< ମାର୍କ 9 >
1 ଜିସୁନ୍ ଆରି ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଆଜାଡ଼ିଡମ୍ ବର୍ତବେନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ରାଜ୍ୟ ବୋର୍ସାନ୍ ବାତ୍ତେ ଆଜିର୍ତାଞନ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଗିଜେଞ୍ଜି ଜାୟ୍ ତେନ୍ନେ ଆତନଙନ୍ ଆ ମନ୍ରାଜି ଲାଙ୍ଲେନ୍ନେ, ରନବୁନ୍ ଏର୍ମନାୟ୍ମାଜନ୍ ଡକୋତଞ୍ଜି ।”
௧இயேசு அவர்களைப் பார்த்து: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடு வருவதைப் பார்ப்பதற்குமுன்பு, மரிப்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
2 ତୁଡ୍ରୁ ଡିନ୍ନା ଆ ତିକ୍କି ପିତ୍ରନ୍, ଜାକୁବନ୍ ଡ ଜନନ୍ ଆନ୍ନାଡାଲେ ଜିସୁନ୍ କେନ୍ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଅବୟ୍ ଡେଙ୍ଗା ବରୁନ୍ ଆ ତୋଣ୍ଡୋ ଓରୋଙେଞ୍ଜି ।
௨ஆறு நாட்களுக்குப்பின்பு, இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார்.
3 ଆରି, ଆନିନ୍ ଆତେମଡଞ୍ଜି ବାଙ୍ସାୟ୍ଲନେ, ଆ ସିନ୍ରିନ୍ ଏତ୍ତେଲେ ଆ ସାଆର୍ ଆରି ଏତ୍ତେଲେ ଆ ଜେଏ ଡେଏନ୍ ଡ, ପୁର୍ତିନ୍ ଅନ୍ନିଙ୍ ଆ ତୋବ୍କାବ୍ମର୍ ଏତ୍ତେଲେ, ଅବ୍ଜେଏଲେ ଅଃର୍ରପ୍ତିଏ ।
௩அவருடைய உடை உறைந்த மழையைப்போல பூமியிலே எந்தவொரு நபராலும் வெளுக்கக்கூடாத வெண்மையாகப் பிரகாசித்தது.
4 ଆରି, ମୋସାନ୍ ଡ ଏଲିଅନ୍ ଜିସୁନ୍ ସରିନ୍ ଆକ୍ରଡାଡ଼ିଲଞ୍ଜି ଞଙ୍ନେମରଞ୍ଜି ଗିଜେଞ୍ଜି ।
௪அப்பொழுது மோசேயும் எலியாவும் இயேசுவோடு பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.
5 ସିଲତ୍ତେ ପିତ୍ରନ୍ ଜିସୁନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଏ ଞନଙ୍ତିୟ୍ମର୍, ଇନ୍ଲେଞ୍ଜି କେନ୍ତେନ୍ନେ ଡକୋ ତିଆସନ୍ ବୟ୍ଲେଙ୍, ଇନ୍ଲେଞ୍ଜି ୟାଗି ଅନ୍ସିଙନ୍ ଏଗୁତାୟ୍, ଆମନ୍ ଆସନ୍ ଅବୟ୍, ମୋସାନ୍ ଆସନ୍ ଅବୟ୍ ଆରି ଏଲିଅନ୍ ଆସନ୍ ଅବୟ୍ ।”
௫அப்பொழுது பேதுரு இயேசுவைப் பார்த்து: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.
6 ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନିଞ୍ଜି ଆକ୍ରାନ୍ ବତଙେଞ୍ଜି । ତିଆସନ୍ ପିତ୍ରନ୍ ଇନି ଗାମ୍ଲେ ଜାଲଙେ ତିଆତେ ଆନିନ୍ ଅଃଜ୍ଜନାଲୋ ।
௬அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால், தான் பேசுகிறது என்ன என்று தெரியாமல் இப்படிச் சொன்னான்.
7 ଆରି, ବକୋପ୍ପା ମେଗନ୍ ଜିର୍ରେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଇୟ୍ଲାୟ୍ ରୁବେଜି, ଆରି ତି ଆ ମେଗଲୋଙ୍ ସିଲଡ୍ କେନ୍ ଆ ବର୍ନେ ଅଡ଼ୋଲାୟ୍, “କେନ୍ଆନିନ୍ ଡନୁଙ୍ୟମ୍ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ଞେନ୍, କେନ୍ ଆ ବର୍ନେନ୍ ଅମ୍ଡଙ୍ବା ।”
௭அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவர் சொல்வதைக் கேளுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.
