< ମାର୍କ 1 >
1 ୧ ମାହାପୂରୁ ମୀର୍ଏସି ଜୀସୁ କ୍ରୀସ୍ତତି ନେହିଁ କାବ୍ରୁ ଇଲେକିଁ ଆ଼ତେ,
இறைவனுடைய மகன் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்.
2 ୨ ମାହାପୂରୁ ଅଣ୍ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍ନି ଜିସାୟ ସା଼ସ୍ତେରିତା ଏ଼଼ନିକିଁ ରା଼ସ୍କି ଆ଼ହାମାନେ; “ମାହାପୂରୁ ଏଲେଇଞ୍ଜି ମାନେସି, ମେହ୍ମୁ ନା଼ନୁ ନା଼ କାବ୍ରୁ ୱେହ୍ନାଣାଇଁ ନୀ ନ଼କିତା ପାଣ୍ତିମାଞ୍ଜାଇଁ, ଏ଼ୱାସି ନିଙ୍ଗେତାକି ଜିରୁ ତିୟାରା କିନେସି;
இது ஏசாயா என்ற இறைவாக்கினரின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது: “நான் என்னுடைய தூதனை உமக்கு முன்பாக அனுப்புவேன்; அவன் உமது வழியை ஆயத்தப்படுத்துவான்”
3 ୩ ଲ଼କୁ ହିଲାଆ ଟା଼ୟୁତା ରଅଣି ହା଼ଡା ୱେ଼ଙ୍ଗିମାନେ, ପ୍ରବୁତି ଜିରୁ ତିୟାରା କିଦୁ, ଏ଼ୱାସି ତା଼କାଲି ତାକି ଜିରୁ ତିୟି କିଦୁ ।”
“‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்காகப் பாதைகளை நேராக்குங்கள்’ என்று ஒருவனுடைய குரல் பாலைவனத்திலே சத்தமிட்டது.”
4 ୪ ଏମ୍ବାଟିଏ ବାପ୍ତିସ୍ମ ହୀନି ଜହନ ଲ଼କୁ ହିଲାଆ ଟା଼ୟୁତା ୱା଼ହାନା ବ଼ଲୁ ୱେ଼କ୍ହେସି, ଅ଼ଡ଼େ ବାପ୍ତିସ୍ମ ହୀହାନା ଏଲେଇଚେସି, “ଜାହାରା ପା଼ପୁଟି ପିସ୍ପି ଆୟାଲିତାକି ମ଼ନ ୱେଟ୍ହାନା ବାପ୍ତିସ୍ମ ଅ଼ଦୁ, ଆତିହିଁ ମାହାପୂରୁ ମୀ ପା଼ପୁ ମ୍ଣେକ୍ହାନେସି ।”
அவ்வாறே யோவான் ஸ்நானகன் பாலைவனப் பகுதியில் வந்து, திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் மக்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்கு, அவர்கள் மனந்திரும்பிப் பெறவேண்டிய திருமுழுக்கைக் குறித்துப் பிரசங்கித்தான்.
5 ୫ ଏମ୍ବାଟିଏ ଜୀହୁଦା ଦେ଼ସା ଇଞ୍ଜାଁ ଜିରୁସାଲମ ଗା଼ଡ଼ାତି ବାରେ ଲ଼କୁ ତାନି ତା଼ଣା ୱା଼ହାଲି ମା଼ଟ୍ହେରି, ଇଞ୍ଜାଁ ତା଼ମ୍ବୁ ତାମି କିତି ପା଼ପୁତି ୱେସାନା ଏ଼ୱାଣି ତା଼ଣାଟି ଜର୍ଦନ କାଡାତା ବାପ୍ତିସ୍ମ ଅ଼ତେରି ।
யூதேயா மாகாணத்தின் எல்லா நாட்டுப்புறங்களிலும் எருசலேம் நகரத்திலுமிருந்து எல்லாரும் அவனிடம் சென்றார்கள். அங்கே அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் ஆற்றிலே அவனால் திருமுழுக்குப் பெற்றார்கள்.
