< יְהוֹשֻעַ 21 >
וַֽיִּגְּשׁ֗וּ רָאשֵׁי֙ אֲבֹ֣ות הַלְוִיִּ֔ם אֶל־אֶלְעָזָר֙ הַכֹּהֵ֔ן וְאֶל־יְהֹושֻׁ֖עַ בִּן־נ֑וּן וְאֶל־רָאשֵׁ֛י אֲבֹ֥ות הַמַּטֹּ֖ות לִבְנֵ֥י יִשְׂרָאֵֽל׃ | 1 |
அதன்பின் லேவி கோத்திரத்தின் குடும்பத் தலைவர்கள், ஆசாரியன் எலெயாசாரையும், நூனின் மகனாகிய யோசுவாவையும், மற்றும் இஸ்ரயேல் கோத்திரத் தலைவர்களையும்
וַיְדַבְּר֨וּ אֲלֵיהֶ֜ם בְּשִׁלֹ֗ה בְּאֶ֤רֶץ כְּנַ֙עַן֙ לֵאמֹ֔ר יְהוָה֙ צִוָּ֣ה בְיַד־מֹשֶׁ֔ה לָֽתֶת־לָ֥נוּ עָרִ֖ים לָשָׁ֑בֶת וּמִגְרְשֵׁיהֶ֖ן לִבְהֶמְתֵּֽנוּ׃ | 2 |
கானான் தேசத்தில் உள்ள சீலோ நகரில் சந்தித்தார்கள். அவர்கள், “யெகோவா மோசே மூலமாக நாங்கள் வசிப்பதற்குப் பட்டணங்களையும் எங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சல் நிலங்களையும் நீங்கள் கொடுக்கவேண்டும் எனக் கட்டளையிட்டிருந்தார்” என்று அவர்களுக்கு நினைவுபடுத்தினார்கள்.
וַיִּתְּנ֨וּ בְנֵי־יִשְׂרָאֵ֧ל לַלְוִיִּ֛ם מִנַּחֲלָתָ֖ם אֶל־פִּ֣י יְהוָ֑ה אֶת־הֶעָרִ֥ים הָאֵ֖לֶּה וְאֶת־מִגְרְשֵׁיהֶֽן׃ | 3 |
எனவே யெகோவா கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர், லேவியர்களுக்குத் தமது சொத்துரிமையில் இருந்து, பின்வரும் பட்டணங்களையும், மேய்ச்சல் நிலங்களையும் கொடுத்தார்கள்.
וַיֵּצֵ֥א הַגֹּורָ֖ל לְמִשְׁפְּחֹ֣ת הַקְּהָתִ֑י וַיְהִ֡י לִבְנֵי֩ אַהֲרֹ֨ן הַכֹּהֵ֜ן מִן־הַלְוִיִּ֗ם מִמַּטֵּ֣ה יְ֠הוּדָה וּמִמַּטֵּ֨ה הַשִּׁמְעֹנִ֜י וּמִמַּטֵּ֤ה בִנְיָמִן֙ בַּגֹּורָ֔ל עָרִ֖ים שְׁלֹ֥שׁ עֶשְׂרֵֽה׃ ס | 4 |
முதலாவது சீட்டு வம்சம் வம்சமாக கோகாத்தியருக்கு விழுந்தது. ஆசாரியன் ஆரோனின் வழித்தோன்றிய லேவியருக்கு யூதா, சிமியோன், பென்யமீன் ஆகிய கோத்திரங்களின் பங்கில் இருந்து பதின்மூன்று பட்டணங்கள் வழங்கப்பட்டன.
