< ମାତିଉ 22 >

1 ଜିସୁନ୍‌ ଆରି ବତର ଅନବ୍‌ଜଙ୍‌ବରନ୍‌ ବାତ୍ତେ ମନ୍‌ରାଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି ।
இயேசு மறுபடியும் அவர்களோடு உவமைகளாகப் பேசிச் சொன்னது என்னவென்றால்:
2 “ରୁଆଙ୍‌ ରାଜ୍ୟନ୍‌ କେନ୍‌ ଅନ୍ତମ୍‌, ଅବୟ୍‌ ରାଜାନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ଆସନ୍‌ ବିବା ବୁଜିନ୍‌ ତୁବେନ୍‌ ।
பரலோகராஜ்யம் தன் குமாரனுக்கு திருமணம் செய்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது.
3 ଆରି ତି ଆ ବୁଜିଜୋମ୍‌ ଅନିୟନ୍‌ ଆସନ୍‌ ଆବର୍‌ବରଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ଅନୋଡ୍ଡେବାନ୍‌ ଆନିନ୍‌ ଆ କମ୍ବାରିମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଆପ୍ପାୟେଞ୍ଜି, ବନ୍‌ଡ ତି ଆ ମନ୍‌ରାଜି ବୁଜିଜୋମନ୍‌ ଅନିୟନ୍‌ ଆସନ୍‌ ଅଃଲ୍ଲଡୟ୍‌ଲଜି ।
அழைக்கப்பட்டவர்களைத் திருமணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களோ வர விருப்பமில்லாதிருந்தார்கள்.
4 ରାଜାନ୍‌ ଆରି ବତର ଆନ୍ନା କମ୍ବାରିମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଆପ୍ପାୟ୍‌ଡାଲେ ଆବର୍‌ବରଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ଏନ୍ନେଲେ ଇୟ୍‌ ବର୍ବାଜି ଗାମେନ୍‌, ‘ଅମ୍‌ଡଙ୍‌ବା, ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌ଞେନ୍‌ ଆ ବିବା ବୁଜି ଜାଡାଆଜେନ୍‌, ତାଙ୍‌ଲିୟ୍‌ଞେନ୍‌ ଡ ଜେଲ୍‌ଜେଲ୍‌ରାଡମନ୍‌ ଆ ଜନ୍ତୁଜି ରବ୍ବୁଲାୟ୍‌, ଅଡ଼୍‌କୋନ୍‌ ଜାଡାଆଜେନ୍‌ । ଆମ୍ୱେଞ୍ଜି ବୁଜିଜୋମନ୍‌ ଇୟାୟ୍‌ବା ।’
அப்பொழுது அவன் வேறு வேலைக்காரர்களை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம் செய்தேன், என் எருதுகளும், கொழுத்த கன்றுக்குட்டிகளும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது; திருமணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்.
5 ବନ୍‌ଡ ଆନିଞ୍ଜି ବୁଜିଜୋମନ୍‌ ଅବ୍‌ସନ୍ନାଡାଲେ ଲାଙ୍‌ଲେନ୍ନେ କୋତ୍ତାନ୍‌ ଜିରେଞ୍ଜି, ଆରି ଲାଙ୍‌ଲେନ୍ନେ ବେପାରବାନ୍‌ ଜିରେଞ୍ଜି,
அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைசெய்து, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்திற்கும் போய்விட்டார்கள்.
6 ଆରି ଲାଙ୍‌ଲେନ୍ନେ ରାଜାନ୍‌ ଆ କମ୍ୱାରିମର୍‌ଜିଆଡଙ୍‌ ଞମ୍‌ଲେ ତିଡେଞ୍ଜି କି ରବ୍ବୁଏଞ୍ଜି ।
மற்றவர்கள் அவனுடைய வேலைக்காரர்களைப்பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள்.
7 ଆରି ରାଜାନ୍‌ ବରାବେନ୍‌ କି ଆ ସିପ୍ପାୟଞ୍ଜିଆଡଙ୍‌ ଆପ୍ପାୟେଞ୍ଜି, ସିପ୍ପାୟଞ୍ଜି ଜିର୍ରେ ତି ସମ୍ବବ୍‌ମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଇୟ୍‌ଲେ ରବ୍ବୁଆଜେଜି ଆରି ଆ ଗଡ଼ାଞ୍ଜି ଇୟ୍‌ଲେ ସୟେଜି ।
ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் படைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகர்களை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.