6 ୬ ଜହନ ଊଟୁ ବା଼ଣାୟାଁ ତଲେ କେ଼ପିତି ହିମ୍ବରିକା ତୁର୍ହିମାଚେସି, ଅ଼ଡ଼େ ଟେଡେଲିତା ର଼ ତ଼ଲୁତି ବୁଡ଼୍ପା ମା଼ଡ଼ା କିହାଁ ଦସା କଡ୍ୱିତେସି, ଗପ୍ଏରିକା ଅ଼ଡ଼େ ଜା଼ଡ଼ାତି କ୍ରିୟାଁ ଏ଼ୱାଣି କା଼ଦି ମାଚେ ।
யோவானின் உடைகள் ஒட்டக முடியினால் செய்யப்பட்டிருந்தன. அவன் இடுப்பைச் சுற்றி தோல் பட்டியையும் கட்டியிருந்தான். அவனது உணவு வெட்டுக்கிளியும், காட்டுத்தேனுமாய் இருந்தது.
7 ୭ ଜହନ ଏଲେଇଞ୍ଜି ୱେ଼କ୍ହାଲି ମା଼ଟ୍ହେସି, “ଆମ୍ବାଆସି ନା଼ କିହାଁ ହା଼ରେକା ବା଼ଡ଼୍ୟୁ ଗାଟାସି ଏ଼ୱାସି ନା଼ ଡା଼ୟୁ ୱା଼ହିମାନେସି; ନା଼ନୁ ମେଣ୍ତାକୁତାନା ଏ଼ୱାଣି ସେପୁୟାଁତି ଡ଼଼ର୍କା ଜିକେଏ ହୁକ୍ହାଲି ପା଼ଡ଼ାଆ଼ଅଁ ।
அவன் அறிவித்த செய்தி என்னவென்றால், “என்னைப் பார்க்கிலும் அதிக வல்லமையுள்ளவர் எனக்குப்பின் வருகிறார். நானோ அவருடைய பாதரட்சைகளின் வாரையும் குனிந்து அவிழ்ப்பதற்குத் தகுதியற்றவன்.
8 ୮ ନା଼ନୁ ମିଙ୍ଗେ ଏ଼ୟୁତଲେ ବାପ୍ତିସ୍ମ ହୀହିମାଞ୍ଜାଇଁ, ସାମା ଏ଼ୱାସି ମିଙ୍ଗେ ସୁଦୁଜୀୱୁ ତଲେ ବାପ୍ତିସ୍ମ ହିୟାନେସି ।”
நான் உங்களுக்குத் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன்; ஆனால் அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு கொடுப்பார்.”
9 ୯ ଏଚିବେ଼ଲାତା ଜୀସୁ ଗାଲିଲିତି ନା଼ଜରିତଟି ୱା଼ହାନା ଜର୍ଦନ କାଡାତା ଜହନ ତା଼ଣାଟି ବାପ୍ତିସ୍ମ ଅ଼ତେସି ।
அக்காலத்தில் இயேசு கலிலேயா மாகாணத்தின் நாசரேத் பட்டணத்திலிருந்து வந்து, யோர்தான் ஆற்றிலே யோவானால் திருமுழுக்கு பெற்றார்.
10 ୧୦ ଜୀସୁ ଏ଼ୟୁଟି ନିଙ୍ଗା ୱା଼ହିମାଚାଟି ଦେବୁଣିଏ ଲାକପୂରୁ ଦେପି ଆ଼ତେ ଇଞ୍ଜାଁ ସୁଦୁଜୀୱୁ ପା଼ର୍ୱା ପଟାଲେହେଁ ତାନି ଲାକ ରେ଼ଚା ୱା଼ହିମାଚାଣି ମେସ୍ତେସି ।
இயேசு தண்ணீரிலிருந்து கரையேறிய உடனே, வானம் திறக்கப்பட்டதையும் பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் அவர் கண்டார்.
