< ରମି 4 >
1 ୧ ଆତିହିଁ ଆଙ୍ଗା ତଲେ ମା଼ ଆକୁ ଅବ୍ରାହାମ ଏ଼ନାଆଁ ବେଟାଆ଼ହାମାନେସି ଇଞ୍ଜିହିଁ ମା଼ର ଏଲେଇନାୟି?
நமது முற்பிதா ஆபிரகாமைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? இவ்விஷயத்தில் அவனுடைய அனுபவம் என்ன?
2 ୨ ଅବ୍ରାହାମ ତାନି ଜାହାରା କାମାଟି ମାହାପୂରୁ ତା଼ଣା ଦାର୍ମୁଗାଟାସି ଆ଼ହା ମାଚିହିଁମା, ଏ଼ୱାଣାକି ବଡପଣ କିନି କାତା ମାଚେ । ସାମା ମାହାପୂରୁ ୱାକିଟି ଏ଼ଦି ଆ଼ହାହିଲାଆତେ ।
உண்மையிலேயே ஆபிரகாம் தனது செயல்களின் பொருட்டு நீதிமான் ஆக்கப்பட்டிருந்தால், அவன் பெருமைபாராட்ட இடமுண்டு. ஆனால் இறைவனுக்கு முன்பாக அவன் பெருமைபாராட்ட இடமில்லை.
3 ୩ ଦାର୍ମୁ ସା଼ସ୍ତେରି ଲେହେଁ, “ଅବ୍ରାହାମ ମାହାପୂରୁଇଁ ନାମିତେସି, ଅ଼ଡ଼େ ଏ଼ ନାମୁତାକି ମାହାପୂରୁ ଏ଼ୱାଣାଇଁ ଦାର୍ମୁ ଗାଟାଣି ଲେହେଁ ଅ଼ପିତେସି ।”
வேதவசனம் என்ன சொல்கிறது? “ஆபிரகாம் இறைவனை விசுவாசித்தான். அந்த விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.”
4 ୪ ଆମ୍ବାଆସି କାମା କିନେସି, ଏ଼ୱାଣାକି ତାନି କୂଲି ମେ଼ଡ଼ାଆ଼ନେ, ଏ଼ଦି ଦା଼ନା ହୀନାୟି ଆ଼ହାଲି ଆ଼ଡେଏ, ଏ଼ଦି କାମାତି ପା଼ଡ଼େୟି ଇଞ୍ଜିଁ ଇଣ୍ମ୍ବି ଆ଼ନେ ।
வேலை செய்கிறவனுக்குக் கொடுக்கப்படுகிற கூலி ஒரு நன்கொடையாகக் கணக்கிடப்படுவதில்லை; அது அவனுக்குக் கொடுக்கப்படவேண்டிய கூலி.
5 ୫ ସାମା ଆମ୍ବାଆସି ତାନି କାମାତା ଆ଼ସା କିଆନା, ଦାର୍ମୁ ହିଲାଆଗାଟାଣାଇଁ ଏମିନି ମାହାପୂରୁ ଦାର୍ମୁଗାଟାସି ଇଞ୍ଜିଁ ଆବିନେସି, ଏ଼ୱାଣି ତା଼ଣା ନାମିନେସି, ଏ଼ୱାଣି ନ଼କିତା ଏ଼ୱାଣି ନାମୁ ଦାର୍ମୁଗାଟାୟି ଇଞ୍ଜିଁ ୱେ଼ଙ୍ଗିନେ ।
ஆனால் ஒருவனுடைய செயல்கள் இல்லாமல், பாவிகளை நீதிமானாக்கும் இறைவனிடம் விசுவாசம் வைக்கிற மனிதனுக்கு, அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்படுகிறது.
6 ୬ ଆମିନି ଲ଼କୁଇଁ କାମା ଲ଼ଡ଼ାତି ସିନି କିଆନା ମାହାପୂରୁ ଏ଼ୱାଣାଇଁ ଦାର୍ମୁଗାଟାସି ଇଞ୍ଜିଁ ଆବିନେସି, ଏ଼ୱାଣାଇଁ ନେହାଁସି ଇଞ୍ଜିଁ ଦାୱୁଦ ଏଲେଇଞ୍ଜା ମାନେସି;
இதே விஷயத்தைத் தாவீதும் கூறுகின்றான். செயல்கள் ஏதும் செய்யாமலே இறைவனால் நீதிமான் எனக் கணக்கிடப்படும் மனிதனின் ஆசீர்வாதத்தைக் குறித்து தாவீது சொல்லும்போது,
7 ୭ “ଆମ୍ବାଆରି ଦ଼ହ ମେଣ୍ଙ୍ଗି କିୱିଆ଼ହାମାନେ, ଆମ୍ବାଆରି ପା଼ପୁ ମେଣ୍ଙ୍ଗି କିୱିଆ଼ହାମାନେ, ଏ଼ୱାରାକି ନେହେଁ ।
“தங்கள் குற்றங்களுக்காக மன்னிப்புப் பெற்றவர்களாய், தங்கள் பாவங்கள் மூடப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
8 ୮ ପ୍ରବୁ ଆମ୍ବାଆରି ପା଼ପୁ ଆହ୍ଅସି, ଏ଼ୱାଣାକି ନେହେଁ!”
