šurp?
அதற்கு அவர்கள், “அந்த மனிதன் எங்களைப் பற்றியும், எங்கள் குடும்பத்தைப்பற்றியும் விபரமாய் விசாரித்தான். ‘உங்களுடைய தகப்பன் இன்னும் உயிரோடிருக்கிறாரா?’ என்றும், ‘உங்களுக்கு இன்னுமொரு சகோதரன் இருக்கிறானா?’ என்றும் கேட்டான். நாங்கள் அவனுடைய கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொன்னோம். ‘உங்கள் சகோதரனை இங்கே கூட்டிக்கொண்டு வாருங்கள்’ என்று சொல்வான் என்று எங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றார்கள்.
8 Tad Jūda sacīja uz Israēli, savu tēvu: sūti to zēnu man līdz, tad mēs celsimies un noiesim, lai dzīvojam un nemirstam, ne mēs, ne tu pats, ne mūsu bērniņi.
பின்பு யூதா தன் தகப்பனாகிய இஸ்ரயேலிடம், “நீங்களும் நாங்களும், எங்கள் பிள்ளைகளும் சாகாமல் வாழும்படி, நீர் அவனை என்னுடன் அனுப்பும். நாங்கள் உடனேயே போவோம்.
9 Es galvoju par viņu, no manas rokas tev būs viņu prasīt; ja es to pie tevis nevedīšu atpakaļ un to nestādīšu priekš tavām acīm, tad es visu savu mūžu gribu noziedzīgs būt tavā priekšā.
அவனுடைய பாதுகாப்புக்கு நானே பொறுப்பாய் இருப்பேன்; தனிப்பட்ட விதத்தில் அவனுக்காக நீர் என்னை உத்தரவாதியாக வைத்திருக்கலாம். அவனை மறுபடியும் உமது முன் கொண்டுவந்து நிறுத்தாவிட்டால், அந்தப் பழியை என் வாழ்நாள் முழுவதும் உமக்கு முன்பாக நான் சுமப்பேன்.
10 Jo ja mēs nebūtu kavējušies, mēs tagad jau otru reizi būtu pārnākuši.
நாங்கள் தாமதியாமல் இருந்திருந்தால், இதுவரை நாங்கள் இரண்டுமுறை போய்த் திரும்பியிருக்கலாம்” என்றான்.
11 Tad viņu tēvs Israēls uz tiem sacīja: ja tam nu tā būs būt, tad dariet tā: ņemiet no šās zemes visteicamiem augļiem savos traukos un nonesiet tam vīram dāvanu, balzama kādu mazumu un kādu mazumu medus, dārgas zāles un mirres, riekstus un mandeles.
அதன்பின் அவர்களின் தகப்பனாகிய இஸ்ரயேல் அவர்களிடம், “அப்படியானால் நான் சொல்வதுபோல் செய்யுங்கள். நாட்டின் சிறந்த பொருட்களில் கொஞ்சம் தைலம், கொஞ்சம் தேன், கொஞ்சம் நறுமணப் பொருட்கள், வெள்ளைப்போளம், கொஞ்சம் பிஸ்தா கொட்டைகள், வாதுமைக் கொட்டைகள் ஆகியவற்றை உங்கள் சாக்குகளில் வைத்து, அந்த மனிதனுக்கு அன்பளிப்பாகக் கொண்டுபோங்கள்.
12 Ņemiet arīdzan otrtik naudas savā rokā, un to naudu, kas jūsu maisu virsgalā atlikta, nesiet atpakaļ savā rokā, tiem jau tur būs misējies.
இரண்டு மடங்கு வெள்ளிக்காசையும் உங்களுடன் கொண்டுபோங்கள், ஏனெனில், சென்றமுறை உங்கள் சாக்குகளில் வைக்கப்பட்ட வெள்ளிக்காசையும் நீங்கள் திருப்பிக் கொடுக்கவேண்டும். இப்பணம் ஒருவேளை தவறுதலாக வந்திருக்குமோ தெரியாது.