8 ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ରାଜାନ୍‌ କମ୍ୱାରିମରଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, ‘ବିବା ବୁଜିନ୍‌ ଜାଡାଆଜେନ୍‌, ବନ୍‌ଡ ଆବର୍‌ବରଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ଜିଞ୍ଜିନ୍‌ଜି ତଡ୍‌ ।
அப்பொழுது, அவன் தன் வேலைக்காரர்களைப் பார்த்து: திருமணவிருந்து ஆயத்தமாக இருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு தகுதியற்றவர்களாக போனார்கள்.
9 ତିଆସନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ସୋଡ଼ା ସୋଡ଼ା ସାଇରେଙନ୍‌ ଇୟ୍‌ବା ଆରି ଡିଅଙ୍ଗା ମନ୍‌ରାଞ୍ଜି ଇୟ୍‌ତେ ଏରବାଙେଜି ତି ଅଡ଼୍‌କୋଞ୍ଜି ବୁଜିଜୋମନ୍‌ ଅନିୟନ୍‌ ଆସନ୍‌ ଇୟ୍‌ ବର୍ବାଜି ।’
ஆகவே, நீங்கள் வீதிகளிலேபோய், காணப்படுகிற அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.
10 ସିଲତ୍ତେ କମ୍ୱାରିମରଞ୍ଜି ସାଇ ସାଇ ବୁଲ୍ଲେଲେ ମନଙେତୋ ମନଙ୍‌ଡଙ୍‌ ଡିଅଙ୍ଗା ମନ୍‌ରାଞ୍ଜି ଇୟ୍‌ଲେ ରବାଙେଜି ତି ଅଡ଼୍‌କୋଞ୍ଜିଆଡଙ୍‌ ଓଡ୍ଡେଲେ ଇୟ୍‌ଲେ ଓରୋଙେଜି, ଆରି ବିବାସିଙନ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜି ବରିଜେଞ୍ଜି ।”
௧0அந்த வேலைக்காரர்கள் புறப்பட்டு, வழிகளிலேபோய், தாங்கள் கண்ட நல்லவர்கள் பொல்லாதவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டுவந்தார்கள்; திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிறைந்திருந்தது.
11 “ରାଜାନ୍‌ କନୁଆମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଗିୟ୍‌ଗିଜନ୍‌ ଆସନ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌, ଆରି ଅବୟ୍‌ ମନ୍‌ରାନ୍‌ ବିବା ଅଙ୍ଗିନ୍‌ ଏର୍‌ରନେନ୍‌ ବୁଜିଜୋମନ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌, ରାଜାନ୍‌ ତି ଆ ମନ୍‌ରାଆଡଙ୍‌ ଗିୟ୍‌ଲେ ବରେନ୍‌,
௧௧விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே நுழைந்தபோது, திருமணஆடை அணிந்திராத ஒரு மனிதனை அங்கே பார்த்து:
12 ‘ଏ ଗଡ଼ି, ବିବା ଅଙ୍ଗିନ୍‌ ଏର୍‌ରନେନ୍‌ ଆମନ୍‌ ତେନ୍ନେ ଏଙ୍ଗାଲେ ଗନ୍‌ଲାୟ୍‌?’ ବନ୍‌ଡ ତି ଆ ମନ୍‌ରା ଅଃଜ୍ଜାଲଙ୍‌ଲନେ ।
௧௨நண்பனே, நீ திருமணஆடை இல்லாதவனாக இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.
13 ସିଲତ୍ତେ ରାଜାନ୍‌ ଆ କମ୍ବାରିମରଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, ‘କେନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆସିନ୍‌ ଆଜଙନ୍‌ ଜିଲେ, ଡାଣ୍ଡନ୍‌ ଆଲୋଙଡ୍‌ରେଙନ୍‌ ସେଡ୍‌ବା । ତେତ୍ତେ ଆନିନ୍‌ ୟେୟେଡାନ୍‌ ଡ ରମ୍‌ରମ୍‌ଜିନ୍‌ ଡେଏତୋ ।’”
௧௩அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரர்களைப் பார்த்து: இவனுடைய கையையும் காலையும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.