8 ଆରି, ଏରବ୍ବୋମଙ୍ଡାଗୋ ଏର୍ରେ ଆମଙଞ୍ଜି ଆରାଙାଙେଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ସରିନ୍ ଜିସୁନ୍ଆଡଙ୍ ତୁମ୍ ଗିଜେଞ୍ଜି, ଆରି ଆନ୍ନିଙ୍ଆଡଙ୍ ଅଃଗିୟ୍ଲଜି ।
௮உடனே அவர்கள் சுற்றிலும் பார்த்தபோது, இயேசுவைத்தவிர வேறுயாரையும் பார்க்கவில்லை.
9 ଆନିଞ୍ଜି ବରୁନ୍ ସିଲଡ୍ ଆପ୍ରଡ୍ଲନାଞଞ୍ଜି ଆଡିଡ୍ ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଆକ୍ରାନ୍ ବରେଞ୍ଜି, “ଆମ୍ୱେଞ୍ଜି ଇନିଜି ଇନିଜି ଏଗିଜେନ୍ ତି ଅଡ଼୍କୋନ୍, ଆରବୁମରଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ମନ୍ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ୟର୍ମେଙେନ୍ ଜାୟ୍ ଆନ୍ନିଙ୍ଆଡଙ୍ ଏବର୍ଡଙେ ।”
௯அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும்வரைக்கும், நீங்கள் பார்த்தவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.
10 ସିଲତ୍ତେ ଆନିଞ୍ଜି ତି ଆ ବର୍ନେ ଞମ୍ଲେ ଆରବୁମରଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ୟନର୍ମେଙନ୍ ଇନି? ତି ଆ ବର୍ନେଲୋଙ୍ ଆନିଞ୍ଜି ତର୍ଡମ୍ କଡାଡ଼ିଲଞ୍ଜି ।
௧0மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பது என்னவென்று அவர்கள் ஒருவரோடொருவர் விசாரித்து, அந்த வார்த்தையைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டு:
11 ଆରି, ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଆମ୍ମୁଙ୍ ଏଲିଅନ୍ ରୟ୍ ଜିର୍ତାୟ୍ ଗାମ୍ଲେ, ସାସ୍ତ୍ରିଞ୍ଜି କେନ୍ ଆ ବର୍ନେ ଇନିବା ବର୍ତଞ୍ଜି?”
௧௧எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்களே, அது எப்படி என்று அவரிடம் கேட்டார்கள்.
12 ସିଲତ୍ତେ ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଏଲିଅନ୍ ଆମ୍ମୁଙ୍ ଜିର୍ରେ ଅଡ଼୍କୋନ୍ ଆ କାବ୍ବାଡ଼ାଜି ଅନବ୍ଜାଡାନ୍ ଆ ବର୍ନେ ଆଜାଡ଼ିନ୍, ବନ୍ଡ ମନ୍ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଜବ୍ର ପରାନ୍ଡଣ୍ଡନ୍ ଡେତେ ଆରି ଆନିନ୍ଆଡଙ୍ ବାସ୍ସେତଜି, କେନ୍ଆତେ ଏଙ୍ଗାଲେ ଆ ବର୍ନେନ୍ ଆଇଡିଡନ୍ ଡକୋ?
௧௨அவர் மறுமொழியாக: எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது உண்மைதான்; அல்லாமலும், மனிதகுமாரன் பல பாடுகள்பட்டு, அவமதிக்கப்படுவார் என்று, அவரைக்குறித்து எழுதியிருக்கிறதே அது எப்படி என்றார்.