13 Ņemiet arī savu brāli un ceļaties un ejat atkal pie tā vīra.
உங்கள் தம்பியையும் உங்களுடன் அழைத்துக்கொண்டு, உடனே அந்த மனிதனிடம் போங்கள்.
14 Bet tas visuvarenais Dievs lai jums dod žēlastību tā vīra priekšā, ka tas atlaiž jūsu otru brāli un Benjaminu. Bet es esmu tā kā kam bērni rautin atrauti.
எல்லாம் வல்ல இறைவன் சிறையிலிருக்கும் உங்கள் சகோதரனையும், தம்பி பென்யமீனையும் மறுபடியும் இவ்விடம் அனுப்பும்படி அந்த மனிதன் உங்களுக்கு இரக்கம் காட்டச்செய்வாராக. நானோ பிள்ளைகளை இழக்க வேண்டுமென்றால், பிள்ளைகளை இழந்தவனாவேன்” என்றான்.
15 Tad tie vīri ņēma to dāvanu, un ņēma otrtik naudas savā rokā un Benjaminu, un cēlās un nogāja uz Ēģiptes zemi un stājās Jāzepa priekšā.
அவ்வாறே அவர்கள் அன்பளிப்பையும் இரண்டு மடங்கு வெள்ளிக்காசையும் எடுத்துக்கொண்டு, பென்யமீனையும் தங்களுடன் கூட்டிக்கொண்டு போனார்கள். அவர்கள் எகிப்திற்கு விரைந்து சென்று, அங்கே யோசேப்பின் முன்னிலையில் போய் நின்றார்கள்.
16 Kad nu Jāzeps Benjaminu pie tiem ieraudzīja, tad viņš sacīja tam, kas bija pār viņa namu: ieved tos vīrus namā un nokauj kādu kaujamu lopu un taisi ēdienu, jo tie vīri pie manis ēdīs pusdienu.
பென்யமீன் அவர்களுடன் வந்திருப்பதைக் கண்ட யோசேப்பு, தன் வீட்டு மேற்பார்வையாளனிடம், “இவர்களை என் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போ, இவர்கள் இன்று மத்தியானம் என்னுடன் சாப்பிடுவதற்காக, ஒரு மிருகத்தை அடித்து ஆயத்தம் செய்” என்றான்.
17 Un tas vīrs darīja, kā Jāzeps bija sacījis, un tas vīrs ieveda tos vīrus Jāzepa namā.
யோசேப்பு கட்டளையிட்டபடியே அந்த அதிகாரி அவர்களை யோசேப்பின் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
18 Tad tie vīri bijās, kad tos veda Jāzepa namā, un sacīja: tās naudas dēļ, ko viņu reiz' atdabūjām savos maisos, mēs esam ievesti, lai viņš mums var uzbrukt un mums uzmākties un mūs par vergiem ņemt un mūsu ēzeļus.
அவர்கள் யோசேப்பின் வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது பயந்தார்கள். அவர்கள், “முதல்முறை நாம் வந்தபோது, நமது சாக்குகளில் மீண்டும் வைக்கப்பட்டிருந்த வெள்ளிக்காசின் நிமித்தமே நாம் இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறோம். நம்மைத் தாக்கி, அடக்கி, நம்மை அடிமைகளாகப் பிடித்து, நமது கழுதைகளையும் எடுத்துக்கொள்ளவே அவன் விரும்புகிறான்” என்று நினைத்தார்கள்.
19 Tad tie piegāja pie tā vīra, kas bija pār Jāzepa namu, un runāja ar to priekš nama durvīm
அதனால் அவர்கள் யோசேப்பின் மேற்பார்வையாளனிடம் போய், வீட்டு வாசலில் இருந்த அவனுடன் பேசினார்கள்.
20 Un sacīja: ak mans kungs, mums viņu reiz' bija jānāk, labības pirkt.
அவர்கள் அவனிடம், “ஆண்டவனே, முதல்முறை தானியம் வாங்க நாங்கள் இங்கே வந்தோம்.
