< ଲୁକ 9 >
1 ଜିସୁନ୍ ବାରଜଣ ଞଙ୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍ ଓଡ୍ଡେଡାଲେ ଅବ୍ରୁକ୍କୁଏଞ୍ଜି, ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ବୁତନ୍ ଗଙ୍ଗଙନ୍ ଆସନ୍, ଆରି ରୋଗନ୍ ମନବ୍ନଙନ୍ ଆସନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବୋର୍ସାନ୍ ଡ ଅବ୍ସୋଡ଼ାନେନ୍ ତିୟେଞ୍ଜି ।
௧அவர் தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் வரவழைத்து, எல்லாப் பிசாசுகளைத் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து,
2 ଆରି, ଇସ୍ୱରନ୍ ଆ ରାଜ୍ୟ ଅପ୍ପୁଙ୍ବରନ୍ ଆସନ୍ ଡ ରୋଗମରଞ୍ଜିଆଡଙ୍ ମନବ୍ନଙନ୍ ଆସନ୍ ଆନିନ୍ ଞଙ୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍ ଆପ୍ପାୟେଞ୍ଜି ।
௨தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், நோயாளிகளை குணமாக்கவும் அவர்களை அனுப்பினார்.
3 ଆରି ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଜରିର୍ଜିର୍ବେନ୍ ଆସନ୍ ତୁଡ଼େଡାଙ୍ ଅଡ଼େ ମୁନା ଅଡ଼େ ରୁଟି ଅଡ଼େ ଇନ୍ନିଙ୍ଜା ଏପାଙ୍ଡଙ୍, ଆରି ଅଙ୍ଗିନ୍ ନିୟ୍ ବାଗୁ ଏପାଙ୍ଡଙ୍ ।
௩அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: பயணத்தின்போது தடியையோ பையையோ அப்பத்தையோ பணத்தையோ எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு உடைகளைக் கொண்டுபோகவும் வேண்டாம் என்றார்.
4 ଆରି, ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଅଙ୍ଗା ଅସିଂ ଆ ମନ୍ରାଜି ଜାତବେଞ୍ଜି, ତି ଆ ଗଡ଼ା ସିଲଡ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଏଜିରେନ୍ ଜାୟ୍ ତି ଆସିଂ ଇୟ୍ ଡକୋନାବା ।
௪எந்த வீட்டிற்கு சென்றாலும், அங்கிருந்து புறப்படும்வரை அங்கே தங்கியிருங்கள்.
5 ଆରି, ଡିଅଙ୍ଗା ମନ୍ରା ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଅଃଜ୍ଜାବେଞ୍ଜି, ତି ଆ ଗଡ଼ା ଅମ୍ରେଙ୍ଲେ ଏଜିରେନ୍ ଆଡିଡ୍, ଆ ବିରୁଦଲୋଙଞ୍ଜି ସାକିନ୍ ତନିୟନ୍ ଆସନ୍ ତାଲ୍ଜଙ୍ବେନ୍ ଆ ଉମ୍ରିଲ ତୁୟ୍ତୁୟ୍ନାବା ।”
௫உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாததற்கு சாட்சியாக உங்களுடைய கால்களில் படிந்துள்ள தூசியை உதறிப்போடுங்கள் என்றார்.
6 ସିଲତ୍ତେ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଜିର୍ରେ ସାଇ ସାଇ ସମ୍ପରାନ୍ ବୁଲ୍ଲେଲେ, ମନଙ୍ବରନ୍ ଇୟ୍ଲେ ଅପ୍ପୁଙ୍ବରେଜି ଆରି ରୋଗମରଞ୍ଜିଆଡଙ୍ ମବ୍ନଙ୍ଲେ ପାଙେଞ୍ଜି ।
௬புறப்பட்டுப்போய், கிராமம் கிராமமாகச் சென்று நற்செய்தியைப் பிரசங்கித்து, நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.
7 ତିଆଡିଡ୍ ଗାଲିଲିନ୍ ଆ ରାଜ୍ୟପାଡ଼ ଏରୋଦନ୍ କେନ୍ ଆ ବର୍ନେଜି ଅଡ଼୍କୋନ୍ ଅମ୍ଡଙ୍ଡାଲେ ଆଙ୍କାଏନ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଲାଙ୍ଲେଡ୍ ମନ୍ରାଞ୍ଜି, ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ ଆରବୁମରଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ୟର୍ମେଙ୍ଡାଲେ ଡୋଲନ୍ ଜିର୍ରାୟ୍ ଗାମ୍ଲେ ବର୍ରଞ୍ଜି ।
௭அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது அவரால் செய்யப்பட்ட எல்லாவற்றையும் கேள்விப்பட்டதுமட்டுமல்லாமல்; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தான் என்றும்,
8 ଆରି, ଲାଙ୍ଲେନ୍ନେ ଏଲିଅନ୍ ଅବ୍ଗିୟ୍ତାଲନେ ଗାମେଞ୍ଜି, ଆରି ଲାଙ୍ଲେନ୍ନେ ପୁର୍ବାନ୍ ଆ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ଅବୟ୍ନେ ୟର୍ମେଙ୍ଡାଲେ ଡୋଲନେ ଗାମ୍ଲେ ବର୍ରଞ୍ଜି;
௮சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறுசிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:
9 ବନ୍ଡ ଏରୋଦନ୍ ଗାମେନ୍, “ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ ତ ଞେନ୍ ଗବ୍ବାଲାୟ୍, ବନ୍ଡ ଅଙ୍ଗା ମନ୍ରା ଆ ବର୍ନେ କେନ୍ ଅମ୍ଡଙ୍ତାୟ୍, ତିଆନିନ୍ ଆନା?” ଆରି, ଆନିନ୍ ଜିସୁନ୍ଆଡଙ୍ ଗିୟ୍ଗିଜନ୍ ଆସନ୍ ଏରେନ୍ ଗୋଜେନ୍ ।
௯யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்க விரும்பினான்.