ஒருவனுடைய பாவத்தை ஒருபோதும் கர்த்தர் கணக்கில் வைத்திராவிட்டால், அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்கிறான்.
9 ୯ ଇମ୍ବାଆଁ ଦାୱୁଦ ଆମ୍ବାଆରାଇଁ ନେହେଁ ଇଞ୍ଜିଁ ୱେସାମାନେସି, ଏ଼ୱାରି କି ୱାର୍ଇ ତ଼ଲୁ ଦା଼ପି ଆ଼ତି ଲ଼କୁ ମାଚେରି? କି, ତ଼ଲୁ ଦା଼ପିଆ଼ଆତି ଲ଼କୁ ଜିକେଏ ନେହାଁରି ଆ଼ହାଲି ଆ଼ଡିନେରି । ମା଼ର ଏଲେ ଇଞ୍ଜିମାନାୟି, “ଅବ୍ରାହାମ ନାମୁତଲେ ଦାର୍ମୁଗାଟାସି ଇଞ୍ଜିଁ ୱେ଼ଙ୍ଗିତେସି ।”
இந்த ஆசீர்வாதம் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமா? இல்லையெனில் விருத்தசேதனம் பெறாதவர்களுக்கும் உரியதா? ஆபிரகாமின் விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது என்று நாம் சொல்கிறோம்.
10 ୧୦ ଆତିହିଁ ଏ଼ଦି ଏଚେଲା ଆ଼ହାମାଚେ? ଅବ୍ରାହାମ ତ଼ଲୁ ଦା଼ପି ଆ଼ତି ଡା଼ୟୁ କି, ତାନି ନ଼କେଏ? ତ଼ଲୁ ଦା଼ପି ଆ଼ଆନକେଏ, ଡା଼ୟୁ ଆ଼ଏ ।
அவன் எந்த சூழ்நிலையில் இருந்தபோது இது அவனுக்குக் கணக்கிடப்பட்டது? அவன் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டதின் பின்பு நடந்ததா? அல்லது பெற்றுக்கொள்வதற்கு முன்பு நடந்ததா? விருத்தசேதனம் பெற்றுக்கொண்டதின் பின்பு அல்ல, அதற்குமுன்புதான் அது நடந்தது.
11 ୧୧ ତ଼ଲୁ ଦା଼ପି ଆ଼ତି ନ଼କେଏ ଅବ୍ରାହାମ ନାମୁ ତାକି ମାହାପୂରୁ ଏ଼ୱାଣାଇଁ ଦାର୍ମୁ ଗାଟାଣା ଲେହେଁ ଆବା ମାଚେସି । ଈଦାଆଁ ପୁଣ୍ମ୍ବି କିହାଲିତାକି ର଼ ସିନାଲେହେଁ ଅବ୍ରାହାମ ଈ ତ଼ଲୁ ଦା଼ପିଆ଼ନି ମେ଼ରା ବେଟାଆ଼ହା ମାଚେସି, ଇଚିହିଁ, ଆମିନି ଗାଟାରି ତ଼ଲୁ ଦା଼ପି ଆ଼ଆନା ଜିକେଏ ମାହାପୂରୁ ତା଼ଣାଟି ଦାର୍ମୁଗାଟାସି ଇଞ୍ଜିହିଁ ଆବିତାସି, ସୁଦୁ ମାଣ୍କିଟି ଅବ୍ରାହାମ ଏ଼ୱାରି ତାଞ୍ଜି ।
ஆபிரகாம் விருத்தசேதனம் பெறாமல் இருந்தபோதே, விசுவாசத்தினால் பெற்றுக்கொண்ட நீதியின் சான்றாக, விருத்தசேதனத்தை ஒரு அடையாளமாகப் பின்பு பெற்றான். ஆகவே விருத்தசேதனம் பெறாதவர்களாயிருந்தும், விசுவாசிகளான எல்லோருக்கும் ஆபிரகாம் ஆவிக்குரிய தகப்பனாயிருக்கிறான். இதனால் அப்படியே அவர்களுடைய விசுவாசம் அவர்களுக்கும் நீதியாகக் கணக்கிடப்படுகிறது.