21 Un kad bijām nākuši mājas vietā un atraisījām savus maisus, redzi, tad ikvienam tā nauda bija viņa maisa virsgalā ar pilnu svaru, un mēs to esam atkal atnesuši savā rokā.
ஆனால், போகும் வழியில் நாங்கள் இரவு தங்கிய இடத்தில், எங்கள் சாக்குகளைத் திறந்தோம். அப்பொழுது எங்கள் ஒவ்வொருவருடைய சாக்கின் வாயிலும், நாங்கள் கொடுத்த வெள்ளிக்காசு குறையாது அப்படியே இருக்கக் கண்டோம். எனவே அவற்றைத் திரும்பவும் கொண்டுவந்திருக்கிறோம்.
22 Mēs arī esam atnesuši citu naudu savā rokā, maizes pirkt, mēs nezinām, kas mūsu naudu mūsu maisos ielicis.
அத்துடன் இம்முறையும் தானியம் வாங்குவதற்கு கூடுதலாக வெள்ளிக்காசைக் கொண்டுவந்திருக்கிறோம். யார் அந்த வெள்ளிக்காசை மறுபடியும் எங்கள் சாக்குகளில் வைத்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது” என்றார்கள்.
23 Un tas sacīja: esiet ar mieru, nebīstaties! Jūsu Dievs un jūsu tēva Dievs jums devis jūsu maisos apslēptu mantu; jūsu nauda man rokā tikusi. Un viņš izveda Sīmeanu pie tiem ārā.
அதற்கு மேற்பார்வையாளன் அவர்களிடம், “பரவாயில்லை, நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டியதில்லை. உங்கள் இறைவனான உங்கள் தகப்பனுடைய இறைவனே, உங்கள் சாக்குகளில் உங்களுக்குச் செல்வத்தை வைத்திருக்கிறார்; உங்கள் வெள்ளிக்காசை நான் பெற்றுக்கொண்டேன்” என்றான். பின்பு சிமியோனை வெளியே அவர்களிடம் கொண்டுவந்தான்.
24 Pēc viņš tos vīrus ieveda Jāzepa namā un tiem deva ūdeni, un tie mazgāja savas kājas; un viņš deva viņu ēzeļiem ēdamo.
மேற்பார்வையாளன் யோசேப்பின் சகோதரரை வீட்டுக்கு அழைத்துச்சென்று, அவர்கள் கால்களைக் கழுவுவதற்குத் தண்ணீர் கொடுத்தான். அத்துடன் அவர்கள் கழுதைகளுக்குத் தீனியும் கொடுத்தான்.
25 Un tie sataisīja to dāvanu, tiekams Jāzeps nāca uz pusdienu; jo tie bija dzirdējuši, ka tiem tur bija maizi ēst.
அவர்கள் யோசேப்புடன் சாப்பிடப் போவதாகக் கேள்விப்பட்டதால், மத்தியானம் யோசேப்பு வரும்போது கொடுப்பதற்காகத் தங்கள் அன்பளிப்புகளை ஆயத்தம் செய்தார்கள்.
26 Kad nu Jāzeps nāca namā, tad tie viņam namā atnesa to dāvanu, kas bija viņu rokās, un metās viņa priekšā pie zemes.
யோசேப்பு வீட்டுக்கு வந்தபொழுது, அவர்கள் வீட்டுக்குள் கொண்டுவந்திருந்த தங்கள் அன்பளிப்புகளைக் கொடுத்துத் தரைமட்டும் விழுந்து, அவனை வணங்கினார்கள்.
27 Un viņš jautāja, kā tiem klājās, un sacīja: kā klājās jūsu vecajam tēvam, par ko jūs stāstījāt? Vai viņš vēl dzīvs?
யோசேப்பு அவர்கள் சுகசெய்திகளை விசாரித்து, “முன்பு நீங்கள் உங்கள் வயதுசென்ற தகப்பனைப் பற்றிச் சொன்னீர்களே, அவர் எப்படியிருக்கிறார்? இன்னும் அவர் உயிரோடிருக்கிறாரா?” என்று கேட்டான்.