13 ବନ୍ଡ ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ଏଲିଅନ୍ ଜିର୍ରାୟ୍ନି, ଆରି ଆନିନ୍ ଆସନ୍ ଏଙ୍ଗାଲେ ଆଇଡିଡନ୍ ଡକୋ, ତିଅନ୍ତମ୍ ମା ଆନିଞ୍ଜି ଏଙ୍ଗାଲେ ଲଡଜେଞ୍ଜି, ତିଆତେ ଆନିନ୍ଆଡଙ୍ ଏତ୍ତେଏଞ୍ଜି ।”
௧௩ஆனாலும் எலியா வந்துவிட்டான், அவனைக்குறித்து எழுதியிருக்கிறபடி தங்களுக்கு விருப்பமானபடி அவனுக்குச் செய்தார்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
14 ତିକ୍କି ଆନିଞ୍ଜି ଆନ୍ନା ଞଙ୍ନେମରଞ୍ଜି ଆମଙ୍ ଜିର୍ରେ ଇୟ୍ଲେ ଗିଜେଞ୍ଜି, ଏର୍ରେ ଆମଙଞ୍ଜି ଗୋଗୋୟ୍ନେଡମ୍ ମନ୍ରାଞ୍ଜି ଆରି ସାସ୍ତ୍ରିଞ୍ଜି ଆନିଞ୍ଜି ବୟନ୍ ଅଲ୍ଡୁଲ୍ବାୟ୍ତଜି ।
௧௪பின்பு அவர் சீடர்களிடம் வந்தபோது, அவர்களைச் சுற்றி மக்கள்கூட்டம் நிற்கிறதையும், அவர்களோடு வேதபண்டிதர்கள் வாக்குவாதம்பண்ணுகிறதையும் பார்த்தார்.
15 ମନ୍ରାଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ଗିୟ୍ଲେ ଆକ୍ରାନ୍ ସାନ୍ନି ଡେଏଞ୍ଜି ଆରି ଇର୍ରାଜି କି ଇୟ୍ଲାୟ୍ ଲୋମେଜି ।
௧௫மக்கள்கூட்டத்தினர் அவரைப் பார்த்தவுடன் அதிக ஆச்சரியப்பட்டு, ஓடிவந்து, அவரை வாழ்த்தினார்கள்.
16 ସିଲତ୍ତେ ଆନିନ୍ ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଆମ୍ୱେଞ୍ଜି ଇନିବା ଆନିଞ୍ଜି ବୟନ୍ ଏଲ୍ଡୁଲ୍ବାୟ୍ତେ?”
௧௬அவர் வேதபண்டிதர்களைப் பார்த்து: நீங்கள் இவர்களோடு எதைக்குறித்து வாக்குவாதம்பண்ணுகிறீர்கள் என்று கேட்டார்.
17 ମନ୍ରାଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ଅବୟ୍ନେ ଆନିନ୍ଆଡଙ୍ ଜାଲଙେନ୍, “ଏ ଞନଙ୍ତିୟ୍ମର୍, ଞେନ୍ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ଞେନ୍ ଅମଙ୍ନମ୍ ଓରୋଙ୍ଲାୟ୍ବନ୍, ଆନିନ୍ଆଡଙ୍ ଅବୟ୍ ଆ ଜାଡ୍ଡା ବୁତନ୍ ସୁମେନ୍,
௧௭அப்பொழுது மக்கள்கூட்டத்தில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன்.
18 ତି ବୁତନ୍, ଅଙ୍ଗାଲୋଙ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଞମ୍ତେ, ତେତ୍ତେ ପସିଜନ୍ଆଡଙ୍ ଜାୟ୍ତାନ୍ ଅବ୍ସେଡ୍ତେ ଆରି ଆ ତଅଡ୍ଗଡନ୍ ପୋନ୍ସେରାନ୍ ଡୁଙ୍ତନାୟ୍, ରମ୍ରମ୍ଜିତନେ, ଆରି ଆନିନ୍ ଅସର୍ତେ, ତି ଆ ବୁତ ଗଙ୍ଗଙନ୍ ଆସନ୍ ଞଙ୍ନେମର୍ନମ୍ଜିଆଡଙ୍ ବର୍ରାଜି, ବନ୍ଡ ଆନିଞ୍ଜି ଅଃର୍ରପ୍ତିଲଜି ।”
௧௮அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களிடம் கேட்டேன்; அவர்களால் முடியவில்லை என்றான்.
19 ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଏ ଏର୍ଡର୍ନେ କେଜ୍ଜାଜି, ଡିଅଙ୍ଗା ଡିନ୍ନା ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ସରିନ୍ ଡକୋନାୟ୍? ଡିଅଙ୍ଗା ଡିନ୍ନା ଞଣ୍ଡ୍ରମ୍ବେଞ୍ଜି ଞେନ୍ ସଏଆୟ୍? ତି ଓବ୍ବାସିଜନ୍ ଅମଙ୍ଞେନ୍ ଓରୋଙାୟ୍ବା ।”
௧௯அவர் மறுமொழியாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார்.
