< କାମା 1 >
1 ୧ ଏ଼ ଜୀୱୁତି ତିୟପିଲ, ନା଼ ମୂଲୁତି ପତିତା ଈ ବାରେ କାତା ରା଼ଚାମାଇଁ, ଜୀସୁ ଏମିନି କାମା ମା଼ଟ୍ହେସି ଅ଼ଡ଼େ ଜା଼ପ୍ହେସି,
தெயோப்பிலுவே, நான் முன்பு எழுதிய புத்தகத்தில், இயேசு செய்ய ஆரம்பித்தவை போதித்தவை எல்லாவற்றையும் குறித்து எழுதினேன்.
2 ୨ ଏ଼ ଦିନା ପାତେକା ଏ଼ୱାସି ପାଣ୍ତ୍ୱି ଆ଼ତାରାଇଁ ଆ଼ଚାମାଚେସି, ସୁଦୁଜୀୱୁ ତଲେ ହୁକୁମି ହୀହାନା ଲାକପୂରୁ ଅ଼ୱି ଆ଼ହାମାଚେସି ।
அவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்கு பரிசுத்த ஆவியானவராலே கட்டளையிட்டவைகளைக் கொடுத்தபின்பு, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அந்த நாள்வரைக்கும், நிகழ்ந்தவைகளைப் பற்றி அதில் எழுதினேன்.
3 ୩ ଏଚେଟିଏ ଜୀସୁ ତାନି ଦୁକୁ ବେଟାଆ଼ତି ଡା଼ୟୁ ହା଼ରେକା ଦିନା ଏ଼ୱାସି ଜୀୱୁତଲେ ମାଚେସି ଈଦାଆଁ ପାଣ୍ତ୍ୱି ଆ଼ହାମାନାରି ତା଼ଣା ପାର୍ମାଣା କିତେସି, ଇଞ୍ଜାଁ ରୀ କ଼ଡ଼ି ଦିନା ପାତେକା ହା଼ରେକା ଦେବା ତ଼ଞ୍ଜାଆ଼ହାନା ମାହାପୂରୁ ରା଼ଜିତି କାତା ଜା଼ପ୍ହେସି ।
இயேசு தாம் சிலுவையில் வேதனையை அனுபவித்த பின்பு தம்மை சீடர்களுக்குக் காண்பித்து, தாம் உயிருடன் இருப்பதை நம்பத்தகுந்த பல ஆதாரங்களுடன் நிரூபித்தார். அவர் அவர்களுக்கு நாற்பது நாளளவும் காட்சியளித்து, இறைவனுடைய அரசைப்பற்றிப் பேசினார்.
4 ୪ ର଼ ଦିନା ଏ଼ୱାରି ରଣ୍ତିଏ ତା଼ଣା ତିଞ୍ଜାଲି କୂଡ଼ା ଆ଼ହାମାଚି ବେ଼ଲାତା ଜୀସୁ ଏ଼ୱାରାକି ଈ ହୁକୁମି ହୀତେସି; “ମୀରୁ ଜିରୁସାଲମ ପିସାଁ ଆମ୍ବିୟା ହାଲାଆଦୁ, ସାମା ମୀରୁ ମାହାପୂରୁ ଆ଼ବାତି ଆ଼ଞ୍ଜାମାନାଣି ନା଼ ତା଼ଣାଟି ୱେଞ୍ଜା ମାଞ୍ଜେରି, ଏ଼ଦାଆଁ ପା଼ଣ୍ନି ପାତେକା କା଼ଚାନା ଡ଼ୟାଦୁ;
ஒருமுறை இயேசு சீடர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், அவர் சீடர்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுத்தார்: “நீங்கள் எருசலேமைவிட்டுப் போகவேண்டாம். என் பிதாவின் வாக்குறுதியைக்குறித்து நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களே, நீங்கள் அதற்காகக் காத்திருங்கள்.
