< ଜନ 8 >
1 ଜିସୁନ୍ ଜିତବୁରନ୍ ଜିରେନ୍ ।
௧இயேசு ஒலிவமலைக்குப் போனார்.
2 ତି ଆବାର୍ତାନ୍ ଅଣ୍ଡ୍ରଙନ୍ ଡୋତାନ୍ ଆନିନ୍ ଆରି ସରେବାସିଙନ୍ ୟର୍ରନାୟ୍, ଆରି ଅଡ଼୍କୋ ମନ୍ରାନ୍ ଆମଙନ୍ ଆଜିର୍ରାଞଞ୍ଜି, ଆନିନ୍ ତଙ୍କୁମ୍ଡାଲେ ଞନଙନ୍ ତିୟେନ୍ ।
௨மறுநாள் காலையில் அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, மக்கள் எல்லோரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் செய்தார்.
3 ଆରି ସାସ୍ତ୍ରିଞ୍ଜି ଡ ପାରୁସିଞ୍ଜି ଅବୟ୍ ଡାରିନେବଜନ୍ ଞମ୍ଲେ ପାଙ୍ଲେ ଅଡ଼୍କୋ ମନ୍ରାନ୍ ଆ ତେମଡ୍ଲୋଙ୍ ମଡ୍ଡିନ୍ ତବ୍ନଙ୍ଡାଲେ ଜିସୁନ୍ଆଡଙ୍ ବରେଞ୍ଜି,
௩அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை வேதபண்டிதர்களும், பரிசேயர்களும் அவரிடத்தில் அழைத்துவந்து, அவளை நடுவே நிறுத்தி:
4 “ଏ ଞନଙ୍ତିୟ୍ମର୍, କେନ୍ ଆଇବୟ୍ ଆଡ୍ରାରିଲନ୍ ଆଡିଡ୍ ଞନମନ୍ ଡେଲୋ ।
௪போதகரே, இந்த பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டாள்.
5 ଏନ୍ନେଗନ୍ ଆ ମନ୍ରାଜିଆଡଙ୍ ତିଡର୍ଡାଲେ ରନବ୍ବୁନ୍ ଆସନ୍ ମୋସାନ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ବନାଁୟ୍ବର୍ଲୋଙନ୍ ବାଁୟ୍ଲଲେନ୍; ତିଆସନ୍ ଆମନ୍ ଇନି ଗାମ୍ତେ?”
௫இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளைக் கொடுத்திருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.
6 ଏଙ୍ଗାଲ୍ଡେନ୍ ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ଅନବ୍ଡୋସାନ୍ ଆସନ୍ ତଙରନ୍ ଞାଙ୍ଲେ ରପ୍ତିଏଜି, ତିଆସନ୍ ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ମାଲ୍ଲେ କେନ୍ ଆ ବର୍ନେ ବରେଞ୍ଜି । ବନ୍ଡ ଜିସୁନ୍ ଜାୟ୍ତାନ୍ ବରୁମ୍ଡାଲେ ଆ ଅଣ୍ଡେର୍ସିନ୍ ବାତ୍ତେ ଲବଲୋଙନ୍ ଇଡିଡ୍ଲଲନ୍ ।
௬அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாக்குவதற்கு, அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள் இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
7 ବନ୍ଡ ଆନିଞ୍ଜି ନମିନ୍ ନମିନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଆବର୍ରେଞ୍ଜି, ଜିସୁନ୍ ତେକ୍କେବବ୍ଲନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଆମ୍ୱେଞ୍ଜିଲୋଙ୍ ଆନା ଏର୍ଡୋସା, ଆନିନ୍ ଆମ୍ମୁଙ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ତିଡରେତୋ ।”
௭அவர்கள் தொடர்ந்து அவரைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் நிமிர்ந்துபார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மீது முதலாவது கல்லெறியட்டும் என்று சொல்லி,
8 ଆରି ଆନିନ୍ ଜାୟ୍ତାନ୍ ବରୁମ୍ଡାଲେ ଲବଲୋଙନ୍ ଇଡିଡ୍ଲଲନ୍ ।
௮அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.
9 ତିଆତେ ଅମ୍ଡଙ୍ଡାଲେ ଆନିଞ୍ଜି ସୋଡ଼ାମରଞ୍ଜି ସିଲଡ୍ ଉଲନ୍ ଅବୟ୍ନେ ଅବୟ୍ନେ ଡୁଙ୍ଲନ୍ ଜିରେଞ୍ଜି, ଆରି ଜିସୁନ୍ ଡ ମଡ୍ଡିନ୍ ଆତନଙନ୍ ଆଇବୟ୍ ତୁମ୍ ତେତ୍ତେ ଡକୋଏଞ୍ଜି ।
௯அவர்கள் அதைக்கேட்டு, தங்களுடைய மனச்சாட்சியில் உணர்த்தப்பட்டு, பெரியோர் முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராக போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த பெண் நடுவே நின்றாள்.