וְלִבְנֵ֨י קְהָ֜ת הַנֹּותָרִ֗ים מִמִּשְׁפְּחֹ֣ת מַטֵּֽה־אֶ֠פְרַיִם וּֽמִמַּטֵּה־דָ֞ן וּמֵחֲצִ֨י מַטֵּ֧ה מְנַשֶּׁ֛ה בַּגֹּורָ֖ל עָרִ֥ים עָֽשֶׂר׃ ס | 5 |
கோகாத்தின் மற்ற வம்சங்களுக்கு, எப்பிராயீம், தாண், மனாசேயின் அரைக்கோத்திரம் ஆகிய வம்சங்களுக்கும் நியமித்த பகுதியிலிருந்து பத்துப் பட்டணங்கள் வழங்கப்பட்டன.
וְלִבְנֵ֣י גֵרְשֹׁ֗ון מִמִּשְׁפְּחֹ֣ות מַטֵּֽה־יִשָּׂשכָ֣ר וּמִמַּטֵּֽה־אָ֠שֵׁר וּמִמַּטֵּ֨ה נַפְתָּלִ֜י וּ֠מֵחֲצִי מַטֵּ֨ה מְנַשֶּׁ֤ה בַבָּשָׁן֙ בַּגֹּורָ֔ל עָרִ֖ים שְׁלֹ֥שׁ עֶשְׂרֵֽה׃ ס | 6 |
கெர்சோனின் வழித்தோன்றலுக்கு இசக்கார், ஆசேர், நப்தலி கோத்திரங்களிலும், பாசானில் தங்கிய மனாசேயின் அரைக் கோத்திரத்திலும் உள்ள வம்சங்களின் பங்கில் இருந்து பதின்மூன்று பட்டணங்கள் வழங்கப்பட்டன.
לִבְנֵ֨י מְרָרִ֜י לְמִשְׁפְּחֹתָ֗ם מִמַּטֵּ֨ה רְאוּבֵ֤ן וּמִמַּטֵּה־גָד֙ וּמִמַּטֵּ֣ה זְבוּלֻ֔ן עָרִ֖ים שְׁתֵּ֥ים עֶשְׂרֵֽה׃ | 7 |
மெராரி சந்ததிகள் வம்சம் வம்சமாக ரூபன், காத், செபுலோன் ஆகிய கோத்திரங்களிலிருந்து பன்னிரண்டு பட்டணங்களைப் பெற்றார்கள்.
וַיִּתְּנ֤וּ בְנֵֽי־יִשְׂרָאֵל֙ לַלְוִיִּ֔ם אֶת־הֶעָרִ֥ים הָאֵ֖לֶּה וְאֶת־מִגְרְשֵׁיהֶ֑ן כַּאֲשֶׁ֨ר צִוָּ֧ה יְהוָ֛ה בְּיַד־מֹשֶׁ֖ה בַּגֹּורָֽל׃ פ | 8 |
யெகோவா மோசேயின் மூலம் கட்டளையிட்டபடியே, இஸ்ரயேல் மக்கள் இந்தப் பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் லேவியர்களுக்குக் கொடுத்தார்கள்.
וֽ͏ַיִּתְּנ֗וּ מִמַּטֵּה֙ בְּנֵ֣י יְהוּדָ֔ה וּמִמַּטֵּ֖ה בְּנֵ֣י שִׁמְעֹ֑ון אֵ֚ת הֶֽעָרִ֣ים הָאֵ֔לֶּה אֲשֶׁר־יִקְרָ֥א אֶתְהֶ֖ן בְּשֵֽׁם׃ | 9 |
யூதா, சிமியோன் கோத்திரங்களின் பங்கிலிருந்து கொடுக்கப்பட்ட பெயர்களின்படி பட்டணங்களாவன:
וֽ͏ַיְהִי֙ לִבְנֵ֣י אַהֲרֹ֔ן מִמִּשְׁפְּחֹ֥ות הַקְּהָתִ֖י מִבְּנֵ֣י לֵוִ֑י כִּ֥י לָהֶ֛ם הָיָ֥ה הַגֹּורָ֖ל רִיאשֹׁנָֽה׃ | 10 |
ஆரோனின் வழித்தோன்றல்களுக்கு முதல் சீட்டு விழுந்ததால் இப்பட்டணங்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டன. இவர்கள் லேவி கோத்திரத்தில் கோகாத்தின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.
