< איוב 22 >
ויען אליפז התמני ויאמר׃ | 1 |
௧அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக:
הלאל יסכן גבר כי יסכן עלימו משכיל׃ | 2 |
௨“ஒரு மனிதன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் நன்மையாக இருக்கிறதினால் தேவனுக்கு நன்மையாக இருப்பானோ?
החפץ לשדי כי תצדק ואם בצע כי תתם דרכיך׃ | 3 |
௩நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது அவருக்கு ஆதாயமாயிருக்குமோ?
המיראתך יכיחך יבוא עמך במשפט׃ | 4 |
௪அவர் உமக்குப் பயந்து உம்முடன் வழக்காடி, உம்முடன் நியாயத்திற்கு வருவாரோ?
הלא רעתך רבה ואין קץ לעונתיך׃ | 5 |
௫உம்முடைய பொல்லாப்பு பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாக இருக்கிறதல்லவோ?
כי תחבל אחיך חנם ובגדי ערומים תפשיט׃ | 6 |
௬காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி, ஏழைகளின் ஆடைகளைப் பறித்துக்கொண்டீர்.
לא מים עיף תשקה ומרעב תמנע לחם׃ | 7 |
௭மிகுந்த தாகமுள்ளவனுக்கு தண்ணீர் கொடுக்காமலும், பசித்தவனுக்கு ஆகாரம் கொடுக்காமலும் போனீர்.
ואיש זרוע לו הארץ ונשוא פנים ישב בה׃ | 8 |
௮பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிருக்கிறது; கனவான் அதில் குடியேறினான்.
אלמנות שלחת ריקם וזרעות יתמים ידכא׃ | 9 |
௯விதவைகளை வெறுமையாக அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் கைகள் முறிக்கப்பட்டது.
על כן סביבותיך פחים ויבהלך פחד פתאם׃ | 10 |
௧0ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; திடீரென்று உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கச் செய்கிறது.
או חשך לא תראה ושפעת מים תכסך׃ | 11 |
௧௧நீர் பார்க்க முடியாமலிருக்க இருள் வந்தது, பெருவெள்ளம் உம்மை மூடுகிறது.
הלא אלוה גבה שמים וראה ראש כוכבים כי רמו׃ | 12 |
௧௨தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.
ואמרת מה ידע אל הבעד ערפל ישפוט׃ | 13 |
௧௩நீர்: தேவன் எப்படி அறிவார், இருளுக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?
עבים סתר לו ולא יראה וחוג שמים יתהלך׃ | 14 |
௧௪அவர் பார்க்காமலிருக்க மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; வானமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.
הארח עולם תשמר אשר דרכו מתי און׃ | 15 |
௧௫அக்கிரம மனிதர்கள் ஆரம்பகாலத்தில் நடந்த பாதையை கவனித்துப் பார்த்தீரோ?
אשר קמטו ולא עת נהר יוצק יסודם׃ | 16 |
௧௬காலம் வருமுன்னே அவர்கள் இறந்துபோனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
האמרים לאל סור ממנו ומה יפעל שדי למו׃ | 17 |
௧௭தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.
והוא מלא בתיהם טוב ועצת רשעים רחקה מני׃ | 18 |
௧௮ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
יראו צדיקים וישמחו ונקי ילעג למו׃ | 19 |
௧௯எங்கள் நிலைமை அழியாமல், அவர்களுக்கு மீதியானதையோ நெருப்பு எரித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
אם לא נכחד קימנו ויתרם אכלה אש׃ | 20 |
௨0குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான்.
הסכן נא עמו ושלם בהם תבואתך טובה׃ | 21 |
௨௧நீர் அவருடன் பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மைவரும்.
קח נא מפיו תורה ושים אמריו בלבבך׃ | 22 |
௨௨அவர் வாயிலிருந்து பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
אם תשוב עד שדי תבנה תרחיק עולה מאהלך׃ | 23 |
௨௩நீர் சர்வவல்லமையுள்ள தேவனிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்; அநீதியை உமது கூடாரத்திற்குத் தூரமாக்குவீர்.
ושית על עפר בצר ובצור נחלים אופיר׃ | 24 |
௨௪அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர்.
והיה שדי בצריך וכסף תועפות לך׃ | 25 |
௨௫அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சுத்தவெள்ளியுமாயிருப்பார்.
כי אז על שדי תתענג ותשא אל אלוה פניך׃ | 26 |
௨௬அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.
תעתיר אליו וישמעך ונדריך תשלם׃ | 27 |
௨௭நீர் அவரை நோக்கி விண்ணப்பம்செய்ய, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.
ותגזר אומר ויקם לך ועל דרכיך נגה אור׃ | 28 |
௨௮நீர் ஒரு காரியத்தை தீர்மானித்தால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.
כי השפילו ותאמר גוה ושח עינים יושע׃ | 29 |
௨௯மனிதர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் காப்பாற்றப்படுவார்கள்.
ימלט אי נקי ונמלט בבר כפיך׃ | 30 |
௩0குற்றமில்லாதவனையுங்கூட விடுவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினால் அவன் விடுவிக்கப்படுவான்” என்றான்.