10 ଆରି, ଜିସୁନ୍ ତେକ୍କେବବ୍ଲନ୍ ଆଗ୍ରିଜେନ୍ ଆନ୍ନିଙ୍ ତଡ୍, ତିଆସନ୍ ଆନିନ୍ ତି ଆଇମରନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଏ ଆଇମର୍, ଆନିଞ୍ଜି ଅଡ଼େଙ୍ଗା? ଆମନ୍ଆଡଙ୍ ଅନବ୍ଡୋସାନ୍ ଆସନ୍ ଆନ୍ନିଙ୍ ତଡ୍ ପଙ୍?”
௧0இயேசு நிமிர்ந்து அந்த பெண்ணைத்தவிர வேறொருவரையும் காணாமல்: பெண்ணே, உன்மேல் குற்றஞ்சுமத்தினவர்கள் எங்கே? ஒருவன்கூட உன்னைத் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.
11 ଆନିନ୍ ଜାଲଙେନ୍, “ଆନ୍ନିଙ୍ ତଡ୍, ପ୍ରବୁ ।” ସିଲତ୍ତେ ଜିସୁନ୍ ଗାମେନ୍, “ଞେନ୍ ନିୟ୍ ଆମନ୍ଆଡଙ୍ ଅଃନ୍ନବ୍ଡୋସାଅମ୍, ଜିରା ଲଙେ ସିଲଡ୍ ଆରି ଇର୍ସେନ୍ ଲୁମ୍ଡଙ୍ ।”
௧௧அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளைப் பார்த்து: நானும் உன்னைத் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவம் செய்யாதே என்றார்.
12 ଜିସୁନ୍ ଆରି ପାରୁସିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଞେନ୍ ପୁର୍ତିନ୍ ଆ ସନାଆର୍, ଆନା ଞେନ୍ଆଡଙ୍ ସଣ୍ଡୋଙ୍ତିଁୟ୍, ଆନିନ୍ ଆଙ୍ଗିୟ୍ଜା ଲୋଙଡ୍ଲୋଙନ୍ ଅଃବ୍ବୁଲ୍ଲେଏ, ଆର୍ପାୟ୍ ଅନମେଙନ୍ ଆ ସନାଆର୍ ଞାଙ୍ତେ ।”
௧௨மறுபடியும் இயேசு மக்களைப் பார்த்து: நான் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடக்காமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்.
13 ସିଲତ୍ତେ ପାରୁସିଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଆମନ୍ଡମ୍ ଆମନ୍ ଆସନ୍ ସାକିନ୍ ତିୟ୍ତେ, ସାକିନମ୍ ଆଜାଡ଼ିନ୍ ତଡ୍ ।”
௧௩அப்பொழுது பரிசேயர்கள் அவரைப் பார்த்து: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.
14 ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “ଞେନ୍ ଆସନ୍ ଞେନ୍ଡମ୍ ସାକିନ୍ ତିୟ୍ଲାୟ୍ ଜନଙ୍ଡେନ୍ ସାକିଞେନ୍ ଆଜାଡ଼ିନ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଞେନ୍ ଅଙ୍ଗାଲୋଙ୍ ସିଲଡ୍ ଜିର୍ରାୟ୍ ଆରି ଅଙ୍ଗାଲୋଙ୍ ଜିର୍ତେ, ତିଆତେ ଞେନ୍ ଜନା । ବନ୍ଡ ଞେନ୍ ଅଙ୍ଗାଲୋଙ୍ ସିଲଡ୍ ଜିର୍ତାୟ୍ ଅଡ଼େ ଅଙ୍ଗାଲୋଙ୍ ଜିର୍ତେ, ତିଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଜନାଜି ତଡ୍ ।
௧௪இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாக இருக்கிறது; ஏனென்றால், நான் எங்கே இருந்து வந்தேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கே இருந்து வருகிறேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் உங்களுக்குத் தெரியாது.
15 ଆମ୍ୱେଞ୍ଜି ମନ୍ରାଞ୍ଜି ଅନ୍ତମ୍ ଏପନ୍ସୁଆତିତେ, ଞେନ୍ ଆନ୍ନିଙ୍ଆଡଙ୍ ଅଃନ୍ନବ୍ପନ୍ସୁଆତିଆୟ୍ ।
௧௫நீங்கள் மனித வழக்கத்திற்கு ஏற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை;
16 ବନ୍ଡ ଞେନ୍ ପନ୍ସୁଆତିଲାୟ୍ ଜନଙ୍ଡେନ୍, ପନ୍ସୁଆତିଞେନ୍ ଆଜାଡ଼ିନ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଞେନ୍ ତିନ୍ସୟ୍ଞେନ୍ ତଡ୍, ବନ୍ଡ ଅନାପ୍ପାୟ୍ମର୍ଞେନ୍ ଆପେୟନ୍ ଞେନ୍ ସରିନ୍ ଡକୋ ।
௧௬நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படி இருக்கும்; ஏனென்றால், நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.