20 ସିଲତ୍ତେ ଆନିଞ୍ଜି ଓବ୍ବାସିଜନ୍ ଜିସୁନ୍ ଆ ମୁକ୍କାବା ଓରୋଙ୍ଲାଜି । ଆରି, ଜିସୁନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଆଗ୍ରିଜେନ୍ ସିଲତ୍ତେମା ତି ବୁତନ୍ ଓବ୍ବାସିଜନ୍ଆଡଙ୍ ବବରନ୍ତଙନ୍ ପଡ୍ଡେଡେନ୍ ଆରି ଆନିନ୍ ଲବଲୋଙନ୍ ଅସେଡ୍ଡାଲେ ଆ ତଅଡ୍ଗଡନ୍ ପୋନ୍ସେରାନ୍ ଅମ୍ଡୁଙ୍ଡାଲେ ଗଡ଼ାୟ୍ ଗଡ଼ାୟ୍ଲନେ ।
௨0அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைப் பார்த்தவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான்.
21 ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଜିସୁନ୍ ପସିଜନ୍ ଆ ବାପାଆଡଙ୍ ବରେନ୍, “ଡିଅଙ୍ଗା ଡିନ୍ନା ଡେଏନ୍ କେନ୍ଆନିନ୍ ଏନ୍ନେଗୋ ଡେତେ?” ଆନିନ୍ ଜାଲଙେନ୍, “ଆ ସନ୍ନା ଇଙନ୍ ସିଲଡ୍ ।”
௨௧இயேசு அவனுடைய தகப்பனைப் பார்த்து: எவ்வளவு காலங்களாக இப்படி இருக்கிறது? என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயதிலிருந்தே இப்படி இருக்கிறது;
22 “ବୁତନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ରନବ୍ବୁନ୍ ଆସନ୍ ବବେଡ଼ାନ୍ କି ବବେଡ଼ାନ୍ ତଗୋଲୋଙନ୍ ଡ ଡାଆଲୋଙନ୍ ଗବ୍ଲୋତେ, ତିଆସନ୍ ଆମନ୍ ଇନ୍ନିଙ୍ ଲୁମ୍ଲେ ରପ୍ତିଏନ୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ସାୟୁମ୍ଡାଲେ ଇନ୍ଲେଞ୍ଜି ଆସନ୍ ମନଙ୍ କାବ୍ବାଡ଼ାନ୍ ଲୁମା ।”
௨௨இவனைக் கொல்லுவதற்காக அந்த ஆவி அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் தள்ளியது. நீர் ஏதாவது செய்யமுடியுமானால், எங்கள்மேல் மனமிறங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான்.
23 ସିଲତ୍ତେ ଜିସୁନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଇନି ଗାମେନ୍? ଲୁମ୍ଲେ ରପ୍ତିଏନ୍ ଡେନ୍! ଡର୍ନେମରନ୍ ଆ ଡନେଲୋଙ୍ ଅଡ଼୍କୋନ୍ ଡେଆୟ୍ତେ ।”
௨௩இயேசு அவனைப் பார்த்து: நீ விசுவாசித்தால் நடக்கும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் சாத்தியமாகும் என்றார்.
24 ସିଲତ୍ତେମା ପସିଜନ୍ ଆ ବାପା ସୋଡ଼ା ସର୍ରଙନ୍ ବାତ୍ତେ ବର୍ରନେ, “ଞେନ୍ ଡର୍ତନାୟ୍, ଏଙ୍ଗାଲ୍ଡେନ୍ ଞେନ୍ ଗୋଗୋୟ୍ ଡର୍ନାୟ୍ ତିଆସନ୍ ଞେନ୍ଆଡଙ୍ ସାୟୁମିଁୟ୍ ।”
௨௪உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடு சத்தமிட்டுச் சொன்னான்.