11 ୧୧ ଅ଼ଡ଼େ ଲାକପୂରୁଟି ଈ ହା଼ଡା ଆ଼ତେ, “ନୀନୁ ନା଼ ଜୀୱୁତି ମୀର୍ଏଣାତି, ନୀ ତା଼ଣେଏ ନା଼ ହା଼ରେକା ରା଼ହାଁ ମାନେ ।”
அப்பொழுது வானத்திலிருந்து ஒரு குரல்: “நீர் என்னுடைய அன்பு மகன்; நான் உம்மில் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்” என்று ஒலித்தது.
12 ୧୨ ଏ଼ ଦେବୁଣିଏ ସୁଦୁଜୀୱୁ ଏ଼ୱାଣାଇଁ ଲ଼କୁ ହିଲାଆ ଟା଼ୟୁତା ଅ଼ତେ,
உடனே ஆவியானவர் இயேசுவைப் பாலைவனத்துக்கு அனுப்பினார்.
13 ୧୩ ଜୀସୁ ଲ଼କୁ ହିଲାଆ ଟା଼ୟୁତା ରୀ କ଼ଡ଼ି ଦିନା ପାତେକା ଡ଼ୟାନା ସୟତାନ ତା଼ଣାଟି ତାୟିପାରି କିୱିଆ଼ତେସି; ଏ଼ୱାସି ଜା଼ଡ଼ାତି ଜ଼ନ୍ତ ତଲେ ଡ଼ୟିତେସି, ଇଞ୍ଜାଁ ଲାକପୂରୁତି ଦୂତୁୟାଁ ୱା଼ହାନା ଏ଼ୱାଣି ସେ଼ବା କିହିମାଚୁ ।
இயேசு பாலைவனத்தில் நாற்பது நாட்கள் இருந்து சாத்தானால் சோதிக்கப்பட்டார். அங்கு அவர் காட்டு மிருகங்களுடன் இருந்தார்; இறைவனுடைய தூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.
14 ୧୪ ଜହନଇଁ କାୟିଦି ଇଲୁତା ଇଟାଲିଏ ଜୀସୁ ଗାଲିଲିତା ୱା଼ତେସି ଇଞ୍ଜାଁ ମାହାପୂରୁତି ନେହିଁ କାବ୍ରୁ ୱେ଼କ୍ହେସି ।
யோவான் சிறையில் அடைக்கப்பட்ட பின்பு, இயேசு இறைவனுடைய நற்செய்தியை அறிவித்துக்கொண்டு கலிலேயாவுக்கு வந்து,
15 ୧୫ “କା଼ଲା ଏଜିମାଞ୍ଜାନେ, ଲାକପୂରୁ ରା଼ଜି ଏଗାୱା଼ହିମାନେ, ପା଼ପୁତି ପିସାନା ମ଼ନ ୱେଟ୍ଦୁ ଇଞ୍ଜାଁ ମାହାପୂରୁତି ନେହିଁ କାବ୍ରୁତି ନାମାଦୁ ।”
“காலம் நிறைவேறிவிட்டது, இறைவனுடைய அரசு சமீபித்திருக்கிறது. மனந்திரும்பி நற்செய்தியை விசுவாசியுங்கள்” என்றார்.
16 ୧୬ ଜୀସୁ ଗାଲିଲି ସାମ୍ଦୁରି ଗାଟୁଟି ହାଜିମାଚାଟି ସିମନ ଅ଼ଡ଼େ ତାମି ତାୟି ଆନ୍ଦ୍ରିୟଇଁ ସାମ୍ଦୁରିତା ମୀଣ୍କା ଜା଼ଲା ମେତ୍ହି ମାଚାଣି ମେସ୍ତେସି, ଇଚିହିଁ ଏ଼ୱାରି ମୀଣ୍କା ଆହ୍ନାରି ମାଚେରି ।
இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது சீமோனையும் அவனது சகோதரன் அந்திரேயாவையும் கண்டார்; மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.