17 ଆରି, ବାଗୁ ମନ୍ରା ଆ ସାକି ମାୟ୍ଲନ୍ ଡେନ୍, ଆନିଞ୍ଜି ଅଙ୍ଗାତେ ବର୍ତଞ୍ଜି ତିଆତେ ଆଜାଡ଼ିନ୍, କେନ୍ଆତେ ବନାଁୟ୍ବର୍ଲୋଙ୍ବେନ୍ ନିୟ୍ ଆଇଡିଡ୍ ।
௧௭இரண்டு பேருடைய சாட்சி உண்மை என்று உங்களுடைய நியாயப்பிரமாணத்திலும் எழுதி இருக்கிறதே.
18 ଞେନ୍ ଆସନ୍ ଞେନ୍ଡମ୍ ସାକିନ୍ ତିୟ୍ତାୟ୍, ଆରି ଅନାପ୍ପାୟ୍ମର୍ଞେନ୍ ଆପେୟନ୍ ନିୟ୍ ଞେନ୍ ଆସନ୍ ସାକିନ୍ ତିୟ୍ତେ ।”
௧௮நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாக இருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சிக் கொடுக்கிறார் என்றார்.
19 ସିଲତ୍ତେ ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଆପେୟ୍ନମ୍ ଅଡ଼େଙ୍ଗା?” ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “ଆମ୍ୱେଞ୍ଜି ଞେନ୍ଆଡଙ୍ ଏଃଜ୍ଜନାଇଁୟ୍, ଆରି ଆପେୟ୍ଞେନ୍ଆଡଙ୍ ନିୟ୍ ଏଃଜ୍ଜନାଏ; ଞେନ୍ଆଡଙ୍ ଏଜନାଲିଁୟ୍ ନଙ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆପେୟ୍ଞେନ୍ଆଡଙ୍ ନିୟ୍ ଏଜନାତେ ବନ୍ ।”
௧௯அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு மறுமொழியாக: என்னையும் அறியீர்கள். என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.
20 ଜିସୁନ୍ ସରେବାସିଂଲୋଙନ୍ ଞନଙନ୍ ଆତ୍ରିୟେନ୍ ଆଡିଡ୍ ତନିୟ୍ତିୟ୍ କୁମ୍ପଡ଼ିଞ୍ଜି ଆଡ୍ରକ୍କୋତେଞ୍ଜି ଆସିଂଲୋଙ୍ କେନ୍ ଆ ବର୍ନେଜି ଅଡ଼୍କୋନ୍ ବର୍ରନେ, ବନ୍ଡ ଆନ୍ନିଙ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଅଃଞମ୍ଲଜି, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ତି ଆ ଡିନ୍ନା ଜାୟ୍ ଅୟମନ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଅଡ଼ୋଆୟ୍ ।
௨0தேவாலயத்திலே இயேசு உபதேசம் செய்கிறபோது, காணிக்கைப்பெட்டி இருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.
21 ଜିସୁନ୍ ଆରି ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଞେନ୍ ଜିର୍ତେ, ଆରି ଆମ୍ୱେଞ୍ଜି ଞେନ୍ଆଡଙ୍ ଏସାୟ୍ଡଙ୍ତିଁୟ୍, ଆରି ଆମ୍ୱେଞ୍ଜି ରମ୍ମଙ୍ ରମ୍ମଙ୍ ଆ ଇର୍ସେଲୋଙ୍ ରବୁତବେନ୍, ଞେନ୍ ଅଙ୍ଗାଲୋଙ୍ ଜିର୍ତେ, ଆମ୍ୱେଞ୍ଜି ତେତ୍ତେ ଇୟ୍ଲେ ଏଃର୍ରପ୍ତିଏ ।”
௨௧இயேசு மறுபடியும் அவர்களைப் பார்த்து: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்களுடைய பாவங்களிலே மரித்துப்போவீர்கள்; நான் போகிற இடத்திற்கு உங்களால் வர முடியாது என்றார்.
22 ତିଆସନ୍ ଜିଉଦିମରଞ୍ଜି ବର୍ରଞ୍ଜି, “ଆନିନ୍ ଗାମ୍ତେ ଞେନ୍ ଅଙ୍ଗାଲୋଙ୍ ଜିର୍ତେ, ଆମ୍ୱେଞ୍ଜି ତେତ୍ତେ ଇୟ୍ଲେ ଏଃର୍ରପ୍ତିଏ, କେନ୍ଆନିନ୍ ଇନି ଇୟ୍ତେ ରବ୍ବୁଡମ୍ନେ ପଙ୍?”