14 “ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଗୋଗୋୟ୍‌ ମନ୍‌ରା ଅନୋଡ୍ଡେନ୍‌ ଡେଲୋ, ବନ୍‌ଡ ଅସୋୟ୍‌ ମନ୍‌ରା ସନେଡାନ୍‌ ଡେତେ ।”
௧௪அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
15 ତିଆଡିଡ୍‌ ପାରୁସିଞ୍ଜି ଜିରେଞ୍ଜି କି ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ସେକ୍କୁବରନ୍‌ ଅପ୍ପୁଙ୍‌ଡାଲେ ଆ ବର୍ନେଲୋଙନ୍‌ ସରିଡ୍‌ସିଡ୍‌ବରନ୍‌ ଞମ୍‌ଞମନ୍‌ ଆସନ୍‌ ତଙରନ୍‌ ଇୟ୍‌ଲେ ସାଜେଜି ।
௧௫அப்பொழுது, பரிசேயர்கள்போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைசெய்து,
16 ଆରି ଆନିଞ୍ଜି ଆ ସନଣ୍ଡୋଙ୍‌ମରଞ୍ଜି ଡ ଏରୋଦନ୍‌ ଆ ମରାୟ୍‌ନେମର୍‌ଜିଆଡଙ୍‌ ଜିସୁନ୍‌ ଆମଙ୍‌ ଆପ୍ପାୟ୍‌ଲାଜି । ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ବରେଜି, “ଏ ଞନଙ୍‌ତିୟ୍‌ମର୍‌, ଇନ୍‌ଲେନ୍‌ ଜନା ଆମନ୍‌ ଆଜାଡ଼ିନ୍‌ ଆ ବର୍ନେ ବର୍ତନେ, ଆରି ଆମନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ତଙର୍‌ ଆଜାଡ଼ିନ୍‌ ଗାମ୍‌ଲେ ଞନଙନ୍‌ ତିୟ୍‌ତେ, ଆମନ୍‌ ଆନ୍ନିଙ୍‌ଆଡଙ୍‌ ଅଃବ୍ବତଙମ୍, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆମନ୍‌ ଆନ୍ନିଙ୍‌ଆଡଙ୍‌ ଅଃଡ୍ଡୁଲ୍‌ମଡେ ।
௧௬தங்களுடைய சீடர்களையும் ஏரோதியர்களையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் உண்மையுள்ளவரென்றும், தேவனுடைய வழியை உண்மையாக போதிக்கிறவரென்றும், நீர் பட்சபாதமில்லாதவராக இருப்பதால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலை இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
17 ତିଆସନ୍‌ ଆମନ୍‌ ଇନି ଗାମ୍‌ତେ? ଇନ୍‌ଲେନ୍‌ଆଡଙ୍‌ ବର୍ରେନ୍‌, କାଇସରନ୍‌ଆଡଙ୍‌ ପାନୁନ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ ବନାଁୟ୍‌ବରନ୍‌ ଅଡ଼େତେ ପଙ୍‌, ଅଡ଼େ ଇଜ୍ଜା?”
௧௭ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.
18 ବନ୍‌ଡ ଜିସୁନ୍‌ ଆ ପେଲ୍ଲାଞ୍ଜି ଜନାଡାଲେ ବର୍ରନେ, “ଏ ଇସ୍କତ୍ତାମର୍‌ଜି, ଇନିବା ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଏମାଲ୍‌ତିଁୟ୍‌?
௧௮இயேசு, அவர்களுடைய தீயகுணத்தை அறிந்து: மாயக்காரர்களே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?
19 ପାନୁଡାବନ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଅବ୍‌ତୁଜିଁୟ୍‌ବା ।” ଆନିଞ୍ଜି ଅବୟ୍‌ ଆ ଗୁଣ୍ଡାଡାବନ୍‌ ଜିସୁନ୍‌ ଆମଙ୍‌ ପାଙ୍‌ଲାଜି ।
௧௯வரிப்பணத்தை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
20 ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “କେନ୍‌ ଆ ଗୁଣ୍ଡାଡାବ୍‌ଲୋଙନ୍‌ ଆନା ଆ ମୁକ୍କା ଆରି ଆନା ଆଞୁମ୍‌ ଡକୋ?”
௨0அப்பொழுது அவர்: இந்த உருவமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.