5 ୫ ଇଚିହିଁ ଜହନ ଏ଼ୟୁତା ବାପ୍ତିସ୍ମ ହୀତେସି ସାତା, ସାମା ମୀରୁ ଏଚରଦିନା ଜେ଼ଚ ସୁଦୁଜୀୱୁ ତଲେ ବାପ୍ତିସ୍ମ ବେଟାଆ଼ଦେରି ।”
ஏனெனில் யோவான் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுத்தான், ஆனால் இன்னும் சில நாட்களில் நீங்கள் பரிசுத்த ஆவியினால் திருமுழுக்கு பெறுவீர்கள்.”
6 ୬ ର଼ ଦିନା ପାଣ୍ତ୍ୱି ଆ଼ତାରି ରୁଣ୍ତା ଆ଼ହାମାଚି ବେ଼ଲା ଜୀସୁଇଁ ୱେଚେରି, “ପ୍ରବୁ, ନୀନୁ ଏ଼ନାଆଁ ନୀଏଁ ଇସ୍ରାୟେଲ କେୟୁତା ଅ଼ଡ଼େ ୱେଣ୍ତେ ଈ ରା଼ଜିତି ହେର୍ପିଦି?”
பின்பு சீடர்கள் இயேசுவோடு ஒன்றுகூடி இருந்தபோது அவரிடம், “ஆண்டவரே, நீர் இஸ்ரயேலரின் அரசை அவர்களுக்கு மீண்டும் பெற்றுக்கொடுக்கும் காலம் இதுவா?” என்று கேட்டார்கள்.
7 ୭ ଜୀସୁ ଏ଼ୱାରାଇଁ ଏଲେଇଚେସି, “ଆମିନି ଦିନା ଅ଼ଡ଼େ କା଼ଲା ନା଼ ଆ଼ବା ତାନି ଅଦିକାରାତା ଇଟାମାନେସି, ଏ଼ ବାରେ ମିଙ୍ଗେ ପୁଞ୍ଜାଲି ଲ଼ଡ଼ା ଆ଼ଏ ।
அதற்கு இயேசு அவர்களிடம்: “பிதா தமது அதிகாரத்தால் குறித்து வைத்திருக்கிற நேரங்களையும், காலங்களையும் அறிகிறது உங்களுக்குரியது அல்ல.
8 ୮ ସାମା ସୁଦୁଜୀୱୁ ମୀ ତା଼ଣା ୱା଼ତିସାରେ, ମୀରୁ ବା଼ଡ଼୍ୟୁ ବେଟାଆ଼ଦେରି, ଇଞ୍ଜାଁ ଜିରୁସାଲମ ବାରେ ଜୀହୁଦା ଦେ଼ସା ଇଞ୍ଜାଁ ସମିରଣତା ଅ଼ଡ଼େ ବୂମି ମୁଟ୍ପେ ତାକି ନା଼ ସା଼କି ଆ଼ଦେରି ।”
ஆனால் நீங்களோ, பரிசுத்த ஆவியானவர் உங்கள்மேல் வரும்போது வல்லமையைப் பெற்றுக்கொள்வீர்கள்; அப்பொழுது நீங்கள் எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், அத்துடன் பூமியின் கடைசி எல்லைவரை, எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார்.
9 ୯ ଏ଼ୱାସି ଈ ବାରେ କାତା ୱେସ୍ତି ଡା଼ୟୁ ଏ଼ୱାରି ମେସ୍ପନିଏ ଜୀସୁ ଲାକପୂରୁ ହାଚେସି, ଅ଼ଡ଼େ ଇଚାୟି ଦୂନ୍ଦ୍ରା ଏ଼ୱାଣାଇଁ ଏ଼ୱାରି ତା଼ଣାଟି ଅ଼ହିଁ ହାଚେ, ଏ଼ୱାରି ଅ଼ଡ଼େ ଏ଼ୱାଣାଇଁ ମେହ୍ଆତେରି ।
இயேசு இதைச் சொன்னபின்பு, அவர்களுடைய கண்களுக்கு முன்பாகவே, அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். ஒரு மேகம் அவரை அவர்களுடைய பார்வையிலிருந்து மறைத்துக்கொண்டது.