25 ତିକ୍କି ମନ୍ରାଞ୍ଜି ରୁକ୍କୁଲନ୍ ଆଜିର୍ରାଞଞ୍ଜି ଗିୟ୍ଲେ, ଜିସୁନ୍ ତି ଏର୍ମଡ଼ିର୍ ପୁରାଡ଼ାନ୍ଆଡଙ୍ ବବ୍ତଙ୍ଲେ ବର୍ରନେ, “ଏ ଆକାଲାନ୍ ଆରି ଆଜାଡ୍ଡାନ୍ ଆ ପୁରାଡ଼ା, ଞେନ୍ ଆମନ୍ଆଡଙ୍ ବର୍ତମ୍, କେନ୍ ଆମଙନ୍ ସିଲଡ୍ ଡୁଙ୍ଲନ୍ ଜିରା, ଆରି ଆଙ୍ଗିୟ୍ଜା କେନ୍ ଆ ଅମ୍ମନ୍ ଗନ୍ଡଙେ ।”
௨௫அப்பொழுது மக்கள் கூட்டமாக ஓடிவருகிறதை இயேசு பார்த்து, அந்த அசுத்தஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனைவிட்டு வெளியே போ, இனி இவனுக்குள் மீண்டும் போகக்கூடாது என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார்.
26 ସିଲତ୍ତେ ଆନିନ୍ ସଜିର୍ଡାଲେ ଓବ୍ବାସିଜନ୍ଆଡଙ୍ ଆକ୍ରାନ୍ ପଡ୍ଡେଃଡାଲେ ଡୁଙ୍ଲନ୍ ଜିରେନ୍, ଆରି ପସିଜନ୍ ଆରବୁଗୋ ଡେଏନ୍, ତିଆସନ୍ ଅଡ଼୍କୋ ମନ୍ରାନ୍ ବର୍ରଞ୍ଜି, “ଆନିନ୍ ରବୁଏନ୍ ।”
௨௬அப்பொழுது அந்த ஆவி சத்தமிட்டு, அவனை அதிகமாக அலைக்கழித்து வெளியேபோனது. அவன் மரித்துப்போனான் என்று மக்கள் சொல்லத்தக்கதாக மரித்தவன்போல கிடந்தான்.
27 ବନ୍ଡ ଜିସୁନ୍ ଆସିନ୍ ଞମ୍ଲେ ଆନିନ୍ଆଡଙ୍ ଅବ୍ଡୋଏନ୍, ଆରି ଆନିନ୍ ତନଙେନ୍ ।
௨௭இயேசு அவன் கையைப் பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான்.
28 ଆରି, ଜିସୁନ୍ ଅସିଙନ୍ ଆଜିର୍ରାଞନ୍ ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ଅଜନା ବରେଞ୍ଜି, “ଇନ୍ଲେଞ୍ଜି ଇନିବା ତି ଆ ବୁତ ଗଙ୍ଲେ ଏଃର୍ରପ୍ତିଲାୟ୍?”
௨௮அவர் வீட்டிற்கு வந்தபொழுது, அவருடைய சீடர்கள்: அந்த ஆவியைத் துரத்திவிட எங்களால் ஏன் முடியவில்லை என்று அவரிடம் கேட்டார்கள்.
29 ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଜାଲଙେନ୍, “ପାର୍ତନାନ୍ ତୁମ୍ ବାତ୍ତେ ଏନ୍ନେଗନ୍ ଆ ବୁତ ରପ୍ତି ଗଙ୍ତନେ ।”
௨௯அதற்கு அவர்: இந்தவகைப் பிசாசை ஜெபத்தினாலும் உபவாசத்தினாலும்தவிர மற்ற எந்தவிதத்திலும் துரத்தமுடியாது என்றார்.
30 ଜିସୁନ୍ ଡ ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜି ତେତ୍ତେ ସିଲଡ୍ ଜିର୍ରେ ଗାଲିଲିଗଡ୍ ଜିରେଞ୍ଜି । ଆରି ଆନିନ୍ ତିଆତେ ଆନ୍ନିଙ୍ ଜନାଡଙେଜି ତଡ୍ ଗାମେନ୍ ।
௩0பின்பு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அது யாருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பினார்.
31 ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନିନ୍ ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍ କେନ୍ ଆ ବର୍ନେ ବର୍ରନ୍ ଞନଙନ୍ ତିୟେଞ୍ଜି, “ମନ୍ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ମନ୍ରାଞ୍ଜି ଆସିଲୋଙ୍ ସୋରୋପ୍ପାୟ୍ତନେ, ଆନିଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ରବ୍ବୁତଜି, ଆରି ଆନିନ୍ ରବୁଏନ୍ ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ୟାଗି ଡିନ୍ନା ଆ ତିକ୍କି ୟର୍ମେଙ୍ତେ ।”
௩௧ஏனென்றால், மனிதகுமாரன் மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம்நாளிலே உயிரோடு எழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீடர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார்.
