< 箴言 知恵の泉 16 >

1 心にはかることは人に属し、舌の答は主から出る。
மனதின் யோசனைகள் மனிதனுடையது; நாவின் பதில் யெகோவாவால் வரும்.
2 人の道は自分の目にことごとく潔しと見える、しかし主は人の魂をはかられる。
மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுடைய பார்வைக்குச் சுத்தமானவைகள்; யெகோவாவோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.
3 あなたのなすべき事を主にゆだねよ、そうすれば、あなたの計るところは必ず成る。
உன்னுடைய செயல்களைக் யெகோவாவுக்கு ஒப்புவி; அப்பொழுது உன்னுடைய யோசனைகள் உறுதிப்படும்.
4 主はすべての物をおのおのその用のために造り、悪しき人をも災の日のために造られた。
யெகோவா எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.
5 すべて心に高ぶる者は主に憎まれる、確かに、彼は罰を免れない。
மனமேட்டிமையுள்ளவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; கையோடு கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.
6 いつくしみとまことによって、とがはあがなわれる、主を恐れることによって、人は悪を免れる。
கிருபையினாலும், சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; யெகோவாவுக்குப் பயப்படுகிறதினால் மனிதர்கள் தீமையைவிட்டு விலகுவார்கள்.
7 人の道が主を喜ばせる時、主はその人の敵をもその人と和らがせられる。
ஒருவனுடைய வழிகள் யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால், அவனுடைய எதிரிகளும் சமாதானமாகும்படிச் செய்வார்.
8 正義によって得たわずかなものは、不義によって得た多くの宝にまさる。
அநியாயமாக வந்த அதிக வருமானத்தைவிட, நியாயமாக வந்த கொஞ்ச வருமானமே நல்லது.
9 人は心に自分の道を考え計る、しかし、その歩みを導く者は主である。
மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ யெகோவா.
10 王のくちびるには神の決定がある、さばきをするとき、その口に誤りがない。
௧0ராஜாவின் உதடுகளில் இனிய வார்த்தை பிறக்கும்; நியாயத்தில் அவனுடைய வாய் தவறாது.
11 正しいはかりと天びんとは主のものである、袋にあるふんどうもすべて彼の造られたものである。
௧௧நியாயமான நிறைகோலும் தராசும் யெகோவாவுடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.
12 悪を行うことは王の憎むところである、その位が正義によって堅く立っているからである。
௧௨அநியாயம்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.
13 正しいくちびるは王に喜ばれる、彼は正しい事を言う者を愛する。
௧௩நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாகப் பேசுகிறவன்மேல் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.
14 王の怒りは死の使者である、知恵ある人はこれをなだめる。
௧௪ராஜாவின் கோபம் மரணதூதர்களுக்குச் சமம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.
15 王の顔の光には命がある、彼の恵みは春雨をもたらす雲のようだ。
௧௫ராஜாவின் முகக்களையில் வாழ்வு உண்டு; அவனுடைய தயவு பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.
16 知恵を得るのは金を得るのにまさる、悟りを得るのは銀を得るよりも望ましい。
௧௬பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை
17 悪を離れることは正しい人の道である、自分の道を守る者はその魂を守る。
௧௭தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன்னுடைய நடையைக் கவனித்திருக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்.
18 高ぶりは滅びにさきだち、誇る心は倒れにさきだつ。
௧௮அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
19 へりくだって貧しい人々と共におるのは、高ぶる者と共にいて、獲物を分けるにまさる。
௧௯அகங்காரிகளோடு கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைவிட, சிறுமையானவர்களோடு மனத்தாழ்மையாக இருப்பது நலம்.
20 慎んで、み言葉をおこなう者は栄える、主に寄り頼む者はさいわいである。
௨0விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; யெகோவாவை நம்புகிறவன் பாக்கியவான்.
21 心に知恵ある者はさとき者ととなえられる、くちびるが甘ければ、その教に人を説きつける力を増す。
௨௧இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி எனப்படுவான்; உதடுகளின் இனிமை கல்வியைப் பெருகச்செய்யும்.
22 知恵はこれを持つ者に命の泉となる、しかし、愚かさは愚かな者の受ける懲しめである。
௨௨புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனர்களின் போதனை மதியீனமே.
23 知恵ある者の心はその言うところを賢くし、またそのくちびるに人を説きつける力を増す。
௨௩ஞானியின் இருதயம் அவனுடைய வாய்க்கு அறிவை ஊட்டும்; அவனுடைய உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.
24 ここちよい言葉は蜂蜜のように、魂に甘く、からだを健やかにする。
௨௪இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும், எலும்புகளுக்கு மருந்தாகும்.
25 人が見て自分で正しいとする道があり、その終りはついに死にいたる道となるものがある。
௨௫மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
26 ほねおる者は飲食のためにほねおる、その口が自分に迫るからである。
௨௬உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான்; அவனுடைய வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.
27 よこしまな人は悪を企てる、そのくちびるには激しい火のようなものがある。
௨௭வீணான மகன் கிண்டிவிடுகிறான்; அவனுடைய உதடுகளில் இருப்பது எரிகிற அக்கினிபோன்றது.
28 偽る者は争いを起し、つげ口する者は親しい友を離れさせる。
௨௮மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான்.
29 しえたげる者はその隣り人をいざない、これを良くない道に導く。
௨௯கொடுமையானவன் தன்னுடைய அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கச்செய்கிறான்.
30 めくばせする者は悪を計り、くちびるを縮める者は悪事をなし遂げる。
௩0அவனுடைய மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன்னுடைய கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன்னுடைய உதடுகளைக் கடிக்கிறான்.
31 しらがは栄えの冠である、正しく生きることによってそれが得られる。
௩௧நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது மகிமையான கிரீடம்.
32 怒りをおそくする者は勇士にまさり、自分の心を治める者は城を攻め取る者にまさる。
௩௨பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன்.
33 人はくじをひく、しかし事を定めるのは全く主のことである。
௩௩சீட்டு மடியிலே போடப்படும்; காரியத்தின் முடிவோ யெகோவாவால் வரும்.

< 箴言 知恵の泉 16 >