10 ୧୦ ଏ଼ୱାସି ଲାକପୂରୁ ହାଜାଲିଏ ଜିକେଏ ଏ଼ୱାରି ହା଼ଗୁୱାକି ମୂମ୍ବୁ କିହାନା ସିନିକିହି ମାନେରି; ଏଚିବେ଼ଲା ଦବ୍ଲା ହିମ୍ବରିକା ହୁଚାମାନି ରିଆରି ଦେବୁଣିଏ ଏ଼ୱାରି ନ଼କିତା ନିତେରି,
இயேசு மேலே போய்க்கொண்டிருக்கையில், சீடர்கள் வானத்தை நோக்கி மேலே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது வெள்ளை உடை அணிந்த இருவர் திடீரென அவர்கள் அருகே நின்றார்கள்.
11 ୧୧ ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାରି ଏଲେଇଚେରି “ଏ଼ ଗାଲିଲିତି ଲ଼କୁତେରି, ଏ଼ନାଆଁତାକି ହା଼ଗୁୱାକି ମୂମ୍ବୁ କିହାନା ନିଚାମାଞ୍ଜେରି? ଈ ଆମିନି ଜୀସୁ ମୀ ତା଼ଣାଟି ଲାକପୂରୁ ଅ଼ୱିଆ଼ତେସି, ଏ଼ୱାଣାଇଁ ଏ଼ନିକିଁ ଲାକପୂରୁ ହାଚାଣି ମୀରୁ ମେସ୍ତେରି, ଅ଼ଡ଼େ ଏଲେକିହିଁଏ ୱେଣ୍ତେ ୱା଼ନାଣି ମେହ୍ଦେରି ।”
அவ்விருவர் சீடர்களிடம், “கலிலேயரே, வானத்தைப் பார்த்துக்கொண்டு நீங்கள் ஏன் இங்கே நிற்கிறீர்கள்? உங்களிடமிருந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசு மீண்டும் உங்களிடம் வருவார். பரலோகத்திற்கு அவர் போவதை நீங்கள் கண்டவிதமாகவே, அவர் மீண்டும் வருவார்” என்றார்கள்.
12 ୧୨ ଏମ୍ବାଟିଏ ଡା଼ୟୁ ଏ଼ୱାରି ଜୀତ ଇନି ହ଼ରୁ ଲାକଟି ଜିରୁସାଲମତା ୱେଣ୍ଡାୱା଼ତେରି, ଏ଼ ଜୀତ ହ଼ରୁଟିଏ ଜିରୁସାଲମ ର଼ କିଲମିଟର ହେକ ମାଚେ ।
பின்பு அவர்கள், ஒலிவமலை எனப்பட்ட அந்த மலையிலிருந்து எருசலேமுக்குச் சென்றார்கள். அது பட்டணத்திலிருந்து ஓய்வுநாளில் நடக்கக்கூடிய தூரத்தில் இருந்தது.
13 ୧୩ ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାରି ପିତର, ଜହନ, ଜାକୁବ, ଆନ୍ଦ୍ରିୟ, ପିଲିପ, ତ଼ମା, ବାର୍ତଲମି, ମାତିୟୁ, ଆଲେପି ମୀର୍ଏସି ଜାକୁବ, ଦେ଼ସାତି ଜୀୱୁ ନ଼ନି ସିମନ ଅ଼ଡ଼େ ଜାକୁବ ମୀର୍ଏସି ଜୀହୁଦା, ଗା଼ଡ଼ାତା ଏଜାନା, ଏମିନି ଲାକନି ଇଲୁତା ବାସା ଆ଼ହାମାଚେରି, ଏମ୍ବାଆଁ ହାଚେରି ।
அவர்கள் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தபோது, அவர்கள் தங்கியிருந்த வீட்டிலுள்ள மேலறைக்குச் சென்றார்கள். அங்கே பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா; பிலிப்பு, தோமா, பர்தொலொமேயு, மத்தேயு; அல்பேயுவின் மகன் யாக்கோபு, யூதவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் வந்திருந்தார்கள்.