32 ବନ୍ଡ ଞଙ୍ନେମରଞ୍ଜି ତି ଆ ବର୍ନେ ଅଃଗନ୍ଲୁଡ୍ଲଜି ଆରି ଆନିନ୍ଆଡଙ୍ ବନରନ୍ ଆସନ୍ ବତଙେଞ୍ଜି ।
௩௨அவர்களோ அந்த வார்த்தையைப் புரிந்துகொள்ளவில்லை, அதைக்குறித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள்.
33 ତିକ୍କି ଆନିଞ୍ଜି କପର୍ନାଉମନ୍ ଜିର୍ରାଜି । ଜିସୁନ୍ ଅସିଙନ୍ ତୁଙ୍ଲେ, ଞଙ୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍ ଇୟ୍ଲାୟ୍ ବରେଜି, “ଆମ୍ୱେଞ୍ଜି ତଙରନ୍ ଇନି ଏଲ୍ଡୁଲ୍ବାଞେନ୍?”
௩௩அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களைப் பார்த்து: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள் வாக்குவாதம்பண்ணினீர்கள் என்று கேட்டார்.
34 ବନ୍ଡ ଆନିଞ୍ଜି ରିଙ୍ଲନ୍ ଡକୋଲଞ୍ଜି, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନା ସତଙ୍ ଗାମ୍ଲେ ଆନିଞ୍ଜି ତର୍ଡମ୍ ତଙର୍ଲୋଙନ୍ ଅଲ୍ଡୁଲ୍ବାଞେଞ୍ଜି ।
௩௪அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள்; ஏனென்றால், அவர்கள் தங்களுக்குள் எவன் பெரியவன் என்று வழியில் வாக்குவாதம்பண்ணினார்கள்.
35 ସିଲତ୍ତେ ଆନିନ୍ ତଙ୍କୁମ୍ଡାଲେ ବାରଜଣଞ୍ଜିଆଡଙ୍ ଓଡ୍ଡେଡାଲେ, ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଆନା ସବ୍ତଙ୍ନେନ୍ ଆସନ୍ ସାୟ୍ତେ, ଆନିନ୍ ଅଡ଼୍କୋଞ୍ଜି ସିଲଡ୍ ଅବ୍ସନ୍ନାନେତୋ ଆରି ଅଡ଼୍କୋଞ୍ଜି ଆ କମ୍ୱାରିମର୍ ଡେଏତୋ ।”
௩௫அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிரண்டுபேரையும் அழைத்து: யாராவது முதல்வனாக இருக்கவிரும்பினால் அவன் எல்லோருக்கும் கீழானவனும், எல்லோருக்கும் ஊழியக்காரனுமாக இருக்கவேண்டும் என்று சொல்லி;
36 ଆରି ଜିସୁନ୍, ଅବୟ୍ ସନ୍ନାସିଜନ୍ଆଡଙ୍ ଓରୋଙ୍ଡାଲେ ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଆ ମୁକ୍କାବା ତବ୍ନଙେନ୍ କି ତି ପସିଜନ୍ କୋଣ୍ଡୋଡାଲେ ଞଙ୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି,
௩௬ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு:
37 “ଆନା ଅଞୁମ୍ଲୋଙ୍ଞେନ୍ କେନ୍ ଅନ୍ତମ୍ ସନ୍ନାସିଜଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ଅବୟ୍ନେଆଡଙ୍ ଜାତେ, ଆନିନ୍ ଞେନ୍ଆଡଙ୍ ଜାତେ, ଆନା ଞେନ୍ଆଡଙ୍ ଜାତେ, ଆନିନ୍ ଞେନ୍ଆଡଙ୍ ତୁମ୍ ଅଃଜ୍ଜାଏ, ଆର୍ପାୟ୍ ଞେନ୍ଆଡଙ୍ ଆରାପ୍ପାୟ୍ଲିଞନ୍ ଆ ମନ୍ରାଆଡଙ୍ ନିୟ୍ ଜାତେ ।”
௩௭இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்.
