< Jeremiah 10 >

1 Mwet Israel, porongo kas lun LEUM GOD nu suwos
இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவா உங்களுக்குச் சொல்வதைக் கேளுங்கள்.
2 fahkang: “Nikmet ukwe ouiya lun mutanfahl saya; Nimet fosrnga ke ma sakirik ma ac sikyak inkusrao, Mutanfahl saya finne tuninfong kac.
யெகோவா சொல்வது இதுவே: பிறதேசத்தாரின் வழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டாம். ஆகாயத்தின் அடையாளங்களைக் கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள், நீங்களோ அவற்றிற்கு பயப்படாமல் இருங்கள்.
3 Alu lun mwet inge wangin sripa. Soko sak ac pakpuki insak uh, Na kihlyak ke kufwen sroasr lun mwet tufahl,
ஏனெனில் அந்த மக்கள் கூட்டங்களின் வழக்கங்கள் பயனற்றவை. அவர்கள் காட்டிலிருக்கிற ஒரு மரத்தை வெட்டுகிறார்கள், தச்சன் அதைத் தன் உளியினால் வடிவமைக்கிறான்.
4 Ac yunla ke silver ac gold. Osra pa sang sruokya In tia topla.
அவர்கள் அதை வெள்ளியாலும், தங்கத்தாலும் அலங்கரித்து, சுத்தியலாலும், ஆணிகளாலும் அடித்து அது சாய்ந்து விழாதபடி இறுக்குகிறார்கள்.
5 Kain ma sruloala inge oana luman mwet kikiap se ma kaskiyuki ke ima uh. Elos tia ku in kaskas. Enenu in utuk elos Mweyen elos tia ku in fahsr. Nimet sangeng selos. Elos tia ku in akkolukye kowos, Ac wangin pac ma wo elos ku in oru nu suwos.”
அவை வெள்ளரித் தோட்டத்தின் பொம்மையைப்போல காணப்படுகின்றன. அவர்களின் விக்கிரகங்கள் பேசமாட்டாது, அவைகளால் நடக்கவும் முடியாது. ஆகையால் அவைகளைச் சுமந்து செல்லவேண்டும். அவைகள் நன்மையானதையோ, தீமையானதையோ செய்ய முடியாதவை. ஆகையால் அவைகளுக்குப் பயப்படாதிருங்கள் என்றார்.
6 LEUM GOD, wangin sie oana kom. Kom kulana, Ac Inem fulat ac yoklana ku la.
யெகோவாவே, உம்மைப்போல் ஒருவருமில்லை. நீர் வலிமை மிக்கவர். உம்முடைய பெயர் ஆற்றலில் வலிமையுள்ளது.
7 Kom pa tokosra lun mutunfacl nukewa, na su ac tia sunakin kom? Fal in akfulatyeyuk kom. Wangin sie oana kom Inmasrlon mwet lalmwetmet nukewa lun mutunfacl uh, Ku inmasrlon kutena tokosra lalos.
நாடுகளின் அரசரே! உம்மிடத்தில் பயபக்தியில்லாமல் யார்தான் இருப்பார்கள்? இது உமக்கு மட்டுமே உரியது. நாடுகளிலுள்ள எல்லா ஞானிகள் மத்தியிலும், அவர்களுடைய எல்லா அரசுகளுக்குள்ளும், உம்மைப் போன்றவர் எவருமே இல்லை.
8 Mwet nukewa su alu nu ke ma sruloala elos sulalkung ac lalfon. Mea elos ac ku in etala sin sie ma orekla ke sak?
அவர்கள் எல்லோரும் உணர்ச்சியற்றவர்களும் மூடருமாய் இருக்கிறார்கள். பயனற்ற மரத்தாலான விக்கிரகங்களால் அவர்கள் போதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
9 Ma sruloala lalos nukla ke silver Spain me Ac ke gold Uphaz me, Orekla sin mwet usrnguk in sroasr. Elos nuknukyang ke nuknuk folfolnemnem ac sroninmutuk Orekla sin mwet orek nuknuk na usrnguk.