21 ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙେଞ୍ଜି, “କାଇସରନ୍‌ ଆ ମୁକ୍କା ଡକୋ ।” ସିଲତ୍ତେ ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଅଙ୍ଗାତେ କାଇସରନ୍‌ଆତେ ତିଆତେ କାଇସରନ୍‌ ତିୟ୍‌ବା, ଆରି ଅଙ୍ଗାତେ ଇସ୍ୱରନ୍‌ଆତେ ତିଆତେ ଇସ୍ୱରନ୍‌ ତିୟ୍‌ବା ।”
௨௧இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
22 ଆନିଞ୍ଜି କେନ୍‌ଆତେ ଆରମ୍‌ଡଙେଞ୍ଜି ସାନ୍ନି ଡେଏଞ୍ଜି, ଆରି ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଅମ୍‌ରେଙ୍‌ଲେ ଜିରେଞ୍ଜି ।
௨௨அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரைவிட்டுப் போய்விட்டார்கள்.
23 ୟନର୍ମେଙନ୍‌ ଇଜ୍ଜା ଆଗ୍ରାମ୍‌ତେଞ୍ଜି ଆ ସାଦୁକିଜି ତି ଆ ଡିନ୍ନା ଜିସୁନ୍‌ ଆମଙ୍‌ ଜିର୍ରାଜି କି ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ବରେଜି,
௨௩உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அன்றையதினம் அவரிடம் வந்து:
24 “ଏ ଞନଙ୍‌ତିୟ୍‌ମର୍‌, ମୋସାନ୍‌ ବର୍ରନେ, ଅବୟ୍‌ ମନ୍‌ରାନ୍‌ ବିବାଡାଲନ୍‌ ଏର୍‌କନୋଡନନ୍‌ ରବୁଏନ୍‌ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆ ଓବ୍ବାନ୍‌ ତି ଜୁଆର୍‌ବଜନ୍‌ ବୟନ୍‌ ବିବାଡାଲନ୍‌ ଆରବୁମରନ୍‌ ଆସନ୍‌ ପସିଜନ୍‌ କୋଡେତୋ ।
௨௪போதகரே, ஒருவன் வாரிசு இல்லாமல் மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து, தன் சகோதரனுக்கு வாரிசு உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே.
25 ଗିଜା, ତେନ୍ନେ ଅମଙ୍‌ଲୋଙ୍‌ଲେନ୍‌ ସାତ ବନୋଞାଙ୍‌ ଡକୋଏଞ୍ଜି; ଆପର୍ତମ୍ମୁମର୍‌ ବିବାଡାଲନ୍‌ ଏର୍‌କନୋଡନନ୍‌ ରବୁଏନ୍‌, ତିଆସନ୍‌ ଆ ଓବ୍ବାନ୍‌ ତି ଜୁଆର୍‌ବଜନ୍‌ ବୟନ୍‌ ବିବାଲନ୍‌ ।
௨௫எங்களுக்குள்ளே சகோதரர்கள் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் திருமணம்செய்து, மரித்து, வாரிசு இல்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுப்போனான்.
26 ଏତ୍ତେଲେମା ଅନବ୍‌ବାଗୁ ବନୋଞାଙ୍‌, ଅନବ୍‌ୟାଗି ବନୋଞାଙ୍‌ ଆରି ଆତନିକ୍କି ଆ ସନ୍ନା ବନୋଞାଙ୍‌ ନିୟ୍‌ ତି ଜୁଆର୍‌ବଜନ୍‌ ବୟନ୍‌ ବିବାଡାଲନ୍‌ ଏର୍‌କନୋଡନନ୍‌ ରବୁଏନ୍‌ ।
௨௬அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரைக்கும் செய்தார்கள்.
27 ଅଡ଼୍‌କୋଞ୍ଜି ଆ ତିକ୍କି ଆଇମରନ୍‌ ନିୟ୍‌ ରବୁଏନ୍‌ ।
௨௭எல்லோருக்கும்பின்பு அந்த பெண்ணும் மரித்துப்போனாள்.
28 ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ସାତ ବନୋଞାଙଞ୍ଜି ତ ତି ଆଇମରନ୍‌ ବୟନ୍‌ ବିବାଲଞ୍ଜି, ୟନର୍ମେଙ୍‌ ଡିନ୍ନାଇଙନ୍‌ ତି ଆଇମରନ୍‌ ସାତ ବନୋଞାଙଞ୍ଜି ଆମଙ୍‌ଲୋଙ୍‌ ସିଲଡ୍‌ ଆନା ଆ ଡୁକ୍ରି ଡେତେ?”