௨௨அப்பொழுது யூதர்கள்: நான் போகிற இடத்திற்கு உங்களால் வர முடியாது என்கிறானே, தன்னைத்தானே கொலைசெய்து கொள்ளுவானோ என்று பேசிக்கொண்டார்கள்.
23 ସିଲତ୍ତେ ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “ଆମ୍ୱେଞ୍ଜି ଜାୟ୍ତାନ୍ ସିଲଡ୍ ଏଡୁଙ୍ଲନାୟ୍, ବନ୍ଡ ଞେନ୍ ତୋଣ୍ଡୋନ୍ ସିଲଡ୍ ଜିର୍ରାୟ୍; ଆମ୍ୱେଞ୍ଜି ପୁର୍ତିନ୍ ସିଲଡ୍ ଏଡୁଙ୍ଲନାୟ୍, ବନ୍ଡ ଞେନ୍ ପୁର୍ତିନ୍ ସିଲଡ୍ ତଡ୍ ।
௨௩அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் கீழேயிருந்து உண்டானவர்கள், நான் மேலேயிருந்து உண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்து உண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்து உண்டானவன் இல்லை.
24 ତିଆସନ୍ ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ରବେନ୍, ଆମ୍ୱେଞ୍ଜି ରମ୍ମଙ୍ ରମ୍ମଙ୍ ଆ ଇର୍ସେଲୋଙ୍ ରବୁତବେନ୍; ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ‘ଞେନ୍ ତିଆନିନ୍’ କେନ୍ଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଏଃଡ୍ଡର୍ରନ୍ ଡେନ୍ ରମ୍ମଙ୍ ରମ୍ମଙ୍ ଆ ଇର୍ସେଲୋଙ୍ ରବୁତବେନ୍ ।”
௨௪ஆகவே, நீங்கள் உங்களுடைய பாவங்களில் மரித்துப்போவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால் உங்களுடைய பாவங்களிலே மரித்துப்போவீர்கள் என்றார்.
25 ଆନିଞ୍ଜି ଗାମେଞ୍ଜି, “ଆମନ୍ ଆନା?” ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “ତି ଆ ବର୍ନେ ଞେନ୍ ଆମ୍ମୁଙ୍ ମା ସିଲଡ୍ ବର୍ରନାୟ୍ ।
௨௫அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நான் ஆரம்ப முதலாக உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர் தான்.
26 ବର୍ନେଲୋଙ୍ବେନ୍ ବର୍ନେନ୍ ଆସନ୍ ଆରି ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଅନବ୍ଡୋସାନ୍ ଆସନ୍ ଅମଙ୍ଞେନ୍ ଗୋଗୋୟ୍ ବର୍ନେନ୍ ଡକୋ । ବନ୍ଡ ଅନାପ୍ପାୟ୍ମର୍ଞେନ୍ ଆଜାଡ଼ିନ୍, ଆରି ଆମଙନ୍ ସିଲଡ୍ ଞେନ୍ ଅଙ୍ଗାତେ ଅମ୍ଡଙ୍ଲାୟ୍, ତିଆତେ ମା ଞେନ୍ ପୁର୍ତିନ୍ଆଡଙ୍ ଅବ୍ଜନାତାୟ୍ ।”
௨௬உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்கள் இருக்கிறது; என்னை அனுப்பினவர் சத்தியமானவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளை உலகத்திற்குச் சொல்லுகிறேன் என்றார்.
27 ଆପେୟନ୍ ଆ ବର୍ନେ ଜିସୁନ୍ ବର୍ରନେ ଗାମ୍ଲେ ଆନିଞ୍ଜି ଗନ୍ଲୁଡ୍ଲେ ଅଃର୍ରପ୍ତିଲଜି ।
௨௭பிதாவைக்குறித்துப் பேசினார் என்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.
28 ତିଆସନ୍ ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଆମ୍ୱେଞ୍ଜି ଆଙ୍ଗା ମନ୍ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ଆଡଙ୍ ତୋଣ୍ଡୋନ୍ ଏଅମ୍ଡାୟ୍ତେ, ତିଆଡିଡ୍ ଗନ୍ଲୁଡ୍ତବେନ୍, ଆଜାଡ଼ିଡମ୍ ‘ଞେନ୍ ତି ଆ ମନ୍ରା ।’ ଆରି ଞେନ୍ ସନୋଡ଼ାଞେନ୍ ବାତ୍ତେ ଇନ୍ନିଙ୍ ଅଃଲ୍ଲୁମାୟ୍, ଆର୍ପାୟ୍ ଆପେୟନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ଅଙ୍ଗାତେ ଞନଙନ୍ ଞାଙ୍ଲାୟ୍ ତିଆତେ ତୁମ୍ ଞେନ୍ ବର୍ତନାୟ୍, ଗାମ୍ଲେ ତିଆଡିଡ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଏଜନାତେ ।
௨௮ஆதலால் இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் மனிதகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவர் என்றும், நான் என் சொந்தமாக ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.
