< 1 דִּבְרֵי הַיָּמִים 27 >

וּבְנֵ֣י יִשְׂרָאֵ֣ל ׀ לְֽמִסְפָּרָ֡ם רָאשֵׁ֣י הָאָבֹ֣ות וְשָׂרֵ֣י הָֽאֲלָפִ֣ים ׀ וְהַמֵּאֹ֡ות וְשֹׁטְרֵיהֶם֩ הַמְשָׁרְתִ֨ים אֶת־הַמֶּ֜לֶךְ לְכֹ֣ל ׀ דְּבַ֣ר הַֽמַּחְלְקֹ֗ות הַבָּאָ֤ה וְהַיֹּצֵאת֙ חֹ֣דֶשׁ בְּחֹ֔דֶשׁ לְכֹ֖ל חָדְשֵׁ֣י הַשָּׁנָ֑ה הַֽמַּחֲלֹ֙קֶת֙ הָֽאַחַ֔ת עֶשְׂרִ֥ים וְאַרְבָּעָ֖ה אָֽלֶף׃ ס 1
இராணுவப் பிரிவு சம்பந்தமான எல்லாப் பணிகளிலும் அரசனுக்கு உதவிய இஸ்ரயேலரின் பட்டியல் இதுவே: குடும்பத் தலைவர்கள், ஆயிரம்பேரின் தளபதிகள், நூறுபேரின் தளபதிகள், அவர்களின் அதிகாரிகள் அனைவரும் அவரவர் பிரிவின்படி வருடம் முழுவதும் மாதந்தோறும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். ஒவ்வொரு பிரிவிலும் 24,000 மனிதர்கள் இருந்தனர். அவர்கள்:
עַ֞ל הַמַּחֲלֹ֤קֶת הָרִֽאשֹׁונָה֙ לַחֹ֣דֶשׁ הָרִאשֹׁ֔ון יָֽשָׁבְעָ֖ם בֶּן־זַבְדִּיאֵ֑ל וְעַל֙ מַֽחֲלֻקְתֹּ֔ו עֶשְׂרִ֥ים וְאַרְבָּעָ֖ה אָֽלֶף׃ 2
முதலாவது மாதத்திற்குரிய பிரிவுக்கு சப்தியேலின் மகன் யாஷோபியாம் பொறுப்பாளனாய் இருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
מִן־בְּנֵי־פֶ֗רֶץ הָרֹ֛אשׁ לְכָל־שָׂרֵ֥י הַצְּבָאֹ֖ות לַחֹ֥דֶשׁ הָרִאשֹֽׁון׃ 3
பேரேஸின் வழித்தோன்றலான இவன், முதலாம் மாதத்துக்குரிய இராணுவ அதிகாரிகளுக்குத் தளபதியாயிருந்தான்.
וְעַ֞ל מַחֲלֹ֣קֶת ׀ הַחֹ֣דֶשׁ הַשֵּׁנִ֗י דֹּודַ֤י הָאֲחֹוחִי֙ וּמַ֣חֲלֻקְתֹּ֔ו וּמִקְלֹ֖ות הַנָּגִ֑יד וְעַל֙ מַחֲלֻקְתֹּ֔ו עֶשְׂרִ֥ים וְאַרְבָּעָ֖ה אָֽלֶף׃ ס 4
இரண்டாம் மாதத்திற்குரிய பிரிவுக்கு அகோகியனான தோதாய் பொறுப்பாளனாயிருந்தான். அந்தப் பிரிவிற்கு மிக்லோத் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
שַׂ֣ר הַצָּבָ֤א הַשְּׁלִישִׁי֙ לַחֹ֣דֶשׁ הַשְּׁלִישִׁ֔י בְּנָיָ֧הוּ בֶן־יְהֹויָדָ֛ע הַכֹּהֵ֖ן רֹ֑אשׁ וְעַל֙ מַחֲלֻקְתֹּ֔ו עֶשְׂרִ֥ים וְאַרְבָּעָ֖ה אָֽלֶף׃ 5
மூன்றாம் மாதத்திற்குரிய பிரிவுக்கு ஆசாரியனான யோய்தாவின் மகன் பெனாயா, இராணுவ தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு இவனே முதன்மையானவனாய் இருந்தான்.
