< 창세기 5 >
1 아담 자손의 계보가 이러하니라 하나님이 사람을 창조하실 때에 하나님의 형상대로 지으시되
௧ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனிதனை உருவாக்கின நாளிலே அவனை தேவசாயலாக உண்டாக்கினார்.
2 남자와 여자를 창조하셨고 그들이 창조되던 날에 하나님이 그들에게 복을 주시고 그들의 이름을 사람이라 일컬으셨더라
௨அவர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கினார், அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை உருவாக்கின நாளிலே அவர்களுக்கு மனிதர்கள் என்று பெயரிட்டார்.
3 아담이 일백 삼십세에 자기 모양 곧 자기 형상과 같은 아들을 낳아 이름을 셋이라 하였고
௩ஆதாம் 130 வயதானபோது, தன் சாயலாகத் தன் உருவத்தைப்போல ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு சேத் என்று பெயரிட்டான்.
4 아담이 셋을 낳은 후 팔백년을 지내며 자녀를 낳았으며
௪ஆதாம் சேத்தைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
௫ஆதாம் உயிரோடிருந்த நாட்களெல்லாம் 930 வருடங்கள்; அவன் இறந்தான்.
௬சேத் 105 வயதானபோது, ஏனோசைப் பெற்றெடுத்தான்.
7 에노스를 낳은 후 팔백 칠년을 지내며 자녀를 낳았으며
௭சேத் ஏனோசைப் பெற்றபின், 807 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
௮சேத்துடைய நாட்களெல்லாம் 912 வருடங்கள்; அவன் இறந்தான்.
௯ஏனோஸ் 90 வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான்.
10 게난을 낳은 후 팔백 십 오년을 지내며 자녀를 낳았으며
௧0ஏனோஸ் கேனானைப் பெற்றபின்பு, 815 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
௧௧ஏனோசுடைய நாட்களெல்லாம் 905 வருடங்கள், அவன் இறந்தான்.
௧௨கேனான் 70 வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றெடுத்தான்.
13 마할랄렐을 낳은 후 팔백 사십년을 지내며 자녀를 낳았으며
௧௩கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், 840 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
௧௪கேனானுடைய நாட்களெல்லாம் 910 வருடங்கள்; அவன் இறந்தான்.
௧௫மகலாலெயேல் 65 வயதானபோது, யாரேதைப் பெற்றெடுத்தான்.
16 야렛을 낳은 후 팔백 삼십년을 지내며 자녀를 낳았으며
௧௬மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், 830 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
17 그가 팔백 구십 오세를 향수하고 죽었더라
௧௭மகலாலெயேலுடைய நாட்களெல்லாம் 895 வருடங்கள்; அவன் இறந்தான்.
௧௮யாரேத் 162 வயதானபோது, ஏனோக்கைப் பெற்றெடுத்தான்.
19 에녹을 낳은 후 팔백년을 지내며 자녀를 낳았으며
௧௯யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
20 그가 구백 육십 이세를 향수하고 죽었더라
௨0யாரேதுடைய நாட்களெல்லாம் 962 வருடங்கள்; அவன் இறந்தான்.
௨௧ஏனோக்கு 65 வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றெடுத்தான்.
22 므두셀라를 낳은 후 삼백년을 하나님과 동행하며 자녀를 낳았으며
௨௨ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், 300 வருடங்கள் தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
௨௩ஏனோக்குடைய நாட்களெல்லாம் 365 வருடங்கள்.
24 에녹이 하나님과 동행하더니 하나님이 그를 데려 가시므로 세상에 있지 아니하였더라
௨௪ஏனோக்கு தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருக்கும்போது, காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
25 므두셀라는 일백 팔십 칠세에 라멕을 낳았고
௨௫மெத்தூசலா 187 வயதானபோது, லாமேக்கைப் பெற்றெடுத்தான்.
26 라멕을 낳은 후 칠백 팔십 이년을 지내며 자녀를 낳았으며
௨௬மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், 782 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
27 그는 구백 육십 구세를 향수하고 죽었더라
௨௭மெத்தூசலாவுடைய நாட்களெல்லாம் 969 வருடங்கள்; அவன் இறந்தான்.
௨௮லாமேக்கு 182 வயதானபோது, ஒரு மகனைப் பெற்றெடுத்து,
29 이름을 노아라 하여 가로되 `여호와께서 땅을 저주하시므로 수고로이 일하는 우리를 이 아들이 안위하리라' 하였더라
௨௯“யெகோவா சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.
30 라멕이 노아를 낳은 후 오백 구십 오년을 지내며 자녀를 낳았으며
௩0லாமேக்கு நோவாவைப் பெற்றபின், 595 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
31 그는 칠백 칠십 칠세를 향수하고 죽었더라
௩௧லாமேக்குடைய நாட்களெல்லாம் 777 வருடங்கள்; அவன் இறந்தான்.
32 노아가 오백세 된 후에 셈과, 함과, 야벳을 낳았더라
௩௨நோவா 500 வயதானபோது சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.