29 ଅନାପ୍ପାୟ୍ମର୍ଞେନ୍ ଞେନ୍ ସରିନ୍ ଡକୋ, ଆନିନ୍ ତିନ୍ସୟ୍ଞେନ୍ ଞେନ୍ଆଡଙ୍ ଅଃନ୍ନମ୍ରେଙ୍ଲିଁୟ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଡିତାନ୍ ଞେନ୍ ଆନିନ୍ ଆର୍ଲଡୟ୍ତେନ୍ ଆ କାବ୍ବାଡ଼ା ତୁମ୍ ଲୁମ୍ତାୟ୍ ।”
௨௯என்னை அனுப்பினவர் என்னுடனே இருக்கிறார், பிதாவிற்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறதினால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.
30 ଜିସୁନ୍ ଆ ବର୍ନେଜି କେନ୍ଆତେ ଅମ୍ଡଙ୍ଡାଲେ, ଜବ୍ର ମନ୍ରା ଆମଙନ୍ ଡର୍ରଞ୍ଜି ।
௩0இவைகளை அவர் சொன்னபோது, அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
31 ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଅଙ୍ଗା ଜିଉଦିଜି ଜିସୁନ୍ ଆମଙ୍ ଡର୍ରଞ୍ଜି ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଜିସୁନ୍ ବରେଞ୍ଜି, “ଆମ୍ୱେଞ୍ଜି ବର୍ନେଞେନ୍ ଅନ୍ତମ୍ ଏଞଣ୍ଡ୍ରମ୍ଲନ୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆଜାଡ଼ିଡମ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଞଙ୍ନେମର୍ଞେଞ୍ଜି ।
௩௧இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களைப் பார்த்து: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் உண்மையாகவே என் சீடராக இருப்பீர்கள்;
32 ଆରି ଆମ୍ୱେଞ୍ଜି ଆଜାଡ଼ିନ୍ ଏଜନାତେ, ତି ଆଜାଡ଼ି ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଉର୍ତବେନ୍ ।”
௩௨சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
33 ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “ଇନ୍ଲେଞ୍ଜି ଅବ୍ରାମନ୍ ଆ କେଜ୍ଜା, ଆରି ଆଙ୍ଗିୟ୍ ଆନ୍ନିଙ୍ ଆ କମ୍ୱାରି ଅଣ୍ଡ୍ରଙ୍ ଏଡକୋନାୟ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଅଡ଼ୁର୍ତବେନ୍ ଗାମ୍ଲେ ଆମନ୍ ଏଙ୍ଗାଲେ ବର୍ତନେ? କେନ୍ ଆଗ୍ରାମ୍ଗାମନ୍ ଇନି?”
௩௩அவர்கள் அவருக்கு மறுமொழியாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறோம், நாங்கள் ஒருபோதும் ஒருவனுக்கும் அடிமைகளாக இருக்கவில்லை; விடுதலையாவீர்கள் என்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள்.
34 ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “ଆଜାଡ଼ିଡମ୍ ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ଆନା ଇର୍ସେନ୍ ଲୁମ୍ତେ, ଆନିନ୍ ଇର୍ସେନ୍ ଆ କମ୍ୱାରି ।
௩௪இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: பாவம் செய்கிறவன் எவனும் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
35 କମ୍ୱାରିମରନ୍ ଆଏଡ଼ର୍ ଅସିଙନ୍ ଅଃଡ୍ଡକୋନେ, ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଆଏଡ଼ର୍ ଡକୋତନେ । (aiōn )
௩௫அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். (aiōn )
36 ତିଆସନ୍, ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଉର୍ରବେନ୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆଜାଡ଼ିଡମ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଅଡ଼ୁର୍ତବେନ୍ ।
௩௬ஆகவே, குமாரன் உங்களை விடுதலை ஆக்கினால் உண்மையாகவே விடுதலை ஆவீர்கள்.
37 ଆମ୍ୱେଞ୍ଜି ଅବ୍ରାମନ୍ ଆ କେଜ୍ଜା, ତିଆତେ ଞେନ୍ ଜନା, ବନ୍ଡ ଞନଙ୍ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଏଃଜ୍ଜାଏ, ତିଆସନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଞେନ୍ଆଡଙ୍ ରନବ୍ବୁନ୍ ଏସାୟ୍ତେ ।
௩௭நீங்கள் ஆபிரகாமின் சந்ததியார் என்று அறிவேன்; ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம் பெறாததினால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள்.
38 ଆପେୟ୍ଞେନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ଅଙ୍ଗାତେ ଞେନ୍ ଗିୟ୍ଲାୟ୍, ତିଆତେ ଅଡ଼୍କୋନ୍ ବର୍ତନାୟ୍, ବନ୍ଡ ଆମ୍ୱେଞ୍ଜି ଆପେୟ୍ବେନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ଅଙ୍ଗାତେ ଏଅମ୍ଡଙେନ୍, ତି ଅଡ଼୍କୋନ୍ ଏଲୁମ୍ତେ ।”
௩௮நான் என் பிதாவினிடத்தில் பார்த்ததைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்களுடைய பிதாவினிடத்தில் பார்த்ததைச் செய்கிறீர்கள் என்றார்.
