< ଲୂକ 1 >
1 ୧ ମୂଲୁଟିଏ ଆମ୍ବାଆରି ତୀରେ ମେସ୍ତାରି ଇଞ୍ଜାଁ ବ଼ଲୁ ୱେ଼କ୍ନାରି, ଏ଼ୱାରି ମାଙ୍ଗେ ହେର୍ପା ମାଞ୍ଜାନି ଲେହେଁ,
மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, நமது மத்தியில் நிறைவேறிய நிகழ்வுகளின் விவரத்தை ஒழுங்காக எழுத, அநேகர் முன்வந்தார்கள்.
2 ୨ ମା଼ ବିତ୍ରା ଆ଼ହାମାନି କାମା ବାରେ ହା଼ରେକା ନେହିଁକିଁ ରା଼ଚାଲି ଜାଗ୍ରାତା ଆ଼ହାମାନେରି ।
துவக்கத்திலிருந்து கண்கண்ட சாட்சிகளாகவும், வார்த்தையை அறிவிக்கும் ஊழியர்களாகவும் இருந்த அவர்கள், எங்களுக்குக் கொடுக்கப்பட்டபடியே எழுதினார்கள்.
3 ୩ ଜୀୱୁତି ତିୟପିଲ, ମୂଲୁଟିଏ ବାରେ କାତା ନେହିଁକିଁ ସିନିକିହାନା ଏମ୍ବାଆଁ ଏ଼ନାୟି ମାନେ ଏ଼ଦାଆଁ ନିଙ୍ଗେତାକି ରା଼ଚାଲି ନା଼ନୁ ଜିକେଏ ନେହେଁ ଇଞ୍ଜିଁ ଅଣ୍ପିତେଏଁ ।
நானும் உமக்கு அவற்றை ஒழுங்காக எழுதுவதற்குத் தீர்மானித்தேன். துவக்கத்திலிருந்து நடந்த எல்லாவற்றையும் கவனமாய் விசாரித்தறிந்து, இதை எழுதுகிறேன்.
4 ୪ ଏ଼ନିକିଁ ନୀନୁ ଏ଼ ବାରେ କାତା ଜା଼ପାମାଞ୍ଜି, ଏ଼ଦି ସାତା ଇଞ୍ଜିଁ ପୁଞ୍ଜାଲି ଆ଼ଡିଦି ।
இதனால் உமக்குப் போதிக்கப்பட்ட விஷயங்கள் நிச்சயமாக உண்மையானவை என்பதை நீர் அறிந்துகொள்ளலாம்.
5 ୫ ଜୀହୁଦା ଦେ଼ସାତି ରାଜା ହେରଦ ବେ଼ଲାତା ଅବିୟ କୂଡ଼ାତି ଜିକରିୟ ଦ଼ରୁଗାଟି ର଼ ପୂଜେରା ମାଚେସି; ତାନି ଡକ୍ରି ହାରଣ କୂଡ଼ାତି ମା଼ଙ୍ଗା, ଏ଼ଦାନି ଦ଼ରୁ ଏଲିସାବେତ ।
ஏரோது அரசன் யூதேயாவை ஆட்சி செய்த காலத்தில், சகரியா என்னும் பெயருடைய ஒரு ஆசாரியன் இருந்தான். இவன் அபியாவின் ஆசாரியப் பிரிவைச் சேர்ந்தவன். இவனுடைய மனைவி எலிசபெத்தும், ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியைச் சேர்ந்தவள்.
6 ୬ ଜିକରିୟ ଅ଼ଡ଼େ ଏଲିସାବେତ ମାହାପୂରୁତି ହୁକୁମି ଇଞ୍ଜାଁ ମେ଼ରା ତଲେ ଦ଼ହ ହିଲାଆଗାଟାଇ ଆ଼ହାନା ମାହାପୂରୁ ନ଼କିତା ଦାର୍ମୁ ଗାଟାଇ ମାଚୁ ।
அவர்கள் இருவரும் இறைவனின் பார்வையில் நீதிமான்களாக இருந்தார்கள். மற்றவர்களால் குற்றஞ்சாட்டப்பட இடமில்லாமல், கர்த்தருடைய எல்லாக் கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் கைக்கொண்டார்கள்.
7 ୭ ସାମା ଏ଼ୱାରାକି କକାରି ପ଼ଦାୟାଁ ହିଲାଆତୁ, ଇଚିହିଁ ଏଲିସାବେତ ବା଼ଞ୍ଜେଣି ମାଚେ, ଅ଼ଡ଼େ ଡକ୍ରି ଡକ୍ରା ରିଆରି ଜିକେଏ ଗାଡି ବୁଡ଼୍ହି ବୁଡ଼୍ହା ଆ଼ହାମାଚେରି ।
ஆனாலும் எலிசபெத் மலடியாக இருந்ததினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; அவர்கள் இருவரும், இப்பொழுது வயது சென்றவர்களாய் இருந்தார்கள்.
8 ୮ ର଼ ଦିନା ଜିକରିୟ ତାମି ଗଚିତି ପା଼ଲି ଏଜାଲିଏ ମାହାପୂରୁ ନ଼କିତା ପୂଜେରା କାମା କିନି ବେ଼ଲାତା,
ஒருமுறை அபியாவின் பிரிவை சேர்ந்தவர்கள், ஆலயத்தில் பணிபுரிந்தபோது, சகரியாவும் இறைவனுக்கு முன்பாக ஆசாரியப் பணியைச் செய்தான்.
9 ୯ ପୂଜେରା କାମାତି ମେ଼ରା ତଲେ ଆ଼ଚ୍ୱି ଆ଼ହାନା ଏ଼ୱାଣାକି ମାହାପୂରୁ ଇଲୁତା ହ଼ଡାନା ଦୁପ୍ଣି ହୀହାଲି ଆ଼ତେ,
ஒரு நாள் ஆசாரியர்களின் வழக்கத்தின்படி கடமைகளைச் செய்வதற்கு சீட்டு போட்டபோது, கர்த்தருடைய ஆலயத்திற்குள் போய் தூபங்காட்டும் பணியைச் செய்வதற்கு சகரியா தெரிந்தெடுக்கப்பட்டான்.