וַיִּתְּנ֨וּ לָהֶ֜ם אֶת־קִרְיַת֩ אַרְבַּ֨ע אֲבִ֧י הָֽעֲנֹ֛וק הִ֥יא חֶבְרֹ֖ון בְּהַ֣ר יְהוּדָ֑ה וְאֶת־מִגְרָשֶׁ֖הָ סְבִיבֹתֶֽיהָ׃ | 11 |
இவ்விதமாக இஸ்ரயேலர் யூதாவின் மலைநாட்டிலுள்ள எப்ரோனையும் அதாவது கீரியாத் அர்பா அதைச் சுற்றியிருந்த மேய்ச்சல் நிலத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். அர்பா என்பவன் ஏனாக்கியரின் முற்பிதா.
וְאֶת־שְׂדֵ֥ה הָעִ֖יר וְאֶת־חֲצֵרֶ֑יהָ נָֽתְנ֛וּ לְכָלֵ֥ב בֶּן־יְפֻנֶּ֖ה בַּאֲחֻזָּתֹֽו׃ ס | 12 |
ஆனால் அந்நகரைச் சுற்றியிருந்த வெளிநிலங்களையும், கிராமங்களையுமோ எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்குச் சொந்தமாகக் கொடுத்திருந்தார்கள்.
וְלִבְנֵ֣י ׀ אַהֲרֹ֣ן הַכֹּהֵ֗ן נָֽתְנוּ֙ אֶת־עִיר֙ מִקְלַ֣ט הָרֹצֵ֔חַ אֶת־חֶבְרֹ֖ון וְאֶת־מִגְרָשֶׁ֑הָ וְאֶת־לִבְנָ֖ה וְאֶת־מִגְרָשֶֽׁהָ׃ | 13 |
இவ்வாறு ஆசாரியனான ஆரோனின் சந்ததிகளுக்கு கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவனுக்கு அடைக்கலப் பட்டணமாயிருந்த எப்ரோனைக் கொடுத்தார்கள். லிப்னா,
וְאֶת־יַתִּר֙ וְאֶת־מִגְרָשֶׁ֔הָ וְאֶת־אֶשְׁתְּמֹ֖עַ וְאֶת־מִגְרָשֶֽׁהָ׃ | 14 |
யாத்தீர், எஸ்தெமோவா,
וְאֶת־חֹלֹן֙ וְאֶת־מִגְרָשֶׁ֔הָ וְאֶת־דְּבִ֖ר וְאֶת־מִגְרָשֶֽׁהָ׃ | 15 |
ஓலோன், தெபீர்,
וְאֶת־עַ֣יִן וְאֶת־מִגְרָשֶׁ֗הָ וְאֶת־יֻטָּה֙ וְאֶת־מִגְרָשֶׁ֔הָ אֶת־בֵּ֥ית שֶׁ֖מֶשׁ וְאֶת־מִגְרָשֶׁ֑הָ עָרִ֣ים תֵּ֔שַׁע מֵאֵ֕ת שְׁנֵ֥י הַשְּׁבָטִ֖ים הָאֵֽלֶּה׃ פ | 16 |
ஆயின், யுத்தா, பெத்ஷிமேஷ் ஆகிய பட்டணங்களையும் அத்துடன் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் கொடுத்தார்கள். யூதா, சிமியோன் கோத்திரத்திலிருந்து எல்லாமாக ஒன்பது பட்டணங்கள் வழங்கப்பட்டன.