38 ଜନନ୍ ଜିସୁନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଏ ଞନଙ୍ତିୟ୍ମର୍, ଅଞୁମ୍ଲୋଙ୍ନମ୍ ଅବୟ୍ ମନ୍ରାନ୍ ବୁତନ୍ ଆଗ୍ରଙେନ୍ ଇନ୍ଲେନ୍ ଏଗିୟ୍ଲାୟ୍, ବନ୍ଡ ଆନିନ୍ଆଡଙ୍ ଇନ୍ଲେନ୍ ଏରଙ୍ଲାୟ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନିନ୍ ମରାୟ୍ନେଲେନ୍ ଆ ମନ୍ରା ତଡ୍ ।”
௩௮அப்பொழுது யோவான் அவரைப் பார்த்து: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைப் பார்த்தோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவன், எனவே நாங்கள் அவனைத் தடுத்தோம் என்றான்.
39 ବନ୍ଡ ଜିସୁନ୍ ଗାମେନ୍, “ଆନିନ୍ଆଡଙ୍ ଏରଙ୍ଡଙ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଅଙ୍ଗା ମନ୍ରା ଅଞୁମ୍ଲୋଙ୍ଞେନ୍ ବୋର୍ସା କାବ୍ବାଡ଼ାନ୍ ଲୁମ୍ତେ, ଆନିନ୍ ଏରବ୍ବୋମଙ୍ଡାଗୋ ଞେନ୍ଆଡଙ୍ ଅଃବ୍ବର୍ଡୋଙିଁୟ୍ ।
௩௯அதற்கு இயேசு: அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதம் செய்கிறவன் எளிதாக என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான்.
40 ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନା ବିରୁଦମର୍ଲେନ୍ ତଡ୍ ଆନିନ୍ ଡନେମର୍ଲେନ୍ ।
௪0நமக்கு விரோதமாக இல்லாதவன் நம்மோடு இருக்கிறான்.
41 ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଆଜାଡ଼ିଡମ୍ ବର୍ତବେନ୍, ଆମ୍ୱେଞ୍ଜି ମନ୍ରାଞେଞ୍ଜି, ତିଆସନ୍ ଆନା ଅଞୁମ୍ଲୋଙ୍ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବଗିନା ଡାଆନ୍ ଗାଡାନେନ୍ ଆସନ୍ ତିୟ୍ତବେନ୍, ଆନିନ୍ ଏଙ୍ଗାଲେଜନଙ୍ ଆ ବର୍ତନ୍ନାନ୍ ଅଃନ୍ନବ୍ଅଡ଼ଜେ ।”
௪௧நீங்கள் கிறிஸ்துவை உடையவர்களாக இருக்கிறதினாலே, என் நாமத்தினாலே உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை பெறாமல் போவதில்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
42 ଜିସୁନ୍ ଆରି ବର୍ରନେ, “ଅମଙ୍ଞେନ୍ ଆଡର୍ତନେଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ଆନ୍ନିଙ୍ଆଡଙ୍ ଅବୟ୍ନେ, ଅଙ୍ଗା ମନ୍ରା ଇର୍ସେଲୋଙନ୍ ଗବ୍ଲୋତେ, ତି ଆ ମନ୍ରା ଆ ସଙ୍କାଲୋଙ୍ ଅବୟ୍ ସୋଡ଼ା ଗୋର୍ନାଅରନ୍ ୟୋଡ୍ଲୋଙ୍ ୟୋଡ୍ଲେ ଆନିନ୍ଆଡଙ୍ ସମେଁୟ୍ଣ୍ଡ୍ରାଲୋଙନ୍ ଆ ସେଡ୍ସେଡେନ୍ ଆନିନ୍ ଆସନ୍ ମନଙ୍ ଡେତେ ବନ୍ ।
௪௨என்னிடம் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி, கடலில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாக இருக்கும்.