14 ୧୪ ଏ଼ୱାରି ବାରେଜା଼ଣା ଇୟାସିକା ତଲେ ଇଞ୍ଜାଁ ଜୀସୁତି ଇୟା ମରିୟମ ଅ଼ଡ଼େ ତାମି ତାୟିୟାଁ ତଲେ ରଣ୍ତିଏ ଅଣ୍ପୁ ତଲେ ପ୍ରା଼ତାନା କିହିଁ ରୁଣ୍ତା ଆ଼ହାମାଚେରି ।
அவர்கள் அனைவரும் ஒன்றாய்கூடி தொடர்ச்சியாக மன்றாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடன் பெண்களும், இயேசுவின் தாய் மரியாளும், இயேசுவின் சகோதரருங்கூட இருந்தார்கள்.
15 ୧୫ ଏଚରଦିନା ଡା଼ୟୁ ନାମିତାରି କୂଡ଼ା ଆ଼ହାମାଚେରି, ଏମ୍ବାଆଁ ସ଼ କ଼ଡ଼ି ଜା଼ଣା ଲ଼କୁ କୂଡ଼ା ଆ଼ହାମାଚେରି, ପିତର ତାୟିୟାଁ ବିତ୍ରାଟି ନିଚାନା ଏଲେଇଚେସି,
அந்நாட்கள் ஒன்றில், விசுவாசிகளின் நடுவே பேதுரு எழுந்து நின்றான். அங்கு கூடியிருந்தவர்களோ கிட்டத்தட்ட நூற்றிருபது பேராய் இருந்தனர்.
16 ୧୬ “ଜୀୱୁତି ତାୟିୟାଁ ଅ଼ଡ଼େ ତାଙ୍ଗିସ୍କା, ଆମିନି ଇସ୍କାରିୟତ ଜୀହୁଦା ଜୀସୁଇଁ ସାତ୍ରୁୟାଁ କେୟୁତା ଆସ୍ପି କିହାଲିତାକି ଜିରୁ ତ଼ସାମାଚେସି, ଏ଼ୱାଣି ତାକି ସୁଦୁଜୀୱୁ ନ଼କେଏ ଦାୱୁଦ ଗୂତିଟି ଏ଼ନାଆଁ ୱେସାମାଚେସି, ଏ଼ ଦାର୍ମୁ ସା଼ସ୍ତେରି ପୂରା ଆ଼ନାୟି ମାଚେ;
பேதுரு அவர்களிடம், “பிரியமானவர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த யூதாசைக்குறித்து, பரிசுத்த ஆவியானவர் வெகுகாலத்திற்கு முன்பு, தாவீதின் மூலமாய்ப் பேசினார். அந்த வேதவசனம் நிறைவேற வேண்டியதாய் இருந்தது.
17 ୧୭ ଇଚିହିଁ ଏ଼ୱାସି ମା଼ ବିତ୍ରାଟି ରଅସି ଇଞ୍ଜିଁ ଏଜିକିୱି ଆ଼ହିମାଚେସି, ଅ଼ଡ଼େ ଈ ସେ଼ବା କାମାତା ପା଼ଣା ବେଟାଆ଼ହା ମାଚେସି ।”
அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு, இந்த ஊழியத்தில் பங்கு பெற்றிருந்தான்.”