10 ତିକ୍କି ଅନାପ୍ପାୟ୍ ଞଙ୍ନେମରଞ୍ଜି ୟର୍ରନ୍, ଇନିଜି ଇନିଜି ଇୟ୍ଲେ ଲୁମେଜି, ତି ଅଡ଼୍କୋନ୍ ଜିସୁନ୍ ଆମଙ୍ ଇୟ୍ଲାୟ୍ ବର୍ନେଜି । ଆରି, ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଓରୋଙ୍ଡାଲେ ଆନ୍ନାଡାଲନ୍ ବେତ୍ସାଇଦା ଗାମ୍ଲେ ଅବୟ୍ ଗଡ଼ାନ୍ ଜିରେଞ୍ଜି ।
௧0அப்போஸ்தலர்கள் திரும்பிவந்து, தாங்கள் செய்த எல்லாவற்றையும் அவருக்கு விளக்கிச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனிமையாக இருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தின் வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார்.
11 ବନ୍ଡ ମନ୍ରାଞ୍ଜି ତିଆତେ ଜନାଡାଲେ ଆନିନ୍ଆଡଙ୍ ସଣ୍ଡୋଙେଞ୍ଜି; ଆରି, ଜିସୁନ୍ ଆର୍ଗୁଡ଼ିଡାଲେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଓଡ୍ଡେଡାଲେ ଇସ୍ୱରନ୍ ଆ ରାଜ୍ୟ ଆ ବର୍ନେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, ଆରି ଆନାଜି ମବ୍ନଙ୍ନେନ୍ ସାଜେଞ୍ଜି, ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ମବ୍ନଙେଞ୍ଜି ।
௧௧மக்கள் அதை அறிந்து, அவர் பின்னால் போனார்கள்; அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய இராஜ்யத்தைக்குறித்து அவர்களோடு பேசி, சுகமடையவேண்டும் என்றிருந்தவர்களைச் சுகப்படுத்தினார்.
12 ତିକ୍କି ସାଲ୍ଲୁମ୍ଲେ ଆପ୍ରାଙେନ୍; ବାରଜଣ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଜିସୁନ୍ ଆମଙ୍ ଜିର୍ରେ, “ମନ୍ରାଞ୍ଜି ଏଙ୍ଗାଲ୍ଡେନ୍ ଗଡ଼ାରେଙନ୍ ଡ ସାଇରେଙନ୍ ଜିର୍ରେ ବରସାସିଙନ୍ ଡ ଜନୋମ୍ଜୋମନ୍ ଞାଙ୍ଲେ ରପ୍ତିଏଜି, ତିଆସନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଆପ୍ପାୟାଜି, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଇନ୍ଲେଞ୍ଜି ତେନ୍ନେ ଆରିଙ୍ରିଙ୍ଲୋଙନ୍ ଡକୋ,” ଗାମ୍ଲେ ଇୟ୍ଲାୟ୍ ବରେଜି ।
௧௨மாலைநேரத்தில், பன்னிரண்டுபேரும், அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்திரமாக இருப்பதினால், மக்கள், சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும்போய்த் தங்குவதற்கும், உணவுப்பொருள்களை வாங்கிக்கொள்வதற்கும் அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
13 ବନ୍ଡ ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଆମ୍ୱେଞ୍ଜି ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଗାଗାନେନ୍ ତିୟ୍ବାଜି ।” ଆନିଞ୍ଜି ଗାମେଞ୍ଜି, “ଅମଙ୍ଲେନ୍ ମନ୍ଲୟ୍ ରୁଟିନ୍ ଡ ବାଗୁ ଅୟନ୍ ତୁମ୍ ଡକୋ ଆରି ଗୋଗୋୟ୍ ତଡ୍; ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଇନ୍ଲେଞ୍ଜି ଇନି କେନ୍ ଅଡ଼୍କୋ ମନ୍ରାନ୍ ଆସନ୍ ଜନୋମ୍ଜୋମନ୍ ଏଞିନାୟ୍ ପଙ୍?”
௧௩இயேசு, அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்கு உணவைக் கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்கள்மட்டுமே இருக்கிறது, இந்த மக்கள் எல்லோருக்கும் உணவு கொடுக்கவேண்டுமானால், நாங்கள்போய் வாங்கிக்கொண்டு வரவேண்டும் என்றார்கள்.
14 ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ତେତ୍ତେ ଆନିଞ୍ଜି ମନ୍ଲୟ୍ ଅଜାର ଡେତେ ଓବ୍ବାମରଞ୍ଜି ଡକୋଏଞ୍ଜି । ଆରି, ଜିସୁନ୍ ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ବଗନେଃଗେଡନ୍ ପଚାସ ଜଣ ଲେକାଁୟ୍ ଆନିଞ୍ଜି ଅବ୍ତଙ୍କୁମ୍ବାଜି ।”
௧௪அங்கு ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படிச் சொல்லுங்கள் என்று தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார்.
