< תהילים 107 >

הדו ליהוה כי טוב כי לעולם חסדו׃ 1
யெகோவாவை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
יאמרו גאולי יהוה אשר גאלם מיד צר׃ 2
யெகோவாவால் எதிரியின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு,
ומארצות קבצם ממזרח וממערב מצפון ומים׃ 3
கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், அப்படிச் சொல்வார்களாக.
תעו במדבר בישימון דרך עיר מושב לא מצאו׃ 4
அவர்கள் வாழும் ஊரைக்காணாமல், வனாந்திரத்திலே பாலைவனவழியாக,
רעבים גם צמאים נפשם בהם תתעטף׃ 5
பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா சோர்ந்துபோனதாகவும் அலைந்து திரிந்தார்கள்.
ויצעקו אל יהוה בצר להם ממצוקותיהם יצילם׃ 6
தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை மீட்டெடுத்தார்.
וידריכם בדרך ישרה ללכת אל עיר מושב׃ 7
வாழும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார்.
יודו ליהוה חסדו ונפלאותיו לבני אדם׃ 8
தாகமுள்ள ஆத்துமாவைக் யெகோவா திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,
כי השביע נפש שקקה ונפש רעבה מלא טוב׃ 9
அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
ישבי חשך וצלמות אסירי עני וברזל׃ 10
௧0தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம்செய்து, உன்னதமான தேவனுடைய ஆலோசனையை அசட்டைசெய்தவர்கள்,
כי המרו אמרי אל ועצת עליון נאצו׃ 11
௧௧காரிருளிலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டப்பட்டு கிடந்தார்கள்.
ויכנע בעמל לבם כשלו ואין עזר׃ 12
௧௨அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; உதவிசெய்ய ஒருவரும் இல்லாமல் விழுந்து போனார்கள்.
ויזעקו אל יהוה בצר להם ממצקותיהם יושיעם׃ 13
௧௩தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றினார்.
יוציאם מחשך וצלמות ומוסרותיהם ינתק׃ 14
௧௪காரிருளிலும் மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படச்செய்து, அவர்களுடைய கட்டுகளை அறுத்தார்.
יודו ליהוה חסדו ונפלאותיו לבני אדם׃ 15
௧௫யெகோவா வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று,
כי שבר דלתות נחשת ובריחי ברזל גדע׃ 16
௧௬அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
אולים מדרך פשעם ומעונתיהם יתענו׃ 17
௧௭புத்தியீனரும் தங்களுடைய கலக வழிகளாலும் தங்களுடைய அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள்.
כל אכל תתעב נפשם ויגיעו עד שערי מות׃ 18
௧௮அவர்களுடைய ஆத்துமா எல்லா உணவையும் வெறுக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் வரையிலும் நெருங்குகிறார்கள்.
ויזעקו אל יהוה בצר להם ממצקותיהם יושיעם׃ 19
௧௯தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றுகிறார்.
ישלח דברו וירפאם וימלט משחיתותם׃ 20
௨0அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
יודו ליהוה חסדו ונפלאותיו לבני אדם׃ 21
௨௧அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
ויזבחו זבחי תודה ויספרו מעשיו ברנה׃ 22
௨௨நன்றிபலிகளைச் செலுத்தி, அவருடைய செயல்களை ஆனந்த சத்தத்தோடு விவரிப்பார்களாக.
יורדי הים באניות עשי מלאכה במים רבים׃ 23
௨௩கப்பலேறி, கடற்பயணம்செய்து, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே,
המה ראו מעשי יהוה ונפלאותיו במצולה׃ 24
௨௪அவர்கள் யெகோவாவுடைய செயல்களையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள்.
ויאמר ויעמד רוח סערה ותרומם גליו׃ 25
௨௫அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கச்செய்யும்.
יעלו שמים ירדו תהומות נפשם ברעה תתמוגג׃ 26
௨௬அவர்கள் வானத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்களுடைய ஆத்துமா துன்பத்தினால் கரைந்துபோகிறது.
יחוגו וינועו כשכור וכל חכמתם תתבלע׃ 27
௨௭குடித்துவெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது.
ויצעקו אל יהוה בצר להם וממצוקתיהם יוציאם׃ 28
௨௮அப்பொழுது தங்களுடைய ஆபத்திலே அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுடைய இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.
יקם סערה לדממה ויחשו גליהם׃ 29
௨௯கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.
וישמחו כי ישתקו וינחם אל מחוז חפצם׃ 30
௩0அமைதி உண்டானதிற்காக அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் விரும்பிய துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.
יודו ליהוה חסדו ונפלאותיו לבני אדם׃ 31
௩௧அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
וירממוהו בקהל עם ובמושב זקנים יהללוהו׃ 32
௩௨மக்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக.
ישם נהרות למדבר ומצאי מים לצמאון׃ 33
௩௩அவர் ஆறுகளை வனாந்திரமாகவும், நீரூற்றுகளை வறண்ட இடமாகவும்,
ארץ פרי למלחה מרעת ישבי בה׃ 34
௩௪குடிகளுடைய பொல்லாப்புக்காக செழிப்பான தேசத்தைத் தரிசு நிலமாகவும் மாற்றுகிறார்.
ישם מדבר לאגם מים וארץ ציה למצאי מים׃ 35
௩௫அவர் வனாந்திரவெளியைத் தண்ணீர் குளமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,
ויושב שם רעבים ויכוננו עיר מושב׃ 36
௩௬பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி,
ויזרעו שדות ויטעו כרמים ויעשו פרי תבואה׃ 37
௩௭வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.
ויברכם וירבו מאד ובהמתם לא ימעיט׃ 38
௩௮அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகங்கள் குறையாமலிருக்கச்செய்கிறார்.
וימעטו וישחו מעצר רעה ויגון׃ 39
௩௯பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள்.
שפך בוז על נדיבים ויתעם בתהו לא דרך׃ 40
௪0அவர் எதிரிகளின் தலைவர்கள்மேல் இகழ்ச்சிவரச்செய்து, வழியில்லாத வனாந்திர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,
וישגב אביון מעוני וישם כצאן משפחות׃ 41
௪௧எளியவனையோ சிறுமையிலிருந்து எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவனுடைய வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்.
יראו ישרים וישמחו וכל עולה קפצה פיה׃ 42
௪௨உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; நியாயக்கேடெல்லாம் தன்னுடைய வாயை மூடும்.
מי חכם וישמר אלה ויתבוננו חסדי יהוה׃ 43
௪௩எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கட்டும்; ஞானவான்கள் யெகோவாவுடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.

< תהילים 107 >