17 ୧୭ ଜୀସୁ ଏ଼ୱାରାଇଁ ହା଼ଟାନା ଏଲେଇଚେସି, “ନା଼ ଜେ଼ଚ ୱା଼ଦୁ ନା଼ନୁ ମିଙ୍ଗେ ଲ଼କୁଣି ଆହ୍ନାଣି ଜା଼ପ୍ହାଇଁ ।”
இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களை இறைவனுடைய வழியில் மனிதரை நடத்துகிறவர்களாக மாற்றுவேன்” என்றார்.
18 ୧୮ ଏ଼ୱାରି ଦେବୁଣିଏ ଜା଼ଲାୟାଁ ପିସାନା ଜୀସୁତି ଜେ଼ଚ ହାଚେରି ।
உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றினார்கள்.
19 ୧୯ ଏଚେଟିଏ ଜୀସୁ ହିରେ ହେକ ହାଜାଲିଏ ଜେବଦି ମୀର୍କା ଜାକୁବ ଇଞ୍ଜାଁ ତାମି ତାୟି ଜହନଇଁ ଡଂଗତା ଜା଼ଲା ମୁଦା କିହିମାଚାଣି ମେସ୍ତେସି ।
இயேசு சற்று தூரம் போனபின்பு, செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார்; அவர்கள் ஒரு படகிலிருந்து தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
20 ୨୦ ମେସ୍ପନିଏ ଜୀସୁ ଏ଼ୱାରାଇଁ ହା଼ଟିତେସି, ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାରି ତାମି ଆ଼ବା ଜେବଦିଇଁ ହ଼ଲିୟାଙ୍ଗା ତଲେ ଡଂଗତା ପିସାନା ଜୀସୁ ଜେ଼ଚ ହାଚେରି ।
உடனே இயேசு அவர்களையும் அழைத்தார்; அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றினார்கள்.
21 ୨୧ ଜୀସୁ ଅ଼ଡ଼େ ତାମି ସୀସୁୟାଁ କପର୍ନାହୁମ ଗା଼ଡ଼ାତା ୱା଼ତେରି, ଇଞ୍ଜାଁ ଅ଼ର ନେ଼ଚୁ ଜ଼ମିନି ଦିନା ମାଚାକି ଜୀସୁ ଜୀହୁଦି ଲ଼କୁତି କୁଟମି ଇଲୁତା ହାଜାନା ଜା଼ପ୍ହାଲି ମା଼ଟ୍ହେସି ।
பின்பு அவர்கள் கப்பர்நகூம் நகரத்திற்குச் சென்றார்கள்; ஓய்வுநாளில் இயேசு யூத ஜெப ஆலயத்திற்குச் சென்று, அங்கு போதித்தார்.
22 ୨୨ ଲ଼କୁ ତାନି ଜା଼ପ୍ନାଣି ୱେଞ୍ଜାନା କାବା ଆ଼ହାହାଚେରି; ଇଚିହିଁ ଏ଼ୱାସି ସା଼ସ୍ତେରି ୱେହନାରି ଲେହେଁ ଜା଼ପ୍ଆନା ଅଦିକାରା ବେଟାଆ଼ହାମାନି ଲେହେଁ ଜା଼ପ୍ହି ମାଚେସି ।
அங்கிருந்த மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள். ஏனெனில், அவர் மோசேயின் சட்ட ஆசிரியர்களைப்போல் போதிக்காமல், அதிகாரமுள்ளவராய் அவர்களுக்கு போதித்தார்.