15 ସିଲତ୍ତେ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଅଡ଼୍କୋ ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ଏତ୍ତେଲେ ଅବ୍ତଙ୍କୁମେଞ୍ଜି ।
௧௫அவர்கள் அப்படியே எல்லோரையும் உட்காரும்படிச் செய்தார்கள்.
16 ଆରି, ଜିସୁନ୍ ତି ମନ୍ଲୟ୍ ରୁଟିନ୍ ଡ ବାଗୁ ଅୟନ୍ ପାଙ୍ଲେ ରୁଆଙ୍ଗଡ୍ ତୋଣ୍ଡୋନ୍ ଆଙାଙ୍ଡାଲନ୍ ତିଆତେଜି ଅଡ଼୍କୋନ୍ ଆସିର୍ବାଦଏନ୍, ଆରି ରେବ୍ଲୋଙ୍ ରେବ୍ଲେ ମନ୍ରାଞ୍ଜି ଆମଙ୍ ବନନ୍ତାନ୍ ଆସନ୍ ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜି ତିୟେଞ୍ଜି ।
௧௬அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, மக்களுக்கு பகிர்ந்துகொடுக்கும்படி சீடர்களிடத்தில் கொடுத்தார்.
17 ସିଲତ୍ତେ ଅଡ଼୍କୋଞ୍ଜି ରୁଟିନ୍ ଜୋମ୍ଲେ ବୋଓଏଞ୍ଜି, ଆରି ଆର୍ଲାଗାଏନ୍ ଆରେବ୍ରେବ୍ ରୁଟିଞ୍ଜି ଞଙ୍ନେମରଞ୍ଜି ବାର ଗୁରୁଲ୍ଲି ବବ୍ରିଜେଞ୍ଜି ।
௧௭எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான உணவுப்பொருட்கள் பன்னிரண்டு கூடைகள்நிறைய எடுக்கப்பட்டது.
18 ବମିୟ୍ତା ଜିସୁନ୍ ଆତିନ୍ସଜନ୍ ଆ ପାର୍ତନାଲନେନ୍ ଆଡିଡ୍ ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଆନିନ୍ ସରିନ୍ ଡକୋଏଞ୍ଜି, ଆରି ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଞେନ୍ ଆନା ଗାମ୍ଲେ ମନ୍ରାଞ୍ଜି ବର୍ତଞ୍ଜି?”
௧௮பின்பு அவர் தமது சீடர்களோடு தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போது, அவர்களை நோக்கி: மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
19 ଆନିଞ୍ଜି ଜାଲଙେଞ୍ଜି, “ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନ, ବନ୍ଡ ଲାଙ୍ଲେନ୍ନେ ଗାମ୍ତଜି, ଏଲିଅନ୍, ଆରି ଲାଙ୍ଲେନ୍ନେ ଗାମ୍ତଜି, ପୁର୍ବାନ୍ ଆ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ଅବୟ୍ନେ ୟର୍ମେଙ୍ଡାଲେ ଡୋଲନେ ଗାମ୍ଲେ ବର୍ତଞ୍ଜି ।”
௧௯அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
20 ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ବନ୍ଡ ଞେନ୍ ଆନା ଗାମ୍ଲେ ଆମ୍ୱେଞ୍ଜି ଇନି ଏଗାମ୍ତେ?” ପିତ୍ରନ୍ ଜାଲଙେନ୍, “ଆମନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ କ୍ରିସ୍ଟ ।”
௨0அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு மறுமொழியாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.
21 ସିଲତ୍ତେ ଜିସୁନ୍ କେନ୍ଆତେ ଆନ୍ନିଙ୍ ଆମଙ୍ ଏବର୍ଡଙ୍ନେ ଗାମ୍ଲେ ଆକ୍ରାନ୍ ବାଁୟ୍ଲେ ବରେଞ୍ଜି,
௨௧அப்பொழுது அவர், நீங்கள் இதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று உறுதியாகக் கட்டளையிட்டார்.
22 ଆରି ଆନିନ୍ ଞଙ୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ମନ୍ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଜବ୍ର ପରାନ୍ଡଣ୍ଡନ୍ ଡେତେ, ଆରି ପାପୁର୍ମରଞ୍ଜି, ସୋଡ଼ା ରାଓଡ଼ାଞ୍ଜି ଡ ସାସ୍ତ୍ରିଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ବାସ୍ସେତଜି ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆନିନ୍ ରବୁତେ, ବନ୍ଡ ୟାଗି ଡିନ୍ନାଲୋଙ୍ ଆନିନ୍ ୟର୍ମେଙ୍ଡାଲେ ଡୋତନେ ।”
௨௨மேலும் மனிதகுமாரன் பல பாடுகள் படவும், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும் வேதபண்டிதர்களாலும் ஆகாதவன் என்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.
23 ତିଆଡିଡ୍ ଆନିନ୍ ଅଡ଼୍କୋଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଆନ୍ନିଙ୍ ଞେନ୍ଆଡଙ୍ ସନଣ୍ଡୋଙନ୍ ଆସନ୍ ଲଡଜେନ୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆନିନ୍ ମୁର୍ସେଡମ୍ନେତୋ, ଆରି ଡିତାନ୍ ଆନିନ୍ ଆଅକ୍କାଡଙନ୍ ପାଙ୍ଲେ ଞେନ୍ଆଡଙ୍ ସଣ୍ଡୋଙିୟ୍ତୋ ।
௨௩பின்பு அவர் எல்லோரையும் நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால் அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும்.