12 ୧୨ ଆ଼ବା ଅବ୍ରାହାମ ତ଼ଲୁ ଦା଼ପି ଆ଼ତି ନ଼କେଏଟିଏ ଆମିନି ନାମୁତି କାତା ତ଼ସାମାଚେସି, ତ଼ଲୁ ଦା଼ପିଆ଼ଆତି ଲ଼କୁ ଜାହାରା ଜୀୱୁତା ଏଲେତି ନାମୁ ତ଼ସାଲି ଆ଼ଡିସାରେ, ଅବ୍ରାହାମ ଏ଼ୱାରାକି ଜିକେଏ ତାଞ୍ଜି ଆ଼ନେସି ।
விருத்தசேதனம் பெற்றுக்கொண்டவர்களுக்கும் அவன் தந்தையாய் இருக்கிறான். அவர்கள் விருத்தசேதனத்தைப் பெற்றுக்கொண்டபடியினால் அல்ல. ஆபிரகாம் தான் விருத்தசேதனம் பெற்றுக்கொள்ளும் முன்னதாக அப்படியே விசுவாசத்தின் அடிச்சுவட்டிலே நடந்தான். நம்முடைய தந்தையாகிய ஆபிரகாமுக்கு இருந்த விசுவாசத்தினால் வரும் அடிச்சுவட்டில் நடக்கிறவர்களுக்கும் அவன் தந்தையாய் இருக்கிறான்.
13 ୧୩ ଅବ୍ରାହାମ ମେ଼ରାତି ମା଼ନି କିହାମାନାକି ଆ଼ଏ । ୱାର୍ଇ ତାନି ନାମୁ ତାକି ମାହାପୂରୁ ତା଼ଣାଟି ଦାର୍ମୁଗାଟାସି ଇଞ୍ଜିଁ ୱେ଼ଙ୍ଗାମାଚେସି ଇଞ୍ଜାଁ ଏ଼ଦାଆଁତାକି ତାନି ମୀର୍କା ମା଼ସ୍କା ଦାର୍ତିତି ଅଦିକାରା ବେଟାଆ଼ନେରି ଇଞ୍ଜିଁ ମାହାପୂରୁ ଆ଼ଞ୍ଜାମାଚେସି ।
உலகத்தின் உரிமையாளனாயிருப்பான் என்ற வாக்குத்தத்தத்தை இறைவன் அவனுக்கும், அவன் சந்ததிகளுக்கும் கொடுத்தார். இந்த வாக்குத்தத்தம் மோசேயின் சட்டத்தினால் அல்ல, விசுவாசத்தினால் வரும் நீதியினால் கொடுக்கப்பட்டது.
14 ୧୪ ଆମ୍ବାଆରି ମେ଼ରାତି ମା଼ନି କିନାରି, ୱାର୍ଇ ଏ଼ୱାରି ମାହାପୂରୁତି ଦା଼ନା ବେଟାଆ଼ନେରି ଇଚିସାରେ, ମାଣ୍ସିତି ନାମୁ ଉଜେଏ, ମାହାପୂରୁ ଆ଼ଞ୍ଜାମାନାୟି ଜିକେଏ ଉଜେଏତାୟି ଆ଼ନେ ।
ஏனெனில், மோசேயின் சட்டத்திற்கு கீழ்ப்படிகிறவர்கள் அதற்கு உரிமையாளர்களானால் விசுவாசம் உபயோகமற்றதாகிறது. வாக்குத்தத்தமும் அர்த்தமற்றதாகிறது.
15 ୧୫ ଇଚିହିଁ ମ଼ସାତି ମେ଼ରା ଊରିନି ତା଼ଣାଟି ମାହାପୂରୁତି କାର୍ବି ଗାଟାସି ଆ଼ନେସି, ସାମା ଆମ୍ବିୟା ମେ଼ରା ହିଲେଏ, ଏମ୍ବାଆଁ ମେ଼ରା ଊରିନି କାତା ହିଲେଏ ।
ஆனால் மோசேயின் சட்டம் இறைவனின் கோபத்தையே கொண்டுவருகிறது. ஆனால் மோசேயின் சட்டம் இல்லாத இடத்தில், மீறுதலும் இல்லை.