10 ୧୦ ଇଞ୍ଜାଁ ଦୁପ୍ଣି ହୀନି ବେ଼ଲାତା ବାରେ ଲ଼କୁ ପାଙ୍ଗାତା ପ୍ରା଼ତାନା କିହିମାଚେରି ।
தூபங்காட்டும் வேளை வந்தபோது வழிபாட்டிற்கு கூடிவந்த மக்கள் வெளியே மன்றாடிக்கொண்டிருந்தார்கள்.
11 ୧୧ ଏଚିବେ଼ଲା ମାହାପୂରୁତି ର଼ ଦୂତୁ ଦୁପ୍ଣି ପିଣ୍ତା ଟିଃନିୱାକି ନିଚାନା ଏ଼ୱାଣାଇଁ ତ଼ଞ୍ଜାଆ଼ତେ ।
அப்பொழுது கர்த்தரின் தூதன் ஒருவன், தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று சகரியாவுக்குக் காட்சியளித்தான்.
12 ୧୨ ଜିକରିୟ ଏ଼ଦାଣି ମେସାନା କାବାଆ଼ହାନା ଆଜିତେସି ।
சகரியா அவனைக் கண்டு திடுக்கிட்டுப் பயந்தான்.
13 ୧୩ ସାମା ଦୂତୁ ଏ଼ୱାଣାଇଁ ଏଲେଇଚେ, “ଜିକରିୟ, ଆଜାଆନି, ଇଚିହିଁ ମୀ ଗ଼ହାରା ୱେଣ୍ମ୍ବି ଆ଼ହାମାନେ, ଇଞ୍ଜାଁ ନୀ ଡକ୍ରି ଏଲିସାବେତ ନିଙ୍ଗେତାକି ର଼ କକାଣାଇଁ ଜାର୍ନି କିନେ, ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାଣି ଦ଼ରୁ ଜହନ ଇଞ୍ଜିଁ ହୀଦେରି ।
அந்தத் தூதனோ அவனைப் பார்த்து: “சகரியாவே, பயப்படாதே; உனது மன்றாட்டு கேட்கப்பட்டது. உனது மனைவி எலிசபெத் உனக்கு ஒரு மகனைப் பெறுவாள், நீ அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும்.
14 ୧୪ ଇଚିହିଁ ଏ଼ୱାସି ମୀ ରା଼ହାଁତି ରା଼ହାଁ ଆ଼ନେସି, ଇଞ୍ଜାଁ ହା଼ରେକା ଏ଼ୱାଣି ଜାର୍ନାତା ରା଼ହାଁ କିନେରି ।
அவன் உனக்கு மகிழ்ச்சியும் மனக்களிப்புமாய் இருப்பான். அவனுடைய பிறப்பின் நிமித்தம், அநேகர் பெருமகிழ்ச்சியடைவார்கள்;
15 ୧୫ ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାସି ମାହାପୂରୁ ନ଼କିତା କାଜାସି ଆ଼ନେସି; ଏ଼ୱାସି ଅଙ୍ଗୁରି ରାସା କି କା଼ଡ଼ୁ ଏଚେଲାୱା ଗହ୍ଅସି, ଇଞ୍ଜାଁ ତାଲିନି ବାଣ୍ତିଟିଏ ସୁଦୁଜୀୱୁତା ବେଟାଆ଼ନେସି,
அவன் கர்த்தருடைய பார்வையில் பெரியவனாயிருப்பான். அவன் ஒருபோதும் திராட்சை இரசத்தையோ, மதுபானத்தையோ அருந்த மாட்டான், அவன் தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவான்.
16 ୧୬ ଏ଼ୱାସି ଇସ୍ରାୟେଲ ମୀର୍କା ବିତ୍ରାଟି ହା଼ରେକା ଲ଼କୁଇଁ ମାହାପୂରୁ ୱାକି ୱେଟ୍ହା ତାନେସି ।
அவன் இஸ்ரயேல் மக்களில் பலரை அவர்களுடைய இறைவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பவும் கொண்டுவருவான்.
17 ୧୭ ତାଞ୍ଜିୟାଁ ହିୟାଁ ମୀର୍କା ୱାକି ଇଞ୍ଜାଁ କାତା ମା଼ନୱି ଆ଼ଆଗାଟାରାଇଁ ତୀରିଗାଟି ବୁଦିତା ତା଼କାଲି ୱେଟ୍ହା ତାଚାଲି ଇଞ୍ଜାଁ ମାହାପୂରୁ ତାକି ତିୟାରା ଆ଼ହାମାନି ର଼ ଲ଼କୁତି କୁଲମି ଜାଗ୍ରାତା କିହାଲି ବାପ୍ତିସ୍ମ ହୀନି ଜହନ ଏଲିୟତି ଜୀୱୁ ଅ଼ଡ଼େ ବା଼ଡ଼୍ୟୁ ତଲେ ପ୍ରବୁତି ନ଼କିତା ତା଼କିନେସି ।”
அவன் எலியாவின் ஆவியோடும் வல்லமையோடும் கர்த்தருக்கு முன்பாகப் போவான்; தந்தையரின் இருதயத்தைப் பிள்ளைகள் பக்கமாகத் திருப்புவான், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்குத் திருப்புவான். இவ்விதமாய் கர்த்தருக்காக முன்னேற்பாடு செய்திருக்கிற மக்களை அவன் ஆயத்தம் செய்வான்” என்றான்.
18 ୧୮ ଏଚେଟିଏ ଜିକରିୟ ଦୂତୁଇଁ ଏଲେଇଚେସି, “ନା଼ନୁ ଆମିନି ସିନା ତଲେ ପୁଇଁ? ଇଚିହିଁ ନା଼ନୁ ବୁଡ଼୍ହାତେଏଁ, ଇଞ୍ଜାଁ ନା଼ ଡକ୍ରିନି ବାର୍ସା ଗାଡି ଆ଼ତେୟିଏ ।”
அப்பொழுது சகரியா அந்தத் தூதனிடம், “இது நடக்கும் என்று நான் எப்படி நம்பலாம்? நான் கிழவனாய் இருக்கிறேன், என் மனைவியும் வயது சென்றவளாய் இருக்கிறாளே” என்றான்.