וּמִמַּטֵּ֣ה בִנְיָמִ֔ן אֶת־גִּבְעֹ֖ון וְאֶת־מִגְרָשֶׁ֑הָ אֶת־גֶּ֖בַע וְאֶת־מִגְרָשֶֽׁהָ׃ | 17 |
பென்யமீன் கோத்திரத்தின் பங்கிலிருந்து கிபியோன், கேபா,
אֶת־עֲנָתֹות֙ וְאֶת־מִגְרָשֶׁ֔הָ וְאֶת־עַלְמֹ֖ון וְאֶת־מִגְרָשֶׁ֑הָ עָרִ֖ים אַרְבַּֽע׃ | 18 |
ஆனதோத், அல்மோன் ஆகிய நான்கு பட்டணங்களுடன் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் கொடுத்தான்.
כָּל־עָרֵ֥י בְנֵֽי־אַהֲרֹ֖ן הַכֹּֽהֲנִ֑ים שְׁלֹשׁ־עֶשְׂרֵ֥ה עָרִ֖ים וּמִגְרְשֵׁיהֶֽן׃ ס | 19 |
ஆரோனின் வழித்தோன்றலான ஆசாரியருக்கு மொத்தம் பதின்மூன்று பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
וּלְמִשְׁפְּחֹ֤ות בְּנֵֽי־קְהָת֙ הַלְוִיִּ֔ם הַנֹּותָרִ֖ים מִבְּנֵ֣י קְהָ֑ת וַֽיְהִי֙ עָרֵ֣י גֹֽורָלָ֔ם מִמַּטֵּ֖ה אֶפְרָֽיִם׃ | 20 |
லேவியரான கோகாத்தின் வம்சத்தைச் சேர்ந்த பிறருக்கு எப்பிராயீம் கோத்திரத்தின் பங்கிலிருந்து பட்டணங்கள் வழங்கப்பட்டன.
וַיִּתְּנ֨וּ לָהֶ֜ם אֶת־עִ֨יר מִקְלַ֧ט הָרֹצֵ֛חַ אֶת־שְׁכֶ֥ם וְאֶת־מִגְרָשֶׁ֖הָ בְּהַ֣ר אֶפְרָ֑יִם וְאֶת־גֶּ֖זֶר וְאֶת־מִגְרָשֶֽׁהָ׃ | 21 |
எப்பிராயீம் மலைநாட்டில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவனுக்கு அடைக்கலப் பட்டணமாயிருந்த சீகேம், கேசேர்,
וְאֶת־קִבְצַ֙יִם֙ וְאֶת־מִגְרָשֶׁ֔הָ וְאֶת־בֵּ֥ית חֹורֹ֖ן וְאֶת־מִגְרָשֶׁ֑הָ עָרִ֖ים אַרְבַּֽע׃ ס | 22 |
கிப்சாயீம், பெத் ஓரோன் ஆகிய நான்கு பட்டணங்களுடன் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
וּמִמַּ֨טֵּה־דָ֔ן אֶֽת־אֶלְתְּקֵ֖א וְאֶת־מִגְרָשֶׁ֑הָ אֶֽת־גִּבְּתֹ֖ון וְאֶת־מִגְרָשֶֽׁהָ׃ | 23 |
அதோடு தாண் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து எல்தெக்கே, கிபெத்தோன்,
אֶת־אַיָּלֹון֙ וְאֶת־מִגְרָשֶׁ֔הָ אֶת־גַּת־רִמֹּ֖ון וְאֶת־מִגְרָשֶׁ֑הָ עָרִ֖ים אַרְבַּֽע׃ ס | 24 |
ஆயலோன், காத்ரிம்மோன் ஆகிய நான்கு பட்டணங்களுடன் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றார்கள்.
וּמִֽמַּחֲצִית֙ מַטֵּ֣ה מְנַשֶּׁ֔ה אֶת־תַּעְנַךְ֙ וְאֶת־מִגְרָשֶׁ֔הָ וְאֶת־גַּת־רִמֹּ֖ון וְאֶת־מִגְרָשֶׁ֑הָ עָרִ֖ים שְׁתָּֽיִם׃ | 25 |
மனாசேயின் பாதிக் கோத்திரத்திலிருந்து தானா, காத்ரிம்மோன் ஆகிய இரு பட்டணங்களுடன் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றார்கள்.
