< Jeremiah 24 >

1 LEUM GOD El akkalemye nu sik fotoh in fig luo ma filiyuki mutun Tempul. (Ma se inge sikyak tukun Tokosra Nebuchadnezzar lun Babylonia el usalla Tokosra Jehoiachin lun Judah, wen natul Jehoiakim, tuh elan sie mwet sruoh liki acn Jerusalem nu Babylonia, wi mwet kol lun Judah, mwet tufahl, ac mwet usrnguk ke orekma.)
யூதாவின் அரசன் யோயாக்கீமின் மகன் யெகொனியா, பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் நாடுகடத்தப்பட்டான். அவனுடன் யூதாவின் அதிகாரிகளும், தச்சர்களும், தொழில் வல்லுநர்களும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு கொண்டுபோகப்பட்டார்கள். பின்பு யெகோவா எனக்கு ஆலயத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளைக் காட்டினார்.
2 Fotoh se meet ah fig wowo oan loac, ma sa in mwesrla. Fotoh se ngia fig na koluk oan loac, tiana ku in mongo.
ஒரு கூடையில் முற்றிப் பழுத்த பழங்களைப் போன்ற மிக நல்ல அத்திப்பழங்கள் இருந்தன. மற்றொரு கூடையில் அழுகிப்போனதால் சாப்பிட முடியாத அத்திப்பழங்கள் இருந்தன.
3 Na LEUM GOD El fahk nu sik, “Jeremiah, mea kom liye an?” Nga topuk, “Fig — ma wo kac ah arulana wo, a ma koluk kac ah arulana koluk, tia ku in mongo.”
அப்பொழுது யெகோவா என்னிடம், “எரேமியாவே, நீ என்ன காண்கிறாய்” என்று கேட்டார். அதற்கு நான், “அத்திப்பழங்களைக் காண்கிறேன்; நல்ல அத்திப்பழங்கள் மிகவும் நல்லவையாக இருக்கின்றன. அழுகிப்போனவைகளோ சாப்பிட முடியாத அளவு கெட்டுப்போயும் இருக்கின்றன” என்றேன்.
4 Ouinge LEUM GOD El fahk nu sik,
பின்பு யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது.
5 “Nga, LEUM GOD lun Israel, nunku tuh mwet ma utukla nu Babylonia elos oana fig wo inge, ac nga fah kulang nu selos.
இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: நான் யூதா நாடான இவ்விடத்திலிருந்து, பாபிலோனுக்கு நாடுகடத்தி அனுப்பியவர்களை, இந்த நல்ல அத்திப்பழங்களைப்போல் நல்லவர்களாக எண்ணுகிறேன்.
6 Nga fah liyalosyang ac folokunulosme nu in facl se inge. Nga ac fah musaelosyak ac tia kunauselosla. Nga fah yokwalosi ac tia fusulosyak.
அவர்களின் நன்மைக்காக நான் அவர்களில் கவனமாயிருந்து, மீண்டும் அவர்களை இந்த நாட்டிற்குக் கொண்டுவருவேன்; நான் அவர்களைக் கட்டி எழுப்புவேன். இடித்துத் தள்ளமாட்டேன். அவர்களை நாட்டுவேன், வேருடன் பிடுங்கமாட்டேன்.
7 Nga fah oru tuh insialos in kena eteyu lah nga pa LEUM GOD. Na elos ac fah mwet luk, ac nga ac fah God lalos, mweyen elos ac foloko nu yuruk ke inse pwaye.
நானே யெகோவா என்று அவர்கள் அறிந்துகொள்ளத்தக்க இருதயத்தை நான் அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடம் திரும்புவார்கள். அப்பொழுது அவர்கள் என் மக்களாகவும், நான் அவர்களுடைய இறைவனாகவும் இருப்பேன்.
8 “Ac funu kacl Tokosra Zedekiah lun Judah, wi mwet fulat ma raunella, ac mwet saya Jerusalem su muta in facl se inge ku elos su mukuila nu Egypt — nga, LEUM GOD, fah lumahlos oana fig koluk inge ma arulana koluk in mongo.
“‘ஆனால் அழுகி சாப்பிட முடியாமல் கெட்டுப்போன அத்திப்பழங்களைப் போலவே யூதாவின் அரசனான சிதேக்கியாவையும் அவனுடைய அதிகாரிகளையும், எருசலேமில் தப்பியிருப்பவர்களையும் நடத்துவேன். அவர்கள் இந்நாட்டில் தங்கினாலும், எகிப்தில் வசித்தாலும் அப்படியே நடத்துவேன்.
9 Nga fah oru sie kain kunausten nu faclos ma mutunfacl nukewa faclu fah arulana sangeng kac. Yen nukewa nga luseloselik nu we, mwet uh ac fah isrunulos, orek tafukas kaclos, angnolos, ac orekmakin inelos in mwe selnga lalos.
பூமியிலுள்ள எல்லா அரசுகளுக்கும் நான் அவர்களை அருவருப்பாகவும், வெறுக்கத்தக்கவர்களாகவும் ஆக்குவேன். நான் எங்கெங்கே அவர்களைத் துரத்திவிட்டேனோ, அங்கெல்லாம் அவர்களை நிந்தையாகவும், பழமொழியாகவும், பழிச்சொல்லாகவும், சாபமாகவும் ஆக்குவேன்.
10 Nga fah use mweun, sracl, ac mas lulap nu faclos nwe ke na wanginla mwet in facl se su nga sang nu selos ac mwet matu lalos.”
நான் அவர்களுக்கும், அவர்களுடைய முற்பிதாக்களுக்கும் கொடுத்த நாட்டிலிருந்து அவர்கள் அழியும்வரை அவர்களுக்கு விரோதமாக வாளையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் அனுப்புவேன் என்கிறார்’ என்றான்.”

< Jeremiah 24 >