43 ଆରି, ଅସିବେନ୍ ଆମ୍ୱେନ୍ଆଡଙ୍ ଇର୍ସେଲୋଙନ୍ ଗବ୍ଲୋଲବେନ୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ତିଆତେ ଗଡ୍ଲେ ସେଡ୍ବା, ବାର୍ସିନ୍ ଅଃପ୍ପଞିଡେନ୍ ଆ ତଗୋସିଂଲୋଙ୍ ଜନିରନ୍ ସିଲଡ୍ ଆର୍ପାୟ୍ ଆମୋଡ୍ଡେୟ୍ସିନ୍ ଅନମେଙ୍ଲୋଙନ୍ ଗଙ୍ଗନନ୍ ଆମ୍ୱେନ୍ ଆସନ୍ ମନଙ୍ । (Geenna )
௪௩உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கைகள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திற்குப் போவதைவிட, ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
44 ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ତଗୋସିଙନ୍ ଆ ବୋବ୍ବୋଡ୍ଜି ଅଃର୍ରବୁଏଜି, ଆରି ତଗୋନ୍ ଅଃପ୍ପଞିଡେ ।
௪௪அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும்.
45 ଆରି, ତାଲ୍ଜଙ୍ବେନ୍ ଆମ୍ୱେନ୍ଆଡଙ୍ ଇର୍ସେଲୋଙନ୍ ଗବ୍ଲୋଲବେନ୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ତିଆତେ ଗଡ୍ଲେ ସେଡ୍ବା, ବାର୍ଜଙନ୍ ତଗୋସିଂଲୋଙନ୍ ଆରସେଡ୍ତବେନ୍ ସିଲଡ୍ ଆର୍ପାୟ୍ ଆସୋତ୍ତାନ୍ ଅନମେଙ୍ଲୋଙନ୍ ଗଙ୍ଗନନ୍ ଆମ୍ୱେନ୍ ଆସନ୍ ମନଙ୍ । (Geenna )
௪௫உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கால்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, கால்கள் நடக்கமுடியாதவனாக ஜீவனுக்குள் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
46 ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ତଗୋସିଙନ୍ ଆ ବୋବ୍ବୋଡ୍ଜି ଅଃର୍ରବୁଏଜି, ଆରି ତଗୋନ୍ ଅଃପ୍ପଞିଡେ ।
௪௬அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும்.
47 ଆରି, ଅମଡ୍ବେନ୍ ଆମ୍ୱେନ୍ଆଡଙ୍ ଇର୍ସେଲୋଙନ୍ ଗବ୍ଲୋଲବେନ୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ତିଆତେ ତବ୍ଲେ ସେଡ୍ବା, ବାର୍ମଡନ୍ ତଗୋସିଂଲୋଙନ୍ ଏରସେଡ୍ତେନ୍ ସିଲଡ୍ ଆର୍ପାୟ୍ ଆମିୟ୍ମଡନ୍ ବାତ୍ତେ ଇସ୍ୱରନ୍ ଆ ରାଜ୍ୟଲୋଙ୍ ଗଙ୍ଗନନ୍ ଆମ୍ୱେନ୍ ଆସନ୍ ମନଙ୍ । (Geenna )
௪௭உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
48 ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ତଗୋସିଙନ୍ ଆ ବୋବ୍ବୋଡ୍ଜି ଅଃର୍ରବୁଏଜି, ଆରି ତଗୋନ୍ ଅଃପ୍ପଞିଡେ ।”
௪௮அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும்.
49 “ଅନମଙନ୍ ଏଙ୍ଗାଲେ ବସିଡନ୍ ବାତ୍ତେ ମନବ୍ନଙନ୍ ଡେତେ, ଏତ୍ତେଲେ ଅଡ଼୍କୋ ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ତଗୋନ୍ ବାତ୍ତେ ମନବ୍ନଙନ୍ ଡେତେ ।”
௪௯எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனிதனும் அக்கினியினால் உப்பிடப்படுவான்.
50 “ବସିଡନ୍ ମନଙ୍, ବନ୍ଡ ତିଆତେ ମରେଡ୍ ତଡ୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ତିଆତେ ଏଙ୍ଗାଲେ ମବ୍ରେଡ୍ତବୋ? ଆମ୍ୱେଞ୍ଜି ବସିଡନ୍ ଅନ୍ତମ୍ ଡେବା, ଆରି ତର୍ଡମ୍ ସୟୁ ଗାମ୍ଲେ ଡକୋନାବା ।”
௫0உப்பு நல்லதுதான், உப்பு சாரமில்லாமல் போனால், அதை எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாக இருங்கள், ஒருவரோடொருவர் சமாதானம் உள்ளவர்களாக இருங்கள் என்றார்.