כָּל־עָרִ֥ים עֶ֖שֶׂר וּמִגְרְשֵׁיהֶ֑ן לְמִשְׁפְּחֹ֥ות בְּנֵֽי־קְהָ֖ת הַנֹּותָרִֽים׃ ס | 26 |
மேற்கூறிய பத்துப் பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் கோகாத்தியரின் வம்சங்களில் எஞ்சியோருக்கு வழங்கப்பட்டன.
וְלִבְנֵ֣י גֵרְשֹׁון֮ מִמִּשְׁפְּחֹ֣ת הַלְוִיִּם֒ מֵחֲצִ֞י מַטֵּ֣ה מְנַשֶּׁ֗ה אֶת־עִיר֙ מִקְלַ֣ט הָרֹצֵ֔חַ אֶת־גָּלֹון (גֹּולָ֤ן) בַּבָּשָׁן֙ וְאֶת־מִגְרָשֶׁ֔הָ וְאֶֽת־בְּעֶשְׁתְּרָ֖ה וְאֶת־מִגְרָשֶׁ֑הָ עָרִ֖ים שְׁתָּֽיִם׃ ס | 27 |
லேவி கோத்திரத்தின் கெர்சோன் வம்சத்தினருக்கு மனாசேயின் அரைக் கோத்திரத்திலிருந்து பாசானிலுள்ள கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவனுக்கு அடைக்கலப் பட்டணமான கோலானும், பெயெஷ்தெராவுமான இரு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
וּמִמַּטֵּ֣ה יִשָּׂשכָ֔ר אֶת־קִשְׁיֹ֖ון וְאֶת־מִגְרָשֶׁ֑הָ אֶת־דָּֽבְרַ֖ת וְאֶת־מִגְרָשֶֽׁהָ׃ | 28 |
இசக்கார் கோத்திரத்தின் பங்கிலிருந்து கிசோயோன் தாபேராத்,
אֶת־יַרְמוּת֙ וְאֶת־מִגְרָשֶׁ֔הָ אֶת־עֵ֥ין גַּנִּ֖ים וְאֶת־מִגְרָשֶׁ֑הָ עָרִ֖ים אַרְבַּֽע׃ ס | 29 |
யர்மூத், என்கன்னீம் ஆகிய நான்கு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
וּמִמַּטֵּ֣ה אָשֵׁ֔ר אֶת־מִשְׁאָ֖ל וְאֶת־מִגְרָשֶׁ֑הָ אֶת־עַבְדֹּ֖ון וְאֶת־מִגְרָשֶֽׁהָ׃ | 30 |
ஆசேர் கோத்திரத்தின் பங்கிலிருந்து மிஷாயால், அப்தோன்,
אֶת־חֶלְקָת֙ וְאֶת־מִגְרָשֶׁ֔הָ וְאֶת־רְחֹ֖ב וְאֶת־מִגְרָשֶׁ֑הָ עָרִ֖ים אַרְבַּֽע׃ ס | 31 |
எல்காத், ரேகோப் ஆகிய நான்கு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.