24 ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଅଙ୍ଗା ମନ୍ରା ଆ ପରାନ୍ନାନ୍ ଡୋବ୍ଡୋବନ୍ ସାୟ୍ତେ, ତିଆତେ ଆନିନ୍ ଅବ୍ବଡ଼ୟ୍ତେ; ବନ୍ଡ ଆନା ଞେନ୍ ଆସନ୍ ଆ ପରାନ୍ନାନ୍ ଅବ୍ବଡ଼ୟ୍ତେ, ତିଆତେ ଆନିନ୍ ଡୋବ୍ତେ ।
௨௪தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; எனக்காகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
25 ଆରି, ମନ୍ରାନ୍ ଏଙ୍ଗାଲେ ସମ୍ପରାନ୍ ପୁର୍ତିନ୍ ଞାଙ୍ଲୋଙ୍ ଞାଙ୍ଲେ ଆନିନ୍ ଅବ୍ସେଃଡ୍ଡମ୍ତନେ ଇଜ୍ଜାନ୍ଡେନ୍ ଅବ୍ବଡ଼ୟ୍ତନେ, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆନିନ୍ ଇନି ଆ ଲାବ?
௨௫மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தானே கெடுத்து நஷ்டப்படுத்திக்கொண்டால் அவனுக்கு லாபம் என்ன?
26 ତିଆସନ୍ ଆନା ଞେନ୍ ଆସନ୍ ଆରି ବର୍ନେଞେନ୍ ଆସନ୍ ଗବ୍ରୟ୍ତନେ, ଅଙ୍ଗା ଆଡିଡ୍ ମନ୍ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଡ ଆପେୟନ୍ ଆରି ମଡ଼ିର୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରଞ୍ଜି ଆ ଗନୁଗୁ ପନେମେଙନ୍ ବାତ୍ତେ ଜିର୍ତାୟ୍, ତିଆଡିଡ୍ ଆନିନ୍ ତି ଆ ମନ୍ରା ଆସନ୍ ଇୟ୍ତାୟ୍ ଗବ୍ରୟ୍ନେ ।
௨௬என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனிதகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.
27 ବନ୍ଡ ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଆଜାଡ଼ିଡମ୍ ବର୍ତବେନ୍, ତେତ୍ତେ ଆତନଙନ୍ ଆ ମନ୍ରାଜି ଲାଙ୍ଲେନ୍ନେ, ଇସ୍ୱରନ୍ ଆ ରାଜ୍ୟ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଗିଜେଞ୍ଜି ଜାୟ୍, ରନବୁନ୍ ଏର୍ମାୟ୍ମାଜନ୍ ଡକୋତଞ୍ଜି ।”
௨௭இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணும் முன்னே, மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று நிச்சயமாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
28 କେନ୍ ଆ ବର୍ନେଜି ଆତ ଡିନ୍ନା ଆ ତିକ୍କି ଜିସୁନ୍, ପିତ୍ରନ୍, ଜନନ୍ ଡ ଜାକୁବନ୍ ସରିନ୍ ପାର୍ତନାନେନ୍ ଆସନ୍ ତୋଣ୍ଡୋ ବରୁନ୍ ଜିରେଞ୍ଜି ।
௨௮இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டு நாட்களுக்குப்பின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்.
29 ଆରି, ଆନିନ୍ ଆ ପାର୍ତନାଲନେନ୍ ଆଡିଡ୍ ଆ ମୁକ୍କାନ୍ ବାଙ୍ସାୟ୍ଲନେ ଆରି ଆ ସିନ୍ରିନ୍ ଜେଏଡମ୍ ଡେଏନ୍ କି ସାଆର୍ଡାଲେ କଲାୟ୍କଲାୟ୍ ଡେଏନ୍ ।
௨௯அவர் ஜெபம்பண்ணும்போது அவருடைய முகத்தின் ரூபம் மாறியது, அவருடைய ஆடை வெண்மையாகப் பிரகாசித்தது.
30 ଆରି, ଗିୟ୍ବା, ମୋସାନ୍ ଡ ଏଲିଅନ୍, କେନ୍ ବାଗୁନେ ଆନିନ୍ ସରିନ୍ ଇୟ୍ଲାୟ୍ କଡାଡ଼ିନେଜି ।
௩0அன்றியும் மோசே எலியா ஆகிய இரண்டுபேரும் மகிமையோடு காணப்பட்டு, அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள்,
31 ଆନିଞ୍ଜି ରୁଆଙ୍ ଗନୁଗୁ ପନେମେଙନ୍ ବାତ୍ତେ ଗିୟ୍ତାଏଞ୍ଜି, ଆରି ଜିସୁନ୍ ଜିରୁସାଲମନ୍ ଜିର୍ରୟ୍ତେ ତି ଆ ବର୍ନେ, ଆନିଞ୍ଜି କଡାଡ଼ିଲଞ୍ଜି ।
௩௧அவர்கள் எருசலேமில் நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
32 ତିଆଡିଡ୍ ପିତ୍ରନ୍ ଡ ଆ ଗଡ଼ିଞ୍ଜି ବରା ଡିମଡେଞ୍ଜି; ବନ୍ଡ ଆଙ୍ଗା ଆନିଞ୍ଜି ମଡ଼େଲେ ଡୋଲଞ୍ଜି, ତିଆଡିଡ୍ ଜିସୁନ୍ ଆ ଗନୁଗୁ ପନେମେଙନ୍ ଡ ଆନିନ୍ ସରିନ୍ ଆତନଙଞ୍ଜି ତି ବାଗୁ ମନ୍ରାନ୍ଆଡଙ୍ ଗିଜେଞ୍ଜି ।
௩௨பேதுருவும் அவனோடிருந்தவர்களும் தூக்கமயக்கமாக இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடு நின்ற அவ்விரண்டு பேரையும் கண்டார்கள்.