39 ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “ଅବ୍ରାମନ୍ ଆପେୟ୍ଲେନ୍ ।” ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଆମ୍ୱେଞ୍ଜି ଅବ୍ରାମନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ଜି ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଅବ୍ରାମନ୍ ଆର୍ଲୁମେନ୍ ଆ କାବ୍ବାଡ଼ା ଲୁମ୍ବା ।
௩௯அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்களுடைய பிதா என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாக இருந்தால் ஆபிரகாமின் செயல்களைச் செய்வீர்களே.
40 ଇସ୍ୱରନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ଅରମ୍ଡଙ୍ଲାଞନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଆଜାଡ଼ିଜି ତୁମ୍ ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଅବ୍ଜନାତବେନ୍, ଡେଲୋଜନଙ୍ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଞେନ୍ଆଡଙ୍ ରନବ୍ବୁନ୍ ଆସନ୍ ଏଏର୍ତେ ଏଗୋୟ୍ତେ; ଅବ୍ରାମନ୍ କେନ୍ ଅନ୍ତମ୍ ଆ କାବ୍ବାଡ଼ା ଅଃଲ୍ଲୁମ୍ଲୋ ।
௪0தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனிதனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.
41 ଆପେୟ୍ବେନ୍ ଆର୍ଲୁମେନ୍ ଆ କାବ୍ବାଡ଼ାଜି ଆମ୍ୱେଞ୍ଜି ଏଲୁମ୍ତେ ।” ଆନିଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “ଇନ୍ଲେଞ୍ଜି ଡାରିନେଲୋଙନ୍ ସିଲଡ୍ ଜନମ୍ମୁ ଅଃଡ୍ଡେଲଲେନ୍, ଇସ୍ୱରନ୍ ତୁମ୍ ଆବୟନ୍ ଆପେୟ୍ଲେନ୍ ।”
௪௧நீங்கள் உங்களுடைய பிதாவின் செயல்களைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்கள் இல்லை; ஒரே பிதா எங்களுக்கு இருக்கிறார், அவர் தேவன் என்றார்கள்.
42 ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଇସ୍ୱରନ୍ ଆପେୟ୍ବେନ୍ ନଙ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଞେନ୍ଆଡଙ୍ ଏଡୁଙ୍ୟମ୍ତିଁୟ୍ ବନ୍; ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଇସ୍ୱରନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ଞେନ୍ ତେନ୍ନେ ଇୟ୍ଲାୟ୍; ସନୋଡ଼ାଞେନ୍ ବାତ୍ତେ ଞେନ୍ ଅଃନ୍ନିୟ୍ଲାୟ୍, ବନ୍ଡ ଆନିନ୍ ଞେନ୍ଆଡଙ୍ ଆପ୍ପାୟ୍ଲିଁୟ୍ ।
௪௨இயேசு அவர்களைப் பார்த்து: தேவன் உங்களுடைய பிதாவாக இருந்தால் என்னிடத்தில் அன்பாக இருப்பீர்கள். ஏனென்றால், நான் தேவனிடத்தில் இருந்து வந்திருக்கிறேன்; நான் நானாக வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.
43 ଇନିବା ବର୍ନେଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଅଃଗନ୍ଲୁଡ୍ବେନ୍? ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଞନଙ୍ଞେନ୍ ଅମ୍ଡଙ୍ଲେ ସଏଲେ ଏଃର୍ରପ୍ତିଏ ।
௪௩என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமல் இருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாமல் இருக்கிறதினால் அல்லவா?
44 ଆପେୟ୍ବେନ୍ ସନୁମ୍, ଆମଙନ୍ ସିଲଡ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଏଡୁଙ୍ଲନାୟ୍, ଆପେୟ୍ବେନ୍ ଆ ଇସ୍ସୁମ୍ ବାତ୍ତେ ଲନୁମ୍ନେନ୍ ଆସନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଲଡୟ୍ତବେନ୍ । ଆନିନ୍ ପୁର୍ବାନ୍ମା ସମ୍ୱବ୍ମର୍, ଆନିନ୍ ଆଙ୍ଗିୟ୍ଜା ଆଜାଡ଼ିନ୍ ଅଃଡ୍ଡନେଲୋ, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆମଙନ୍ ଆଜାଡ଼ିନ୍ ଅବୟ୍ ତଡ୍ । ଆଙ୍ଗା ଆନିନ୍ ପାତ୍ୟାନ୍ ବର୍ତନେ, ଆନିନ୍ଡମ୍ ତିଆତେ ବର୍ତନେ; ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନିନ୍ ପାତ୍ୟାମର୍, ଆରି ଆନିନ୍ ପାତ୍ୟାମରଞ୍ଜି ଆ ବାପା ।
௪௪நீங்கள் உங்களுடைய தகப்பனாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்களுடைய தகப்பனின் ஆசைகளின்படி செய்ய விருப்பமாக இருக்கிறீர்கள்; அவன் ஆரம்ப முதற்கொண்டு மனித கொலைபாதகனாக இருக்கிறான்; சத்தியம் அவனிடத்தில் இல்லாததினால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் தகப்பனுமாக இருக்கிறதினால் அவன் பொய் பேசும்போது தன்னுடைய சுபாவத்தின்படி அப்படிப் பேசுகிறான்.
