< תהילים 104 >
ברכי נפשי את יהוה יהוה אלהי גדלת מאד הוד והדר לבשת׃ | 1 |
௧என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று; என் தேவனாகிய யெகோவாவே, நீர் மிகவும் பெரியவராக இருக்கிறீர்; மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர்.
עטה אור כשלמה נוטה שמים כיריעה׃ | 2 |
௨ஒளியை ஆடையாக அணிந்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.
המקרה במים עליותיו השם עבים רכובו המהלך על כנפי רוח׃ | 3 |
௩தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மேல்தளமாக்கி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய இறக்கைகளின்மேல் செல்லுகிறார்.
עשה מלאכיו רוחות משרתיו אש להט׃ | 4 |
௪தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரர்களை நெருப்பு ஜூவாலைகளாகவும் செய்கிறார்.
יסד ארץ על מכוניה בל תמוט עולם ועד׃ | 5 |
௫பூமி ஒருபோதும் நகர்த்த முடியாதபடி அதின் அஸ்திபாரங்கள்மேல் அதை நிறுவினார்.
תהום כלבוש כסיתו על הרים יעמדו מים׃ | 6 |
௬அதை ஆடையினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; மலைகளின்மேல் தண்ணீர்கள் நின்றது.
מן גערתך ינוסון מן קול רעמך יחפזון׃ | 7 |
௭அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துசென்றது.
יעלו הרים ירדו בקעות אל מקום זה יסדת להם׃ | 8 |
௮அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது.
גבול שמת בל יעברון בל ישובון לכסות הארץ׃ | 9 |
௯அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடக்காமல் இருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.
המשלח מעינים בנחלים בין הרים יהלכון׃ | 10 |
௧0அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்; அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது.
ישקו כל חיתו שדי ישברו פראים צמאם׃ | 11 |
௧௧அவைகள் வெளியின் உயிர்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்; அங்கே காட்டுக்கழுதைகள் தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்.
עליהם עוף השמים ישכון מבין עפאים יתנו קול׃ | 12 |
௧௨அவைகளின் ஓரமாக வானத்துப் பறவைகள் குடியிருந்து, கிளைகள் மேலிருந்து பாடும்.
משקה הרים מעליותיו מפרי מעשיך תשבע הארץ׃ | 13 |
௧௩தம்முடைய மேல்வீடுகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் இறைக்கிறார்; உமது செயல்களின் பயனால் பூமி திருப்தியாக இருக்கிறது.
מצמיח חציר לבהמה ועשב לעבדת האדם להוציא לחם מן הארץ׃ | 14 |
௧௪பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனிதருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்.
ויין ישמח לבב אנוש להצהיל פנים משמן ולחם לבב אנוש יסעד׃ | 15 |
௧௫மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சைரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டாக்கும் எண்ணெயையும், மனிதனுடைய இருதயத்தை ஆதரிக்கும் உணவையும் விளைவிக்கிறார்.
ישבעו עצי יהוה ארזי לבנון אשר נטע׃ | 16 |
௧௬யெகோவாவுடைய மரங்களும், அவரால் நடப்பட்ட லீபனோனின் கேதுருக்களும் செழித்து நிறைந்திருக்கும்.
אשר שם צפרים יקננו חסידה ברושים ביתה׃ | 17 |
௧௭அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருமரங்கள் கொக்குகளின் குடியிருப்பு.
הרים הגבהים ליעלים סלעים מחסה לשפנים׃ | 18 |
௧௮உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுயல்களுக்கும் அடைக்கலம்.
עשה ירח למועדים שמש ידע מבואו׃ | 19 |
௧௯சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன்னுடைய மறையும் நேரத்தை அறியும்.
תשת חשך ויהי לילה בו תרמש כל חיתו יער׃ | 20 |
௨0நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இரவுநேரமாகும்; அதிலே எல்லா காட்டு உயிர்களும் நடமாடும்.
הכפירים שאגים לטרף ולבקש מאל אכלם׃ | 21 |
௨௧இளசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு உணவு கிடைக்கும்படித்தேடும்.
תזרח השמש יאספון ואל מעונתם ירבצון׃ | 22 |
௨௨சூரியன் உதிக்கும்போது அவைகள் ஒதுங்கி, தங்களுடைய மறைவிடங்களில் படுத்துக்கொள்ளும்.
יצא אדם לפעלו ולעבדתו עדי ערב׃ | 23 |
௨௩அப்பொழுது மனிதன் மாலைவரை தன்னுடைய வேலைக்கும், தன்னுடைய உழைப்புக்கும் புறப்படுகிறான்.
מה רבו מעשיך יהוה כלם בחכמה עשית מלאה הארץ קנינך׃ | 24 |
௨௪யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு திரளாக இருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாகப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருட்களினால் நிறைந்திருக்கிறது.
זה הים גדול ורחב ידים שם רמש ואין מספר חיות קטנות עם גדלות׃ | 25 |
௨௫பெரிதும் அகலமுமான இந்த கடலும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே வாழும் சிறியவைகளும் பெரியவைகளுமான கணக்கில்லாத உயிர்கள் உண்டு.
שם אניות יהלכון לויתן זה יצרת לשחק בו׃ | 26 |
௨௬அதிலே கப்பல்கள் ஓடும்; அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு.
כלם אליך ישברון לתת אכלם בעתו׃ | 27 |
௨௭ஏற்றவேளையில் உணவைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.
תתן להם ילקטון תפתח ידך ישבעון טוב׃ | 28 |
௨௮நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.
תסתיר פניך יבהלון תסף רוחם יגועון ואל עפרם ישובון׃ | 29 |
௨௯நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் இறந்து, தங்களுடைய மண்ணுக்குத் திரும்பும்.
תשלח רוחך יבראון ותחדש פני אדמה׃ | 30 |
௩0நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் உருவாக்கப்படும்; நீர் பூமி அனைத்தையும் புதிதாக்குகிறீர்.
יהי כבוד יהוה לעולם ישמח יהוה במעשיו׃ | 31 |
௩௧யெகோவாவுடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; யெகோவா தம்முடைய செயல்களிலே மகிழுவார்.
המביט לארץ ותרעד יגע בהרים ויעשנו׃ | 32 |
௩௨அவர் பூமியை நோக்கிப்பார்க்க, அது அதிரும்; அவர் மலைகளைத் தொட, அவைகள் புகையும்.
אשירה ליהוה בחיי אזמרה לאלהי בעודי׃ | 33 |
௩௩நான் உயிரோடிருக்கும்வரை என்னுடைய யெகோவாவைப் பாடுவேன்; நான் உயிரோடிருக்கும்வரையும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.
יערב עליו שיחי אנכי אשמח ביהוה׃ | 34 |
௩௪நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாக இருக்கும்; நான் யெகோவாவுக்குள் மகிழுவேன்.
יתמו חטאים מן הארץ ורשעים עוד אינם ברכי נפשי את יהוה הללו יה׃ | 35 |
௩௫பாவிகள் பூமியிலிருந்து மறைந்து, துன்மார்க்கர்கள் இனி இல்லாமற்போவார்கள். என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று, அல்லேலூயா.