וּמִמַּטֵּ֨ה נַפְתָּלִ֜י אֶת־עִ֣יר ׀ מִקְלַ֣ט הָֽרֹצֵ֗חַ אֶת־קֶ֨דֶשׁ בַּגָּלִ֤יל וְאֶת־מִגְרָשֶׁ֙הָ֙ וְאֶת־חַמֹּ֥ת דֹּאר֙ וְאֶת־מִגְרָשֶׁ֔הָ וְאֶת־קַרְתָּ֖ן וְאֶת־מִגְרָשֶׁ֑הָ עָרִ֖ים שָׁלֹֽשׁ׃ | 32 |
நப்தலி கோத்திரத்திலிருந்து கலிலேய பிரதேசத்தில் உள்ள கொலைக்குற்றம் சாட்டப்பட்டவனுக்கு அடைக்கலப் பட்டணமான கேதேஷ், அமோத்தோர், கர்தான் ஆகிய மூன்று பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
כָּל־עָרֵ֥י הַגֵּרְשֻׁנִּ֖י לְמִשְׁפְּחֹתָ֑ם שְׁלֹשׁ־עֶשְׂרֵ֥ה עִ֖יר וּמִגְרְשֵׁיהֶֽן׃ ס | 33 |
கெர்சோனிய வம்சங்களுக்கு மேய்ச்சல் நிலங்களோடு வழங்கப்பட்ட பட்டணங்கள் எல்லாம் பதின்மூன்றாக இருந்தன.
וּלְמִשְׁפְּחֹ֣ות בְּנֵֽי־מְרָרִי֮ הַלְוִיִּ֣ם הַנֹּותָרִים֒ מֵאֵת֙ מַטֵּ֣ה זְבוּלֻ֔ן אֶֽת־יָקְנְעָ֖ם וְאֶת־מִגְרָשֶׁ֑הָ אֶת־קַרְתָּ֖ה וְאֶת־מִגְרָשֶֽׁהָ׃ | 34 |
மற்ற லேவியர்களாகிய மெராரி வம்சங்களுக்குச் செபுலோன் கோத்திரத்திலிருந்து யொக்னீம், கர்தா,
אֶת־דִּמְנָה֙ וְאֶת־מִגְרָשֶׁ֔הָ אֶֽת־נַהֲלָ֖ל וְאֶת־מִגְרָשֶׁ֑הָ עָרִ֖ים אַרְבַּֽע׃ | 35 |
திம்னா, நகலால் ஆகிய நான்கு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
וּמִמַּטֵּ֣ה רְאוּבֵ֔ן אֶת־בֶּ֖צֶר וְאֶת־מִגְרָשֶׁ֑הָ וְאֶת־יַ֖הְצָה וְאֶת־מִגְרָשֶֽׁהָ׃ | 36 |
ரூபனின் கோத்திரத்திலிருந்து பேசேர், யாகாசா,
אֶת־קְדֵמֹות֙ וְאֶת־מִגְרָשֶׁ֔הָ וְאֶת־מֵיפָ֖עַת וְאֶת־מִגְרָשֶׁ֑הָ עָרִ֖ים אַרְבַּֽע׃ ס | 37 |
கெதெமோத், மேபாகாத் ஆகிய நான்கு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
וּמִמַּטֵּה־גָ֗ד אֶת־עִיר֙ מִקְלַ֣ט הָרֹצֵ֔חַ אֶת־רָמֹ֥ת בַּגִּלְעָ֖ד וְאֶת־מִגְרָשֶׁ֑הָ וְאֶֽת־מַחֲנַ֖יִם וְאֶת־מִגְרָשֶֽׁהָ׃ | 38 |
காத் கோத்திரத்திலிருந்து கீலேயாத்திலுள்ள கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவனுக்கு அடைக்கலப் பட்டணமான ராமோத், மகனாயீம்
אֶת־חֶשְׁבֹּון֙ וְאֶת־מִגְרָשֶׁ֔הָ אֶת־יַעְזֵ֖ר וְאֶת־מִגְרָשֶׁ֑הָ כָּל־עָרִ֖ים אַרְבַּֽע׃ | 39 |
எஸ்போன், யாசேர் ஆகிய நான்கு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
כָּל־הֶ֨עָרִ֜ים לִבְנֵ֤י מְרָרִי֙ לְמִשְׁפְּחֹתָ֔ם הַנֹּותָרִ֖ים מִמִּשְׁפְּחֹ֣ות הַלְוִיִּ֑ם וַיְהִי֙ גֹּורָלָ֔ם עָרִ֖ים שְׁתֵּ֥ים עֶשְׂרֵֽה׃ | 40 |
லேவி கோத்திரத்தின் எஞ்சிய பகுதியினரான மெராரியர் வம்சங்களுக்கு வழங்கப்பட்ட பட்டணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும்.