19 ୧୯ ଦୂତୁ ଏ଼ୱାଣାଇଁ ଏଲେଇଚେ, “ନା଼ନୁ ଗାବ୍ରିୟେଲ, ନା଼ନୁ ମାହାପୂରୁ ନ଼କିତା ନିଚା ଡ଼ୟିନାତେଏଁ, ଇଞ୍ଜାଁ ନିଙ୍ଗେ ୱେସାଲି ଅ଼ଡ଼େ ଈ ନେହିଁ କାବ୍ରୁ ପୁଣ୍ମ୍ବି କିହାଲି ନା଼ନୁ ପାଣ୍ତ୍ୱି ଆ଼ହାମାଇଁ ।
அதற்கு அந்தத் தூதன், “நான் இறைவனின் சமுகத்தில் நிற்கின்ற காபிரியேல்; உன்னுடன் பேசுவதற்காகவும், இந்த நற்செய்தியை உனக்கு அறிவிப்பதற்காகவும் நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்.
20 ୨୦ ମେହ୍ମୁ ଈ ବାରେ ଆ଼ଆପାତେକା ନୀନୁ ବେବ୍ଡ଼ା ଆ଼ହାନା ଡ଼ୟିଦି, ଇଚିହିଁ ନା଼ ଆମିନି କାତା ସାତା ଆ଼ନେ ଏ଼ ବାରେ ନୀନୁ ନାମାଆତି ।”
நீயோ எனது வார்த்தைகளை நம்பவில்லை, ஆதலால் இவை நிகழும் நாள்வரைக்கும் நீ பேச முடியாமல் ஊமையாயிருப்பாய்; நான் சொன்னவையோ நியமித்த காலத்தில் நிறைவேறும்” என்றான்.
21 ୨୧ ଏମ୍ବାଟିଏ ଲ଼କୁ ଜିକରିୟଇଁ କା଼ଚିମାଚେରି, ଇଞ୍ଜାଁ ମାହାପୂରୁ ଇଲୁତା ଇଚେକା ୱେ଼ଡ଼ା ଆ଼ତାକି କାବା ଆ଼ହିମାଚେରି ।
அதேவேளையில், சகரியாவின் வருகைக்காக வெளியே காத்துக்கொண்டிருந்த மக்கள், அவன் ஏன் ஆலயத்தில் நீண்ட நேரமாய் இருக்கிறான் என யோசிக்கத் தொடங்கினார்கள்.
22 ୨୨ ସାମା ଏ଼ୱାସି ପାଙ୍ଗାତା ୱା଼ହାନା ଏ଼ୱାରାଇଁ କାତା ଆ଼ହାଲି ଆ଼ଡାଆତେସି; ଏମ୍ବାଟିଏ ଏ଼ୱାସି ମାହାପୂରୁ ଇଲୁତା ଏ଼ନାଆଁ ମେସାମାନେସି ଇଞ୍ଜିଁ ଏ଼ୱାରି ପୁଚେରି, ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାସି ଏ଼ୱାରାଇଁ କେୟୁ ହୂଟିହିଁ ତ଼ସାଲି ମା଼ଟ୍ହେସି ଇଞ୍ଜାଁ ବେବ୍ଡ଼ା ଆ଼ହାନା ଡ଼ୟିତେସି ।
அவன் வெளியே வந்தபோது, அவர்களோடு பேச அவனால் முடியவில்லை. அவன் அவர்களுக்கு சைகை காட்டியதால், அவன் ஆலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டிருக்கிறான் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் அவன் பேசமுடியாதவனாகவே இருந்தான்.
23 ୨୩ ଡା଼ୟୁ ମାହାପୂରୁ ଇଲୁତି ସେ଼ବା କାମା ରାୟାଲିଏ, ଏ଼ୱାସି ତାମି ଇଜ ହାଚେସି ।
அவனது பணிசெய்யும் காலம் முடிவடைந்தபோது, அவன் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.
24 ୨୪ ଏଚରଦିନା ହାଚି ଡା଼ୟୁ ତାନି ଡକ୍ରି ଏଲିସାବେତ ପୂରାମା଼ସା ଆ଼ତେ ଅ଼ଡ଼େ ଏ଼ଦି ପା଼ସା ଲେ଼ଞ୍ଜୁ ପାତେକା ଲ଼କୁଣି ତ଼ଞ୍ଜା ଆ଼ଆତେ ।
இந்த நாட்களுக்குப்பின் அவன் மனைவி எலிசபெத் கருத்தரித்தாள், அவள் ஐந்து மாதங்களாக பிறர் கண்களில் படாதிருந்தாள்.
25 ୨୫ ଏ଼ଦି ଏଲେଇଚେ, “ନୀଏଁ ନାଙ୍ଗେ ପ୍ରବୁ କାର୍ମାମେସାନା ଲ଼କୁ ନାଙ୍ଗେ ଲାଜା କିହିମାଞ୍ଜାତାଣି ପିସ୍ପି କିହାଲି ନାଙ୍ଗେ ଇଲେକିଁ କିହାମାଞ୍ଜାନେସି!”
அப்பொழுது அவள், “கர்த்தரே இதைச் செய்தார், இந்த நாட்களில் அவர் எனக்குத் தயவுகாட்டி, என் மக்களிடையே எனக்கிருந்த அவமானத்தை நீக்கிவிட்டார்” என்றாள்.