௨௮ஆகவே, உயிர்த்தெழுதலில் அந்த ஏழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள்? அவர்கள் எல்லோரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள்.
29 ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଜାଲଙେଞ୍ଜି, “ଆମ୍ୱେଞ୍ଜି ଡରମ୍ମ ସାସ୍ତ୍ରନ୍‌ ଡ ଇସ୍ୱରନ୍‌ ଆ ବୋର୍ସା ଅଃଗନ୍‌ଲୁଡ୍‌ବେନନ୍‌ ଆସନ୍‌ ଆଡ଼ଆୟ୍‌ତବେନ୍‌ ।
௨௯இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தவறாகப் புரிந்துகொள்ளுகிறீர்கள்.
30 ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜି ୟର୍ମେଙେଞ୍ଜି ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଆନିଞ୍ଜି ଅଃଞାଙ୍‌ବୟ୍‌ନେଜି କି ଅଃସୁଉଂନେଜି, ଆନିଞ୍ଜି ରୁଆଙ୍‌ ପାଙ୍‌ଲଙ୍‌ବର୍‌ମରଞ୍ଜି ଅନ୍ତମ୍‌ ଡକୋତଞ୍ଜି ।
௩0உயிர்த்தெழுதலில் பெண் எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதர்களைப்போல இருப்பார்கள்;
31 ଆରବୁମରଞ୍ଜି ଆ ୟନର୍ମେଙ୍‌ ଆ ବର୍ନେ ଇସ୍ୱରନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଇନି ଗାମ୍‌ଲବେନ୍‌, ତିଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଏପଡ଼େନେ ପଙ୍‌?
௩௧மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா?
32 ଇସ୍ୱରନ୍‌ ଗାମେନ୍‌, ‘ଞେନ୍‌ ଅବ୍ରାମନ୍‌ ଆ ଇସ୍ୱର, ଇସାକନ୍‌ ଆ ଇସ୍ୱର, ଆରି ଜାକୁବନ୍‌ ଆ ଇସ୍ୱର ।’ ଆନିନ୍‌ ଆରବୁମରଞ୍ଜି ଆ ଇସ୍ୱର ତଡ୍‌, ଆମେଙ୍‌ମରଞ୍ଜି ଆ ଇସ୍ୱର ।”
௩௨தேவன் மரித்தோருக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாக இருக்கிறார் என்றார்.
33 ଜିସୁନ୍‌ ଆ ଞନଙ୍‌ ଅମ୍‌ଡଙ୍‌ଡାଲେ ମନ୍‌ରାଞ୍ଜି ସାନ୍ନି ଡେଏଞ୍ଜି ।
௩௩மக்கள் இதைக்கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
34 ଜିସୁନ୍‌ ସାଦୁକିଞ୍ଜିଆଡଙ୍‌ ଅବ୍‌ରିଙ୍‌ରିଙେଞ୍ଜି ଗାମ୍‌ଲେ ପାରୁସିଞ୍ଜି ଆରମ୍‌ଡଙେଞ୍ଜି ଆନିଞ୍ଜି ରୁକ୍କୁଡାଲନ୍‌ ଜିସୁନ୍‌ ଆମଙ୍‌ ଇୟ୍‌ଲାଜି,
௩௪அவர் சதுசேயர்களைப் பேசவிடாமல் வாயடைத்தார் என்று பரிசேயர்கள் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
35 ଆରି ଆମଙ୍‌ଲୋଙଞ୍ଜି ସିଲଡ୍‌ ଅବୟ୍‌ନେ ବନାଁୟ୍‌ବରନ୍‌ ଆପଡ଼େନେମରନ୍‌ ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ମାଲ୍‌ଲେ ବରେନ୍‌,
௩௫அவர்களில் நியாயப்பண்டிதன் ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:
36 “ଏ ଞନଙ୍‌ତିୟ୍‌ମର୍‌, ବନାଁୟ୍‌ବର୍‌ଲୋଙନ୍‌ ଅଙ୍ଗା ବନାଁୟ୍‌ ସୋଡ଼ା?”
௩௬போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கட்டளை முதன்மையானது என்று கேட்டான்.