23 ୨୩ ଜୀସୁ ଜା଼ପ୍ହି ମାଚିବେ଼ଲାତା ଜୀହୁଦି ଲ଼କୁତି କୁଟମି ଇଲୁଟି ର଼ ବୂତୁ ଆଲ୍ଗା ମାଚାସି କା଼ଲୱି ଆ଼ହିଁ ଏଲେଇଚେସି,
அப்பொழுது, அந்த ஜெப ஆலயத்தில் தீய ஆவி பிடித்தவனாயிருந்த ஒருவன் சத்தமிட்டு,
24 ୨୪ “ଏ଼ ନା଼ଜରିତତି ଜୀସୁ ନୀ ତଲେ ମାଙ୍ଗେ ଏ଼ନି କାମା ମାନେ, ନୀନୁ କି ମାଙ୍ଗେ ନା଼ସା କିହାଲି ଇମ୍ବାଆଁ ୱା଼ହାମାଞ୍ଜି? ନୀନୁ ଆମ୍ବାଆତି ନା଼ନୁ ପୁଞ୍ଜାମାଇଁ; ନୀନୁ ମାହାପୂରୁ ତା଼ଣାଟି ୱା଼ହାମାନି ଏ଼ ସୁଦୁ ମାଣ୍ସିତି ।”
“நசரேயனாகிய இயேசுவே, எங்களிடம் உமக்கு என்ன? எங்களை அழிப்பதற்காகவா வந்தீர்? நீர் யார் என்பது எனக்குத் தெரியும், நீர் இறைவனுடைய பரிசுத்தர்!” என்றான்.
25 ୨୫ ଜୀସୁ ଏ଼ଦାନି ଦାକା ହୀହାନା ଏଲେଇଚେସି, “ପାଲେଏ ଆ଼ମୁ ଇଞ୍ଜାଁ ଈୱାଣି ତା଼ଣାଟି ହ଼ଚାହାଲାମୁ ।”
“அமைதியாயிரு! இவனைவிட்டு வெளியே போ” என்று இயேசு அவனை அதட்டினார்.
26 ୨୬ ଏଚେଟିଏ ଏ଼ ପ଼ଲ୍ଆ ବୂତୁ ଏ଼ୱାଣାଇଁ ମୁଡ଼ୁମାଡ଼ା କିହାନା, କାଜା ଗିୟାଁତଲେ କିର୍ଡ଼ିହିଁ ଏ଼ୱାଣି ତା଼ଣାଟି ହ଼ଚାହାଚେ ।
அப்பொழுது தீய ஆவி, அந்த மனிதனை வலிப்புடன் வீழ்த்தி, பெருங்கூச்சலிட்டுக் கொண்டு, அவனைவிட்டு வெளியேறியது.
27 ୨୭ ଏମ୍ବାଟିଏ ବାରେଜା଼ଣା ହା଼ରେକା କାବା ଆ଼ତେରି, ଇଞ୍ଜାଁ ଇଲେକିଁ ଜ଼ଲ୍କି ଆ଼ତେରି, “ଈଦି ଏ଼ନିଲେହେଁତାୟି? ଈଦି ଅଦିକାରା ବେଟାଆ଼ହାମାନି ଲେହେଁତି ପୁଃନି ଜା଼ପ୍ନାୟି, ଏ଼ୱାସି ପ଼ଲ୍ଆ ବୂତୁୟାଁଇଁ ଜିକେଏ ହୁକୁମି ହୀହିମାନେସି, ଅ଼ଡ଼େ ଏ଼ୱି ଏ଼ୱାଣି କାତା ଆସିମାନୁ ।”
எல்லோரும் வியப்படைந்து ஒருவரோடொருவர், “இது என்ன? இது அதிகாரமுடைய ஒரு புதிய போதனையாக இருக்கிறதே! இயேசு தீய ஆவிகளுக்குக்கூட கட்டளையிடுகிறார்; அவைகளும் அவருக்குக் கீழ்ப்படிகின்றனவே” என்று பேசிக்கொண்டார்கள்.
28 ୨୮ ଏମ୍ବାଟିଏ ଏ଼ୱାସି କିତି କାମାତି କାବ୍ରୁ ଏ଼ ରେ଼ଟୁଏ ଗାଲିଲି ରା଼ଜିତି ସା଼ରିୱାକିତି ନା଼ସ୍କାଣାଁ ୱେ଼ଙ୍ଗାହାଚେ ।
இயேசுவைப்பற்றிய இச்செய்தி கலிலேயா பகுதிகள் முழுவதும் விரைவாய் பரவியது.