26 ୨୬ ଏଲିସାବେତ ପୂରାମା଼ସା ଆ଼ହାନା ସ଼ ଲେ଼ଞ୍ଜୁ ଆ଼ହାଲିଏ ଗାବ୍ରିୟେଲ ଦୂତୁ ମାହାପୂରୁ ତା଼ଣାଟି ଗାଲିଲିତି ନା଼ଜରିତ ଗା଼ଡ଼ାତି ର଼ ଡ଼ାଆ ପ଼ଦାନି ତା଼ଣା ପାଣ୍ତ୍ୱିଆ଼ତେ;
ஆறாம் மாதத்தில், கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் ஒரு பட்டணத்திற்கு இறைவன் காபிரியேல் தூதனை,
27 ୨୭ ଏ଼ ଡ଼ାଆ ପ଼ଦାନି ଦାୱୁଦ କୂଡ଼ାତି ଜସେପ ଇନାଣାକି ରୀସା ମାଚେରି; ଏ଼ ଡ଼ାଆ ପ଼ଦା ଦ଼ରୁ ମରିୟମ ।
ஒரு கன்னிகையிடம் அனுப்பினார்; அவள் தாவீதின் சந்ததியானாகிய யோசேப்பு என்னும் பெயருள்ள ஒருவனுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அந்தக் கன்னிகையின் பெயர் மரியாள்.
28 ୨୮ ଦୂତୁ ପ଼ଦା ତା଼ଣା ୱା଼ହାନା ଏଲେଇଚେ, “ଆଲ ମାହାପୂରୁତି କାର୍ମା ମେହ୍ନାତି ନିଙ୍ଗେ ହିତ୍ଡ଼ି ଆୟାପେ!”
கர்த்தருடைய தூதன் அவளிடம் போய், “மிகவும் தயவு பெற்றவளே வாழ்க! கர்த்தர் உன்னுடன் இருக்கிறார்” என்றான்.
29 ୨୯ ମରିୟମ ଏ଼ ହା଼ଡା ୱେଞ୍ଜାନା ଈଦି ଏ଼ନିଲେହେଁତି କାତା ଇଞ୍ଜିଁ ଆଜାନା ମ଼ନତା ଅଣ୍ପିତେ ।
தூதன் சொன்ன வார்த்தையைக் கேட்ட மரியாள் மிகவும் கலக்கமடைந்து, இந்த வாழ்த்துதல் எத்தகையதோ என்று யோசிக்கத் தொடங்கினாள்.
30 ୩୦ ଏମ୍ବାଟିଏ ଦୂତୁ ଏଲେଇଚେ, “ଆଲ ମରିୟମ ଆଜାଆନି; ନିଙ୍ଗେ ମାହାପୂରୁ କାର୍ମା ମେସାମାଞ୍ଜାନେସି ।
ஆனால் அந்தத் தூதன் அவளிடம், “மரியாளே, பயப்படாதே! நீ இறைவனிடத்தில் தயவு பெற்றிருக்கிறாய்.
31 ୩୧ ନୀନୁ ପୂରାମା଼ସା ଆ଼ହାନା ର଼ ମୀର୍ଏଣାଇଁ ବେଟାଆ଼ଦି ଏ଼ୱାଣି ଦ଼ରୁ ଜୀସୁ ଇଞ୍ଜିଁ ଇଟିଦେରି ।
நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும்.
32 ୩୨ ଏ଼ୱାସି କାଜାସି ଆ଼ନେସି ଇଞ୍ଜାଁ ମାହାପୂରୁ ମୀର୍ଏସି ଇଞ୍ଜିଁ ୱେ଼ଙ୍ଗିନେସି; ପ୍ରବୁ ମାହାପୂରୁ ଏ଼ୱାଣାକି ତାମି ଆକୁ ଦାୱୁଦତି ସିଂଗାସାଣି ହୀନେସି,
அவர் பெரியவராயிருப்பார், மகா உன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை இறைவனாகிய கர்த்தர் அவருக்குக் கொடுப்பார்.
33 ୩୩ ଏ଼ୱାସି ଜାକୁବ କୂଡ଼ାତା ଜୁଗୁ ଜୁଗୁତାକି ରା଼ଜି କିନେସି, ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାଣି ରା଼ଜି ଏଚେଲାୱା ରା଼ଏ!” (aiōn )
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவுபெறாது” என்றான். (aiōn )
34 ୩୪ ସାମା ମରିୟମ ଦୂତୁଇଁ ଏଲେଇଚେ, “ଈଦି ଏ଼ନିକିଁ ଆ଼ନେ? ନା଼ନୁ ଡକ୍ରାଇଁ ଜିକେଏ ପୁଞ୍ଜାହିଲଅଁ ।”
அப்பொழுது மரியாள் அந்தத் தூதனிடம், “இது எப்படியாகும், நான் கன்னியாய் இருக்கிறேனே?” என்றாள்.
35 ୩୫ ଦୂତୁ ଏଲେଇଚେ, “ସୁଦୁଜୀୱୁ ନୀ ଲାକ ରେ଼ଚାୱା଼ନେ ଅ଼ଡ଼େ ମାହାପୂରୁତି ବା଼ଡ଼୍ୟୁ ୱା଼ନେ, ଏ଼ଦାଆଁତାକି ନୀ ତା଼ଣାଟି ଜାର୍ନା ଆ଼ନେସି, ଏ଼ୱାସି ମାହାପୂରୁତି ମୀର୍ଏସି ଇଞ୍ଜିଁ ୱେ଼ଙ୍ଗିନେସି ।
அதற்கு தூதன், “பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார், மகா உன்னதமானவரின் வல்லமை உன்மேல் நிழலிடும். எனவே பிறக்கும் பரிசுத்த குழந்தை இறைவனின் மகன் என அழைக்கப்படுவார்.