16 ୧୬ ଏ଼ଦାଆଁତାକି ମାହାପୂରୁତି ଆ଼ଞ୍ଜାମାନାୟି ନାମୁ ଅ଼ଡ଼େ କାର୍ମାତି ଲାକ ଇଟ୍କି ଆ଼ହାମାନେ । ଆମିନି ଗାଟାରି ମେ଼ରାତି ମା଼ନି କିନେରି, ୱାର୍ଇ ଏ଼ୱାରାକିଦେହେଁ ମାହାପୂରୁତି ଆ଼ଞ୍ଜାମାନାୟି ଆ଼ଏ । ଅବ୍ରାହାମ ଲେହେଁ ନାମିମାନି ବାରେ ଲ଼କୁତାକି ଜିକେଏ ଆ଼ନେ, ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ଅବ୍ରାହାମ ଏ଼ୱାରି ସୁଦୁ ମାଣ୍କିତି ତାଞ୍ଜି;
ஆதலால் வாக்குத்தத்தம் விசுவாசத்தினால் வருகிறது. இதனால் இந்த வாக்குத்தத்தம் இலவசமான கிருபையினால், ஆபிரகாமின் சந்ததிகள் அனைவருக்கும் கொடுக்கப்படும் என்ற உறுதியையும் காட்டுகிறது. மோசேயின் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்கு மாத்திரமல்ல, ஆபிரகாமின் விசுவாசம் விசுவாசிக்கிறவர்களுக்கும் அது கொடுக்கப்படுகிறது. ஆபிரகாம் நம் எல்லோருக்கும் தந்தையாயிருக்கிறார்.
17 ୧୭ ଆମିନି ମାହାପୂରୁଇଁ ଅବ୍ରାହାମ ନାମିମାଚେସି, ଆମ୍ବାଆସି ହା଼ତାରାଇଁ ୱେଣ୍ତେ ଜୀୱୁ କିନେସି, ଅ଼ଡ଼େ ହିଲାଆଗାଟି ଦିଣ୍ସୁତି ମାନି ଲେହେଁ ହା଼ଟିନେସି, ଏ଼ ମାହାପୂରୁ ନ଼କିତା ଏ଼ୱାସି ମା଼ ତାଞ୍ଜି ଆ଼ହାମାନେସି, ଈ କାତା ଦାର୍ମୁ ସା଼ସ୍ତେରିତା ରା଼ସ୍କି ଆ଼ହାମାନେ, “ନିଙ୍ଗେ ହା଼ରେକା କୂଡ଼ାତି ଲ଼କୁତି ତାଞ୍ଜି କିହାମାଞ୍ଜାନମି ।”
“அநேக நாடுகளுக்கு நான் உன்னைத் தந்தையாக்கினேன்” என்று எழுதப்பட்டிருக்கிற வேதவசனத்தின்படியே ஆபிரகாம் தான் விசுவாசித்த இறைவனின் பார்வையில், நம்முடைய தந்தையாய் இருக்கிறான். இறைவனே இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கிறவர்; முன்பில்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைக்கிறார் என்று ஆபிரகாம் விசுவாசித்தான்.
18 ୧୮ ଆ଼ସା କିନାୟି ଏ଼ନାୟି ହିଲାଆତି ଜିକେଏ ଅବ୍ରାହାମ ନାମିତେସି ଇଞ୍ଜାଁ ଆ଼ସା ଇଟିତେସି, ଏ଼ଦାଆଁତାକି “ହା଼ରେକା କୂଡ଼ାତି ତାଞ୍ଜି” ଆ଼ତେସି । ଦାର୍ମୁ ସା଼ସ୍ତେରିତା ରା଼ସ୍କି ଆ଼ହାମାନେ, “ନୀ କୂଡ଼ା ହୁକାୟାଁ ଲେହେଁ ଏ଼ପାଆ଼ନେରି ।”
“உனது சந்ததிகள் வானத்து நட்சத்திரங்களைப்போல் அதிகமாயிருக்கும்” என்று இறைவன் ஆபிரகாமுக்குக் கூறியபோது யாரும் நம்புகிறதற்கு கூடாதிருந்தும் ஆபிரகாம் எதிர்பார்ப்புடன் விசுவாசித்தான். அதனால் ஆபிரகாம் அநேக நாடுகளுக்கு தந்தையானான்.