ה֧וּא בְנָיָ֛הוּ גִּבֹּ֥ור הַשְּׁלֹשִׁ֖ים וְעַל־הַשְּׁלֹשִׁ֑ים וּמַ֣חֲלֻקְתֹּ֔ו עַמִּיזָבָ֖ד בְּנֹֽו׃ ס 6
மாவீரர்களான முப்பது பேருக்குள்ளும் வலிமை வாய்ந்தவனாகவும், அந்த முப்பது பேருக்கும் தளபதியாகவும் இருந்த பெனாயா இவனே. இவனது மகனான அமிசபாத் அவனுடைய பிரிவிற்கு பொறுப்பாய் இருந்தான்.
הָֽרְבִיעִ֞י לַחֹ֣דֶשׁ הָרְבִיעִ֗י עֲשָׂה־אֵל֙ אֲחִ֣י יֹואָ֔ב וּזְבַדְיָ֥ה בְנֹ֖ו אַחֲרָ֑יו וְעַל֙ מַחֲלֻקְתֹּ֔ו עֶשְׂרִ֥ים וְאַרְבָּעָ֖ה אָֽלֶף׃ ס 7
நான்காம் மாதத்திற்குரிய பிரிவுக்கு தளபதியாக யோவாப்பின் சகோதரன் ஆசகேல் இருந்தான். அவனுக்குப்பின் அவனுடைய இடத்தில் அவன் மகன் செபதியா தளபதியாய் இருந்தான். அவர்களுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
הַחַמִישִׁי֙ לַחֹ֣דֶשׁ הַחֲמִישִׁ֔י הַשַּׂ֖ר שַׁמְה֣וּת הַיִּזְרָ֑ח וְעַל֙ מַחֲלֻקְתֹּ֔ו עֶשְׂרִ֥ים וְאַרְבָּעָ֖ה אָֽלֶף׃ ס 8
ஐந்தாம் மாதத்துக்குரிய பிரிவுக்கு இராணுவ தளபதியாய் இஸ்ராகியனான சம்கூத் இருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
הַשִּׁשִּׁי֙ לַחֹ֣דֶשׁ הַשִּׁשִּׁ֔י עִירָ֥א בֶן־עִקֵּ֖שׁ הַתְּקֹועִ֑י וְעַל֙ מַחֲלֻקְתֹּ֔ו עֶשְׂרִ֥ים וְאַרְבָּעָ֖ה אָֽלֶף׃ ס 9
ஆறாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு தெக்கோவியனான இக்கேசின் மகன் ஈரா தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
הַשְּׁבִיעִי֙ לַחֹ֣דֶשׁ הַשְּׁבִיעִ֔י חֶ֥לֶץ הַפְּלֹונִ֖י מִן־בְּנֵ֣י אֶפְרָ֑יִם וְעַל֙ מַחֲלֻקְתֹּ֔ו עֶשְׂרִ֥ים וְאַרְבָּעָ֖ה אָֽלֶף׃ ס 10
ஏழாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு எப்பிராயீமைச் சேர்ந்த பெலோனியனான ஏலேஸ் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 பேர்கள் இருந்தார்கள்.
הַשְּׁמִינִי֙ לַחֹ֣דֶשׁ הַשְּׁמִינִ֔י סִבְּכַ֥י הַחֻשָׁתִ֖י לַזַּרְחִ֑י וְעַל֙ מַחֲלֻקְתֹּ֔ו עֶשְׂרִ֥ים וְאַרְבָּעָ֖ה אָֽלֶף׃ ס 11
எட்டாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு சேராரியரைச் சேர்ந்த ஊஷாத்தியனான சிபெக்காயி தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
הַתְּשִׁיעִי֙ לַחֹ֣דֶשׁ הַתְּשִׁיעִ֔י אֲבִיעֶ֥זֶר הָעַנְּתֹתִ֖י לַבֶּנְיְמִינִי (לַבֵּ֣ן ׀ יְמִינִ֑י) וְעַל֙ מַחֲלֻקְתֹּ֔ו עֶשְׂרִ֥ים וְאַרְבָּעָ֖ה אָֽלֶף׃ ס 12
ஒன்பதாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு பென்யமீனியரைச் சேர்ந்த ஆனதோத்தியனான அபியேசர் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
הָעֲשִׂירִי֙ לַחֹ֣דֶשׁ הָעֲשִׂירִ֔י מַהְרַ֥י הַנְּטֹֽופָתִ֖י לַזַּרְחִ֑י וְעַל֙ מַֽחֲלֻקְתֹּ֔ו עֶשְׂרִ֥ים וְאַרְבָּעָ֖ה אָֽלֶף׃ ס 13
பத்தாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு சேராரியரைச் சேர்ந்த நெத்தோபாத்தியனான மகராயி தளபதியாயிருந்தான். அங்கே அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தனர்.
