< Pāvila 1. Vēstule Korintiešiem 14 >
1 Dzenaties pēc mīlestības, rūpējaties par tām garīgām dāvanām, bet visvairāk, ka varat mācīt (praviešu garā).
௧அன்பை விரும்புங்கள்; ஆவியானவருக்குரிய வரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாகத் தீர்க்கதரிசனவரத்தை விரும்புங்கள்.
2 Jo kas valodām runā, tas nerunā cilvēkiem, bet Dievam; jo neviens nedzird, bet garā viņš runā noslēpumus.
௨ஏனென்றால், அந்நிய மொழியில் பேசுகிறவன், ஆவியானவராலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாமலிருக்கிறபடியினாலே, அவன் மனிதர்களிடம் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
3 Bet kas māca, tas runā cilvēkiem par uztaisīšanu un paskubināšanu un iepriecināšanu.
௩தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனோ மனிதர்களுக்கு பக்திவளர்ச்சியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.
4 Kas valodām runā, tas uztaisa sevi pašu; bet kas māca, tas uztaisa draudzi.
௪அந்நிய மொழியில் பேசுகிறவன் தனக்கே பக்திவளர்ச்சி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவளர்ச்சி உண்டாகப்பேசுகிறான்.
5 Es gribētu, ka jūs visi valodām runātu, bet jo vairāk, ka jūs mācītu; jo kas māca, tas ir pārāks par to, kas valodām runā, proti ja šis netulko, kā lai draudze top uztaisīta.
௫நீங்களெல்லோரும் அந்நிய மொழிகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆனாலும், அந்நிய மொழிகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவளர்ச்சி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் அவனைவிட மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாக விரும்புகிறேன்.
6 Un nu, brāļi, kad es pie jums nāktu, valodām runādams, ko es jums līdzētu, ja es uz jums nerunātu, vai parādīšanu, vai atzīšanu, vai praviešu mācību, vai rakstu izstāstīšanu pasniegdams.
௬மேலும், சகோதரர்களே, நான் உங்களிடம் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை சொல்லுகிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நிய மொழிகளில் பேசினால் என்னாலே உங்களுக்கு பலன் என்ன?
7 Tāpat ir ar tām nedzīvām lietām, kas skan, lai ir stabule, lai kokle; ja viņu skaņas nevar izšķirt, kā var noprast, kas ir stabulēts vai koklēts?
௭அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்களின் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் என்னவென்று எப்படித் தெரியும்?
8 Un atkal, ja bazūne neskan skaidri, kas taisīsies uz karu?
௮அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் போருக்கு ஆயத்தம் செய்வான்?
9 Tāpat arī jūs, ja valodām runājiet nesaprotamus vārdus, kā zinās, kas top runāts? Jo jūs runāsiet vējā.
௯அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சைப் பேசாவிட்டால் பேசப்பட்டது என்னவென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாக இருப்பீர்களே.
10 Daudz un dažādas balsis ir pasaulē, un neviena no tām nav nesaprotama.
௧0உலகத்திலே எத்தனையோவிதமான மொழிகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.
11 Tad nu, ja es balsi nesaprotu, būšu svešs tam, kas runā, un tas kas runā, būs man svešs.
௧௧ஆனாலும், மொழியின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாக இருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாக இருப்பான்.
12 Tāpat arī jūs, kad pēc tām garīgām dāvanām dzenaties, tad meklējat, ka jo pilnīgi paliekat draudzei par uztaisīšanu.
௧௨நீங்களும் ஆவியானவருக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவளர்ச்சி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி விரும்புங்கள்;
13 Tāpēc, kas valodām runā, tas lai Dievu lūdz, ka varētu tulkot.
௧௩அந்தப்படி அந்நிய மொழியில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக ஜெபம் செய்யவேண்டும்.
14 Jo kad es Dievu lūdzu valodām, tad mans gars gan lūdz, bet mans prāts augļus nenes.
௧௪எதினாலென்றால், நான் அந்நிய மொழியிலே விண்ணப்பம் செய்தால் என் ஆவி விண்ணப்பம் செய்யுமேதவிர, என் கருத்து பயனில்லாததாக இருக்கும்.