36 ୩୬ ଅ଼ଡ଼େ ମେହ୍ମୁ ନୀ କୂଡ଼ାତି ଏଲିସାବେତ ଜିକେଏ ବୁଡ଼୍ହି ବେ଼ଲାତା ପୂରାମା଼ସା ଆ଼ହାମାନେ । ଆମିନି ଇୟା ବା଼ଞ୍ଜେଣି ଇଞ୍ଜିଁ ୱେ଼ଙ୍ଗାମାନେ, ଏ଼ଦି ନୀଏଁ ସ଼ ଲେ଼ଞ୍ଜୁ ଆ଼ହାମାନେ;
உனது உறவினராகிய எலிசபெத்தும் தனது முதிர்வயதில் ஒரு குழந்தையைப் பெற இருக்கிறாள். மலடி எனப்பட்டவள் இப்பொழுது கருத்தரித்து ஆறு மாதங்களாகின்றன.
37 ୩୭ ଇଚିହିଁ ମାହାପୂରୁତି ବ଼ଲୁ ବା଼ଡ଼୍ୟୁ ହିଲାଆଗାଟାୟି ଆ଼ଏ ।”
இறைவனால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை” என்றான்.
38 ୩୮ ଏମ୍ବାଟିଏ ମରିୟମ ଏଲେଇଚେ, “ନା଼ନୁତ ପ୍ରବୁତି ହ଼ଲେଣିତେଏଁ; ନୀ କାତେଏ ନାଙ୍ଗେତାକି ଆୟାପେ ।” ଏମ୍ବାଟିଏ ଦୂତୁ ଏ଼ଦାନି ତା଼ଣାଟିଏ ହାଚେ ।
அதற்கு மரியாள், “இதோ நான் கர்த்தரின் அடிமை; நீர் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அவளைவிட்டுப் போனான்.
39 ୩୯ ଏମ୍ବାଟିଏ ମରିୟମ ନିଙ୍ଗାନା ଜୀହୁଦା ଦେ଼ସାତି ହ଼ର୍କା ରା଼ଜିତି ର଼ ଗା଼ଡ଼ାତା ତବେ ହାଚେ,
அந்நாட்களில் மரியாள் புறப்பட்டு யூதேயாவின் மலைநாட்டிலுள்ள ஒரு பட்டணத்திற்கு விரைவாகப் போனாள்;
40 ୪୦ ଅ଼ଡ଼େ ଜିକରିୟ ଇଜ ହାଜାନା ଏଲିସାବେତନି ଜହରା କିତେ ।
அங்கே அவள் சகரியாவின் வீட்டிற்குள் போய், எலிசபெத்தை வாழ்த்தினாள்.
41 ୪୧ ଅ଼ଡ଼େ ଏଲିସାବେତ ମରିୟମନି ଜହରା ୱେଣ୍ମ୍ବନିଏ ତାନି ବାଣ୍ତିତି ମୀଲା ୱୀଡିତେ, ଇଞ୍ଜାଁ ଏଲିସାବେତ ସୁଦୁଜୀୱୁଟି,
மரியாளுடைய வாழ்த்துதலை எலிசபெத் கேட்டபோது, அவளுடைய கருப்பையில் இருந்த குழந்தை துள்ளியது. அப்பொழுது எலிசபெத் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு,
42 ୪୨ କାଜା ଗିୟାଁତଲେ ଏଲେଇଚେ, “ଇୟାସିକା ବିତ୍ରାଟି ନୀନୁ ହା଼ରେକା ନେହାଁତି, ଇଞ୍ଜାଁ ନୀ ବାଣ୍ତିତି ମୀଲା ଜିକେଏ ନେହାୟି!
உரத்த குரலில் சொன்னதாவது: “நீ பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள். நீ பெற்றெடுக்கப்போகும் பிள்ளையும் ஆசீர்வதிக்கப்பட்டது!
43 ୪୩ ଅ଼ଡ଼େ ନା଼ ପ୍ରବୁତି ଇୟା ନା଼ ତା଼ଣା ୱା଼ନେ ଈ କାର୍ମା ନାଙ୍ଗେ ଏମ୍ବିଟି ୱା଼ତେ?
என் கர்த்தரின் தாய் என்னிடம் வருவதற்கு, நான் இவ்வளவாய் தயவுபெற்றேன்.
44 ୪୪ ଇଚିହିଁ ନୀ ଜହରା ହା଼ଡା ନା଼ କିର୍ୟୁଁ ୱେଣ୍ମ୍ବନିଏ ନା଼ ବାଣ୍ତିତି ମୀଲା ରା଼ହାଁଟି ୱୀଡିତେ
உனது வாழ்த்துதலின் சத்தம் எனது காதில்பட்டதுமே, எனது கருப்பையில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியினால் துள்ளிற்று.
45 ୪୫ ଆମିନି ଗାଟାୟି ନାମିତେ ଏ଼ଦାନାକି ନେହେଁ, ଇଚିହିଁ ପ୍ରବୁ ତା଼ଣାଟି ଏ଼ଦାନାକି ଏ଼ନାଆଁ ୱେସ୍ପି ଆ଼ହାମାନେ ଏ଼ ବାରେ ପୂରା ଆ଼ନେ!”
கர்த்தர் தனக்குச் சொன்னது நிறைவேறும் என்று விசுவாசித்தவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே!” என்றாள்.
46 ୪୬ ଏଚେଟିଏ ମରିୟମ ଏଲେଇଚେ, “ନା଼ ଜୀୱୁ ପ୍ରବୁତି ଜହରା କିହିମାନେ;
அப்பொழுது மரியாள் சொன்னதாவது: “என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது,
47 ୪୭ ଅ଼ଡ଼େ ନା଼ ଜୀୱୁ ନାଙ୍ଗେ ଗେଲ୍ପାନି ମାହାପୂରୁ ତା଼ଣା ରା଼ହାଁ ଆ଼ହିମାନେ,
என் ஆவி என் இரட்சகராகிய இறைவனில் பெருமகிழ்ச்சியடைகிறது.