19 ୧୯ ଏ଼ୱାଣାକି ଏଚିବେ଼ଲା ପା଼ସାକ଼ଡ଼ି ବାର୍ସା ଆ଼ହାମାଚାକି ଏ଼ୱାସି ତାନି ଆଙ୍ଗାତି ହା଼ତାୟି ଇଞ୍ଜାଁ ସାରା ଅ଼ଡ଼େ କକାରି ପ଼ଦାଁ ଆ଼ନି ଗା଼ରା ଜିକେଏ ହା଼ତାୟି ଇଞ୍ଜିଁ ଅଣ୍ପିତି ଜିକେଏ ନାମୁତା ଊଣା ଆ଼ଆତେସି ।
அவன் ஏறத்தாழ நூறு வயதுள்ளவனாயிருந்தான். இதனால் அவனுடைய உடல் சக்தியற்றுப் போயிருந்தது. சாராளுடைய கருப்பையும் கருத்தரிக்கும் சக்தியை இழந்திருந்தது. இதை அவன் நன்றாய் அறிந்திருந்தும், அவனுடைய விசுவாசம் தளரவில்லை.
20 ୨୦ ଏ଼ୱାସି ତାନି ନାମୁ ପିହ୍ଆତେସି, କି ମାହାପୂରୁ ଆ଼ଞ୍ଜାମାନାଣି ଆନାମାନା ଆ଼ଆତେସି । ଏ଼ୱାସି ନାମୁତା ବା଼ଡ଼୍ୟୁ ଆ଼ତେସି ଇଞ୍ଜାଁ ମାହାପୂରୁଇଁ ଜହରା କିତେସି ।
இறைவனுடைய வாக்குறுதியைக்குறித்து அவிசுவாசத்தினால் அவன் தடுமாற்றம் அடையவில்லை. ஆனால் அவன் தனது விசுவாசத்தில் வலிமை அடைந்து, இறைவனுக்கே மகிமையைச் செலுத்தினான்.
21 ୨୧ ମାହାପୂରୁ ଏ଼ନାଆଁ ଆ଼ଞ୍ଜାମାଚେସି, ଏ଼ୱାସି ଏ଼ଦାଆଁ ମା଼ନି କିନେସି ଇଞ୍ଜିଁ ଏ଼ୱାଣାକି ଜାଣ୍ଡେ ନାମୁ ମାଚେ ।
தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இறைவனுக்கு வல்லமை உண்டு என்பதை அவன் முழு நிச்சயமாய் நம்பினான்.
22 ୨୨ ଏ଼ଦାଆଁତାକି ତାନି ନାମୁତଲେ ଅବ୍ରାହାମ, “ମାହାପୂରୁ ତା଼ଣାଟି ଦାର୍ମୁଗାଟାସି ଆ଼ହାମାଚେସି ।”
இதனால்தான், “அவனுடைய விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.
23 ୨୩ “ଅବ୍ରାହାମ ଦାର୍ମୁଗାଟାସି ଇଞ୍ଜିଁ ୱେ଼ଙ୍ଗାମାଚି” କାତା ୱାର୍ଇ ଏ଼ୱାଣି ତାକିଏଦେଁ ରା଼ସ୍କି ଆ଼ହାହିଲେଏ ।
அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது” என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பது அவனுக்காக மட்டுமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
24 ୨୪ ସାମା ଈ କାତା ମାଙ୍ଗେତାକି ଜିକେଏ ରା଼ସ୍କି ଆ଼ହାମାନେ; ଇଚିହିଁ ଆମ୍ବାଆସି ମା଼ ପ୍ରବୁ ଜୀସୁଇଁ ହା଼ତାରି ତା଼ଣାଟି ନିକ୍ହାମାନେସି, ଏ଼ୱାଣି ତା଼ଣା ମା଼ର ନାମିମାନାୟି, ମାଙ୍ଗେତାକି ଜିକେଏ ଏ଼ଦି ଆ଼ନେ ।
நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பிய இறைவன்மேல் விசுவாசம் வைக்கும் நமக்கும் நம்முடைய விசுவாசத்தை நீதியாகக் கணக்கிடுவார் என்றே அது எழுதப்பட்டுள்ளது.
25 ୨୫ ଏ଼ ପ୍ରବୁ ଜୀସୁ ମା଼ ପା଼ପୁତି ବାଦୁଲି ହା଼ହାଲି ହେର୍ପିଆ଼ହା ମାଚେସି ଇଞ୍ଜାଁ ମାହାପୂରୁ ନ଼କିତା ମାଙ୍ଗେ ଦାର୍ମୁ ଗାଟାତାୟି କିହାଲି ୱେଣ୍ଡେ ନିଙ୍ଗିତେସି ।
இறைவன் இயேசுவை நம்முடைய பாவங்களுக்காக மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, நம்மை நீதிமான்கள் ஆக்குவதற்காக உயிரோடு எழுப்பினார்.