வெள்ளித்தகடு தர்ஷீசிலிருந்தும், தங்கம் ஊப்பாசிலிருந்தும் கொண்டுவரப்படுகின்றன. கைவினைஞனாலும், கொல்லனாலும் செய்யப்பட்ட விக்கிரகங்களுக்கு நீலநிற உடைகளும், ஊதாநிற உடைகளும் உடுத்தப்பட்டிருக்கின்றன. இவை எல்லாம் சிறந்த தொழிலாளிகளினால் செய்யப்பட்டவை.
10 Tusruktu kom, LEUM GOD, pa God pwaye Ac kom God moul Ac tokosra ma pahtpat. Ke pacl se kom kasrkusrak, faclu kusrusr; Mutanfahl uh tia ku in muteng mulat lom. (
ஆனாலும், யெகோவாவே உண்மையான இறைவன். அவரே வாழும் இறைவன்; நித்திய அரசர். அவர் கோபங்கொள்ளும்போது பூமி நடுங்குகிறது. அவருடைய கடுங்கோபத்தை நாடுகள் தாங்கிக்கொள்ள மாட்டாது.
11 Kowos enenu in fahkang nu selos lah god ma tia orala faclu ac kusrao, ac fah kunausyukla. Elos fah wanginla liki acn nukewa fin faclu.)
வானங்களையும், பூமியையும் படைக்காத இந்த தெய்வங்கள் பூமியிலிருந்தும், வானங்களின் கீழிருந்தும் அழிந்துவிடும் என்பதை அவர்களுக்குச் சொல்.
12 LEUM GOD El orala faclu ke ku lal; El oakiya faclu ke lalmwetmet lal, Ac El asroelik kusrao ke etu lal.
ஆனால் இறைவன் தமது வல்லமையினால் பூமியைப் படைத்து, தமது ஞானத்தினால் உலகத்தை நிறுவி, தமது அறிவாற்றலினால் வானங்களை விரித்தார்.
13 Ke sap lal, kof lucng liki yen engyeng uh ngirngir; El orama pukunyeng uh liki saflaiyen faclu. El oru sarom in sarmelik in af uh Ac supwama eng uh liki nien filma lal.
அவர் முழங்கும்போது, வானங்களிலுள்ள திரளான தண்ணீர் இரைகின்றன. அவர் பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணுகிறார். அவர் மழையுடன் மின்னலை அனுப்பி, தமது களஞ்சியங்களிலிருந்து காற்றை வெளியே கொண்டுவருகிறார்.
14 Ke mwet uh liye ma inge, elos akilen lupan lalfon ac nikin lalos sifacna. Elos su oru ma sruloala elos mwekinla, Mweyen god ma elos orala uh tia pwaye ac wangin moul la.
ஒவ்வொரு மனிதனும் உணர்வற்றவனும், அறிவற்றவனுமாயிருக்கிறான். ஒவ்வொரு கொல்லனும் தன் விக்கிரகங்களால் வெட்கமடைகிறான். ஏனெனில் அவனுடைய உருவச்சிலைகள் போலியானவை. அவைகளில் சுவாசமில்லை.
15 Elos ma lusrongten ma fal in pilesreyuk. Elos ac fah kunausyukla pacl se LEUM GOD El ac tuku in nununkalos.
அவைகள் பயனற்றவையாகவும், கேலிக்குரிய பொருட்களாகவும் இருக்கின்றன. அவைகளுக்குரிய தண்டனை வரும்போது அவை அழிந்துபோகும்.
16 God lal Jacob El tia oana ma inge. El pa orala ma nukewa, Ac El sulela mwet Israel elos in mwet lal. Inel pa LEUM GOD Kulana.
யாக்கோபின் பங்காயிருப்பவர் இவைகளைப் போன்றவர் அல்ல. ஏனெனில், அவரே எல்லாவற்றையும் படைத்தவர். அவருடைய உரிமைச்சொத்தான இஸ்ரயேல் கோத்திரத்தையும் அவரே படைத்தார். சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர்.
17 Mwet Jerusalem, apweni! Kuhlusyuki kowos!
கைதிகளாக வாழும் எருசலேம் மக்களே! நாட்டைவிட்டுப் போவதற்கு உங்கள் பொருட்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
18 LEUM GOD El ac siskowosla liki facl se inge. El ac itungkowosi nwe ke na wangin sie suwos lula. LEUM GOD pa fahk ma inge.