29 ୨୯ ଏମ୍ବାଟିଏ ଏ଼ୱାରି ଜୀହୁଦି ଲ଼କୁତି କୁଟମି ଇଲୁଟି ହ଼ଚାନା ଜାକୁବ ଅ଼ଡ଼େ ଜହନ ତଲେ ଏ଼ ଦେବୁଣିଏ ସିମନ ଇଞ୍ଜାଁ ଆନ୍ଦ୍ରିୟ ଇଜ ହାଚେରି ।
ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்ட உடனே அவர்கள், யாக்கோபு மற்றும் யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.
30 ୩୦ ସିମନ ପ଼ୟା ନ଼ମେରି ତାକି ଡୂରାମାଚେ, ଅ଼ଡ଼େ ଏ଼ୱାରି ଏ଼ଦାଣି କାତା ରେ଼ଟୁଏ ଜୀସୁଇଁ ୱେସ୍ତେରି ।
அங்கே சீமோனுடைய மாமியார் காய்ச்சலுடன் படுக்கையில் கிடந்தாள். உடனே அவர்கள் அவளைப்பற்றி இயேசுவுக்குச் சொன்னார்கள்.
31 ୩୧ ଏମ୍ବାଟିଏ ଏ଼ୱାସି ଡାଗେ ହାଜାନା ତାନି କେୟୁ ଆସାନା ଏ଼ଦାନି ନିକ୍ହେସି, ଅ଼ଡ଼େ ଏ଼ଦାନି ନ଼ମେରି ପିସ୍ତେ, ଇଞ୍ଜାଁ ଏ଼ଦି ଏ଼ୱାରି ସେ଼ବା କିତେ ।
எனவே இயேசு அவளிடத்தில் சென்று, அவளுடைய கையைப் பிடித்து, அவள் எழுந்துகொள்ள உதவினார். உடனே காய்ச்சல் அவளைவிட்டுப் போயிற்று; அவள் அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள்.
32 ୩୨ ମିଡ଼୍ଅଲା ବେ଼ଲା ୱେ଼ଡ଼ା କୂଡ୍ହାଲିଏ ଲ଼କୁ ର଼ଗ ଗାଟାରାଇଁ ଇଞ୍ଜାଁ ବୂତୁୟାଁ ଆଲ୍ଗା ମାଚାରାଇଁ ଜୀସୁ ତା଼ଣା ତାତେରି,
அன்று மாலை கதிரவன் மறைந்தபின்பு, வியாதிப்பட்டவர்கள், பிசாசு பிடித்தவர்கள் எல்லோரையும் மக்கள் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.
33 ୩୩ ଇଞ୍ଜାଁ ଗା଼ଡ଼ାତାରି ବାରେ ଜୀସୁ ମାଚି ଇଲୁ ଦୁୱେରିତା ରୁଣ୍ତା ଆ଼ତେରି ।
பட்டணத்திலுள்ள அனைவரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடியிருந்தார்கள்.
34 ୩୪ ଏମ୍ବାଟିଏ ଜୀସୁ ବାରେଲେହେଁତି ର଼ଗ ଗାଟାରାଇଁ ନେହିଁ କିତେସି, ଇଞ୍ଜାଁ ହା଼ରେକା ବୂତୁଣି ପିସ୍ପି କିତେସି, ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାସି ବୂତୁୟାଁଣି ଜ଼ଲାଲି ହୀଆତେସି, ଇଚିହିଁ ଏ଼ୱି ଏ଼ୱାଣାଇଁ ପୁଞ୍ଜିମାଚୁ ।
பலவித வியாதி உடையவர்களாயிருந்த அநேகரை, இயேசு குணமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்தினார். அந்தப் பிசாசுகள் தம்மை யாரென்று அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு இயேசு அனுமதிக்கவில்லை.