45 ବନ୍ଡ ଞେନ୍ ଆଜାଡ଼ିନ୍ ବରର୍ତନାଞନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଞେନ୍ଆଡଙ୍ ଏଃଡ୍ଡର୍ନେ ।
௪௫நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறதினால் நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை.
46 ଅମଙ୍ଞେନ୍ ଇର୍ସେନ୍ ଡକୋ ଗାମ୍ଲେ ଅମଙ୍ଲୋଙ୍ବେନ୍ ସିଲଡ୍ ଆନା ସାକିନ୍ ତିୟ୍ଲେ ରପ୍ତିତେ? ଞେନ୍ ଆଜାଡ଼ିନ୍ ବର୍ରନାୟ୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଇନିବା ଆମ୍ୱେଞ୍ଜି ଞେନ୍ଆଡଙ୍ ଏଃଡ୍ଡର୍ନେ?
௪௬என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தமுடியும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருந்தும், நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கவில்லை.
47 ଆନା ଇସ୍ୱରନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ଡୁଙ୍ଲନାୟ୍, ଆନିନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ବର୍ନେ ଅମ୍ଡଙ୍ତେ; ଆମ୍ୱେଞ୍ଜି ଇସ୍ୱରନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ଏଃଡ୍ଡୁଙ୍ଲନାୟ୍, ତିଆସନ୍ ଏଃନ୍ନମ୍ଡଙେ ।”
௪௭தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாகாததினால் செவிகொடுக்காமல் இருக்கிறீர்கள் என்றார்.
48 ଜିଉଦିମରଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “ଆମନ୍ ଅବୟ୍ ସମିରୋଣବାୟ୍ ଆରି ଆମନ୍ଆଡଙ୍ ବୁତନ୍ ଆସୁମ୍ସୁମ୍, ଇନ୍ଲେନ୍ କେନ୍ଆତେ ଆଜାଡ଼ିନ୍ ଏଃବ୍ବର୍ନାୟ୍ ପଙ୍?”
௪௮அப்பொழுது யூதர்கள் அவருக்கு மறுமொழியாக: உன்னைச் சமாரியன் என்றும், பிசாசு பிடித்தவன் என்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள்.
49 ଜିସୁନ୍ ଗାମେନ୍, “ଞେନ୍ଆଡଙ୍ ବୁତନ୍ ଆସୁମ୍ସୁମ୍ ତଡ୍, ଞେନ୍ ଆପେୟ୍ଞେନ୍ଆଡଙ୍ ମାନ୍ନେତାୟ୍, ବନ୍ଡ ଆମ୍ୱେଞ୍ଜି ଞେନ୍ଆଡଙ୍ ଏଃମ୍ମାନ୍ନେଇଁୟ୍ ।
௪௯அதற்கு இயேசு: நான் பிசாசு பிடித்தவன் இல்லை, நான் என் பிதாவை மதிக்கிறேன், நீங்கள் என்னை மதிக்காமலிருக்கிறீர்கள்.
50 ଞେନ୍ ଆସନ୍ ଗନୁଗୁ ପନେମେଙନ୍ ଞେନ୍ ଅଃସାଜାୟ୍, ବନ୍ଡ ଆରି ଅବୟ୍ନେ ଡକୋ, ଆନିନ୍ କେନ୍ଆତେ ସାୟ୍ତେ, ଆରି ଡନେଲୋଙ୍ଞେନ୍ ଆନିନ୍ ପନ୍ସୁଆତିତେ ।
௫0நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி, நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்.