33 ଆରି, ମୋସାନ୍ ଡ ଏଲିଅନ୍ ଜିସୁନ୍ଆଡଙ୍ ଅମ୍ରେଙ୍ଲେ ଆଜିର୍ରେଞ୍ଜି ଆଡିଡ୍ ପିତ୍ରନ୍ ଜିସୁନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଏ ଞନଙ୍ତିୟ୍ମର୍, ଇନ୍ଲେଞ୍ଜି ତେନ୍ନେ ଡକୋନ୍ ଆସନ୍ ବୟ୍ଲେଙ୍; ଇନ୍ଲେଞ୍ଜି ୟାଗି ଅନ୍ସିଙନ୍ ଏଗୁତାୟ୍, ଆମନ୍ ଆସନ୍ ଅବୟ୍, ମୋସାନ୍ ଆସନ୍ ଅବୟ୍ ଆରି ଏଲିଅନ୍ ଆସନ୍ ଅବୟ୍ ।” ବନ୍ଡ ପିତ୍ରନ୍ ଇନି ଗାମେନ୍ ତିଆତେ ଆନିନ୍ଡମ୍ ଅଃଜ୍ଜନାଲୋ ।
௩௩அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து போகும்போது, பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது என்னவென்று தெரியாமல் சொன்னான்.
34 ପିତ୍ରନ୍ କେନ୍ଆତେ ଆବର୍ରନେନ୍ ଆଡିଡ୍ ଅବୟ୍ ମେଗନ୍ ଜିର୍ରେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଇୟ୍ଲାୟ୍ ରୁବେଜି, ଆରି ଆନିଞ୍ଜି ଅମ୍ମ ମେଗନ୍ ଆଗ୍ରନେଞ୍ଜି ଆଡିଡ୍ ଆନିଞ୍ଜି ବତଙେଞ୍ଜି ।
௩௪இப்படி அவன் பேசும்போது, ஒரு மேகம் வந்து அவர்களை மூடினது; எனவே அவருடைய சீடர்கள் பயந்தார்கள்.
35 ଆରି, ତି ଆ ମେଗଲୋଙ୍ ସିଲଡ୍ କେନ୍ ଆ ବର୍ନେ ଅଡ଼ୋଲାୟ୍, “କେନ୍ଆନିନ୍ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ଞେନ୍, କେନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଞେନ୍ ସେଡାଲାୟ୍, କେନ୍ ଆ ବର୍ନେନ୍ ଅମ୍ଡଙ୍ବା ।”
௩௫அப்பொழுது: இவர் நான் தெரிந்துகொண்ட என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.
36 ଆରି, ତି ଆ ବର୍ନେ ଆସ୍ରଡ୍ଡାଏନ୍ ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଜିସୁନ୍ ଆତିନ୍ସଜନ୍ ଗିୟ୍ତାଏନ୍ । ଆରି, ଆନିଞ୍ଜି ରିଙ୍ରିଙେଞ୍ଜି, ତିଆଡିଡ୍ ଇନିଜି ଇନିଜି ଗିଜେଞ୍ଜି, ତିଆତେଜି ଅନ୍ନିଙ୍ ଆ ବର୍ନେ ଆନ୍ନିଙ୍ ଆମଙ୍ ଅଃବ୍ବର୍ରଞ୍ଜି ।
௩௬அந்தச் சத்தம் உண்டானபோது இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் ஒருவருக்கும் சொல்லாமல் இருந்தார்கள்.
37 ତି ଆବାର୍ତାନ୍ ଜିସୁନ୍ ଆରି ୟାଗି ଞଙ୍ନେମରଞ୍ଜି ବରୁନ୍ ସିଲଡ୍ ପଡ୍ଲନ୍ ଜିର୍ରାଜି, ଆରି ଗୋଗୋୟ୍ଡମ୍ ମନ୍ରାଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ଇୟ୍ଲାୟ୍ ରବାଙେଜି ।
௩௭மறுநாளில் அவர்கள் மலையிலிருந்து இறங்கினபோது, மக்கள்கூட்டம் அவரை சந்திக்க அவரிடம் வந்தார்கள்.
38 ଆରି ଗିୟ୍ବା, ମନ୍ରାଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ଅବୟ୍ନେ ବାବ୍ବାବ୍ଡାଲେ ବର୍ରନେ, “ଏ ଞନଙ୍ତିୟ୍ମର୍, ଞେନ୍ ଅମଙ୍ନମ୍ କାକୁର୍ତିତନାୟ୍, ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ଞେନ୍ଆଡଙ୍ କାନକାରମ୍ଗାମା, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନିନ୍ ଆବୟଡମ୍ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ଞେନ୍ ।
௩௮அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனுக்கு உதவி செய்யவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாக இருக்கிறான்.