עַשְׁתֵּֽי־עָשָׂר֙ לְעַשְׁתֵּ֣י־עָשָׂ֣ר הַחֹ֔דֶשׁ בְּנָיָ֥ה הַפִּרְעָתֹונִ֖י מִן־בְּנֵ֣י אֶפְרָ֑יִם וְעַל֙ מַחֲלֻקְתֹּ֔ו עֶשְׂרִ֥ים וְאַרְבָּעָ֖ה אָֽלֶף׃ ס 14
பதினோராம் மாதத்துக்குரிய பிரிவுக்கு எப்பிராயீமியரைச் சேர்ந்த பிரத்தோனியனான பெனாயா தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
הַשְּׁנֵ֤ים עָשָׂר֙ לִשְׁנֵ֣ים עָשָׂ֣ר הַחֹ֔דֶשׁ חֶלְדַּ֥י הַנְּטֹופָתִ֖י לְעָתְנִיאֵ֑ל וְעַל֙ מַחֲלֻקְתֹּ֔ו עֶשְׂרִ֥ים וְאַרְבָּעָ֖ה אָֽלֶף׃ פ 15
பன்னிரண்டாம் மாதத்துக்குரிய பிரிவுக்கு ஒத்னியேல் குடும்பத்திலிருந்து நெத்தோபாத்தியனான எல்தாய் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
וְעַל֙ שִׁבְטֵ֣י יִשְׂרָאֵ֔ל לָרֽאוּבֵנִ֣י נָגִ֔יד אֱלִיעֶ֖זֶר בֶּן־זִכְרִ֑י ס לַשִּׁ֨מְעֹונִ֔י שְׁפַטְיָ֖הוּ בֶּֽן־מַעֲכָֽה׃ ס 16
இஸ்ரயேல் கோத்திரங்களுக்கு மேலாக இருந்த அதிகாரிகள்: ரூபனியருக்கு சிக்ரியின் மகன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காவின் மகன் செபத்தியா;
לְלֵוִ֛י חֲשַׁבְיָ֥ה בֶן־קְמוּאֵ֖ל לְאַהֲרֹ֥ן צָדֹֽוק׃ ס 17
லேவியருக்கு கேமுயேலின் மகன் அஷாபியா ஆரோனுக்கும்: சாதோக்;
לִֽיהוּדָ֕ה אֱלִיה֖וּ מֵאֲחֵ֣י דָוִ֑יד לְיִ֨שָׂשכָ֔ר עָמְרִ֖י בֶּן־מִיכָאֵֽל׃ ס 18
யூதாவுக்கு தாவீதின் சகோதரருள் ஒருவனான எலிகூ; இசக்காருக்கு மிகாயேலின் மகன் ஒம்ரி;
לִזְבוּלֻ֕ן יִֽשְׁמַֽעְיָ֖הוּ בֶּן־עֹבַדְיָ֑הוּ לְנַ֨פְתָּלִ֔י יְרִימֹ֖ות בֶּן־עַזְרִיאֵֽל׃ ס 19
செபுலோனுக்கு ஒபதியாவின் மகன் இஸ்மாயா; நப்தலிக்கு அஸ்ரியேலின் மகன் எரிமோத்;
לִבְנֵ֣י אֶפְרַ֔יִם הֹושֵׁ֖עַ בֶּן־עֲזַזְיָ֑הוּ לַחֲצִי֙ שֵׁ֣בֶט מְנַשֶּׁ֔ה יֹואֵ֖ל בֶּן־פְּדָיָֽהוּ׃ ס 20
எப்பிராயீமியருக்கு அசசியாவின் மகன் ஓசெயா; மனாசே கோத்திரத்தின் பாதிக் கோத்திரத்தாருக்கு பெதாயாவின் மகன் யோயேல்;
לַחֲצִ֤י הַֽמְנַשֶּׁה֙ גִּלְעָ֔דָה יִדֹּ֖ו בֶּן־זְכַרְיָ֑הוּ ס לְבִנְיָמִ֔ן יַעֲשִׂיאֵ֖ל בֶּן־אַבְנֵֽר׃ ס 21
கீலேயாத்திலுள்ள மனாசே கோத்திரத்தின் பாதிக் கோத்திரத்தாருக்கு சகரியாவின் மகன் இத்தோ; பென்யமீனியருக்கு அப்னேரின் மகன் யாசியேல்;
לְדָ֕ן עֲזַרְאֵ֖ל בֶּן־יְרֹחָ֑ם אֵ֕לֶּה שָׂרֵ֖י שִׁבְטֵ֥י יִשְׂרָאֵֽל׃ 22
தாணுக்கு எரோகாமின் மகன் அசாரியேல். இஸ்ரயேல் கோத்திரங்களுக்கு இவர்களே அதிகாரிகளாயிருந்தார்கள்.
