< איוב 15 >
ויען אליפז התימני ויאמר׃ | 1 |
௧அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக:
החכם יענה דעת רוח וימלא קדים בטנו׃ | 2 |
௨ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, தன் வயிற்றைக் கொண்டல்காற்றினால் நிரப்பி,
הוכח בדבר לא יסכון ומלים לא יועיל בם׃ | 3 |
௩பயனில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கம் செய்யலாமோ?
אף אתה תפר יראה ותגרע שיחה לפני אל׃ | 4 |
௪நீர் பயபக்தியை வீணென்று சொல்லி, தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறைத்துக்கொண்டீர்.
כי יאלף עונך פיך ותבחר לשון ערומים׃ | 5 |
௫உம்முடைய வாய் உம்முடைய அக்கிரமத்தைச் சொல்லிக்காட்டுகிறது; நீர் தந்திரமுள்ளவர்களின் சொல்லைத் தெரிந்துகொண்டீர்.
ירשיעך פיך ולא אני ושפתיך יענו בך׃ | 6 |
௬நான் அல்ல, உம்முடைய வாயே உம்மைக் குற்றவாளி என்று முடிவு செய்கிறது; உம்முடைய உதடுகளே உமக்கு விரோதமாகச் சாட்சியிடுகிறது.
הראישון אדם תולד ולפני גבעות חוללת׃ | 7 |
௭மனிதரில் முந்திப் பிறந்தவர் நீர் தானோ? மலைகளுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ?
הבסוד אלוה תשמע ותגרע אליך חכמה׃ | 8 |
௮நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, ஞானத்தை உம்மிடமாகச் சேர்த்துக்கொண்டீரோ?
מה ידעת ולא נדע תבין ולא עמנו הוא׃ | 9 |
௯நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ?
גם שב גם ישיש בנו כביר מאביך ימים׃ | 10 |
௧0உம்முடைய தகப்பனைவிட அதிக வயதுள்ள நரைத்தோரும் மிகுந்த வயதானோரும் எங்களுக்குள் இருக்கிறார்களே.
המעט ממך תנחמות אל ודבר לאט עמך׃ | 11 |
௧௧தேவன் அருளிய ஆறுதல்களும், உம்முடன் சொல்லப்படுகிற மென்மையான பேச்சும் உமக்கு இழிவான காரியமாயிருக்கிறதோ?
מה יקחך לבך ומה ירזמון עיניך׃ | 12 |
௧௨உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? உம்முடைய கண்கள் கோபத்துடன் பார்க்கிறது என்ன?
כי תשיב אל אל רוחך והצאת מפיך מלין׃ | 13 |
௧௩தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படச்செய்கிறீர்.
מה אנוש כי יזכה וכי יצדק ילוד אשה׃ | 14 |
௧௪மனிதனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், பெண்ணிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
הן בקדשו לא יאמין ושמים לא זכו בעיניו׃ | 15 |
௧௫இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை; வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
אף כי נתעב ונאלח איש שתה כמים עולה׃ | 16 |
௧௬அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனிதன் எத்தனை அதிகமாக அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?
אחוך שמע לי וזה חזיתי ואספרה׃ | 17 |
௧௭உமக்குக் காரியத்தைத் தெரியவைப்பேன் என்னைக் கேளும்; நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன்.
אשר חכמים יגידו ולא כחדו מאבותם׃ | 18 |
௧௮ஞானிகள் தங்கள் பிதாக்கள் சொல்லக் கேட்டு மறைக்காமல் அறிவித்ததையே நான் சொல்லுவேன்.
להם לבדם נתנה הארץ ולא עבר זר בתוכם׃ | 19 |
௧௯அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை.
כל ימי רשע הוא מתחולל ומספר שנים נצפנו לעריץ׃ | 20 |
௨0துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுகிறான்; பலவந்தம் செய்கிறவனுக்கு அவனுடைய வருடங்களின் எண்ணிக்கை மறைக்கப்பட்டிருக்கிறது.