51 ଆଜାଡ଼ିଡମ୍ ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ଆନା ଞନଙ୍ଞେନ୍ ଞଣ୍ଡ୍ରମ୍ତନେ, ଆନିନ୍ ଆଙ୍ଗିୟ୍ଜା ଅଃର୍ରବୁଏ ।” (aiōn )
௫௧ஒருவன் என் வார்த்தையைக் கடைபிடித்தால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைப் பார்ப்பதில்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn )
52 ଜିଉଦିମରଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ନମି ଇନ୍ଲେଞ୍ଜି ଏଜନାଲାୟ୍, ଆମନ୍ଆଡଙ୍ ବୁତନ୍ ସୁମ୍ଲମ୍, ଅବ୍ରାମନ୍ ଡ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ରବୁଏଞ୍ଜି, ଆରି ଆମନ୍ ଗାମ୍ତେ, ଆନା ଞନଙ୍ଞେନ୍ ଞଣ୍ଡ୍ରମ୍ତନେ, ଆନିନ୍ ଆଙ୍ଗିୟ୍ଜା ଅଃର୍ରବୁଏ । (aiōn )
௫௨அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீ பிசாசு பிடித்தவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன், என் வார்த்தையைக் கடைபிடித்தால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். (aiōn )
53 ଆମନ୍ ଇନି ଆପେୟ୍ଲେନ୍ ଅବ୍ରାମନ୍ ସିଲଡ୍ ସୋଡ଼ା ପଙ୍? ଆନିନ୍ ତ ରବୁଏନ୍, ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ନିୟ୍ ରବୁଏଞ୍ଜି, ଆମନ୍ଡମ୍ ଆନା ଗାମ୍ଲେ ଅବ୍ଡିସୟ୍ତେ?”
௫௩எங்களுடைய பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ யார் என்று நினைக்கிறாய் என்றார்கள்.
54 ଜିସୁନ୍ ଗାମେନ୍, “ଞେନ୍ ଆସନ୍ ଗନୁଗୁ ପନେମେଙନ୍ ଞେନ୍ଡମ୍ ସାୟ୍ଲାୟ୍ ଡେନ୍, ତିଆତେ ଇନ୍ନିଙ୍ ବରାଁୟ୍ବାଁୟ୍ ତଡ୍; ବନ୍ଡ ଆନାଆଡଙ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଇସ୍ୱରବେନ୍ ଏଗାମ୍ତେ, ଆନିନ୍ ଞେନ୍ଆଡଙ୍ ଅବ୍ଗୁଗୁତେ ଅବ୍ପେମେଙ୍ତେ, ଆନିନ୍ ଆପେୟ୍ଞେନ୍ ।
௫௪இயேசு மறுமொழியாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்களுடைய தேவன் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
55 ଆରି, ଆମ୍ୱେଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଏଜନାଏ, ବନ୍ଡ ଞେନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଜନା । ଆରି ଞେନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଜନା ତଡ୍ ଗାମ୍ଲାଞନ୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଅନ୍ତମ୍ ଞେନ୍ ପାତ୍ୟାମର୍ ଡେତିଁୟ୍, ବନ୍ଡ ଞେନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଜନା, ଆରି ଆ ବର୍ନେନ୍ ଞେନ୍ ଞଣ୍ଡ୍ରମ୍ତନାୟ୍ ।
௫௫ஆனாலும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன்; அவரை அறியேன் என்று சொன்னால் உங்களைப்போல நானும் பொய்யனாக இருப்பேன்; அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கடைபிடிக்கிறேன்.
56 ଆପେୟ୍ବେନ୍ ଅବ୍ରାମନ୍ ଡିନ୍ନାଞେନ୍ ଗିୟ୍ଗିଜନ୍ ଆସନ୍ ଆସାଡାଲନ୍ ମଅଁୟ୍ଲନେ, ଆରି ଆନିନ୍ ତିଆତେ ଗିୟ୍ଲେ ସର୍ଡାଲନେ ।”
௫௬உங்களுடைய தகப்பனாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாக இருந்தான்; பார்த்து மகிழ்ந்தான் என்றார்.
57 ସିଲତ୍ତେ ଜିଉଦିମରଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଆମନ୍ ତ ନମିନ୍ତାନ୍ ପଚାସ ବର୍ସେଙ୍ ନିୟ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଡେଅମ୍, ଆମନ୍ ଇନି ଅବ୍ରାମନ୍ଆଡଙ୍ ଗିଜେନ୍ ପଙ୍?”
௫௭அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைப் பார்த்தாயோ என்றார்கள்.
58 ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଆଜାଡ଼ିଡମ୍ ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ଅବ୍ରାମନ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ କଡେଞ୍ଜି ଆ ଆମ୍ମୁଙ୍ ଞେନ୍ ଡକୋ ।”
௫௮அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
59 ସିଲତ୍ତେ ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ତନିଡନ୍ ଆସନ୍ ଅରେଙନ୍ ଞିଡବେଞ୍ଜି, ବନ୍ଡ ଜିସୁନ୍ ଏର୍ନବ୍ରାଙ୍ଡାନେନ୍ ସରେବାସିଙନ୍ ସିଲଡ୍ ଡୁଙ୍ଲନ୍ ଜିରେନ୍ ।
௫௯அப்பொழுது அவர்மேல் எறியும்படி கற்களை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தைவிட்டுப்போனார்.