כֹּ֚ל עָרֵ֣י הַלְוִיִּ֔ם בְּתֹ֖וךְ אֲחֻזַּ֣ת בְּנֵֽי־יִשְׂרָאֵ֑ל עָרִ֛ים אַרְבָּעִ֥ים וּשְׁמֹנֶ֖ה וּמִגְרְשֵׁיהֶֽן׃ | 41 |
இஸ்ரயேலரிடம் இருந்த நிலப்பரப்பில், மேய்ச்சல் நிலத்தோடு லேவியருக்கு கொடுக்கப்பட்ட பட்டணங்களின் எண்ணிக்கை எல்லாமாக நாற்பத்தெட்டாக இருந்தது.
תִּֽהְיֶ֙ינָה֙ הֶעָרִ֣ים הָאֵ֔לֶּה עִ֣יר עִ֔יר וּמִגְרָשֶׁ֖יהָ סְבִיבֹתֶ֑יהָ כֵּ֖ן לְכָל־הֶעָרִ֥ים הָאֵֽלֶּה׃ ס | 42 |
வழங்கப்பட்ட பட்டணங்கள் ஒவ்வொன்றைச் சுற்றிலும் மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. எல்லாப் பட்டணங்களும் அவ்வாறே அமைந்திருந்தன.
וַיִּתֵּ֤ן יְהוָה֙ לְיִשְׂרָאֵ֔ל אֶת־כָּל־הָאָ֔רֶץ אֲשֶׁ֥ר נִשְׁבַּ֖ע לָתֵ֣ת לַאֲבֹותָ֑ם וַיִּרָשׁ֖וּהָ וַיֵּ֥שְׁבוּ בָֽהּ׃ | 43 |
இவ்விதமாய் யெகோவா இஸ்ரயேலரின் முற்பிதாக்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த எல்லா நிலங்களையும் இஸ்ரயேலருக்கு வழங்கினார். அவர்கள் அந்த நிலத்தை உரிமையாக்கி அங்கே குடியேறினார்கள்.
וַיָּ֨נַח יְהוָ֤ה לָהֶם֙ מִסָּבִ֔יב כְּכֹ֥ל אֲשֶׁר־נִשְׁבַּ֖ע לַאֲבֹותָ֑ם וְלֹא־עָ֨מַד אִ֤ישׁ בִּפְנֵיהֶם֙ מִכָּל־אֹ֣יְבֵיהֶ֔ם אֵ֚ת כָּל־אֹ֣יְבֵיהֶ֔ם נָתַ֥ן יְהוָ֖ה בְּיָדָֽם׃ | 44 |
யெகோவா இஸ்ரயேலரின் முற்பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, அவர்களுக்கு நாற்புறமும் அமைதியைக் கொடுத்தார். அவர்களின் எதிரிகளில் ஒருவராயினும் அவர்களை எதிர்த்துநிற்க முடியவில்லை. ஏனெனில் எதிரிகள் அனைவரையும் யெகோவா அவர்களுடைய கையில் ஒப்படைத்தார்.
לֹֽא־נָפַ֣ל דָּבָ֔ר מִכֹּל֙ הַדָּבָ֣ר הַטֹּ֔וב אֲשֶׁר־דִּבֶּ֥ר יְהוָ֖ה אֶל־בֵּ֣ית יִשְׂרָאֵ֑ל הַכֹּ֖ל בָּֽא׃ פ | 45 |
இஸ்ரயேலருக்கு யெகோவா வழங்கிய நல்வாக்குத்தத்தங்களில் ஒன்றாயினும் தவறிப்போகவில்லை. அவை ஒவ்வொன்றும் நிறைவேற்றப்பட்டன.