37 ଜିସୁନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙେନ୍‌, “‘ଆମ୍ୱେନ୍‌ ସମ୍ପରା ଉଗର୍‌ବେନ୍‌, ସମ୍ପରା ପରାନ୍ନାବେନ୍‌ ଡ ସମ୍ପରା ମନ୍ନବେନ୍‌ ତିୟ୍‌ଲେ ପ୍ରବୁ ଇସ୍ୱରବେନ୍‌ଆଡଙ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ବା ।’
௩௭இயேசு அவனைப் பார்த்து: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புசெலுத்துவாயாக;
38 କେନ୍‌ଆତେ ମା ସୋଡ଼ା ଆରି ପର୍ତମ୍ମୁ ବନାଞନ୍‌ ।
௩௮இது முதலாம் பெரிய கட்டளை.
39 ଅନବ୍‌ବାଗୁ ବନାଞନ୍‌ କେନ୍‌ଆତେ, ‘ଆମ୍ୱେନ୍‌ ତୟ୍‌ଲିସିଂମର୍‌ବେନ୍‌ଆଡଙ୍‌ ଆମ୍ବେନ୍‌ଡମ୍‌ ଅନ୍ତମ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ବା ।’
௩௯இதற்கு இணையாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே.
40 କେନ୍‌ ବାଗୁ ବନାଁୟ୍‌ଲୋଙନ୍‌ ଅଡ଼୍‌କୋ ବନାଁୟ୍‌ବରନ୍‌ ଡ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ଆ ଞନଙ୍‌ ସିନ୍‌ସନୟ୍‌ତେ ।”
௪0இவ்விரண்டு கட்டளைகளிலும் நியாயப்பிரமாணம் முழுவதும், தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
41 ପାରୁସିଞ୍ଜି ଇୟ୍‌ଲାୟ୍‌ ରୁକ୍କୁନେଞ୍ଜି ଆଡିଡ୍‌, ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି,
௪௧பரிசேயர்கள் கூடியிருக்கும்போது, இயேசு அவர்களைப் பார்த்து:
42 “କ୍ରିସ୍ଟନ୍‌ ଆ ଆସନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଇନି ଏବ୍‌ଡିସୟ୍‌ତେ? ଆନିନ୍‌ ଆନା ଆ କେଜ୍ଜା?” ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙେଞ୍ଜି, “ଆନିନ୍‌ ଦାଉଦନ୍‌ ଆ କେଜ୍ଜା ।”
௪௨கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.
43 ଜିସୁନ୍‌ ଗାମେନ୍‌, “ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଦାଉଦନ୍‌ ଏଙ୍ଗାଲେ କ୍ରିସ୍ଟନ୍‌ଆଡଙ୍‌ ‘ପ୍ରବୁ’ ଗାମ୍‌ତେ? ଦାଉଦନ୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ବୟନ୍‌ ବର୍ରନେ,
௪௩அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியானவராலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?
44 ‘ପ୍ରବୁନ୍‌ ପ୍ରବୁଞେନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, ଞେନ୍‌ ଅଙ୍ଗା ଜାୟ୍‌ ବନେରାନମ୍‌ଜିଆଡଙ୍‌ ତାଲ୍‌ଜଙ୍‌ନମ୍‌ ଆ ଜାୟ୍‌ତା ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଡକ୍କୋଆଜି, ତି ଜାୟ୍‌ ଆମନ୍‌ ଅର୍ଜଡ଼ୋମ୍‌ଗଡ୍‌ଞେନ୍‌ ତଙ୍କୁମ୍‌ଲେ ଡକୋନା ।’
௪௪நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.
45 ଦାଉଦନ୍‌ କ୍ରିସ୍ଟନ୍‌ଆଡଙ୍‌ ‘ପ୍ରବୁ’ ଗାମ୍‌ତେ, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ କ୍ରିସ୍ଟନ୍‌ ଏଙ୍ଗାଲେ ଦାଉଦନ୍‌ ଆ କେଜ୍ଜା ଅଲ୍‌ଡେଏ?”
௪௫தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி என்றார்.
46 ସିଲତ୍ତେ ଆନ୍ନିଙ୍‌ ବପଦ ଓୟ୍‌ଲେ ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ଅଃଜ୍ଜାଲଙ୍‌ଲଜି, ଆରି ତି ଆ ଡିନ୍ନା ସିଲଡ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ସନେକ୍କୁବରନ୍‌ ଆସନ୍‌ ଆନ୍ନିଙ୍‌ ଅଃନ୍ନୋମଙ୍‌ଲଜି ।
௪௬அதற்கு மறுமொழியாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லமுடியாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.

< ମାତିଉ 22 >