15 Kas tad nu ir? Es pielūgšu garā, bet es pielūgšu arī, ka var saprast; es dziedāšu garā, bet es dziedāšu arī, ka var saprast.
௧௫இப்படியிருக்க, செய்யவேண்டியதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம் செய்வேன்; கருத்தோடும் விண்ணப்பம் செய்வேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.
16 Citādi, ja tu Dievu slavēsi garā, kā gan tas, kas nesaprot, uz tavu pateikšanu var sacīt: Āmen? Jo viņš nezin, ko tu runā.
௧௬இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம் செய்யும்போது, படிப்பறியாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது என்னவென்று அவனுக்குத் தெரியாதே.
17 Jo tu gan labi pateici Dievam, bet otrs netop uztaisīts.
௧௭நீ நன்றாக ஸ்தோத்திரம் செய்கிறாய், ஆனாலும் மற்றவன் பக்திவளர்ச்சியடையமாட்டானே.
18 Es pateicos savam Dievam, ka es vairāk nekā jūs visi valodām runāju.
௧௮உங்களெல்லோரையும்விட நான் அதிகமான மொழிகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
19 Bet iekš draudzes es labāki gribu runāt piecus vārdus saprotamus, lai pamācu arī citus, nekā desmit tūkstošus valodām.
௧௯அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நிய மொழியில் பத்தாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதைவிட, மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடு ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாக இருக்கும்.
20 Brāļi, netopat bērni iekš saprašanas, bet topat nejēgas iekš ļaunuma, bet saprašanā topat pilnīgi.
௨0சகோதரர்களே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாக இருக்கவேண்டாம்; துர்க்குணத்திலே குழந்தைகளாகவும், புத்தியிலோ தேறினவர்களாகவும் இருங்கள்.
21 Bauslībā ir rakstīts: Caur ļaudīm, kam sveša valoda un ar svešām lūpām Es runāšu uz šiem ļaudīm un arī tā tie Man neklausīs, saka Tas Kungs.
௨௧மறுமொழிக்காரர்களாலும், மறு உதடுகளாலும் இந்த மக்களிடத்தில் பேசுவேன்; ஆனாலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.
22 Tad nu tās valodas ir par zīmi ne ticīgiem, bet neticīgiem, un praviešu mācība ne neticīgiem, bet ticīgiem.
௨௨அப்படியிருக்க, அந்நியமொழிகள் விசுவாசிகளுக்கு அடையாளமாக இல்லாமல், விசுவாசம் இல்லாதவர்களுக்கு அடையாளமாக இருக்கிறது; தீர்க்கதரிசனமோ விசுவாசம் இல்லாதவர்களுக்கு அடையாளமாக இல்லாமல், விசுவாசிகளுக்கு அடையாளமாக இருக்கிறது.
23 Tad nu, kad visa draudze sanāktu kopā, un visi runātu valodām, un ienāktu, kas to nesaprot, vai neticīgi: vai tie nesacītu, ka jūs esat traki?
௨௩ஆகவே, சபையார் எல்லோரும் ஏகமாகக் கூடிவந்து, எல்லோரும் அந்நிய மொழிகளிலே பேசிக்கொள்ளும்போது, படிப்பறியாதவர்களாவது, விசுவாசம் இல்லாதவர்களாவது உள்ளே நுழைந்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்கள் என்பார்களல்லவா?
24 Bet ja visi mācītu, un kāds neticīgs vai, kas nesaprot, nāktu iekšā, tas taptu no visiem pārliecināts un no visiem tiesāts.
௨௪எல்லோரும் தீர்க்கதரிசனம் சொல்லும்போது, விசுவாசம் இல்லாத ஒருவன் அல்லது படிப்பறியாதவன் ஒருவன் உள்ளே நுழைந்தால், அவனுடைய பாவம் அவனுக்கு உணர்த்தப்பட்டும், சொல்லப்பட்ட எல்லாவற்றாலும் நியாயந்தீர்க்கப்பட்டும் இருப்பான்.
25 Un viņa apslēptās sirds domas tā taptu zināmas, un tā viņš uz savu vaigu mezdamies Dievu pielūgtu un pasludinātu, Dievu tiešām esam mūsu starpā.