39 ଗିଜା, ଆନିନ୍ଆଡଙ୍ ଅବୟ୍ ବୁତନ୍ ସୁମ୍ତେ, ଆରି ଆନିନ୍ ଏରବ୍ବୋମଙ୍ଡାଗୋ ସଜିର୍ରେ ଡୋତନେ, ଆରି ବୁତନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଏତ୍ତେଲେ ପଡ୍ଡେତ୍ତେ ଡ, ଆ ତଅଡନ୍ ସିଲଡ୍ ପୋନ୍ସେରାନ୍ ଡୁଙ୍ତନାୟ୍, ଆରି ବୁତନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଅପ୍ପାରାଡାଲେ ଆମଙନ୍ ସିଲଡ୍ କାକୁର୍ତିଃ ଡୁଙ୍ଲନ୍ ଜିର୍ତେ ।
௩௯சில நேரங்களில், ஒரு அசுத்தஆவி அவனை அலைக்கழிப்பதினால், அவன் அலறி வாயில் நுரைதள்ளுகிறான். அது அவனைக் காயப்படுத்தி, அதிக போராட்டத்திற்குப்பின்பு அவனைவிட்டு நீங்குகிறது.
40 ତି ବୁତନ୍ ଗଙ୍ଗଙନ୍ ଆସନ୍ ଞଙ୍ନେମର୍ନମ୍ଜି ଆମଙ୍ କାକୁର୍ତିଲନାୟ୍, ବନ୍ଡ ଆନିଞ୍ଜି ଅଃର୍ରପ୍ତିଲଜି ।”
௪0அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களை வேண்டிக்கொண்டேன், அவர்களால் முடியவில்லை என்றான்.
41 ଜିସୁନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଜାଲଙେନ୍, “ଏ ଏର୍ଡର୍ନେମର୍ ଆରି ଆଲ୍ଲେମରଞ୍ଜି ଆ କେଜ୍ଜା, ଡିଅଙ୍ଗା ଡିନ୍ନା ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ସରିନ୍ ଡକୋନାୟ୍, ଆରି ଞଣ୍ଡ୍ରମ୍ବେଞ୍ଜି ସଏଆୟ୍? ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ନମ୍ ତେନ୍ନେ ଓରୋଙାୟ୍ ।”
௪௧இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடான வம்சமே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.
42 ସିଲତ୍ତେ ପସିଜନ୍ ଜିରା ଜିରା ବୁତନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଜାୟ୍ତାନ୍ ଅବ୍ସେଡ୍ଲେ ବରନ୍ତଙ୍ଡାନ୍ ପଡ୍ଡେଡେନ୍, ବନ୍ଡ ଜିସୁନ୍ ଏର୍ମଡ଼ିର୍ ପୁରାଡ଼ାନ୍ଆଡଙ୍ ବବ୍ତଙେନ୍ ଆରି ପସିଜନ୍ଆଡଙ୍ ମବ୍ନଙ୍ଡାଲେ ଆନିନ୍ଆଡଙ୍ ଆ ବାପାନ୍ ଆସିଲୋଙ୍ ସୋରୋପ୍ପାୟେନ୍ ।
௪௨அவன் அருகில் வரும்போது, பிசாசு அவனைக் கீழேத் தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.
43 ସିଲତ୍ତେ ଅଡ଼୍କୋଞ୍ଜି ଇସ୍ୱରନ୍ ଆ ସୋଡ଼ା ବୋର୍ସାନ୍ ଗିୟ୍ଲେ ସାନ୍ନି ଡେଏଞ୍ଜି । ବନ୍ଡ ଜିସୁନ୍ ଆର୍ଲୁମେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଆ କାବ୍ବାଡ଼ାଜି ଗିୟ୍ଲେ ଅଡ଼୍କୋଞ୍ଜି ସାନ୍ନି ଡେଏଞ୍ଜି, ତିଆଡିଡ୍ ଜିସୁନ୍ ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି,
௪௩அப்பொழுது எல்லோரும் தேவனுடைய மகத்துவத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு செய்த எல்லாவற்றையும்குறித்து அனைவரும் ஆச்சரியப்படும்போது அவர் தம்முடைய சீடர்களை நோக்கி:
44 “କେନ୍ ଆ ବର୍ନେଜି ଅଡ଼୍କୋନ୍ ଅଲୁଡ୍ଲୋଙ୍ବେନ୍ ଅମ୍ଡଙ୍ବା; ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ମନ୍ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ମନ୍ରାଞ୍ଜି ଆସିଲୋଙ୍ ସୋରୋପ୍ପାୟ୍ରୟ୍ତନେ ।”
௪௪நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாகக் கேளுங்கள்; மனிதகுமாரன் மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார்.
45 ବନ୍ଡ ଞଙ୍ନେମରଞ୍ଜି ତି ଆ ବର୍ନେ ଅଃଗନ୍ଲୁଡ୍ଲଜି, ଆରି ତିଆତେ ଆମଙଞ୍ଜି ସିଲଡ୍ ଆସସ ଡକୋଲନେ, ତିଆସନ୍ ଆନିଞ୍ଜି ଗନ୍ଲୁଡ୍ଲେ ଅଃର୍ରପ୍ତିଲଜି, ଆରି ତି ଆ ବର୍ନେ ଆସନ୍ ଜିସୁନ୍ଆଡଙ୍ ବର୍ବରନ୍ ଆସନ୍ ଆନିଞ୍ଜି ବତଙେଞ୍ଜି ।
௪௫அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை புரிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்கு மறைபொருளாக இருந்தது; அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் அவர்கள் பயந்தார்கள்.