48 ୪୮ ଇଚିହିଁ ଏ଼ୱାସି ତାନି ହ଼ଲେଣିନି କାର୍ମା କା଼କୁଲି ମେସାମାନେସି । ଏ଼ନିଇଚିହିଁ ନୀଞ୍ଜୁଟିଏ ବାରେ ଲ଼କୁ ନାଙ୍ଗେ ନେହାୟି ଇଞ୍ଜିଁ ଜ଼ଲାନେରି,
ஏனெனில், அவர் தமது அடிமையின் தாழ்மை நிலையைத் தயவுடன் பார்த்தார். இப்பொழுதிலிருந்து எல்லாத் தலைமுறையினரும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று அழைப்பார்கள்;
49 ୪୯ ଇଚିହିଁ ଆମ୍ବାଆସି ବାରେକିହାଁ ବାଡ଼୍ୟୁଗାଟି ମାହାପୂରୁ ଏ଼ୱାସି ନା଼ ତାକି କାଜା କାମା କିହାମାନେସି, ଏ଼ୱାଣି ଦ଼ରୁ ସୁଦୁ;
வல்லமையுள்ளவர் எனக்கு அரும்பெரும் காரியங்களைச் செய்தார்; பரிசுத்தர் என்பது அவருடைய பெயர்.
50 ୫୦ ଇଞ୍ଜାଁ ତାଙ୍ଗେ ଆଜିନାରାକି ପା଼ଟୁ ପା଼ଟୁ ତାକି ତାନି କାର୍ମାମେହ୍ନାୟି ଡ଼ୟିନେ ।
அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு, தலைமுறை தலைமுறையாக அவர் இரக்கம் காண்பிக்கிறார்.
51 ୫୧ ଏ଼ୱାସି ତାନି ବାଡ଼୍ୟୁଗାଟି କେୟୁଟି କାଜା କାମା କିହାମାନେସି, ଡା଼ହାରା ଗାଟାରାଇଁ ଏ଼ୱାରି ହିୟାଁତି ଅଣ୍ପୁତା ମାନାଣି ଗୁଚି କିହାମାନେସି;
அவர் தமது புயத்தினால் வல்லமையான செயல்களை நிறைவேற்றினார்; தங்களுடைய உள்ளத்தில் அகந்தையான நினைவு கொண்டவர்களை அவர் சிதறடித்தார்.
52 ୫୨ ଏ଼ୱାସି ସା଼ଲୱି କିନାରାଇଁ ତାମି ରାଜା ଗାଦି ପିସ୍ପି କିହାମାନେସି, କା଼କୁଲି ଗାଟାରାଇଁ ନିକ୍ହାମାନେସି,
ஆளுநர்களை அவர்களுடைய அரியணைகளில் இருந்து கீழே வீழ்த்தினார். ஆனால், தாழ்மையானவர்களையோ அவர் உயர்த்தினார்.
53 ୫୩ ଏ଼ୱାସି ହାକି ଗାଟାରାଇଁ ନେହିଁ ଆ଼ସ୍ତି ହୀହାନା ପାଞ୍ଜି କିହାମାନେସି, ଇଞ୍ଜାଁ ଦ଼ନ ଗାଟାରାଇଁ ୱାର୍ଇ କେୟୁଟି ପାଣ୍ତାମାନେସି ।
அவர் பசியாய் இருந்தவர்களை நன்மைகளால் நிரப்பினார். ஆனால் செல்வந்தர்களையோ வெறுமையாய் அனுப்பினார்.
54 ୫୪ କା଼ଲାକା଼ଲା ତାକି ଅଣ୍ପାଲି ତାନି ହ଼ଲେଏସି ଇସ୍ରାୟେଲତି କାର୍ମା ଆ଼ହାମାନେସି ।
அவர் தமது வேலைக்காரனாகிய இஸ்ரயேலுக்கு உதவி செய்தார்.
55 ୫୫ କା଼ଲାକା଼ଲା ତାକି ଅବ୍ରାହାମ ଅ଼ଡ଼େ ତାନି ବାରେ କୂଡ଼ାତାରାଇଁ କାର୍ମାମେହ୍ନାଣି ବା଼ଣା ଆ଼ହାହିଲଅସି ।” (aiōn )
நம்முடைய தந்தையர்களுக்கு அவர் வாக்களித்தபடியே, ஆபிரகாமுக்கும் அவனுடைய தலைமுறையினருக்கும் என்றென்றுமுள்ள இரக்கத்தை அவர் நினைத்தபடியே செய்திருக்கிறார்” என்று பாடினாள். (aiōn )
56 ୫୬ ଅ଼ଡ଼େ ମରିୟମ ତୀନି ଲେ଼ଞ୍ଜୁ ଏଲିସାବେତ ତଲେ ଡ଼ୟାନା ତାମି ଇଜ ୱା଼ତେ ।
மரியாள் எலிசபெத்துடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, அதற்குப் பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப் போனாள்.
57 ୫୭ ଡା଼ୟୁ ଏଲିସାବେତ ପୂରାମା଼ସା ଏଜାଲିଏ ର଼ କକାସି ଜାର୍ନା ଆ଼ତେସି,
எலிசபெத்திற்குப் பிள்ளைபெறும் காலம் வந்தபோது, அவள் ஒரு மகனைப் பெற்றாள்.
58 ୫୮ ଅ଼ଡ଼େ ମାହାପୂରୁ ଏ଼ଦାନି ହା଼ରେକା କାର୍ମା ମେସାମାନାଣି ୱେଞ୍ଜାନା ତାମି କୂଡ଼ାତାରି ଇଞ୍ଜାଁ ଅ଼ଡ଼େ ଆଟ୍ହିତାରି ଏ଼ଦାନିତଲେ ହା଼ରେକା ରା଼ହାଁ କିତେରି ।
அவளுடைய அயலவர்களும் உறவினர்களும் கர்த்தர் அவளுக்குப் பெரிதான இரக்கம் காண்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, அவளுடன்கூட மகிழ்ச்சி அடைந்தார்கள்.