28 Un tie sacīja: tavam kalpam, mūsu tēvam, labi klājās, viņš vēl dzīvs; un tie noliecās un klanījās.
அதற்கு அவர்கள், “உமது அடியவனாகிய எங்கள் தகப்பன் இன்னும் உயிரோடு சுகமாக இருக்கிறார்” என்று சொன்னார்கள். அவனுக்கு மதிப்புக் கொடுக்கும்படி குனிந்து வணங்கினார்கள்.
29 Un viņš pacēla savas acis un ieraudzīja savu brāli Benjaminu, savas mātes dēlu, un sacīja: vai šis ir jūsu jaunākais brālis, par ko man stāstījāt? Un viņš sacīja: Dievs lai tev žēlīgs, mans dēls!
யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சொந்தத் தாயின் மகனான, தன் சகோதரன் பென்யமீனைக் கண்டதும், நீங்கள் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா? என்று கேட்டான். பின்பு, “என் மகனே, இறைவன் உனக்குக் கிருபை செய்வாராக” என்றான்.
30 Un Jāzeps steidzās, jo viņa sirds iesila uz savu brāli, un viņš meklēja, kur raudāt, un iegāja kambarī un tur raudāja.
யோசேப்பு தன் தம்பியைக் கண்டதும் உணர்ச்சி வசப்பட்டவனாய், விரைந்து வெளியே சென்று அழுவதற்கு இடம் தேடினான். அவன் தன்னுடைய அறைக்குள் சென்று அங்கே அழுதான்.
31 Un viņš mazgāja savu vaigu un nāca ārā un savaldījās un sacīja: celiet maizi priekšā.
பின்பு அவன் தன் முகத்தைக் கழுவி, வெளியே வந்து தன்னை அடக்கிக்கொண்டு, “உணவு பரிமாறுங்கள்” என்றான்.
32 Un tie cēla priekšā viņam (at)sevišķi un viņiem (at)sevišķi, un tiem ēģiptiešiem (at)sevišķi, kas pie viņa ēda, jo ēģiptieši ar Ebrejiem nevar maizi ēst, jo ēģiptiešiem tā ir negantība.
எபிரெயருடன் சாப்பிடுவது எகிப்தியருக்கு அருவருப்பாய் இருந்தபடியால், எகிப்தியர் எபிரெயருடன் அமர்ந்து சாப்பிடுவதில்லை. அதனால் யோசேப்புக்கு வேறாகவும், அவன் சகோதரர்களுக்கு வேறாகவும், அவனுடன் சாப்பிட்ட எகிப்தியருக்கு வேறாகவும் உணவு பரிமாறப்பட்டது.
33 Un tie sēdēja viņam pretī, tas pirmdzimtais pēc savas pirmdzimtības, un tas jaunākais pēc savas jaunības.
யோசேப்புக்கு முன்பாக மூத்தவன் தொடங்கி இளையவன் வரைக்கும் அவர்கள் வயதின்படியே பந்தியில் அமர்த்தப்பட்டார்கள்: யோசேப்பின் சகோதரர் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்தார்கள்.
34 Par to tie vīri brīnījās savā starpā, un viņš cēla tiem priekšā goda daļas no sava galda, bet Benjamina daļu viņš pieckārtīgi vairoja pār visu citu daļām; un tie dzēra un padzērās ar viņu.
யோசேப்பின் மேஜையிலிருந்து அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டபோது, மற்றவர்களுடைய பங்குகளைப் பார்க்கிலும் பென்யமீனின் பங்கு ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது. அவர்கள் யோசேப்புடன் தாராளமாக விருந்துண்டு குடித்தார்கள்.

< Pirmā Mozus 43 >