ஏனெனில் யெகோவா சொல்வது இதுவே: “அந்த நாட்டில் குடியிருப்பவர்களை நான் இப்போதே அகற்றிவிடுவேன். நான் அவர்கள்மீது துன்பத்தைக் கொண்டுவருவேன். அவர்கள் சிறைப்பிடிக்கப்படுவார்கள்.”
19 Mwet Jerusalem elos wowoyak ac fahk, “Fuka lupan ongoiya uh! Kinet kacsr uh ac tiana mahla. A kut tuh nunku mu kut ac ku in muteng ma inge!
என் காயத்தினால் எனக்கு எவ்வளவு வேதனை! என் காயம் குணமாக்க முடியாத ஒன்றாய் இருக்கிறது. ஆனால் நானோ, “இது என் வருத்தம்; நானே அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும்” என எனக்குள் கூறினேன்.
20 Lohm nuknuk sesr uh musalsalu; Sucl ma sang sruok uh wotelik. Tulik natusr nukewa fahsr liki kut; Wangin mwet lula in sifil tulokunak lohm nuknuk sesr; Wangin mwet in sripisrya mwe lisrlisr kac uh.”
என் கூடாரம் அழிந்துவிட்டது. அதன் கயிறுகளும் அறுந்துபோயின. என் மகன்கள் என்னைவிட்டு போய்விட்டார்கள். அவர்கள் என்னிடம் இல்லை. இப்போது என்னுடைய கூடாரத்தைப் போடவோ, என் புகலிடத்தை அமைக்கவோ யாருமில்லை.
21 Na nga topuk, “Mwet kol lasr elos lalfon; Elos tia siyuk kolyuk sin LEUM GOD. Pa inge sripa pwanang elos tia kapkapak, Ac mwet lasr uh fahsrelik.
மேய்ப்பர்கள் உணர்வற்றவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் யெகோவாவிடம் விசாரிக்கிறதில்லை. ஆகையினால் அவர்கள் செழித்தோங்கவில்லை. அவர்கள் மந்தைகளும் சிதறிப்போயின.
22 Porongo! Oasr pweng se tuku! Oasr sie mukuiyak lulap in sie mutunfacl epang; Mwet mweun we ac fah ekulla siti lun Judah nu ke sie acn mwesis, Nu ke acn in muta lun kosro lemnak uh.”
கேளுங்கள்! செய்தி ஒன்று வருகிறது. வடநாட்டிலிருந்து ஒரு பெரும் அமளியின் சத்தம் கேட்கிறது. அது யூதாவின் பட்டணங்களைப் பாழாக்கி, அவைகளை நரிகளின் இருப்பிடமாக்கும்.
23 LEUM GOD, nga etu lah wangin sie mwet sifacna kol inkanek lal, Wangin mwet sifacna nununku moul lal.
யெகோவாவே, ஒரு மனிதனின் உயிர் அவன் வசத்தில் இல்லை என்பதையும், தன் வழிகளை அமைத்துக்கொள்வதற்கு மனிதனால் இயலாது என்பதையும் நான் அறிவேன்.
24 LEUM GOD, aksuwosye mwet lom, Tusruktu nimet kom arulana upa nu sesr, Ku kai kut ke pacl kom kasrkusrak, Mweyen ac tuh pa ingan saflaiyen moul lasr.
யெகோவாவே, என்னை நீதியுடன் சீர்திருத்தும். நான் அழிந்துபோகாதபடி உம்முடைய கோபத்தில் தண்டியாதிரும்.
25 Furokla kasrkusrak lom nu fin mutunfacl ma tia etekom, Ac nu fin mwet su tia alu nu sum. Elos onela mwet lom. Elos kunauskutla na pwaye Ac likiya acn sesr in oan musalla.
உமது கடுங்கோபத்தை உம்மை ஏற்றுக்கொள்ளாத நாட்டினர்மேலும், உமது பெயரைச்சொல்லிக் கூப்பிடாத மக்கள்மேலும் ஊற்றும். ஏனெனில் அவர்கள் யாக்கோபை விழுங்கினார்கள். அவனை முற்றிலுமாக விழுங்கி, அவனுடைய தாய் நாட்டையும் அழித்துப்போட்டார்கள்.

< Jeremiah 10 >