וְלֹא־נָשָׂ֤א דָוִיד֙ מִסְפָּרָ֔ם לְמִבֶּ֛ן עֶשְׂרִ֥ים שָׁנָ֖ה וּלְמָ֑טָּה כִּ֚י אָמַ֣ר יְהוָ֔ה לְהַרְבֹּ֥ות אֶת־יִשְׂרָאֵ֖ל כְּכֹוכְבֵ֥י הַשָּׁמָֽיִם׃ 23
“இஸ்ரயேலரை வானத்து நட்சத்திரங்களைப்போல பெருகப்பண்ணுவேன்” என்று யெகோவா வாக்குக் கொடுத்திருந்தபடியால் தாவீது இருபது வயதும் அதற்குக் கீழ்ப்பட்டவர்களையும் எண்ணிக் கணக்கிடாமல் விட்டுவிட்டான்.
יֹואָ֨ב בֶּן־צְרוּיָ֜ה הֵחֵ֤ל לִמְנֹות֙ וְלֹ֣א כִלָּ֔ה וַיְהִ֥י בָזֹ֛את קֶ֖צֶף עַל־יִשְׂרָאֵ֑ל וְלֹ֤א עָלָה֙ הַמִּסְפָּ֔ר בְּמִסְפַּ֥ר דִּבְרֵֽי־הַיָּמִ֖ים לַמֶּ֥לֶךְ דָּוִֽיד׃ ס 24
செருயாவின் மகன் யோவாப் கணக்கெடுக்கத் தொடங்கினான். ஆனால் அதை முடிக்கவில்லை. இக்கணக்கெடுப்பினால் இறைவனின் கோபம் இஸ்ரயேலின்மேல் வந்தது. ஆகவே தாவீது அரசனின் வரலாற்றுப் புத்தகத்தில் எடுக்கப்பட்ட கணக்கின் விவரம் குறிக்கப்படவில்லை.
וְעַל֙ אֹצְרֹ֣ות הַמֶּ֔לֶךְ עַזְמָ֖וֶת בֶּן־עֲדִיאֵ֑ל ס וְעַ֣ל הָֽאֹצָרֹ֡ות בַּשָּׂדֶ֞ה בֶּעָרִ֤ים וּבַכְּפָרִים֙ וּבַמִּגְדָּלֹ֔ות יְהֹונָתָ֖ן בֶּן־עֻזִּיָּֽהוּ׃ ס 25
அரச அரண்மனையின் களஞ்சியங்களுக்கு ஆதியேலின் மகன் அஸ்மாவேத் பொறுப்பாய் இருந்தான். சுற்றுப்புறங்களிலும், மாவட்டங்களிலும், பட்டணங்களிலும், கிராமங்களிலும், காவற்கோபுரங்களிலும் இருந்த களஞ்சியங்களுக்கு உசியாவின் மகன் யோனத்தான் பொறுப்பாய் இருந்தான்.
וְעַ֗ל עֹשֵׂי֙ מְלֶ֣אכֶת הַשָּׂדֶ֔ה לַעֲבֹדַ֖ת הָאֲדָמָ֑ה עֶזְרִ֖י בֶּן־כְּלֽוּב׃ 26
நிலத்தைப் பயிரிடுகிறவர்களான வயல்வெளியின் வேலை செய்பவர்களுக்கு கேலூப்பின் மகன் எஸ்ரி பொறுப்பாய் இருந்தான்.
וְעַל־הַ֨כְּרָמִ֔ים שִׁמְעִ֖י הָרָֽמָתִ֑י וְעַ֤ל שֶׁבַּכְּרָמִים֙ לְאֹצְרֹ֣ות הַיַּ֔יִן זַבְדִּ֖י הַשִּׁפְמִֽי׃ ס 27
ராமாத்தியனான சீமேயி திராட்சைத் தோட்டங்களுக்குப் பொறுப்பாய் இருந்தான். திராட்சைத் தோட்டங்களின் விளைச்சலைத் திராட்சைத் தொட்டிகளுக்கு சேர்ப்பதற்கு சிப்மியனான சப்தி பொறுப்பாய் இருந்தான்.