59 ୫୯ କକାସି ୱା଼ରେକା ଆ଼ହାଲିଏ, ଏ଼ୱାରି ତ଼ଲୁ ଦା଼ଚାଲି ୱା଼ହାନା ତାମି ଆ଼ବା ଦ଼ରୁଲେହେଁ ତାନି ଦ଼ରୁ ଜିକରିୟ ଇଟାଲି ମ଼ନ କିତେରି ।
அவர்களுடைய அயலவர்களும் உறவினர்களும் எட்டாம் நாளில் அந்தப் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்யும்படி வந்து சேர்ந்தார்கள். அவர்கள் குழந்தைக்கு அவனுடைய தகப்பனின் பெயரின்படியே சகரியா என்று பெயரிட நினைத்தார்கள்.
60 ୬୦ ସାମା ତାମି ଇୟା ଏଲେଇଚେ, “ଆ଼ଏ! ଏ଼ୱାଣି ଦ଼ରୁ ଜହନ ଆ଼ନେ ।”
ஆனால் குழந்தையின் தாயோ, “இல்லை! அவன் யோவான் என்றே அழைக்கப்பட வேண்டும்” என்று சொன்னாள்.
61 ୬୧ ଏ଼ୱାରି ଏଲେଇଚେରି, “ମୀ କୂଡ଼ାତା ଆମ୍ବାଆରାକି ଏଲେତି ଦ଼ରୁ ହିଲେଏ!”
அதற்கு அவர்கள் அவளிடம், “உனது உறவினரில் அந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்றார்கள்.
62 ୬୨ ଏମ୍ବାଟିଏ ଏ଼ୱାରି ତାଞ୍ଜିଗାଟାଣାଇଁ କେୟୁ ହୂଟାନା କକାଣାଇଁ ଏ଼ନି ଦ଼ରୁ ଇଟିନାୟି ଇଞ୍ଜିଁ ୱେଚେରି ।
அப்பொழுது அவர்கள் பிள்ளையின் தகப்பன் என்ன பெயரிட விரும்புகிறான் என்று அறிவதற்கு, அவனிடம் சைகை மூலம் கேட்டார்கள்.
63 ୬୩ ଜିକରିୟ ର଼ ରା଼ଚିନି ପା଼ଟା ରୀସାନା ଏ଼ୱାଣି ଦ଼ରୁ ଜହନ ଇଞ୍ଜିଁ ରା଼ଚିତେସି, ଏ଼ଦାଆଁ ମେସାନା ବାରେଜା଼ଣା କାବା ଆ଼ତେରି!
அவன் ஒரு கற்பலகையைக் கேட்டுவாங்கி, அவர்கள் எல்லோரும் வியப்படையத்தக்கதாக, “இவனுடைய பெயர் யோவான்” என்று எழுதினான்.
64 ୬୪ ଅ଼ଡ଼େ ଏ଼ ଦେବୁଣିଏ ଏ଼ୱାଣି ଗୂତି ଅ଼ଡ଼େ ୱେନ୍ଦରି ପିସ୍ପି ଆ଼ତେ ଅ଼ଡ଼େ ଏ଼ୱାସି ଜ଼ଲିହିଁ ମାହାପୂରୁତି ଜହରା କିତେସି ।
உடனே அவனது வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவு கட்டவிழ்ந்தது. அவன் இறைவனைப் புகழ்ந்து பேசத் தொடங்கினான்.
65 ୬୫ ଏମ୍ବାଟିଏ ତାମି ଲ଼କୁ ବାରେ ଆଜାହାଚେରି, ଅ଼ଡ଼େ ଈ କାତା ଜୀହୁଦା ଦେ଼ସାତି ହ଼ର୍କା ରା଼ଜିତା ବାରେୱାକି ୱେ଼ଙ୍ଗିତେ,
அயலவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்தக் காரியங்களைக்குறித்து, யூதேயாவின் மலைநாடு எங்கும் மக்கள் பேசிக்கொண்டார்கள்.
66 ୬୬ ଇଞ୍ଜାଁ ୱେନି ବାରେ ଲ଼କୁ ଏ଼ କାତା ତାମି ମ଼ନତା ଇଟାନା ଏଲେଇଚେରି, “ଆତିହିଁ ଈ କକାସି ଏ଼ନିଲେହେଁତାସି ଆ଼ନେସି?” ଏ଼ନିଇଚିହିଁ ପ୍ରବୁ ଈୱାଣି ତଲେ ମାନେସି ଇଞ୍ଜିଁ ପୁଚେରି ।
இதைக் கேள்விப்பட்ட எல்லோரும் வியப்படைந்து, “இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாய் இருக்குமோ?” என்றார்கள் கர்த்தருடைய கரம் அந்த பிள்ளையோடு இருந்தது.
67 ୬୭ ଅ଼ଡ଼େ ଜିକରିୟ ସୁଦୁଜୀୱୁ ତଲେ ଈ ଡା଼ୟୁ ଆ଼ନି କାତା ଏଲେଇଚେସି,
அந்தப் பிள்ளையின் தகப்பனான சகரியா பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு இறைவாக்கு உரைத்ததாவது:
68 ୬୮ ଇସ୍ରାୟେଲତି ମାହାପୂରୁ ଜହରା! ଏ଼ନିଇଚିହିଁ ଏ଼ୱାସି ତାନି ଲ଼କୁଣି କାର୍ମାମେସାନା ଗେଲ୍ପି କିହାମାନେସି;
“இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தருக்குத் துதி உண்டாவதாக, அவர் வந்து தம்முடைய மக்களை மீட்டுக்கொண்டார்.
69 ୬୯ ଏ଼ୱାସି ତାନି ହ଼ଲେଏସି ଦାୱୁଦ କୂଡ଼ାଟି ମା଼ ତାକି ର଼ ଗେଲ୍ପିନାଣାଇଁ ହୀହାମାଞ୍ଜାନେସି ।
அவர் தமது தாசனாகிய தாவீதின் வம்சத்திலிருந்து, நாம் இரட்சிப்பு அடைவதற்கான இரட்சணியக்கொம்பை எழுப்பியிருக்கிறார்.