קול פחדים באזניו בשלום שודד יבואנו׃ | 21 |
௨௧பயங்கரமான சத்தம் அவனுடைய காதுகளில் தொனிக்கிறது; அவன் சமாதானமாயிருக்கும்போது பாழாக்குகிறவன் அவன்மேல் வருவான்.
לא יאמין שוב מני חשך וצפו הוא אלי חרב׃ | 22 |
௨௨இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், ஒளிந்திருக்கிறவர்களின் பட்டயத்திற்கு அவன் பயப்படுகிறான்.
נדד הוא ללחם איה ידע כי נכון בידו יום חשך׃ | 23 |
௨௩அப்பம் எங்கே கிடைக்கும் என்று அவன் அலைந்து திரிகிறான்; இருளானநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான்.
יבעתהו צר ומצוקה תתקפהו כמלך עתיד לכידור׃ | 24 |
௨௪இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கச்செய்து, போர்வீரனான ராஜாவைப்போல அவனை மேற்கொள்ளும்.
כי נטה אל אל ידו ואל שדי יתגבר׃ | 25 |
௨௫அவன் தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி, சர்வவல்லவருக்கு விரோதமாகப் பராக்கிரமம் பாராட்டுகிறான்.
ירוץ אליו בצואר בעבי גבי מגניו׃ | 26 |
௨௬கடினக்கழுத்துடனும், பருத்த குமிழுள்ள தன் கேடயங்களுடனும் அவருக்கு எதிராக ஓடுகிறான்.
כי כסה פניו בחלבו ויעש פימה עלי כסל׃ | 27 |
௨௭அவனுடைய முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது.
וישכון ערים נכחדות בתים לא ישבו למו אשר התעתדו לגלים׃ | 28 |
௨௮ஆனாலும் பாழான பட்டணங்களிலும், குடிபோன கற்குவியலான வீடுகளிலும் குடியிருப்பான்.
לא יעשר ולא יקום חילו ולא יטה לארץ מנלם׃ | 29 |
௨௯அவன் செல்வந்தனாவதுமில்லை, அவனுடைய செல்வம் நிலைப்பதுமில்லை; அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை.
לא יסור מני חשך ינקתו תיבש שלהבת ויסור ברוח פיו׃ | 30 |
௩0இருளுக்கு அவன் தப்புவதில்லை; நெருப்புத்தணல் அவனுடைய கிளையைக் காய்ந்துபோகச் செய்யும்; அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான்;
אל יאמן בשו נתעה כי שוא תהיה תמורתו׃ | 31 |
௩௧வழிதப்பினவன் மாயையை நம்பக்கூடாது; நம்பினால் மாயையே அவனுடைய பலனாயிருக்கும்.
בלא יומו תמלא וכפתו לא רעננה׃ | 32 |
௩௨அது அவனுடைய நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாகப் பலிக்கும்; அவனுடைய செடிகள் பச்சையாக இருப்பதில்லை.
יחמס כגפן בסרו וישלך כזית נצתו׃ | 33 |
௩௩பிஞ்சுகள் உதிர்ந்துபோகிற திராட்சைச்செடியைப்போலவும், பூக்கள் உதிர்ந்து போகிற ஒலிவமரத்தைப் போலவும் அவன் இருப்பான்.
כי עדת חנף גלמוד ואש אכלה אהלי שחד׃ | 34 |
௩௪மாயக்காரரின் கூட்டம் வெறுமையாகப்போகும்; லஞ்சம் வாங்கினவர்களின் கூடாரங்களை நெருப்பு எரிக்கும்.
הרה עמל וילד און ובטנם תכין מרמה׃ | 35 |
௩௫அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெறுகிறான்; அவர்கள் கர்ப்பம் மாயையைப் பிறப்பிக்கும்” என்றான்.