18 ୧୮ ଈ ଇସ୍କାରିୟତ ଜୀହୁଦା ଲାଗେଏ କାମା କିତି ଡାବୁୟାଁ ତଲେ ରଚାଣି ବୂମି କଡ୍ୱି ଆ଼ହାମାଚେ, ଅ଼ଡ଼େ ଏ଼ୱାସି ହା଼ତି ତା଼ଣା ତା଼ର୍ୟୁଁ ଡ଼଼ଇ କିହିଁ ତର୍ଗାଲିଏ ତାନି ବାଣ୍ତି ଡ଼ାୟାହାଚେ ଇଞ୍ଜାଁ ୱାହିୟାଁ ହ଼ଚାହାଚୁ ।
அவன் தனது கொடிய செயலுக்கு வெகுமதியாகப் பெற்ற பணத்தைக்கொண்டு, ஒரு வயல் வாங்கப்பட்டது; அவன் அங்கே தலைகீழாக விழுந்தான். அவனது வயிறு வெடித்து, குடல்கள் எல்லாம் வெளியே சிதறி மரித்தான்.
19 ୧୯ ଅ଼ଡ଼େ, ଈଦାଆଁ ଜିରୁସାଲମ ଗା଼ଡ଼ାତା ବାସା କିହିମାନି ଲ଼କୁ ବାରେ ପୁଞ୍ଜାଲିଏ ଏ଼ ବୂମିତି ଏ଼ୱାରି ହା଼ଡାତଲେ “ହକଲ୍ଦାମା” ଇଚିହିଁ “ନେତେରି ବୂମି” ଇଞ୍ଜିଁ ୱେ଼ଙ୍ଗିତେ ।
எருசலேமிலுள்ள ஒவ்வொருவரும், இதைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள், அந்த வயல் நிலத்தைத் தங்கள் மொழியில் அக்கெல்தமா என்று சொல்லுகிறார்கள். அக்கெல்தமா என்றால், இரத்தநிலம் என்று அர்த்தமாகும்.
20 ୨୦ ଅ଼ଡ଼େ ପା଼ଚୁ ପତିତା ରା଼ସ୍କି ଆ଼ହାମାନେ, “ଏ଼ୱାଣି ବାସାଟା଼ୟୁ ୱାର୍ଆୟି ଆ଼ପେ; ଏମ୍ବାଆଁ ଆମ୍ବାଆରି ବାସା କିଆପେରି ।” ଅ଼ଡ଼େ ଜିକେଏ ରା଼ସ୍କି ଆ଼ହାମାନେ; “ଏ଼ୱାଣି କାମାତି ପା଼ଣା ଅ଼ର ରଅସି ବେଟା ଆ଼ପେସି ।”
மேலும் பேதுரு சொன்னதாவது, “சங்கீதப் புத்தகத்தில் இது எழுதப்பட்டுள்ளது: “‘அவனுடைய இருப்பிடம் கைவிடப்பட்டுப் போவதாக; அதில் யாரும் குடியேறாதிருப்பார்களாக,’ என்பதும், “‘அவனுடைய பதவியை வேறொருவன் எடுத்துக்கொள்ளட்டும்.’
21 ୨୧ “ଏ଼ଦାଆଁତାକି, ପ୍ରବୁ ଜୀସୁ ୱେଣ୍ଡେ ନିଙ୍ଗିତି କାତା ସା଼କି ଆ଼ହାଲି ଅ଼ର ରଅସି ମା଼ ତଲେ ଆଣ୍ଡାନାୟି ମାନେ ।
எனவே கர்த்தராகிய இயேசு நமது மத்தியில் இருந்த காலம் முழுவதும் நம்மோடு இருந்த ஒருவரைத் தெரிந்தெடுப்பது அவசியமாகும்.