70 ୭୦ ତଲି କା଼ଲାଟିଏ ତାନି ନେହିଁ ମାହାପୂରୁ ଅଣ୍ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍ନାରି ଗୂତି ତଲେ ଏ଼ନିକିଁ ଜ଼ଲା ମାଚେରି, (aiōn )
அவர் தம்முடைய பரிசுத்த இறைவாக்கினர் மூலமாய், நெடுங்காலத்திற்கு முன்பே சொல்லியிருந்தார். (aiōn )
71 ୭୧ ଏଲେକିହିଁଏ ମାଙ୍ଗେ ମା଼ ସାତ୍ରୁୟାଁ ତା଼ଣାଟି ଅ଼ଡ଼େ ମାଙ୍ଗେ ଅ଼ପାଆଗାଟାରି ତା଼ଣାଟି ଗେଲ୍ପି କିହାମାଞ୍ଜାନେସି,
நம்முடைய பகைவரிடமிருந்தும், நம்மை வெறுக்கும் எல்லோருடைய கைகளிலிருந்தும் நமக்கு விடுதலையை ஏற்படுத்துவேன் என்றும்,
72 ୭୨ ଏ଼ୱାସି ଏଲେ ଇଞ୍ଜାମାନେସି, ଏ଼ୱାସି ମା଼ ଆକୁୟାଁଣି କାର୍ମା ମେସାମାଇଁ ଅ଼ଡ଼େ ତାନି ସୁଦୁଗାଟି ରା଼ଜିମା଼ନାତି ଅଣ୍ପିନେସି ।
அவருடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, நம்முடைய தந்தையருக்கு இரக்கம் காண்பிப்பேன் என்றும் சொல்லியிருந்தார்.
73 ୭୩ ମା଼ ଆ଼ବା ଅବ୍ରାହାମ ତା଼ଣା ଏନିମି ପାର୍ମାଣା କିହାଁ ଆ଼ଞ୍ଜାମାନାଣି ଅଣ୍ପାନା ପୂରା କିହାମାନେସି,
அவர் நமது தந்தையான ஆபிரகாமுக்கு ஆணையிட்டு:
74 ୭୪ ଅ଼ଡ଼େ ମା଼ ସାତ୍ରୁୟାଁ ତା଼ଣାଟି ଗେଲ୍ପି ଆ଼ହାନା, ଆଜାଆନା କା଼ଲେଏ ତାଙ୍ଗେ ସେ଼ବା କିହାଲି ଆ଼ଡିନାୟି,
நம்முடைய பகைவருடைய கையினின்று நம்மைத் தப்புவித்து, நமது நாட்களெல்லாம் பயமின்றிப் பணிசெய்யும்படி,
75 ୭୫ ତାନି ନ଼କିତା ମା଼ର ନୀଡାମାନି ପାତେକା ସୁଦୁ ଅ଼ଡ଼େ ଦାର୍ମୁ ଗାଟାତାୟି ଆ଼ହାନା ଡ଼ୟିନାୟି ।
பரிசுத்தத்திலும் நீதியிலும் அவருக்கு முன்பாக என்றும் வாக்குக் கொடுத்திருந்தார்.
76 ୭୬ ଏ଼ ନା଼ ମୀର୍ଏଣାତି ନୀନୁ ବାରେତି କିହାଁ ବା଼ଡ଼୍ୟୁଗାଟି ମାହାପୂରୁ ଅଣ୍ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍ନାତି ଇଞ୍ଜିଁ ୱେ଼ଙ୍ଗିଦି;
“என் பிள்ளையே, நீயோ, உன்னதமானவருடைய இறைவாக்கினன் என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணும்படி, அவருக்கு முன்பாகப் போவாய்.
77 ୭୭ ପା଼ପୁ ମ୍ଣେପ୍କି ଆ଼ହାନା ଏ଼ୱାରି ଗେଲ୍ପି ଆ଼ନାଣି ବେଟାଆ଼ନେରି, ଏ଼ କାତା ପୁଣ୍ମ୍ବି କିହାଲି ତାକି ତାନି ଲ଼କୁତା଼ଣା ହାଜି ।
நம்முடைய இறைவனின் மிகுந்த இரக்கத்தின் நிமித்தம் அவருடைய மக்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படுவதன் மூலமாய், இரட்சிப்பின் அறிவைக் கொடுப்பாய்.
78 ୭୮ ଇଞ୍ଜାଁ ମାଙ୍ଗେ ହିତ୍ଡ଼ି ଜିରୁତା ତାଚାଲି ମା଼ ମାହାପୂରୁତି ଜୀୱୁନ଼ନି କାର୍ମାତଲେ ଲାକପୂରୁଟି ମାଙ୍ଗେତାକି ୱେ଼ଡ଼ା ହ଼ଚିମାନି ଲେହେଁ ଆ଼ନେ,
இருளில் வாழ்கிறவர்களுக்கும் மரண இருளில் இருக்கிறவர்களுக்கும் ஒளியைத் தருவதற்கும்,
79 ୭୯ ଆମ୍ବାଆରି ହା଼ନିଲେହେଁତି ତା଼ଣା ବାସା କିନେରି, ହିତ୍ଡ଼ି ଜିରୁତା ଅ଼ହାଲି ତାକି ଏ଼ୱାସି ବାରେତି ଲାକ ଲାକପୂରୁଟି ଉଜେଡ଼ି ହୀନେସି ।
நமது கால்களை சமாதானத்தின் வழியில் நடத்துவதற்கும், பரலோகத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது.”
80 ୮୦ ଇଞ୍ଜାଁ ଏ଼ କକାସି ଆଙ୍ଗାତା ଜୀୱୁତା ପାଡାଆ଼ହାନା ଇସ୍ରାୟେଲ ଲ଼କୁତା଼ଣା ୱେ଼ଙ୍ଗାଆ ପାତେକା ଲ଼କୁ ହିଲାଆ ଟା଼ୟୁତା ଡ଼ୟିତେସି ।
அந்தப் பிள்ளை வளர்ந்து ஆவியில் வலிமையடைந்தது; அவன் வெளியரங்கமாக இஸ்ரயேலரின்முன் வரும் காலம்வரைக்கும் பாலைவனத்தில் வாழ்ந்தான்.