46 ଞଙ୍ନେମରଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ଆନା ସତଙ୍, ତି ଆ ବର୍ନେଲୋଙ୍ ଆନିଞ୍ଜି ଅଲ୍ଡୁଲ୍ବାଞେଞ୍ଜି ।
௪௬பின்பு தங்களுக்குள் யார் பெரியவனாக இருப்பான் என்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டானது.
47 ବନ୍ଡ ଜିସୁନ୍ ଆ ମନ୍ନଲୋଙଞ୍ଜି ଆନିଃୟମ୍ ଜନାଡାଲେ ଆମଙନ୍ ଅବୟ୍ ସନ୍ନାସିଜନ୍ ତବ୍ନଙ୍ଡାଲେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି,
௪௭இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தம் அருகில் நிறுத்தி,
48 “ଆନା ଅଞୁମ୍ଲୋଙ୍ଞେନ୍ କେନ୍ ସନ୍ନାସିଜନ୍ଆଡଙ୍ ଜାତେ, ଆନିନ୍ ଞେନ୍ଆଡଙ୍ ଜାତିଁୟ୍, ଆରି ଆନା ଞେନ୍ଆଡଙ୍ ଜାତିଁୟ୍, ଆନିନ୍ ଅନାପ୍ପାୟ୍ମର୍ଞେନ୍ଆଡଙ୍ ଜାତେ; ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଅଡ଼୍କୋଲୋଙ୍ବେନ୍ ସିଲଡ୍ ଆନା ସନ୍ନା ଆନିନ୍ ସତଙ୍ ।”
௪௮அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்கள் எல்லோருக்குள்ளும் எவன் சிறியவனாக இருக்கிறானோ அவனே பெரியவனாக இருப்பான் என்றார்.
49 ସିଲତ୍ତେ ଜନନ୍ ବର୍ରନେ, “ଏ ଞନଙ୍ତିୟ୍ମର୍, ଅବୟ୍ ମନ୍ରାନ୍ ଅଞୁମ୍ନମ୍ ବାତ୍ତେ ବୁତନ୍ ଆଗ୍ରଙେନ୍ ଇନ୍ଲେଞ୍ଜି ଏଗିୟ୍ଲାୟ୍, ଆରି ଆନିନ୍ ଡଡ଼ଲେନ୍ ଆ ମନ୍ରା ତଡ୍, ତିଆସନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଏରଙ୍ଲାୟ୍ ।”
௪௯அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களோடுகூட உம்மைப் பின்பற்றாததினால், அவனைத் தடுத்தோம் என்றான்.
50 ବନ୍ଡ ଜିସୁନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଏରଙ୍ଡଙେ, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନା ବନେରାମର୍ବେନ୍ ତଡ୍ ଆନିନ୍ ଡନେମର୍ବେନ୍ ।”
௫0அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாக இல்லாதவன் நமது பட்சத்தில் இருக்கிறான் என்றார்.
51 ତିକ୍କି ଅଙ୍ଗା ଆଡିଡ୍ ଜିସୁନ୍ଆଡଙ୍ ତୋଣ୍ଡୋନ୍ ଅନୋରୋଙନ୍ ଆବନେଡ଼ା ତୁୟାଲେ ପାଙ୍ଲାୟ୍, ତିଆଡିଡ୍ ଆନିନ୍ ଜିରୁସାଲମନ୍ ଜିର୍ଜିରନ୍ ସାଜେନ୍ ।
௫௧பின்பு, அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் நெருங்கி வந்தபோது, அவர் எருசலேமுக்குப் போகப்பார்த்து,
52 ଆନିନ୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରଞ୍ଜିଆଡଙ୍ ଆମ୍ମୁଙ୍ ଆପ୍ପାୟେଞ୍ଜି । ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ ଆସନ୍ ଅନବ୍ଜାଡାବାନ୍ ଅବୟ୍ ସମିରୋଣମରଞ୍ଜି ଆ ସାଇ ଇୟ୍ଲେ ଗନେଜି ।
௫௨தமக்கு முன்னாகத் தூதுவர்களை அனுப்பினார். அவர்கள்போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்.
53 ବନ୍ଡ ଆନିନ୍ ଜିରୁସାଲମନ୍ ଜିର୍ଜିରନ୍ ସାୟ୍ତେ ଗାମ୍ଲେ ମନ୍ରାଞ୍ଜି ଜନାଏଞ୍ଜି, ତିଆସନ୍ ଆନିଞ୍ଜି, ଆନିନ୍ଆଡଙ୍ ଅଃଜ୍ଜାଲଜି ।
௫௩அவர் எருசலேமுக்குப்போக விரும்பினபடியால் அந்த கிராமத்து மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
54 କେନ୍ଆତେ ଗିୟ୍ଲେ ଜାକୁବନ୍ ଡ ଜନନ୍, କେନ୍ ବାଗୁ ଞଙ୍ନେମରଞ୍ଜି ବର୍ରଞ୍ଜି, “ଏଲିଅନ୍ ନିୟ୍ ଏଙ୍ଗାଲେ ଲୁମେନ୍, ତିଅନ୍ତମ୍ ରୁଆଙନ୍ ସିଲଡ୍ ତଗୋନ୍ ଗଲୋଡାଲେ ଆନିଞ୍ଜି ଜୋମ୍ତୋଡାଜେତଜି, ଏନ୍ନେଲେ ଇନ୍ଲେନ୍ ଏବର୍ନାୟ୍ ପଙ୍, ଆମନ୍ ଇନି ଗାମ୍ତେ?”
௫௪அவருடைய சீடர்களாகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்கு விருப்பமா? என்று கேட்டார்கள்.