22 ୨୨ ଜୀସୁ ଜହନ ତା଼ଣାଟି ବାପ୍ତିସ୍ମ ଅ଼ତି ବେ଼ଲାଟିଏ ଲାକପୂରୁ ହାନି ପାତେକା ପ୍ରବୁ ଜୀସୁ ମା଼ ତଲେ ନୀଡାମାଚି ବେ଼ଲାତା, ଆମିନି ଲ଼କୁ ମା଼ ଗଚିତା ମାଚେରି, ଏ଼ୱାରି ତା଼ଣାଟି ରଅସି ୱେଣ୍ତେ ନିଙ୍ଗିନି ସା଼କି ଆ଼ନାୟି ମାନେ ।”
யோவான் திருமுழுக்கு கொடுத்த காலத்தின் தொடக்கத்திலிருந்து, இயேசு நம்மிடமிருந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலம்வரைக்கும், அவன் நம்முடனேகூட இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அப்படி இருந்தவர்களில் ஒருவன் நம்முடனேகூட, அவர் உயிருடன் எழுந்ததற்குச் சாட்சியாய் இருக்கவேண்டும்” என்றான்.
23 ୨୩ ଏଚେଟିଏ ଏ଼ୱାରି ରିଆରାଇଁ ଇଚିହିଁ ଜସେପଇଁ, ଆମ୍ବାଆରାଇଁ ବର୍ସବା ଇନେରି ଅ଼ଡ଼େ ଆମ୍ବାଆରି ହା଼ଟା ଦ଼ରୁ ଜୁସ୍ତ ଏ଼ୱାଣାଇଁ ଇଞ୍ଜାଁ ମତିୟଇଁ ବାଚି କିହାନା,
எனவே அவர்கள்: யுஸ்து என்னும் பர்சபா எனப்பட்ட யோசேப்பு, மத்தியா ஆகிய இரண்டுபேர்களை முன்னிறுத்தினார்கள்.
24 ୨୪ ଈ ପ୍ରା଼ତାନା କିତେରି, “ପ୍ରବୁ ନୀନୁ ବାରେତି ହିୟାଁତି ଅଣ୍ପୁ ପୁନାତି, ଜୀହୁଦା ଏମିନି ଟା଼ୟୁତା ଡ଼ୟିନାୟି ମାନେ ଏ଼ୱାସି ହାଜାଲିଏ, ଏ଼ୱାଣି ଟା଼ୟୁତା ଈ ରିଆରି ବିତ୍ରାଟି ନୀ ତା଼ଣାଟି ଆ଼ଚିତାସି ଆମ୍ବାଆସି,
பின்பு அவர்கள் மன்றாடி, “கர்த்தாவே, நீர் எல்லோருடைய இருதயத்தையும் அறிந்திருக்கிறீர், இந்த இருவரில் நீர் யாரைத் தெரிந்துகொண்டீர் என்பதை எங்களுக்குக் காண்பியும்.
25 ୨୫ ଏ଼ ପାଣ୍ତ୍ୱି ଆ଼ହାମାନାରି ସେ଼ବା କାମା କିହାଲି ଆମ୍ବାଆରାଇଁ ଜୀହୁଦା ପା଼ଣାତା ବାଚି କିହାମାଞ୍ଜି ତ଼ସ୍ତାମୁ ।”
யூதாஸ் தனக்குரிய இடத்திற்கு போவதற்காக கைவிட்டுப்போன, இந்த அப்போஸ்தல ஊழியத்தைச் செய்வதற்கு நீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பியும்” என்றார்கள்.
26 ୨୬ ଅ଼ଡ଼େ ଏ଼ୱାରି ଏ଼ ରିଆରି ତାକି ପାଦି କିହାଲିଏ ମତିୟ ଦ଼ରୁତଲେ ଆ଼ତେ; ଅ଼ଡ଼େ ଏ଼ୱାସି ଏଗାର ଜା଼ଣା ପାଣ୍ତ୍ୱି ଆ଼ହାମାନାରି ଗଚିତା ଆଣ୍ଡିତେସି ।
அதற்குப் பின்பு, அவர்கள் சீட்டுப்போட்டார்கள். சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது; எனவே, அவன் மற்ற பதினொரு அப்போஸ்தலருடனும் சேர்த்துக்கொள்ளப்பட்டான்.