וְעַל־הַזֵּיתִ֤ים וְהַשִּׁקְמִים֙ אֲשֶׁ֣ר בַּשְּׁפֵלָ֔ה בַּ֥עַל חָנָ֖ן הַגְּדֵרִ֑י ס וְעַל־אֹצְרֹ֥ות הַשֶּׁ֖מֶן יֹועָֽשׁ׃ ס 28
மேற்கு மலையடிவாரத்தில் இருந்த ஒலிவ தோப்புக்கும், அத்திமரங்களுக்கும், கெதேரியனான பாகால்கானான் பொறுப்பாய் இருந்தான். ஒலிவ எண்ணெய் விநியோகிப்பதற்கு யோவாஸ் பொறுப்பாய் இருந்தான்.
וְעַל־הַבָּקָר֙ הָרֹעִ֣ים בַּשָּׁרֹ֔ון שִׁטְרַי (שִׁרְטַ֖י) הַשָּׁרֹונִ֑י וְעַל־הַבָּקָר֙ בָּֽעֲמָקִ֔ים שָׁפָ֖ט בֶּן־עַדְלָֽי׃ ס 29
சாரோனில் மேயும் மந்தைகளுக்கு சாரோனியனான சித்ராய் பொறுப்பாய் இருந்தான். பள்ளத்தாக்குகளிலுள்ள மந்தைகளுக்கு அத்லாயின் மகன் சாப்பாத் பொறுப்பாய் இருந்தான்.
וְעַל־הַ֨גְּמַלִּ֔ים אֹובִ֖יל הַיִּשְׁמְעֵלִ֑י וְעַל־הָ֣אֲתֹנֹ֔ות יֶחְדְּיָ֖הוּ הַמֵּרֹנֹתִֽי׃ ס 30
இஸ்மயேலனான ஓபில் ஒட்டகங்களுக்குப் பொறுப்பாய் இருந்தான். கழுதைகளுக்கு மெரொனோத்தியனான எகெதியா பொறுப்பாய் இருந்தான்.
וְעַל־הַצֹּ֖אן יָזִ֣יז הַֽהַגְרִ֑י כָּל־אֵ֙לֶּה֙ שָׂרֵ֣י הָרְכ֔וּשׁ אֲשֶׁ֖ר לַמֶּ֥לֶךְ דָּוִֽיד׃ 31
ஆட்டு மந்தைகளுக்கு ஆகாரியனான யாசீஸ் பொறுப்பாய் இருந்தான். இவர்கள் எல்லோரும் தாவீது அரசனின் உடைமைகளுக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரிகளாவர்.
וִֽיהֹונָתָ֤ן דֹּוד־דָּוִיד֙ יֹועֵ֔ץ אִישׁ־מֵבִ֥ין וְסֹופֵ֖ר ה֑וּא וִֽיחִיאֵ֥ל בֶּן־חַכְמֹונִ֖י עִם־בְּנֵ֥י הַמֶּֽלֶךְ׃ 32
தாவீதின் சிறிய தகப்பனான யோனத்தான் தாவீது ராஜாவுக்கு புத்தியுள்ள ஆலோசகராயும், நுண்ணறிவாளராயும், எழுத்தாளராயும் இருந்தான். அக்மோனியின் மகன் யெகியேல், அரசனுடைய மகன்களைப் பராமரித்தான்.
וַאֲחִיתֹ֖פֶל יֹועֵ֣ץ לַמֶּ֑לֶךְ ס וְחוּשַׁ֥י הָאַרְכִּ֖י רֵ֥עַ הַמֶּֽלֶךְ׃ 33
அகிதோப்பேல் அரசனின் ஆலோசனைக்காரனாய் இருந்தான். அர்கியனான ஊசாய் அரசனின் சிநேகிதனாய் இருந்தான்.
וְאַחֲרֵ֣י אֲחִיתֹ֗פֶל יְהֹויָדָ֤ע בֶּן־בְּנָיָ֙הוּ֙ וְאֶבְיָתָ֔ר וְשַׂר־צָבָ֥א לַמֶּ֖לֶךְ יֹואָֽב׃ פ 34
அகிதோப்பேலுக்குப் பிறகு அவனுடைய இடத்தில் பெனாயாவின் மகன் யோய்தாவும், அபியத்தாரும் அரச ஆலோசகர்களாய் இருந்தனர். யோவாப் அரச படைக்குத் தளபதியாயிருந்தான்.

< 1 דִּבְרֵי הַיָּמִים 27 >