35 ୩୫ ୱେ଼ୟାଆ ମାଚାଟିଏ ଆନ୍ଦେରି ମାଞ୍ଜା ମାଞ୍ଜାନା ଏ଼ୱାସି ନିଙ୍ଗା ହ଼ଚା ହାଜାନା ର଼ ଲ଼କୁ ହିଲାଆ ଟା଼ୟୁତା ହାଜାନା ପ୍ରା଼ତାନା କିହିମାଚେସି ।
விடியுமுன் இருட்டாய் இருக்கையிலேயே இயேசு எழுந்து புறப்பட்டு ஒரு தனிமையான இடத்திற்குப் போய், அங்கே மன்றாடினார்.
36 ୩୬ ସିମନ ଇଞ୍ଜାଁ ତାନି ଆଟ୍ହିତାରି ଏ଼ୱାଣାଇଁ ପାରାଲି ମା଼ଟ୍ହେରି,
சீமோனும் அவனுடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச்சென்றார்கள்.
37 ୩୭ ଏ଼ୱାଣାଇଁ ବେଟାଆ଼ହାନା ଏଲେଇଚେରି, “ବାରେଜା଼ଣା ନିଙ୍ଗେ ପାରିମାଞ୍ଜାନେରି ।”
அவர்கள் இயேசுவைக் கண்டபோது, “எல்லோரும் உம்மைத் தேடிக்கொண்டு இருக்கிறார்களே” என்றார்கள்.
38 ୩୮ ଏମ୍ବାଟିଏ ଜୀସୁ ଏ଼ୱାରାଇଁ ଏଲେଇଚେସି, “ୱା଼ଦୁ ମା଼ର ଏଟ୍କା ଗା଼ଡ଼ାତା, ଇଚିହିଁ ଦାରିମାରି ନା଼ସ୍କାଣାଁ ହାନ; ଏମ୍ବାଆଁ ଜିକେଏ ନା଼ନୁ ମାହାପୂରୁତି ବ଼ଲୁ ୱେ଼କ୍ଇଁ, ଇଚିହିଁ ଏ଼ଦାଆଁତାକି ନା଼ନୁ ୱା଼ହାମାଇଁ ।”
இயேசு அவர்களிடம், “நாம் வேறுசில கிராமங்களுக்குப் போவோம்; அங்கேயும் நான் பிரசங்கிக்க வேண்டும். அதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்றார்.
39 ୩୯ ଇଞ୍ଜାଁ ଜୀସୁ ବାରେ ଗାଲିଲି ନା଼ସ୍କାଣାଁ ରେ଼ଜି ରେ଼ଜିହିଁ ଏ଼ୱାରି ବାରେ ଜୀହୁଦି ଲ଼କୁତି କୁଟମି ଇଲ୍କାଣା ମାହାପୂରୁ ବ଼ଲୁ ୱେ଼କ୍ହେସି ଇଞ୍ଜାଁ ବୂତୁୟାଁଣି ପିସ୍ପି କିତେସି ।
எனவே, இயேசு கலிலேயா முழுவதிலும் பயணம் செய்து, ஜெப ஆலயங்களில் நற்செய்தியை அறிவித்து, பிசாசுகளையும் துரத்தினார்.
40 ୪୦ ଏମ୍ବାଟିଏ ର଼ କାଜା ର଼ଗ ଗାଟାସି ଜୀସୁ ତା଼ଣା ୱା଼ହାନା ମେଣ୍ତାକୁତାନା ବାତିମା଼ଲିହିଁ ଜୀସୁଇଁ ଏଲେଇଚେସି, “ନୀନୁ ମ଼ନ କିତିହିଁ ନାଙ୍ଗେ ନେହିଁ କିହାଲି ଆ଼ଡାଦି ।”
குஷ்டவியாதி உள்ளவன் இயேசுவினிடத்தில் வந்து முழங்காற்படியிட்டு, நீர் விரும்பினால், “என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்று கெஞ்சி வேண்டிக்கொண்டான்.