55 ବନ୍ଡ ଜିସୁନ୍ ଆୟର୍ଗୁଡ଼ିଃଲନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ କଁୟ୍ଲେ ବର୍ରନେ, “ଆମ୍ୱେଞ୍ଜି ଏଙ୍ଗାଗୋ ଆ ପୁରାଡ଼ାମର୍ଜି, ଞେନ୍ ଅଃର୍ରପ୍ତି ଜନାଆୟ୍ । ମନ୍ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ମନ୍ରାଞ୍ଜି ଆ ପରାନ୍ନା ଅନବ୍ସେଡନ୍ ଆସନ୍ ଅଃନ୍ନିୟ୍ଲାୟ୍ ଆର୍ପାୟ୍ ଡୋବ୍ଡୋବନ୍ ଆସନ୍ ଇୟ୍ଲାୟ୍ ।”
௫௫அவர் திரும்பிப்பார்த்து: அவர்களைக் கடிந்துகொண்டு,
56 ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆନିଞ୍ଜି ଆରି ଅବୟ୍ ସାଇନ୍ ଜିରେଞ୍ଜି ।
௫௬மனிதகுமாரன் மனிதர்களுடைய ஜீவனை அழிப்பதற்காக அல்ல, இரட்சிப்பதற்காகவே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்திற்குப் போனார்கள்.
57 ଆନିଞ୍ଜି ତଙରନ୍ ଆଜିର୍ରେଞ୍ଜି ଆଡିଡ୍ ଅବୟ୍ ମନ୍ରାନ୍ ଜିସୁନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଆମନ୍ ଅଡ଼େଙ୍ଗା ଜିର୍ତେ, ଞେନ୍ ଆମନ୍ଆଡଙ୍ ସଣ୍ଡୋଙ୍ତମ୍ ।”
௫௭அவர்கள் வழியிலே போகும்போது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் நான் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
58 ଜିସୁନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ବୋଡ଼ାନ୍ ଆସନ୍ ଡଲ୍ଲିନ୍ ଡକୋ, ରୁଆଙନ୍ ଆ ଅନ୍ତିଡ୍ଜି ଆସନ୍ ବରସାସିଙନ୍ ଡକୋ, ବନ୍ଡ ମନ୍ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଆବବନ୍ ଡନକ୍କୋନ୍ ଆସନ୍ ଜାଗା ତଡ୍ ।”
௫௮அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனிதகுமாரனுக்கோ தலை சாய்க்கவும் இடமில்லை என்றார்.
59 ଜିସୁନ୍ ଆରି ଅବୟ୍ନେଆଡଙ୍ ବରେନ୍, “ଞେନ୍ଆଡଙ୍ ସଣ୍ଡୋଙିୟ୍ ।” ବନ୍ଡ ଆନିନ୍ ଗାମେନ୍, “ଆପେୟ୍ଞେନ୍ ରବୁଏନ୍, ଆନିନ୍ ରୟ୍ ଆମ୍ମୁଙ୍ ଇୟ୍ତେ ତିଲ୍ନାୟ୍, ତିଆସନ୍ ଞେନ୍ ରୟଙନ୍ ତିୟିଁୟ୍ ।”
௫௯வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண என்னை அனுப்பவேண்டும் என்றான்.
60 ବନ୍ଡ ଜିସୁନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଆରବୁମରଞ୍ଜି ରମ୍ମଙ୍ ରମ୍ମଙ୍ ଆରବୁମରଞ୍ଜିଆଡଙ୍ ତିଲ୍ତିଲନ୍ ଆସନ୍ ଅମ୍ରେଙ୍ବାଜି, ବନ୍ଡ ଆମନ୍ ଜିର୍ରେ ଇସ୍ୱରନ୍ ଆ ରାଜ୍ୟ ଇୟ୍ନପ୍ପୁଙ୍ବରା ।”
௬0அதற்கு இயேசு: மரித்தோர் தங்களுடைய மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணு என்றார்.
61 ଆରି ଅବୟ୍ନେ ଜନଙ୍ ବରେନ୍, “ପ୍ରବୁ, ଞେନ୍ ଆମନ୍ଆଡଙ୍ ସଣ୍ଡୋଙ୍ତମ୍, ବନ୍ଡ ଆମ୍ମୁଙ୍ ଅସିଂଞେନ୍ ଡକୋନ୍ ଆ ମନ୍ରାଜି ଆମଙ୍ ସିଲଡ୍ ଅନବ୍ଜୋଞ୍ଜୋନେନ୍ ଆସନ୍ ଞେନ୍ଆଡଙ୍ ରୟଙନ୍ ତିୟିଁୟ୍ ।”
௬௧பின்பு வேறு ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முதலில் நான் போய் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு வரும்படி என்னை அனுமதிக்கவேண்டும் என்றான்.
62 ବନ୍ଡ ଜିସୁନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଆନା ମୁଣ୍ଡାନ୍ ଆ କନ୍ତିଲୋଙ୍ ଆସିନ୍ ଡକ୍କୋଡାଲେ କିଣ୍ଡୋଙ୍ଗଡ୍ ଆଙାଙ୍ତନେ, ଆନିନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ରାଜ୍ୟ ଆସନ୍ ଜିଞ୍ଜିନ୍ ତଡ୍ ।”
௬௨அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துவிட்டு பின்னோக்கிப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்திற்குத் தகுதியுள்ளவன் இல்லை என்றார்.