௨௫அவனுடைய இருதயத்தின் இரகசியங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புறவிழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, தேவன் மெய்யாக உங்களுக்குள்ளே இருக்கிறார் என்று அறிக்கையிடுவான்.
26 Kā tad nu ir, brāļi? Kad jūs sanākat, kā kuram ir vai dziesma, vai mācība, vai valoda, vai parādīšana, vai tulkošana, lai viss notiek par uztaisīšanu.
௨௬நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம் பண்ணுகிறான், ஒருவன் அந்நிய மொழியைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் விளக்கம் சொல்லுகிறான். சகோதரர்களே, இது என்ன? அனைத்தும் பக்திவளர்ச்சிக்கேதுவாகச் செய்யப்படவேண்டும்.
27 Un ja valodām runā, tad, vai pa diviem, vai ja daudz trīs, un cits pēc cita, - un viens lai iztulko.
௨௭யாராவது அந்நிய மொழியிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டும் அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டும் பேசவும், அவர்கள் ஒவ்வொருவராகப் பேசவும், இன்னொருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.
28 Bet ja tulka nav, tad lai tas klusu cieš draudzē un lai runā sev pašam un Dievam.
௨௮அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப்பேசவேண்டும்.
29 Bet pravieši lai runā divi vai trīs, un tie citi lai pārspriež.
௨௯தீர்க்கதரிசிகள் இரண்டுபேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கவேண்டும்.
30 Bet ja citam, kas tur sēž, kāda parādīšana notiek, tad lai tas pirmais paliek klusu.
௩0அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாவது வெளிப்படுத்தப்பட்டால், முதலில் பேசினவன் பேசாமலிருக்கவேண்டும்.
31 Jo jūs pa vienam visi varat mācīt, lai visi mācās un visi top iepriecināti.
௩௧எல்லோரும் கற்கிறதற்கும் எல்லோரும் தேறுகிறதற்கும், நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனம் சொல்லலாம்.
32 Un praviešu gari praviešiem ir paklausīgi.
௩௨தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே.
33 Jo Dievs nav nekārtības, bet miera Dievs.
௩௩தேவன் கலகத்திற்கு தேவனாக இல்லாமல், சமாதானத்திற்கு தேவனாக இருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகள் எல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது.
34 Tā kā visās svēto draudzēs, lai jūsu sievas draudzes sapulcēs nerunā; jo tām nepieklājās runāt, bet būt paklausīgām, tā kā arī bauslība saka.
௩௪சபைகளில் உங்களுடைய பெண்கள் பேசாமலிருக்கவேண்டும்; பேசுகிறதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை; அவர்கள் அடங்கியிருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.
35 Un ja tās grib ko mācīties, lai tās mājās vaicā saviem vīriem; jo sievām ir par kaunu, draudzes sapulcē runāt.
௩௫அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், தங்களுடைய கணவரிடத்தில் வீட்டிலே விசாரிக்கட்டும்; பெண்கள் சபையிலே பேசுகிறது அவமானத்தை ஏற்படுத்துகிறதாக இருக்குமே.
36 Vai tad no jums Dieva vārds ir izgājis? Jeb vai pie jums vien tas ir nācis?
௩௬தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்திற்கு மாத்திரமா வந்தது?
37 Ja kam šķiet, ka esot pravietis jeb garīgs, tam būs atzīt, ka tas, ko jums rakstu, ir Tā Kunga bauslis.
௩௭ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது நினைத்தால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கட்டளைகளென்று அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
38 Bet ja kas neprot, tas lai neprot.
௩௮ஒருவன் அறியாதவனாக இருந்தால், அவன் அறியாதவனாக இருக்கட்டும்.
39 Tad nu, brāļi, dzenaties, ka mācat praviešu garā un neliedzat valodām runāt.
௩௯இப்படியிருக்க, சகோதரர்களே, தீர்க்கதரிசனம் சொல்ல விரும்புங்கள், அந்நிய மொழிகளைப் பேசுகிறதற்கும் தடைசெய்யாமலிருங்கள்.
40 Lai viss notiek, kā piederas un pa kārtām.
௪0அனைத்து காரியங்களும் நல்லொழுக்கமாகவும், முறையாகவும் செய்யப்படவேண்டும்.