41 ୪୧ ଏମ୍ବାଟିଏ ଜୀସୁ ଏ଼ୱାଣାଇଁ କାର୍ମା ମେସ୍ତେସି, ଇଞ୍ଜାଁ କେୟୁ ଦା଼ସାନା ଏ଼ୱାଣାଇଁ ଡୀଗାନା ଏଲେଇଚେସି, “ନା଼ନୁ ମ଼ନ କିହିମାଇଁ ନୀନୁ ନେହିଁଆ଼ମୁ ।”
இயேசு மனதுருகினவராய் தன் கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்றார்.
42 ୪୨ ଏ଼ ଦେବୁଣିଏ ଏ଼ୱାଣି ତା଼ଣାଟି କାଜା ର଼ଗ ଗୁଚାଆ଼ତେ, ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାସି ନେହିଁଆ଼ତେସି ।
உடனே குஷ்டவியாதி அவனைவிட்டு நீங்கியது, அவன் குணமடைந்தான்.
43 ୪୩ ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାସି ଏ଼ୱାଣାଇଁ ଜାଣ୍ତେ ହୁକୁମି ହୀହାନା ୱେସା ପାଣ୍ତିତେସି,
இயேசு அவனுக்கு ஒரு கண்டிப்பான எச்சரிப்பைக் கொடுத்து:
44 ୪୪ “ଜାଗ୍ରାତା ଆମ୍ବାଆରାଇଁ ଏ଼ନାଆଁ ୱେହ୍ଆନି, ସାମା ହାଲାମୁ ଇଞ୍ଜାଁ ପୂଜେରା ତା଼ଣା ହାଜାନା ନିଙ୍ଗ ତ଼ସାକଡାମୁ, ଇଞ୍ଜାଁ ମ଼ସା ଆମିନି ମେ଼ରା ହୀହାମାନେସି ଏ଼ଦାଆଁ ଲ଼କୁ ନ଼କିତା ନେହିଁ ଆ଼ତାକି ସା଼କି ହୀନିଲେହେଁ ହେର୍ପାମୁ ।”
“நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடி பார்த்துக்கொள். ஆனால், நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, உன்னுடைய சுத்திகரிப்புக்காக மோசே கட்டளையிட்ட பலிகளைச் செலுத்து. அது அவர்களுக்கு நீ சுகமடைந்ததற்கான ஒரு சாட்சியாய் இருக்கும்” என்று சொல்லி அவனை உடனே அனுப்பிவிட்டார்.
45 ୪୫ ସାମା ଏ଼ୱାସି ପାଙ୍ଗାତା ହାଜାନା ତା଼ନୁ ନେହିଁ ଆ଼ତି କାତାତି ସା଼ରିୱାକି ୱେ଼କ୍ହାଲି ମା଼ଟ୍ହେସି, ଇଞ୍ଜାଁ ଜୀସୁ ଆମିନି ଗା଼ଡ଼ାତା ପୁଣ୍ମ୍ବେ ହ଼ଡାଲି ଆ଼ଡାଆତେସି, ସାମା ପାଙ୍ଗାତା ଲ଼କୁ ହିଲାଆ ଟା଼ସ୍କାଣା ଡ଼ୟିତେସି; ଅ଼ଡ଼େ ସା଼ରି ୱାକିଟି ଲ଼କୁ ଜୀସୁ ତା଼ଣା ୱା଼ହାଲି ମା଼ଟ୍ହେରି ।
ஆனால் அவன் புறப்பட்டுப்போய் தாராளமாய் பேசத்தொடங்கி, தனக்கு நடந்த செய்தியை எங்கும் பரப்பினான். இதன் காரணமாக, இயேசுவினால் ஒரு பட்டணத்திற்குள்ளும் வெளிப்படையாக செல்லமுடியாமல், வெளியே தனிமையான இடங்களிலேயே தங்கினார். ஆனால் எல்லா இடங்களிலும் இருந்து மக்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.